Monday, April 18, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 18 , 2011.


முக்கியச் செய்தி :

* தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு ஏன்?-நரேஷ் குப்தா

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலி்ல் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகியதற்கான காரணம் குறி்தது முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 5 சதவீதமும், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட 7 சதவீதமும் அதிகமாகும்.

இந்த தேர்தலில் அதிகமான அளவில் வாக்குகள் பதிவாகியதற்கு காரணம் வாக்களர்களின் ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர மக்கள் ஏராளமானோர் வாக்களித்தது தான். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி மற்றும் கடந்த 2005ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிதாக பெயர் சேர்க்கப்பட்டதும் கூட வாக்காளர்களை வாக்களி்கக தூண்டியிருக்கலாம்.

இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடா மிக மிக குறைந்த அளவில் தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடியால் பணம் கடத்தப்படுவதும், வினியோகிக்கப்படுவதும் தடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பணப் பட்டுவாடா தான் பெரும் பிரச்சனை. அதனால் தான் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வேட்பாளரின் செலவுக் கணக்கை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் ஏராளமான துணை ராணுவத்தினரும், வருமானவரித்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கணக்கில் காட்டப்படாத ரூ. 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணியில் குடியிருப்போர் நல சங்கத்தினர், சமூக சேவை அமைப்பினரையும் ஈடுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும்போது, மேற்கண்ட அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி, வாக்காளரை அடையாளம் காணவும், விண்ணப்பத்தை வழங்கிடவும், வயது, முகவரி தொடர்பான ஆவணங்களையும், புகைப்படத்தையும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பார்கள். இத்தகைய தனியார்-அரசு கூட்டு முயற்சி திட்டத்தை, பெங்களூர் நகரில் உள்ள ஒரு தொகுதியில் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் என்றார்.

*
அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இலவச சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள்

நெல்லை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது

தமிழகப் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் ஆகிய 4 வகை பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவரக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது.

இதற்காக கல்வியாளர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டன. பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. கல்வி நிபுணர்களின் கருத்துக்களை அறிந்தபின் பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 1-ம் வகுப்புகான அனைத்து பாடப்புத்தகங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கு இம்மாதத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.80 கோடி மதிப்பில் இலவச பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.11 கோடி மதிப்பீல் நோட்டு, புத்தகம் வழங்கப்பட உள்ளது.

1-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் செட் ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செட் புத்தகத்திற்கு 5 சதவீதம் கழிவு வழங்கப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை 'லீக்'!

ஐ.நா: இலங்கையில் கடைசிக் கட்ட போரின்போது கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் உள்பட மிக பயங்கரமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள்  கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு ஐ.நாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புலிகளுக்கு எதிரான கடைசி கட்ட போரில் நடந்த கொடூரங்கள் தொடர்பாக உலகெங்கும் கடும் கண்டனங்களும், இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதி காத்தது தொடர்பாக எதிர்ப்பும் கிளம்பியதையடுத்து இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன்.

இந்தக் குழு தனது அறிக்கையை பான்-கி-மூனிடம் சமர்ப்பித்துள்ளது. அதை இன்னும் அவர் வெளியிடாத நிலையில், அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 'லீக்' ஆகியுள்ளன.

அதில், இறுதிக் கட்ட போரின்போது சர்வதேச சட்டங்களை இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது. கண்மூடித்தனமான கொலைகள், கற்பழிப்புகள், மிருகத்தனமான கொடூரங்களை இலங்கை ராணுவம் அரங்கேற்றியுள்ளது. பொது மக்களும் அப்பாவி மக்களும் திரண்டிருந்த இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல்  நடத்தியுள்ளதோடு, no-fire zones என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பள்ளிகள், முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளிலும் மிக பயங்கரமான ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவத் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பியோட முடியாத வகையில் அவர்களை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரங்கள் வெளியுலகுக்குத் தெரிந்துவிடாத வண்ணம் பல வகையான அடக்குமுறைகளிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்தக் கொலைகள் குறித்து தகவல்கள் வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை அரசே கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் பலர் மாயமாகிவிட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மின்சார நாற்காலி தண்டனைக்கும் தயார்-ராஜபக்சே:

இந்தப் புகார்களை இலங்கை அரசு வழக்கம்போல் மறுத்துள்ளது.

தேசத்துக்காக மின்சார நாற்காலி தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

அதிபர் மாளிகையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை தாங்க முடியாத சிலர் சர்வதேச அளவில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறுகிய அரசியல்  லாபத்துக்காகவே சிலர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

* ஹோஸ்னி முபாரக்கின் கட்சி கலைப்பு: எகிப்து நீதிமன்றம் உத்தரவு

கெய்ரோ, ஏப்.17: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது; கட்சியின் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து மக்கள் அமைதிப் புரட்சியை நடத்தினர். 18 நாள்கள் நடந்த இந்த அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து ஹோஸ்னி முபாரக் தூக்கியெறியப்பட்டார்.

இந்த நிலையில் அவரை சட்டத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் முபாரக்கை, சட்டத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த எகிப்து மக்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்று அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கான உத்தரவை எகிப்திலுள்ள உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் கட்சிக்குச் சொந்தமான பணம், அதன் தலைமையகம், கட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அமைதிப் புரட்சி நடத்திய எதிர்ப்பாளர்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இத்தகவலை அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி வருகிறது.

* துபையில் இன்று 50 நாடுகள் ஆலோசனை

துபை, ஏப்ரல் 17: கடற்கொள்ளையர் பிரச்னையை சமாளிப்பது குறித்து துபையில் 50 நாடுகளின் அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

சோமாலிய கடற்கொள்ளையர்கள், அடிக்கடி பிற நாடுகளின் சரக்குக் கப்பல்களை வழிமறித்து தாக்கியும் அதில் செல்பவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தும் கொள்ளையடிப்பது, பிணைத்தொகை வசூலிப்பது என்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. இது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பெரிய பிரச்னையாக மாறி உள்ளது.

எனவே இந்த பிரச்னையைக் கையாள்வது குறித்து ஆலோசனைகள் பெற தனியார் துறையினர் மற்றும் அரசுத் தரப்பினர் பங்கேற்கும் கூட்டம் துபையில் நடக்கிறது. 2 நாள் நடக்கும் இந்த கூட்டத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு செய்துள்ளது.

30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி, சர்வதேச கடல்சார் நிறுவனம் உள்ளிட்டவை இதில் பங்கேற்கும். 2011ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நிலவரப்படி பார்த்தால் உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் ஏமன் வளைகுடா பகுதி, அரபிக் கடல், ஆப்பிரிக்கக் கடற்பகுதி ஆகியவற்றில் கடற்கொள்ளையர்கள் சுமார் 107 கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 17 கப்பல்களை கடத்தியுள்ளனர். கடற்கொள்ளையர் பிரச்னை தொடர்கிறது என்பதற்கு இந்த சம்பவங்கள் சான்று என சர்வதேச கடல்சார் மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

இப்போதைய நிலையிலும் சுமார் 26 கப்பல்கள் கடற்கொள்ளையரின் கட்டுப்பாட்டில் உள்ளன. 532 மாலுமிகளை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

இதனிடையே, சோமாலியா கடற்பகுதி அருகே நடக்கும் கடற்கொள்ளையை தடுக்க பல்வேறு நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவ நிதி திரட்டுவதற்கு என ஐக்கிய அரபு அமீரகமும் ஐநாவும் தனி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.

* கதிர்வீச்சை அளவிட ரோபோக்கள்

டோக்கியோ, ஏப்.17: ஜப்பானில் கதிர்வீச்சை அளவிட ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11-ம் தேதி ஜப்பானிலுள்ள புகுஷிமா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவிலுள்ள அணுமின் நிலையத்திலிருந்த அணுஉலைகள் வெடித்தன. இதனால் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது.
கதிர்வீச்சைத் தடுக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அணு உலைப் பகுதியில் கதிர்வீச்சை அளவிட ரோபோக்களை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து புகுஷிமாவிலுள்ள டோக்கியோ மின் உற்பத்தி நிறுவன (டெப்கோ) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ரோபோக்களை இதற்கு பயன்படுத்தவுள்ளோம்.

இதன்மூலம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் பரவியிருக்கும் கதிரியக்க அளவு, வெப்ப நிலை, ஈரப்பதம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவை குறித்து இந்த ரோபோக்கள் அளவிடும்.
அதிக அளவு சூடாகியுள்ள அணுஉலைகளில் இருந்து கதிர் வீச்சு வெளியாகி வருகிறது. இது காற்று, நிலம், கடல்நீர் ஆகியவற்றிலும் பரவி வருகிறது

இதையடுத்தே இப்பகுதியைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு ஜப்பான் அரசு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளது என்றார் அவர்.

கதிர்வீச்சு பரவிய தண்ணீரை கடலில் ஜப்பான் கலக்கவிட்டதால், அண்டை நாடுகள் அச்சம் தெரிவித்தன.

மீனவர்கள் உள்ளிட்டோரும் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்து கதிர்வீச்சு பரவிய தண்ணீர் கடலில் கலப்பது நிறுத்தப்பட்டது.
6 முதல் 9 மாதங்களில் கதிர்வீச்சு கட்டுப்படுத்தப்படும்: ஆறு முதல் 9 மாதங்களில் அணுமின் நிலையத்தில் எழுந்துள்ள கதிர்வீச்சு பிரச்னை கட்டுப்படுத்தப்படும் என்று டெப்கோ அறிவித்துள்ளது.

இத்தகவலை டெப்கோ தலைவர் சுனேஹிசா கட்சுமாட்டா தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு பிரச்னை அடுத்த 6 முதல் 9 மாதங்களில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.
இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

* ஏழைகள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்

வாஷிங்டன், ஏப்.17: ஏழைகள் மேம்பாட்டில் உலக வங்கி மீண்டும் தனது கவனத்தைத் திருப்பவேண்டும் என்று இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் ஆர். கோபாலன் கூறினார்.

வாஷிங்டனிலுள்ள உலக வங்கியின் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆர். கோபாலன் பேசியதாவது:

இந்தியா போன்ற சில வளரும் நாடுகளில் வங்கிக்கு வரும் முதலீட்டு அளவில் கட்டுப்பாடு வைக்கப்பட்டுள்ளது.
இது அந்த நாடுகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற நேரங்களில் வங்கிகளுக்கு முதலீடு அதிக அளவு வந்தால்தான் வங்கிகள் தன்னிறைவு அடைய முடியும்.
எனவே குறுகிய, நடுத்தர அளவிலான முதலீடுகள் மட்டுமல்லாமல் வங்கிகள் மூலமாக இதுபோன்ற நாடுகளில் அதிக முதலீடுகளைக் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதுபோன்ற நேரங்களில் ஏழைகள் மேம்பாட்டில் உலக வங்கி தனது கவனத்தை மீண்டும் திருப்பவேண்டும்.

மண்டலம் அல்லது பகுதியாக இருக்கட்டும்; புதிய கருவிகள் கண்டுபிடிப்பு அல்லது தயாரிப்புகளை உருவாக்குவதாக இருக்கட்டும்; நவீனமயமாக்குதல் அல்லது ஆட்சிமுறையாக இருக்கட்டும்; உலக வங்கி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அதேபோல விவசாயத்துக்கு வங்கிகள் அளிக்கும் கடன் மிகவும் குறைவானதாக இருக்கிறது. இதை அதிகரிக்கவேண்டும்.

இதுபோன்ற நீண்ட காலத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் முடிவுகள் சிறப்பானதாக இருக்க, விவசாய வங்கிக் கடன் தொகையை உயர்த்தவேண்டும் என்றார் அவர்.

தேசியச் செய்தி மலர் :

* லோக்பால் மசோதா: நாடாளுமன்ற முடிவை ஏற்போம்: அண்ணா ஹஸாரே

புது தில்லி, ஏப்.17: லோக்பால் மசோதா விவகாரத்தில் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று சமூக சேவகர் அண்ணா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

ஒருவேளை லோக்பால் மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

நாட்டில் நாடாளுமன்றம்தான் அதிக அதிகாரம் வாய்ந்தது. அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜனநாயகத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. லோக் பால் மசோதாவை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்துள்ளோம்.
15-ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவேன்.

மசோதாவை நிறைவேற்றும் விஷயம் இப்போது சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
லோக்பால் மசோதா விஷயத்தில் நாடாளுமன்றம் ஒரு மாதத்துக்குள்ளாகவே முடிவெடுக்கும் சாத்தியம் உள்ளது.
மசோதாவை நிறைவேற்றுவதற்காக நான் மேற்கொண்ட போராட்டத்தை கொள்கை பயங்கரவாதம் என்று அழைக்கின்றனர். இவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக நாம் பயங்கரமாக போராட வேண்டியிருக்கிறது அல்லவா?

மசோதாவை நிறைவேற்றுவதற்காக நான் மேற்கொண்ட போராட்டத்தை கொள்கை பயங்கரவாதம் என்று அழைக்கின்றனர். இவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக நாம் பயங்கரமாக போராட வேண்டியிருக்கிறது அல்லவா?
மசோதாவை நிறைவேற்றுவதற்கு இதுபோன்ற போராட்டம் தேவைதான். மசோதா தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த நான் தயாராக இருக்கிறேன். இந்த விஷயத்தில் அனைவரது நம்பிக்கையையும் பெறவேண்டியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேச நான் தயார். கட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தத் தயாராக உள்ளேன் என்றார் அவர்.

* மேற்கு வங்காளத்தில் 54 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல்

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக நாளை 54 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பெகார், நார்த் திஞ்சாபுர், தெற்கு திஞ்சாபுர், மால்டா ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதிகள் உள்ளன.

கடந்த 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள இடதுசாரி கூட்டணிக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த மாநில தேர்தல் காரணமாகத் தான் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வாக்குப் பதிவு ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* அசன் அலிக்கு பாஸ்போர்ட்: புதுவை கவர்னர் நீக்கம்?-செயலாளரை நீக்கினார் மாயாவதி

டெல்லி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி  துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவி நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதே விவகாரத்தில் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் விஜய்சங்கர் பாண்டேவை பதவி நீக்கம் செய்து அம் மாநில முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் உள்பட பல வெளிநாட்டு வங்கிகளில் இவர் பல லட்சம் கோடியளவுக்கு பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளார் அசன் அலி. இது குறித்து மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலி மற்றும் அவரது பார்ட்னரான காசிநாத் தபுரியாவும் ஆகியோர் ரூ. 75,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இவருக்கும் தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் அசன் அலி மற்றும் தபுரியா இருவரையும் கடந்த மாதம் அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர்.

இதற்கிடையே பிகார் மாநில ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது அசன் அலிக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுத் தந்ததாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் மீது அமலாக்கப் பிரிவு புகார் கூறியுள்ளது. பிகாரைச் சேர்ந்த அமலேந்து பாண்டே என்பவர் மூலமாக அலிக்கு இக்பால் சிங் உதவியதாகக் கூறியுள்ள அமலாக்கப் பிரிவினர் இது தொடர்பாக இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் அனுமதி கோரியுள்ளனர்.

மேலும் இக்பால் சிங்குக்கு சம்மனும் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இருந்து கவர்னருக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கவர்னரின் சிறப்பு அதிகாரி ஜே.பி.சிங் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இக்பால் சிங் திடீரென டெல்லி கிளம்பிச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி ப.சிதம்பரத்தை சந்தித்து இதுபற்றி விளக்கம் அளித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் அவர் தனது விளக்கத்தை கொடுத்தார். அதில், அமலேந்து பாண்டே தனது சகோதரர் உடல்நிலை சரி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கிறார். எனவே அவரை பார்க்க செல்ல சிலருக்கு பாஸ்போர்ட் வேண்டும் என்று கேட்டார்.அதில் அசன் அலி மற்றும் காசிநாத் தபூரியா மனைவி ஆகியோருக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க உதவும்படி கூறி இருந்தார்.

அதை ஏற்று நான் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ராலுக்கு சிபாரிசு கடிதம் எழுதினேன். ஆனால் அசன் அலி யார் என்றே எனக்குத் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில் தான் நான் இந்த உதவியை செய்தேன் என்று இக்பால் சிங் கூறியுள்ளார்.

இக்பால் சிங் தன்னிலை விளக்கம் அளித்தாலும் அசன் அலிக்கு உதவியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு வேறு ஒருவரை புதுச்சேரி மாநில கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி  இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் முன் இக்பால் சிங்கே தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அசன் அலி, காசிநாத் தபூரியா மனைவி ஆகியோருக்கு பாஸ்போர்ட் கிடைக்க உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் விஜயசங்கர் பாண்டேவும் உதவியதாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது. அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

விஜய்சங்கர் பாண்டே முதல்வர் மாயாவதிக்கு மிக நெருக்கமான அதிகாரியாவார்.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினரின் அதிரடியால் அவரை பதவி நீக்கம் செய்து முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

* கர்நாடகாவில் 80, 100 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை: மக்கள் வியப்பு

பெங்களூர்: நேற்று கர்நாடக மாநிலத்தில் பலத்த காற்றுடன் 80 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை பெய்தது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு பலர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தாவணகெரே மாவட்டத்தில் நேற்று பலத்து காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை என்றால் சிறு சிறு கட்டிகள் தான் விழும் என்று நினைகக்லாம். ஆனால் அங்கு 80 கிலோ எடை கொண்ட ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனேகல்லில் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஆலங்கட்டி மழை பெய்து மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

* எஸ். பாண்ட் ஒதுக்கீட்டுக்கு ஏலம் விடப்படவில்லை: இஸ்ரோ

புது தில்லி, ஏப். 17: எஸ். பாண்ட் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றப்படவில்லை என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
எஸ். பாண்ட் ஒதுக்கீடு செய்ததில் இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதில் ஏல முறை பின்பற்றப்படவில்லை என்றும் பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது குறித்து விவரம் கேட்டு விண்ணப்பித்தது.

இதற்கு பதிலளித்துள்ள இஸ்ரோ, "இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸýக்கும் தேவாஸ் மல்டிமீடியாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கீடு, டிரான்ஸ்பான்டர்கள் குத்தகை உள்ளிட்டவைக்கு ஏலம் விடப்படவில்லை. எனினும் இரு நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நகல்களை வெளியிட முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) -ன் கீழ் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

* திருமணங்களில் உணவு வீணாவதைத் தடுக்க மத்திய அரசு இன்று ஆலோசனை

புதுதில்லி, ஏப்.17: திருமணம் உள்பட பல்வேறு விழாக்களில் பரிமாறப்படும் உணவு வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உணவுத்துறை திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
இதுகுறித்து உணவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பெரிய அளவில் நடைபெறும் திருமண விழாக்கள், பொது விழாக்களில் உணவு பரிமாறப்படுகிறது. இந்த விழாக்களில் அதிக அளவில் உணவு வீணாகிறது. இப்போது இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவாதித்து இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் திட்டமிட்டுள்ளார். இதுபற்றி விவாதிக்க தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர் தாமஸ் கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சுக்லா மற்றும் பொதுநல அமைப்பைச் சேந்த பலர் கலந்து கொள்கிறார்கள். அப்போது திருமண விழாக்கள், பெரும் நிகழ்ச்சிகள், சமுக நிகழ்ச்சிகளில் உணவு வீணாவதைத்தடுக்க அவர்களிடம் ஆலோசனை கேட்கப்படும் என்றார்.

உணவை வீணாக்குவது குற்ற நடவடிக்கையாகும் என்று அண்மையில் அமைச்சர் தாமஸ் கூறியிருந்தார். இவ்வாறு உணவு வீணாவதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவருவது குறித்தும், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. திருமணம் போன்ற சமூக நிகழ்ச்சிகளில் சராசரியாக 15 முதல் 20 சதவிகித உணவு வீணாவதாக தெரியவருகிறது. இதைத்தடுக்க 1960களில் தீவிரமாக இருந்த விருந்தினர் கட்டுப்பாடு ஆணையைப் பரிசீலிக்க அரசு முனைப்பாக உள்ளது. திருமணம்போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வகை செய்கிறது இந்தச் சட்டம்.

இதைத்தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கு இன்னமும் கூட ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவே கிடைக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* பழைய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ. 150 கோடி அபராதம்

புது தில்லி, ஏப். 17: சேவைகளை முறையாக அளிக்காத புகார்கள் தொடர்பாக ஏர்செல், ஏர்டெல் உள்ளிட்ட பழைய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 150 கோடி அபராதம் விதித்துள்ளது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம்.
இது தவிர இப்போது புதிதாக வந்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக சென்ற ஆண்டு 119 புகார்கள் வந்தன.
இந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ. 300 கோடி ஏற்கெனவே அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் புகார்கள் தொடர்பாக பழைய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்செல், ஏர்டல், ரிலையன்ஸ், டாடா ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ. 150 கோடி அபராதத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



மாநிலச் செய்தி மலர் :

* தமிழகத்தில் 8 தொகுதிகளில் மறு வாக்குப் பதிவில் 81% வாக்குப் பதிவு

சென்னை: தமிழகத்தில் 6 தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்ட 8 வாக்குச் சாவடிகளில்
81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கடந்த புதன்கிழமை அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் 77.8 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவே மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு ஆகும்.

இந்த தேர்தலின்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு, தேர்தல் புறக்கணிப்பு, வன்முறையால் மின்னணு எந்திரங்கள் சேதம் அடைந்தது போன்ற காரணங்களினால் மொத்தம் 8 வாக்குச் சாவடிகளில் மறு ஓட்டுப் பதிவு நடத்த தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதையடுத்து 8 வாக்குச் சாவடிகளிலும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. ஏற்கனவே நடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. மறு தேர்தலின்போது இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.

இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் சராசரியாக 81.3 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம் வாக்குச்சாவடியில் 70.2 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது புதன்கிழமை நடந்த ஓட்டுப்பதிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் நடந்த மறு ஓட்டுப்பதிவில் 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது கடந்த வாக்குப் பதிவை விட 5 சதவீதம் குறைவாகும்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி, சங்கராபுரம் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப்பதிவில் 80.8 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இது கடந்த வாக்குப் பதிவை விட 5 சதவீதம் குறைவு.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் புளியம்பட்டி வாக்குச் சாவடியில் நடந்த மறு ஓட்டு பதிவில் 93.2 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது கடந்த ஓட்டுப்பதிவை விட 2.21 சதவீதம் அதிகம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் கிராமத்தில் இரு வாக்குச் சாவடிகளில் நடந்த மறு வாக்குப் பதிவில் முறையே 84.3 சதவீதம், 82.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இது முந்தைய ஓட்டுப்பதிவை விட 5 சதவீதம் குறைவாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் தொகுதியில், வளியவட்டம் மற்றும் பருத்திக்குடி ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் முறையே 87.2, 82.8 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

* தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்

ராமநாதபுரம்: புதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள்  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பவேயில்லை. இதனால் மற்ற மீனவர்கள் அவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் காணாமல் போன மீனவர்களில் மூன்று பேரின் கால் இல்லாத உடல்கள் கரை ஒதுங்கின. நான்காவது மீனவரான மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாமல் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிரேதம் கரை ஒதுங்கியது. இது குறித்து ராமநாதபுரம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்துவிட்டு இது மாரிமுத்துவின் உடல் தான் என்று உறுதி செய்தனர்.இதற்கு காரணம் இலங்கை கடற்படையினர் தான் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடந்தது என்ன?:

ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் கடந்த 2ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட நாளில் கரை திரும் பாததால் குடும்பத்தினர் தவித்தனர்.

இந் நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பூங்கடி தீவு கடற்கரையில் விக்டரின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை யாழ்ப்பாணம் மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்து விட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் அந்தோணிராஜ், ஜான்பால் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின.

இதில் ஜான் பாலின் இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. தலையில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று புகார் கூறப்பட்டது.

இதேபோல் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்ட விக்டர் உடலிலும் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த 3 மீனவர்களின் குடும்பங்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியாக தலா ரூ.25,000 வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியாத இலங்கை கடற்படையினர் ஆத்திரமடைந்து அங்கு மீன் பிடித்த 4 மீனவர்களின் படகை மடக்கி பிடித்து அவர்களை தாக்கியுள்ளனர். இதில் 4 பேரும் படகிலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு மீனவர்களின் உடலையும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழக கடல் எல்லையில் வீசி உள்ளனர். இறந்துபோன விக்டர் உடலில் 16 இடங்களில் படுகாயமும் காலில் கல்லை கட்டி கொலை செய்த அடையாளமும் உள்ளது என்றார்.

கடந்த வாரம் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்கிரஸ்  கட்சித் தலைவி சோனியா காந்தி இனி மேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்  நடத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த சில நாட்களிலேயே இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது.

* சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சுயம்வரம் நிகழ்ச்சி

சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 மணமகன், மணமகள்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர்.

இந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மணமகன், மணமகள் தேடி 500 மாற்றுத் திறனாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் விவரங்களை சங்கத் தலைவர் என்.ரவி அறிவிக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்கு எப்படிபட்ட வரன் வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர்.

பெரும்பாலான பெண்கள் எனது கணவர் ஊனமுற்றவராக இருந்தாலும், எந்த மதத்தை-ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, நல்ல மனம் உள்ளவராக இருக்க வேண்டும், காலமெல்லாம் என்னை அன்போடு அன்போடு பார்த்துக்கொண்டால் போதும் என்றனர்.

சுயம்வரத்தில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்ட பின்னர் அவர்களின் பெற்றோர் தங்களுக்கு பிடித்த மணமகன், மணமகள் குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பலர் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்து மகிழ்வோடு திரும்பிச் சென்றனர்.

* "பென்டாஸ்டிக்': தேரோட்டத்தைகண்ட வெளிநாட்டவர் "கமென்ட்'

மதுரை:வானத்தை தொடும் அளவிற்கு மதுரை மாசி வீதிகளில் ஊர்ந்தும், ஓடியும் வந்த மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேர்களை கண்டு, உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவரும் சிலாகித்தனர். தேரோட்டத்தை காண மேல - வடக்குமாசி வீதி சந்திப்பில் வெளிநாட்டவருக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆடி அசைந்து வந்த தேர்களை கண் கொட்டாமல் பார்த்த வெளிநாட்டவர்கள் அளித்த பேட்டி.பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவன பொதுமேலாளர் போர்மேஜ் : பத்து நாட்களாக தமிழகம், கேரளாவில் சுற்றுலா சென்றுவிட்டு, சித்திரைத் திருவிழாவை காண மதுரை வந்தேன். இப்படி ஒரு விழாவை பார்த்தது இல்லை. "வொண்டர்புல்'. பக்தர்கள் கும்பல் கும்பலாக வந்து கடவுளிடம் வேண்டுவதை பார்த்து பரவசமடைந்தேன். வெயில் ஒரு பொருட்டாக தெரியவில்லை.லண்டன் ஹாக்கிஹோப்பர் : ஏற்கனவே தமிழகத்திற்கு வந்தபோதிலும், இப்போதுதான் மதுரைக்கு வருகிறேன். சித்திரைத்திருவிழா குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன்.

அதை இப்போதுதான் பார்த்திருக்கிறேன். பெரிய தேர்கள் ஆடி அசைந்து வருவது ஆச்சரியமா இருக்கிறது. நான் கற்பனை செய்திருந்ததைவிட, "பென்டாஸ்டிக்'காக உள்ளது. அடுத்தாண்டும் நான் இவ்விழாவை பார்க்க, எனது நண்பர்களையும் அழைத்து வருவேன்.குத்தாட்டம் போட்ட பிரான்ஸ் நாட்டின் பாடகர் பாட்ரிக் : "மார்வெலஸ்'. ரொம்பவும் "என்ஜாய்' பண்ணினேன். உங்க ஊரு பாட்டு புரியலை என்றாலும், இசை என்னை ஆட வைத்தது. அடுத்தாண்டும் நிச்சயம் வருவேன்.

* பிளஸ்-2 தேர்வு முடிவு தாமததமாக வெளியாகும்

தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகே பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளனர்.கடந்த மாதம் 2 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை தேர்வு நடந்தது.

தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடக்கிறது.ஆங்கிலம் மற்றும் மொழிப்பாட விடைத்தாள்கள் மட்டும் இன்னும் திருத்தி முடியவில்லை.

இப்பணிகள் 20 ம் தேதி வரை நடக்கும். வழக்கமாக மே 2வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டில் அதே தேதியிலோ அதற்கு முன்னதாகவோ வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

7 லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் பதிவு செய்து சரிபார்த்து பின்னர் “டேட்டா சென்டர்” மூலம் மார்க் பட்டியல் தயாரிக்க குறைந்தது 20 நாட்கள் ஆகும்.

சட்டசபை தேர்தல் முடிவும் மே 13 ம் தேதி வெளியாகிறது.எனவே 14 ம் தேதிக்கு முன்னதாக வெளியிட வாய்ப்பில்லை.தேர்வு முடிவுகள் எதிர்பாராத விதமாக தேர்ச்சி விகிதம் குறைந்து இருந்தால் அதுபற்றி அரசிடம் தேர்வுத்துறை ஆலோசிக்கும்.

வழக்கமாக ஒரு மதிப்பெண் முதல் 5 மதிப்பெண் வரை குறைவாக பெற்று தோல்வியை தழுவும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்களை போட்டு அரசு கரையேற்றி விடும்.

இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் புதிய அரசு அமைந்தபிறகு புதிதாக பொறுப்பேற்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தேர்வு முடிவை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

எனவே பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் கடைசி வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

 வர்த்தகச் செய்தி மலர் :

* தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16,080

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 3,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,598 ஆக இருந்தது. 1 பவுன் விலை ரூ.12,784 ஆக இருந்தது.

இந் நிலையில் இன்று ஒரு கிராம் விலை 2,010 ஆக உயர்ந்துள்ளது. 1 பவுன் தங்கம் விலை ரூ.16,080 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 1921ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 21 ஆக இருந்தது.
2000ம் ஆண்டில் ரூ.3,320 ஆனது. 2002ல் ரூ.3,368, 2003 முதல் 2005ம் ஆண்டு வரை ரூ.4,000க்குள் இருந்தது.

2006ம் ஆண்டு ரூ.6,160, 2007ம் ஆண்டு ரூ.7,076, 2008ம் ஆண்டு ரூ.8,072 என இருந்த தங்கத்தின் விலை, 2009ம் ஆண்டு ஜனவரியில் முதல் முறையாக ஒரு பவுன் ரூ.10,000த்தைத் தாண்டியது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது ரூ.11,232 ஆனது.

2010ம் ஆண்டு ஜனவரியில் தங்கம் விலை பவுன் ரூ.12,104 ஆனது. ஜுன் மாதம் ரூ.14,000த்தைத் தாண்டியது. கடந்த டிசம்பர் மாதத்தில் விலை ரூ.15,000த்தைத் தாண்டியது.

இந் நிலையில் நேற்று மாலை தங்கம் வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.16,080யை எட்டியது. அதாவது ஒரு கிராம் ரூ.2,010 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் ஒரே ஆண்டில் ரூ.3,000 வரை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

வரக்கூடிய மாதங்கள் முகூர்த்த மாதங்கள் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே தெரிகிறது. மேலும் வரும் 20ம் தேதிக்கு மேல் திருமண சீசன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி அட்சய திரிதியை நாள் வருகிறது. இந்த காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

லிபியா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து அரபு நாடுகளில் சர்வதேச நிதிச் சந்தைகளுக்குப் பதில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவகிறது.

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

* விளையாட்டுச் செய்தி மலர் :

* பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை & ஹைதராபாத்: சென்னையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

சென்னை வீரர் மைக் ஹசி 56 பந்துகளில் 83 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தத் தோல்வியின் மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

டெக்கான் சார்ஜர்ஸை வீழ்த்திய பஞ்சாப்:

அதே போல ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி.

பஞ்சாப் வீரர் வல்தாட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 47 பந்துகளில் 75 ரன்களையும் குவித்தார். கடந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக இவர் சதமடித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே போல கேப்டன் கில்கிறிஸ்ட் 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

* பஞ்சாபிடம் வீழ்ந்தது டெக்கான்

ஹைதராபாத், ஏப்.17: ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் அணியை வென்றது பஞ்சாப்.

பஞ்சாப் வீரர் வல்தாட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 47 பந்துகளில் 75 ரன்களையும் குவித்தார். கடந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக இவர் சதமடித்தார். கேப்டன் கில்கிறிஸ்ட் 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெக்கான் அணியில், தவாண் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் சங்ககரா 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்வரிசையில் கிறிஸ்டியான் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் வல்தாட்டி 4 ஓவர்களை வீசி 29 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கில்கிறிஸ்ட்-வல்தாட்டி விளாசல்: பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் கில்கிறிஸ்ட், வல்தாட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரியை விரட்டி அதிரடியைத் தொடங்கினார் கில்கிறிஸ்ட்.

இஷாந்த் சர்மா வீசிய 4-வது ஓவரில் இமலாய சிக்ஸர் ஒன்றை விளாசிய வல்தாட்டி, கோனி வீசிய 5-வது ஓவரில் 1 சிக்ஸரையும், 4 பவுண்டரிகளையும் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்களை வாரி வழங்கினார் கோனி. மீண்டும் 7-வது ஓவரை கோனி வீச வந்தபோது, கில்கிறிஸ்ட் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். இதனால் 9-வது ஓவரில் பஞ்சாப் 100 ரன்களைக் கடந்தது.

மிஸ்ராவின் ஓவரில் சிக்ஸரை விளாசி அரைசதமடித்தார் கில்கிறிஸ்ட். டுமினி வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை விளாசி அரைசதத்தைக் கடந்த வல்தாட்டி, அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் சிக்ஸர் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 136 ரன்களை எட்டியபோது கில்கிறிஸ்ட் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். மிஸ்ரா வீசிய 16-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸரையும், 5-வது பந்தில் பவுண்டரியையும் விளாசிய வல்தாட்டி, கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

பின்னர் வந்த நாயர் 13 ரன்கள் எடுக்க பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கோனி 2 ஓவர்களை வீசி 35 ரன்களை வாரி வழங்கினார். வல்தாட்டி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

* ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்

மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்

  அம்மன்/தாயார் : மீனாட்சி, அங்கயற்கண்ணி
  தல விருட்சம் : கடம்ப மரம்
  தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
  ஆகமம்/பூஜை : காரண
  பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
  ஊர் : மதுரை
  மாவட்டம் : மதுரை
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
சம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்,

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர்,

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.

தல சிறப்பு:
 
  சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழுகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.இந்த சக்தி பீடத்திற்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தர்களில் சுந்தரானந்தர் அடங்கிய தலங்களுள் ஒன்று. தழிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர். பொற்றாமரைக்குளம் : நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம் . கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம்.
 
மீனாட்சி  அங்கயற்கண்ணி:
இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.

மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.

அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.

நடராஜர் கால் மாறி ஆடிய காரணம்:
மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். அதில் பதஞ்சலி மகரிஷியும் வியாக்ரபாதரும் அடங்குவர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும்   சிவனிடம், ""இறைவா! நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை  பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்'' என்றனர்.

இதைக்கேட்ட இறைவன், இவர்களின் நியமத்தை காக்கும்பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்ட பின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனர்.

இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் 64ல் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம். இந்த நடனமானது நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான்.

இதே காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன் என்ற மன்னன்  64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான். இப்படி நடனம் கற்கும் போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான். 64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீவாதம் வாங்க  வருகிறான். அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் துõக்கி நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜருக்கு  எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான்.

இதை யாரிடம், எப்படி கேட்பது. முன் காலங்களில் வாழ்ந்த தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.

இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகிறது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு, நடராஜரின் எதிரில் நின்று, ""ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா! எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?'' என வருந்திகேட்கிறான். ""அப்படி நீ கால் மாறி ஆடா விட்டால் என் முன்னால் கத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன்'' என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்க்கிறான் ராஜசேகர பாண்டியன். அப்படியே  மெய்சிலிர்த்து நின்று விடுகிறான்.

காரணம், பக்தனுக்காக இடது  கால் ஊன்றி வலது கால் துõக்கி ஆடுகிறார் நடராஜப்பெருமான். உடனே மன்னன்

""பெரியாய் சரணஞ் சிறியாய் சரணங்
கரியாகிய வங்கணனே சரண
மரியாயெனியா யடிமாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்!
நதியாடிய செஞ் சடையாய் நகை வெண்
மதியாய் மதியா தவர் தம்மதியிற்
பதியாய் பதினென் கணமும்  புரவுத்
துதி சரணஞ் சடரே சரணம்!

இப்படி பலவாறாக பாடிதுதித்து மகிழ்ந்து ஆனந்தத்தில் அழுது விழுந்து தொழுது ""எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கவேண்டும்'' என்ற வரமும் வாங்கி விடுகிறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.

இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனின் 64  திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது படலமாக "கால் மாறி ஆடிய படலம்' 6வது திருவிளையாடலாக வருகிறது.

பொற்றாமரைக் குளம்
இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம். திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை  தோன்றிய தலம். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும், நீர்வாழ்  உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.

வெளி ஆவரணமும் உள் ஆவரணமும்

மதுரையில் கோயிலுக்கு வெளியில் நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் உள் ஆவரணம் எனப்படும். மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி  ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனுõரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.

இதுபோல மதுரைத் தலத்திற்குள்ளாக உள்ள திருக்கோயில்கள் உள் ஆவரணம் ஆகும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள்ஆவரணக்கோயில்களாகும்.

பிரார்த்தனை
   
இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.

வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.

தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள்.

இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம், அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது.

இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.

தலபெருமை:
 
 
உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.

பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.

சிவனே எல்லாம் வல்ல சித்தராக  எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே  சிவபெருமானுக்கு  நடைபெறுகின்றன.

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக  வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.

நக்கீரர் வாழ்ந்த இடம் .

முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.  

பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.


இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும்  பூசித்துப் பேறு பெற்ற தலம்.

திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து  சைவத்தை பாண்டிநாட்டில்  நிலைபெறச் செய்த தலம்.

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம்.
எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.

பல புராண இலக்கியங்களையுடையது:
கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.

தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன.

தலத்தின் பெயர் காரணங்கள் :

மதுரை:

சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.

ஆலவாய்:

சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் வந்தது.

கடம்பவனம்:

கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் கடம்பவனம் எனப் பெயர் பெற்றது

நான்மாடக்கூடல்:

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும்  தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.

இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர்-  திருப்புகழ்
பாணபத்திரர்-  திருமுகப்பாசுரம்

பரஞ்சோதி முனிவர்  -

திருவிளையாடற்புராணம்

மதுரைக்காஞ்சி-  மாங்குடி

மருதனார்மீனாட்சி

பிள்ளைத்தமிழ் - குமரகுருபர

சுவாமிகள்

இவை தவிரகணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்களில் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு தகவல்:

மூன்று கோடி சிற்பம்

அம்மனின் சக்தி பீடங்களில் முதன் மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த பீடத்திற்கு "ராஜமாதங்கி சியா மள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது. சுந்தரானந்தர் என்ற சித்தர் அடங்கிய தலம். இத்தலத்தினை "பூலோக கைலாசம்' என்றும், இத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறது புராணம். அத்துடன் உலகத்திலேயே சிலை களும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். இந்திரன் உருவாக்கியது. சிவபெருமான் மதுரை நகரில் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த் தினார். அதில் முதல் திருவிளையாடல் தான் "இந்திரன் சாபம் தீர்த்த படலம்'. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் நீங்க பல தலங்களுக்கு சென்று வந் தான். அப்படி வரும் போது  மதுரையில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்றான். அங்கு இந்திர விமானத் துடன் கூடிய கோயிலை கட்டினான்.

பெண்மைக்கு முக்கியத்துவம்

அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார்.  கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை  பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.

முக்குறுணி விநாயகர்

ஒரு முறை திருமலை நாயக்கருக்கு  தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளை யார் கிடைத்தார். அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி "முக்குறுணி விநாயகர்' என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு விநாயகர் சதுர்த் தியன்று 18படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள்.

தங்கத்தேர்

அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத் தால் தேர் செய்யப்பட்டது. இந்த தங்க தேர் இழுப்பதற்கு அலுவலகத் தில் பணம் கட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இலவசமாக தங்கத்தேர் இழுக்கலாம்.  இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும், 87.667 கிலோ வெள்ளியும், 222.400கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கயற்கண்ணி பெயர் விளக்கம்

அன்னை மீனாட்சிக்கு பல திருநாமங் கள் இருந்தாலும்,  அங்கயற்கண்ணி என்ற திருநாமம் தான் மீனாட்சிக்கு பெருமை சேர்க்கிறது. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.  மீன் தன் முட்டைகளை தன் பார்வையாலேயே தன்மயமாக்கு வதைப் போல், அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை தனது அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறாள்.

சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் துõக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார். மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாம‌ரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.

விஞ்ஞானம் அடிப்படையில்: ஆயிரங்கால் மண்டபம் : வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் துõண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன. இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது.

திருவிழா

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திரு விழா காணும் இக்கோயிலில் சித்திரை யில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும். இது தவிர ஆவணி மூல திருவிழா, தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம் போன்றவையும் முக்கிய விழாக்கள் ஆகும்.

சித்திரை திருவிழா: சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம், பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபி ஷேகம், செங்கோல் வழங்கும் வைப வம், 9ம் நாள் மீனாட்சி திக்விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த்திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா, வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்.

வைகாசியில் 10 நாள் வசந்த விழா, திருஞான சம்பந்தர் விழா. ஆனியில் ஊஞ்சல் திருவிழா. ஆடியில் முளைக்கொட்டு விழா.  அடுத்து 12 நாள் நடக்கும் ஆவணி மூலப்பெருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி தந்தது, மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கியது, உலவாக் கோட்டை அருளிய லீலை, அங்கம் வெட்டியது, வளையல் விற்றல், குதிரை கயிறு மாறிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு சுமந்த லீலை ஆகியவை இடம் பெறும் புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் 6 நாள் கோலாட்ட உற்ச வம், அன்னாபிஷேகம், கார்த்திகை யில் தீபஉற்சவ விழா, 1008 சங்கா பிஷேகம் நடக்கிறது. மார்கழியில் மீனாட்சிக்கு 4 நாள் எண்ணெய் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தியன்று கல் யானைக்கு கரும்பு தந்தருளிய லீலை, வலைவீசியருளிய திருவிளையாடல், தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம் மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா நடக்கும். மாசி மகா சிவராத்திரியன்று "சகஸ்ர சங்காபிஷேகமும்' 4 கால பூஜையும் உண்டு. பங்குனி மாதத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் செல்லூர் திருவாப் புடையார் கோயிலுக்கு எழுந்தருள்வர்.

திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

தாயுமானவர் - சுத்தமான மனக்கண்ணாடி.

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.

வினாடி வினா :

வினா - உலகில் முதன் முதலாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் யார் ?

விடை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
 
இதையும் படிங்க :

இரண்டாயிரம் கச்சேரிகள்...

கடம் வித்வான் - சுகன்யா ராம்கோபால்: என் சொந்த ஊர், மயிலாடுதுறை. தலைமுறை தலைமுறையா இசையில் ஈடுபட்டு வருவதால், எனக்கு இசையில் மிகுந்த ஆர்வம்.

உ.வே.சாமிநாதய்யர் பரம்பரையில் வந்ததால, இசை மட்டுமில்லாது, தமிழ்லயும் மிகுந்த ஈடுபாடு உண்டு. என் கொள்ளு தாத்தா தமிழை தேர்ந்தெடுத்தார். நான் அவரை மாதிரி தமிழையோ அல்லது இசையையோ தேர்வு பண்ணாம, தமிழ்நாட்டு இசையான கடத்தை தேர்வு செய்தேன்.போகி பண்டிகையின் போது, சின்னப் பசங்க மேளம் அடிச்சு விளையாட உடுக்கை விப்பாங்களே, அதை வாங்கி அடிக்கும்போதே ஆரம்பிச்சுடுச்சு என் இசை ஆர்வம். இந்த ஆர்வத்தால், பத்து வயசுலயே மிருதங்கம் கத்துக்கிட்டேன். பதிமூணு வயசுலயே, தனியா கச்சேரி பண்ற பக்குவம் வந்துடுச்சு. அப்பதான், என் கவனம் கடம் பக்கம் திரும்பிச்சு.கடம் வித்வான், விக்கு விநாயக்ராமிடம், கடம் கத்துக்க கேட்டப்போ, மண்ணால செய்யப்பட்ட வாத்தியம்மா; இதுல சத்தம் வரவழைக்கறது,

 ஆண்களுக்கே கஷ்டம், நீ பெண் குழந்தை எப்படி முடியும்னு கேட்டார். என் விடாமுயற்சியை பார்த்து கத்துக் கொடுத்தார். இசை வாழ்க்கைக்கு கூடுதல் பலம் என் கணவர் ராம்கோபால். என்னை போல், இசை ஆர்வம் மிக்கவர். இந்த வளர்ச்சியில அவர் பங்கு இருக்கிறது. பக்கவாத்தியமாக வாசிச்சதை, முதல் ஸ்தானத்துக்கு கொண்டு வந்து, "கடதரங்கு' கச்சேரிகள் நடத்தி சாதித்துக் காட்டினேன். பெண்களுக்கு லய உணர்ச்சி கம்மிங்கற எண்ணத்தை மாற்ற, என்னோடு குழுவில் பக்கவாத்தியம் வாசிக்கிறதுக்கு பெண்களையே தேர்ந்தெடுத்தேன்

இதுவரை, உலகம் முழுவதும் 2,000 கச்சேரிகள் நடத்திக் காட்டியிருக்கேன். கடந்த 96ம் ஆண்டு, கனடாவுல நடத்தின கச்சேரியில கிடைச்ச பாராட்டை எப்பவும் மறக்க முடியாது. கிடைச்ச பாராட்டுக்கு எனக்குத் தகுதி இருக்கான்னு தெரியலை. அதுக்குக் கண்டிப்பா தகுதியாகணும்னுதான், நாற்பது ஆண்டா இசையோட என்னை இணைச்சிக்கிட்டேன்!



நன்றி - சமாச்சார், தின மலர், தின மணி.



நன்றி - தட்ஸ்தமிழ், சமாச்சார், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment