Monday, June 13, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் 13, 2011.

முக்கியச் செய்திகள் :

ராணா மீதான வழக்கு விசாரணை முடிவு: விரைவில் தீர்ப்பு!

Untitled-1.jpg

மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டி,தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட தஹவூர் ராணா. சிகாகோ நீதிமன்றத்தில் ஆஜரான அவரது வரைபடம்.

சிகாகோ, ஜூன் 8: மும்பை தாக்குதலில் தஹவூர் ராணாவின் பங்கு குறித்த வழக்கில்,சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

 கடந்த 2009ம் ஆண்டு டேவிட் கோல்மென் ஹெட்லியை சிகாகோ போலீஸôர் கைது செய்தனர். மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டம் தீட்டிக்கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஹெட்லியின் கல்லூரி நண்பர் தஹவூர் ராணாவும் கைது செய்யப்பட்டு, அவர் மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 50 வயதான ராணா மீது, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தது, மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 மும்பை தாக்குதலில் பலியான 166 பேரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க, ராணாவுக்கு தண்டனை வழங்கபட வேண்டும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்த தம்மை ஹெட்லி ஏமாற்றி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தியதாக ராணா ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளார்.

 12 பேர் கொண்ட ஜூரிகளின் முன் நடந்த இந்த வழக்கில் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு மேல் நீடித்த விசாரணையின் போது, ராணா சாட்சியம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி ஹாரி டி லீயினன்வெபர், ராணாவை சாட்சியம் அளிக்க அழைத்த போதும், விருப்பமில்லை என அவர் கூறினார். மும்பை தாக்குதலில், குற்றத்தை ஹெட்லி ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ராணா குற்றமற்றவர் என அவரது வழக்கறிஞர் சார்லி சுவிஃப்óட் தெரிவித்தார். ராணா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால், அவர் சாட்சியம் அளிக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார். ஹெட்லி சாமர்த்தியமாக ராணாவை ஏமாற்றிவிட்டதாவும், அவருக்கு மும்பை மற்றும் கோபன்ஹேன் தாக்குலில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அனைவரையும் ஹெட்லி முட்டாள் ஆக்கி விடுவார் என்றும் ராணாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். தம்மை காபாற்றிக் கொள்ள, ஹெட்லி, ராணாவை பலிகடா ஆக்க முயல்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 தொழில் அதிபரான ராணா, இந்தியா, டென்மார்க், காராச்சி,லாகூர் உள்ளிட்ட பல இடங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பினார் என்றும் ஹெட்லியின் சதி செயல்கள் எதுவும் அவருக்கு தெரியாது என்றும் அவர் வாதிட்டார். ராணாவின் வர்த்தக தொடர்புகளை லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஐஎஸ்ஐயின் சதி வேலைகளுக்கு ஹெட்லி சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார் என்று அவர் மேலும் கூறினார்.

 வாக்குமூலம் தொடர்பாக,நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட விடியோவை தமது கட்சிக்காரர் இதுவரை பார்க்கவில்லை எனவும் அவர் வாதிட்டார்.

 மிகவும் பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை காண அமெரிக்க அரசு அதிகாரிகள், பல நாடுகளிலிருந்தும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் குவிந்தனர்

* கனிமொழி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
புது தில்லி, ஜூன் 12: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூன் 13) விசாரிக்கிறது.

 இருவரது ஜாமீன் மனுக்களும் நீதிபதிகள் பி.எஸ்.செüகான், ஸ்வதந்திர குமார் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரவுள்ளன. இந்த பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள வழக்குகளில் 16-வது வழக்காக இந்த வழக்கு இடம்பெற்றுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்து தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரது மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்து.

 இதையடுத்து இருவரும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் உயர் நீதிமன்றமும் இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

 தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு கருதப்படுகிறது. இதனால் கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் ஜாமீன் அளித்தால் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கக்கூடும், சாட்சியங்களை திசை திருப்பக்கூடும் என்று சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கருதின. இதனால் அவர்களுக்கு ஜாமீன் தர மறுத்தன.

 இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் இருவருக்கும் ஜாமீன் வழங்காது என்றே சட்டநிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலகச் செய்தி மலர் :

* தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை?

கொழும்பு, ஜூன் 12: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்தியா தெரிவித்த யோசனைகளை இலங்கை நிராகரித்துவிட்டது என அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

 இதனிடையே, இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பணியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பது என அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது.

 இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.

 ஆனால், இந்தியக் குழுவினர் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பிய பிறகு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை மாகாண அரசுகளுக்கு விட்டுத் தர முடியாது என்று இந்தியக் குழுவினரிடம், இலங்கை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

 காவல்துறை மற்றும் நிலம் மீதான அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது, இந்தியா அளித்த யோசனைக்கு எதிராக அமைந்துள்ளது. இது இரு நாட்டு அரசியல் தலைமைக்கு இடையே நெருடலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ""சண்டே டைம்ஸ்'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், அதிபர் ராஜபட்ச மற்றும் இந்தியக் குழுவினருடனான பேச்சு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்த் இடம்பெற்றிருந்தார்.

 மாகாணக் கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு ராஜபட்ச கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே மாகாணக் கவுன்சில்கள் அதிகாரமின்றி செயலற்று உள்ளன.

 மத்திய மாகாணக் கவுன்சில் கூட்டு அதிகாரம் வழங்குவதற்கு தமது அரசு தயாராக உள்ளதாக இந்தியக் குழுவிடம் அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாகத் தெரிகிறது.

 தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுவதால் இவ்விரு பகுதிகளிலும் நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ராஜபட்ச அப்போது சுட்டிக் காட்டியதாகவும் ""டைம்ஸ்'' தெரிவிக்கிறது.

 ஆனால் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக அரசியல் சாசன திருத்த சட்டத்தை இலங்கை அமல்படுத்தும் என்று நம்புவதாக சிவசங்கர் மேனன் குறிப்பிட்டிருந்தார். சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு அரசியல் மூலமான தீர்வுதான் சிறந்ததாக இருக்கும் என்று இந்தியக் குழுவினர் வலியுறுத்தியதாக மேனன் குறிப்பிட்டார்.

 கடந்த மாதம், இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா சற்று கடுமையாக குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அங்கு நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 இந்தியாவின் யோசனையை, இந்தியக் குழு தில்லி திரும்புவதற்குள்ளாகவே இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை செல்ல பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். இவரது பயணம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வாக அமையும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

* 31 பேர் சாவுக்கு காரணமான இ கோலி: பீன்ஸிலிருந்து பரவியது கண்டுபிடிப்பு*
பெர்லின், ஜூன் 12: ஜெர்மனியில் 31 பேரை பலி வாங்கிய இ கோலி பாக்டீரியா பீன்ஸிலிருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ÷ஜெர்மன் நாட்டில் சமீபத்தில் இ கோலி பாக்டீரியா தொற்றால் 31 பேர் இறந்தனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. காய்கறி மூலம் இந்த பாக்டீரியா பரவும் என்பதால் மக்கள் காய்கறிகளைக் கண்டாலே ஓடும் நிலை ஏற்பட்டது. காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டாமென்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

 ÷இந்நிலையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள காய்கறிப் பண்ணையில் விளைவிக்கப்பட்ட பீன்ஸிலிருந்து இ கோலி பாக்டீரியா பரவியதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆய்வ சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.

 ÷சமீபத்தில் இ கோலி பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு பெண்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவர்கள் சமீபத்தில் சாப்பிட்ட பீன்ஸ் மூலம் அவர்களை இ கோலி தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பீன்ஸ் வாங்கிய இடம் குறித்து விசாரித்தபோது அந்த பீன்ஸ் வடபகுதியில் உள்ள பண்ணையில் விளைவிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பண்ணைக்கு சென்ற அதிகாரிகள் பண்ணையை மூடி பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பண்ணையில் பாக்டீரியா எப்படி வந்தது என்பதும் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

 ÷அந்தப் பண்ணையில் இருந்து காய்கறி விநியோகிக்கப்படும் இடங்களுக்கும் மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை ஜெர்மனியின் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* பாகிஸ்தானில் அமெரிக்க உளவாளி கைது
இஸ்லாமாபாத்,ஜூன் 12: பாகிஸ்தானில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 ÷அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேத்யூ கிரெய்க் பேரட்(27). இவர் இஸ்லாமாபாத் அருகே பெத்ஜங் என்ற இடத்தில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் போலீஸôர் இவரை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி ராவல்பிண்டி சிறையில் அடைத்தனர்.

 ÷முன்னதாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு இவருக்கு கடந்த 4-ம் தேதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இவர் பெத்ஜங் பகுதியில் இருந்து தப்பித் தலைமறைவானார். இதையடுத்து பாகிஸ்தான் போலீஸôர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இவரைக் கைது செய்தனர்.

 ÷ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேத்யூ பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தேசியச் செய்தி மலர் :

* மழைகால கூ‌ட்ட‌த்தொட‌ரி‌ல் லோ‌க்பா‌ல் மசோதா ‌நிறைவ‌ே‌ற்ற‌ம் -பிரணா‌ப் முக‌ர்‌ஜி 

மழைகால கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் லோ‌க்பா‌ல் மசோதாவை தா‌க்க‌ல் செ‌ய்ய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌ம‌த்‌திய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், அ‌ண்ணா ஹசாரே உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் நட‌த்து‌ம் போரா‌ட்ட‌ம் ஜனநாயக மா‌ண்பு‌க்கு எ‌திரானது எ‌‌ன்றா‌ர்.

கரு‌ப்பு பண‌ம், ஊழலு‌‌க்கு எ‌திராக ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை எடு‌த்து வரு‌கிறது எ‌ன்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

லோ‌க்பா‌ல் குழு நடவடி‌க்கையை ‌வீடியோ எடு‌க்கு‌ம் கோ‌ரி‌க்கையை ஏ‌ற்க முடியாது எ‌ன்று ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

* உ.பி.,யில் சிறுமி கொலை: 11 போலீஸார் சஸ்பெண்ட்

லக்னோ, ஜூன் 12- உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் 11 போலீஸார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

லக்கிம்பூர் அருகே நிகாஷன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவத்தை கண்டித்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 2 எஸ்.ஐ.,கள் உட்பட 11 போலீசாரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.கே. ராய் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

சிறுமியை போலீஸார் கொன்றதாக கூறப்படும் தகவலால், லக்கிம்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* திகார் சிறையில் இட்லி, தோசை
புது தில்லி, ஜூன் 12: தில்லி திகார் சிறையின் உணவுப் பட்டியலில் தென்னிந்திய உணவு வகையான இட்லி, தோசை, சாம்பார், தேங்காய் சட்னி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உணவு வகைகளை சமைக்க சிறை சமையல்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 தென்னிந்திய உணவுகளை வழங்கும் இந்த ஏற்பாடு பிப்ரவரியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உணவுகளுக்கு சிறைக் கைதிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பாபா ராம்தேவ்
டேராடூன், ஜூன் 12: ஊழல் ஒழிப்பு, வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய யோக குரு பாபா ராம் தேவ் தனது போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொண்டார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தனது பிடிவாத்ததைத் தளர்த்திக் கொண்டார் பாபா. இதையடுத்து பழச்சாறு கொடுத்து பாபா-வின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ரவிசங்கர்.

கடந்த 4-ம் தேதி தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பாபா ராம் தேவ். அதற்கு முன்பாக மத்திய அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால்,சுபோத் காந்த் சகாய் ஆகியோர் தில்லி விமான நிலையத்தில் சென்று பாபா ராம் தேவுடன் பேச்சு நடத்தினர்.

தனது உண்ணாவிரத போராட்டத்தை மாலைக்குள் முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் பின்னர் போராட்டம் தொடரும் என அறிவித்தார். இதையடுத்து நள்ளிரவில் தில்லி போலீஸôர், அதிரடிப்படி கமாண்டோக்கள் தில்லி ராம் லீலா மைதானத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பாபா ராம் தேவ் உள்ளிட்ட ஆதரவாளர்களை வெளியேற்றினர்.

இதையடுத்து ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீட மையத்தில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பாபா ராம்தேவின் உடல் நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை ராம்தேவ் இங்குள்ள ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாபாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக மருத்துவமனை இயக்குநர் விஜய் தஸ்மனா தெரிவித்தார். அவரது உடல் நிலையில் வேறு எந்த கோளாறும் இல்லை. இருப்பினும் இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையின் பொதுப் பிரிவில் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

ராம்தேவுடன் உண்ணாவிரதம் இருந்த அவரது நெருங்கிய சகா பாலகிருஷ்ணாவும் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

பல்வேறு சன்னியாசிகள், ஆதரவாளர்கள் பலரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டதால், தனது போராட்டத்தை ராம்தேவ் முடித்துக் கொண்டதாக பாலகிருஷ்ணா குறிப்பிட்டார்.

போராட்டம் தொடரும்: இருப்பினும் ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பண விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். பாபா ராம்தேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த அனைவரும் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாலகிருஷ்ணா மேலும் கூறினார். கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான தங்களது போராட்டத்தை மக்களிடையே சென்று சேர்த்த ஊடகங்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அரசு வென்று விட்டதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்பது பிரச்னையல்ல. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து அதை வெற்றிகரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட்டோம் என்று குறிப்பிட்டார்.

மக்கள் விழிப்படைந்துவிட்டதால் ஊழலுக்கு எதிரான போராட்டம் தானாகவே தொடரும் என்றார்.

ராம்தேவ் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் காலமான தனது தந்தையின் அஸ்தியைக் கரைப்பதற்காக அவர் ஹரித்வாருக்கு சென்ற ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அங்கிருந்து மருத்துவமனைக்கு வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார் என்றும் பாலகிருஷ்ணா குறிப்பிட்டார்.

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செüதாலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை பாபா ராம்தேவை சந்தித்தனர். நாட்டின் நலன் கருதி உண்ணாவிரதம் இருக்கும் ராம்தேவின் கோரிக்கையை ஏற்குமாறு மத்திய அரசைக் வலியுறுத்தப் போவதாக மருத்துவமனைக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பாதல் கூறினார். மக்களுக்காகப் போராடும் ஒருவரின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

*ஏம‌‌னி‌ல் இரு‌ந்து 68 பே‌ர் தாய‌கம் ‌திரு‌ம்‌பின‌ர்

ஞாயிறு, 12 ஜூன் 2011( 12:51 IST )

ஏம‌ன் நா‌ட்டி‌ல் த‌வி‌த்து வ‌ந்த த‌மிழக, கேரள செ‌வி‌லிய‌ர்க‌ள் 68 பே‌‌ர் தாயக‌ம் ‌திரு‌ப்‌பியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌ந்து ஏம‌ன் நா‌ட்டி‌ற்கு வேலை‌க்கு செ‌ன்று‌‌ள்ள நூ‌ற்று‌க்கண‌க்கான செ‌வி‌லிய‌ர்க‌ள் உ‌ள்நா‌ட்டு கலவர‌த்த‌ி‌ல் ‌சி‌க்‌‌கி நாடு ‌திரு‌ம்ப முடியாம‌ல் த‌வி‌‌த்து வ‌ந்தன‌ர்.

இவ‌ர்க‌ளி‌ல் முத‌ல் க‌ட்டமாக 68 பே‌ர் ப‌த்‌திரமாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ‌நெ‌ல்லை மா‌வ‌ட்ட‌ம் ‌திசைய‌ன்‌விளையை சே‌ர்‌ந்த ‌நி‌ர்மலா எ‌ன்ற செ‌வி‌லிய‌ர் தா‌ம் நாடு ‌திரு‌ம்புவே‌ன் என கன‌வி‌ல் கூட ‌நினை‌க்கவே இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

மாநிலச் செய்தி மலர் :

* மாற்றுத்திறனாளி மாணவிக்கு பரிசு வழங்க வேண்டுகோள்

girl.jpg

சென்னை, ஜூன் 12: பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள பார்வையற்ற மாணவி ஆஷாவுக்கு அரசின் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும்.

 இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ஆஷா என்ற மாணவி 1,028 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 இவர் மாற்றுத்திறனாளிகள் அளவில் மாநிலத்தில் 3-வது இடத்தையும் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

 இவர் தெலுங்கு வழியில் படித்துள்ளார் என்ற காரணத்தினால் இவருக்கு பரிசுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. மாணவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மேலும் நான்கு பெண் குழந்தைகள் உள்ள அவரது குடும்பத்தில் இவரது மூத்த சகோதரியும் பார்வையற்றவர்.

 தினமும் சுமார் 6 கி.மீ. நடந்து சென்று, பின்னர் பஸ்ஸில் பயணம் சென்று படித்துள்ளார்.

 இவருக்கு மாநில அளவில் 3-வது இடத்தைப் பெற்றதற்காக ரூ. 9 ஆயிரம், மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்றதற்காக ரூ. 12 ஆயிரம், பிரெயில் அச்சுப் புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ. 13 ஆயிரம் என மொத்தம் ரூ. 34 ஆயிரம் அரசின் சார்பில் வழங்கலாம்.

 எனவே இவருக்கு மறுக்கப்பட்டுள்ள பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் எஸ்.நம்பிராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

* புதிய முறையில் ஐ.ஏ.எஸ். தேர்வு: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்

சென்னை, ஜூன் 12: நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலைத் தேர்வை ஏறத்தாழ 3 லட்சம் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.

 தமிழகத்தில் இந்தத் தேர்வை ஏறத்தாழ 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

 இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சி-சாட் என்ற திறனறியும் தேர்வுமுறை எளிமையாக இருந்ததாகப் பல மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு சில மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு நேரம் போதவில்லை என்றும் தெரிவித்தனர்.

 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இந்த ஆண்டு 880 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

 முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடம், விருப்பப்பாடம் என இரண்டுத் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு விருப்பப் பாடத்தை நீக்கி விட்டு, ஆங்கிலம், கணிதம் அடங்கிய சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் தேர்வு (சி-சாட்) அறிமுகப்படுத்தப்பட்டது.

 பொதுஅறிவுப் பாடம் காலையிலும், ஆப்டிடியூட் தேர்வு மாலையிலும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு கேள்வித் தாள்களிலும் முறையே 100, 80 கேள்விகள் இருந்தன. இந்தப் பாடங்களுக்கு 200 மதிப்பெண் வழங்கப்படும்.

 தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் 70-க்கும் அதிகமான தேர்வு மையங்களில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

 வழக்கமாக, தேர்வு மையங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் காணப்படுவர். இந்த ஆண்டு பதிவு செய்த பல மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்

* இலங்கை மீது பொருளாதாரத் தடை: உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும்- பழ. நெடுமாறன்.

nedu.jpg

தஞ்சாவூர், ஜூன் 12: இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கைக்கு எதிராக அந்த நாட்டின் மீது பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உலக நாடுகளிடையே இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

 இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல.

 தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

 தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக வாழும் கறுப்பின மக்களுக்கும், இந்தியர்களுக்கும் அதனால் பாதகம் விளையும் என்று யாரும் வாதாடவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகள் சில இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டன. ஆனாலும், பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவு நடவடிக்கையின் விளைவாக தென்னாப்பிரிக்க அரசு இறுதியில் பணிய நேர்ந்தது.

 எனவே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

* தமிழ் வழி பி.இ.: தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாமா?

சென்னை, ஜூன் 12: தேர்வுகளைத் தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி பி.இ. படிக்கும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

 பள்ளிகளில் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்கள், பொறியியல் பட்ட பாடங்களை எளிதாகப் புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக பி.இ. மெக்கானிகல் மற்றும் சிவில் பிரிவுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது படித்து வருகின்றனர்.

 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இந்த தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

 அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க. பொன்முடி, தமிழ் வழி பி.இ. படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தேர்வுகளை தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாம் எனக் கூறினார். ஆனால், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளைத் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று துறைத் தலைவர்கள் சிலர் வலியுறுத்தினர். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதல் மாதிரித் தேர்வின்போது, தூய தமிழில் கேள்வித் தாள் தயாரிக்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

 இதைத் தொடர்ந்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாம் என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹரும் கூறினார். இதனையடுத்து, மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதி வந்தனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புதிதாக சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழிருந்த உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் அதன் கீழ் மாற்றப்பட்டன. இந்த நிலையில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அனைத்துக் கல்லூரிகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பினார். இதனால் மீண்டும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 இந்த உத்தரவு காரணமாக, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை (விழுப்புரம் வளாகம்) சேர்ந்த 4 தமிழ் வழி பி.இ. மாணவர்கள், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் கூறுகின்றனர். இப்போது 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து, அண்ணா பல்கலைகழகத்தை முன்பிருந்த நிலைக்கு மாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தங்களுக்கும் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுத தமிழக அரசு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி மாணவர்களிடைய எழுந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் சில, பாடத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன. இப்போது 5 பல்கலைக்கழகங்களும் ஒன்றாக இணைக்கப்படுவதால், பாடத் திட்ட ரீதியாக தங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்ற அச்சமும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

 இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (விழுப்புரம் வளாகம்) பேராசிரியர் ஜெயச்சந்திரன் கூறியது:

 பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தில் சிறிய அளவில்தான் மாற்றங்களைச் செய்துள்ளன. அதே நேரம், தரத்தைக் குறைக்கும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, மீண்டும் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கப் போவதில்லை. மேலும், தமிழ் வழி பி.இ. படிப்புகளின் பாடத் திட்டத்தில் மாற்றம் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது: அண்ணா பல்கலைக்கழகங்களை இணைப்பது என்ற தமிழக அரசின் முடிவால், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டம் சர்வதேச தரம் உடையது என்பதை அனைவரும் அறிவர். எனவே, ஒருங்கிணைப்பு முடிவால் மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும். தொடக்கத்தில் சிறு பிரச்னைகள் எழும் என்றபோதும், பின்னர் சரியாகிவிடும் என்று அவர் கூறினார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு: ஆய்வில் தகவல்
லண்டன், ஜூன் 10 : பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை,தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

 பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால், பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன், கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும், சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

 அதாவது, 1 டம்ளர் பழச்சாறில், 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே,பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில், 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* வே‌ர்‌‌க்கடலை‌யி‌ன் மக‌த்துவ‌ம் 

 

உய‌ர்‌ந்த புரத ச‌த்து ‌நிறை‌ந்த உண‌வி‌ல் சோயா ‌பீ‌ன்‌சி‌‌ற்கு அடு‌த்தபடியாக வே‌ர்‌க்கடலை இட‌ம்பெறு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், பா‌ஸ்பர‌ஸ், கால‌்‌சி‌ம், இரு‌ம்பு‌ச்ச‌த்து, வை‌ட்ட‌மி‌ன் ஈ, ‌நியா‌‌ஸி‌ன் போ‌ன்ற வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் அ‌திக‌ப்படியாக வே‌ர்‌க்கடலை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.

எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே‌ர்‌க்கடலை‌க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

வ‌யி‌‌ற்‌றி‌ல் பிரச்சினை உள்ளவர்கள், உட‌ல் எடையை‌க் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலா‌ம். வே‌ர்‌க்கடலை சா‌ப்‌‌பி‌ட்டது‌ம், ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்காத கா‌பி அ‌ல்லது டீ அரு‌ந்தவு‌ம். ப‌சி‌த்த ‌பிறகு சா‌ப்‌பிட‌ச் செ‌ன்றா‌ல் குறைவான அளவே சா‌ப்‌பிட முடியு‌ம். இதனா‌ல் உட‌ல் எடை குறையு‌ம்.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம்

large_256554.jpg

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் மூலமாக, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக, குழந்தைகள் உரிமை நல அமைப்பான "பச்பன் பச்சாவ்' வெளியிட்ட தகவல், பல ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்களைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு வெளியீடான "காபிடல் கரப்ஷன்: சைல்ட் லேபர் இண்டியா' இத்தகவல்களைக் கொண்டிருக்கிறது. வயது வந்த தொழிலாளர்களுக்கு மாற்றாக, குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைக் கணக்கிட்டு, அதனால் முறைகேடாக ஏற்படும் வருவாய் ஆதாயம் கறுப்புப் பணமாகிறது என்பதே, இத்தகவலில் உள்ள கருத்தாகும்.இந்தியா முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் ஒருநாளைய வருவாய் மற்றும் பணி நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வில் கணக்கிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்தது.

இவர்களுக்கு, சராசரியாக 15 ரூபாய் ஒரு நாளைய சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில், இவர்களுக்கு 200 பணி நாட்கள் என தெரிகிறது. பல இடங்களில், மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கில், வயதானவர்களுக்கு பதிலாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மலிவான சம்பளத்திற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதும் ஒரு காரணம்.வயதான நபர்களுக்கு ஒரு நாள் குறைந்தபட்ச சம்பளமாக, 115 ரூபாய் வழங்கப்பட வேண்டும். சம்பளம் முறையாக வழங்காவிட்டால், வயதான நபர்கள் சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவர்.
அதுவே, குழந்தைத் தொழிலாளர் எனில், சம்பளத்தை சிறிது சிறிதாக வழங்கினால் போதுமானது. கூடுதல் பணி சுமையும் சுமத்தப்படுகிறது. இவர்களால், சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாது என்பது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இப்படியாக, ஆறு கோடி வயதானவர்களுக்கு பதில், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் சேர்ப்பதால், சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் மிச்சமாகிறது. இதற்கு வரி ஏதும் செலுத்தப்படுவதில்லை. இதுபற்றி, அரசிடம் முறையான கணக்கு விவரங்களும் சமர்ப்பிக்கப்படாது.இப்படியாக, குழந்தைத் தொழிலாளர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கறுப்புப் பணம் பல இடங்களில், அவரவர் துறைகளின் வசதிக்கேற்ப முதலீடு செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்தி மலர் :

சிமென்ட் விற்பனையை தமிழக அரசே ஏற்குமா?

ஜூன் 13,2011,02:05
விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டேபோகும் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த, அதன் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. ஒரு மூட்டை சிமென்ட், 150 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக அதிகரித்தது.

சிமென்ட் விலை உயர்வை தடுக்கும் வகையில், கடந்த ஆட்சியில், 2008, ஜனவரி முதல் 1,000 சதுரடி வரை வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, சலுகை விலையில் 50 கிலோ மூட்டை ஒன்று 200 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு அதிகபட்சமாக 400 மூட்டைகள் வரை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, தனியார் சிமென்ட் ஆலை அதிபர்களை நேரடியாக அழைத்து விலையை குறைக்கும்படி கூறினார். இதனால், வெளிச்சந்தையில் சிமென்ட் விலை சற்று குறைந்தது. அரசு சிமென்ட் விற்பனை செய்ததற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.தமிழகத்தில் ஆலங்குளம் மற்றும் அரியலூரில், அரசுக்கு சொந்தமான சிமென்ட் ஆலைகள் உள்ளன. ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ஆண்டுக்கு 2.90 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு, ஈரப்பத தொழில்நுட்பம் மூலம் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு 5 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட அரியலூர் சிமென்ட் ஆலையில், உலர்பத தொழில்நுட்பத்தில் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.இவ்வாலைகளி
ல், உற்பத்தி செய்யப்படும் சிமென்ட் முழுமையும், அரசு துறைகளுக்கு ஒரு மூட்டை, 200 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில், தனியார் துறையைசேர்ந்த, இந்தியா சிமென்ட் நிறுவனத்திற்கு மூன்று ஆலைகளும், மெட்ராஸ் சிமென்ட் நிறுவனத்திற்கு மூன்று ஆலைகளும், டால்மியா சிமென்ட் நிறுவனத்திற்கு இரண்டு ஆலைகளும், செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்திற்கு நான்கு ஆலைகளும், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஏ.சி.சி., நிறுவனத்திற்கு தலா ஒரு ஆலையும் உள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சிமென்ட் மூட்டை 290 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தி ஆலைகள், ஆண்டுக்கு மூன்று கோடியே 27 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த மார்ச் வரை இரண்டு கோடியே 60 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 80 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய்க்கு மேலாக சிமென்ட் விற்பனை நடக்கிறது. எதிர் காலங்களில் தமிழகத்தில், பல நிறுவனங்கள் கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கட்டுமானத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, மதுபானம், மணல் போன்றவற்றை விற்பனை செய்வது போல், சிமென்ட் விற்பனையிலும் தமிழக அர” ஈடுபட??வண்டும் என்ற பொதுவான கருத்து எழுந்துள்ளது. இதன் மூலம், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுவதை தடுக்க முடியும். அரசுக்கும் வருவாயும் கிடைக்கும்.

இதுகுறித்து இந்திய கட்டுமானத் துறையினர் சங்கத் தலைவர் (தென்னக மையம்) ரகுநாதன் கூறும்போது, 'தனியார் மதுபான ஆலைகளிலிருந்து, மதுபானத்தை வாங்கி அரசு விற்பது போல், தனியார் சிமென்ட் நிறுவனங்களிடமிருந்து, சிமென்ட் கொள்முதல் செய்து, அரசே விற்பனை செய்ய வேண்டும்.இதன் மூலம் அடிக்கடி உயரும் சிமென்ட் விலையை கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கும். நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிக வருவாயும் கிடைக்கும்' என்றார்.- வீ.அரிகரசுதன் -

விளையாட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்

இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா: இன்று வெ. இண்டீசுடன் 4வது மோதல்
ஆன்டிகுவா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடக்கவுள்ளது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இளம் இந்திய அணி காத்திருக்கிறது. சொந்த ஊரில் எழுச்சி கண்டு, ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராக உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி கண்ட இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடக்கவுள்ளது.
ரோகித் நம்பிக்கை:
இந்திய அணியின் துவக்க வீரராக பார்த்திவ் படேல் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் ஷிகர் தவான் தொடர்ந்து ஏமாற்றி வருவது பின்னடைவு அளிக்கிறது. கடந்த போட்டியில் "டக்-அவுட்' ஆன விராத் கோஹ்லி இன்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் சாதிக்காத தமிழக வீரர் பத்ரிநாத், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட 161 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா, இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். கடந்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத மனோஜ் திவாரி, விரிதிமன் சகா உள்ளிட்டோர் இன்று களமிறக்கப்படலாம்.
முனாப் அபாரம்:
கடந்த மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு பிரவீண் குமார் கைகொடுக்கும் பட்சத்தில் வேகத்தின் பலம் அதிகரித்து விடும். சுழலில் இதுவரை ஏழு விக்கெட் கைப்பற்றிய அமித் மிஸ்ரா நம்பிக்கை அளிக்கிறார். அனுபவ ஹர்பஜன் சிங், சுழலில் எழுச்சி கண்டால் நல்லது. இவர்களை தவிர சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம். கடந்த போட்டிகளில் பங்கேற்காத அஷ்வின், இஷாந்த் சர்மா, வினய் குமார் உள்ளிட்டோருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம்.

சர்வான் எதிர்பார்ப்பு:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. துவக்க வீரராக சிம்மன்ஸ் ஆறுதல் அளிக்கிறார். ஆனால் எட்வர்ட்ஸ் இதுவரை சொல்லிக் கொள்ளும் படி விளையாடாதது பின்னடைவான விஷயம். கடந்த மூன்று போட்டிகளில், இரண்டு அரைசதம் உட்பட 140 ரன்கள் எடுத்துள்ள அனுபவ சர்வான் இன்றும் கைகொடுக்கலாம். அதிரடி போலார்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களை "சிக்சர்' மழையில் மகிழ்விக்கலாம். கடந்த போட்டியில் அதிரடியாக ரன் குவித்த ஆன்ட்ரி ரசல், இன்றும் தனது அபார ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு சாமுவேல்ஸ், கார்ல்டன் பாக் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

ஏமாற்றும் வேகம்:

வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் சமி, ரவி ராம்பால் உள்ளிட்ட திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், போட்டியில் இவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாதது ஏமாற்றமான விஷயம். போலார்டு, ரசல், கீமர் ரோச், டுவைன் பிராவோ உள்ளிட்ட வேகங்கள் சாதிக்கும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழலில் தேவேந்திர பிஷு சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு அந்தோனி மார்டின் ஒத்துழைப் அளித்தால் நல்லது.

"ஹாட்ரிக்' வெற்றி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆன்டிகுவா நகரில், நேற்று முன்தினம் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங்' தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரசல் (92*), சிம்மன்ஸ் (45) உள்ளிட்டோர் கைகொடுக்க, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. பின் சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (86), பார்த்திவ் படேல் (46), ஹர்பஜன் (41), பிரவீண் (25*) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இந்திய அணி 46.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோவில்
மூலவர்    :    சுவாமிநாத பாலமுருகன்
உற்சவர்    :    பாலமுருகன்
அம்மன்/தாயார்    :    -
தல விருட்சம்    :    வன்னி
தீர்த்தம்    :    -
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    500 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    -
ஊர்    :    மேட்டுக்குப்பம், வானகரம்
மாவட்டம்    :    திருவள்ளூர்
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

மச்சம் உள்ள முருகன்
 

இத்தலத்தின் தலவிநாயகர் ஸ்ரீசக்ர விநாயகர், விமானம்: மயில் விமானம்

பிரார்த்தனை


புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

கடன் தொல்லையில் இருப்பவர்கள் விஷ்ணுதுர்காலட்சுமி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வணங்குகிறார்கள்.

 தலபெருமை:


கிரக வஸ்திர பூஜை: முருகப்பெருமான் இக்கோயிலில், பால வடிவில் நின்ற கோலத்தில் அருளுகிறார். மயில் விமானத்தின் கீழ் காட்சி தருவதால், மூலஸ்தானத்தில் மயில் இல்லை.

விசேஷ நாட்களில் இவரது கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். அப்போது மட்டுமே மச்சத்தைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்வதால், மச்சத்தைக் காண முடியாது.

ஒவ்வொரு நாளும், அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்வது மற்றொரு சிறப்பு.

கிரக தோஷம் உள்ளவர்கள், அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில், கிரகத்திற்குரிய நிறத்தில் முருகனுக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கிருத்திகை உச்சிக்காலத்தில் முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடாகிறார்.

ஸ்ரீசக்ர விநாயகர்: முருகன் சன்னதிக்கு வலப்புறம் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர், அம்பிகையிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரை சக்தி அம்சமாக கருதுகின்றனர். இதன் அடிப்படையில், அம்பாளுக்குரிய ஸ்ரீசக்ரம் இவரது சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, "ஸ்ரீசக்ர விநாயகர்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.

பிரகாரத்தில் சீதை, லட்சுமணனுடன் ராமர், யோக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், விஷ்ணு துர்க்கா லட்சுமி ஆகியோர் உள்ளனர்.

கடன் நிவாரண பூஜை: இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். பைரவர் கையிலுள்ள கும்பத்தில் மகாலட்சுமி சிற்பம் உள்ளது. அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கடன் தொல்லையிலிருந்து விடுபட துர்க்கை மற்றும் பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

  தல வரலாறு:


வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, தினைப்புனம் நிறைந்த திருத்தணியில் தோழியருடன் தங்கியிருந்தாள். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இறைவனுக்கு கிடையாது. ஏற்கனவே உயர் இனத்து தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த வள்ளியையும் ஆட்கொள்ள முடிவு செய்தார்.

மனிதனாகப் பிறந்தவர்கள் இந்த உலக இன்பங்கள் நிரந்தரமானதென்றும், நிஜமானதென்றும் கருதி, மரணத்தைப் பற்றியே அக்கறையே இல்லாமல், இங்கேயே மூழ்கிக் கிடக்க எண்ணுகிறார்கள். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கும். அதில் மூழ்கிக் கிடந்தாள் வள்ளி. இவ்வாறு அறியாமல் மூழ்கிக் கிடக்கும் உயிர்களையும் தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வருகிறான் இறைவன். முருகனும் வள்ளியை ஆட்கொள்ள வலிய வந்தார்.

இறை சிந்தனையே இல்லாத உயிர்கள் அவனைச் சிந்திப்பதே இல்லை. இது முருகனைக் கண்டு வள்ளி ஒதுங்கி ஓடியதைக் குறிக்கிறது. பின்னர் விநாயகர் உதவியுடன் அவளை மணந்தார். இது கந்தபுராணக்கதை,
ஆனால், கர்ண பரம்பரையாக மற்றொரு செய்தி கூறப்படுகிறது.

முருகன் முதியவர் வடிவில் வள்ளியைத் தேடிச்சென்ற போது. ""கிழவரே! கன்னியர் இருக்கும் இடத்தில் உமக்கென்ன வேலை?'' என்று கேட்டாள். முருகனும் திரும்பிவிட்டார். மறுநாள் அழகிய இளைஞன் வடிவில் சென்றார். அவரிடம், ""என்ன முதியவரே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வருகிறீரே! நேற்று கிழவன், இன்று இளைஞனா? வந்ததன் காரணம் என்னவோ?'' என்றாள்.

தான் வேடம் மாறி வந்தது வள்ளிக்கு எப்படித் தெரிந்தது என முருகனுக்கு ஆச்சரியம்! தன்னைக் கண்டுபிடித்தது எப்படி? என அவளிடமே கேட்டார். அவள் முருகனின் வலது கன்னத்தைச் சுட்டிக்காட்டி, ""உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது!'' என்றாள். வள்ளியின் ஞானத்தை மெச்சிய முருகப்பெருமான், அவளை பாராட்டினார்.

இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு முருகப்பெருமான், வலது கன்னத்தில் மச்சத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், "மச்சக்காரன்' என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அபூர்வம்.

 திருவிழா:

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ராமநவமி.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

அகங்கார முடிச்சை வெட்டு - அன்னை

முடிச்சு? அது ஒரு உருவகம். ஆனால், அது நல்ல உறுதியான கயிற்றினால் போடப்பட்ட முடிச்சைப்போல உன்னை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒன்று. ஆகவே ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு நல்ல உருவகம், கருத்தை விளக்கமாகக் கூறுகிறது, அல்லவா? - உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது. உனக்குள்ளேயே நீ அடைபட்டுக் கிடக்கிறாய், சிறையில் அடைக்கப்பட்டதைப் போல ஜீவனின் எல்லாப் பாகங்களும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்டிருப்பதால்தான் - ஒட்டியிருத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அது வரம்பிற்கு உட்படுத்துகிறது.

உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் அடைபட்டிருப்பதால் நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் மின்னணு மைய நகரம் எது ?

விடை - பெங்களூரு - கர்நாடகம்.

இதையும் படிங்க :

வீரத்தாய் வேலுநாச்சியார் வரலாற்று நடன நாடகம்

large_256343.jpg

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011,00:00 IST

சென்னை: "வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டை விட்டு சென்று எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து, சிவகங்கையை ஆண்டார்.

இந்திய விடுதலை போர் வரலாற்றில், 1730ல், வெள்ளையர்களை ஓட, ஓட விரட்டி அடித்தவர் வீரத்தாய் வேலுநாச்சியார். அதன்பின், 20 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்டார். மக்களுக்கு நீண்ட நிம்மதியான ஆட்சி தந்த வேலுநாச்சியாரின் வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களை மையமாக வைத்து, "வீரத்தாய் வேலுநாச்சியார்' வரலாற்று நடன நாடகம் பரதாஸ்ரம் அமைப்பின் மூலம் சென்னையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு, பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பேசும் போது, "வீரத்தாய் வேலுநாச்சியார் வரலாறு சரித்திர புத்தகத்தில் காட்டப்படவில்லை; மறைக்கப்பட்டுள்ளது. வைகோவின் முயற்சியால், இந்த வீரத்தாயின் வரலாறு நடன நாடகமாக பரதாஸ்ரம் அமைப்பின் மூலம், அற்புதமாக மனதை தொடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மதிநுட்பத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் "வீரத்தாய் வேலுநாச்சியார்' நடன நாடகம், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட வேண்டும்' என்றார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: சிவகங்கையை ஆண்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாற்றை நடன நாடகமாக செய்ய உள்ளதாக பரதாஸ்ரம் அமைப்பினர் கூறினர். வீரத்தாயின் போற்றுதற்குரிய வரலாற்றை நடன நாடகமாக உருவாக்குவதற்கான செலவுகளை நானே செய்து விடுகிறேன் என்றேன். இந்த வரலாற்று நடன நாடகம், ஒவ்வொருவரின் மனதை தொடும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வீரத்தாய் வேலுநாச்சியாரின் கணவர் வெள்ளையரால் கொல்லப்பட்ட பிறகு, அவர்களுடன் உடனே எதிர்த்து போரிட சாதகமான சூழ்நிலைகள் இல்லாமல் போனதால், போரிட வலுவான சூழ்நிலைகளை ஏற்படுத்த, வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இதன்பின், மருது சகோதரர்கள் <உதவியுடனும், முஸ்லிம் மன்னர் ஐதர் அலியின் படையினரின் உதவியுடனும் போரிட்டு, தன் கணவரை கொன்ற வெள்ளையரை ஓட, ஓட விரட்டுகிறார். இதன்பின், சிவகங்கையை வேலுநாச்சியார், 20 ஆண்டுகள் ஆண்டுள்ளார்

இந்த வரலாற்று நடன நாடகத்தை வடிவமைத்து இயக்கிய ஸ்ரீராம் சர்மா மற்றும் வேலுநாச்சியராக நடித்த மணிமேகலை சர்மா உட்பட அனைத்து கலைஞர்களும் பாராட்டப்பட்டனர்.

* "உதவி செய்ய தயாராக இருக்கிறேன்!'

large_256421.jpg

 கோல்டு ஹார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ஸ்ரீபிரியா: ஆசிரியர் பணி என்பதால், எல்லா நேரமும் குழந்தைகளுடனேயே இருக்கும் வாய்ப்பு எனக்கு. பள்ளி நேரம் தவிர, நிறைய குழந்தைகள் என் வீட்டிற்கும் வருவர். ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்று யோசித்து, முதலில் முதியோர் இல்லத்திற்குச் சென்று, மாணவர்களின் உதவியுடன், எங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்தோம்.இந்நிலையில், மின்ட்டில், உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், என்னை அழைத்திருந்தார். எல்லா விதத்திலும் பின்தங்கிய மாணவர் கள் படிக்கும் பள்ளிக்கு, நான் செல்வது அதுதான் முதல் முறை.சுகாதாரமற்ற சுற்றுப்புறம், அழுக்கு உடை, நான்கு வார்த்தை கூட நாகரிகமாகப் பேசத் தெரியாமல் பரிதாபமாய் நின்றனர், அந்த பள்ளி மாணவர்கள். அவர்களைப் பார்த்து பதறிப் போனது மனது. அந்த நிமிடத்தில் தான், இந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று திடமாக முடிவெடுத்தேன். நண்பர்கள், தெரிந்தவர்கள், மாணவர்கள் மூலம், அவர்கள் பள்ளியிலேயே வகுப்பெடுத்தேன். சனி, ஞாயிறுகளில் முழுநேரமும், பாடங்கள் நடத்தினோம்.அவர்களுடன் நெருக்கமாகப் பழகியதால், பிரச்னைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்களே செய்தோம். எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு தேவையான புத்தகம், யூனிபார்ம் என்று அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறோம்.இந்தக் குழந்தைகளிடம் நான் சொல்வது ஒன்று தான், என்ன தேவையோ, உரிமையுடன் இந்த அம்மாவிடம் கேளுங்கள்; செய்து தருகிறேன். எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை மட்டும் விட்டுவிட வேண்டாம்..


நன்றி - தின மணி, வெப் துனியா, கூகிள் செய்திகள்.

No comments:

Post a Comment