Thursday, April 21, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 21 , 2011.


நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடுக்கு இரட்டை ஆயுள் உறுதி-உச்ச நீதிமன்றம்

large_228369.jpg

டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு வழங்கப்பட்ட இர‌ட்டை ஆ‌யு‌ள் த‌ண்டனை ர‌த்து செ‌ய்த செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தின‌் ‌தீ‌ர்‌ப்பை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்துள்ளது.

வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

‌செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.

விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.

ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.

இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டேவிட் தரப்பு அப்பீல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.

ஜா‌ன் டே‌வி‌ட்டின் இந்த ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கு விசாரணையில் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்றத்தின் செய‌ல்பாடு குறித்து அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ ‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று தீர்ப்பளித்தனர்.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு இ‌‌ட்டை ஆயுளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலும் ஜா‌ன் டே‌வி‌‌ட் உடனடியாக கடலூர் சிறை அதிகாரி முன் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று்ம் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

நாவரசு கொலை வழக்கில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இந்நிலையில் ஜான் டேவிட்டை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜான் டேவிட் தற்போது ஆஸ்திரேலியாவில் மத போதகராக உள்ளார். இதனால் அவரை கைது செய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

* ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க தொகுதிக்கு ஒரு பார்வையாளர்

large_228470.jpg

சென்னை : ""ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க, தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்படுவார்,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். அவர் நேற்று கூறியதாவது: ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க, 180 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 கூடுதலாக, மேலும், 54 பேர் நியமிக்கப்படுவர். இவர்கள், தொகுதிக்கு ஒருவர் என, ஓட்டு எண்ணிக்கையைக் கண்காணிக்கும் பணியில், ஈடுபடுத்தப்படுவர். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் சரிபார்த்து, முடிவுகளை பார்வையாளர்கள் அறிவிப்பர்.

ஓட்டு எண்ணும் பணியில், 15 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். தேர்தல் பணியில் ஈடுபட்ட, 2.88 லட்சம் ஊழியர்களுக்கு, ஒரு நாள் படியாக, 35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வாகன சோதனையில் பிடிபட்ட, 54 கோடி ரூபாயில், ஐந்து கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தொகைக்கு, உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டால், திருப்பிக் கொடுக்கப்படும். இல்லையேல், வருமான விரித் துறையினர், அதுகுறித்து விசாரிப்பர்.

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் தொடர்பாக, மதுரை கலெக்டர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் சில விளக்கங்கள் அவரிடம் கேட்கப்பட்ட பின், அந்த அறிக்கை, தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும். இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

உலகச் செய்தி மலர் :

* மும்பை கடலில் ஏகே 47 துப்பாக்கிகள்-8 பேர் கைது

மும்பை: கைதான டென்மார்க் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல்படையினரைப் பார்த்தும் தாங்கள் வைத்திருந்த 2 ஏகே 47 ரக துப்பாக்கிகளை மும்பை கடலில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு வரும் கப்பலில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மும்பைக்கு வரும் அனைத்து கப்பல்களையும் சோதனை செய்தனர். அப்போது டென்மார்க் நாட்டில் இருந்து வந்த டேனிகா சன்ரைஸ் கப்பலை துரத்திப் பிடித்து சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கப்பலில் இருந்த 8 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் முன்னாள் இங்கிலாந்து இராணுவத்தினர் 2 பேரும் அடக்கம்.

விசாரணையில் அவர்கள் தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று உறுதியாயக் கூறினர். பின்னர் தாங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர்கள் உண்மையை தெரிவித்தனர். கப்பலில் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகளும், மேலும் 2 துப்பாக்கிகளும் வைத்திருந்ததாகவும் கடலோர காவல்படை துரத்தியபோது அதை கடலில் வீசிவிட்டதாகவும் கூறினார்கள். 

பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த கப்பல் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் கேட்வே ஆப் இந்தியா அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

அந்த கப்பலில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

* ஐ.நா.பாதுகாப்பு அவையில் விவாதிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை  

இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்கள் நிழ்த்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை, அது ஊடகங்களில் வெளியான நிலையில், ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்படுவதற்கு முன்பாகவே இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இலங்கை விவகாரம் பற்றி பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு இரஷ்யா தொடர்ந்தும் எதிர்ப்புக்காட்டி வருகிறது. 

ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளரும் இலங்கை விடயத்தில் ஐ.நா. பொதுச் செயலரின் முதன்மை ஆலோசகர்களுள் ஒருவருமான லென் பாஸ்கோ, நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத் தொடரில் கடந்த திங்கட்கிழமை மாலை சுருக்கமாக விளக்கமளித்தார். 

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையில் அதுவே பிரதான கலந்துரையாடல் விடயமாகி விட்டது என்று பல்வேறு தரப்புக்கள் தன்னிடம் தெரிவித்ததாக "இன்னர் சிட்டி பிரஸ்" தெரிவிக்கிறது. அறிக்கையைக் கசியவிட்டது இலங்கை அரசுதான் என்பதே பாதுகாப்புச் சபையின் உள்ளே பேச்சு என்றும் அந்தத் தரப்புக்கள் "இன்னர் சிட்டி பிரஸி"டம் தெரிவித்துள்ளன. அதேவேளை, நிபுணர் குழுவின் அறிக்கை முழுமையாக வெளியாகாத நிலையில் அரைகுறை அறிக்கையை வைத்து விவாதம் நடத்துவதில் பயனில்லை என்று பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. திங்களன்று நடைபெற்ற கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் சேர்க்கப்பட்ட முறைகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக ஒழுங்குப் பிரச்சினைகளை அது கிளப்பியது என்று "இன்னர் சிட்டி பிரஸ்" தெரிவித்தது. 

எனினும் ஐவரிகோஸ்ட் நாட்டு விவகாரத்தில் ரஷ்யாவின் எதிர்ப்பையும் புறந்தள்ளி ஐ.நா. பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது கவனத்துக்கு உரியது. 2009ஆம் ஆண்டும் இலங்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைகளை சீனத்துடன் இணைந்து ரஷ்யா பலமாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* சிகிச்சைக்கு இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

opamaa.jpg

வாஷிங்டன், ஏப்.20: குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

 அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். 

இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர், அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை தனது குடிமக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படுத்தித் தரப் போவதாகக் கூறினார்.

 வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் அவர் இவ்விதம் கூறியவுடன் அதை பலத்த கரகோஷத்துடன் மக்கள் வரவேற்றனர்.

 அமெரிக்காவில் மருத்துவ கட்டணங்கள் உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு, ஒபாமா இவ்விதம் பதில் அளித்தார். குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டாக்டர்களும் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன. இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம். ஆனால் கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும் என்றார்.

 அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒபாமா.

* இந்திய மாணவரைக் கொன்றேன்: 16 வயது ஆஸ்திரேலியர் வாக்குமூலம்

மெல்போர்ன், ஏப்.20: கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற மாணவரைக் கொன்றதை ஆஸ்திரேலிய இளைஞன் ஒப்புக் கொண்டுள்ளார்.

 ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்த நிலையில் அது இன வெறி தாக்குதலா? என்ற அச்சம் உருவானது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது மாணவர் அடையாளம் தெரியாத ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

 இந்தியர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 இது தொடர்பாக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டார். குற்றவாளியின் நண்பர் ஒருவருக்கு 18 மாதம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. தனது நண்பருக்கு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டார். தனது நண்பர்தான் கொலை செய்ததாக தனக்கு தெரிய வந்ததாக அவர் விசாரணையின்போது குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் கொலையாளி என கருதப்பட்ட இளைஞனது வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவியை போலீஸôர் வைத்தனர். கொலையாளிக்கும் அவரது தாய்க்கும் இடையிலான உரையாடலில் அவர்தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது நிரூபணமானது. இதனடிப்படையில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் அவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

 ஆனால் கைது செய்யப்பட்ட இளைஞனின் புகைப்படம், அவரைப்பற்றிய விவரம் எதையும் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதுவரை அந்த இளைஞன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.

* சமரச நடவடிக்கைகளை இலங்கை தொடங்க வேண்டும்: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்,ஏப்.20: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் அளித்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுடன் சமரசம் செய்துகொள்ளவும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கவும் சுயமரியாதையுடன் அவர்களும் இலங்கையில் வாழவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு யோசனை கூறியிருக்கிறது.

 அமெரிக்க வெளியுறவுத்துறையின் மார்க் டோனர் இதை வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
 ஐ.நா. நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை உடனே நிறைவேற்றி தமிழர்களும் இலங்கையின் சம உரிமை பெற்ற குடிமக்கள்தான் என்பதை நிலைநாட்ட அரசு உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

 ""இலங்கைப் போரில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்களும் இலங்கைவாசிகள்தான் என்று சொல்லிக்கொண்டே அவர்களைத் திட்டமிட்டு பூண்டோடு அழிக்க ராணுவ நடவடிக்கையை நயவஞ்சகமாகப் பயன்படுத்திக்கொண்டது இலங்கை அரசு.

 விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் தமிழர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் உண்டு, அவர்களைக் கைது செய்ய மாட்டோம், தாக்க மாட்டோம், கொல்ல மாட்டோம் என்றெல்லாம் பலவாறாகக் கூறிவிட்டு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்த நந்திக்கடல் பகுதியில், தமிழர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு பீரங்கிகளால் சரமாரியாகச் சுட்டு நூற்றுக்கணக்கானவர்களை சின்னாபின்னப்படுத்தி சாகடித்தது இலங்கை அரசு.

 போர் நடந்தபோதும் போருக்குப்பிறகும் தங்களிடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகளையும், புலிகள் என்று தாங்கள் சந்தேகித்த தமிழர்களையும் விசாரணைக்காக என்ற பெயரில் மர்ம முகாம்களுக்கு அழைத்துச் சென்று விவரிக்க முடியாத, மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆள்படுத்திக் கொன்றும் நடமாட முடியாமல் சீரழித்தும் மனோரீதியாக சித்தபிரமை பிடிக்கவைத்தும் நாசப்படுத்தியது இலங்கை ராணுவம்.

 அத்துடன் எத்தனை பேரைக் கைது செய்தார்கள், எங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள், அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு தகவலையும் வெளியுலகுக்குத் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பே இல்லாத தமிழர்களும் அடிக்கடி வந்த வெள்ளை வேன்களால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களைப் பற்றி அறிய முற்பட்ட குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டதல்லாமல் அவர்களில் சிலரும் இதே வகையில் கடத்தப்பட்டனர். எனவே உறவினர்களையும் நண்பர்களையும் இழந்தவர்கள் அதைப்பற்றி வெளியே பேசக்கூட முடியாதபடிக்கு ஆதரவற்றவர்களாய் அழுது புரளத்தான் முடிந்தது.
 தமிழ்ப்பெண்கள், அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் இலங்கை ராணுவத்தினரிடம் சிக்கி சீரழிந்த கதையை எழுதவும் சொல்லவும் இரக்கமில்லா இதயங்களால்தான் முடியும். உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் உலகின் எந்தப்பகுதியிலும் எந்த ஒரு இனத்துப்பெண்களாலும் அனுபவித்திராதவை.

 இவ்வளவு நடந்தும் இலங்கையின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தமிழர்களைத் தங்களுக்கு சுமையாய், வரலாற்றுப்பிழையாய், தங்களுடைய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாய் கருதும் போக்கு இன்னமும் நீடிக்கிறது.

 இதை உணர்ந்துதான் அமெரிக்க வெளியுறவுத்துறையும் இலங்கை அரசுக்கு இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறது.

 விடுதலைப் புலிகள் அரசு முடிவு: இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக இலங்கை அரசு கருதினாலும் அவர்களுடைய ஆதரவாளர்கள் உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் நடத்திவரும் கடல்கடந்த அரசின் சார்பில் இந்த ஐ.நா. அறிக்கை தொடர்பாக பதில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையானது தங்களுடைய அரசையும் ராணுவத்தையும் சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருப்பதால் அதில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கவும் மறைக்கவும் பிரசார நடவடிக்கைகளை அது திட்டமிட்டுவருகிறது. 

அவற்றைச் சட்டபூர்வமாக மறுக்கவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தங்களிடம் உள்ள ஆதாரங்களைத் திரட்டித் தரவும் விடுதலைப்புலிகளின் கடல் கடந்த அரசு முடிவு செய்திருக்கிறது.

 அத்துடன் மனித உரிமைகளை மீறிய இலங்கை ராணுவத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளாக நிறுத்திவிசாரிக்கவும் சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும் முடிவு செய்திருக்கிறது.

* இந்தியா-நேபாள உறவு மேம்பட முன்னுரிமை: எஸ்.எம்.கிருஷ்ணா

காத்மாண்டு, ஏப்.20: நேபாளத்துடனான உறவு மேம்பட இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

 நேபாள நாட்டு அரசின் அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அதிகாரிகள் குழுடன் புதன்கிழமை அந்நாட்டுக்குச் சென்றுள்ளார் கிருஷ்ணா. 

அப்போது அங்கு செய்தியாளர்களிடம் கிருஷ்ணா கூறியது: நேபாள நாட்டின் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் பொருளாதார நிலை உயர இந்நாட்டு மக்களுடன் இணைந்து இந்தியா செயல்படும். இதன்மூலம் நேபாள நாட்டு உறவு மேம்பட இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளிக்கும்.

 நேபாள நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும், இந்நாட்டின் பொருளாதாரம்
 வளர்ச்சி அடையவும் எங்களது பங்களிப்பை அளிக்க இங்குவந்துள்ளோம். இந்த நாட்டில் அமைதி, ஸ்திரதன்மை நிலவ இந்தியா எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். சர்வதேச தரத்துக்கு நேபாள நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்த நேபாள அரசுக்கு இந்தியா உதவும் என்றார்.

 முன்னதாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்திற்கு வந்த கிருஷ்ணாவை நேபாள நாட்டு துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான பரத் மோகன் அதிகாரி வரவேற்றார். நேபாளத்தில் 3 நாட்கள் தங்கியிருக்கும்போது உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். பிர்குஞ்ச் என்ற இடத்தில் இந்தியா ஆதரவில் கட்டப்பட்டுள்ள சோதனைச்சாவடியைத் திறந்துவைக்கிறார் கிருஷ்ணா. தேரை என்ற இடத்தில் இந்தியா ஆதரவில் போடப்படவுள்ள அதிவிரைவுச் சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 நேபாளத்தில் தங்கியிருக்கும்போது அந்நாட்டு அதிபர் ராம் பரதன்யாதவ், பிரதமர் ஜஹலா நாத் ஹானல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதுபோல் துணைப் பிரதமர் பரத்மோகனுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 நேபாள நாட்டு மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா, நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலா ஆகியோரையும் கிருஷ்ணா சந்தித்துப் பேசுகிறார்.

 கிருஷ்ணாவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் உள்பட 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

 இதற்கு முன் கடந்த ஆண்டு ஜனவரியில் கிருஷ்ணா நேபாளம் சென்றிருந்தார்.
தேசியச் செய்தி மலர் :

* இப்போது நொய்டா நில சர்ச்சையில் 'லோக் பால்' சாந்தி பூஷண்!

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், இப்போது நில விவகாரத்தில் மாட்டியுள்ளர்.

'உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று அவர் கூறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சிடியும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நொய்டா அருகே 10,000 சதுர அடி நிலத்தை தனது மகன் ஜெயந்தின் பெயரில் அம் மாநில முதல்வர் மாயாவதியின் உதவியால் சாந்தி பூஷண் அடிமாட்டு விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இதை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். என்னை லோக்பால் குழுவிலிருந்து நீக்க அடுத்தடுத்து பொய்யான புகார்களை சில சக்தி வாய்ந்த நபர்கள் கிளப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனக்கு ஒதுக்கப்பட்ட நிலம் முதல்வர் மாயாவதியின் கோட்டாவிலிருந்து வரவில்லை. அதை நான் முறைப்படி விண்ணப்பித்து வாங்கினேன். சரியாகச் சொன்னால் அந்த நிலம் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை என்றார்.

இந் நிலையில் பூஷணுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள சிடியை வெளியிட்டதாகக் கருதப்படும் அமர் சிங், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சிடியை நான் வெளியிடவில்லை. ஆனால், அதில் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் என்று கூறியது சாந்தி பூஷண் தான் என்பது மட்டும் நிச்சயம். அது தனது குரல் இல்லை என்று சாந்தி பூஷண் நிரூபிக்கட்டும் என்றார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பஹுகுண ஜோஷி டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் மசோதாவை கொண்டு வர சமூக சேவகர் அண்ணா ஹசாரா முயற்சி எடுத்து வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அதன் வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள சாந்தி பூஷண், அவரது மகன் பிரசாந்த் பூஷண் இருவரும் தங்கள் மீதான புகார்களுக்கு முதலில் பதில் தெரிவிக்க வேண்டும்.
   
நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் சிலைகள் கொண்ட பூங்கா அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக சாந்தி பூஷண் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மகனுக்கும் நொய்டாவில் 10,000 சதுர அடி பரப்பளவு உள்ள பண்ணை வீட்டுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது லஞ்சம் இல்லாமல் வேறு என்ன. இதுகுறித்து சாந்தி பூஷண் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந் நிலையி்ல் லோக்பால் மசோதாவை சீர்குலைக்க அமர் சிங் மூலமாக அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி கெடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

* புதுச்சேரி கவர்னரிடம் ராஜ்பவனில் வைத்து அமலாக்கப் பிரிவு விசாரணை

20-iqbal-singh-hasan-ali200.jpg

டெல்லி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவினர் இன்று விசாரணை நடத்தினர்.

டெல்லியிலிருந்து வந்த 4 பேர் கொண்ட குழு புதுச்சேரி ராஜ்பவனில் வைத்து அவரிடம் இன்று விசாரணை நடத்தியது.

முன்னதாக இக்பாலிடம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவினருக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்தார்.

வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

1997ம் ஆண்டில் அலி பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* 2ஜி ஊழல்-5 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் கைது

20-telecom-scam200.jpg

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 5 அதிகாரிகள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. இதையடுத்து இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, டிபி ரியாலிட்டி அதிபர் பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் பொகுரியா, சந்தோலியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தைச் சேர்ந்த கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர், ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு பிரிவு) நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து கைதாவதிலிருந்து தப்ப அவர்கள் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமீன் மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, அவர்கள் தலைமறைவாகக் கூடும் என்பதால் அவர்களைக் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஜாமீன் வழங்கப்பட்டால் 5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியது.

இதையடுத்து தாங்கள் சிபிஐயின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், ஜாமீன் அளிக்கப்பட்டால் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவோம் என்றும் இந்த 5 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த 5 பேரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

* கலப்புத் திருமணங்களுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து: தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

sc (1).jpg

புது தில்லி, ஏப்.19: கலப்புத் திருமணங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடத்துவோர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநில அரசுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகம் சேர்வை என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்சு, ஜி.எஸ்.மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவின் மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

கலப்புத் திருமணங்கள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றன. ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்வோர் மிரட்டப்படுவதாகவும் அவர்களுக்கு எதிராகக் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாகவும் பல சம்பவங்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் எனக் கருதப்படுகிறது.

வரலாற்று ரீதியில் நமது நாடு பெரிய சமூக மாற்றத்தைச் சந்திக்கும் கால கட்டம் இது. இந்த நிலையில் கலப்புத் திருமணம் செய்யும் இளம் தம்பதியரை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களை இந்த நீதிமன்றம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்காது. ஏனெனில் இது பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய பிரச்னையாக உள்ளது.

நமது நாட்டில் ஜாதி என்பது ஒரு சாபக்கேடாக உள்ளது. விரைவாக சமூக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் ஜாதிப்பிரச்னை மாறிவருகிறது. நாடு எதிர்நோக்கியுள்ள பெரிய சவால்களை நாட்டுமக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகளால் மக்கள் பிரிந்துகிடப்பதை ஏற்க முடியாது. தேச நலன் கருதி கலப்புத்திருமணங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கலப்புத்திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியருக்கு மிரட்டல்கள் வருகின்றன. அவர்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து தகவல்கள் வருகின்றன.

 இது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்று மிரட்டுவது, துன்புறுத்துவது, வன்செயல்களில் ஈடுபடுவது போன்ற அனைத்தும் சட்டவிரோதமானவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மாநில தலைமைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறோம்.

இந்த மனுதாரர் ஆட்சேபகரமாகப் பேசியிருக்கிறார் என கருதுவதால் இவரது மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

* கைகா அணு மின்நிலைய 3-வது பிரிவில் உற்பத்தி துவக்கம்

கார்வார், ஏப்.20: தீ விபத்து ஏற்பட்ட கார்வாரிலுள்ள கைகா அணு மின் நிலையத்தின் 3-வது பிரிவில் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை துவங்கியது.

கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டம் கார்வார் அருகேயுள்ள கைகாவில் அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் உள்ள 4 பிரிவுகளிலும் மொத்தம் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஏப்ரல் 8-ம் தேதி இந்த மின் உற்பத்தி நிலையத்தின் 3-வது பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இப்போது 3-வது பிரிவில் மின் உற்பத்தி துவங்கியதாக கைகா அணுமின் நிலையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறியிருப்பதாவது: கைகா மின் உற்பத்தி 3-வது பிரிவில் செவ்வாய்க்கிழமை இரவு 11.25 மணி முதல் மின் உற்பத்தி துவங்கியது. இதையடுத்து நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. படிப்படியாக தனது மொத்த உற்பத்தித் திறனையும் இந்த மின் உற்பத்தி நிலையம் அடையும். 

தீவிபத்து ஒலி ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்னும் விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை. இந்த மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது. கதிர் இயக்கம் குறிப்பிட்ட எல்லைக்கும் குறைவாகவே உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடககத்தில் உள்ள ஒரே அணுமின் நிலையம் கைகா என்பது குறிப்பிடத்தக்கது.

* இன்று இரவு எரிகற்கள் மழை!

புது தில்லி, ஏப்.20: வானியல் ஆர்வலர்கள் வியாழக்கிழமை இரவு எரிகற்களை பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெறலாம்.

 இம்மாதம் 21 மற்றும் 22-ம் தேதி இவை விண்ணிலிருந்து பூமியை நோக்கி ஈட்டியைப் போல பாயும் என்று வானியல் ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா தெரிவித்துள்ளார். மணிக்கு இரண்டு கற்கள் வீதம் புவியில் விழுந்தவண்ணம் இருக்கும். இந்த விண்கற்கள் மிகுந்த ஒளியுடனும் புழுதியைக் கிளப்பியபடி விண்ணிலிருந்து கீழே பாயும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் சில விநாடிகளில் இது மறைந்துவிடும்.

 இது இம்மாதம் 26-ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒளி வெள்ளம் இல்லாத பகுதியிலிருந்து பார்க்க முடியும். மாலையிலேயே எரிகற்கள் விழுவது ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

* "பருவமழை இந்த ஆண்டும் சீராக இருக்கும்'

20-rain23-200.jpg

புது தில்லி, ஏப். 19: நாட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பருவமழை சீராகவும் போதுமான அளவுக்கும் பெய்யும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சர் பவன் குமார் பன்சல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு மழை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்றார்.

எனினும் நாட்டில் வடகிழக்கு பகுதியில் பருவமழை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் நீண்ட கால சராசரி மழை அளவு 98 சதவீதம் அளவு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜீத் தியாகி தெரிவித்தார்.
நீண்ட கால சராசரி மழை அளவு என்பது கடந்த 50 ஆண்டு கால மழையின் சராசரி அளவாகும். 
இது இப்போது 89 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்த 89 செ.மீ. என்ற அளவில் 96 முதல் 104 சதவீதம் வரையில் மழை அளவு பதிவானால் இயல்பான மழை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நாட்டில் பருவமழை நன்கு பொழிந்ததை அடுத்து சாதனை அளவாக 23.58 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மாநிலச் செய்திகள் :

bslv.jpg

* விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி

சென்னை, ஏப். 20: மூன்று செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 "ரிசோர்ஸ்-சாட்-2', "யூத்-சாட்', "எக்ஸ்-சாட்' ஆகிய மூன்று செயற்கைக் கோள்களை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி. "சி-16' ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான "கவுன்ட்-டவுன்' திங்கள்கிழமை அதிகாலை 3.42 மணிக்குத் தொடங்கியது.

 திட்டமிட்டபடி, புதன்கிழமை காலை 10.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

 தொடக்கத்தில் சத்தமின்றி கிளம்பிய ராக்கெட், படிப்படியாக மேலே செல்லச்செல்ல அதிரவைக்கும் ஓசையுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஒவ்வொரு நிலையை ராக்கெட் வெற்றிகரமாக கடக்கும்போதும், விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 ஏவப்பட்ட 30-வது நிமிடத்தில் இறுதி கட்டமான நான்காவது நிலையைக் கடந்து, திட்டமிட்டபடி பூமியிலிருந்து 822 கி.மீ. உயரத்தில் நீள்வட்ட துருவப் பாதையைச் சென்றடைந்ததும் விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று ஒருவருக்கு ஒருவர் கைகளைக் குலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

 அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், பின்னர் பேட்டி அளித்தார். பி.எஸ்.எல்.வி. "சி-16' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

* எம்எம்சி, ஸ்டான்லியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு 200 கூடுதல் இடங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அரசு கல்லூரிகளில் 200 இடங்கள் அதிகரிக்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கவுன்சிலிங் ஆண்டுதோறும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆயிரத்து 945 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் போகும் 292 இடங்கள் தவிர ஆயிரத்து 670 இடங்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 674 இடங்கள் கிடைக்கும்.

இந்த வருடம் அரசு மருத்துவக் கல்லூரிகளான எம்.எம்.சி. என்று அழைக்கப்படும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும், சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் தலா 150 இடங்கள் உள்ளன.

இந்த இரண்டு கல்லூரிகளிலும் உள்ள இடங்களை தலா 250-க உயர்த்த விரும்பிய தமிழக அரசு அதற்கான அனுமதி கேட்டு 
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்தது.

இதையடுத்து இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய கட்டமைப்பு வசதி உள்ளதா, நோயாளிகள் எத்தனைபேர் வருகிறார்கள், மாணவர்கள் படிக்க போதிய வசதிகள் உள்ளதா என்று அறிய மருத்துவக்குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர்.

இன்னும் 20 நாட்களுக்குள் இந்த 2 கல்லூரிகளிலும் மாணவர்சேர்க்கையை அதிகரித்து அதற்கான அனுமதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைத்தால் கூடுதலாக 200 இடம் கிடைக்கும். 

* மதுரை மேற்கு தொகுதி பணம் பட்டுவாடா-தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினார் கலெக்டர் சகாயம்

20-sagayam1-200.jpg

மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்திய மதுரை கலெக்டர் சகாயம், தமிழக தேர்தல் அதிகாரிக்கு தனது அறிக்கையை அனுப்பியுள்ளார். இதனால் அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் ரூ.81 லட்சம் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணம் சிக்கியதை அடுத்து அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இந் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மேற்கு தொகுதியில் விசாரணை நடத்திய கலெக்டர் சகாயம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு தனது 3 பக்க அறிக்கையை அனுப்பினார்.

இது தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சகாயம் எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்று தெரிகிறது.

ஆனாலும் அவர் அனுப்பிய அறிக்கை மற்றும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானால் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது மதுரை மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்திவைக்கப்படலாம்.

அல்லது தேர்தலை ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.

* 101 தொகுதிகள் : பெண் வாக்காளர்கள் முன்னணி

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்த தேர்தலில் ஆண்களும், பெண்களும் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து ஓட்டு போட்டது; இளைஞர்கள் தங்கள் பங்குக்கு படையெடுத்து வந்தது; பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த மேல்தட்டு மக்களும், இந்த முறை ஓட்டுச்சாவடியில் குவிந்தது போன்ற காரணங்களால், ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம், "ஜிவ்'வென எகிறியது. அதேபோல், இந்த தேர்தலில், 101 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டளித்து புதுமை படைத்துள்ளனர்.

வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலிலும், 60, 65 சதவீதம் வரை பதிவாகும் ஓட்டுப்பதிவு, இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், 77.8 சதவீதமாக உயர்ந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், சராசரி ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ தாண்டியுள்ளது. இதனால், யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகளை பார்த்தால், மொத்தமுள்ள, 32 மாவட்டங்களில், ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களை தவிர, மீதியுள்ள 25 மாவட்டங்களில், 101 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.சில தொகுதிகளில், 100 ஓட்டுகள் முதல், அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 475 ஓட்டுகள் வரை, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில், 3,000 ஓட்டுகள் முதல், 4,000 ஓட்டுகள் வரை, ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ் வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய தொகுதிகளிலும், பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர். முதல்வரின் திருவாரூர் மாவட்டத்திலும், இதே சாதனை நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் பெண் வாக்காளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை தவிர, மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் பெண்கள் ஓட்டு தான் அதிகம். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பெண்கள் ஓட்டுகளே முன்னணி இடத்தை பிடிக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில், ஏழு தொகுதிகளில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி; திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.இப்படி, 25 மாவட்டங்களில் பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டிருப்பதன் மூலம், இம்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர்.

ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

large_228353.jpg

புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ""ஊட்டச் சத்து குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதிப்பாடு கொண்டுள்ளது. பொது வினியோக முறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன,'' என்றார்.

இதன்பின் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

வ்ர்த்தகச் செய்தி மலர் :

* வணிகம்சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

bse.jpg

மும்பை, ஏப்.19: கடந்த இரண்டு நாள் வர்த்தகங்களில் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சிறிதளவு ஏற்றம் பெற்றது. 31 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 19,121 புள்ளிகளானது. இருப்பினும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டதால் புள்ளிகள் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.

கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் 600 புள்ளிகள் சரிந்த மும்பை பங்குச் சந்தை, செவ்வாய்க்கிழமை கணிசமான முன்னேற்றத்தையே கண்டது. தொழில்நுட்பம், எண்ணெய் சுத்திகரிப்பு, நுகர்வோர் பொருள் தயாரிப்பு, வங்கித் துறை பங்குகள் ஏற்றம் பெற்றன. அதேசமயம் மின்சாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறை பங்குகள் சரிவிலிருந்து தப்பவில்லை.

எல் & டி, ஹெச்டிஎப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் கணிசமாக உயர்ந்து குறியீட்டெண் உயர்வுக்கு வழிவகுத்தது.

தேசிய பங்குச் சந்தையில் 12 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,740 புள்ளிகளானது.

ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் அதிகபட்ச லாபம் ஈட்டிய நிறுவன பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

17 ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அந்த நாடுகளின் கடன் சுமை, நிதியாதாரம் வறண்டு போனது உள்ளிட்ட பிரச்னைகளோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் ஸ்திரமற்ற நிலையும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தின. இதனால் துணிந்து முதலீடு செய்வோர் எண்ணிக்கைக் குறைவாக இருந்தது. திங்கள்கிழமை அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 981.56 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததும் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.

அன்னிய முதலீடு குறைந்து போவது கவலையளிப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அது மிகப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் கூறினர்.
ஹெச்டிஎப்சி வங்கிப் பங்கு விலை 1.4 சதவீதம் அதிகரித்து ரூ. 2,348.05-க்கு விற்பனையானது. ஆக்ஸிஸ் வங்கி பங்கு விலை 1.13 சதவீதம் உயர்ந்து ரூ. 1,410.60-க்கு விற்பனையாயின.

முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 1.20 உயர்ந்து ரூ. 1,011.35-க்கும், கெய்ர்ன் இந்தியா பங்கு விலை ரூ. 7.70 அதிகரித்து ரூ. 344.25-க்கும் விற்பனையாயின.

பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை 2.18 சதவீதமுமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2.08 சதவீதமும், டிசிஎஸ் 1.32 சதவீதமும், டிஎல்எப் 1.24 சதவீதமும், விப்ரோ 1.16 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 1.09 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.06 சதவீதமும் உயர்ந்தன.

இருப்பினும் ஹீரோ ஹோண்டா பங்கு விலை 4.64 சதவீத சரிவைச் சந்தித்தது. பிஹெச்இஎல் பங்கு விலை 2.37 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.20 சதவீதமும், ஐடிசி 1.05 சதவீதமும் சரிந்தன.

முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 18 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 12 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஒட்டுமொத்தமாக 1,476 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. அதேசமயம் 1,389 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின.
மொத்த வர்த்தகம் ரூ. 12,832 கோடியாகும்

* ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 168 உயர்வு

சென்னை, ஏப். 19: ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ஓரே நாளில் பவுனுக்கு ரூ. 168 உயர்ந்து, ரூ. 16,192-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 2,024.
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடந்த செவ்வாய்கிழமை (ஏப்ரல் 12) ஒரு பவுன் ரூ. 15,800, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) ஒரு பவுன் ரூ. 15,928, சனிக்கிழமை (ஏப்ரல் 16) 16,088 என தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 64 குறைந்து ரூ. 16,024-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வரும் மே 6-ம் தேதி வெள்ளிக்கிழமை அட்சய திருதியை, வைகாசி, ஆனி மாதங்களில் திருமண சீசன் ஆகிய வைபவங்களால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் நிலையில் அதன் விலை உயர்வு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஐபிஎல் வீரர்களை திரும்ப அழைக்கும் விவகாரம்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்து!

கொழும்பு: ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப அழைப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு.

இதன் மூலம் இலங்கை வீரர்கள் கண்டிப்பாக மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்காக ஐபிஎல்லில் விளையாடி வரும் வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் பேசி, டுவென்டி20 போட்டியில் மே 15-ம் தேதி வரையாவது விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

எனினும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், கிரிக்கெட் வாரியத்தினரும் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழுவினர் நேற்று நீண்ட நேரம் விவாதித்த பிறகு, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னால் கேப்டன் குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன மற்றும் இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலகரத்ன தில்ஷான் உள்ளிட்ட 11 வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக நாடு திரும்புவார்கள் எனத் தெரிகிறது. 

இலங்கை கிரிக்கெட்டின் நலன்கள்தான் தனக்கு முக்கியம் எனத் தெரிவித்த அளுத்கமகே, இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கமாக எடுத்துக்கூறப்படும் என்றும் கூறியுள்ளார்.

* கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக ஆடுகிறாரா?

கொல்கத்தா: சவுரவ் கங்குலியின் ஐபிஎல் கனவு இன்னும் தீரவில்லை மாறாக அது விரைவில் நனவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஐபிஎல்-4 சீசனில் கங்குலியை ஏலத்தில் எடுப்பாரில்லை. இதை சற்றும் எதிர்பாராத கங்குலி அதிர்ச்சி அடைந்தார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணியே கைவிட்டுவிட்டது. 

இந்நிலையில் கங்குலியிடம் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடூவீர்களா என்று கேட்டதற்கு, நீங்களே பார்ப்பீர்கள் என்று புன்னகைத்தார்.

இலங்கை வீரர்களை வரும் மே மாதம் 5-ம் தேதிக்குள் நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மஹிலா ஜெயவர்த்தனே தற்போது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி கேப்டனாக இருக்கிறார். அவர் நாடு திரும்புகையில் சவுரவ் கங்குலி அந்த இடத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளை பாதியில் விட்டுவிட்டு கிளம்பும் இலங்கை வீரர்கள் மே மாதம் மேற்கொள்ளும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பயிற்சி பெறப்போகிறார்கள்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

மூலவர் : மகரநெடுங் கு‌ழைக்காதர்
  உற்சவர் : நிகரில் முகில் வண்ணன்
  அம்மன்/தாயார் :  குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
 
  தீர்த்தம் : சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
  -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : திருப்பேரை
  ஊர் : தென்திருப்பேரை
  மாவட்டம் : தூத்துக்குடி
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
      
மங்களாசாஸனம் 

நம்மாழ்வார்

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லை என் தோழிமீர்காள் சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரையில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே.

-நம்மாழ்வார்

தல சிறப்பு:
     
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று ,நவ நதிருப்பதியகளில் இது 6 வது திருப்பதி ( தென்திருப்பேரை) . நவகிரகங்களில் இது சுக்ரன் தலம்  
   
இத்தலத்தில் மகரநெடுங் குழைக்காதர் பெருமாள் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

தலபெருமை:
      
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி 

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர் 

4. புதன் : திருப்புளியங்குடி 

5. குரு : ஆழ்வார்திருநகரி 

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை 

7. சனி : பெருங்குளம் 

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலை வில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி 

தல வரலாறு:
     
  இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும்.  பூதேவி துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள்.   ஸ்ரீ பேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற  மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்க பகவான் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீ பேரை என்ற நாமம் பெற்றதால் இத்தலத்திற்கு திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை  நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகவும் பகவானை பூஜித்து அது நீங்கி மழை பெய்ததாக தல வரலாறு கூறுகிறது. 

திருவிழா:
     
   வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:
     
  காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

சாரதாதேவியார் - கடவுள் நமக்கு உறவினர்

வாழ்க்கையில் ஆபத்துக்கள் வராது என்பது உண்மையல்ல. துன்பங்கள் எப்போதும் தொடரத்தான் செய்யும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப்போல அவையும் நிற்காது போய் விடுவதைக் காண்பாய்.

அஞ்சவேண்டாம்! மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. எனவே எதையும் தாங்கிக் கொள்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாக சகித்துக் கொள்.

எவருமே இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் இவைதரும் துன்பங்களை ஏற்றே ஆக வேண்டும்.

வினாடி வினா :

வினா - உலகின் உயரமான எரிமலை எது ?

விடை - லஸ்கார் (சிலி)

இதையும் படிங்க :

20-banana-tree-200.jpg


திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமணப்பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் 
வாழைமரம் கட்டுவது ஐதீகம். இது பற்றி சில சுவையான தகவல்கள் :

தம்பதியர் தியாகம்

முக்கனிகளுள் ஒன்றான வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி. மற்ற இரண்டு 
கனிகளின் மரங்களை விட வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது.
வாழை, தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர் 
ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதன் 
அடையாளமாக வாழை மரம் உள்ளது. குடும்ப விருத்திக்காகவும், வாழை மரத்தை 
கட்டுவதுண்டு.

வாழையடி வாழை

வாழையின் இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் என அனைத்தும் பயன்தரக்கூடியது. சில 
பகுதிகள் மருந்தாகவும் பயன்தரக்கூடியது. ஏனைய மரங்களில் இருந்து ஒரு வகையில் 
வாழை வித்தியாசமானது. ஒரு வாழையை நட்டால் போதும் வாழையடி வாழையாக அதன் குலம் தலைக்கும்.

பெரியோர் வாழ்த்து

மனிதன் தலைமை பெறவேண்டும், தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கு பலவகைகளிலும் 
பயன்தரவேண்டும் என்றும் அவன் குலம் வழி வழியாக தழைக்கவும் என்பதை 
உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப்பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர். மணமக்களை 
ஆல் போல தழைத்து அருகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தின் 
புலப்பாடகத்தான் வாழைமரம் கட்டுவதை கருத வேண்டும்.

நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர். 

No comments:

Post a Comment