tag:blogger.com,1999:blog-56503625649893052082024-03-14T18:41:40.636+05:30சங்கரியின் செய்திகள்நாட்டு நடப்பு.சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.comBlogger142125tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-50000790627318410112011-07-11T07:13:00.000+05:302011-07-11T07:13:32.241+05:30இன்றைய செய்திகள் - ஜூலை , 11 , 2011<b style="color: #ff6600;">முக்கியச் செய்திகள் :</b><br />
<b style="color: #ff6600;">* பலமா?... பலவீனமா? : இன்று உலக மக்கள் தொகை தினம்</b><br />
அதிகரிக்கும் மக்கள்தொகை பிரச்னை, ஒவ்வொரு நாட்டுக்கும் தலைவலியாக உள்ளது. 1987 ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை 500கோடியை தொட்டது.இதை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டு தோறும் ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. <br />
<br />
*<b> "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' : மகாராஷ்டிராவில் விழிப்புணர்வு பிரசாரம்</b><br />
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற பெயரில், விழிப்புணர்வு பிரசாரம் இன்று துவக்கப்படுகிறது. முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆண், பெண்களுக்கிடையேயான பாலின விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில அளவில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 883 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளனர்.இன்று, சர்வதேச மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மகாராஷ்டிர மாநிலத்தில், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம் ' என்ற பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முதல்வர் பிரிதிவிராஜ் சவான், இன்று தொடங்கி வைக்கிறார். <br />
<br />
<b style="color: #ff6600;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள்</b><br />
<br />
வாஷிங்டன் : அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க அதிபர் ஒபாமா, வாஷிங்டன் அருகே உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பயணிகள் விமானமும், நேற்று ஒரு சிறிய விமானமும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தன.<br />
<br />
இதைக் கண்ட அமெரிக்க போர் விமானங்கள் சீறி கிளம்பி அந்த விமானங்களை இடைமறித்து கேம்ப் டேவிட் பகுதியிலிருந்து துரத்தின. இதில், ஒரு விமானம் கரோல் பகுதியில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மற்றொரு விமானத்தை பற்றி தகவல் இல்லை. அந்த விமானத்திடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமான பாதுகாப்பு தளபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.<br />
<br />
<b>* இந்தியாவுக்கு தகவல் தந்தால்... பாக்.,கிற்கு ஹூஜி எச்சரிக்கை</b><br />
இஸ்லாமாபாத் : "எங்கள் இயக்கம் குறித்த தகவல்களை இந்தியாவிற்கு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பாக்., வெளியுறவு அலுவலகம், டில்லியில் உள்ள பாக்., தூதரகம் மற்றும் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் மீது தாக்குதல் நடத்துவோம்' என, ஹர்கத் - உல் ஜிகாத் அல் இஸ்லாமி (ஹூஜி) பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.<br />
<br />
அல் - குவைதா இயக்கத்துடன் தொடர்புடையது ஹூஜி பயங்கரவாத அமைப்பு. இந்த அமைப்பு குறித்த தகவல்களை, இந்தியாவுக்கு அவ்வப்போது பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது. இதனால், பாகிஸ்தான் அரசுக்கு, ஹூஜி அமைப்பு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செயலர் சல்மான் பஷீருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதம், பஷீரின் இல்லத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, பஷீரின் வீட்டிற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது<br />
<br />
<b>* நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை மூடல் : கண்ணீர் மல்க ஆசிரியர்கள் வெளியேறினர்</b><br />
லண்டன் : பிரிட்டனின் புகழ்பெற்ற, "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை நேற்று தனது கடைசி பதிப்பை வெளியிட்டு, அலுவலகத்தை இழுத்து மூடியது. கடைசி பதிப்பை தயாரித்து அச்சுக்கு அனுப்பிய பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள், கண்ணீர் மல்க தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.<br />
<br />
பிரிட்டனில் இருந்து வெளிவரும், 168 ஆண்டு காலப் பெருமை உடைய, "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை, இளவரசர் வில்லியமின் உதவியாளரில் இருந்து, முக்கிய அரசியல்வாதிகள் வரை அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்ட விவகாரத்தில் சிக்கியது. பத்திரிகை மீது, பார்லிமென்டில் எம்.பி.,க்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பத்திரிகையின் அதிபர் ரூபர்ட் முர்டோக், பத்திரிகையை நிறுத்திவிடப் போவதாக அறிவித்தார்.<br />
<br />
அதன்படி, நேற்று வெளியான இதழின் அட்டைப் படத்தில் பின்னணியில், பத்திரிகையின் பல்வேறு அட்டைப் படங்கள் இருக்க,"தேங்க்யூ அண்டு குட்பை' என்று பெரிய வடிவில் வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. இவை குறித்து உட்பக்கம் அளிக்கப்பட்டிருந்த விளக்கத்தில்,"1843 முதல் 2011 வரை வெளியான இப்பத்திரிகை, மிக எளிய வார்த்தைகளுடன் விடை பெறுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
கடைசி பதிப்பை தயாரித்து முடித்து அச்சுக்கு அனுப்பிய கையுடன், பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் பணியாளர்கள் கண்ணீர் மல்க தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். துக்கம் தாளாமல், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கதறினர். பத்திரிகை ஆசிரியர் காலின் மைலர், பணியாளர்களுக்கு அனுப்பி கடைசிக் குறிப்பில்,"நாம் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி இருக்கவில்லை' என்று, வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.<br />
<br />
நேற்று கடைசி பதிப்பு வெளியாகிறது என்பதால், பத்திரிகை விற்கும் கடைகள், கூடுதல் பிரதிகளைக் கேட்டிருந்தன. மேலும், அப்பத்திரிகையில் மிக அதிகளவில், அறக்கட்டளைகளின் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு, "இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கடைசிப் பதிப்பின் லாபம் அனைத்தும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
இரண்டாம் பக்கத்தில், 1843, அக்டோபர் 1ம் தேதி வெளியான பத்திரிகையின் பதிப்புப் படம் முழுப்பக்க அளவிலும், அதற்கு அடுத்த பக்கத்தில், பத்திரிகை வெளிக்கொணர்ந்த பரபரப்பான ஊழல்கள், மோசடிகள், முக்கியமான சம்பவங்கள் பற்றிய அட்டைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.<br />
<br />
"வரலாற்றை நாம் பதிவு செய்தோம்; வரலாற்றை நாம் உருவாக்கினோம்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த தலையங்கத்தில்,"நாம் நமது பாதையில் இருந்து தவறி விட்டோம். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு பத்திரிகை வருந்துகிறது. அந்தத் தவறான செயலுக்கும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு விளைந்த வேதனைக்கும் நியாயம் கற்பிக்க விரும்பவில்லை. வரலாற்றில் ஒரு பெரிய கறையைத் தவிர வேறு ஒன்றையும் விட்டுச் செல்லவும் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
முர்டோக் லண்டன் வந்தார் : "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக், நேற்று லண்டன் வந்து சேர்ந்தார். பத்திரிகை மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அவர் சில காலம் அங்கு தங்கியிருப்பார். இதுகுறித்த விசாரணைகள் முடியும் வரையில், "பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்ட்டிங்' அல்லது "பி.ஸ்கை.பி.,' என்ற செய்தி நிறுவனத்தை விற்கும் ஏலத்தில், அவர் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எட்வர்ட் மிலிபேண்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.<br />
<br />
<b>* பயங்கரவாதி ஜவாகிரியை பிடியுங்கள் : பாக்.,கிடம் அமெரிக்கா வலியுறுத்தல்</b><br />
வாஷிங்டன் : பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் அல்-குவைதா தலைவர் அய்மான் ஜவாகிரியை குறி வைத்துபிடிக்கும் படி, அந்நாட்டு அரசிடம் கேட்டுள்ளோம் என, அமெரிக்க ராணுவத்துறை அமைச்சர் லியோன் பெனிடா தெரிவித்துள்ளார்.<br />
<br />
அமெரிக்க ராணுவத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லியோன் பெனிடா, ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் வழியில் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில், ""அல்-குவைதா அமைப்பின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான், ஏமன், சோமாலியா மற்றும் வடக்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளில் ஒளிந்துள்ளனர்.<br />
<br />
""பாகிஸ்தானின் பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் ஒளிந்துள்ளதாக கருதப்படும் அல்-குவைதா தலைவர் ஜவாகிரியை குறி வைத்து கைது செய்யும்படி கூறியுள்ளோம். நான் சி.ஐ.ஏ., இயக்குனராக இருந்த போது, பாகிஸ்தான் உளவு அமைப்பு தலைவர்களுடன் அல்-குவைதா தலைவர்களை எந்த முறையில் கைது செய்வது என்பதெல்லாம் குறித்து விவாதித்துள்ளேன். இதற்குரிய ஆலோசனைகளை அளித்துள்ளேன்,'' என்றார்.<br />
<br />
<b>* உலகிலேயே நீளமான சீன பாலத்திற்கு ஆபத்து?</b><br />
பீஜிங் : சீனாவில் குயிங்டவ் மற்றும் ஹூவாங்டவ் தீபகற்பத்தை இணைக்கும் வகையில், கடலில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான பாலம், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக, தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சீனாவில் கடலில் கட்டப்பட்ட இப்பாலம், 42.5 கி.மீட்டர் நீளமானது. பாலத்தின் இணைப்பு பகுதிகளில் விரிசல் இருப்பதாக, தற்போது சீனப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி, இப்பாலம் திறக்கப்பட்டதில் இருந்து, தினமும் 18 ஆயிரம் வாகனங்கள் பாலத்தில் செல்கின்றன. 10 ஆயிரத்து 580 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலம், நிலநடுக்கம் உட்பட பேரழிவுகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.<br />
<br />
"பாலத்தின் இணைப்புகளில் போடப்பட்டுள்ள "போல்ட்'கள், ஒயர் இணைப்பிற்காக அவ்வப்போது கழற்றப்பட்டு பின்னர் மாட்டப்படும். இதில், ஆபத்து எதுவும் இல்லை' என்று, இப்பாலம் கட்ட நிதியுதவி வழங்கியுள்ள உள்கட்டமைப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது. இப்பாலம் கட்ட நான்கரை ஆண்டுகள் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு வரி: ஆஸ்திரேலியா திட்டம்</b><br />
<br />
சிட்னி, ஜூலை 10- சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு தனி வரி விதிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.<br />
<br />
சுற்றுச்சூழலை மிகவும் நாசப்படுத்தும் 500 நிறுவனங்களுக்கு இவ்வாறு வரி விதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.<br />
<br />
இதன்படி, நிறுவனங்கள் வெளியேற்றும் ஒவ்வொரு டன் "கரியமில வாயு"க்கும் தலா 23 ஆஸி. டாலர்கள் வரியாக கட்ட வேண்டும்.<br />
<br />
மிகவும் அதிகளவில் காற்றை மாசுபடுத்தும் உலக நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அந்நாட்டில் மின்சாரம் தயாரிக்க பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் காற்று மிகவும் மாசடைவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். <br />
<br />
<b>* ஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்<br />
<br />
<img alt="japan.jpg" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.7&disp=emb&realattid=ii_13116b4a4b68b8b0&zw" title="japan.jpg" /></b><br />
டோக்யோ, ஜூலை 10- ஜப்பானில் இன்று மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.<br />
<br />
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.3 ஆக பதிவாகியிருந்தது. ஹோன்ஷு தீவின் கடலோரத்தில், சுமார் 20 மைல் ஆழத்தில் உள்ள பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், அது வாபஸ் பெறப்பட்டது.<br />
<br />
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவுமில்லை.<br />
<br />
கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும், ஃபுகுஷிமா அணுஉலை வெடித்ததால் சுமார் 30 கி.மீ. தொலைவில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், அணு உலையின் கதிர்வீச்சு பாதிப்பு பல கி.மீ. தொலைவுக்கு இருந்தது. அப்பகுதிகளில் குடிநீர், பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சு இருந்ததால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டது. இதனிடையே, ஜப்பான் பொருட்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் தடை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இந்நிலையில், இன்றைய நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்ததும், ஃபுகுஷிமா அணுஉலையில் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். <br />
<br />
<b style="color: #ff6600;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<b>* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகார வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை<br />
</b><br />
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் இரண்டு முக்கிய வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணைகளை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. கடந்த 2001-07ம் ஆண்டு வரையிலான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விவகாரங்கள் மட்டுமே, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், "பொதுமக்கள் குறை தீர்க்கும் நிறுவனம்' என்ற, பொது நல அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,"மத்திய தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், 2001ம் ஆண்டுக்கு முன்பும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதனால் பயனடைந்துள்ளன. எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை வரம்பை, நீட்டிக்க வேண்டும். 2001ம் ஆண்டுக்கு முன் செய்யப்பட்ட ஒதுக்கீடு குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடக்கிறது. மேலும், சகாரா குரூப் நிறுவனங்களின் தலைவர் சுப்ரதா ராய் மீதான, கோர்ட் அவமதிப்பு வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், அமலாக்க பிரிவு துணை இயக்குனர் ராஜேஸ்வர் சிங்கை, சுப்ரதா ராய் மிரட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, விசாரணையில் தலையிடுவதாகக் கூறி, சுப்ரதா ராய் மீதும் உபேந்திர ராய், சுபோத் ஜெயின் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் மீதும், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை வரம்பை நீட்டிக்க கோரும் வழக்கும், சுப்ரதா ராய் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கும், இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.<br />
<br />
<b>* ரவிவர்மா ஓவியங்கள் அசலா, போலியா...? :சி.பி.ஐ., விசாரணைக்குப் பிறகே தெரியவரும்</b><br />
கொச்சி : பிரபல ஓவியர் ரவிவர்மாவின் ஜடாயு யுத்தம் போன்ற ஓவியங்கள் ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்ட நிலையில், அவை அசலா அல்லது போலியா என்பது குறித்து, சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ.,)கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல ஓவியக் கலைஞரான ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஓவியங்களில் சிலவற்றை, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஏலம் விட முடிவு செய்தது.<br />
<br />
இதுகுறித்து அறிந்த ரவிவர்மாவின் குடும்ப உறுப்பினரும், வழக்கறிஞருமான அர்ச்சனா நாராயணன், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர், "ரவிவர்மாவின் ஓவியங்கள் ஏலம் விடப்போவதாக அறிந்தேன். ஏலத்தை தடை செய்ய வேண்டும். மேலும், ரவிவர்மா ஓவியங்களை தொல்லியல் ஆய்வுத் துறை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில், தொல்லியல் துறை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில், "ரவிவர்மாவின் அனைத்து ஓவியங்களும் பதிவு செய்யப்படவில்லை.<br />
<br />
பதிவு செய்யப்படாத ஓவியங்கள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து எங்களிடம் கணக்கு இல்லை. அவ்வாறு பதிவு செய்யப்படாத ஓவியங்கள் யாரிடம் உள்ளது என்பது குறித்து, எங்களுக்குத் தெரியாது. அவ்வாறு தனி நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமாவது ஓவியங்கள் இருக்கும்பட்சத்தில், அவை பதிவுக்கு வராத வரை எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மாநிலங்களில் அருங்காட்சியகங்களில் உள்ள ஓவியங்கள், மாநில தொல்லியல் துறை வசம் உள்ளவை. ரவிவர்மா ஓவியங்களை மாநில அரசு பாதுகாத்து வருகிறது. ஸ்ரீசித்திரா ஆர்ட் காலரியில் தான் பதிவு செய்யப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.<br />
<br />
பாதுகாக்கப்படும் மற்றும் ரவிவர்மாவின் பதிவு செய்யப்பட்ட ஓவியங்கள் குறித்து அறிய, இவ்வழக்கில் மாநில அருங்காட்சியக இயக்குனரையும் சேர்க்க வேண்டும்' என, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (பழங்காலப் பொருள்) ஊர்மிளா சந்த் ஐகோர்ட்டில் தெரிவித்தார்.<br />
<br />
இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில், ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஆபரகாம் தாமஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சத்திய வாக்குமூலத்தில், "ரவிவர்மாவின் ஓவியங்களை ஏலம் விடவுள்ள பிட் அண்டு ஹாமர் நிறுவனத்திடம், பதிவு செய்யப்பட்ட ஓவியங்கள் உள்ளன. ஆனால், அவற்றிற்கான உரிமங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. இப்பிரச்னையில், சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகே அவை அசலா, போலியா என்பது தெரியவரும்' என்றார். ரவி வர்மாவின் பல ஓவியங்கள் மாயமாகி விட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
*<b> ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு</b><br />
<br />
புதுதில்லி, ஜூலை 10- ஹெலிகாப்டரை இயக்கும் பைலட்டுகளுக்கு சில பாதுகாப்பு விதிமுறைகளை உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.<br />
<br />
மோசமான வானிலை, அவசரநிலை, முறையான தொழில்நுட்பச் சோதனைகள் இல்லாதது ஆகியவை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க மறுப்பது மற்றும் எதிர்பாராத வானிலை காரணங்களால் தரையிறங்குவது ஆகிய காரணங்களுக்காக பைலட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. <br />
<br />
நாட்டில் மொத்தம் 271 ஹெலிகாப்டர்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இயக்கும் பைலட்டுகள் வணிகக் காரணங்களுக்காக மோசமான வானிலைகளிலும், முறையான தொழில்நுட்பச் சோதனைகள் இன்றியும் ஹெலிகாப்டர்களை இயக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புக்களும் ஏற்படுவது அதிகரித்தது. <br />
<br />
இதனைக் கருத்தில் கொண்டு, இவ்விஷயம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரியின் தலைமையில் போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படியே, டிஜிசிஏ இப்போது பைலட்டுகளுக்குப் பாதுகாப்பாக விதிமுறைகளை அறிவித்துள்ளது. <br />
<br />
<b>* குடியரசுத் தலைவருடன் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு</b><br />
புதுதில்லி, ஜூலை 10- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.<br />
<br />
நேற்று, கோபால் சுப்பிரமணியம் தனது பதவியில் இருந்து விலக முன்வந்த நிலையில், அவரது ராஜிநாமாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில், அவர் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
2ஜி வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜராக பிரபல வழக்கறிஞர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கோபால் சுப்பிரமணியம் பதவி விலக முன்வந்ததாக கூறப்படுகிறது.<br />
<br />
<b>* உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் குமாரசாமி</b><br />
<br />
பெங்களூர், ஜூலை 10- தனது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கிய முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.<br />
<br />
கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி, குமாரசாமிக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.<br />
<br />
குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1500 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக பா.ஜ.க. அண்மையில் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக ஒரு கையேட்டையும் வெளியிட்டது.<br />
<br />
இதற்கு மறுப்பு தெரிவித்த குமாரசாமி, குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரினார். ஆனால் இதற்கு மாநில அரசு செவி சாய்க்காததால், கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூர், சுதந்திரப் பூங்காவில் நேற்று காலை 8.30 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.<br />
<br />
இந்நிலையில், இன்று காலை, தேவேகெளட தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில், குமாரசாமி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். <br />
<br />
<b>* 2ஜி: 2001-க்கு முந்தைய நிலவரம் குறித்து விசாரணையா?</b><br />
புதுதில்லி, ஜூலை 10- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் 2001-ம் ஆண்டுக்கு முந்தைய நிலவரம் குறித்தும் விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு நாளை விசாரிக்கப்படுகிறது.<br />
<br />
நீதிபதிகள் ஜி எஸ் சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய குழு இந்த மனுவை விசாரிக்கவுள்ளது.<br />
<br />
2001-ம் ஆண்டுக்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் சட்டவிரோதமான வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், நிர்வாகியாக உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. <br />
<br />
<b>* தீவிரவாதிகள் பிரச்னை: தெற்காசிய நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு</b><br />
<br />
புது தில்லி, ஜூலை 9: தீவிரவாதம் போன்ற முக்கியப்பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள தெற்காசிய நாடுகள் முன்வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.<br />
<br />
சார்க் கூட்டமைப்பு நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் 5-வது மாநாட்டை தில்லியில்<br />
<br />
சனிக்கிழமை துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியா, வங்கதேசம், பூடான், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டில் மன்மோகன்சிங் கூறியது:<br />
<br />
தெற்காசிய நாடுகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் தங்களுக்குள்ளே தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும்.<br />
<br />
அண்மை காலமாக தெற்காசிய நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. இது புற்றுநோய் போன்றது. இது நாட்டின் வளர்ச்சிக்குத்தடை ஏற்படுத்திவிடும்.<br />
<br />
எனவே இதில் கவனமாக இருந்து தீவிரவாதத்தை வேருடன் ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டும் என்றார்.<br />
<br />
மாநாட்டில் மக்களவைத் தலைவர் மீராகுமார் உள்பட சார்க் நாடுகளின் மக்களவைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.<br />
<br />
<b>* மேற்கு வங்கம்: 3 நாளில் 26 குழந்தைகள் சாவு</b><br />
<br />
பெர்ஹாம்பூர் (மேற்கு வங்கம்), ஜூலை 10:மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 26 குழந்தைகள் இறந்துவிட்டன.<br />
<br />
இதுகுறித்து பெர்ஹாம்பூர் மாவட்ட சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஷாஜகான் சிராஜ் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:<br />
<br />
மூச்சுவிடுதல் பிரச்னை, சத்துக்குறைவு, பல்வேறு விநோத நோய்களுடன் பல குழந்தைகள் முர்ஷிதாபாத், பெர்ஹாம்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாள்களில் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 16 குழந்தைகள் இறந்துவிட்டன.<br />
<br />
இதேபோல ஜாங்கிப்பூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 10 குழந்தைகள் இறந்துவிட்டன. சுவாசக் கோளாறு, ஊட்டச்சத்துக்குறைவு, பல்வேறு நோய்கள் காரணமாக இந்தக் குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.<br />
<br />
இந்தக் குழந்தைகள் முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு அந்தக் குழந்தைகளுக்கு முதலுதவி அளித்து மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டன. இருந்தபோதும் 26 குழந்தைகள் இதில் இறந்துவிட்டன.<br />
<br />
மேலும் அதிக அளவில் இந்த மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையைச் சமாளிக்க கொல்கத்தாவிலிருந்து டாக்டர்கள் குழு விரைவில் இங்கு வரவுள்ளது என்றார் அவர். கொல்கத்தாவிலுள்ள பி.சி. ராய் அரசு நினைவு மருத்துவமனையில் 18 குழந்தைகள் கடந்த மாதம் இறந்துவிட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பெர்ஹாம்பூர் அரசு மருத்துவமனையில் 26 குழந்தைகள் இறந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
<b>* உபியில் கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 35 பேர் பலி, 200 பேர் காயம்<br />
<br />
<img alt="mishap-train6-300_10072011.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.2&disp=emb&realattid=ii_13116b27df9782be&zw" title="mishap-train6-300_10072011.jpg" width="200" /><br />
</b><br />
லக்னோ: மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே திடீர் என்று தடம் புரண்டது. இதில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.<br />
<br />
மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கல்கா எக்பிரஸ் இன்று 12.30 மணி அளவில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மற்றும் பத்தேஹ்பூர் மால்வா ரயில் நிலயங்களுக்கு இடையே செல்கையில் திடீர் என்று தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.<br />
<br />
எமர்ஜென்சி பிரேக்கை திடீர் என்று பயன்படுத்தியதால் தான் ரயில் தடம் புரண்டதாகக் கூறப்படுகின்றது. ரயில் தடம் புரண்டபோது மணிக்கு 110 கி. மீ. வேகத்தில் சென்றுள்ளது.<br />
<br />
இந்த விபத்தில் 35 பேர் பலியாகினர், 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 2 மருத்துவ ரயில்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.<br />
<br />
இந்த சம்பவத்தால் ஏசி பெட்டிகளில் தீப்பொறி எழுந்ததாகக் கூறப்படுகின்றது.<br />
<br />
விபத்துக்குள்ளான கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து விபரம் அறிய விரும்புவோர் 053-22407313, 053-2240828, 053-22408149 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.<br />
<br />
இந்த விபத்தால் ஹவுரா-டெல்லி வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.<br />
<b><br />
* கங்கையை சுத்தப்படுத்த ஒன்றுபடுவோம்: உமா பாரதி</b><br />
பாட்னா, ஜூலை 10: கங்கையை சுத்தப்படுத்த கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டுமென பாஜக மூத்த தலைவர் உமா பாரதி அழைப்பு விடுத்துள்ளார்.<br />
<br />
பிகார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து மேலும் கூறியது:<br />
<br />
நமது கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது கங்கை நதி. அதனை மாசுபாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். கங்கையைத் தூய்மைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைய வேண்டும். கங்கை உற்பத்தியாகும் உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து, இந்திய எல்லையைக் கடக்கும் மேற்குவங்கத்தின் கங்காசாகர் வரையிலும் அதன் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். அரசு மற்றும் சமுதாயத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். கங்கையை மாசுபடுத்துபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கங்கோத்ரி முதல் கங்காசாகர் வரை மனிதச் சங்கிலி நடத்தப்படும். கங்கையின் துய்மையை வலியுறுத்தி தில்லியில் சர்வதேச மாநாடும், பிரசார இயக்கமும் நடத்தப்படவுள்ளது என்றார் உமா பாரதி.<br />
<br />
<b>* ஓணம் பண்டிகைக்காக உருவாகும் வண்ண ஓவியங்கள்<br />
<br />
<img alt="onam.jpg" height="133" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.6&disp=emb&realattid=ii_13116b18e74630ba&zw" title="onam.jpg" width="200" /></b><br />
திருவனந்தபுரம், ஜூலை 10 : கேரள மக்களின் மிக முக்கிய ஓணம் பண்டிகை நெருங்குவதையொட்டி, வண்ண ஓவியங்களை வரையும் பணியில் அங்கு குடியேறியுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.<br />
<br />
திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றான 5வது வாமன அவதாரத்தின் போது, அவர் மகாபலியிடம் 3 அடி மண் கேட்டதாக புராணங்கள் கூறுகின்றன. 3 வது அடியை வைக்க இடமின்றி மகாபலி சக்கரவர்த்தியின் அவரது தலையில் விஸ்வரூபம் எடுத்த திருமால் வைத்தாக ஐதீகம். ஆண்டுக்கு ஒரு முறை தம் நாட்டு மக்களை பார்த்து மகிழ இறைவனிடம் அவர் வரம் கேட்டு பெற்றாகவும், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை அன்று அவர் வருவதாகவும் கேரள மக்கள் நம்புகின்றனர்.<br />
<br />
மலையாள ஆண்டில் சிங்க மாதத்தில் கொண்டாடப்படும் இது அறுவடைத் திருநாளாகும். இதை உலகில் உள்ள கேரளத்தினர் 10 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். அனைத்து மதத்தினரும், சாதியினரும் ஓணத்தன்று புத்தாடை அணிந்து, ஓணம் சதயா என்ற அறுசுவை விருந்து தயாரித்து கொண்டாடி வருகின்றனர். அன்று வீடுகளில் வண்ண வண்ணப் பூக்களலான அத்தப் பூ கோலமிடுகின்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஓணம் பண்டிகை வருகிறது.<br />
<br />
பத்மநாபசுவாமிக்கு ஓணம் பண்டிகையின் போது ஓவியங்களை கோயிலுக்கு திருவாங்கூர் ராஜ வம்சத்தினர் காணிக்கையாக அளித்து வருகின்றனர். இது ஓணவில்லு பரிசளிப்பு என அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு மேல் வழக்கத்தில் உள்ள இந்த ஓவியங்களை வரைய தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர்களை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன் கேரள அரசர் மார்த்தாண்ட வர்மாவினால் அவர்கள் கேரளாவிற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். விஷ்வகர்ம பிரிவைச் சேர்ந்த இவர்கள் கேரளாவில் கர்மானா நகருக்கு அருகே வாணியமூலா கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஓணம் வில்லுக்காக ஓவியங்களை மெல்லிய மரப் பலகைகளில் வரைந்து வருகின்றனர். திருமாலின் 10 அவதாரங்கள் தொடர்பான சம்பவங்களை பல வண்ணங்களில் தூரிகை கொண்டு தீட்டி வருகின்றனர். இதுகுறித்து மாஸ்டர் கலைஞர் பின் குமார் கூறியது:<br />
<br />
மார்த்தாண்ட ராஜாவால் 18ஆம் நூற்றண்டில் தமிழகத்திலிருந்து எங்கள் மூதாதையர்கள் அழைத்து வரப்பட்டனர். புராதன பத்மநாப சுவாமி கோயிலை அவர் மீண்டும் கட்டினார். அதற்கான சிலைகள், பளிங்கு சிற்பங்கள்,சுதைகள் எங்கள் முன்னோர்களின் கைவண்ணத்தில் உருவானவையே. கோயிலின் வடிவமைப்பிலும் எங்கள் முன்னோர்களின் பெரும்பங்கு உள்ளது. கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், இங்கேயே தங்க உத்தரவிட்ட அரசர், ஓணம்வில்லுக்காக அழகிய ஓவியங்களை உருவாக்கும் பணியையும் எங்களுக்கு கொடுத்தார். ஆரம்பத்தில் ஒரு சில ஓவியங்களை மட்டுமே அரசக் குடும்பத்தினருக்காக தயாரித்து வந்தோம். இப்போது பக்தர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓணவில்லு ஓவியங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 1001 ஓணவில்லு ஓவியங்களை தயாரித்தோம்.<br />
<br />
இந்த ஓவியங்களை தயாரிக்க அவர்கள் முன்பணத்துடன் பக்தர்கள் ஆர்டர்கள் கொடுக்கின்றனர். பெரும்பாலும் திருமாலின் 10 அவதாரங்கள் தொடர்பான கருத்துகளையே அடிப்படையாக கொண்டு ஓவியங்கள் வரைவோம். குறிப்பாக, சயன நிலையிலுள்ள பத்மநாபசுவாமி, கிருஷ்ணரின் லீலைகள், ஸ்ரீராம பட்டாபிஷேகம் போன்ற ஓவியங்கள் ஓணவில்லுக்காக வரையப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆண்டு விநாயகர், ஐயப்பன் சரிதங்களை அடிப்படையாக ஓவியங்கள்வரையப்பட்டதாக பின் குமார் கூறினார்.<br />
<br />
மகோனி மரத்தை சிறிய தடிமன் உள்ள பலகைகளாக தயாரித்து, அவற்றில் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி ஓவியங்களை வரைகின்றனர். இவை வில்லு போன்ற பலகையில் வரையப்படுவதால், வில்லு என்றழைக்கப்படுகிறது. ஓவியம் வரையும் 41 நாள்கள் அவர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து வருகின்றனர். <br />
<br />
திருவோணத்தன்று முதல் 12 ஓவியங்கள் கோயிலில் கொடுக்கப்படும். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பின் அவை, அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். கோயில் நிர்ணயித்த கட்டண அடிப்படையில் ஓவியங்களுக்கு பணம் பெறபட்டபின், அவை வரைய ஆர்டர் கொடுத்த பக்தர்களிடமே கொடுக்கப்படுகிறது.<br />
<br />
<b style="color: #ff6600;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* ராணுவ அதிகாரி கைது, துப்பாக்கியும் பறிமுதல்:அப்பாவி சிறுவனைக் கொன்ற குழப்பம் விலகியது</b><br />
<br />
<img alt="large_272892.jpg" height="169" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.3&disp=emb&realattid=ii_13116b0f51332836&zw" title="large_272892.jpg" width="200" /><br />
<br />
சென்னை:சிறுவன் தில்ஷனைதுப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, முன்னாள் ராணுவ அதிகாரியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, துப்பாக்கியையும் கைப்பற்றினர்.சென்னை, தீவுத்திடல், கல்லறை இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார்; கூலித்தொழிலாளி. இவரது மகன் தில்ஷன், 13; 8ம் வகுப்பு மாணவன். தில்ஷன், கடந்த 3ம் தேதி, வீட்டின் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பிற்குள், பிற்பகல் 1:20 மணிக்கு, ராணுவ அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தான்.<br />
<br />
இது தொடர்பான வழக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்து, சிறுவன் தில்ஷன் உயிரை பறித்த துப்பாக்கி குண்டும் கைப்பற்றப்பட்டது.சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை கொண்டு, ராணுவ லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் இருந்த இளம் அதிகாரி ஒருவர், ராணுவ வீரர் உள்ளிட்டோரை விசாரித்து வந்தனர். தொடர்ந்து, அக்குடியிருப்பில் இருந்த ராணுவ அதிகாரிகள், வீட்டில்பணியாற்றுவோர் அனைவரையும் விசாரித்தனர்.சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கி மற்றும் சுடப்பட்ட குண்டின் மீதி பகுதி மற்றும் காலி கேஸ் ஆகியவற்றை கைப்பற்றும் பொருட்டு, சம்பவ இடத்தில் அமைந்து உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் சோதனை செய், கோர்ட் உத்தரவு பெற்று<br />
சோதனையிடப்பட்டது.<br />
<br />
ராணுவக் குடியிருப்புபகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ”டப்பட்ட குண்டின் ஒரு பகுதி, தடய அறிவியல் துறைக்கு சோனைக்காக அனுப்பப்பட்டு, துப்பாக்கியின் தன்மை பெறப்பட்டது.ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, மூன்று சிறுவர்கள் மட்டும் அங்கு சென்றதாக தகவல் இருந்தது. ஆனால், அங்கு நான்காவதாக ஒரு சிறுவனும் இருந்தது பின் தெரிந்தது.அந்த சிறுவனை பிடித்து விசாரித்ததில், வயதான ஒருவர் Œம்பவ இடத்தில் தடயங்களை மறைக்கமுயற்சித்தது தெரிந்தது. அந்த சிறுவன் மூலம், அந்த நபரை அடையாளம் கண்ட போது, அவர் ஓ#வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் ராமராஜ் என்பது தெரிந்தது.அவரிடம் நடத்தப்பட்ட விŒõரணையில், சிறுவனை கொன்றது ராமராஜ் தான் என்பது உறுதியானது. அதற்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கி, @நப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்றில் கைப்பற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, லெப்., கர்னல் ராமராஜை போலீசார் கைது செய்தனர்.<br />
<br />
சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., சேகர் கூறியதாவது:சிறுவன் ”டப்பட்டதில் இருந்து, கடந்த ஆறு நாட்களாக, தடயங்கள் ஆய்வு, சாட்சிகள் ஆய்வு, தடய அறிவியல் சோதனைகள் என, எங்கள் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக, சம்பவம் நடந்த போது அங்கிருந்தவர்கள், அவ்வழியாக சென்றவர்கள் என பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.<br />
<br />
<b>* சென்னையில் நிலநடுக்கம்... பயத்தில் வீட்டை விட்டு ஓடிய மக்கள்!</b><br />
<br />
<img alt="10-chennai-earthquake3-300.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.1&disp=emb&realattid=ii_13116af86d30c721&zw" title="10-chennai-earthquake3-300.jpg" width="200" /><br />
<br />
சென்னை: சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.<br />
<br />
சென்னையில் இன்று மாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தியாகராய நகர், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கேகே நகர் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.<br />
<br />
திடீரென வீட்டில் உள்ள பொருள்கள் அதிர்வுற்றதாலும், காலுக்குக் கீழே அதிர்வை உணர்ந்தாலும் வீட்டை விட்டு ஓடிவந்தனர் மக்கள்.<br />
<br />
ஒருவருக்கொருவர் பயத்துடன் நிலநடுக்கம் பற்றி பேசிக் கொண்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடுகளுக்குத் திரும்பினர்.<br />
<br />
ரிக்டர் அளவுகோலில் இந்த பூகம்பத்தின் அளவு எவ்வளவு என இன்னமும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை.<br />
<br />
இன்று காலை ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* அரசு பள்ளியில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்':கிராம மாணவர்கள் ஆர்வம்</b><br />
<br />
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லி<br />
<div dir="ltr"><wbr></wbr>புத்தூர் அருகே தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கிராம மாணவர்களுக்கு அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருகி வரும் ஆங்கில மோகத்தால், கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை நகர்புற ஆங்கில பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், பெரும்பாலான கிராமங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மாணவர்களை தக்க வைக்கும் வகையில், இலவச பஸ், சீருடை, நோட்புக் போன்ற திட்டங்களை அறிமுகபடுத்தி வருகின்றன.<br />
<br />
இதைதொடர்ந்து, ஒரு சில அரசுபள்ளிகளிலும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியில் தேர்வுபெற்ற ஆசிரியரை கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகின்றனர். இதற்காக, பள்ளி ஆசிரியர்களே தங்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவிடுகின்றனர். இதன்காரணமாக கிராம மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு கிடைத்ததால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஜெசிந்தா கூறியதாவது: கடந்த மாதத்தில் இருந்து மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கீலிஷ் கற்பிக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
தினமும் ஒன்றரை மணி நேரம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் கற்பிக்க ஆரம்பித்த 15 நாட்களிலே ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற வகுப்புகளுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத்தர ஆலோசித்து வருகிறோம், என்றார். ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்று தருவது இது தான் முதல் முறை. ஆங்கிலம் கற்பதற்கு பெற்றோர் படித்திருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போது கிராம மாணவர்களும் ஆங்கிலத்தை எளிதில் கற்று, தங்களுக்குள் பேச துவங்கி விட்டனர். இவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது எனக்கு மன நிறைவை தருகிறது, என்றார். <br />
<br />
<b>* அனல்மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி:மத்திய அரசு உறுதி</b><br />
சென்னை/நெய்வேலி, ஜூலை 10: தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி அளிக்கப்படும் என மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் பிரகாஷ் பாபு பாட்டீல் உறுதி அளித்துள்ளார்.<br />
<br />
இதுகுறித்து, தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்:<br />
<br />
சென்னையில், மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மாநில மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இந்தப் பேச்சுவார்த்தையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தின் தலைவர் அன்சாரி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.<br />
<br />
தமிழகத்தின் மின்சார நிலவரம் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாநிலத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் அளவை முழுமையாக அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.<br />
<br />
மேலும், மேட்டூர், வட சென்னை பகுதிகளில் அமைக்கப்படவுள்ள கூடுதல் அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியையும் கொடுக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். மின்வாரியத்தின் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான தரமான நிலக்கரியை அளித்து உதவிடும்படி அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.<br />
<br />
மத்திய அமைச்சர் பதில்: மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் கோரிக்கைகளைக் கேட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் பாட்டீல், தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு எந்தளவுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு அவற்றை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தரமான நிலக்கிரியை அளிப்பது தொடர்பாக, நிலக்கரி நிறுவனத்துடன் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.<br />
<br />
<b>* சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு அஞ்சலி<br />
<br />
<img alt="soldier.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.4&disp=emb&realattid=ii_13116ae657a525d2&zw" title="soldier.jpg" width="200" /></b><br />
வேலூர், ஜூலை 10: வேலூரில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு, ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.<br />
<br />
வேலூர் தரைக் கோட்டையில் 10.7.1806-ல் சிப்பாய் புரட்சி நடைபெற்றது. சிறையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கும், ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான சிப்பாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.முதல் சுதந்திர போராட்டமாக கருதப்படும் இச்சம்பவத்தை வரலாற்று ஆசிரியர்கள் முதல் சிப்பாய் கலகம் என பெயரிட்டனர்.<br />
<br />
இந்த சிப்பாய் புரட்சியின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய சிப்பாய்களுக்கு வேலூர் மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூணுக்கு ஆட்சியர் எஸ். நாகராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, எம்எல்ஏ ம.கலையரசு, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மணிவண்ணன், முன்னாள் ராணுவ வீரர்கள், என்சிசி மாணவர்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.<br />
<br />
<b>* இளம்பிறை இலக்கிய கழக பரிசளிப்பு</b><br />
புதுச்சேரி : இளம்பிறை இலக்கிய கலைக் கழகம் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இளம்பிறை இலக்கிய கலைக் கழகம் சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள ரெவேய் சொசியால் சங்கத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடந்தது. விழாவிற்கு தமிழ்மாமணி மன்னர்மன்னன் தலைமை தாங்கினார். ஜெயலட்சுமி வரவேற்றார். அமலோற்பவமேரி துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் ஆனந்தன், புதுச்சேரி தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியன், தேசிய விருதாளர் ஆதவன் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினார். கவிஞர் மேகலா செழியன் நன்றி கூறினார். <br />
<br />
<b style="color: #ff6600;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #ff6600;">புற்றுநோயை குணப்படுத்தும் தக்காளி!<br />
<br />
<img alt="10-tomato3-300.jpg" src="https://mail.google.com/mail/u/2/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116b8d8ed5f0d4&attid=0.5&disp=emb&realattid=ii_13116ad7367aad46&zw" title="10-tomato3-300.jpg" /><br />
</b><br />
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.<br />
<br />
பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகாரிக்காமல் கட்டுக்குள் இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.<br />
<br />
உடல் எடை குறைப்பு<br />
<br />
சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் இதற்கான ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட் விச்சுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.<br />
<br />
தொடர்ந்து தக்காளி சாப்பிட்டதன் மூலம் பசி உணர்வு கட்டுப்பட்டு உணவு எடுத்துக்கொள்வது குறைந்தது. குறைவான உணவின் மூலம் உடல் எடையும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.<br />
<br />
இதன் காரணமாகவே உணவியல் நிபுணர்கள் உடை எடைக் குறைப்பில் தக்காளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் தக்காளி பயன்படுகிறது.<br />
<br />
புரோஸ்டேட் புற்றுநோய்<br />
<br />
ஆண்களை அதிக அளவில் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.<br />
<br />
இந்த புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதோடு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.<br />
<br />
லைக்கோபீன்<br />
<br />
புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற பொருள்தான் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. </div><div dir="ltr"></div><div dir="ltr"></div><div dir="ltr"><b style="color: #ff6600;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<b>* நாட்டில்சேமிப்பு பழக்கம் அதிகரித்து வருவதால் தங்கத்திற்கானதேவை 1,200 டன்னாக உயரும்<br />
<br />
<img alt="8312604.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116ca11cf11a98&attid=0.3&disp=emb&realattid=ii_13116c88ab313411&zw" title="8312604.jpg" /></b><br />
சென்னை:இந்தியாவில் தங்கத்திற்கானதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கத்திற்கான பயன்பாடு குறித்து உலக தங்க கவுன்சில் (டபிள்யு.எச்.ஓ) ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, வருவாயில்,சேமிப்பிற்கான வளர்ச்சி 30 - 40 சதவீதமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால், தங்க பயன்பாடுதேவை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், நகர்புறங்கள் பெருகி வருவதாலும் தங்கத்திற்கானதேவை பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2010ம் ஆண்டில், இந்தியா, 963 டன் தங்கத்தை பயன்படுத்தியுள்ளது. இது, உலக ளவிலான தங்க பயன்பாட்டில் 32 சதவீதமாகும்.மேலும், உலகிலேயே அதிக அளவில் தங்கம் வைத்துள்ள நாடு என்ற சிறப்பும் இந்தியாவிற்கு உள்ளது.இந்திய குடும்பங்களில் 18 ஆயிரம் டன் தங்கம் இருப்பு உள்ளது. இது,நாட்டின் ஒட்டு மொத்த குடும்பங்களின்சேமிப்பில் 7 சதவீதம் அல்லது 25 ஆயிரத்து 600கோடி டாலர் (11 லட்சத்து 77ஆயிரத்து 600கோடிரூபாய்) என்று மதிப்பிடப் பட்டுள்ளது.தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையிலும், ஆண்டுக்காண்டு அதற்கான தேவையும் பெருகி வருகிறது. நாட்டின் மொத்தமக்கள் தொகையில், 50 சதவீதம்பேர் 25 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். இதன்படி கணக்கிட்டால், அடுத்த பத்தாண்டுகளில், ஆண் டிற்கு 1.50கோடி திருமணங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய திருமணங்களில் தங்க ஆபர ணங் கள் பிரதானமாக உள்ளதால், ஆண்டிற்கு, 500 டன் தங்கம் ( மதிப்பின் அடிப்படையில் ஒரு லட்சம்கோடி ரூபாய்) தேவைப்படும். இது தவிர, ஒரு குடும்பத்தார் மற்றொரு குடும்பத்தாருக்கு அன்பளிப்பாக வழங்கும் தங்கத் திற்கான தேவையும், 500 டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவி<div dir="ltr"><wbr></wbr>ல் தங்கம் மிகச் சிறந்த முதலீ டாக கருதப்படுகிறது. இதனால் அதிக அளவில் தங்க ஆபரணங்களில் முதலீடுமேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில், தங்கத்திற்கான மொத்ததேவையில், தங்க ஆபரணங்களின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. இதில் 50 சதவீதம் முதலீட்டின் அடிப்படையிலானது. இதில் வியக் கத்தக்க அம்சம் என்னவென்றால், நாட்டின் ஒட்டு மொத்த தங்கத்தின்தேவையில், கிராமப்புற மக்களின் பங்களிப்பு மூன் றில் இரண்டு பங்காக உள்ளது என்பது தான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம்பேர் கிராமங்களில் வசிக் கின்றனர்.எனினும் இவர்களின் வருவாய், தற்போது ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்ற அளவிலேயே வளர்ச்சி கண்டு வருகிறது. இது, வரும் ஆண்டுகளில், 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கத்திற்கானதேவைமேலும் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா<wbr></wbr>வில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களிடம்,கடவுள்களுக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்து வழிபடுவது பாரம்பரியமாக இருந்துவருகிறது. இதனாலும், தங்கத்திற்கானதேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. (திருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகோவில்போல், நாட்டின் பலகோவில் களில் புதைந்து கிடக்கும் பல்லாயிரம் லட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும்சேர்த்தால், உல கிலேயே தங்கம் இருப்பில் பல ஆண்டுகளுக்கு இந்தியாவை விஞ்ச முடியாது.)கடந்த பத்தாண்டுகளில் தங்கத்தின் விலை 400 சதவீதம் அதிகரித்துள்ள நிலையிலும், நம்நாட்டில் தங்கத் திற்கானதேவை குறையாமல் உயர்ந்து வருகிறது. இதற்கு தங்கத்தைசேமிப்பாக கருதுவதும் முக்கிய காரணம். இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பில்,தங்கம் குறிப் பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் டாலர் மதிப்பு உயர்ந்ததையடுத்து, அன்னியச் செலா வணி கையிருப்பில், தங்கத்தின் பங்களிப்பு குறைந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி, கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கம் வாங்கியது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்களாக உயர்ந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் தங்கம் 8.5 சதவீமாக உயர்ந்தது.இதனால், உலக நாடுகளில் அதிக அளவில் தங்கம் இருப்பு வைத்துள்ள மைய வங்கிகளில்,இந்திய ரிசர்வ் வங்கி 11வது இடத்தில் உள்ளது.நாட்டின் தாராள மய மாக்கல் கொள்கையும், தங்க பயன்பாடு உயர வழி வகுத்தது. கடந்த 2002- 10ம் ஆண்டு வரை (2009 நீங்க லாக), தங் கத் தின் விற்பனை ‹டாக இருந்தது. சென்ற 2010ம் ஆண்டில், ஆபரணத் தங்கத்திற்கானதேவைப்பாடு 745.70 டன்னாக உயர்ந்தது.இது, மதிப்பின் அடிப்படையில் முந் தைய ஆண்டை விட இருமடங்கு உயர்ந்து 66 ஆயிரத்து 900கோடி ரூபாயில் இருந்து, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 200கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவிற்கு உயர்ந்து, மக்களின் வருவாய் வளர்ச்சி பெற்று,சேமிப்பும் உயரும் என சி.எம்.ஐ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதனால், தங்கம்மற்றும் தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <br />
<br />
<b>* ஏற்ற, இறக்கம் நிறைந்த வாரம்</b><br />
<br />
மும்பை, ஜூலை 9: பங்குச் சந்தையில் கடந்த வாரம் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. வார இறுதியில் 0.5 சதவீத அளவே முன்னேற்றம் காணப்பட்டது. சுரங்கம், உலோகம் சார்ந்த பங்குகள் அதிகம் விற்பனையானதால் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் கணிசமாக இருந்தது.<br />
<br />
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 5,700 புள்ளிகளைக் கடந்தது. மும்பை பங்குச் சந்தை 18,858 புள்ளிகளாக இருந்தது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் தேசிய பங்குச் சந்தையில் 34 புள்ளிகளும், மும்பை பங்குச் சந்தையில் 95 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. தொடர்ந்து மூன்று வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது முதலாவது காலாண்டு நிதி நிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது. இந்நிறுவனத்தின் வருமானம் 20 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன்படி இந்நிறுவனத்தின் ஒரு பங்கு ஈட்டும் வருமானம் ரூ. 130 முதல் ரூ.132 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
கட்டுமான தொழிலுக்குக் கடன் அளிக்கும் ஹெச்டிஎப்சி நிறுவனம் முதல் காலாண்டில் ரூ. 845 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் புளூம்பெர்க் நிபுணர்கள் கணிப்பு ரூ. 877.43 கோடி. நிறுவன லாபம் குறைந்ததால் இந்நிறுவனப் பங்கு விலை 1.5 சதவீதம் சரிந்து ரூ. 712-க்கு விற்பனையானது.அமைச்சரவைக் கூட்டத்தில் சுரங்கத்துறை தொடர்பான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சுரங்க நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 26 சதவீத தொகையை உள்ளூர் மக்கள் மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால் சுரங்க நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ. 11 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வார இறுதியில் சுரங்க நிறுவனம் மற்றும் கனிம நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.<br />
<br />
<b style="color: #ff6600;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<b>கிரிக்கெட்</b><br />
<br />
<b>சந்தர்பால் அசத்தல் சதம் : ஆட்டம் டிரா</b><br />
டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இவர் சதம் விளாசினார். துவக்கத்தில் அசத்திய இந்திய பவுலர்கள் கடைசி கட்டத்தில் திணறினர்.முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204, இந்தியா 347 ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிர்க் எட்வர்ட்ஸ் சதம் (110) அடித்து கைகொடுத்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. ஹர்பஜன் சுழலில் கேப்டன் டேரன் சமி(17) சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார். "ரீப்ளேவில் பந்து இவரது கால் பேடில் பட்டுச் சென்றது தெளிவாக தெரிந்தது. ராம்பால்(1), ரன் அவுட்டானார்.<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் அபாரம் :இதற்கு பின் சந்தர்பால், பிடல் எட்வர்ட்ஸ் இணைந்து துணிச்சலாக போராடினர். போட்டியை "டிரா செய்யும் நோக்கில் உறுதியுடன் பேட் செய்த சந்தர்பால், டெஸ்ட் போட்டிகளில் தனது 23வது சதம் எட்டினார். இது இந்தியாவுக்கு எதிராக இவரது 6வது சதம். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர், இந்தியாவின் வெற்றி கனவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார். உணவு இடைவேளைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 322 ரன்கள் எடுத்தது.<br />
<br />
டிரா: 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக முதல் பந்திலேயே முகுந்த் அவுட்டாகி வெளியேறினார். பின் முரளி விஜயும் (45),ரெய்னா (8) அவுட்டாகினர். டிராவிட் (34), லக்ஷ்மண் (3) ரன்கள் என மொத்தம் 94/3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்து, இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.<br />
<br />
மூன்றாவது டெஸ்டின் ஆட்டநாயகனாக வெ.இண்டீஸின் சந்தர்பால் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக இந்தியாவின் இசாந்த் சர்மா அறிவிக்கப்பட்டார்.<br />
<br />
<b>* ஆசிய தடகளம்: வெள்ளி வென்றார் சுதா</b><br />
கோபே, ஜூலை 10- ஜப்பானில் நடைபெற்றுவந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய வீராங்கனை சுதா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.<br />
<br />
3000 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10 நிமிடம், 8 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார் சுதா.<br />
<br />
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கேமந்தா ராம் வெண்கலம் வென்றார். <br />
<br />
<b style="color: #ff6600;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #ff6600;">அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்</b><br />
மூலவர் : பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி)<br />
உற்சவர் : பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு.<br />
தல விருட்சம் : அரச மரம்<br />
தீர்த்தம் : தோணி ஆறு<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
ஊர் : தளி - திருமூர்த்தி மலை<br />
மாவட்டம் : கோயம்புத்தூர்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.<br />
<br />
தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி. முருகனின் திருநாமம் பாலசுப்பிரமணியன், இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் அத்திரி மகரிஷி<br />
<br />
தலபெருமை:<br />
<br />
சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், அமணலிங் கேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேஸ்வரர் ஆனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு. இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார். எனவே இங்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.<br />
<br />
மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள்.இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக கூறப்படுகிறது.<br />
<br />
இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக கூறப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக விளையாடிய போது அருகிலுள்ள கஞ்ச மலையிலிருந்த கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்து கன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றினர். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கிய மாகி விட்டனர். தடுத்து நிறுத்திய விரளி மஞ்சளிலேயே சப்த கன்னியர் ஐக்கியமாகி விட்டனர். இங்கு இந்த சப்த கன்னியருக்கு தனி சன்னதி உண்டு.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூரத்தி மலை. கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே “பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கைலாய காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்று ம் சிறப்பு பெறுகிறது.<br />
<br />
மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.<br />
<br />
ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.<br />
<br />
திருவிழா:<br />
<br />
மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை , தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜை இங்கு சி சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.<br />
<br />
திறக்கும் நேரம்<br />
<br />
காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #ff6600;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #ff6600;">தேனீயைப் பாருங்கள் - பட்டினத்தார்</b>.<br />
<br />
* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.<br />
<br />
* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.<br />
<br />
* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.<br />
<br />
<b style="color: #ff6600;">வினாடி வினா </b>:<br />
<br />
<b>வினா</b> - இந்தியாவின் டெட்ராய்ட் எனப்படும் இந்திய மாநிலம் எது ?<br />
<br />
<b>விடை</b> - மத்தியப் பிரதேசம்.<br />
<br />
<b style="color: #ff6600;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b style="color: #ff6600;">உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை:சாதிக்கும் மாற்றுத்திறனாளி</b><br />
<br />
<img alt="large_272535.jpg" height="135" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13116ca11cf11a98&attid=0.1&disp=emb&realattid=ii_13116c5d35d585c8&zw" title="large_272535.jpg" width="200" /><br />
<br />
பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.<br />
<br />
தன்னுடைய இரண்டு கால்களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தார்.மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், அரசு வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அரசு வேலை எட்டாக்கனியாகிவிட்டது. படிப்பு மட்டும் பயன்தராது என்பதை உணர்ந்த அசைன், அதன்படி, வீட்டில் எலக்ட்ரானிக் சாதனங்களை ரிப்பேர் செயய்யும் தனது அண்ணனின் உதவியுடன், எலக்ட்ரானிக் சாதனங்கள் ரிப்பேர் செயய்யும் தொழிலை கற்றுக் கொண்டார்.அடுத்தகட்டமாக, சொந்தமாக எலக்ட்ரானிக் சாதனங்கள் சர்வீஸ் கடையை துவக்கினார். இதில், ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.<br />
<br />
காலப்போக்கில், புதிய வரவான மொபைல்போனின் பயன்பாடு அதிகரிப்பிற்கேற்ப, மொபைல்போன் சர்வீஸ் பயிற்சியை கற்றுக் கொண்டார்.கைகளால் மட்டுமே மொபைல்போன் ரிப்பேர் செயய்பவர்கள் மத்தியில், தன்னுடைய இரண்டு கால்களாலும் ரிப்பேர் செயய்ய முடியும் என்பதை அசைன் நிரூபித்துக் காட்டி வருகிறார். குறை ந்த செலவில் மொபைல்போன் ரிப்பேர் செயய்வதால், இவருக்கு இப்பகுதியில் நிறைய வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.<br />
<br />
இது குறித்து அசைன் கூறியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளாக மொபைல்போன் சர்வீஸ் கடையை தனியாக நடத்தி வருகிறேன். கடையை திறந்ததும், மின்சார சுவிட்ச்சை யாருடைய உதவியின்றி, நானே காலை உயர்த்தி போடுவேன். பின், மொபைல்போன் ரிப்பேர் செயய்வதற்குரிய இடத்தில், ஸ்பேர் பார்ட்சுகளை வைத்துக் கொள்வேன். ஸ்பீக்கர் மாற்றுவது;சாப்ட்வேர் பிரச்னையை சரி செயய்வது;போன் போர்டு மாற்றுவது உள்ளிட்ட அனைத்தும் செயய்வேன். முக்கிய உதிரிபாகங்களை வாங்க நானே நேரில் செல்கிறேன்.<br />
<br />
ஆரம்பத்தில் பல மணிநேரம் உடலை வளைத்து, கால்களால் ரிப்பேர் செயய்தேன். ஒரு மணிநேரம் தொட ர்ந்து செயய்தால் அரை மணிநேரம் ஓயய்வு தேவைப்படுகிறது. உடலை வளைத்து ரிப்பேர் செயய்வதால், முதுகுப் பகுதியில் வலி ஏற்படுகிறது. எனக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டரை வயதில் குழந்தை இருக்கின்றனர். என்போன்றோர்க்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அசைன் தெரிவித்தார்.- ஜி.எத்திராஜுலு -<br />
</div><br />
<br />
நன்றி - சமாச்சார், யாகூ, தின மணி, தின மலர், தட்ஸ் தமிழ்.<br clear="all" /><br />
-- </div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-54753237162678241252011-06-22T07:29:00.000+05:302011-06-22T07:29:30.616+05:30இன்றைய செய்திகள் - ஜூன் , 22 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><b style="color: #993399;">முக்கியச் செய்தி </b>:<br />
<br />
<b>* தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு<br />
<br />
<img alt="ananahe.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4e753e4c9093&attid=0.4&disp=emb&realattid=ii_130b4e3a5c1869ce&zw" title="ananahe.jpg" /><br />
</b><br />
புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.<br />
<br />
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.<br />
<br />
லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரைக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் அரசுத் தரப்புக்கும் அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.<br />
<br />
இந்த நிலையில் இந்த வரைவுக் குழுவின் ஒன்பதாவது மற்றும் கடைசிக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. வரைவுக் குழுவின் 10 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் 8 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.<br />
<br />
இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பிலான அதிகாரப்பூர்வமான வரைவு மசோதா வெளியிடப்பட்டது. லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்பிலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கப்படும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதாக அண்ணா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.<br />
<br />
பிரதமர் மற்றும் உயர்நிலை நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது, நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களுக்கு நடத்தை விதிகளை வகுப்பது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அவர்களை நீக்கும் நடைமுறையை வகுப்பது ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.<br />
<br />
இது தொடர்பாக அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "அவர்கள் அவர்களது வரைவு மசோதாவைக் கொடுத்தார்கள். நாங்கள் எங்களது மசோதாவைக் கொடுத்தோம். இரண்டின் மீதும் குறுகிய விவாதம் நடந்தது. 6 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும் இரு பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன' என்றார்.<br />
<br />
அரசு தரப்பில் தரப்பட்டிருக்கும் மசோதா தொடர்பாக ஹசாரே குழுவினர் கருத்துத் தெரிவிக்க இன்னும் இரண்டு மூன்று நாள்கள் அவகாசம் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.<br />
<br />
ஹசாரே குழு அதிருப்தி:<br />
<br />
இதனிடையே, அரசு அளித்திருக்கும் வரைவு மசோதா குறித்து ஹசாரே குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இருக்கும் வகையில் அரசின் மசோதா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் பிரசாந்த் பூஷண்.<br />
<br />
இதற்கு முந்தைய வரைவிலாவது, பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போதைய வரைவில் அதுவும் இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் குறைகூறியிருக்கிறார்.<br />
<br />
அரசுக்குப் பாடம் புகட்டுவோம் - ஹசாரே: லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதால் திட்டமிட்டபடி, "அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில்' ஆகஸ்ட் 16-ம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருக்கிறார்.<br />
<br />
<b style="color: #cc33cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<b>* நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு</b><br />
பெர்லின், ஜூன் 21: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.<br />
<br />
ஐரோப்பிய நாடுகளின் ஸ்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த நிதியத்துக்குத் தேவைப்படும் தொகை 2013-ம் ஆண்டுக்குள் திரட்டப்பட்டுவிடும்.<br />
<br />
ஓராண்டுக்கு முன்பு கிரேக்கத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் நிதி நெடுக்கடிக்கு உள்ளாயின. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இந்த நாடுகள் எதிர்கொண்ட நிதி நெருக்கடியால் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளமான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவானது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார தேக்க நிலை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆலோசித்து முதல் கட்டமாக கிரேக்கத்துக்கு 10,000 கோடி யூரோக்களை அளிக்க ஒப்புக் கொண்டனர். ஐரோப்பிய யூனியனும், அன்னியச் செலாவணி நிதியமும் (ஐஎம்எஃப்) இணைந்து இந்தத் தொகையை கடந்த ஆண்டு மே மாதம் அளித்தன.<br />
<br />
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நிதி உதவி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 12,000 கோடி யூரோ தேவை என மதிப்பிடப்பட்டது. நிதியத்தில் மொத்தம் 44,000 கோடி யூரோக்கள் அளவுக்கு சேர்ந்துள்ள நிலையில் கிரேக்கத்துக்குத் தேவையான 12 ஆயிரம் கோடி யூரோக்களை அளிப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது என கூறப்படுகிறது. எஞ்சிய தொகையை அயர்லாந்து, போர்சுக்கலுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
மீட்பு நிதியத்தில் 620 கோடி யூரோ கடன் உத்தரவாதத்தின் பேரிலும் 80,000 கோடி யூரோ ரொக்கமாகவும் இருக்கும். இந்த நிதி 2013-ல் திரட்டப்பட்டு 2017-க்குள் அளிக்கப்பட்டு விடும்.<br />
<br />
திரட்டப்படும் நிதித் தொகையில் அன்னியச் செலாவணி நிதியத்தின் பங்கு 25,000 கோடி யூரோவாக இருக்கும். ஐரோப்பிய பிராந்தியத்தில் ஸ்திரமான நிதி நிலை, பொருளாதார சூழல் நிலவுவதற்காக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படுவதாக 17 நாடுகளின் தலைவர் ஜீன் கிளாட் ஜுன்கர் தெரிவித்தார்.<br />
<br />
முதல் முறையாக இந்த நிதியத்தில் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி தன் பங்காக 16,800 கோடி யூரோவை அளிக்கும். இதில் 2,200 கோடி யூரோக்கள் ரொக்கமாக இருக்கும்.<br />
<br />
<b>* ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியது: 44 பேர் கருகி சாவு</b><br />
மாஸ்கோ,ஜூன் 21: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ரஷிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி எரிந்ததில் அதில் பயணம் செய்த 8 ஊழியர்கள் உள்பட 44 பேர் உடல் கருகி இறந்தனர்.<br />
<br />
வட மேற்கு ரஷியாவின் கரேலியா குடியரசில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.<br />
<br />
ரஷியாவின் ரஷ்-ஏர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான டியு-134 ரக விமானம் 52 பேருடன் மாஸ்கோவில் இருந்து கரேலியா குடியரசின் தலைநகர் பெர்ரோஜவாத்ஸ்க் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. கரேலியா விமான நிலையத்தில் தரையிறங்கும் நிலையில் அது சாலையில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக அவசர கால அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரியானோவா தெரிவித்தார்.<br />
<br />
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விமானத்தில் 9 விமான சிப்பந்திகளுடன் 52 பேர் பயணம் செய்தனர். இதில் 44 பேர் விபத்தில் சிக்கி இறந்தனர். 8 பேர் பலத்த காயங்களுடன் தப்பினர். அவர்களில் ஒருவர் விமானப் பணிப்பெண் ஆவார் என்றார்.<br />
<br />
விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், விமானம் தரையிறங்கும்போது வானிலை மிக மோசமாக இருந்தது.<br />
<br />
விமான நிலையம் பனியால் சூழப்பட்டிருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது என்றார்.<br />
<br />
ரஷியா விசாரணை குழுவின் செய்தித் தொடர்பாளர் விலாடிமிர் மார்க்கின் கூறுகையில்,<br />
<br />
இந்த விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதத் தவறு நடந்துள்ளதா என்றும் விசாரணைக்குழு விசாரிக்கும். விமானம் விழுந்து நொறுங்கியதும் உடனடியாக மீட்புப்படை சென்று ஒரு குழந்தை உள்பட 8 பேரை மீட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவைப்பட்டால் அவர்களை மாஸ்கோவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.<br />
<br />
கடந்த ஆண்டு டியு 154 ரக விமானம் ஒன்று ரஷியாவின் ஸ்மோலெஸ்க் நகரில் விழுந்து நொறுங்கியதில் அப்போதைய போலந்து அதிபர் லெசிகசிஸôய்ங்ஸ்கி உள்பட 96 பேர் இறந்தனர். டியு 134 விமானம் இரட்டை என்ஜின் கொண்ட விமானமாகும். இந்த ரக விமானம் 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<b><br />
* இராக்கில் கார் குண்டு வெடிப்பு: 25 போலீஸôர் சாவு</b><br />
<br />
பாக்தாத், ஜூன் 21: இராக்கில் கார் குண்டு வெடித்து 25போலீஸôர் இறந்தனர்.<br />
<br />
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திவானியா நகர். இங்குள்ள கவர்னர் சலாம் ஹூசைன் வீட்டு முன்பு 30 மீட்டர் தூரத்தில் போலீஸôர் சோதனைச் சாவடி அமைத்து காவலுக்கு இருந்தனர். ÷செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப்படையினர் போலீஸ் சோதனைச் சாவடி மீது மோதினர்.<br />
<br />
இதில் காரில் இருந்த குண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதில் கவர்னர் வீட்டுக்கு முன்பு காவலுக்கு இருந்த 25 போலீஸôர் இறந்தனர். 30 போலீஸôர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.<br />
<br />
<b>* சீனாவில் நிலநடுக்கம்: 10 ஆயிரம் வீடுகள் சேதம்</b><br />
பெய்ஜிங், ஜூன் 21: சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.<br />
<br />
சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள மாங்பாங் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.<br />
<br />
நிலநடுக்கத்தால் ரோடுகள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
இந்த நிலநடுக்கத்தால் 94 வீடுகள் இடிந்து விழுந்தன. 9741 வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன அரசு 405 கூடாரங்களையும்,400 படுக்கை மெத்தைகளையும் அளித்துள்ளது.<br />
<br />
சாலமன் தீவில்... அமெரிக்கா அருகில் உள்ள சாலமன் தீவில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 7.34 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தன. இதனால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.<br />
<br />
கடந்த 2007-ம் ஆண்டு சாலமன் தீவில் 8.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமியும் உருவானது. இதில் 52 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.<br />
<br />
*<b> துனிசியா முன்னாள் அதிபர், மனைவிக்கு 35 ஆண்டு சிறை<br />
</b><br />
தூனிஷ், ஜூன் 21: துனிசியா நாட்டு முன்னாள் அதிபர் ஜினே அல்அபிதின் பென் அலி மற்றும் அவரது மனைவி லைலா தரபெல்சி ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.<br />
<br />
துனிசியா நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவி வகித்த அவர் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி அவரை விரட்டியடித்தனர். இதனால் பதவியை ராஜிநாமா செய்து சவூதி அரேபிய நாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். தற்போது ஜினே அல்அபிதின் அந்நாட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் மீது<br />
<br />
துனிசியா நாட்டு நீதிமன்றத்தில் ஊழல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தல், போதை மருந்து கடத்தல், கருப்புப்பணத்தை பதுக்கிவைத்தல் என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ராணுவ நீதிமன்றத்தில் பொதுமக்களை கொலைசெய்த வழக்கு உள்பட 182 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுபோல் லைலா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.<br />
<br />
இந்நிலையில் ஜினே மீதும் அவரது மனைவி மீதும் துனிசியா நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இருவருக்கும் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.170 கோடி அபராதமும் விதித்து திங்கள்கிழûமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.<br />
<br />
தண்டனை அடைந்துள்ள ஜினேயையும் லைலாவையும் துனிசியாவுக்கு அனுப்பிவைக்கும்படி சவூதி அரேபியாவுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு நீதிமன்ற பேச்சாளர் தெரிவித்தார்.<br />
<br />
<b>* இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழக பேரவைத் தீர்மானத்துக்கு அமெரிக்க தமிழர் அமைப்பு வரவேற்பு<br />
</b><br />
வாஷிங்டன், ஜூன் 21: இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.<br />
<br />
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அமைத்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபைக் குழுவின் இந்த அறிக்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
இந்த தீர்மானத்தை அமெரிக்காவில் செயல்படும் தமிழ் அரசியல் செயல் கவுன்சில் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் இலியாஸ் ஜெயராஜா கூறுகையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அந்தத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிய தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்<br />
<br />
இலங்கை வன்னிப்பகுதியில் நடந்த சண்டையின்போது அந்நாட்டு விமானங்கள் மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த பள்ளிகள் மீதும், அவர்கள் தங்கியிருந்த முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி அப்பாவி மக்களை அழித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவேதான் இங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. எனவே இலங்கையை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.<br />
<br />
*<b> அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்தியருக்கு உயர் பதவி</b><br />
பாஸ்டன், ஜூன் 21: அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் உயர்பதவிக்கு இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
சென்னை ஐஐடி பட்டதாரியான ஆனந்த் அகர்வால் என்பவரைத் தனது "கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத் திறன் (ரோபாட்டிக்ஸ்) ஆய்வுக்கூடத்துக்கு' இயக்குநராகத் தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் பிரபலமான மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்(எம்ஐடி). அவர் இந்தப் பதவியை ஜூலை 1-ம் தேதி ஏற்றுக்கொள்கிறார்.<br />
<br />
ஆனந்தின் தொலைநோக்குப் பார்வையும், ஆர்வமுமே அவர் இந்த முக்கியப் பதவியை அடையக் காரணமாகும் என்று இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை முதல்வர் இயான் வெயிட்ஸ் தெரிவித்தார். ஆனந்த் இப்போது "மல்டிகோர் பிராசசர்" எனப்படும் பல்நோக்குத் தொழில்நுட்பத் திறனுடைய கணினிப் பயன்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.<br />
<br />
"எலக்டிரிகல் மற்றும் கணினி அறிவியல்'துறைக்கு மற்றொரு இந்தியரான ஆனந்த சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அமெரிக்காவின் நாசா, சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை நிதியுதவி செய்து வருகின்றன.<br />
<br />
* <b>இந்திய தூதரக அதிகாரி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார்</b><br />
நியூயார்க், ஜூன் 21: நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அலுவலகப் பணியாளர் சந்தோஷ் பரத்வாஜ், தூதரக அதிகாரி பிரபு தயாள் மீது நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.<br />
<br />
இந்தியாவுக்கான தூதரக அலுவலகம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ளது. தூதரக அதிகாரியின் அலுவலகம் மற்றும் வீடும் ஒரே இடத்தில் உள்ளது.<br />
<br />
இதில் வீட்டு பணியாளராக கடந்த ஆண்டு வரை பணி புரிந்த சந்தோஷ் பரத்வாஜ் என்ற பெண்மணி, தனக்கு ஊதியம் குறைவாக அளித்ததாகவும், தன்னை மிக மோசமான அறையில் அடைத்து வைத்ததாகவும் புகார் கூறியுள்ளார்.<br />
<br />
மேலும் தன்னை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்த முயன்றபோது அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான சந்தோஷ் பரத்வாஜ் (45), தனது புகார் மனுவில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு டாலர் அளிப்பதாகக் கூறி இந்தியாவிலிருந்து அழைத்து வந்ததாகவும், ஆனால் அதைவிடக் குறைவாக அளித்ததாகவும் கூறியுள்ளார். தனது பாஸ்போர்ட்டை பிரபு தயாள் வைத்திருப்பதாகவும் அதை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
தங்குவதற்கு இடமளிப்பதாகக் கூறி அழைத்துவந்த தம்மை மிகக் குறுகிய அறையில் தங்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சமயம் தன்னிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்றபோது அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.<br />
<br />
சந்தோஷ் பரத்வாஜுக்கு ஆதரவாக சட்ட உதவி ஆலோசனை மையம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பிரபு தயாள் விளக்கம் அளிக்குமாறு அச்சங்கம் கூறியுள்ளது. ஆனால் இந்த புகார் அனைத்தும் தவறானவை என்று குறிப்பிட்ட பிரபு தயாள், வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர், வேறு எங்கும் பணி புரியக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனால் அவரை வேறிட பணிகளுக்கு அனுமதிக்கவில்லை. இங்கு பணியாற்றுவதற்கு சம்பளம் அளித்தது தவிர, அவருக்கு அலுவலகத்தின் ஐந்தாவது தளத்தில் தங்குமிட வசதி அளிக்கப்பட்டது.<br />
<br />
அங்கு டி.வி, தொலைபேசி வசதிகள் உள்ளன. இந்தியாவில் அவரது குடும்பத்தாருக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் தொகை அனுப்பப்பட்டது என்றும் தயாள் குறிப்பிட்டார்.<br />
<br />
2010-ம் ஆண்டு வெளியேறிய அவர் இவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிகிறது என்றால் அதற்கு இங்கு பெற்ற தாராளமான ஊதியமும் ஒரு காரணம். பாஸ்போர்ட்டை குடியேற்றத்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக தயாள் கூறினார் <br />
<br />
<b style="color: #993399;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* மத்திய அமைச்சரவை மாற்றம்: பிரதமருடன் சோனியா ஆலோசனை</b><br />
<br />
புதுதில்லி, ஜூன் 21 : மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.<br />
<br />
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்டில் கூட்டப்படவுள்ளது. அதற்கு முன் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, அமைச்சரவை மாற்றம் பற்றிய முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.<br />
<br />
<b>* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1- ல் தொடக்கம்<br />
</b><br />
புது தில்லி, ஜூன் 21: நாடாளுமன்றத்தின் மழைக் காலத் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.<br />
<br />
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கி மூன்று வாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜூலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.<br />
<br />
ஆனால் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.<br />
<br />
இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பன்சால் மேலும் கூறினார்.<br />
<br />
2ஜி விவகாரத்தில் ஜே.பி.சி. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னையால் கடந்த குளிர்கால கூட்டத் தொடர் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடங்கியது நினைவு கூரத்தக்கது<br />
<br />
*<b> காஷ்மீர்: சமரசம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-மெஹபூபா<br />
</b><br />
ஸ்ரீநகர், ஜூன் 21: ஜம்மு-காஷ்மீரில் சமரச சூழ்நிலை ஏற்பட கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.<br />
<br />
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மெஹபூபா<br />
<br />
கூறியது: காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கு கொண்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநில நிலைமையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உன்னிப்பாக கவனித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
மாநிலத்தில் சுமுக சூழ்நிலை ஏற்பட கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இதன்மூலம் மாநிலத்தில் சுமுக சூழ்நிலை ஏற்பட மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை.<br />
<br />
மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை.<br />
<br />
மாநிலத்தில் இப்போது அமைதி நிலவுவதை வைத்துக் கொண்டு தவறாக கணக்கிட்டுவிடக்கூடாது. இதே நிலை நீடித்தால் பெரும் சூறாவளி ஏற்படும் என மாநில அரசை எச்சரிக்க விரும்புகிறேன் என்றார்.<br />
</div><b>* இந்தியாவுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு மிரட்டல்</b><br />
புது தில்லி, ஜூன் 21: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.<br />
<br />
பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்- தவா என்ற தீவிரவாத அமைப்பு சார்பில் அந்நாட்டில் திங்கள்கிழமை மாநாடு நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஸ்திர தன்மை என்ற பெயரில் மாநாட்டில் விவாதம் நடத்தப்பட்டது. ஜமாத்-உத் தலைவர் அப்துர் ரெஹ்மான் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பேசினர். அப்துர் ரெஹ்மான் பேசுகையில், வெளிநாடுகளும், தொலைக்காட்சிகளும் சித்திரிப்பதுபோல் பாகிஸ்தான் நிலைமை மோசமாக இல்லை என்றார். அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய ஒசமா பின்லேடனை அவர் புகழ்ந்தார்.<br />
<br />
அமெரிக்க நமது எதிரி நாடு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.<br />
<br />
மேலும் 2007-ம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.<br />
<br />
<b>* பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?<br />
<br />
<img alt="microphone300_21062011.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4e753e4c9093&attid=0.1&disp=emb&realattid=ii_130b4e04e5ffa6c9&zw" title="microphone300_21062011.jpg" /></b><br />
புது தில்லி, ஜூன் 21: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.<br />
<br />
இது தொடர்பாக 2010 செப்டம்பர் 7-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.<br />
<br />
<img alt="thumb_261924.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4e753e4c9093&attid=0.3&disp=emb&realattid=ii_130b4e43a0b779ba&zw" title="thumb_261924.jpg" /><br />
<br />
நிதியமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று பிரணாப் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தில்லி நார்த் பிளாக்கில் உள்ளது. அவரது அலுவலகத்திலும், அவரது தனி உதவியாளரின் அறை, அவரது செயலரின் அறை, இரு கருத்தரங்க அறைகள் ஆகியவற்றில் உளவு முயற்சி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.<br />
<br />
ஆனால், 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ, கேமராக்களோ சிக்கவில்லை. அவற்றைப் பொருத்த பசை தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தனது கடிதத்தில் பிரணாப் தெரிவித்துள்ளார்.<br />
<br />
கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் உளவுப் பார்க்கும் முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டபோதுதான் உளவு முயற்சி குறித்து தெரியவந்தது. இதையடுத்தே பிரதமருக்கு பிரணாப் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.<br />
<br />
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரணாப் முகர்ஜி, இப் பிரச்னை குறித்து, மத்திய உளவுத் துறையான ஐ.பி., முழு அளவில் சோதனை நடத்திவிட்டு, அலுவலகம் எந்த வகையிலும் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.<br />
<br />
ஆனால், பசை ஒட்டப்பட்ட இடங்களில் சிறிய துளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, அந்த இடங்களில் கேமராக்களோ, ரகசிய மைக்ரோபோன்களோ வைக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டிருக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் துறையினர் கூறினர்.<br />
<br />
பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிதியமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு நிகழ்வதாக நிதியமைச்சரே கடிதம் எழுதியிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.<br />
<br />
மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் பிரணாப்.<br />
<br />
அவரது அலுவலகத்திற்குள் ஒட்டு கேட்கப்படுவதாகக் கூறப்படுவது மிக முக்கியமான பிரச்னையாகும். பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில் இந்த பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
<br />
<b>* கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்: நானாவதி கமிஷன் பதவிக் காலம் 16-வது முறையாக நீட்டிப்பு</b><br />
<br />
ஆமதாபாத்,ஜூன் 21: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நானாவதி கமிஷனின் பதவிக் காலம் 16-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ். 6-வது பெட்டி சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டது.<br />
<br />
இதில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். ரயில் பெட்டி எரிந்ததில் 25 பெண்கள், 15 குழந்தைகள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். ÷<br />
<br />
இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 1263 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 298 தர்காக்கள், 290 மசூதிகள், 17 கோயில்கள், 3 கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டன.<br />
<br />
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் கலவரம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் நானாவதி, அக்ஷய் மேத்தா ஆகியோரை கொண்ட நானாவதி கமிஷனை குஜராத் அரசு 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் அமைத்தது. இந்த கமிஷன் 4145 சாட்சிகளை விசாரித்துள்ளது. இப்போது ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் தத்தின் சாட்சியத்தைப் பதிவு செய்து வருகிறது.<br />
<br />
இது வரை நானாவதி கமிஷனின் பதவிக் காலம் 15 முறை நீடிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த கமிஷனின் பதவிக் காலம் 16-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* ராசா மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்த உத்தரவு</b><br />
புது தில்லி, ஜூன் 21: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.<br />
<br />
ராசா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில் அவரை மத்திய அமைச்சரவையில் நீடிக்க விட்டது ஏன் என்பது போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அளிக்கும்படி தகவல் உரிமை ஆணையத்திடம் ஒருவர் மனு செய்திருந்தார். அந்த மனுவை தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருந்தது.<br />
<br />
இதற்குப் பதில் அனுப்பிய பிரதமர் அலுவலகம் ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவித கோப்பும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்துவிட்டது.இதையடுத்து அந்த நபர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் மனு செய்திருந்தார். இதையடுத்து ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அளிக்கும்படி மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி பிரதமர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக சைலேஷ் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் ராசா மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களின் உத்தரவாத நகல்களை ஜூலை 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். <br />
<br />
*<b> மகளிர் மசோதா: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்</b><br />
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.<br />
<br />
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்குகிறது.<br />
<br />
இந்நிலையில்,இந்த கூட்டத்தொடரிலாவது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மீராகுமார் விரும்புகிறார்.<br />
<br />
இதனையடுத்து இது குறித்து விவாதிப்பதற்காக மீரா குமார் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். <br />
<br />
<b style="color: #993399;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* பிரான்ஸில் 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு<br />
<br />
<img alt="21-chateaude-chantilly-france3.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4e753e4c9093&attid=0.2&disp=emb&realattid=ii_130b4dec07420a91&zw" title="21-chateaude-chantilly-france3.jpg" /><br />
</b><br />
பாரிஸ்: 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு பிரான்ஸில் நடக்கிறது.<br />
<br />
ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடத்தும் இந்த மாநாடு செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடக்கிறது.<br />
<br />
இது தொடர்பாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளருமான துரை கணேசலிங்கம், செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, பிரான்ஸ் கிளை செயலரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:<br />
<br />
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இந்தாண்டு செப்டம்பர் 24, 25 சனி, ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸின் எவ்ரி (Evry) நகரில் நடைபெற உள்ளது.<br />
<br />
இந்த இயக்கம் தென் ஆப்பிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.<br />
<br />
இந்த இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1977ல் சென்னையிலும், 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்,1989ல் மலேசியாவிலும்,1992ல் ஆஸ்திரேலியாவிலும், 1996ல் கனடாவிலும, 1999ல் சென்னையிலும், 2001ல் தென் ஆபிரிக்காவிலும், 2004ல் புதுவையிலும், 2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.<br />
<br />
உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு, வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.<br />
<br />
இதுவரை இந்த இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு, தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர் ஒற்றுமை பேணல்,முதலான விஷயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.<br />
<br />
இந்த நோக்கங்களுடன் தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க் கலை மீட்பு,<br />
<br />
தமிழ்க் கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.<br />
<br />
மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.<br />
<br />
மாநாட்டில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு, தொடர்பான ஆவணக்காட்சியும், தமிழர் வாழ்வியல் வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள், இறுவெட்டுக்கள், ஒலி இழை நாடாகள், நிழற்படங்கள் முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மாநாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவையும் இடம்பெற உள்ளன.<br />
<br />
இவற்றில் சிறந்தவற்றை உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.<br />
<br />
உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.<br />
<br />
எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர், மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத் தர விரும்புவோர், கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர் அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்," என்று கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு</b><br />
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.<br />
<br />
வருகிற ஜூன் 30 ஆம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்குகிறது.<br />
<br />
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் இன்று வெளியிட்டார்.<br />
<br />
இதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்னும் மாணவி ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.<br />
<br />
நாமக்கல்லைச் சேர்ந்த தட்ஷிணி என்னும் மாணவி இரண்டாவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்னும் மாணவி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.<br />
<br />
<b>* சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக்கம்</b><br />
சென்னை: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீர் நில அதிர்ச்சி ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.<br />
<br />
சேலம், கிருஷ்ணகிரி, ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு வரை இந்த நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தனர்.<br />
<br />
காலை 5.21 மணிக்கு ஏற்பட்ட ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாகப் பதிவானது.<br />
<br />
இந்த நில அதிர்ச்சியால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. வாழப்பாடி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், ராசிபுரம் போன்ற பகுதிகளில் நில அதிர்ச்சி சற்று பலமாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான அதிர்வு காணப்பட்டது. வேலூர்- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.<br />
<br />
இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளி்ல் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் எதும் ஏற்படவில்லை.<br />
<br />
நிலநடுக்கத்தின் மையம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருந்தது. அதே போல பனைமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உமையாள்புரம், உத்திரகவுன்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த நிலநடுக்கம் தீவிரமாக உணரப்பட்டது.<br />
<br />
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களிலும் தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.<br />
<br />
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 8.35 மணியளவில் நில அதி்ர்வு ஏற்பட்டது. வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்தன.<br />
<br />
அடுத்த சில நிமிடங்களில் 8.40 மணி்க்கும் 2வது முறையாக மீண்டும் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.<br />
<br />
மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், இந்த சிறு பூகம்பத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br />
<br />
*<b> ஜூலை 8 முதல் பி.இ கவுன்சிலிங்-எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு</b><br />
சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்ந்து 35 நாட்களுக்கு நடைபெறும். சென்னையில் மட்டுமே இந்த கவுன்சிலிங் நடக்கும்.<br />
<br />
தமிழகத்தில் உள்ள 494 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்துகிறது.<br />
<br />
இதில் 1.42 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் நேற்று வழங்கப்பட்டன.<br />
<br />
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்களை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,<br />
<br />
மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை <a href="http://www.annauniv.edu/tnea2011" target="_blank">www.annauniv.edu/tnea2011</a> என்ற முகவரியில் பார்க்கலாம். இந்த ஆண்டு கவுன்சிலிங் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் நடக்கும்.<br />
<br />
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. அதில் பொது கவுன்சிலிங்குக்கு உரியவர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 பேர். அவர்களில் 83 ஆயிரத்து 950 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 825 பேர் மாணவிகள். பிளஸ்-2 தொழில்கல்வி படித்து விண்ணப்பித்தவர்கள் 5578 பேர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 348 பேர். 230 பேர் மாணவிகள்.<br />
<br />
விளையாட்டு இடஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 457 பேரும், மாற்றுத்திறனாளிகள் 464 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 2 ஆயிரத்து 193 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.<br />
<br />
விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு தான். காரணம் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருவதற்கு முன்னதாக என்ஜினீயரிங் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் தேர்வு முடிவு வெளி வந்து மாணவர்களுக்கு அவர்களின் மார்க் தெரிந்து விட்டது. இதனால் குறைந்த மார்க் எடுத்த பலர் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கவில்லை.<br />
<br />
என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மார்க்குகளின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயார் செய்யப்படும்.<br />
<br />
பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெற்றிருக்கும்போது முதலில் கணிதம், பின்னர் இயற்பியல், அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியியல் பாடத்தில் உள்ள மார்க்கை கொண்டு யார் அதிகம் எடுத்தார்களோ அவர்களை முதலில் கவுன்சிலிங்குக்கு அழைப்பார்கள்.<br />
<br />
இதிலும் ஒரே மாதிரி வந்தால் பிறந்த தேதியில் யார் சீனியரோ அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிலும் ஒரே நாளில் பிறந்திருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். ரேண்டம் நம்பரில் யாருக்கு அதிக நம்பர் இருக்கிறதோ அவர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை வழங்கப்படும். ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும். இதை <a href="http://www.annauniv.edu/tnea2011" target="_blank">www.annauniv.edu/tnea2011</a> இணையத்தளத்தில் பார்க்கலாம்.<br />
<br />
அடுத்த கட்டமாக விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம் தேதி அன்று நடக்கிறது. முன்னதாக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 29 மற்றும் 29 தேதிகளில் நடைபெறுகிறது.<br />
<br />
தொழில்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 6ம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.<br />
<br />
ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 மாணவ- மாணவிகள் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் 35 நாட்கள் நடைபெறும்.<br />
<br />
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு அதற்கான நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுப்பார்.<br />
<br />
முதல் தலைமுறை பட்டதாரிகள் 64 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 63 பேர் மாணவர்கள். 24 ஆயிரத்து 347 பேர் மாணவிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சலுகை தொடரும்.<br />
<br />
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக கிடந்தது. அந்த இடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதற்கான பணிநடைபெற்று வருகிறது.<br />
<br />
துணைவேந்தர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் நேர்மையான முறையில் நியமிக்கப்படுவார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்றார்.<br />
<br />
<b>* வேளாண் பல்கலை., : தேதி நீட்டிப்பு</b><br />
<br />
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை., டீன் உதயசூரியன் தெரிவித்தார். மேலும் வரும் ஜூலை 13ம் தேதி இப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். <br />
<br />
*<b> பார்வை குறைபாடு உடையவர் கல்லூரி முதல்வராக நியமனம்</b><br />
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வராக, பார்வை குறைபாடுடைய பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கிலத்துறை முதுகலை பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சிக்கண்ணா கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வை குறைபாடு உடையவர்; தமிழக அரசு கல்லூரிகளில் பார்வை குறைபாடு உடைய ஒருவர், முதல்வராக பதவி வகிப்பது இதுவே முதல்முறை. இவர், ஹரியான பி.பி.எஸ்., பெண்கள் பல்கலையில் ஆங்கில விரிவுரையாளர் மற்றும் துறை முதன்மையராக பணியாற்றி உள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருந்து வருகிறார். சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.<br />
<br />
<b style="color: #993399;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<b style="color: #993399;">மன அழுத்தம் நீக்கும் ஜாதிக்காய்</b><br />
<br />
<img alt="21-myristica-fragrans300.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4e753e4c9093&attid=0.5&disp=emb&realattid=ii_130b4dd99af8b373&zw" title="21-myristica-fragrans300.jpg" /><br />
<br />
<b>தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்<br />
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ<br />
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்<br />
குலக்கா யருந்துவர்க்குக் கூறு.</b><br />
இது ஜாதிக்காய் பற்றி எழுதப்பட்டுள்ள பழம் பாடல்.<br />
<br />
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.<br />
<br />
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்<br />
<br />
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல்.<br />
<br />
ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது.<br />
<br />
ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.<br />
<br />
முகத்தை அழகாக்கும்<br />
<br />
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
அம்மை கொப்புளங்கள் சரியாகும்<br />
<br />
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.<br />
<br />
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்<br />
<br />
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும் , காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.<br />
<br />
தசைப்பிடிப்பை நீக்கும்<br />
<br />
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவறல் பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.<br />
<br />
ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம்,குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.<br />
<br />
<b style="color: #993399;">வர்த்த்கச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை</b><br />
<br />
மும்பை, ஜூன் 21: கடந்த நான்கு நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சிறிது முன்னேற்றத்தை சந்தித்தது. தொடர்ந்து 7 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை லேசாக முன்னேறியதும் பங்குச் சந்தை மீட்சிக்குப் பிரதான காரணமாக அமைந்தது. 54 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 17,560 புள்ளிகளானது.<br />
<br />
தேசிய பங்குச் சந்தையில் 18 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,275 புள்ளிகளானது.<br />
<br />
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.67 சதவீதம் உயர்ந்து ரூ. 848.50-க்கு விற்பனையானது.<br />
<br />
இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை 0.67 சதவீதம் உயர்ந்து ரூ. 2,742.45-க்கு விற்பனையானது.<br />
<br />
கடந்த சில நாள்களாக ஏற்பட்ட சரிவு தாற்காலிகமானது என்று முதலீட்டாளர்கள் கருதியதால், செவ்வாய்க்கிழமை துணிந்து முதலீடுகள் செய்தனர். இதனால் சரிவிலிருந்து பங்குச் சந்தை மீண்டது.<br />
<br />
பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த விலையில் பங்குகளை வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் முதலீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் புள்ளிகள் கணிசமாக உயர்ந்தது.<br />
<br />
ஆசிய சந்தையில் ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரேக்கத்துக்கு உதவுவது என்று ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கென தனி நிதியத்தை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது.<br />
<br />
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த 7 நாள்களில் ரூ. 2,379 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.<br />
<br />
மோரீஷஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்துக்கு வரி விதிக்கப்படும் என தகவல் வெளியானதால் திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. ஆனால் அத்தகவல் தவறானது என அரசு விளக்கியதையடுத்து செவ்வாய்க்கிழமை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இதுவும் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.<br />
<br />
டிசிஎஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக 3.24 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக ஹெச்டிஎப்சி 1.78%, ஹீரோ ஹோண்டா 1.39%, ஹெச்டிஎப்சி வங்கி 1.15% அளவுக்கு உயர்ந்தன.<br />
<br />
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவன பங்கு விலை அதிகபட்சமாக 3.92 சதவீதம் சரிந்தது. இதற்கு அடுத்தபடியாக டிஎல்எப் 2.92%, ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் 2.56%, எஸ்பிஐ 1.38%, ஐசிஐசிஐ 1.06%, மாருதி சுஸýகி 0.99% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.<br />
<br />
பங்குச் சந்தையில் கட்டுமான நிறுவனப் பங்குகள் 1.78 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இரண்டாம் நிலை நிறுவனப் பங்குகள் பெருமளவு சரிவைச் சந்தித்தன. செவ்வாயன்று 1,667 நிறுவனப் பங்குகள் நஷ்டமடைந்தன. 1,125 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,351.32 கோடி.<br />
<br />
<b style="color: #993399;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* நியூஸீலாந்து கேப்டனாக ராஸ் டெய்லர் தேர்வு </b><br />
<br />
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டப்பட்டுள்ளார்.<br />
<br />
உலகக்கோப்பை தோல்விக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து டேனியல் வெட்டோரி விலகியதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
முன்னதாக ராஸ் டெய்லரும், பிரண்டன் மெக்கலமும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.<br />
<br />
ராஸ் டெய்லரின் பெயரை நியுஸிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ஜான் பச்னன், தேசிய பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் தேசிய தேர்வுக் குழு மேலாளர் மார்க் கிரீட்பேட்ச் ஆகியோர் பரிந்துரைத்தனர்.<br />
<br />
இதையடுத்து அவரை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.<br />
<br />
<b style="color: #993399;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #993399;">* அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : தெய்வநாயகேஸ்வரர்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : கனககுசாம்பிகை<br />
தல விருட்சம் : மரமல்லிகை<br />
தீர்த்தம் : மல்லிகா புஷ்கரணி<br />
ஆகமம்/பூஜை : காமீகம்<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர்<br />
ஊர் : எலுமியன்கோட்டூர்<br />
மாவட்டம் : காஞ்சிபுரம்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
பாடியவர்கள்:<br />
<br />
<br />
திருஞானசம்பந்தர்<br />
<br />
தேவாரப்பதிகம்<br />
<br />
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுஉரை தனதுஉரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் கலையினார் மடப்பினை துணையொடும் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயில் ஆலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.<br />
<br />
-திருஞானசம்பந்தர்<br />
<br />
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம். <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார்.<br />
<br />
மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.<br />
<br />
இங்குள்ள தலவிநாயகர் ,குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. <br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், "தெய்வநாயகேஸ்வரர்' என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், "அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் "எலும்பியங்கோட்டூர்' என்று மருவியது.<br />
<br />
தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. <br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார்.<br />
<br />
தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.<br />
<br />
ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் "இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு!' என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.<br />
<br />
தேவகன்னியர்கள் வழிபாடு: அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன், "யோக தெட்சிணாமூர்த்தி'யாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார்.<br />
<br />
இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.<br />
<br />
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.<br />
<br />
கோயில் நுழைவுவாயில் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன், "ரம்பாபுரிநாதராக' 16 பேறுகளை அழிக்கும் படி, 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். <br />
<br />
திருவிழா:<br />
<br />
குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.<br />
<br />
திறக்கும் நேரம் :<br />
<br />
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.<br />
<br />
<b style="color: #993399;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #993399;">* ஆன்மா - அன்னை </b><br />
<br />
ஆன்மா இறைவனிடமிருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் அவனைவிட்டுப் பிரிவதில்லை, அவனிடம் திரும்பச் செல்கிறது, ஆனால் சிருஷ்டியை விட்டு மறைந்துவிடுவதில்லை.<br />
<br />
தனித்தன்மையை ஏற்றுக்கொண்ட, ஆனால் தெய்வத்தன்மையை இழந்துவிடாத, இறைவனே ஆன்மா. ஆன்மாவில் தனித்தன்மை பெற்ற ஜீவனும் இறைவனும் எல்லையில்லாக் காலத்திற்கும் ஒன்றாக உள்ளனர். ஆகவே உன்னுடைய ஆன்மாவை அறிவது என்பது இறைவனுடன் ஐக்கியப்படுவதாகும். ஆகவே ஆன்மா செய்ய வேண்டிய வேலை மனிதனை உண்மையான ஜீவனாக ஆக்குதல் என்று சொல்லலாம். <br />
<br />
ஆன்மா நித்யமானது, எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. இந்த திறமையின்மைகள், இயலாமைகளெல்லாம் அது சம்பந்தப்பட்டவரை உண்மையான இருப்புடையவை அல்ல.<br />
<br />
<b style="color: #993399;">வினாடி வினா :</b><br />
<br />
வினா - சுரங்க இரயில் பாதை கொண்ட ஒரே இந்திய மாநிலம் எது ?<br />
<br />
விடை - மேற்கு வங்காளம்.<br />
<br />
<b style="color: #cc33cc;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>பராமரிப்பு இல்லாததால் காணாமல் போகும் ஏரிகள்</b><br />
<br />
<img alt="large_261872.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4ff3b672ce1e&attid=0.3&disp=emb&realattid=ii_130b4fae432a1289&zw" title="large_261872.jpg" /><br />
<br />
நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாய் இருக்கும் கண்மாய்கள், மெல்ல மெல்ல காணாமல் போகும் நிலை தொடர்வதால் கிராம வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அவற்றின் கட்டமைப்பே சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.<br />
<br />
தமிழகத்தின் மேற்பரப்பு நீர்வள ஆதாரம், 853 டி.எம்.சி.,யாகும். இதில் அண்டை மாநிலங்கள் நமக்கும் அளிப்பது 261 டி.எம்.சி., தமிழகத்தில் 75 பெரிய அணைகள், ஏழு சிறிய அணைகள் மூலம் 233.2 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இதில், 13 ஆயிரத்து 710 ஏரிகள், நீர்வளத்துறையினரால் பராமரிக்கப்படுகிறது. கடந்த 2008 -09ம் ஆண்டு கணக்கின் படி, 72.43 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், 18.93 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆற்று கால்வாய் மூலமும், 13.34 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏரிகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மீதம், அதாவது பாதி அளவிற்கு மேல், 39.89 ஏக்கர் நிலம் நிலத்தடி நீர்மட்டத்தையும், இதர நீர் ஆதாரத்தையும் நம்பியே உள்ளன. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் 85 சதவீதம் பயன்படுவதால், அது வேகமாக குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 145 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாப்பு இருக்கிறது. எட்டு ஒன்றியங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்øமையை அடைந்துள்ளது. 57 ஒன்றியங்கள் மிக அபாயகரமாகவும், 33 ஒன்றியங்கள் அபாயகரமான அளவிலும் நீர்மட்டம் உள்ளது. 142 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட காரணம், மழை நீரின் அடிப்படை ஆதாரங்களான ஆறு, குளம், கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததே ஆகும்.<br />
<br />
அத்துடன், கடந்த 50 ஆண்டுகளாக அதிக அளவு ஆழ்குழாயை நம்பி நடத்தப்படும் விவசாயம் முக்கியத்துவம் பெற்றது காரணமாகும். தடுப்பணை அல்லது சிற்றாறுகளை இணைத்து நீர் விரயத்தைத் தவிர்க்கும் புதிய திட்டங்கள் பெரும் அளவில் இல்லை. இதில், ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவை அங்குள்ள கண்மாய்களே. வடமாவட்டங்களில் இவற்றை ஏரிகள் என்றும், தென் மாவட்டங்களில் இவற்றை கண்மாய் என்றும் அழைக்கின்றனர். முன்பு இவற்றை பராமரிக்கும் பணி, அந்தந்த பகுதி மக்களிடமே இருந்தது. ஆனால் இப்போது நடைமுறை சாத்தியம் அல்ல. மேலும், செங்கல்பட்டு ஏரிகள் வளம் மூலம் ஏராளமாக பாசனப் பரப்பும், நெல்விளைச்சலும் இருந்ததாக பிரிட்டிஷார் ஆவணங்கள், சாட்சியம் கூறுகின்றன.<br />
<br />
ஏரிகளை பாதுகாக்க தற்போது பல்வேறு மாநிலங்களில், "பாசனத் தலைவர் சபை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் பாசன வசதி பெறும் நில உரிமையாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இச் சபைக்கு முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தூர் வாருதல், மராமத்து செய்தல், பாசன முறைகள் ஆகியவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகளை பொதுப்பணித்துறையே பராமரித்து வருகிறது. அரசின் வசம் இருந்தும் ஏராளமான கண்மாய்கள், ஆக்கிரப்பாளர்கள் கையில் சிக்கி உருத்தெரியாமல் சிதைந்து வருகின்றன. இதில் அரசியல் தலையீடு அதிகரித்ததால் சீர்குலைவு ஏற்பட்டது. ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை ஏரிகளை பராமரிக்கவும், தூர் வாரவும் கணிசமான தொகை ஒதுக்குகிறது. இருப்பினும், இப்போதும் பெரும்பாலான ஏரிகள் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத் தாமரை போன்ற நீர் உறிஞ்சும் தாவரங்களால் நிறைந்து காணப்படுகின்றன. அவை, சீரமைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.<br />
<br />
இது குறித்து, விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூறியதாவது: முன்பு கண்மாய்களை பாதுகாக்க, "லஸ்கர்' என்பவர்கள் இருந்தனர். இப்போது அது போன்ற முறை இல்லை. இதனால், தண்ணீர் திறப்பு, ஷட்டர் பராமரிப்பு, கரைகள் சீரமைப்பு போன்றவை சரிவர நடப்பதில்லை. சென்னையில் மட்டும் முன்பு நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. 1960, 62ம் ஆண்டுகளில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏரி, ஆற்று பாசனத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஏரிகளில் கொண்டு வரப்பட்ட காடு வளர்ப்பு திட்டம், ஏரிகளில் தூர் வாரப்படாமல் செய்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில், நீர், நில வள மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில், உலக வங்கியிடம் 2,400 கோடி ரூபாய் கடன் பெற்று ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.<br />
<br />
குடிநீர் வசதி, பாசன வசதி, இவைகளை கருத்திற்கொண்டு நீர்நிலைகள் அமைப்பது பற்றி இனி ஒரு ஒட்டுமொத்த அணுகுமுறை தேவை. தடுப்பணைகள், தற்போது இருக்கும் நிர்நிலைகளில் சேரும் மாசு முற்றிலும் தடுக்க அடிப்படை அணுகுமுறை, அதற்கான செயல் திட்டம் தேவை. மேலும், உலக வங்கி போன்ற அமைப்புகளில் இருந்து பெறப்படும் திட்டம் என்றால், அதன் பயன் முற்றிலும் மக்களுக்கு செல்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தினால் ஒழிய, இனி எதிர்வரும் காலங்களில் நீர்நிலைகள் முற்றிலும் மாசற்றதாக காப்பது என்பது சுலபம் அல்ல. நீர்நிலைகள், தேசிய சொத்து என்ற கருத்துடன் அரசு மேற்கொள்ளும் திட்டப்பணிகள் அமைய வேண்டுமே ஒழிய, ஐந்தாண்டுகள் ஆட்சிபுரியும் கட்சிகளின் செயல்திட்டம் அல்ல என்பதும் வெளிப்படையாக அமைய வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது.<br />
<br />
வி. கோபாலகிருஷ்ணன்.<br />
<br />
<br />
*<b> நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு <br />
<br />
<img alt="large_261929.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130b4ff3b672ce1e&attid=0.1&disp=emb&realattid=ii_130b4fa4038758f2&zw" title="large_261929.jpg" /></b><br />
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே, நான்கு தலைமுறையைச் சேர்ந்த, 90 குடும்பங்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.<br />
<br />
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊராட்சி, கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி, சுப்பராய செட்டியார். இவருடைய வாரிசுகள், ஐந்து தலைமுறையை எட்டி விட்டனர். இதில், நான்கு தலைமுறை உறவினர்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குருக்கம்பாளையம், ராயர் பெருமாள் கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரங்கசாமி தலைமையில், இந்த சந்திப்பு நடந்தது. நான்கு தலைமுறையை சேர்ந்த, 90 குடும்பங்களில், 323 பேர் பங்கேற்றனர். கோவை, வாராஹி மணிகண்ட சாமிகள் ஆசி வழங்கி பேசுகையில், "பெரியோரை மதித்தல், அனைவரிடமும் அன்பு செலுத்துதல் ஆகியவை, குடும்பம் சிறக்க உதவும். நாம், நம் குடும்பம் என்ற வட்டத்துக்கு வெளியே வந்து, சமுதாயம், ஊர் என்ற அளவில், முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பல தலைமுறையினர், ஒரே சமயத்தில் சந்திக்கும் இந்நிகழ்ச்சியில், ஆதரவற்றவர்களுக்கு உதவ, மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.<br />
<br />
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: எங்கள் மூதாதையர், 120 ஆண்டுகளுக்கு முன், தேக்கம்பட்டியிலிருந்து பிழைப்புக்காக,கேரள மாநிலம் மண்ணார்க்காடு, கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் அன்னூர் பகுதிக்கு வந்தனர். இதுவரை பெரும்பாலும், வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய தலைமுறையினர், ஆசிரியர் உள்ளிட்ட அரசு பணியிலும், கம்ப்யூட்டர் துறையிலும் நுழைந்து சாதித்து வருகின்றனர். இனி, ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, ஆதரவற்றோருக்கும், வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கும் உதவ, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மூன்று மாநிலங்களிலிருந்து, ஒரு வயது குழந்தை முதல், 90 வயது பாட்டி வரை, பங்கேற்ற இந்த சந்திப்பு, புதிய தலைமுறையினருக்கு, குடும்பம், உறவு குறித்து, புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
<br />
நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.<br />
<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-83696804404920212922011-06-21T08:38:00.001+05:302011-06-21T08:38:55.722+05:30இன்றைய செய்திகள் - ஜூன் , 21 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #33ccff;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு</b><br />
<br />
<img alt="20-kanimozhi1-300.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.1&disp=emb&realattid=ii_130afc999ec8b90a&zw" title="20-kanimozhi1-300.jpg" width="200" /><br />
<br />
டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. இதனால் கனிமொழியால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்ததால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் நிலவியது.<br />
<br />
ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.<br />
<br />
கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்திருந்தது.<br />
<br />
இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும் கனிமொழிக்கும் தொடர்பே இல்லை. கலைஞர் டிவியின் அன்றாட செயல்பாடுகளில் அவர் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் சேர்த்தது தவறு.<br />
<br />
மேலும் கனிமொழி அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.<br />
<br />
இரு தரப்பு வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அதில் கனிமொழி மற்றும்ச ரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.<br />
<br />
அதே நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே ஜாமீன் கோரி அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.<br />
<br />
2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.<br />
<br />
இதனால் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் நீதிபதி சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.<br />
<br />
<b style="color: #33ccff;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* ஒரு ஆப்பிளும் டைனோசரும்...!</b><br />
<br />
<img alt="31-apple-200.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.8&disp=emb&realattid=ii_130afc8cfd2c8588&zw" title="31-apple-200.jpg" /><br />
<br />
ஏ.கே.கான்<br />
<br />
டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.<br />
<br />
என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.<br />
<br />
ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.<br />
<br />
ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.<br />
<br />
ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.<br />
<br />
ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.<br />
<br />
ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.<br />
<br />
ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.<br />
<br />
இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.<br />
<br />
இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.<br />
<br />
எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.<br />
<b><br />
* அமெரிக்க நீதிமன்றம் சம்மன்: நிராகரித்தார் ராஜபக்சே!</b><br />
கொழும்பு: தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
அதை ராஜபக்சே நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.<br />
<br />
இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராகியர் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவர் என்ற முறையில் ராஜபக்சே நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.<br />
<br />
இலங்கை விதிகளின்படி அதிபர் விதிவிலக்கு பெற்றவர் என நீதித்துறை அமைச்சகச் செயலர் சுகதா காம்லத் தெரிவித்துள்ளார்.<br />
<br />
இதுபோன்ற சம்மன்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். எங்களது சட்ட நிலைப்பாடு குறித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த வாரமே தெரிவித்துவிட்டேன் என காம்லத் குறிப்பிட்டார்.<br />
<br />
ஐநா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராஜபக்சே செப்டம்பரில் நியுயார்க் வரவிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.<br />
<br />
ராஜபக்சே அமெரி்க்கா செல்வதை தடுக்க முடியாது:<br />
<br />
இந் நிலையில் ராஜபக்சே அமெரிக்கா செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.<br />
<br />
ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரசு பதவியில் உள்ள தலைவர்களுக்கு விதிவிலக்கு உள்ளதாகவும், இதனால் அவரது பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.<br />
<br />
<b> இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம்!</b><br />
<br />
<img alt="20-internet4-300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.7&disp=emb&realattid=ii_130afc7cef17474c&zw" title="20-internet4-300.jpg" /><br />
<br />
சிங்கப்பூர்: .காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.<br />
<br />
சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.<br />
<br />
இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.<br />
<br />
இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன. இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம்.<br />
<br />
உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.<br />
<br />
இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம். இதற்கான செலவும் அதிகமாகும்.<br />
<br />
அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.<br />
<br />
<b>* தரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை: சீனா அட்டூழியம்<br />
<br />
<img alt="large_260561.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.2&disp=emb&realattid=ii_130afc43ac4da5d5&zw" title="large_260561.jpg" /></b><br />
இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.<br />
<br />
பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.<br />
<br />
சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை. <br />
<br />
*<b> இந்தியாவுடனான பிரச்னைக்கு போரால் தீர்வு காண முடியாது: சொல்கிறார் பாக்., கிலானி<br />
<br />
<img alt="large_261281.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.5&disp=emb&realattid=ii_130afc49f5dd7250&zw" title="large_261281.jpg" /></b><br />
இஸ்லாமாபாத்: ""இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். எந்த ஒரு பிரச்னைக்கும் போரால் தீர்வு காண முடியாது,'' என, பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார்.<br />
<br />
பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி மேலும் பேசியதாவது: இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும், நட்புடன் இருக்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதில், காஷ்மீர் பிரச்னையும் அடக்கம். பிரதமர் மன்மோகன் சிங்கை, பல முறை சந்தித்துள்ளேன். அனைத்து பிரச்னைகளையும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என, அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். காஷ்மீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் வரவுள்ளார். பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பசீருடன், முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சு நடத்துவார். காஷ்மீர் பிரச்னைக்கு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தீர்வு காண வேண்டும் என, சர்வதேச சமுதாயத்திடம், பாகிஸ்தான் வலியுறுத்தும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்கும். இதன் மூலம், சர்வதேச சமுதாயத்தின் நன் மதிப்பு, பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இவ்வாறு கிலானி கூறினார்.<br />
<br />
<b>* பிரிட்டன் பல்கலை வேந்தர் பதவிக்கு மளிகை கடை நடத்தும் இந்தியர் போட்டி</b><br />
கேம்பிரிட்ஜ் : பிரிட்டனில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையின் வேந்தர் பதவிக்கு நடக்கும் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மளிகை வர்த்தகம் செய்து வருபவருமான அப்துல் அராய்ன் என்பவர் போட்டியிடுகிறார்.<br />
<br />
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் நகரில், உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இதன் வேந்தராக, பிரிட்டன் இளவரசர் பிலிப், 1976ல் இருந்து பதவி வகித்து வருகிறார். இம்மாத இறுதியில், இந்த பதவியில் இருந்து, அவர் ஓய்வு பெறவுள்ளதால், புதிய வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கவுள்ளது.<br />
<br />
மிகவும் கவுரவம் வாய்ந்த இந்த பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் அராய்ன் என்பவர் போட்டியிடுகிறார். இவர், பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற அப்துல் அராய்ன், ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இதன்பின், பெரியளவிலான மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்திய உணவு மற்றும் சமையல் பொருட்கள், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேந்தர் பதவிக்கான தேர்தலில், அப்துல் அராய்னை தவிர, சய்ன்ஸ்புரி, பிரயன், மைக்கேல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.<br />
<br />
இது குறித்து அப்துல் அராய்ன் கூறுகையில், "பிரிட்டனில் உள்ள எங்கள் கடையில், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், அடிக்கடி வந்து பொருட்களை வாங்குவார். அவர் எங்களின் வாடிக்கையாளர். கேம்பிரிட்ஜில் படிக்கும் இந்திய மாணவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்' என்றார்.<br />
<br />
<b>* அணுமின் நிலைய பாதுகாப்பு துவங்கியது ஐ.ஏ.இ.ஏ., கூட <br />
<br />
<img alt="large_261534.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.6&disp=emb&realattid=ii_130afc593d5c1c00&zw" title="large_261534.jpg" /></b><br />
டெஹரான் : அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்து பேச, உலகளவில் 150 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,), ஐந்து நாள் கூட்டம் நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது.<br />
<br />
ஜப்பானில், மார்ச் 11ம் தேதி சுனாமி தாக்கியதில், அந்நாட்டின் புக்குஷிமா அணுமின் உலை வெடித்து, அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, உலக நாடுகள் அனைத்தும் அணுமின் உற்பத்தியின் அவசியம் குறித்து பரிசீலிக்க துவங்கியுள்ளன.<br />
<br />
ஜெர்மனியில் உள்ள அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களையும் 2022ல், இழுத்து மூட, அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இத்தாலியில், அணுமின் நிலையங்களை புதுப்பிக்க, அந்நாட்டு பார்லிமென்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது, அணுமின் நிலையங்களை பாதுகாப்பது தொடர்பாக, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.<br />
<br />
இந்நிலையில், ஜப்பானில் சுனாமியால் ஏற்பட்ட அணுமின் உலை வெடிப்பு குறித்தும், எதிர் காலத்தில் உலகளவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பேசவும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஐந்து நாள் கூட்டம், நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது. இக்கூட்டத்தில், 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.<br />
<br />
இதில், குறிப்பாக ஜப்பானில், புக்குஷிமா அணுமின் உலை வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு குறித்து பேசப்பட்டது. இந்த அணு உலை வெடிப்பு தொடர்பான அறிக்கையும், ஐந்து நாட்கள் நடைபெறும் தொடர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<b><br />
* அமைதி பேச்சுக்கு திரும்பும்படி சிரியா மக்களுக்கு அதிபர் அழைப்பு</b><br />
<br />
<img alt="large_261519.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.4&disp=emb&realattid=ii_130afc4d65ac02fd&zw" title="large_261519.jpg" /><br />
<br />
டமாஸ்காஸ் : "சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே, பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தெரிவித்துள்ளார்.<br />
<br />
சிரியா அரசுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக, நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத், தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.<br />
<br />
அப்போது அவர் கூறியதாவது: சிரியா மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்கள் இதை நிறைவேற்ற விடாமல், சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவிலான பேச்சுவார்த்தை சிரியா நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்கும். வன்முறையைத் தொடர்ந்து, துருக்கி நாட்டில் அடைக்கலமானவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். வன்முறையில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். இவர்களது பலி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசவேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஸ்திரத்தன்மை இல்லாமல் வளர்ச்சி இல்லை. வன்முறையால் சீர்திருத்தம் ஏற்படாது.<br />
<br />
சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வர தேசிய அளவில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மற்றொரு குழு ஏற்படுத்தப்படும். ஊழலை ஒழிப்பதில் மூத்த குடிமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்தில் குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளேன். குறிப்பாக, ஜிசிர் அல் சுகுர் பகுதி மக்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.<br />
<br />
சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையால், இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில், ஆயிரத்து 300க்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.<br />
<br />
ரஷ்ய அதிபர் எதிர்ப்பு: லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா ஓட்டளித்தது. இதேபோல், சிரியா மீது ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஆதரித்து ரஷ்யா ஓட்டளிக்காது என, அந்நாட்டு அதிபர் டிமித்ரி மேத்வெதேவ் தெரிவித்தார்.<br />
<br />
<b>* துனீசிய மாஜி அதிபருக்கு 35 ஆண்டு சிறை</b><br />
துனீஸ்: வருமானத்திற்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் துனீ்ஸ் நாட்டின் மாஜி அதிபருக்கும், அவரது மனைவிக்கும் துனீஸ் கோர்ட் 35 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. துனீஸியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அந்நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவியில் இருந்த ஜினி-அல்-அபிதின் பென்அலி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளர். எனினும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், வரும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் சொத்து சேர்த்து என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று துனீஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அதிபர் பென்அலி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவருக்கும் 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், 90 மில்லியன் துனீசியன் தினார் (65.5 மில்லியன் டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டது. வரும் 30-ம் தேதியன்று இந்த தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #33ccff;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* லோக்பால் ஆலோசனையில் நீடிக்கிறது முட்டுக்கட்டை</b><br />
<br />
<img alt="large_261231.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afcaf7c1d2dd1&attid=0.3&disp=emb&realattid=ii_130afc3498635a4a&zw" title="large_261231.jpg" /><br />
<br />
லோக்பால் மசோதா தொடர்பாக நடைபெற்ற மிக முக்கிய கூட்டம் குறித்து, அரசு ஒரு கருத்தையும், அன்னா ஹசாரே தரப்பு வேறொரு கருத்தையும் கூறியுள்ளது. மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக அரசு கூறியுள்ள அதே வேளையில், முக்கிய பிரச்னைகள் அனைத்தும் அப்படியே உள்ளதாக ஹசாரே தரப்பு தெரிவித்துள்ளது.<br />
<br />
மேலும், பிரதமரை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வருவதா, வேண்டாமா என்ற பிரச்னையை தவிர, புதிதாக வேறு இரு பிரச்னைகளும், இரு தரப்புக்கும் முளைத்துள்ளதால் முட்டுக்கட்டை நீடிக்கிறது. லோக்பால் சட்டத்தை விரைவாக தயாரித்திட அன்னா ஹசாரே தரப்பு தீவிரம் காட்டுகிறது. ஆனால், ஹசாரே தரப்பு வைக்கும் முக்கிய ஷரத்துக்களை, அரசு தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். அதில், மிக முக்கியமான ஒன்று, லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரலாமா, வேண்டாமா என்பதே. பிரதமரை கொண்டு வந்தாக வேண்டுமென ஹசாரே தரப்பு வலியுறுத்துகிறது. ஆனால், பதவியில் இருந்து இறங்கிய பின், முன்னாள் பிரதமர் என்ற நிலையில் வேண்டுமானால், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரலாம் என, அரசு தரப்பு சொல்கிறது.<br />
<br />
இந்நிலையில், மத்திய அரசுக்கும், ஹசாரே குழுவுக்கும் இடையேயான மிக முக்கிய ஆலோசனை நேற்று நிதியமைச்சரும், லோக்பால் வரைவு மசோதா கூட்டுக்குழு தலைவரான பிரணாப் முகர்ஜியின் நார்த் பிளாக் அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சமூக பிரதிநிதிகள் தரப்பில், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தவிர ஹசாரே, சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர். அரசு தரப்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.<br />
<br />
"சிக்கல் தீருவதற்கு வாய்ப்பு இல்லை': "நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய திருப்பு முனை' என, அரசு தரப்பில் அமைச்சர் கபில் சிபல் கூறிவிட்டு சென்ற சில நிமிடங்களில், "பிரச்னைகள் எதுவும் தீரவில்லை. அப்படியே உள்ளன ' என ஹசாரே தரப்பில், பிரசாந்த் பூஷன் அதிரடியாக தெரிவித்தார். மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் பிரதமரை, லோக்பாலுக்குள் கொண்டு வருவதா, வேண்டாமா என்பது குறித்து, இக்கூட்டத்தில் பேசப்படவே இல்லை. இந்த விஷயம் தான் இரு தரப்புக்கும் உள்ள பிரச்னையின் ஆணிவேராக கருதப்படுகிறது. இந்நிலையில், லோக்பால் உறுப்பினர் நியமனம் மற்றும் நீக்கம் குறித்த நடைமுறைகளிலும் புதிதாக முட்டல், மோதல் எழுந்துள்ளது. இன்றைய கூட்டத்திலும் கூட சுமூக முடிவு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அனைத்து கட்சி கூட்டமோ அல்லது பார்லிமென்டில் லோக்பால் குறித்து அனைத்து கட்சிகளும் நடத்த போகும் விவாதத்தை தான் இப்போதைக்கு அரசு பெரிதும் நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.<br />
<br />
<b>* மகளிர் மசோதா: 22-ல் அனைத்து கட்சி கூட்டம்</b><br />
<br />
புது தில்லி, ஜூன் 20: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் 22-ம் தேதி கூட்டியுள்ளார்.<br />
<br />
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் விதமாக இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சி தலைவர்களுக்கு மீரா குமார் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த மசோதா, கடந்த 2010 மார்ச் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* தில்லியில் இன்று மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு</b><br />
புது தில்லி, ஜூன் 21: மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கிறார்.<br />
<br />
இந்த மாநாட்டில் மாநில நிதி அமைச்சர்கள், மத்திய நிதித்துறை செயலாளர்கள், மாநில நிதித்துறை செயலாளர்கள், முக்கியத் துறைகளின் நிதி ஆலோசகர்கள், மாநில அக்கவுன்டன்ட் ஜெனரல்கள் பங்கு கொள்கிறார்கள். ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி துவக்கிவைத்து உரையாற்றுகிறார்.<br />
<br />
இந்தியா தற்போது ரொக்கம் அடிப்படையிலான கணக்கு முறையை கடைப்பிடித்து வருகிறது. இதைத் தவிர்த்து தொகை ஏற்றல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 12-வது மற்றும் 13-வது நிதிக்குழு பரிந்துரை அளித்திருந்தது. இது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.<br />
<br />
<b>* ரூபாயின் மதிப்பு சரிவு</b><br />
<br />
மும்பை, ஜூன் 20: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு திங்கள்கிழமை சரிவைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 45 தரவேண்டியிருந்தது.<br />
<br />
பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவும் டாலரின் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.<br />
<br />
மோரீஷஸ் நாட்டுடனான இரட்டை வரிவிதிப்பு குறித்து அரசு பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது. மோரீஷஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் லாபத்துக்கு வரி விதிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடுகளில் பெரும்பகுதி மோரீஷஸிலிருந்துதான் வருகிறது. கடந்த 10-ம் தேதியிலிருந்து அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 41 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.<br />
<br />
வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் ஒரு டாலருக்கு ரூ. 44.87 என்ற நிலையில் இருந்த ரூபாயின் மதிப்பு திங்களன்று வர்த்தகம் முடிவில் 13 காசுகள் சரிந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 45 தரவேண்டியதாயிற்று.<br />
<br />
டாலருக்கு நிகரான யூரோவின் மாற்று மதிப்பும் சரிவைச் சந்தித்தது. கிரேக்க நிதி நெருக்கடிக்கு நிதி உதவி அளிப்பதில் ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டபோதிலும், நிதி அளிப்பது தாமதமாகும் என்பதால் மதிப்பு சரிந்தது.<br />
<br />
வங்கிகளில் எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர்களை வாங்கினர். இதுவும் சரிவுக்கு முக்கிய காரணமாகும்.<br />
<br />
செவ்வாய்க்கிழமை ஒரு டாலருக்கு ரூ. 45.30 வரை தரவேண்டியிருக்கும் என்று இறக்குமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.<br />
<br />
இதனிடையே நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலராக சரிந்தது.<br />
<br />
பங்குச் சந்தையில் ஜிடிஎல் நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இந்நிறுவன மேம்பாட்டாளர்கள் தங்கள் வசம் இருந்த 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துவிட்டதாக வெளியான தகவலால் இந்நிறுவன பங்கு விலைகள் சரிந்தன.<br />
<br />
வர்த்தகம் முடிவில் யூரோவின் மாற்று மதிப்பு ரூ. 64.01 ஆக இருந்தது.<br />
<br />
பவுன்ட் ஸ்டெர்லிங்குக்கு ரூ. 72.73-ம், ஜப்பானிய யென்னுக்கு ரூ. 56.05-ம் தர வேண்டியிருந்தது.<br />
<br />
<b>* வடகிழக்கு மாநிலங்கள் மின் தேவை: உலக வங்கியிடம் 2.5 பில்லியன் டாலர் கடன் கோரிக்கை <br />
</b><br />
வட கிழக்கு மாநிலங்களின் மின் தேவையை நிவர்த்தி செய்ய அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள நீர்வளத்தை ஆதாரமாகக் கொண்டு நீர் மின் நிலையங்கள் அமைத்து 63 ஆயிரம் மெகா வாட் மின்சார உற்பத்தி செய்ய உலக வங்கியிடம் மத்திய எரிசக்தித் துறை 2.5 பில்லியன் டாலர் (ரூ.11,348.5 கோடி) கடன் கோரியுள்ளது.<br />
இத்தகவல் வட கிழக்கு பேரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
“வட கிழக்கு மாநிங்களில், குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் 5=63,257 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அளவி்ற்கு நீர் வளம் உள்ளது. தற்போது 2,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சுபான்சிறீ நீர் மின் திட்டம் வரும் 2013-15ஆம் ஆண்டிற்குள் நிறைவேறிவிடும்” என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்ற வடகிழக்கு பேரவைக் கூட்டம், இவ்வமைப்பின் தலைவரும், வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான பி.கே.ஹண்டிக் தலைமையில் நடைபெற்றது.<br />
<br />
இக்கூட்டத்தில் உலக வங்கியிடம் கடன் கேட்கும் முடிவு எடுக்கப்பட்டது.<br />
<br />
<b>* அமர்நாத் யாத்திரைக்கு 2 லட்சம் பேர் பதிவு </b><br />
அமர்நாத் குகைக் கோயில் புனித யாத்திரை செல்வதற்காக இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.<br />
<br />
இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பதிவு மையங்கள் மூலமாக, இதுவரை 2,19,190 பேர் பதிவு செய்துள்ளனர்.<br />
<br />
பல்டல் பாதை வழியாக புனிதப் பயணம் செல்ல 1,09,018 பேரும், பஹல்கம் பாதை வழியாக செல்ல 1,10,172 பேரும் பதிவு செய்துள்ளதாக அமர்நாத் பயணத்துக்கான பதிவு அதிகாரி அப்துல் ஹமீத் தெரிவித்தார்.<br />
<br />
வருகிற 29 ஆம் தேதியன்று தொடங்கும் அமர்நாத் புனிதப் பயணம், ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* போஸ்கோ பிரச்சனை: நிலம் கையகப்படுத்துவது நிறுத்தம்</b><br />
ஒரிஸ்ஸாவில் போஸ்கோ இரும்புத் தொழிற்சாலை அமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூரில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது.<br />
<br />
ஆனால் இத்திட்டத்துக்கு பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.<br />
<br />
இந்நிலையில் போஸ்கோ தொழிற்சாலைக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணி ஒப்பந்தம் வெளியூர் நபர்களிடம் வழங்கப்படும் என்ற தகவலால், கூட்டுக் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.<br />
<br />
கூட்டுக் நடவடிக்கைக் குழு தலைவர் அனடி ரெளட் தனது மகன் மூலம் வெளியூர் ஒப்பந்ததாரரை ஏற்பாடு செய்ததாக கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.<br />
<br />
இதையடுத்து, அதன் தலைவராக இருந்து வந்த அனடி ரெளட், திடீரென தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார். <br />
<br />
<b>* சென்னையில் சுழற்சி முறை மின் தடை அறிவிப்பு ரத்து</b><br />
சென்னை, ஜூன் 20: வடசென்னையில் புதிய மின்நிலையங்கள் அமைக்கும் பணிக்கு, சென்னைக்கு வரும் மின்சாரம் பயன்படுத்தவிருப்பதால் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.<br />
<br />
÷வடசென்னையில் உள்ள வல்லூரில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 யூனிட்டுகள் அமைய உள்ளன. இந்தப் பணிகளுக்காக நெல்லூரில் இருந்து அலமாதிக்கு செல்லும் பாதையில் செல்லும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய காரணத்தினால் சென்னையில் பற்றாக்குறை ஏற்படும்.<br />
<br />
இதனால் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 4 மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:<br />
<br />
தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வட சென்னை வல்லூருக்கு அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான 400 கிலோ வாட் மின் தொடர் இணைப்பு பணிகள் தொழில்நுட்ப காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.<br />
<br />
மேலூர், மணலி, சிப்காட் 1 மற்றும் 2, திருத்தணி, பாலசீவரம், திருவள்ளூர், மோசூர், பல்லூர் ஓரிக்கை, ஓரகடம், பெருங்குடி, ஈ.டி.எல்., கடப்பேரி, கோடம்பாக்கம், திருமங்கலம், போரூர், புழல், மாத்தூர், திருமுல்லைவாயல், துரைநல்லூர், ராஜ்பவன், திருவான்மியூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பாடி, முகப்பேர், பெரியார் நகர், மேனாம்பேடு, சிட்கோ, அண்ணா நகர், ஆவடி, அலமாதி, பஞ்செட்டி, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம், கடப்பேரி, அரும்பாக்கம், மதுரவாயல், எஸ்.ஏ.எப். கேம்ஸ், வள்ளுவர் கோட்டம், உஸ்மான் சாலை, டைடல் பார்க், டி.சி.எஸ்., நொளம்பூர், செம்பரம்பாக்கம், கே.கே. நகர், ராமாபுரம், எஸ்.ஆர்.எம்.சி., ஆலந்தூர், நங்கநல்லூர், மேற்கு மாம்பலம், தில்லை கங்கா நகர், கிண்டி, பல்லாவரம், மாம்பலம், ஆர்.ஏ. புரம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது.<br />
<br />
மேலும் புதிய மின்நிலையப் பணிகள் தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #33ccff;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
*<b> மனநலம் பாதித்தோருக்கு சிகிச்சை: களமிறங்கும் திருப்பூர் போலீசார் :</b><br />
<br />
திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் திருப்பூர் மாவட்ட போலீசார் களமிறங்கியுள்ளனர். அவர்களை பற்றிய தகவலை பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குதெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:கவனிக்க ஆளில்லாமல், ஆதரவற்ற நிலையில் ரோடுகளில் சுற்றித்திரிபவர்கள்; மற்றவர்களை கண்டால் அடிப்பது, துரத்துவது, கற்களால் அடிப்பது என பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் என இரு வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன், மூலனூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கல்லால் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்ட அளவில் ஒரு கமிட்டி உருவாக்கப்படும். போலீசுடன், பொதுநல அமைப்புகளும் இணைந்து பணியாற்றும். தங்கள் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு திரியும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது "மென்டல் ஹெல்த் ஆக்ட்' சட்டத்தின் படி ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும்; இது, அவர்கள் குற்றவாளி என்ற நோக்கத்தில் அல்ல; அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினால், அவர் மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்ல உத்தரவிடுவார்; அவர் கொடுக்கும் சான்றிதழுடன், மீண்டும் அந்நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்து சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். மூலனூரில் கொலை செய்த மனநலம் குன்றிய பெண், இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட உள்ளார். பொதுமக்களுக்கு தொல்லை தரும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துவக்க நிலையிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம், சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்பை துவக்கத்திலேயே தடுக்க முடியும்; மற்றவர்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படும், என்றார். லாட்ஜ், ஓட்டல்களில் சோதனை நடத்த முடிவு ""திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை, "பார்ம் சி' மூலம் தெரிவிக்க, ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; இதுவரை யாரும் "பார்ம் சி' தரவில்லை. லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்படும். அப்போது, வெளிநாட்டினர் தங்கியிருப்பது தெரியவரும் பட்சத்தில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி., தெரிவித்தார்.<br />
<br />
*<b> அதிகாரிகளின் தொடரும் அலட்சியத்தால் பராமரிப்பின்றி முத்துக்குமாரசுவாமி கோவில்</b><br />
<br />
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் உடைந்துள்ள கோவில் பிரகார சிமென்ட் தரை சீரமைக்கப்படாமல் உள்ளது. பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹாரா திருசதி பூஜைகள், பிரதோஷம், கிருத்திகை, தை மாதம் பூசம் உற்சவம் என நடப்பதால் உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமாக சந்தைதோப்பு, கடைகள், கோவில் இடத்தில் வீடுகட்டியுள்ளவர்கள் வாடகை மற்றும் நிலத்திற்கான குத்தகை என ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இக்கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. கோவில் முழுவதும் பிரகார பகுதிகளில் பல இடங்களில் குப்பைகொட்டி கிடப்பதால் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. சிமென்ட் தரை சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றிவர சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் கோவில் பிரகார பகுதியில் மின்விளக்கு எரிவதில்லை. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை வருவதே அரிதாக இருப்பதால் பக்தர்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற நிலை உள்ளது. கோவிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br />
<br />
<b style="color: #33ccff;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>பித்தப் பிரச்சனைகள் தீர எளிய வழிகள்</b><br />
<br />
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் போன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா? சாப்பிட்டால் ஜீரணமாகுமா? நெஞ்சு கறிக்குமா? எதுக்கிக்கொண்டே இருக்குமா? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.<br />
<br />
இந்த பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும், அதனை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்போம்.<br />
<br />
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.<br />
<br />
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.<br />
<br />
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.<br />
<br />
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.<br />
<br />
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.<br />
<br />
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.<br />
<br />
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.<br />
<br />
அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.<br />
<br />
பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.<br />
<br />
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.<br />
<br />
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.<br />
<br />
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.<br />
<br />
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். <br />
<br />
<b style="color: #00cccc;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
*<b> சென்செக்ஸ் 364 புள்ளிகள் சரிவு </b><br />
<br />
மும்பைப் பங்குச் சந்தையில் இன்றும் சரிவு நிலையே காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 363.90 புள்ளிகள் சரிந்து 17,506.63 புள்ளிகளாக நிறைவுற்றது.<br />
<br />
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு அதிகபட்சமாக 108.50 புள்ளிகள் சரிவடைந்து முடிவில் 5,257.90 ஆக உள்ளது.<br />
<br />
ஆக்சிஸ் பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் பங்கு விலைகள் சற்றே ஏற்றம் கண்டன.<br />
<br />
ஆர்.காம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நிறுத்தப்படவுள்ளதால் அதன் விலைகள் சரிவு கண்டன.<br />
<br />
பெரும்பாலான துறைகளின் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன.<br />
<br />
<b>* பவுன்: ரூ. 56 உயர்வு</b><br />
<br />
சென்னை, ஜூன் 20: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது.<br />
<br />
சனிக்கிழமை ஒரு பவுன் ரூ. 16,920-ஆக இருந்தது. திங்கள்கிழமை பவுன் ரூ. 16, 976-க்கு விற்பனையானது.<br />
<br />
திங்கள்கிழமை விலை:<br />
<br />
ஒரு பவுன்: ரூ. 16,976.<br />
<br />
ஒரு கிராம்: ரூ. 2,122.<br />
<br />
<br />
<b style="color: #33ccff;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> கிங்ஸ்டன் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 34/1 </b><br />
<br />
கிங்ஸ்டன்:இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 34 ரன்னிற்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவை விட 212 ரன்கள் பின்தங்கி உள்ளது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், கிங்ஸ்டன் ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது. சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் மீண்டும் அணிக்கு திரும்பினர். தமிழக வீரர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் ஆகிய மூவரும், அறிமுக வீரர்களாக களமிறங்கினர். "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரெய்னா 82, ஹர்பஜன் 70, டிராவிட் 40 ரன் சேர்த்தனர்.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எட்வர்டு 4 விக்கெட்டுகளையும் ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஆட்டம் முடிவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது.<br />
<br />
<b>* விம்பிள்டன் டென்னிஸ்: நடால் வெற்றி</b><br />
<br />
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் "நம்பர்-1' வீரர் ஸ்பெயினின் நடால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில், 125வது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் மைக்கேல் ரசலை சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-4 என நடால் வென்றார். தொடர்ந்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், அடுத்த இரு செட் களையும் 6-2, 6-2 என கைப்பற்றினார். முடிவில் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற நடால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். <br />
<br />
<b style="color: #00cccc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<b style="color: #33ccff;">* அருள்மிகு விஜயாஸனர் திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : விஜயாஸனர் ( பரமபத நாதன்)<br />
உற்சவர் : எம்மடர் கடிவான்<br />
அம்மன்/தாயார் : வரகுண வல்லி, வரகுணமங்கை<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : வரகுணமங்கை<br />
ஊர் : நத்தம்<br />
மாவட்டம் : தூத்துக்குடி<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
பாடியவர்கள்:<br />
<br />
மங்களாசாஸனம்<br />
<br />
நம்மாழ்வார்<br />
<br />
<b>புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று <br />
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி <br />
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப <br />
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.</b><br />
-நம்மாழ்வார்<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.<br />
<br />
இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்<br />
<br />
தலபெருமை:<br />
<br />
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி <br />
<br />
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்<br />
<br />
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)<br />
<br />
3. செவ்வாய் : திருக்கோளுர் <br />
<br />
4. புதன் : திருப்புளியங்குடி <br />
<br />
5. குரு : ஆழ்வார்திருநகரி <br />
<br />
6. சுக்ரன் : தென்திருப்பேரை <br />
<br />
7. சனி : பெருங்குளம் <br />
<br />
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்களம்) <br />
<br />
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி <br />
<br />
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். <br />
<br />
இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம். <br />
<br />
தல வரலாறு:<br />
<br />
நத்தம் என்று சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்த்தனைப்படி விஜயõஸனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
வைகுண்ட ஏகாதசி<br />
<br />
திறக்கும் நேரம்<br />
<br />
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #33ccff;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #33ccff;">சலனத்தை வெல்லும் வழி - ரமணர்</b><br />
<br />
வெளி விஷயங்களையெல்லாம் நிலையற்று நசிப்பதை உணர்ந்தால் அதனால் விஷய விரக்தி உண்டாகும். அதுவே (ஆன்ம) விசாரணையே மிக முக்கியமான முதற்படி. அவ்விசாரணையால் உலக இன்பங்கள், செல்வம், பெயர், புகழ் முதலியவற்றில் துச்ச புத்தி உண்டாகும். இவ்விதம் விரக்தியுற்ற புத்திக்கு 'நான் யார்' என்னும் விசாரணை வழி தெளிவாய் விளங்கும்.<br />
<br />
'அஹம்' விருத்தியின் உற்பத்தி ஸ்தானம் இதயமே. அதுவே அடைவதற்குரிய இடம். சாதகனது அமைப்பு விசாரத்திற்கு இடங்கொடாவிடில் பக்தி மார்க்கத்தை அனுசரிக்கலாம். ஈசனிடமோ, குருவினிடமோ அல்லது தர்மம், பரோபகாரம், அன்பு, அழகு என்னும் லட்சியங்களிலோ முழு மனமும் ஈடுபட்டால் பிற பற்றுதல்கள் குன்றி ஏகாக்கிரதை உண்டாகும்.<br />
<br />
<b style="color: #33ccff;">வினாடி வினா :</b><br />
<br />
வினா - 100 சதவிகித மின் வசதி பெற்ற வட கிழக்கு எல்லைபுற இந்திய மாநிலம் எது ?<br />
<br />
விடை - நாகலாந்து<br />
<br />
<b style="color: #33ccff;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>* சிறுவனை பாடாய்படுத்தும் தோல் எரிச்சல் : மேல்சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு<br />
<br />
<img alt="large_261358.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afe5cd176c1ef&attid=0.1&disp=emb&realattid=ii_130afddac51d7567&zw" title="large_261358.jpg" /></b><br />
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டே வாழும் வினோத நோயால் தாக்கப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன், மேல்சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கிறார். முத்துப்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரது மகன்கள் பாரதி, 8, கீர்த்திவாசன், 7. கீர்த்திவாசன் முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரது உடல் தோலில் இருக்க வேண்டிய ஆறு அடுக்கில், நான்கு அடுக்குகள் குறைவாக உள்ளன. இதனால், இவருக்கு வியர்ப்பதில்லை. வெப்பம் அதிகமாகும் போது, உடலில் கொப்புளத்துடன் எரிச்சல் ஏற்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உடலில் தண்ணீர் ஊற்றும் நிலை உள்ளது. மழை, குளிர் காலங்களில் கூட மாற்றமில்லை.<br />
<br />
தந்தை குமார் கூறியதாவது: பிறந்ததிலிருந்து இந்த நோய் இருந்தது. அடிக்கடி காய்ச்சல் வரும். பல டாக்டர்களிடம் காண்பித்தோம். இறுதியில் திண்டுக்கல் மருத்துவமனையில் காண்பித்த போது, அங்கிருந்த கனடா டாக்டர் ஒருவர், "தோல் பிரச்னை' என கண்டுபிடித்தார். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். குளிர் பிரதேசத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறார். பண பற்றாக்குறையால் எங்கும் செல்லவில்லை. யாராவது எனது மகனுக்காக உதவ வேண்டும். இதற்காக, கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு குமார் கூறினார். இவருக்கு உதவ விரும்புவோர் 97889 91417ல் தொடர்பு கொள்ளலாம்.<br />
<br />
<b style="color: #33ccff;">* இசைய வைக்கும் இசை: இன்று சர்வதேச இசை தினம்</b><br />
<br />
<img alt="large_261238.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130afe5cd176c1ef&attid=0.3&disp=emb&realattid=ii_130afdfa3faef0e7&zw" title="large_261238.jpg" /><br />
<br />
இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.<br />
<br />
அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது, தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம், இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.<br />
<br />
தோன்றிய விதம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது.<br />
<br />
இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள், உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை.<br />
<br />
இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாசாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசைக்கும் பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது. இசை மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல இசைக்கலைஞர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.<br />
<br />
<b>அறிஞர்களின் பார்வையில்...<br />
<br />
* இசை ஒரு அன்பின் உணவு; விளையாடுங்கள் - ஷேக்ஸ்பியர்<br />
* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்<br />
* இசை, உன் மனதை வெளிக்கொண்டு வரவேண்டும் - மிஸி எலியாட்<br />
* இசை, உணர்ச்சியின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய்<br />
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ<br />
* இசை, உலகை மாற்றும். ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ.</b><br />
இசையில் வசமாகா இதயம் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்காத பெரும் செல்வம் இசை. இசையில் வசமாகாத ஜீவராசிகள் உண்டோ. நம்மை மகிழ்விப்பதும், மயங்க வைப்பதும் இசை. பல வடிவங்களில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இசைக் கலையில் சாதித்தவர்கள் பலர்.<br />
<br />
இசைப்பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த இசைவித்தகர்கள் பலர். உலக இசை தினமான இன்று, இசையை மூச்சாக சுவாசித்து, சாதித்துக்கொண்டிருக்கும் சிறுவனை பற்றி அறிந்து கொள்வோம். மதுரை திருப்பரங்குன்றத்தில், தவில் வாசிப்பதில் திறமையை காட்டி வருகிறார் 11 வயது சிறுவன் சிவராம கணேசன். இவரது தந்தை தவில் வித்வான் ஆலடி அருணா. தாய் கிருஷ்ணவேணி நாதஸ்வர கலைஞர். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரவேண்டுமா என்பது போன்று, சிவராம கணேசன் மூன்றரை வயதில் தவில் வாசிக்க துவங்கினார். ஆலடி அருணா, கச்சேரி இல்லாத நாட்களில் வீட்டில் தினம் மாலையில் தவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். அவர் வாசிப்பதை அருகில் அமர்ந்து கூர்மையாக கவனித்த மூன்றரை வயது சிவராம கணேசன், ஒருநாள் தந்தையின் தவிலில் வாசித்தார். தாளம் தப்பாமல் வாசிப்பதை கவனித்த தந்தை, ஆச்சரியம் அடைந்தார். சில நாட்கள் மகனுக்கு தவில் வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். ஒரே மாதத்தில் தேர்ந்த கலைஞன் போன்று வாசித்த சிவராம கணேசனின் தவில் கச்சேரி அரங்கேற்றம், மதுரையில் 2003ல் நடந்தது. கும்பாபிஷேகங்கள் உட்பட இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் 10க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றார். 2006ல் கன்னியாகுமரியில் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவராம கணேசனின் வாசிப்பை ரசித்த, அப்துல்கலாம் அவரை பாராட்டினார்.<br />
<br />
சிவராம கணேசன் கூறுகையில், ""தவில் இசையில் புதுமைகள் செய்ய வேண்டும். தவில் இசையில் ஆராய்ச்சிகள் செய்து, அதன் பெருமையை உலககெங்கும் பரப்ப வேண்டும். சென்னை இசை விழாக்களில் பங்கேற்க வேண்டும். இசைப்பள்ளி துவங்கி, இசையில் ஆர்வமுள்ள ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினருக்கு இலவசமாக இசையை கற்பிக்க வேண்டும். வலையபட்டி சுப்பிரமணியன், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், தஞ்சாவூர் கோவிந்தராஜ், திருவாவழத்தூர் சூரியமூர்த்தி ஆகியோர்களைப் போன்று தவிலில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக வர வேண்டும். படிப்பில் கம்ப்யூட்டர் பொறியாளராக வேண்டும்,'' என்றார். 20க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களும், பல கேடயங்களும் பரிசாக பெற்றுள்ள சிவராம கணேசனின் இசைப் பயணம் தொடர் சாதனைப் பயணமாக அமையட்டும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - சமாச்சார், வெப்துனியா, தின மலர், தின மணி.<br />
<br />
<br />
<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-38728938262874900872011-06-20T07:15:00.000+05:302011-06-20T07:15:39.836+05:30இன்றைய செய்திகள் - ஜூன் 20, 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #6666cc;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>* லோக்பால் மசோதா குறித்து அடுத்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டம்</b><br />
டெல்லி: லோக்பால் மசோதா குறித்து முடிவெடுக்க அடுத்த மாதத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தும் எனத் தெரிகிறது.<br />
<br />
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இக்கூட்டம் நடைபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் லோக்பால் சட்டத்தில் பிரதமர் பதவியையும் சேர்க்கலாமா என்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன.<br />
<br />
ஜூன் 30ம் தேதிக்குள் லோக்பால் மசோதா கூட்டு வரைவுக் கமிட்டி தனது மசோதாவை உருவாக்கும் வேலையை முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வரைவு மசோதா வைக்கப்பட்டு விவாதிக்க்படும்.<br />
<br />
இதற்கிடையே, கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.<br />
<br />
<b style="color: #6666cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* இணையவழித் தமிழ்ப்பாடங்கள்</b><br />
<br />
<img alt="19-dr-mu.elangovan300.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.6&disp=emb&realattid=ii_130aa81446c026ed&zw" title="19-dr-mu.elangovan300.jpg" width="200" /><br />
<br />
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் வழங்கிய ஆய்வுரை:<br />
<br />
தமிழ்மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் சொத்தாக இம்மொழி உள்ளது. தமிழ்மொழியைக் கற்கவும், தமிழ் இலக்கியங்களை - இலக்கணங்களைக் கற்கவும் அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பங்களிப்பால் இணையத்தில் செய்திகள் பலவகையில் உள்ளிடப்பட்டுள்ளன. இவை இன்னும் சில தளங்களில் மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன.<br />
<br />
தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழம்.நெட் தளங்களிலும், பிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தளங்களிலும் தமிழ் எழுத்துகளை அறியவும், படிக்கவும், எழுத்துகளைக் கூட்டிச் சொற்களைப் படிக்கவும் , சொல்வளம் பெருக்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் வழியில் தமிழ் படிக்கவும், ஆங்கில வழியில் தமிழ் படிக்கவும் வசதிகள் உள்ளன.<br />
<br />
பல்கலைக்கழகங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றித் தனி மாந்தர்களும் தமிழ்க்கல்வியைக் கணினி, இணையத்தில் கற்க இத்துறையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிலரின் முயற்சி இணையத்தில் இருப்பதால் உலக அளவில் பலராலும் பயன்படுத்த முடிகின்றது. சிலரின் முயற்சி குறுவட்டுகளில் மட்டும் இருப்பதால் உலக அளவில் அவர்களின் துணையில்லாமல் பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுவட்டில் தமிழ்க்கல்வியைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் இணையத்தில் ஏற்ற வேண்டும்.<br />
<br />
<a href="http://publication.samachar.com/topstorytopmast.php?sify_url=http://news.google.com/news/url?sa=t&fd=R&usg=AFQjCNEKIPKSZEGUGADy-f41cYDUpxY03Q&url=http://thatstamil.oneindia.in/news/2011/06/19/admk-govt-gets-sound-response-people-schemes-aid0091.html" target="_blank">மேலும் வாசிக்க:</a><br />
<br />
<b>* உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழக புதிய தலைவராக டாக்டர் எஸ்.ராஜசேகரன் தேர்வு <br />
<br />
<img alt="19-dr-rajasekharan300.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.8&disp=emb&realattid=ii_130aa8044221cbf8&zw" title="19-dr-rajasekharan300.jpg" width="200" /></b><br />
கோவை: உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக கோவையைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராஜசேகரன் பொறுப்பேற்றார்.<br />
<br />
கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குநராக இருப்பவர் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரான எஸ். ராஜசேகரன்.<br />
<br />
இவர் உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.<br />
<br />
கனடாவை தாயகமாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி கழகம், உலகில் நடக்கும் தண்டு வட ஆய்வு, ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.<br />
<br />
முதுகுத் தண்டுவட ஜவ்வு தேய்மானத்தை சரி செய்வது குறித்து எஸ். ராஜ சேகரன் மேற்கொண்ட ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த அமைப்பில் உறுப்பினரானார்.<br />
<br />
அவரது அயராத ஆராய்ச்சியின் வெற்றியின் காரணமாக தற்போது அந்த அமைப்பின் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். ஸ்வீடனில் நடநந்த நிகழ்ச்சியில், உலக தண்டுவட ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.<br />
<br />
இதற்கு முன்பாக, அமெரிக்காவின் ருஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹவார்ட் இப் பொறுப்பை வகித்து வந்தார்.<br />
<br />
உலக அளவில் மருத்துவத்துறையின் மிக முக்கியமான இப் பதவிக்கு ஒரு தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.<br />
<br />
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு உலக தண்டு வட ஆராய்ச்சிக் கழகத்தின் விருதையும் டாக்டர் ராஜசேகரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.<br />
<br />
<b>* அனுபவங்களை புத்தகமாக எழுத, வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஹெட்லி ஆசை!<br />
<br />
<img alt="19-headley300.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.3&disp=emb&realattid=ii_130aa83554e5f45c&zw" title="19-headley300.jpg" width="200" /></b><br />
சிகாகோ: தனது அனுபவங்களை புத்தகமாக எழுதவும், வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும் பாகிஸ்தானிய அமெரிக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி விருப்பம் தெரிவித்துள்ளானாம்.<br />
<br />
மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நேரடித் தொடர்புடையவன் ஹெட்லி. இவனை சிகாகோவில் வைத்து அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவனுடன் பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணாவும் கைது செய்யப்பட்டான்.இதில் ராணா வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ராணாவுக்கு எதிராக, அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியுள்ளான் ஹெட்லி.<br />
<br />
ராணாவுக்கு எதிராக அவன் அளித்த சாட்சியத்தின்போது இந்தியாவைக் குறி வைத்து பாகிஸ்தானும்,அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு எப்படி செயல்பட்டு வருகின்றன என்பதை புட்டுப் புட்டு வைத்தார்.<br />
<br />
இந்த நிலையில் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட விரும்புகிறானாம் ஹெட்லி. அதேபோல தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும் அவன் விரும்புகிறானாம்.<br />
<br />
மேலும் இஸ்லாம் குறித்த உலக மக்களுக்குப் போதிக்கவும் விரும்புகிறான். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இதைச் செய்யும் திட்டத்தில் உள்ளானாம் ஹெட்லி. தனக்குப் பின்னர் தனது குழந்தைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் விரும்புகிறான் ஹெட்லி.<br />
<br />
இதுகுறித்து ராணாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையின்போது சமீபத்தில் ஆஜரான ஹெட்லி கூறுகையில், இஸ்லாம் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இதை துடைக்க நான் விரும்புகிறேன். இதனால் இஸ்லாம் குறித்து உலகுக்கு போதிக்க நான் விரும்புகிறேன். இதை வருங்காலத்தில் எனது பிள்ளைகளும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.<br />
<br />
எனது மனைவி சாஷியாவை, தினசரி பைபிள் மற்றும் திருக்குரானைப் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.<br />
<br />
எதிர்காலத்தில் எனது அனுபவங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் உள்ளது. அதேபோல எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளான் ஹெட்லி.<br />
<br />
<b>* ராஜபட்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன</b><br />
கொழும்பு, ஜூன் 19:இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றமொன்று சம்மன் அனுப்பியுள்ளது.<br />
<br />
"சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அமெரிக்கப் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர்கள் இலங்கை அதிபரிடம் 3 கோடி டாலர் (ரூ. 134 கோடி) நஷ்டஈடு கோரியுள்ளதாகத் தெரிகிறது.<br />
<br />
ஹேக் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அதிபருக்கான, சம்மன் இலங்கை நீதியமைச்சகத்தின் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
இலங்கையில் நடைபெற்ற சட்டவிரோதச் செயல்களால் இறந்த 3 மாணவர்களின் பெற்றோர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழியில் பதுங்கியிருந்த தங்களது உறவினர்கள் எறிகணைத் தாக்குதலில் பலியானதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.<br />
<br />
ஏற்க மறுப்பு<br />
<br />
இதனிடையே இந்த சம்மனை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்க நீதிமன்றம் முன் தான் ஆஜராக முடியாதென்றும் ராஜபட்ச அறிவித்துள்ளார். அதிபர் என்ற முறையில் தனக்கு விலக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது நிலையை தெரிவித்து ராஜபட்ச, கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை நீதித்துறை செயலாளர் சுஹதா கமலத் தெரிவித்தார்.<br />
<br />
<b>* ஆங் சானுக்கு அகவை 66</b><br />
<br />
<img alt="anng.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.5&disp=emb&realattid=ii_130aa8266a52f873&zw" title="anng.jpg" /><br />
<br />
இளைய மகன் கிம் ஆரிஸýடன் மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சி.<br />
யாங்கூன், ஜூன் 19: ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் உலக மக்களுக்கெல்லாம் இன்னமும் முன் மாதிரியாகத் திகழும் மியான்மர் நாட்டுத் தன்னிகரில்லாத் தலைவி ஆங் சான் சூச்சி தன்னுடைய 66-வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.<br />
<br />
ஆம் இந்த முறை உண்மையிலேயே அவருக்கு இது கொண்டாட்டம்தான். மியான்மர் ராணுவ அரசால் எப்போது பார்த்தாலும் சிறையிலும் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டு வந்த இந்தச் சிறைப் பறவை இந்த ஆண்டுதான் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
அதைவிட முக்கியம் இந்தத் தலைவி தன்னுடைய இளைய மகனை பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்தித்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்.<br />
<br />
அதற்காகவே யாங்கூன் விமான நிலையத்துக்கு காலையிலேயே சென்றுவிட்டார். அவருடைய மகன் கிம் ஆரிஸ் இப்போது பிரிட்டனில் வசிக்கிறார்.<br />
<br />
ராணுவ ஆட்சியாளர்களால் எப்போதும் சிறை வைக்கப்பட்டிருந்த தன்னுடைய தாயை விமான நிலையத்திலேயே பார்த்தும் கிம் ஆரிஸின் கண்கள் பனித்தன. ஆங் சானுக்கும்தான். ஆயிரக்கணக்கான மியான்மர் மக்களையே தன்னுடைய குழந்தையாக பாவித்து அவர்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடிவரும் இந்தத் தாய் தன்னுடைய மகன் விமான நிலையத்தில் தந்த முத்தத்தையே விலைமதிக்க முடியாத பரிசாக எண்ணி மகிழ்ந்தார்.<br />
<br />
இந்த ஆண்டு சுதந்திரமாக இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பயனுற திட்டமிட்டிருக்கிறார். பெüத்த பிட்சுகளுக்கு வீட்டிலேயே விருந்து படைக்கிறார். பிறகு கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளை நேரில் பெறுகிறார். பிறகு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு தோட்டத்தில் எளிமையான விருந்து அளித்து மகிழ்கிறார்.<br />
<br />
உலக வரலாற்றில் நெல்சன் மன்டேலாவுக்கு அடுத்தபடியாக அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஒரே தலைவி ஆங்சான் சூச்சி என்றால் மிகையாகாது.<br />
<br />
கடந்த 22 ஆண்டுகளாக சிறையிலேயே அதிக நாள்களைக் கழித்திருக்கிறார். 15 பிறந்த நாள்களின்போது சிறையிலேயே இருந்திருக்கிறார்.<br />
<br />
ஆங் சான் சூச்சி 1945-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அப்போதைய ரங்கூனில் பிறந்தார். அந்த ஊர்தான் இப்போது யாங்கூன் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் பர்மா என்பது மியான்மர் என்று மாற்றப்பட்டுவிட்டது.<br />
<br />
1962-ம் ஆண்டு முதல் மியான்மரில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. உலகில் எந்தப் பகுதியிலும் ஜனநாயகம் நசுக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று பேசும் வல்லரசு நாடுகள்கூட இந்த ராணுவ ஆட்சியாளர்களை ஒன்றும் செய்வதில்லை.<br />
<br />
இந்த முறை நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங்சான் சூ கியியின் கட்சி போட்டியிடவில்லை. அதனால் ஆட்சியாளர்கள் தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரை விடுதலை செய்துவிட்டனர். இப்போது நாட்டை அவர்களுடைய கைப்பாவைதான் ஆட்சி செய்கிறது. இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த தலையாட்டி பொம்மைகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாட்டின் தûûமை ராணுவத் தளபதியே நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்.<br />
<br />
ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்ற ஆசை மக்களிடம் இருந்தாலும் என்ன காரணத்தாலோ ராணுவத்தை எதிர்த்து நிற்க துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள். ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு அஞ்சி பணிந்துவிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனவே இந்த முறை நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய கோரிக்கைகளுக்கு மக்களிடம் ஆதரவைத் திரட்ட ஆங் சான் சூ கியி தீர்மானித்திருக்கிறார். ஆனால் ராணுவ ஆட்சியாளர்கள் அவரை அப்படி வெளியே போக விடுவார்களா அல்லது மீண்டும் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்துவிடுவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.<br />
<br />
ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைக்கூட அகிம்சா முறையில் நடத்துவதால் 1991-ம் ஆண்டு, சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆங்சான் சூ கியிக்குத் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டார் என்பதற்காகவே அவரை இப்போது விடுதலை செய்திருக்கிறார்கள் என்று தலைநகர் வட்டாரங்கள் கூறுகின்றன. இது உண்மையாகவும் இருக்கலாம்.<br />
<br />
<br />
<b style="color: #6666cc;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க புதிய குழு: பிரதமர் உத்தரவு</b><br />
புது தில்லி, ஜூன் 18: ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கு இடையேயான எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு ஒப்பந்தத்துக்கு காரணமான தனிநபர்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் பிரதியுஷ் சின்ஹா தலைமையிலான குழு ஒன்றையும் அவர் நியமித்துள்ளார்.<br />
<br />
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட தொழில்நுட்ப, வர்த்தக மற்றும் நிதி ஒப்பந்தங்கள் குறித்து பி.கே.சதுர்வேதி தலைமையிலான குழு, ஏற்கெனவே விசாரித்து கடந்த மார்ச் 12 ஆம் தேதி பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.<br />
<br />
பிரதியுஷ் சின்ஹா தலைமையிலான விசாரணைக் குழு, இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தும். வரும் ஜூலை இறுதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் பிரதமர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.<br />
<br />
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் ஏவப்பட உள்ள ஜி சாட்-6 மற்றும் ஜி சாட் -6ஏ ஆகிய விண்கலங்கள் மூலம் பெறப்படும் 70 மெகா ஹெர்ட்ஸ் திறனுள்ள எஸ் பாண்ட் அலைக்கற்றைகளை தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்வதெனவும், இதற்காக, அந்த நிறுவனம் 1,350 கோடி ரூபாயை 12 ஆண்டுகளில் திருப்பி செலுத்துவதெனவும் கடந்த 2005-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.<br />
<br />
இதுபற்றி ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தகவலையடுத்து, நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்தது.<br />
<br />
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.<br />
<br />
தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் சொந்தக்காரர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அறிவியல் செயலாளர் எம்.ஜி.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* பாஜக தலைவர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது<br />
</b><br />
<br />
டேராடூன்,ஜூன் 19: பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. அதில் விமானியும், என்ஜினீயரும் படுகாயமடைந்தனர்.<br />
<br />
இமாலயத்தில் உள்ள சார்டம் புண்ணிய தலத்துக்கு நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 ஹெலிகாப்டரில் பத்ரிநாத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.<br />
<br />
அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் பிற்பகல் 1 மணிக்குத் தரையிறங்கியது. கட்கரியும் அவரது குடும்பத்தினரும் இறங்கி புண்ணிய யாத்திரை சென்றனர். அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து அந்த 3 ஹெலிகாப்டர்களும் ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து சகஸ்திரதாரா ஹெலிகாப்டர் தளத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் இரு ஹெலிகாப்டர்கள் சகஸ்திரதாரா ஹெலிகாப்டர் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.<br />
<br />
மற்றொரு ஹெலிகாப்டர் லாத்பூர் வனப்பகுதியில் சென்றபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி நவீன்விட், என்ஜினீயர் நவ்நீல்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு காரனேசன் மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது.<br />
<br />
கட்கரியும் அவரது குடும்பத்தினரும் செல்ல இந்த 3 ஹெலிகாப்டர்களையும் உத்தரகாண்ட் அரசு வாடகைக்கு அமர்த்தி இருந்தது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
ஸ்வாஜாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர்களை சார் ஏவியேசன் நிறுவனம் இயக்கிவந்தது.<br />
<br />
<b>* சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் பணம் சேமிப்பு குறைந்தது</b><br />
புது தில்லி, ஜூன் 19: சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணம் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.<br />
<br />
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிச் சட்டங்களின் ரகசியத் தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து திரட்டிய கறுப்பு பணம் என்பது குறிப்பிடத் தக்கது.<br />
<br />
பல நாடுகள் இந்தக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் ரகசியத் தன்மைவாய்ந்த சட்டங்களைத் திருத்த வங்கிகளும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமல் மறுத்து வந்தன.<br />
<br />
இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல மேற்கத்திய நாடுகள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இந்தப் பிரச்னை குறித்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன.<br />
<br />
இந்தியாவிலும் இந்தப் பிரச்னை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.<br />
<br />
இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கிக் கணக்குகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில், வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.<br />
<br />
சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த தொகை குறைந்துள்ளது என்று தெரிகிறது. 2009-ம் ஆண்டில் ரூ. 1 கோடி 30 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டவர் சேமிப்பு இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்கான கணக்கின்படி, வெளிநாட்டவர் சேமிப்பு ரூ.1 கோடி 25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.<br />
<br />
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வங்கிகளில் பணத்தை சேமிப்பது குறைந்து வருகிறது என்ற கருத்து நிலவுகிறது.<br />
<br />
அதே வேளையில், உலகப் பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்ததால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாகத் தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.<br />
<br />
இங்கு சேமிப்புத் தொகை குறைந்துள்ளதற்குக் காரணம், பணத்தை வங்கியிலிருந்தது எடுப்பது மட்டுமல்ல. பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் வங்கியின் மொத்தத் தொகையில் குறைவு வந்ததாகக் காட்டும் என்று அவர் தெரிவித்தார்.<br />
<br />
<b>* பிஎச்இஎல் நிறுவனத்தில் 5 ஆண்டுகளில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு</b><br />
புது தில்லி, ஜூன் 19: அரசு நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி.பி.ராவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.<br />
<br />
மின் உற்பத்திப்பொருள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம் (பி.எச்.இ.எல்) அடுத்து வரும் ஆண்டுகளில் 25 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தும். ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் எனும் விகிதத்தில் ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பேரைப் புதிதாகப் பணியிலமர்த்தும் என்றும் பி.பி.ராவ் தெரிவித்தார்.<br />
<br />
இது குறித்து அவர் மேலும் கூறியது:<br />
<br />
பி.எச்.இ.எல் நிறுவனத்தில் தற்போது 46 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இப்போது எங்கள் நிறுவனம் 15 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின்பொருள்களை உற்பத்தி செய்ய ஆர்டர்கள் உள்ளன. அடுத்த நிதியாண்டில் பி.எச்.இ.எல் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட உள்ளது. அதற்கேற்ப 20 மெகாவாட் திறன்கொண்ட மின்பொருள்களை உருவாக்குவதற்கான ஆர்டர்களையும் நிறுவனம் பெற்றுள்ளது.<br />
<br />
இந்நிலையில், இதற்காகப் புதிய பணியாட்களை நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
இதனால் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்கிற விகிதத்தில் பணியாள்களை நியமிக்க முடிவெடுத்துள்ளோம். இதில் ஆயிரம் என்ஜினியர்கள், ஆயிரம் பட்டயப் படிப்பு படித்தவர்கள், 2 ஆயிரம் ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவர்.<br />
<br />
பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மொத்த ஆர்டர்களின் மதிப்பு ரூ. 1.64 லட்சம் கோடி என்று அவர் தெரிவித்தார்.<br />
<br />
இந்நிறுவனத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 2,500 பேர் ஓய்வு பெற்று வருகின்றனர். இதை ஈடுகட்டுவதுடன் புதிய உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றவும் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் தேவை ஏற்பட்டுள்ளது.<br />
<br />
<b>* கனிமொழி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை</b><br />
புது தில்லி, ஜூன் 19: 2ஜி வழக்கில் திகார் சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.<br />
<br />
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்து வந்த நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கண்காணித்து வந்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் அடங்கிய அமர்வு, கனிமொழியின் ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்த உள்ளது.<br />
<br />
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக தனது துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.<br />
<br />
அவர்களது மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இருவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தில்லி உயர் நீதிமன்றமும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.<br />
<br />
இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.<br />
<br />
கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள், எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், இருவரும் கூறுவதுபோல் கடன்தொகை அல்ல என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தீவிரமாகப் பரிசீலித்து தள்ளுபடி செய்து விட்டன. 2ஜி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என்று சிபிஐ தனது மனுவில் மேலும் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது<br />
<br />
<b>* தெலங்கானா பிரச்னை: வீதியில் சமையல் செய்து போராட்டம்</b><br />
<br />
<img alt="lunch.jpg" height="420" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.4&disp=emb&realattid=ii_130aa90e5a96c8eb&zw" title="lunch.jpg" width="321" /><br />
<br />
ஹைதராபாத், ஜூன் 19:தனித் தெலங்கானா கோரி போராடி வரும் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாதின் முக்கியச் சாலைகளில் சமையல் செய்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.<br />
<br />
தனித் தெலங்கானா கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும் (டிஆர்எஸ்), தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் "ஹைதராபாதின் வீதிகளில் சமைத்தல் ' என்ற போராட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.கோதண்டராம் இதுபற்றி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:<br />
<br />
தெலங்கானா பகுதியில் மழைக்காலங்களில் திறந்தவெளியில் சமையல் செய்து சமூக உணவுக்கூடம் நடத்தப்படும். எங்களின் கோரிக்கையை வலியுறுத்த அந்தப் பழக்கத்தை இங்கு போராட்டமாக மாற்றிக்கொண்டோம். நாங்கள் ஏற்கெனவே ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலங்குதேச சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தெலங்கானா பிரச்னைக்காக தங்களது உறுப்பினர் பதவியை ஜூன் 25-ற்குள் ராஜினாமா செய்யும்படி கோரியுள்ளோம். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால், ஹைதராபாதிலுள்ள அவர்களது வீடுகளின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இந்தப் போராட்டங்கள் கூடிய விரைவில் சாலை மறியல் போராட்டங்களாகவும் மாறும் என்று அவர் தெரிவித்தார்.<br />
<br />
டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் பாஞ்சரா ஹில்ஸில் உள்ள தனது வீட்டுக்கு அருகே நடந்த இந்த சமையல் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.டி.ராமராவ் அமர்பேட்டில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.<br />
<br />
தனி தெலங்கானா கோரும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள டிஆர்எஸ், பிஜேபி, உள்ளிட்ட மற்றக் கட்சிகள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.<br />
<br />
<b>* நிருபமா ராவ் பாகிஸ்தான் பயணம்</b><br />
புது தில்லி,ஜூன், 19: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் ஜூன் 23-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.<br />
<br />
அங்கு அவர் அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் சல்மான் பஷீரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக நிருபமாராவ் ஜூன் 23-ம் தேதி இஸ்லாமாபாத் புறப்பட்டுச்செல்கிறார். 25-ம் தேதிவரை அங்கு தங்கியிருக்கும் அவர், சல்மான் பஷீருடன் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்துகிறார்.<br />
<br />
<b>* வருமான வரி ஏய்ப்பில் அறக்கட்டளைகள்: கண்காணிக்க வருமான வரித்துறை தீவிரம்</b><br />
புது தில்லி, ஜூன் 19: இந்தியாவில் உள்ள அறக்கட்டளைகளில் வருமான வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, வருமான வரித்துறை அதன் அனைத்து தலைமை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
பொதுவான அறக்கட்டளைகள், மத ரீதியாக அமைக்கப்பட்டுள்ள அறைக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து பல வகை சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அன்பளிப்பாகக் கிடைக்கும் பெரும் தொகை மற்றும் அசையா சொத்துகளை நிர்வகிப்பதில் இவற்றுக்குப் பல சிறப்பு சலுகைகள் உள்ளன.<br />
<br />
அறக்கட்டளைகள் தொண்டு நிறுவனங்களாக செயல்படுவதால் வருமான வரித்துறை இச்சலுகைகளை வழங்கி வருகிறது. அறக்கட்டளைகளின் வரிவிலக்கு விவகாரங்களைக் கவனிக்க வருமான வரித்துறையில் தனிப் பிரிவு உள்ளது. ஆனால், வரிச் சலுகை பெறும் சில அறக்கட்டளைகள் தாங்கள் பெறும் நிதியைப் பல விதமான தொழில்களில் ஈடுபடுத்துகின்றன என்றும் இதன்மூலம் லாபம் ஈட்டி வருகின்றன என்றும் அரசுக்குத் தெரிய வந்துள்ளது. எனவே இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தங்களுக்குக் கிடைக்கும் நிதியுதவிக்காக வரிச் சலுகை பெற்று அதனைத் தவறாகப் பயன்படுத்தி வரும் அறக்கட்டளைகள் குறித்து வருமான வரித்துறை தகவல் சேகரித்து வருகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ரகசிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இதனையடுத்து, அனைத்துத் தலைமை வருமான வரி ஆணையர்களுக்கும் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி ஏய்ப்பு செய்து, நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் அறக்கட்டளைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அறக்கட்டளைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றுக்கு மேற்கொண்டு வரி விலக்குச் சலுகை தரப்பட மாட்டாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.<br />
<br />
இந்தியா முழுவதும் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்து வரும் அறக்கட்டளைகளின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் பெயர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.<br />
<br />
<b>* ஒரிசா: 6 கிராமங்களில் கடல் அரிப்பு</b><br />
பெர்ஹாம்பூர்,ஜூன் 19: ஒரிசா மாநிலத்தில் 6 கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.<br />
<br />
ஒரிசா மாநிலத்தில் இந்த ஆண்டு முன்னதாகவே தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. பெரிய அலைகள் தோன்றுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.<br />
<br />
கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சனா அர்ஜீப்பள்ளி, படா அர்ஜீப்பள்ளி, கட்டுரு, கண்ட்ரா அர்ஜீப்பள்ளி, கோகாரகுடா, போடம்பேட்டா ஆகிய 6 கடற்கரை கிராமங்களில் பாய்ந்து வரும் பெரிய கடல் அலைகளால் கரைகள் பெருமளவு அரிக்கப்பட்டு வீடுகள் இருக்கும் இடம் வரை வந்து செல்கின்றன. இதனால் இந்த கடற்கரைக் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.<br />
<br />
இதுபற்றி சனா அர்ஜீப்பள்ளி கிராமப் பஞ்சாயத்து தலைவர் கே.அல்லையா கூறும்போது, இப்போது கடல் அலைகள் எங்கள் வீடு அருகே வந்துவிட்டன.<br />
<br />
நாங்கள் தினசரி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமம் அருகில் கோபால்பூர் துறைமுகம் கட்டுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் பாதுகாப்புக்கு அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.<br />
<br />
<b style="color: #6666cc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<b>* ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ரூ.1 கோடியில் தங்கக் கொடிமரம்</b><br />
<br />
<img alt="omlordandal.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.2&disp=emb&realattid=ii_130aa8dd52276da5&zw" title="omlordandal.jpg" /><br />
<br />
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 19: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருகோயிலுக்கு புதிய கொடி மரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.<br />
<br />
ஸ்ரீஆண்டாள் சன்னிதி த்வஜ ஸ்தம்பம் (கொடி மரம்) மற்றும் பலிபீடத்துக்கு ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேக்கு மரத்திலான கொடி மரம் அமைக்கப்பட்டு, அதில் தங்கத் தகடு பொருத்தப்பட்டது.<br />
<br />
இதன் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை மாலை யஜமான வரணம், ஆசார்ய வரணம் உள்பட சாத்து முறையுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை புண்யாக வாசனம், அக்னி ஆராதனம், உக்த ஹோமம், அந்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தஸதானம், யாத்ராதானம், தக்ஷிணாதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.<br />
<br />
பின்னர், கொடிமரம் பிரதிஷ்டை, திருவாராதனம், சாத்து முறை, ஆசீர்வாதம், தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.<br />
<br />
நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ. பொன்னுப்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், ஸ்ரீநாச்சியார் பொதுநல டிரஸ்டின் செயலாளருமான கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.<br />
<br />
<b>* பி.இ. கவுன்சலிங்: சென்னையில் மட்டும் நடத்த முடிவு</b><br />
சென்னை, ஜூன் 19: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வழக்கம்போல் சென்னையில் நடைபெற உள்ளது.<br />
<br />
இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.<br />
<br />
இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.<br />
<br />
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு சென்னையில் மட்டும் கலந்தாய்வு நடத்துவதால், நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் அதிக பொருள் செலவும் ஏற்படுவதாக பெற்றோர் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.<br />
<br />
மேலும் கடந்த 2004-05 ஆண்டுகளில் நடத்தப்பட்டது போல் மாநிலத்தின் 4 பகுதிகளில் கலந்தாய்வை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.<br />
<br />
ஆனால், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வை பல இடங்களில் நடத்துவது என்பது, தேவையற்ற கால விரையத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே, கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்துவதுதான் சிறந்தது என்று கூறி, பெற்றோரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து வந்தனர்.<br />
<br />
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, பி.இ. கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களில் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதுதொடர்பாக செய்தியும் வெளியானது.<br />
<br />
இதனால், 2004-05-ம் ஆண்டைப் போல் கலந்தாய்வு 4 இடங்களில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடையே ஏற்பட்டது. <br />
<br />
<b>* அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள்: உடனடியாக நிரப்ப உத்தரவு</b><br />
<br />
சென்னை, ஜூன் 19: தமிழகம் முழுவதும் 69 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் 62 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 48 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் 2010-ம் ஆண்டு ஜூன் முதல் நிரப்பப்படாமல் இருந்தன.<br />
<br />
இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, 68 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன.<br />
<br />
அரசுக் கல்லூரிகளில் இவ்வாறு அதிகக் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க ஆணையிட்டார்.<br />
<br />
அதன்பிறகு, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உயர்கல்வித் துறைச் செயலாளர் கண்ணன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.<br />
<br />
இதில், முதல்வர் பணியிடத்துக்கு அடுத்தப்படியாக உள்ள தேர்வு நிலை விரிவுரையாளர் , இணைப் பேராசிரியர் பதவியில் பணி மூப்பினை உடனடியாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் இந்த பணி மூப்புப் பட்டியலை நிர்ணயிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.<br />
<br />
அதன்படி, தேர்வுநிலை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் பதவியில் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்பட்டது.<br />
<br />
இந்த பணி மூப்பின் அடிப்படையில் 68 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா<br />
<br />
<b>* ஆசிரியர்களின் மிரட்டலால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை<br />
<br />
<img alt="plustwo.jpg" height="133" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.1&disp=emb&realattid=ii_130aa8f7f903a8f6&zw" title="plustwo.jpg" width="200" /></b><br />
சேலம், ஜூன் 19: புரியும்படி பாடம் நடத்துங்கள் என்று கேட்டதற்காகவும் பாடம் புரியவில்லை என்று தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதற்காகவும் ஆசிரியர்களால் மிரட்டப்பட்டதால் பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட பிளஸ் 2 மாணவர் சீனிவாசன் (18) தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.<br />
<br />
உயிரிழந்த மாணவர் எழுதியுள்ள 7 பக்க கடிதம் அரசுப் பள்ளிகளின் அவலத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.<br />
<br />
சேலம் தாசநாயக்கன்பட்டி காலனி சேகர் - அமலா தம்பதியின் கடைசி மகன் சீனிவாசன் (18). பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்த இவர், சனிக்கிழமை (ஜூன் 18) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.<br />
<br />
பாத்திரங்களில் ஓட்டைகளை அடைக்கும் வேலையை செய்து வரும் சேகரும், காய்கறி வியாபாரம் செய்து வரும் அமலாவும் வீடு திரும்பியதும் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் சாவுக்கான காரணம் தெரியாமலேயே மாலையில் உடலை தகனம் செய்து விட்டனர்.<br />
<br />
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) சீனிவாசனின் அண்ணனும் மெக்கானிக் வேலை செய்து வருபவருமான சத்தியமூர்த்தி (22) தனது தம்பியின் புத்தகப் பையை சோதனையிட்டுள்ளார். அப்போது சீனிவாசன் எழுதி வைத்திருந்த 7 பக்க கடிதத்தைப் படித்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மல்லூர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: என் வாழ்வின் முடிவை எழுதியது நான் படிக்கும் பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரே. மரணத்துக்கு காரணம் எனது பள்ளி தமிழ் ஆசிரியர், கணித ஆசிரியர், இயற்பியல்,வேதியியல் ஆசிரியர்கள்தான். (அவர்களுடைய பெயர்களை மாணவர் குறிப்பிட்டிருக்கிறார்).<br />
<br />
"நான் தாசநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். தேர்வு முடிவுக்குப் பிறகு, அப்பா விபத்தில் சிக்கியதால் ஓராண்டு படிப்பைத் தொடர முடியாமல் போனது. அதன் பிறகு இப்பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்தேன்.<br />
<br />
இப்போது பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கி 3 நாள்கள் ஆகின்றன. எனது வகுப்புக்கு பிளஸ் 1-ல் கணித பாடம் நடத்தியவரே பிளஸ் 2-வுக்கும் பாடம் நடத்துகிறார்.<br />
<br />
இவர் நடத்தும் பாடம் பிளஸ் 1 முதலே புரியவில்லை என்று கூறி வந்திருக்கிறோம். இது பிளஸ் 2 என்பதால் புரியும்படி மெதுவாக பாடம் நடத்தும்படி கூறினோம். ஆனால் அவரோ தினமும் வகுப்புக்கு வந்து கரும்பலகை முழுவதும் கணக்கை எழுதிப்போட்டுவிட்டு, பார்த்து எழுதிக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.<br />
<br />
மிரட்டல்: இதனால் கணித பாடத்தை மெதுவாக, புரியும்படி நடத்த உத்தரவிடும்படி தலைமை ஆசிரியருக்கு எங்கள் வகுப்பு மாணவ-மாணவிகளின் கையெழுத்தைப் பெற்று ஒரு கடிதம் எழுதினேன்.<br />
<br />
இதையறிந்த வேதியியல், தமிழ், இயற்பியல் ஆசிரியர்கள் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், செய்முறைத் தேர்வில் மதிப்பெண் போடமாட்டோம் என்று கூறி மிரட்டினர். மாற்றுச் சான்றிதழில், "மோசம்' என்று எழுதி என்னை பள்ளியில் இருந்தே வெளியேற்றி விடுவதாகவும் கூறினார்கள்.<br />
<br />
தலைமை ஆசிரியருக்கு நான் கடிதம் எழுதியது தெரியாமல் செய்த தவறு. இதைத் தவறு என்பதா எனது உரிமை என்பதா என்று தெரியவில்லை. ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி முடித்ததும் புரிந்ததா, இல்லையா என்று கேட்டால் மாணவர் தன் கருத்தைக் கூறுவார். ஆனால் கணித ஆசிரியரோ புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன என்று எழுதிப்போட்டுவிட்டுச் செல்கிறார்.<br />
<br />
எனது பெற்றோர் என்னை நினைத்து அழாமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அடுத்த பிறவி இருந்தால் அதில் மனிதனாக பிறக்கக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் மேம்படுத்த வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.<br />
<br />
முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: எனது மரணத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் சிறு மாற்றமாவது நிகழ வேண்டும். திறமையான ஆசிரியர்கள் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளுக்கு தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதலமைச்சர் இதற்கு விரைவில் நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும்.<br />
<br />
எனது வகுப்பில் உள்ள குறைகளை தலைமை ஆசிரியருக்குத் தெரிவிக்க எழுதிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். இதை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்துக்கு பிறகாவது சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று மாணவர் சீனிவாசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.<br />
<br />
மாணவர் சீனிவாசன் அரசுப் பள்ளியில் படித்து எஸ்எஸ்எல்சி-யில் 409 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சிறந்த மாணவர் என்றும் இவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் சக மாணவர் வலியுறுத்தியுள்ளார்.<br />
<br />
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி.: மாணவன் சீனிவாசனின் கடிதம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்.<br />
<br />
கல்வித்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
<b>* எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு</b><br />
<br />
சென்னை, ஜூன் 19: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர விண்ணப்பித்துள்ள 20,765 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வெளியிடப்படுகிறது.<br />
<br />
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். மருத்துவப் படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்துள்ள 65 பேரில், எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்புகின்றனர் என்பது தரவரிசைப் பட்டியல் மூலம் தெரிந்து விடும்.<br />
<br />
தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டவுடன், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாணவர்களின் பெயர்களை உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை ஒட்டப்படும். சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ்-<br />
<div dir="ltr"><wbr></wbr>லும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.<br />
<br />
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆகவும் இருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.<br />
<br />
<b style="color: #6666cc;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சை</b><br />
<br />
<img alt="18-lemon3-300.jpg" height="150" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aa929b48aa211&attid=0.7&disp=emb&realattid=ii_130aa9130746c447&zw" title="18-lemon3-300.jpg" width="200" /><br />
<br />
வீடானாலும், கோவில் என்றாலும் அங்கே எலுமிச்சையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அந்த பழத்தில் உள்ள அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களே. வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எலுமிச்சை உடல் நலத்தை பாதுகாக்கிறது. கோவில்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சப்பழ மாலையும், எலுமிச்சை விளக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். எலுமிச்சை கனிகள் மருத்துவ குணம் கொண்டவை கனிகளின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். வைட்டமின் சி குறைவினால் வரும் ஸ்கர்வி நோய்க்கு எதிரானது.<br />
<br />
செயல் திறன் மிக்க வேதிப்பொருட்கள்<br />
<br />
கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், உள்ளன. அஸ்காரிக் அமிலம், அலனைன், நியாசின், வைட்டமின் சி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்க்மோட்டின், நாரிங்கின், சிட்ரால், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிங் அமிலம்<br />
<br />
சர்வரோக நிவாரணி<br />
<br />
நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் அதிகம் காணப்படுகிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது.<br />
<br />
எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.<br />
<br />
நுரையீரல் நோய்களை தடுக்கும்<br />
<br />
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். எலுமிச்சை சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப் போக்கும். நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. நுரையீரல் நோய்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.<br />
<br />
உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் பெற இயலும். ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. பசி தூண்டுவி. தசை இறுக்கி, சீரண ஊக்குவி, வயிற்று வலி தீர்க்கும். வாந்தி நிறுத்தும்.<br />
<br />
சீரண மண்டலம்<br />
<br />
கல்லீரல் தொல்லைகளைப் போக்க வல்லது. கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களுக்கு எலுமிச்சை ஊறுகாய் பயன்படுகிறது. எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளியின் தாகம் போக்கும். கொசுக்கடியினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் குடைச்சல் போக்க கடித்த இடத்தில் எலுமிச்சை சாறினைப் பூச வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் சாறினைப் பூசினால் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும்.<br />
<br />
வயிற்றுப் போக்கு<br />
<br />
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை இறுக்கும் குணம் உண்டு. அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக வயிற்றுப் போக்கு நின்றுவிடும். தேன் சேர்த்து சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி விடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்<br />
<br />
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் சிரமப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.<br />
<br />
ஸ்கர்வி நோயை குணமாக்கும்<br />
<br />
குழந்தைகளுக்கு 35 மில்லிகிராமும், பெரியவர்களுக்கு 50 மில்லிகிராமும், பாலு}ட்டும் தாய்மார்களுக்கு 80 மில்லிகிராம் வைட்டமின் சி யும் தினம் தேவையாகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.<br />
<br />
மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.<br />
</div><div dir="ltr"></div><div dir="ltr"><b style="color: #6666cc;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* வரும் 2015ம் ஆண்டுக்குள் உலகளவில் விளம்பர வருவாய் வளர்ச்சியில் இந்தியா முன்னிலை பெறும்</b><br />
<br />
<img alt="1875117.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aaafd3af17278&attid=0.2&disp=emb&realattid=ii_130aaacafac6aa83&zw" title="1875117.jpg" /><br />
<br />
ஜூன் 20,2011,01:19<br />
<br />
புதுடில்லி:இந்தியாவின் விளம்பர வருவாய், வரும் 2015ம் ஆண்டிற்குள், 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 79 ஆயிரத்து 133 கோடி ரூபாயில் இருந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.<br />
<br />
இது, சர்வதேச அளவிலான விளம்பர வருவாய்வளர்ச்சி மதிப்பீட்டை விட இரு மடங்கு அதிகமாகும்.உலகளவில் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், வானொலி, திரைப்படம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து, பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், உலகளவிலான விளம்பர வருவாயில், வரும் 2015ம் ஆண்டிற்குள் இந்தியா, மிகப் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்று தெரிய வந்துள்ளது.<br />
<br />
இந்தியாவில், பத்திரிகை விளம்பரங்களின் ஆண்டு வருவாய்தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2015ம் ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நான்காண்டுகளில், இப்பிரிவின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 12 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.<br />
<br />
இப்பிரிவின் வருவாய்வளர்ச்சியில், இந்தோனேஷியாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதே சமயம், ஆசிய பசிபிக் பிராந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் விளம்பர வருவாய்வளர்ச்சி தேக்க நிலையை அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவி<div dir="ltr"><wbr></wbr>ல் விளம்பரத் துறையின் வேகமான வளர்ச்சிக்கு ஈடாக, பத்திரிகைகளின் விற்பனை வளர்ச்சி இருக்காது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
பத்திரிகைகளின் விற்பனையை பொருத்தவரை, வரும் 2015ம் ஆண்டில், ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அதே சமயம், சீனா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் மலேசியாவில் இந்த வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
நம் நாட்டில், கடந்த 2010ம் ஆண்டு பத்திரிகைகளின் விற்பனை வருவாய்5,825 கோடி ரூபாயாக இருந்தது.<br />
<br />
இது, வரும் 2015ம் ஆண்டில் 7,272 கோடி ரூபாயாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பத்திரிகைத் துறையின் விற்பனை மற்றும் விளம்பர வருவாய், சென்ற 2010ம் ஆண்டு 15 ஆயிரத்து 894 கோடி ரூபாயாக இருந்தது. இது, வரும் 2015ம் ஆண்டு 9.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
இந்தியாவில் பத்திரிகைகளை விட, தொலைக்காட்சிகளின் விளம்பர வருவாய்அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொலைக்காட்சி விளம்பர வருவாய்9,000 கோடி ரூபாயில் இருந்து, வரும் 2015ம் ஆண்டு 19 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.உலகளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொலைக்காட்சித் துறையின் விளம்பர வருவாய்6.5 சதவீத வளர்ச்சி கண்டு, 10.60 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.<br />
<br />
அதே சமயம், பத்திரிகைத் துறையின் விளம்பர வருவாய்1.9 சதவீதம் (8.06 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கே வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்<wbr></wbr>சி விளம்பர வருவாயில் இந்தியா, வரும் 2015ம் ஆண்டில், 14 சதவீத ஒட்டு மொத்த வளர்ச்சி கண்டு, உலக நாடுகளில் நான்காவது இடத்தைப் பிடிக்கும். மேலும், இணையதளம் சார்ந்த விளம்பர வருவாயின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் இரு மடங்காக, அதாவது 20.9 சதவீதம் அதிகரித்து, 702 கோடி ரூபாயில் இருந்து 1,800 கோடி ரூபாயாக உயரும்.<br />
<br />
இதே காலத்தில், வானொலி விளம்பர வருவாயும் 1,000 கோடி ரூபாயில் இருந்து 1,800 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.சர்வதேச அளவில், பொழுதுபோக்கு மற்றும் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரச் செலவினம் கடந்த ஆண்டு 14 லட்சம் கோடி டாலராக இருந்தது. இது, வரும் 2015ம் ஆண்டில் 19 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
<br />
<b style="color: #6666cc;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>இலங்கை நடத்தும் போட்டி ஐபிஎல் போட்டிகளில் ஆட இந்திய வீரர்களுக்குத் தடை<br />
<br />
<img alt="19-shashank-manohar300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130aaafd3af17278&attid=0.3&disp=emb&realattid=ii_130aaad6b719c185&zw" title="19-shashank-manohar300.jpg" /><br />
</b><br />
மும்பை: இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள போட்டி ஐபிஎல் போட்டியான இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.<br />
<br />
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் பிரபலமாக திகழ்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள் முட்டி மோதுகின்றனர்.<br />
<br />
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென உத்தரவு போட்டதால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். ஐபிஎல் போட்டிகளி்ல ஆடினால் நல்ல துட்டு கிடைக்கும் என்பதால் அதிலிரு்நது விலகி வர அவர்களுக்கு மனமில்லை. இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் முரண்டால் அவர்கள் கிளம்பிச் செல்ல நேரிட்டது.<br />
<br />
ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இலங்கை திரும்பிய வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் சரியான அடி வாங்கி வருகின்றனர்.<br />
<br />
ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை விடுவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்ததால் கடுப்பான இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐபிஎல்லுக்குப் போட்டியாக இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.<br />
<br />
ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை. மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரப்பூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தனியார்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை அனுப்புவதில்லை என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை முடிவாகும்.<br />
<br />
எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் பங்கேற்க முடியாது. எங்களது முடிவை ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தி விட்டோம் என்றார் அவர்.<br />
<br />
இலங்கை பிரீமியர்லீக் போட்டிகள் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் பிரவீன் குமார், முனாப் படேல், அஸ்வின் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை போட்டு விட்டது.<br />
<br />
<b style="color: #6666cc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<b style="color: #6666cc;">* அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : தண்டாயுதபாணி<br />
உற்சவர் : சண்முகர்<br />
அம்மன்/தாயார் : -<br />
தல விருட்சம் : பொன்அரளி<br />
தீர்த்தம் : குமரதீர்த்தம்<br />
ஆகமம்/பூஜை : காரண ஆகமம், காமீக ஆகமம்<br />
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : குமரகிரி<br />
மாவட்டம் : சேலம்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார்.<br />
<br />
<br />
இங்கு முருகனுக்கு நைவேத்யமாக சுத்தான்னம், மாம்பழம் படைத்து வழிபடுகின்றனர். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. பிரகாரத்தில் துர்க்கை, நவக்கிரகம், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
விபத்திற்கு பூஜை: இங்கு ஒரு வினோதமான அர்ச்சனை முறை உள்ளது. விபத்தில் காயம்பட்டவர் மற்றும் அவசரசிகிச்சை பெறுபவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் தண்டபாணிக்கு "திரிசதை அர்ச்சனை' செய்து பூஜை செய்கின்றனர். இக்கோயிலில் கிடைக்கும் விரிச்சி பூவில் பன்னீர், சந்தனம் கலந்து இந்த அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இவரை வணங்கிச்சென்றால் விபத்துக்களில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். எனவே, இங்கு வாகனம் வைத்திருப்போர் அதிகளவில் இந்த அர்ச்சனை செய்கின்றனர்.<br />
<br />
சிறப்பம்சம்: குமரன் குடியிருந்த கிரி என்பதால், "குமரகிரி' எனப்படும் இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். எனவே, இவரை வணங்கிட செல்வம் செழிக்கும். படிபூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்குத் தரவேண்டுமென கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார்.<br />
<br />
தண்டாயுதபாணியாக சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, "தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்' என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்கு சென்றார்.<br />
<br />
பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை. இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, "மாம்பழ முருகன்' என்றும் அழைக்கிறார்கள். <br />
<br />
திருவிழா:<br />
<br />
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.<br />
<br />
திறக்கும் நேரம் :<br />
<br />
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #6666cc;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #6666cc;">* தலைசிறந்தது அன்பு மட்டுமே! - பைபிள்</b><br />
<br />
* நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.<br />
<br />
* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்குங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்.<br />
<br />
* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி அனைவருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள்.<br />
<br />
<b style="color: #6666cc;">வினாடி வினா :</b><br />
<br />
வினா - இந்தியாவின் முதல் பெண் மத்திய மந்திரி யார் ?<br />
<br />
விடை - ராஜ்குமாரி அமிர்த்கௌர்<br />
<br />
<b style="color: #6666cc;">இதையும் படிங்க </b>:<br />
<br />
<b>திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை</b><br />
புதுடில்லி:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு தண்டனைக் கைதிகள், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், தேர்வு செய்யப்பட்டு கவுரவமான வேலைக்குச் செல்கின்றனர்.<br />
<br />
திகார் சிறையில், தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகும் கைதிகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதன்முறையாக, திகார் சிறையில், கடந்த பிப்ரவரி 25ல், சில தனியார் நிறுவனங்கள், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில், வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தீப், 40, மற்றும் ஜார்ஜ், 23, ஆகிய இருவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. ஜார்ஜ் ஆய்வக உதவியாளராகவும், சந்தீப் விற்பனை பிரதிநிதியாகவும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.<br />
<br />
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் அதிகமாக இருந்தது. சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு வேலை கிடைப்பது அரிது. அதிலும், அவர்களை யாரும் மதிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், சிறையில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எங்களுக்கு கவுரவமான வேலை கிடைத்துள்ளது. சமூகத்தில் இப்போது, நாங்கள் கவுரவமாக வேலைக்குச் சென்று வருகிறோம். எங்கள் சக ஊழியர்களும் எங்களை கவுரவமாக நடத்துகின்றனர். இந்த கவுரவத்திற்கு, எங்கள் சிறை அதிகாரி நீரஜ்குமார் தான் காரணமாக இருந்தார். கைதிகளில் நலனில் எதிர்கால நலனில் அக்கறை கொண்டிருக்கும் அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.<br />
<br />
இதுகுறித்து, சிறை அதிகாரி நீரஜ்குமார் கூறியதாவது:சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் திருந்தி, சமூகத்தில் கவுரவமான நிலைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். எவ்வித தயக்கமும் இன்றி, இரண்டு முன்னாள் கைதிகளுக்கு வேலை அளித்த நிறுவனம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த நிலை அதிகரிக்க வேண்டும். இதே போன்று, திகாரில் உள்ள மற்ற சிறைகளில் இத்தகைய கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு நீரஜ் குமார் கூறினார்.<br />
<br />
</div><br />
<br />
<br />
நன்றி - சமாசார், தின மணி, தின மலர், வெப்துனியா.<br />
<br clear="all" /><br />
-- </div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-16096028959580241232011-06-18T07:49:00.002+05:302011-06-18T08:07:39.662+05:30இன்றைய செய்திகள் - ஜூன் , 18 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="gE iv gt"><table cellpadding="0" class="cf gJ"><tbody>
<tr><td class="gF gK"><br />
</td><td class="gH"><br />
</td><td class="gH"><br />
</td></tr>
</tbody></table></div><b style="color: #cc33cc;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<img alt="tn.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.8&disp=emb&realattid=ii_130a0564bb2464d7&zw" title="tn.jpg" /><br />
<br />
<br />
<b>சமச்சீர் கல்வி குறித்து ஆராய புதிய குழு: முதல்வர் ஜெயலலிதா</b><br />
<br />
சென்னை, ஜூன் 17: சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:<br />
<br />
தமிழகத்தில கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் நோக்கில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்திற்கு<br />
<br />
எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது.<br />
<br />
இந்த சட்டத்திருத்தினை எதிர்த்து ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. <br />
<br />
இந்த மனுவை கடந்த 15ம் தேதி விசாரித்த நீதிமன்றம், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாடநூல்களின் தரம் ஆகியன குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த குழு ஜூலை 6ம் தேதிக்குள்<br />
<br />
தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.<br />
<br />
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது:<br />
<br />
* தலைவர் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர்<br />
<br />
* உறுப்பினர் - இரு மாநில பிரதிநிதிகள்:<br />
<br />
(1) ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்<br />
<br />
(2) திருமதி. விஜயலட்சுமி சீனிவாசன், முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை.<br />
<br />
* உறுப்பினர் - இரு கல்வியாளர்கள்:<br />
<br />
(1) சி.ஜெயதேவ், நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி.பள்ளிகள் குழுமம், கோபாலபுரம், சென்னை.<br />
<br />
(2). டாக்டர் திருமதி. ஒயி.ஜி.பார்த்தசாரதி, முதல்வர் மற்றும் இயக்குநர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை.<br />
<br />
* உறுப்பினர் - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இருபிரதிநிதிகள்<br />
<br />
(1) பேராசிரியர் பி.கே. திரிபாதி, அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுதில்லி.<br />
<br />
(2). பேராசிரியர் அனில் சேத்தி, சமூக அறிவியல் துறை, புதுதில்லி.<br />
<br />
* உறுப்பினர் - அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை<br />
<br />
* உறுப்பினர் செயலாளர்- பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்.<br />
<br />
மேற்கண்ட குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் ஜூலை மாதம் 6ம் தேதிக்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்<br />
<br />
<b style="color: #cc33cc;">* அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்!<br />
<br />
<img alt="17-baby-star-water3-300.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.6&disp=emb&realattid=ii_130a0557ce690700&zw" title="17-baby-star-water3-300.jpg" /></b><br />
புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.<br />
<br />
உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.<br />
<br />
பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.<br />
<br />
பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.<br />
<br />
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.<br />
<br />
உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.<br />
<br />
<b style="color: #cc33cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் இலங்கை ராணுவம் திடீர் தாக்குதல்</b><br />
கொழும்பு, ஜூன் 17: இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம், அளவெட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் ராணுவ வீரர்கள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், எம்.பி.க்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.<br />
<br />
இலங்கையில், அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி நிர்வாகிகள் உள்அரங்கில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஆயுதம் ஏந்திய 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அரங்கில் புகுந்து அனுமதியில்லாமல் கூட்டம் நடைபெறுவதாகக் கூறியுள்ளனர்.<br />
<br />
உள்கட்சி ஆலோசனைக் கூட்டம் என்பதால் அனுமதி பெறத் தேவையில்லை, அப்படியே அனுமதி பெற வேண்டும் என்றாலும் இந்த விவகாரத்தில் போலீஸôர்தான் தலையிட முடியும் என்று கட்சி நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். இதை ஏற்காத ராணுவ வீரர்கள், திடீரென தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இதில் எம்.பி.க்கள் உள்பட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பிலோ, ராணுவத் தரப்பிலோ இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.<br />
<br />
<b>* போர்க் குற்ற விடியோ: ஆய்வு செய்ய இலங்கை முடிவு</b><br />
<br />
கொழும்பு, ஜூன் 17: இலங்கை போர் தொடர்பாக பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட மிகக் கொடூரமான காட்சிகள் உண்மையானவைதானா என்பதை ஆய்வு செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.<br />
<br />
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது விதிமுறைகள் மீறப்பட்டு, மிகக் கொடூரமான வகையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இலங்கையை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.<br />
<br />
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும்<br />
<br />
இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.<br />
<br />
ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் சபையும், இலங்கையில் போர் விதிகள் மீறப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது.<br />
<br />
இந்நிலையில் இலங்கை போரின்போது நிகழ்ந்த அத்துமீறல்கள் தொடர்பாக இங்கிலாந்து தொலைக்காட்சி சேனல் வெளியிட்ட விடியோ பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளதாக இரு இனங்களுக்கிடையிலான சமரச கமிஷன் (எல்எல்ஆர்சி) செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மண் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.<br />
<br />
ஏற்கெனவே போர் நிகழ்ந்த சமயத்தில் வெளியான படத் தொகுப்பு ஆதாரங்களை பார்வையிட்டு வருவதாகவும், பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்ட விடியோ ஆதாரத்தையும் ஆய்வு செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ ஆதாரங்கள், ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரப் பதிவுகளின் தொகுப்பாக உள்ளது. அந்த விடியோ ஆதாரங்கள் சரியானவைதானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.<br />
<br />
மேலும் எல்எல்ஆர்சி இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐக்கியநாடுகள் சபை பொதுச் செயலரின் நிபுணர் குழு கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.<br />
<br />
<b>* ஜவாஹிரியையும் கொல்வோம்: அமெரிக்கா திட்டவட்டம்<br />
<br />
<img alt="killer.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.2&disp=emb&realattid=ii_130a056f90d8de9f&zw" title="killer.jpg" /></b><br />
வாஷிங்டன், ஜூன் 17: அல் காய்தா அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.<br />
<br />
அல்-காய்தா அமைப்பு தங்கள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அந்த அமைப்பையே முற்றிலுமாக இல்லாமல் செய்வதுதான் அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். ஜவாஹிரியைப் பிடிப்பது அல்லது ஒசாமா பின் லேடனைப் போல சுட்டுக் கொல்வது உள்ளிட்ட நடவடிக்கையை ஜவாஹிரிக்கு எதிராகவும் எடுப்போம் என்று அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் கூறினார்.<br />
<br />
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.<br />
<br />
அல்-காய்தா அமைப்பின் புதிய தலைவராக ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டிருப்பது தமக்கு எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை என்று குறிப்பிட்ட முல்லன், அல்-காய்தா அமைப்பின் தலைவராக யார் பொறுப்பேற்றாலும் அவரை பிடித்துக் கொன்று விடுவது ஒன்றுதான் சிறந்த வழி என முன்னாள் ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன்னதாக உறுதிபட தெரிவித்ததாகக் கூறினார்.<br />
<br />
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜவாஹிரிக்கு சில சிக்கல்கள் இருக்கக் கூடும். ஏனெனில் முந்தைய தலைவரான ஒசாமா பின் லேடன், அந்த இயக்கம் தோன்றியதிலிருந்து தலைவராக செயல்பட்டவர். மேலும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பிரச்னை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஆனால் இவையனைத்தும் ஜவாஹிரியிடம் கிடையாது. மேலும் அவர் எகிப்தியர் என்பதால் அல்-காய்தா அமைப்பினரிடையே ஒருவித சந்தேகம் அவர் மீது உள்ளது.<br />
<br />
ஒசாமா பின் லேடனைக் கண்டுபிடிப்பதற்கு பெருமளவில் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டன. ஆனாலும் அல்-காய்தா அமைப்பு மீண்டும் துளிர்விட அனுமதிக்கப்படக்கூடாது. அவ்விதம் அவர்கள் செயல்பட ஆரம்பித்தால் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை, அதாவது பின் லேடனின் பிரதான நோக்கத்தை செயல்படுத்தத் தொடங்கிவிடுவர். எனவே அவர்களது செயல்பாட்டைத் தடுக்க ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ஸ் குறிப்பிட்டதையும் முல்லன் சுட்டிக் காட்டினார்.<br />
<br />
புதிய தலைவரைத் தேர்வு செய்ய 7 வார கால தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களது செயல்பாடு வழக்கமாக இதுபோலத்தான் இருக்கும் என்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.<br />
<br />
<b>* அமெரிக்காவில் நிலநடுக்கம்</b><br />
<br />
அலாஸ்கா, ஜூன் 17: அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி இருந்தது.<br />
<br />
நிலநடுக்கம் பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது 80 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டது. இதனால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரமும்,காயம் அடைந்தவர்கள் விவரமும் தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<b><br />
* பான் கி மூன் மீண்டும் ஐநா தலைவர்</b><br />
நியூ யார்க், ஜூன் 17: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் பான் கி மூன் அப்பதவியில் மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.<br />
<br />
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை அவருக்கு மீண்டும் ஐந்தாண்டு பதவிக்காலம் தருவதை ஆமோதித்து வாக்களித்தது. இதைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) 192 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுக்குழு அவரை அந்தப் பதவியில் நீடிக்கச் செய்யும் விதமாக வாக்களிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் வாக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டதால், பொதுக்குழுவின் வாக்கு என்பது வெறும் சடங்கு மட்டுமே என்று கருதப்படுகிறது.<br />
<br />
தென் கொரியாவைச் சேர்ந்த பான் கி மூனுக்கு 67 வயதாகிறது. 2006-ம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தென் கொரியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார். ஐ.நா. பொதுச் செயலாளராக இவரது இரண்டாவது பதவிக்காலம் 2012-ம் ஆண்டு தொடங்கும். 2016 வரை இப்பதவியில் இருப்பார <br />
<br />
<b style="color: #cc33cc;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* கனிமொழிக்கு ஜாமீன் தந்தால் ஆதாரங்களை அழிப்பார், சாட்சிகளை கலைப்பார்: சிபிஐ</b><br />
<img alt="kani.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.5&disp=emb&realattid=ii_130a0521690ae2c8&zw" title="kani.jpg" /><br />
<br />
டெல்லி: திமுக எம்பி கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அவரை விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார், ஆதாரங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ கூறியுள்ளது.<br />
<br />
முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி தரப்பட்டது தொடர்பாக கனிமொழியையும் அதன் நிர்வாகி சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது. இந்தப் பணம் லஞ்சம் என்கிறது சிபிஐ. ஆனால், கடன் என்கிறது கலைஞர் டிவி.<br />
<br />
இந் நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழியும் சரத்குமாரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதந்தர் குமார் ஆகியோர், கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட பணம் குறித்தும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்தும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர்.<br />
<br />
இதையடுத்து நீதிமன்றத்தில் இன்று சிபிஐ ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.<br />
<br />
அதில் கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். மேலும் கலைஞர் டிவிக்கு தரப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், அது கடன் தொகை அல்ல. 2ஜி வழக்கில் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது. முன்னதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் பல்வேறு விவகாரங்களையும் கவனமாக பரிசீலித்து தான் இந்த இருவருக்கும் வழங்க மறுத்துவிட்டன. இதனால் உச்ச நீதிமன்றமும் ஜாமீன் தரக் கூடாது.<br />
<br />
இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவர், ஆதாரங்களை அழித்துவிடுவர் என்று சிபிஐயின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்: 6 மாதங்களில் முற்றிலும் ஒழிக்கப்படும்: பிரதமர்<br />
</b><br />
புது தில்லி, ஜூன் 17: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நடைமுறை அடுத்த 6 மாதங்களில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.<br />
<br />
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சமூக நீதி நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் இந்த வாக்குறுதியை அளித்தார்.<br />
<br />
மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்: நாட்டின் பல்வேறு பகுதிகளில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னமும் நீடிப்பது வேதனையளிக்கிறது. இப் பணியில் தாழ்த்தப்பட்ட மக்களை ஈடுபடுத்துவோர் மீது மாநில அரசுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் அடுத்த 6 மாதங்களில் இந்த அவல நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.<br />
<br />
லட்சிய கிராமத் திட்டம் விரிவாக்கம்: தமிழ்நாடு, அசாம், பிகார், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களில் லட்சிய கிராமத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.<br />
<br />
இந்த முன்னோடித் திட்டத்தின் சாதக, பாதகங்களைக் கண்டறிந்து 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், லட்சிய கிராமத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும். இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் வேகமாக முன்னேற வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.<br />
<br />
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்தப் பணியை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.<br />
<br />
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் நீடிக்கிறது. அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை மாநில அரசுகள் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.<br />
<br />
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்களின் வருமான வரம்பை திருத்தி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சட்டம்: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக புதிய சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை வரையறுக்கும் பணியில் மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போதைய சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டமசோதா இருக்கும்.<br />
<br />
நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனைக் காக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும், அவை போதாது என்றே கருதுகிறேன். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மேலும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மேலும் கூறினார்.<br />
<br />
<b>* சாய்பாபாவின் அறையில் ரூ.11 கோடி, 98 கிலோ தங்கம்</b><br />
புட்டபர்த்தி, ஜூன் 17: ஆன்மிக குரு ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அறையில் 11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 98 கிலோ தங்கம் இருந்தது.<br />
<br />
கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா முக்தி அடைந்தார். அதன் பின்னர் அவரது தனியறையான "யஜுர்வேத மந்திர்' திறக்கப்படாமலேயே இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதால் சத்ய சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் சாய்பாபாவின் தனியறையைத் திறக்க முடிவு செய்தனர்.<br />
<br />
அதன்படி வியாழக்கிழமை முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் சாய்பாபாவின் தனியறை திறக்கப்பட்டது.<br />
<br />
சாய்பாபாவின் தனியறையிலுள்ள பொருள்கள் குறித்த கணக்கெடுப்பு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதா மற்றும் சாய்பாபாவின் உறவினரும் அறக்கட்டளை உறுப்பினருமான ஆர்.ஜே.ரத்னாகர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடந்தது.<br />
<br />
பொருள்களின் மதிப்பீடுகளை அளவிட வருமான வரித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட "மதிப்பீட்டாளரும்' உடனிருந்தார். தனியறையிலிருந்து 11.56 கோடி ரூபாயும், 98 கிலோ தங்கமும், 307 கிலோ வெள்ளியும் எடுக்கப்பட்டன. பணம் பிரசாந்தி நிலையத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சத்ய சாய் சேவா அறக்கட்டளையின் கணக்கில் முதலீடு செய்யப்பட்டதாக ரத்னாகர் தெரிவித்தார்.<br />
<br />
<b>* தமிழ்வழிப் பள்ளிகளில் தட்டுப்பாடின்றி கிடைக்குமா பாடநூல்?</b><br />
வே. சுந்தரேஸ்வரன்<br />
<br />
புது தில்லி, ஜூன் 17: புதுதில்லியில் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டிலாவது தமிழ்வழிப் பாடநூல்கள் போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர், பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.<br />
<br />
புதுதில்லி இந்தர்புரி, திரிலோக்புரி, கல்யாண்புரி, ஜக்கூர்பூர், மங்கோல்புரி, ஆஸ்ரமம், வசீர்பூர் ஆகிய 7 இடங்களில் தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.<br />
<br />
தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளைச் சுற்றி இப் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் அதிக அளவில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.<br />
<br />
பெற்றோர்களின் ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகமும், தமிழ்வழிப் பாடநூல்கள் உரிய நேரத்தில், போதிய அளவில் மாணவர்களுக்குப் கிடைக்காமல் போவதும் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.<br />
<br />
""தமிழ்வழிப் பாடநூல்கள் தமிழகத்தில் இருந்து பெறப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளாகவே தமிழ்வழிப் பாடநூல்கள் மாணவர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை.<br />
<br />
பாடநூல்கள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தில்லி மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசை அணுகி பாடநூல்களை விரைந்து பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழ்வழி மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
""சென்ற ஆண்டில் தமிழ்ப் பாடநூல் கிடைக்காதபோது தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் இருந்து பெற்று மாணவர்களுக்கு வழங்கிவிட்டோம். இருப்பினும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் போனதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.<br />
<br />
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பாடநூல்களை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் வாங்கி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை மாணவர்கள் நோட்டில் எழுதிப் படிக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பாடத்திற்குரிய புத்தகம் இன்றி, பாடங்களை எழுதிப் படிப்பது சுமை தருகிறது. இப்பிரச்னைகூட மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு ஏன் காரணமாக இருக்கக் கூடாது?'' என்றார்.<br />
<br />
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு தமிழ்வழி ஆரம்பப் பள்ளியிலும் 200 முதல் 250 மாணவர்கள் வரை பயின்று வந்தனர். இப்போது 7 பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 1,000 மாணவ, மாணவியர் மட்டுமே பயில்வதாக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
""மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வி உதவி என பலவற்றிலும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து தருகிறது.<br />
<br />
ஹிந்தி அதிகம் பேசுவோர் வாழும் தில்லியில் தமிழ், உருது ஆகிய இரு மொழிகளுக்கு மட்டுமே பயிற்றுமொழியில் பள்ளி நடத்துவதற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.<br />
<br />
இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயில்வதற்கு ஏற்ப தேவையான தமிழ்வழிப் பாடநூல்களையும் முன்கூட்டியே தமிழகத்தில் இருந்து பெற்று வழங்கினால் நன்றாக இருக்கும். பாடநூல்கள் தங்குதடையின்றி வழங்குவதற்கு தமிழக அரசு உதவி செய்தால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்'' என்றார் மற்றொரு ஆசிரியர்.<br />
<br />
தமிழ்வழி மாநகாராட்சிப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் கற்கும் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை வேறு பள்ளியில் தொடங்கும்போது தமிழ்ப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ படிக்க வேண்டிய சூழல் உள்ளது.<br />
<br />
இதுவும், தமிழ்வழிக் கல்வி தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் பெற்றோர்களிடையே ஆர்வம் குறையக் காரணம் ஆகிவிட்டது. 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறினார்.<br />
<br />
தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்<br />
<br />
""மும்பை போன்ற இடங்களில் இயங்கும் தமிழ்வழிக் கல்வி பள்ளிகளுக்கு பாடநூல்களை வழங்க தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.<br />
<br />
ஜூலை 1-ம் தேதி தில்லியில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தில்லி மாநகராட்சி தமிழ்வழி தொடக்கப் பள்ளிகளில் அனைத்துப் பாடநூல்களையும் இலவசமாக வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலிலதா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தில்லிவாழ் தமிழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
<b>* கொல்கத்தாவில் கன மழை: 550 மீனவர்கள் மாயம்<br />
<br />
<img alt="rains.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.4&disp=emb&realattid=ii_130a04f0f9898acb&zw" title="rains.jpg" /></b><br />
கொல்கத்தா,ஜூன் 17: கொல்கத்தாவில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற 550 மீனவர்கள் மாயமாகி விட்டார்கள்.<br />
<br />
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலும்,பக்கத்து மாவட்டங்களிலும் கடந்த வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.<br />
<br />
இதனால் கொல்கத்தா நகர தெருக்களில் மழை நீர் முழங்கால் அளவுக்கு வெள்ளம் போல் ஓடியது. தண்டவாளத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.<br />
<br />
கொல்கத்தா நகரில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை 25 மி. மீ. மழை கொட்டியது.<br />
<br />
இதேபோல் 24 பர்கானா மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இங்கு பல இடங்களில் மரங்கள் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.<br />
<br />
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே பலத்த மழைக்கு காரணம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 2 நாள்கள் மழை நீடிக்கும் என்றும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
550 மீனவர்கள் மாயம்<br />
<br />
24 தெற்கு பர்கானா மாவட்டத்தில் இருந்து வியாழக்கிழமை 33 படகுகளில் 550 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கதி என்ன வாயிற்று என்பது தெரியவில்லை. இவர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் கடலோரக் காவல் படையும், இந்திய கப்பற்படையும் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று மீனவர்களை தேடி வருகிறனர்.<br />
<br />
இந்த நிலையில் காணாமல் போன மீனவர்கள் வங்காளதேச நாட்டுக் கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.<br />
<br />
இதனால் மேற்கு வங்க அரசு வங்காளதேச நாட்டுத் துணைத் தூதரை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க உதவும்படி கேட்டுள்ளது.<br />
<br />
*<b> லூப் டெலிகாம் தலைமை நிர்வாகியிடம் சிபிஐ விசாரணை</b><br />
புது தில்லி, ஜூன் 17: லூப் டெலிகாம் நிறுவனத்தின் உரிமை மற்றும் பங்குகள் வைத்திருப்பதற்கான முறை ஆகியவை தொடர்பாக அதன் தலைமை செயல் அதிகாரி சந்தீப் பாசுவிடம் சிபிஐ வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.<br />
<br />
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் சிபிஐ மூன்றாவது துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.<br />
<br />
சிபிஐயிடம் நேரில் ஆஜரான பாசுவிடம், எஸ்ஸôர் குழுமத்துடன் லூப் டெலிகாம் கொண்டிருப்பதாக கூறப்படும் நிதி பரிவர்த்தனை குறித்தும் அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.<br />
<br />
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை எஸ்ஸôர் குழுமம் முறைகேடாக பெற, அதன் சார்பாக லூப் டெலிகாம் நிறுவனம் செயல்பட்டதா என்று சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமைகள் ஆணையம்<br />
</b><br />
புதுதில்லி, ஜூன் 17: தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.<br />
<br />
கோவை மாவட்டம் கரிக்கிலிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வசந்தகுமார். தலித் இனத்தைச் சேர்ந்தவன். அங்கு நிலவி வந்த வறட்சியின் காரணமாக கிராமத்திலுள்ள பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளான்.<br />
<br />
இதை வேறோர் இனத்தைச் சார்ந்த 3 பெண்களும் மற்றொரு நபரும் கண்டித்ததுடன் சிறுவனை அடித்துள்ளனர்.<br />
<br />
காயமடைந்த சிறுவன் வசந்தகுமார் சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனையில்<br />
<br />
அனுமதிக்கப்பட்டான். இந்த நிகழ்வு பத்திரிகையொன்றில் செய்தியாக வந்துள்ளது.<br />
<br />
மேலும் தலித்துகள் வீட்டுக்கு வெளியே செல்போன் பேசவும், உள்ளூரில் முடி வெட்டிக் கொள்ளவும் கிராமத்தினர் தடை விதித்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
இந்தப் பத்திரிகை செய்தியையே தன்னேற்பு மனுவாக எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், இதுபோன்று தலித்துகளின் மீதான<br />
<br />
தாக்குதலில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.<br />
<br />
மேலும் இந்தச் சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தையும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.<br />
<br />
பத்திரிகையில் வந்த செய்தி உண்மையாக இருந்தால் அது 1989-ம் ஆண்டின் "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை'<br />
<br />
மீறியதாகக் கருதப்படும் என மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.<br />
<br />
<b style="color: #cc33cc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> இன்று ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்: ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்</b><br />
<br />
<img alt="large_258943.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.7&disp=emb&realattid=ii_130a04c14e69efd4&zw" title="large_258943.jpg" /><br />
<br />
சென்னை: சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.<br />
<br />
இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பை பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது. அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.<br />
<br />
<b>* சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்</b><br />
சென்னை, ஜூன் 17: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் மாற்றம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.<br />
<br />
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...<br />
<br />
சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.<br />
<br />
சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.<br />
<br />
ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.<br />
<br />
அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.<br />
<br />
சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.<br />
<br />
தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.<br />
<br />
சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலைபேிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்<br />
<br />
<b>* தூத்துக்குடியை வளப்படுத்தும் கொழும்பு கப்பல் சர்வீஸ்<br />
<br />
<img alt="large_258954.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.3&disp=emb&realattid=ii_130a04c4b3698483&zw" title="large_258954.jpg" /></b><br />
தூத்துக்குடியில் இருந்து, கொழும்புக்கு பயணிகள் கப்பல் சர்வீஸ் துவக்கப்பட்டிருக்கிறது. கடந்த 104 ஆண்டுகளுக்குப் பின் துவங்கப்பட்ட இந்த சர்வீஸ், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., கண்ட கனவை மெய்பிக்கும் நல்ல பணி. முதல் பயணிகள் கப்பலாக, "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல் பயணித்ததை, மக்கள் ஆர்வமுடன் வரவேற்றுள்ளனர். விமானச் சேவையை விட குறைந்த கட்டணம் கொண்ட இந்த பயணிகள் கப்பல் சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வாசன் துவக்கி வைத்திருக்கிறார்.<br />
<br />
இன்று இலங்கை - இந்திய உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதல், அங்கு தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றங்கள் பெரிதாக உருவெடுத்திருப்பதால், இந்த கப்பல் சேவை தேவையே இல்லை என, சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இன்றைய உலகச் சூழலில் அண்டை நாடுகள் என்பதை, நாம் நிர்ணயிப்பது இல்லை. பூகோள ரீதியாக ஏற்படும் இயற்கை அமைப்பாகும். பாகிஸ்தானுடன் பயணிகள் போக்குவரத்தும், ஓரளவு வர்த்தகப் பரிமாற்றமும் இன்னமும் நடக்கிறது. சீனா - இந்தியா எல்லையில் லாசா பகுதியில், வர்த்தகப் பரிமாற்றம் நடக்கிறது. ஏனெனில், "சார்க்' நாடுகள் வர்த்தகப் பரிமாற்ற அடிப்படையில், இந்தியா தனது சிறப்புத் தன்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அதையும் விட, தூத்துக்குடி துறைமுகம் அதிக அளவில் வர்த்தகம் கையாளும் துறைமுகமாக மாறிய பின், அங்கு பொருளாதாரப் புழக்கம் அதிகரித்திருக்கிறது. அதற்கு கொழும்பு - தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து சர்வீஸ் நிச்சயம் அதிக மதிப்பைத் தரும். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வர்த்தகம் விரிவடைய, இந்த சர்வீஸ் அதிக உதவி புரியும். இனி நாட்கள் செல்ல செல்ல அதிக அளவில் சுற்றுலா செல்பவர்கள், சிறிய வர்த்தகர்கள் இந்த சர்வீசைப் பயன்படுத்துவர். இலங்கைக்கு தேவைப்படும் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவைகளை, அதிக அளவில் இனி இங்கிருந்து அனுப்ப, இந்த கப்பல் சர்வீஸ் பயன்படுத்தப்படும்.<br />
<br />
மேற்கு மாவட்டத்தில் உள்ள, சிறிய குறு தொழிலதிபர்கள், இந்த சேவையை அதிகம் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே தூத்துக்குடி முக்கிய வர்த்தகக் கேந்திரமாக மாறி வருகிறது. இதனால், வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். அங்கு தற்போது நடைபெறும் குற்ற எண்ணிக்கைகள் கூட குறையலாம். இந்த கப்பல் சர்வீஸ் மூலம், இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கப்பல் விட, மத்திய அரசு அதிகம் சிந்திக்க, இது முன்னோடியாகும். அதே சமயம், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அல்லது கடத்தலில் ஈடுபடுவோர் அபாயம் ஏற்படும் என்பது, இந்த சர்வீசை முடக்கும் செயலாகும். விமான சர்வீஸ் வளர்ந்துவிட்டது. அதில் அதிகம் குற்றச் செயல்கள் நடப்பதை, செய்திகள் காட்டுகின்றன. இந்த கப்பல் சர்வீசில், ஏன் உரிய நடைமுறைகள் மூலம், அம்மாதிரி தவறுகளைத் தடுக்க முடியாது? அதைத் தடுக்க, நவீன சட்ட திட்ட நடைமுறைகள் இருக்கும் போது ஏன் வீண் பீதி. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு வசதியாக, பல்வேறு போக்குவரத்து வசதிகளை முறைப்படுத்தும் போது, இந்தக் கப்பல் சர்வீஸ், எதிர்காலத்தில் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் அதிக உதவி புரியும்.<br />
<br />
தென் மாவட்டங்களில் தொழில் துறை அதிகம் வளராத நிலையில், இந்த கப்பல் சர்வீசையும் இனி நிறுத்திவிட்டால், அது வளர்ச்சியின் அறிகுறியாக அமையாது என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. கால வளர்ச்சிக்கு ஏற்ப, நவீன உத்திகளும், வசதிகளையும் மக்களுக்கு தராமல் தடுப்பது, இப்பகுதியில் வேலைவாய்ப்பை குறைக்கும் செயலாகும். இந்த கப்பல் சர்வீசால் தூத்துக்குடிக்கு, அதிக பொருளாதார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது.<br />
<br />
<b>* மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச வழக்கு-கைதாகிறார்?<br />
<br />
<img alt="17-mayor-thenmozhi300.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a0590e54660a6&attid=0.1&disp=emb&realattid=ii_130a04b632ece01e&zw" title="17-mayor-thenmozhi300.jpg" /></b><br />
மதுரை: மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிமிரத்து கொள்ள உதவியதாக மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.<br />
<br />
அவருக்குத் துணை போனதாக மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
திமுக இலக்கிய அணிச் செயலாளரான சுந்தரராஜன் மதுரை மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இந்த இடத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேயரின் தலையீட்டால் சர்வேயர் குருசாமி லஞ்சம் வாங்கிக் கொண்டு இடத்தை சுந்தரராஜனுக்கு கிரையம் செய்ததாக மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயராமன் என்பவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.<br />
<br />
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட் கடந்த 14ம் பிறப்பித்த உத்தரவில், இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதால் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.<br />
<br />
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன், காண்ட்ராக்டர் மாணிக்கம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.<br />
<br />
லஞ்சம் வாங்குதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.<br />
<br />
தேன்மொழி உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.<br />
<br />
<b>* திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு<br />
</b><br />
<br />
சென்னை, ஜூன் 17: திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.<br />
<br />
இதன்படி சென்னை மாவட்டத்தில் எல்.கே.ஜி.-யில் குழந்தையைச் சேர்க்க அதிபட்சமாக ரூ. 24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சீதாபதி நகரில் உள்ள சன்ஷைன் மான்டிசோரி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.<br />
<br />
வகுப்புகளுக்கான கட்டணமாக ரூ. 24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இதற்கு அடுத்தபடியாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ. 20,150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்-2 வகுப்புக்கு சென்னையிலேயே அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 15,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சூளைமேட்டில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 17,150 கட்டணமும், பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,100 கட்டணமும் நிர்ணியக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இதுபோல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரம் <a href="http://www.pallikalvi.in/" target="_blank">www.pallikalvi.in</a> இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #cc33cc;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #cc33cc;">பூண்டின் மகிமை</b><br />
<br />
பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகக்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.<br />
<br />
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடும், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.<br />
<br />
பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகும். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.<br />
<br />
காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டுப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.<br />
<br />
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.<br />
<br />
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். புற்றுநோயால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.<br />
<br />
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.<br />
<b style="color: #cc33cc;">வர்த்த்கச் செய்தி மலர் :</b><br />
<b>* சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு</b><br />
மும்பை, ஜூன்.17: இந்திய பங்குச்சந்தையில் இன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 115.35 புள்ளிகள் சரிந்து 17,870.53 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 30.35 புள்ளிகள் சரிந்து 5366.40 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.<br />
<br />
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, என்டிபிசி, டாடா பவர், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, இந்துஸ்தான் யூனிலீவர், டிஎல்எஃப், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் ஈட்டின.<br />
<br />
டிசிஎஸ், ஆர்ஐஎல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, விப்ரோ, ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, ஹீரோ ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல், பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.<br />
<br />
<b style="color: #cc33cc;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<b>* டென்னிஸ்</b><br />
<br />
<b>விம்பிள்டன்: சுலப சுற்றில் சானியா</b><br />
<br />
<img alt="sania-mirza-large_33.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a078e96dfcbb7&attid=0.3&disp=emb&realattid=ii_130a07681f26a415&zw" title="sania-mirza-large_33.jpg" /><br />
<br />
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று சானியா மிர்சா, சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களுக்கு எளிதானதாக அமைந்துள்ளது.<br />
<br />
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் வரும் 20ம் தேதி துவங்குகிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு முதல் சுற்று எளிதானதாக அமைந்துள்ளது. டபிள்யு.டி.ஏ., ரேங்கிங் பட்டியலில் 60வது இடத்தில் உள்ள சானியா முதல் சுற்றில், 98வது இடத்தில் உள்ள பிரான்சின் விர்ஜினி ரசானோவை சந்திக்க உள்ளார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றில் உலகின் "நம்பர்-1' வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்க வேண்டியிருக்கும்.<br />
<br />
இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஏ.டி.பி., ரேங்கிங்கில் 68வது இடத்தில் உள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 110வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டெனிஸ் கிரிமெல்மேயரை சந்திக்க உள்ளார். இதில் வெற்றி பெறும்பட்சத்தில் இரண்டாவது சுற்றில் ஜுயன் மொனாகோ (அர்ஜென்டினா) அல்லது ரஷ்யாவின் மிக்கேல் யோஸ்னியை சந்திக்க வேண்டியிருக்கும்.<br />
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா (இந்தியா)-குரேஷி (பாகிஸ்தான்) உள்ளிட்ட ஜோடிகளுக்கு முதல் சுற்று எளிதானதாக அமைந்துள்ளது. இதேபோல பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடிக்கு முதல் சுற்று சுலபமாக அமைந்துள்ளது.<br />
<br />
*<b> கிரிக்கெட்</b><br />
<br />
<b>கோப்பை வென்றது இளம் இந்தியா! * ஐந்தாவது போட்டியில் வெ.இண்டீஸ் வெற்றி</b><br />
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இருப்பினும் தொடரை 3-2 என வென்ற இளம் இந்திய அணி, கோப்பையை கைப்பற்றியது.<br />
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று முன்தினம், ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு, விராத் கோஹ்லி (94), ரோகித் சர்மா (57) கைகொடுத்தனர். 47.3 ஓவரில் இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.<br />
<br />
சற்று கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சர்வான் (75), டேரன் பிராவோ (86) ஸ்கோரை உயர்த்த உதவினர். பின் வந்த போலார்டு (24), சாமுவேல்ஸ் (28) இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்க, 48.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு, 255 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்திய அணி 3-2 என தொடரை வென்றது.<br />
<br />
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரெய்னா கூறியது:<br />
முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பேட் செய்தேன். ஆனால் கடந்த மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஐந்தாவது போட்டியில் குறைந்தது 10 முதல் 15 பந்துகளை சந்தித்தபின், அடித்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால், விரைவாக அவுட்டாகிவிட்டேன்.<br />
பாடம் கற்றேன்:<br />
<br />
கடந்த இரண்டு போட்டிகளில் மோசமான "ஷாட்' அடித்து அவுட்டானேன். அதாவது பவுலர்களின் தலைக்கு மேலாக பந்துகளை அனுப்ப நினைத்தது தவறாகி போனது. இந்த போட்டிகளில் இருந்து நல்ல பாடம் கற்றுள்ளேன், எனது செயலுக்கு மன்னிப்பே இல்லை. ஏனெனில் பின் வரிசையில் களமிறங்கும் போது, பொறுப்பான ஆட்டத்தை தர வேண்டும்.<br />
தயாராக உள்ளேன்:<br />
<br />
இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். "டுவென்டி-20', ஒருநாள் மற்றும் டெஸ்ட் என பலவித போட்டிகளுக்கு ஏற்ப தயாராகத்தான் உள்ளேன். இந்த போட்டிகள் முடிந்து தூங்கச் செல்லும் போது, எனது ஆட்டத்திறன் திருப்தியாக இருப்பதாக உணர்கிறேன். மற்றபடி அதிக போட்டிகளில் விளையாடுவதால், சரியான திறமை வெளிப்படுத்த முடியவில்லை என்ற கருத்தில் உடன் பாடில்லை.<br />
ரோகித்துக்கு பாராட்டு:<br />
<br />
இத்தொடரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன். தவிர, ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில் பொறுப்பாக செயல்பட்ட பவுலர்களுக்கு நன்றி.<br />
டெஸ்ட் போட்டி துவங்கும் முன், பயிற்சியாளர் மற்றும் சீனியர்களுடன் ஆலோசித்து, பேட்டிங்கில் எனது தவறுகளை திருத்திக் கொண்டு, மீண்டு வருவேன்.<br />
<br />
இவ்வாறு ரெய்னா கூறினார்.<br />
<br />
<b style="color: #cc33cc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #cc33cc;">* அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்</b><br />
மூலவர் : ஆஞ்சநேயர் -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு மு -<br />
ஊர் : நாமக்கல்<br />
மாவட்டம் : நாமக்கல்<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.<br />
<br />
இச்சன்னதியின் பக்கவாட்டு சுவர்களிலுள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
குடவறை நரசிம்மர்: இது ஒரு குடவறை சிற்பம். கூரிய நகங்களுடன் இருக்கும் இவர், இரணியனை சம்ஹாரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.<br />
<br />
தாயார் சிறப்பு: நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்தால், "லட்சுமி நரசிம்மர்' என்றழைக்கப் படுவார். ஆனால், லட்சுமி இவரது மடியில் இல்லாமல், மார்பில் இருக்கிறாள். நாமகிரி தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவளை வணங்கிட, கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.<br />
<br />
பக்த ஆஞ்சநேயர்: சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோயில் எதிரே தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார்.<br />
<br />
இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார்.<br />
<br />
அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காண தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.<br />
<br />
குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.<br />
<br />
தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் "லட்சுமி நரசிம்மர்' எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
பங்குனியில் 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர், தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே சுவாமி, தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கிறது.<br />
<br />
பிரார்த்தனை<br />
<br />
<br />
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<br />
<b style="color: #cc33cc;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #cc33cc;">நமக்கு அடிகள் விழுவதற்குக் காரணம் - அன்னை</b><br />
<br />
"என் மீது அன்பு கொண்ட பரமனே என்னை அடி. இப்பொழுது நீ என்னை அடிக்கவில்லையானால் உனக்கு என் மீது அன்பு இல்லை என்பதையே அது காட்டும்" - அரவிந்தர்<br />
<br />
தெய்வீகப் பூரணத்தை அடைய விரும்பும் அனைவரும் இறைவன் தன்னுடைய எல்லையற்ற அன்பினாலும் அருளினாலும் நமக்குக் கொடுக்கும் அடிகளே நம்மை முன்னேறச் செய்வதற்கு மிக நிச்சயமான, மிக விரைவான வழி என்பதை அறிவார்கள்.<br />
<br />
இதற்கு மாறாக சாதாரண மனிதர்கள் எப்பொழுதும் கஷ்டமில்லாத, சுகமான, வெற்றிகரமான வாழ்க்கையைக் கொடுக்கும்படியே இறைவனைக் கேட்பார்கள். தங்களுடைய சொந்த திருப்தி ஒவ்வொன்றிலும் அவர்கள் தெய்வ அருளைக் காண்பார்கள். மாறாக வாழ்க்கையில் துக்கமும் துரதிருஷ்டமும் ஏற்பட்டால் அவர்கள் குறைபட்டுக்கொள்வார்கள். "இறைவா, உனக்கு என் மீது அன்பு இல்லை" என்று சொல்வார்கள்.<br />
<br />
இந்த முதிர்ச்சியடையாத, அறிவற்ற மனப்பான்மைக்கு எதிர்மறையாக ஸ்ரீ அரவிந்தர் தெய்வக் காதலனிடம் "அடி, பலமாக அடி, உனக்கு என் மீது எவ்வளவு தீவிரவமான அன்பு உள்ளது என்பதை நான் உணரட்டும்" என்கிறார். <br />
<br />
<b style="color: #cc33cc;">வினாடி வினா :</b><br />
<br />
வினா - இந்தியாவின் டெட்ராய்ட் என எனப்படும் இந்திய மாநிலம் எது ?<br />
<br />
விடை - மத்தியப் பிரதேசம்.<br />
<br />
<b style="color: #cc33cc;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் ரோபோ: புதுச்சேரி கல்லூரி மாணவர்கள் சாதனை<br />
<br />
<img alt="large_259503.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a078e96dfcbb7&attid=0.2&disp=emb&realattid=ii_130a0714e6f71f9d&zw" title="large_259503.jpg" /></b><br />
புதுச்சேரி: புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் "பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.<br />
<br />
இந்தியாவில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்ய சாதாரண வழிமுறையே பின்பற்றப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு விடுகிறது. வெடிகுண்டுகளை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை, புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியுள்ளனர். ரோபோ செயல்பாடு குறித்து நேற்று லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி துணை சேர்மன் ஜான்குமார் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பாம் டிடெக்டிவ் ரோபோ ஆர்.எப்., ட்ரான்ஸ்மீட்டர், ஆர்.எப்., ரிசீவர் என இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் ரிமோட் கன்ட்ரோலாகவும், ஆ.எப். ரிசீவர் ரோபோவாகவும் இயங்குகின்றன. ஆர் .எப். ரிசீவர் இரண்டு பேட்டரி, ஒரு ஆர்.எப். கன்ட்ரோல், மனிதர்கள் நடமாட்டத்தை கண்டறியும் யூமன் சென்சார், ஒயர்லெஸ் காமிரா, நிறங்களை கண்டறியும் கலர் சென்சார், வெடிகுண்டுகளை அலாக்காக தூக்கும் ஹேண்டல் கொக்கிகள் என நவீன கருவிகள் தேவைக்கேற்ப இருப்பு பலகையில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுழலும் மூன்று சக்கரங்கள் உதவியுடன் தேவைக்கேற்ப நகர்த்த முடியும் என்பது இதன் சிறம்பம்சம். ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் எழுப்பும் சமிக்கைகள் ஆர்.எப். ரிசீவரை அடைந்து பாம் டிடெக்டிவ் ரோபோவை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவை ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் அதிகபட்சமாக 25 மீட்டர் தொலைவு வரை நகர்த்த முடியும். இதன் மூலம் 25 மீட்டர் தொலைவில் இருந்தபடி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து பாதுகாப்பாக வெளியேற்றி அழிக்க முடியும்.<br />
<br />
இது குறித்து குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில்; பாம் டிடெக்டிங் ரோபோவில் மேலும் சில நவீன கருவிகளை புகுத்தினால் மழை துளிகள், அதிர்வுகளை உணரும் வகையில் கூட தயாரிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள ஒயர்லெஸ் காமிரா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கூட துல்லியமாக காட்டி கொடுத்து விடும். இதனை தேவைக்கேற்ப வீடியோவில் பதிவு செய்து கொள்ளலாம். கலர் சென்சார் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறங்களை கண்டறிந்து சமிக்கை கொடுக்கும். இதற்காக மைக்ரோ கன்ட்ரோல் ஐ.சி., இணைத்து புரோகிராம் செய்துள்ளோம். இதனை சோதனை ஓட்டமாகவும், மாணவர்களுக்கு ரோபோ குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிமுகப் படுத்தியுள்ளோம்.இது செயல்பாட்டிற்கு வந்தால் மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் என்றார்.<br />
<br />
*<b> "ஆத்ம திருப்தி ஏற்படுகிறது!' </b><br />
<br />
<img alt="large_259390.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130a078e96dfcbb7&attid=0.1&disp=emb&realattid=ii_130a07193be23711&zw" title="large_259390.jpg" /><br />
<br />
அரை கோடி புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ள பாண்டியன்: என் சொந்த ஊர் தேவகோட்டை. படிப்பு முழுவதும் சென்னையில் தான். என் உறவினர்கள் பலரும் பதிப்பகம் நடத்தி வருவதால், எனக்கும் நூலின் மீது தீரா காதல். எனவே, பழைய நூல்களை சேகரித்து வந்தேன். ஆரம்ப காலத்தில், வீடு வீடாக பேப்பர் போட்டு வந்தேன். அதன்பின், பேப்பர் ஏஜன்சி நடத்தினேன். என் கவனம் முழுவதும், நூலின் மீதே இருந்தது. இதனால், என் தந்தை, நூலகத்திலேயே எனக்கு வேலை வாங்கித் தந்தார். ஆனால், அங்கும் வேலை ஓடவில்லை. காரணம், அங்கு புதிய புத்தகங்கள் இருந்தன. என் சேகரிப்பில் இருந்த புத்தங்களை வைத்து, புத்தகக் கடை ஆரம்பித்தேன். 30 வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது, சென்னையில் உள்ள கல்வியாளர்கள், சினிமா இயக்குனர்கள், புத்தக பிரியர்கள் என பலருக்கும் என்னைத் தெரியும். தற்போது, அரை கோடி நூல்கள் வரை வைத்துள்ளேன். இவ்வளவு நூல்களை, நான் ஒருவனே சேகரித்தேன். எனக்கென எந்த பக்கபலமும் இல்லை. பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், புத்தகம் தேவை என்றால் என்னை அணுகுவர். இந்த தொழிலில் வருமானம் பெரிதாக எதுவும் கிடைப்பதில்லை. ஆனால், என்னிடம் புத்தகம் வாங்கி படித்து, போட்டி தேர்வில் வென்று வேலைக்கு சேர்ந்தவர்கள் யாரும் என்னை மறப்பதில்லை. இந்த ஆத்ம திருப்திக்காக தான், இன்றளவும் இப்பணியை செய்கிறேன். ஆனால், எனக்கு ஒரு மனக்குறை உண்டு. இப்போதெல்லாம், வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. "டிவி'யையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதனால், எந்த பயனும் ஏற்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - வெப்துனியா, சமாச்சார், தின மணி.</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-64894089344258793752011-06-15T08:21:00.001+05:302011-06-15T08:21:14.729+05:30இன்றைய செய்திகள் - ஜூன் , 15, 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #00cccc;">முக்கியச் செய்தி </b>:<br />
<br />
<b>1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு</b><br />
<br />
<img alt="sc.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.2&disp=emb&realattid=ii_13090ccddecea0e7&zw" title="sc.jpg" /><br />
<br />
டெல்லி: தமிழகத்தில் இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும் இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது.<br />
<br />
ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.<br />
<br />
இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.<br />
<br />
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.<br />
<br />
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.<br />
<br />
கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.<br />
<br />
இந்த மனு நீதிபதிள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.<br />
<br />
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:<br />
<br />
1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.<br />
<br />
இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.<br />
<br />
2 வாரத்திற்குள் இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.<br />
<br />
உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #00cccc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> அமெரிக்காவில் 17ம் தேதி முதல் 10வது தமிழ் இணைய மாநாடு</b><br />
<br />
<img alt="14-tamil-internet-conference30.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.7&disp=emb&realattid=ii_13090cbf7331d23f&zw" title="14-tamil-internet-conference30.jpg" /><br />
<br />
சென்னை: 10வது தமிழ் இணைய மாநாடு, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. ஜூன் 17ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 10 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.<br />
<br />
சிறுவர் திருக்குறள் போட்டி<br />
<br />
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சிறுவர் திருக்குறள் போட்டி நடக்கிறது. கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் குறுந்தகடுகளும் பார்வைக்காக வைக்கப்படுகிறது.<br />
<br />
தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு<br />
<br />
இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, செர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படிக்கின்றனர். இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்துள்ள விதம், தமிழ் மென்பொருள்கள் பற்றி விவாதிக்கின்றனர்.<br />
<br />
மேலும் மு.அனந்தகிருட்டினன், பொன்னவைக்கோ, பென்சில்வேனியா பல்கலை தெற்கு ஆசிய துறைத்தலைவர் தாவூத் அலி, பேராசிரியர் ஹெரால்டு ஷிப்மன், பேராசிரியர் அண்ணாமலை, பிரான்சு பேராசிரியர் ஏ.முருகையன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு, கனடா பேராசிரியர் செல்வகுமார், ஈழத்தின் சிவா அனுராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.<br />
<br />
இந்த தகவலை அமெரிக்கா பன்னாட்டுக்குழு தமிழ் இணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
பேராசிரியர் மு.இளங்கோவனும் பங்கேற்பு:<br />
<br />
இந்த மாநாட்டில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் தமிழ் இணையத்துறையில் முன்னோடியுமான முனைவர் மு.இளங்கோவனும் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளார்.<br />
<br />
இணையவழித் தமிழ்ப் பாடங்கள் என்ற தலைப்பில் அவர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறார்.<br />
<br />
இன்றைக்கு வகுப்பறையில் நடக்கும் தமிழ்ப்பாடங்கள் எதிர்காலத்தில் இணையத்தில் நடைபெற உள்ளன. இன்றும் நூற்றுக்கணக்கான இணைய தளங்களில் தமிழ்ப்பாடங்கள் உள்ளன. இலவசமாகவும், கட்டணம் கட்டியும் இந்தப் பாடங்களைப் படிக்கலாம். வெளிநாட்டு மாணவர்களும் தமிழ்மாணவர்களும் தமிழ் படிக்க உதவும் வகையில் உள்ள இந்தப் பாடங்களில் தமிழ் அகரவரிசை, பேச்சுத்தமிழ், உரையாடல், தமிழர் பண்பாட்டுக்கூறுகள் உள்ளன.<br />
<br />
திரைப்படங்களில் இடம்பெறும் இலக்கியப்பாடல்கள் கொண்டு இணையதளங்களில் தமிழ்ப்பாடங்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களில் உள்ள நிறை குறைகளை எடுத்துக்காட்டி முழுமையான தமிழ்ப்பாடங்களை எப்படி வடிவமைப்பது என்று இளங்கோவன் தம் ஆய்வுக்கட்டுரையில் விளக்கவுள்ளார்.<br />
<br />
இளங்கோவனின் தமிழ் இணையப் பணிகளைப் பாராட்டும் வகையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா அமைப்பு இந்த ஆண்டு நடத்தும் மூன்று நாள் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக இவரை அழைத்துப் பாராட்டவுள்ளது.<br />
<br />
தெற்குக் கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ள்ஸ்டன் நகரில் இந்த ஆண்டு நடைபெறும் பெட்னா விழாவில் இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளார். மேலும் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், நியூசெர்சி, வடக்குக் கரோலினாவில் நடைபெறும் தமிழ் விழாக்களிலும் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றுச் சிறப்புரையாற்ற உள்ளார்.<br />
<br />
<b>* வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை<br />
<br />
<img alt="14-obama300-1.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.6&disp=emb&realattid=ii_13090cab39ee4fea&zw" title="14-obama300-1.jpg" /></b><br />
வாஷிங்டன்: இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுவதில் முன்னணி பெற்றுவருகிறார்கள். எனவே இனி அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அமெரிக்கர்களை அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.<br />
<br />
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் களத்தில் பணிக்கு பொருத்தமானவர்களை கண்டறிவது அமெரிக்க நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல அடையாளம் அல்ல என ஒபாமா வட கரோலினா, டர்ஹாமில் பேசும்போது தெரிவித்தார்.<br />
<br />
இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் 4-க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு ஆசியர்கள்தான் வரவேண்டியுள்ளது.<br />
<br />
திறன்வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல," என்று ஒபாமா குறிப்பிட்டார்.<br />
<br />
<b>* தவறான இந்திய வரைபடத்தை ஆஸ்திரேலியா வாபஸ்: இந்தியர்கள் மகிழ்ச்சி</b><br />
மெல்போர்ன்: தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களின் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுள்ளது.<br />
<br />
அன்மையில் ஆஸ்திரேலிய அரசு இந்திய வரைபடத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இல்லை. இதற்கு இந்தியா கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களும் போராட்டம் நடத்தினர்.<br />
<br />
இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தவறான வரைபடத்தை இணையதளத்தில் இருந்து எடுத்தது.<br />
<br />
இது குறித்து ஆஸ்திரேலிய அரசு அளித்துள்ள விளக்கம்,<br />
<br />
இந்திய வரைபடத்தை ஐ.நா. விடம் இருந்து பெற்றோம். அதை சரியாகத் தெரியாமல் இணையதளத்தில் வெளியிட்டுவிட்டோம். இந்த செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.<br />
<br />
இந்திய வரைபடத்தை வாபஸ் பெற்றதற்காக சிட்னியில் உள்ள இந்தியர்கள், இந்திய ஆஸ்திரேலிய கவுன்சில் ஆகியவை மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.<br />
<br />
*<b> நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-கட்டடங்கள் இடிந்தன</b><br />
கிறிஸ்ட் சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சில கட்டடங்கள் சேதமடைந்தன. மீட்பபுப் படையினர் விரைந்து சென்று அதில் சிக்கியவர்களை மீட்டனர்.<br />
<br />
ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டடங்கள் அதிர்ந்தன. சில கட்டடங்களில் சேதம் ஏற்பட்டு இடிந்தன. இதையடுத்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். கிறிஸ்ட்சர்ச் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.<br />
<br />
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, யாரும் காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
கடந்த பிப்ரவரி மாதம் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 181 பேர் அதற்குப் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.<br />
<br />
<b>* சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பு<br />
</b>வாசிங்டன், ஜூன். 14-<br />
<br />
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார்.<br />
<br />
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக வாசிங்டனில் நடைபெற்ற வெளியுறவுத்துறை குறித்த கருத்தரங்கில் அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார். சீனா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் நீண்ட கால நட்புறவே இதற்கு உதாரணமாகும் என தெரிவித்தார்.<br />
<br />
மேலும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிகாரி ஜான் கெர்ரி பேசுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் சீனா தலைசிறந்த நட்பு நாடு என்று பாராட்டியுள்ளதையும் குறிப்பிட்டார்.<br />
<br />
<b>* இலங்கையின் கொலைக்களம்" - பிரிட்டன் பத்திரிகைகளில் விளம்பரம்</b><br />
<br />
<img alt="four.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.5&disp=emb&realattid=ii_13090c84e525fdeb&zw" title="four.jpg" /><br />
<br />
கொழும்பு, ஜூன் 14- "இலங்கையின் கொலைக்களம்" என்னும் தலைப்பில் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை பிரிட்டனின் "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது. இதுகுறித்த விளம்பரங்கள் அந்த தொலைக்காட்சி சார்பில் பிரிட்டனின் முக்கியப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.<br />
<br />
த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br />
<br />
ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும் பணத்தை செலவழித்து இவ்வாறு பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
இதனிடையே, ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.<br />
<br />
*<b> ஷீலா தீட்சித் குறித்து கேலி: நியுஸிலாந்து டிவிக்கு அபராதம்</b><br />
<br />
மெல்போர்ன், ஜூன்.14: கடந்த அக்டோபர் மாதம் ஒரு நிகழ்ச்சியின்போது தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து கேலியாக கருத்து வெளியிட்டதற்காக நியுஸிலாந்து டிவிக்கு 2444 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒரு நிகழ்ச்சியின்போது நியுஸிலாந்து டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பால் ஹென்றி தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் பெயரை வெவ்வேறு பொருள்படி கேலியாகக் குறிப்பிட்டார்.<br />
<br />
இதற்கு கண்டனம் தெரிவித்த ஒளிபரப்பு தர ஆணையம், கண்ணியத்தை மீறியதற்காக 2444 நியுஸிலாந்து டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.<br />
<br />
பால் ஹென்றியின் கருத்து ஷீலா தீட்சித்துக்கும், இந்திய மக்களுக்கும் தீங்கிழைப்பதாகும் என ஒளிபரப்பு தர ஆணையம் தெரிவித்தது.<br />
<br />
முன்னதாக கடந்த ஆண்டு ஷீலா தீட்சித்தை கேலி செய்ததற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த டிவி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<b>* குஜராத் கலவரத்தால் பயங்கரவாதி ஆனேன்: ஹெட்லி</b><br />
வாஷிங்டன், ஜூன் 14: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் பயங்கரவாதி ஆனதாக லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.<br />
<br />
இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட அந்த விடியோ காட்சிகளை எனக்கு அடிக்கடி காண்பித்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.<br />
<br />
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.<br />
<br />
மும்பை தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்துள்ளார்.<br />
<br />
இந் நிலையில், லஷ்கர்-இ-தொய்பா தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது குறித்து நீதிமன்றத்தில் அண்மையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.<br />
<br />
"லஷ்கர் அமைப்பின் தலைமையிடமான பாகிஸ்தானின் முஸôபராபாத் நகரில் நடைபெற்ற பயங்கரவாத முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர விடியோ காட்சிகளை காண்பித்து என்னைப் போன்றோரை இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்.<br />
<br />
குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.<br />
<br />
விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் பாபா பஜ்ரங்கி கூறுகிறார்.<br />
<br />
பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். பல வாரங்களாக அந்த விடியோ காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள்.<br />
<br />
ஒவ்வொரு விடியோவும் முடிந்த பின்னரும் அது குறித்து விவாதித்து இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள டேவிட் ஹெட்லி, மும்பையின் முக்கிய பகுதிகளை வேவு பார்த்து நகரின் வரைபடங்கள், விடியோ, புகைப்படங்களை லஷ்கர் இயக்கத்துக்கு அனுப்பினார்.<br />
<br />
அதன் அடிப்படையிலேயே மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.<br />
<br />
<br />
<b style="color: #00cccc;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>*கங்கையை காக்க 115 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சாது மரணம்<br />
<br />
<img alt="14-swami-nigamananda300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.4&disp=emb&realattid=ii_13090c653a07bfaf&zw" title="14-swami-nigamananda300.jpg" /></b><br />
டேராடூன்: கங்கை நதி மாசுபடுவதை தடுத்து அதைக் காக்கக் கோரி கடந்த 115 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சாது இன்று மரணடைந்தார்.<br />
<br />
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த சுவாமி நிகாமனானந்த் கங்கை நதி மாசுபடுவதை தடுக்கக் கோரியும் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கல் குவாரிகளை அகற்றக் கோரியும் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நான்கு மாதங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.<br />
<br />
அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போல இவர் குறித்த தகவல்களை வட இந்திய மீடியாக்கள் பெரிதாக வெளியிடவில்லை.<br />
<br />
இந் நிலையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.<br />
<br />
ஆனால், கடந்த மே மாதம் 2ம் தேதிஅவர் கோமாநிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.<br />
<br />
உண்ணாவிரதம் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட பாபா ராம்தேவும் இதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
அந்த இரவில் நடந்ததை நாடு மறக்காது-ராம்தேவ்:<br />
<br />
இந் நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து ஆசிரமம் திரும்பிய ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ஊழலுக்கு எதிராக இந்தியா விழித்துக் கொண்டுவிட்டது. எனினும் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக நான் தொடர்ந்து போராட உள்ளேன்.<br />
<br />
எனது உண்ணாவிரதப் போராட்டத்தை போலீஸை விட்டு தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். அந்த இரவில் நடந்ததை இந்தியா ஒருபோதும் மறக்காது. அது ஒரு கறுப்பு இரவு. அமைதியாக போராடியதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்றார்.<br />
<br />
<b>* ஸ்பெக்ட்ரம் ஊழல் அறிக்கை: ஜோஷியின் அறிக்கையை நிராகரித்த சபாநாயர் மீரா</b><br />
<br />
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகமே பொறுப்பு என்று குற்றம் சாட்டி நாடாளுமன்ற பொதுக் குழுவின் தலைவராக இருந்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி அனுப்பிய 270 பக்க அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்து ஜோஷிக்கே திருப்பி அனுப்பி விட்டார்.<br />
<br />
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இருந்த நாடாளுமன்றப் பொது கணக்கு குழு விசாரித்தது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிக் காலம் முடிவதற்கு 1 நாள் முன்பதாக, இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல் தானே ஒரு அறி்க்கையை தயார் செய்தார் ஜோஷி.<br />
<br />
அதில் மத்திய அரசையும் பிரதமர் அலுவலகத்தையும் கடுமையாக குறை கூறியிருந்தார் ஜோஷி. பிரதமர் அலுவலகமே 2ஜி ஊழலுக்குப் பொறுப்பு என குற்றம் சாட்டியிருந்தார். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசா இந்த ஊழலை செய்யாமல் தடுக்க பிரதமர் அலுவலகமும் மத்திய அமைச்சரவை செயலாளரும் தவறிவிட்டனர் என்று அதில் ஜோஷி கூறியிருந்தார்.<br />
<br />
இதை மிகக் கடுமையாக எதிர்த்த குழுவின் இருந்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள், ஜோஷியின் அறிக்கையை ஏற்க மறுத்து கலாட்டா செய்தனர். இதையடுத்து அவர் வெளிநடப்பு செய்யவே, அவரை பதவியை விட்டு நீக்க தீர்மானம் போட்டனர்.<br />
<br />
ஆனாலும் தனது குழுவினரால் நிராகரிக்கப்பட்ட அந்த அறிக்கையை ஜோஷி சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பி வைத்தார்.<br />
<br />
அந்த அறிக்கையை தற்போது சபாநாயகர் மீராகுமார் நிராகரித்து ஜோஷிக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.<br />
<br />
<b>* பிரம்மபுத்ரா குறுக்கே சீனா அணை : பாதிப்பு வராது என்கிறார் கிருஷ்ணா<br />
<br />
<img alt="large_257781.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.1&disp=emb&realattid=ii_13090c3f19c3ddde&zw" title="large_257781.jpg" /><br />
</b><br />
புதுடில்லி : ""பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டியிருப்பதால், இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைந்துள்ளது.<br />
<br />
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "திபெத்தில் உள்ள சாங்மு என்ற இடத்தில், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, நீர்மின் திட்டத்துக்காக சீனா அணை கட்டியுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையால், நம் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவில், உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரம்மபுத்ரா நதியின் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள், இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ளது. எனவே, இந்த விஷயம் முக்கியமானதாகும். பிரம்மபுத்ரா நதி நீரை சீனாவின் வடக்கு பகுதிக்கு மடை மாற்றம் செய்வது அந்நாட்டின் நீண்ட நாள் திட்டம். எனவே, இது புதிய தகவல் அல்ல. இருப்பினும் இந்த விஷயம் குறித்து அந்நாட்டிடம் தூதரக மட்டத்தில் விவாதிக்கப்படும். பிரம்மபுத்ரா நதி விவகாரத்தால் கார்கில் போன்ற சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடாது. ஏனென்றால், நம் எல்லைபுறம் மிகுந்த கண்காணிப்பில் உள்ளது. ராணுவ மட்டுமல்ல, மற்ற ஏஜன்சிகளும் எல்லைபுறத்தை கண்காணிக்கின்றன' என்றார். கசகஸ்தானில் நடக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க கிருஷ்ணா சென்றுள்ளார். அங்கு சீனாவிடம் இது குறித்து விவாதிக்கப்படுமா என்பதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை.<br />
<br />
<b>* கர்நாடகம்: இரும்புத் தொழிற்சாலைக்கு பறிபோகும் மூலிகை மலை?<br />
<br />
<img alt="hill.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.3&disp=emb&realattid=ii_13090c446172faca&zw" title="hill.jpg" /></b><br />
ஹூப்ளி, ஜூன் 14- கர்நாடக மாநிலம், கடாக் மாவட்டத்தில் உள்ள கப்பட்டா மலைப் பகுதி மருத்துவ மூலிகைகளுக்கான சரணாலயப் பகுதியாக சமீபத்தில் மாநில அரசால் அறிவிக்கப்படது. இந்நிலையில், புதியதாக தொடங்கவுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலைக்காக திடீரென அப்பகுதியை அரசு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.<br />
<br />
கடாக் மாவட்டத்தில், முந்தர்கி தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் சார்பில் சுமார் 350 விவசாயிகளுக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
முந்தர்கி தாலுகாவில், சுமார் 7000 ஏக்கர் நிலத்தை இரும்புத் தொழிற்சாலைக்காக கையப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மூலிகை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.<br />
<br />
தென் இந்தியாவில், மருத்துவ மூலிகைகளுக்கான சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்ட முதல் இடம் கப்பட்டா மலைப் பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதை இரும்புத் தொழிற்சாலைக்காக திடீரென அரசு கையகப்படுத்த முயல்வது அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இயற்கை நல அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. <br />
<br />
<b style="color: #00cccc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியம் தேவை: முதல்வர் ஜெயலலிதா<br />
<br />
<img alt="jaypm.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.10&disp=emb&realattid=ii_13090c262f8bc4db&zw" title="jaypm.jpg" /><br />
</b><br />
சென்னை, ஜூன் 14: பல்வேறு துறைகளிலும் தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானிய நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.<br />
<br />
30 பக்க மனு: தில்லியில் பிரதமரைச் சந்தித்தபோது 30 பக்க கோரிக்கை மனு ஒன்றை ஜெயலலிதா அளித்தார். அதில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.<br />
<br />
இலங்கைத் தமிழர்: இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க் குற்றச் செயல்களுக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br />
<br />
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் தமிழ் மக்கள் முழுதாக பங்கேற்க இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். அரசியல்சட்ட சீரமைப்பு செய்து, பொதுப் பட்டியலில் உள்ள சில அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டும். இது இலங்கைத் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.<br />
<br />
பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும்.<br />
<br />
தமிழகத்தின் மற்ற மக்களுக்கு உரிய அனைத்து சமூக நலத்திட்டங்களும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. அதற்குக் கூடுதலாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14.1 கோடி செலவாகும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும்.<br />
<br />
கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும்.<br />
<br />
மீன்பிடித் தொழில்: பூம்புகார், முகையூரில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்து ராமேஸ்வரத்தில் மீன்பிடிப் படகுகள் அதிகம் சேராமல் தவிர்க்க வேண்டும்.<br />
<br />
நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அதை பதப்படுத்திட "நடுக்கடலில் மீன் பதப்படுத்தல் வசதி' என்ற முன்னோடி திட்டத்தைத் தொடங்க ரூ.80 கோடி தர வேண்டும்.<br />
<br />
விசைப் படகுகளுக்கு டீசலுக்கான மத்திய கலால் வரி விலக்கு தருவதற்கான விதிகள் நடைமுறைக்குப் பொருந்தாமல் உள்ளன. எனவே அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.<br />
<br />
மொத்தத்தில் மீன்பிடி துறைக்கு ஒட்டுமொத்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.245 கோடியும், ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10 கோடி தொடர் செலவு நிதியும் அளிக்க வேண்டும்.<br />
<br />
கடலோர பாதுகாப்புப் படைக்கு ரூ.107 கோடியில் புதிய வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.<br />
<br />
மின்துறை: தமிழ்நாடு மின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை கடனில் இருந்து மீட்கவும், குவிந்த நட்டத்தைக் குறைக்கவும் ரூ.40 ஆயிரம் கோடி உதவியை வழங்க வேண்டும்.<br />
<br />
தமிழகத்தில் 10 இடங்களில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.<br />
<br />
கிராமங்களில் சூரியசக்தி தெருவிளக்குகள் அமைக்கவும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வீடுகளுக்கு இலவச சூரிய மின்சக்தி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
எனவே 3,000 மெகாவாட் திறனுக்கு 10 சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க, தெருவிளக்குகள் அமைக்க ரூ.45 ஆயிரம் கோடி தேவை.<br />
<br />
கூடங்குளம் அணுமின் திட்டம், நெய்வேலி அனல்மின் திட்டம்-2, கல்பாக்கம் அணுமின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br />
<br />
செய்யூரில் 4,000 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.<br />
<br />
2011 ஜூன் முதல் 2012 மே வரையில் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்துப் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.<br />
<br />
மோனோ ரயில் திட்டம்: மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.16,650 கோடி செலவாகும். இதற்கு தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் கீழ் நிதியுதவி செய்ய வேண்டும்.<br />
<br />
அடுத்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ.10,200 கோடி செலவாகும். இந்தத் தொகையை சிறப்பு மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும்.<br />
<br />
தமிழக நதிகள் இணைப்பு: தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு நதிகளுடன் இணைத்து வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், உபரி நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்வழித் தொகுப்பை உருவாக்கி வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கும் உதவியாக இருக்கும் இதற்கு ரூ.4,000 கோடி செலவாகும்.<br />
<br />
இந்திய அரசு அறிவிக்கை செய்துள்ள ஐந்து உள்நாடு நீர்வழித் தடங்களில் பழவேற்காடு ஏரியில் இருந்து புதுவை வரையிலான 132 கி.மீ. நீளமான பாதை தமிழகத்தில் வருகிறது. இது சரக்கு, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கும். இதற்கு ரூ.650 கோடி செலவாகும். இந்த தொகைகளை மத்திய அரசு வழங்க பரிசீலிக்க வேண்டும்.<br />
<br />
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயம் 5.2.2007-ல் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (கெஜட்) வெளியிடுவதுடன், அதை முழுமையாக அமல் செய்ய காவிரி நீர் நிர்வாக வாரியத்தை செயல்படுத்த வேண்டும்.<br />
<br />
கடன் சுமையைக் குறைக்க: தமிழக அரசு கடன் சுமையைக் குறைக்க ஒரு லட்சம் கோடி ரூபாயை உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதவிர மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்க வேண்டும்.<br />
<br />
முதியோர், விதவை உள்ளிட்ட 8 திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது. இவற்றில் 3 திட்டங்களுக்கு மட்டும் தலா ரூ.200 என்ற அளவில் மத்திய அரசு வழங்குகிறது. மீதியை மாநில அரசு வழங்குகிறது. எனவே மாநிலத்துக்கு சுமார் ரூ.2,556 கோடி நிதிச்சுமை ஏற்படுகிறது.<br />
<br />
எனவே மத்திய அரசின் பங்களிப்பை தலா ரூ.1,000 ஆக உயர்த்தவும், எல்லா திட்டங்களுக்கும் நிதி உதவி வழங்கவும், பயனாளிகள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பை நீக்கவும் வேண்டும். இதற்காகக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.2556.82 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.<br />
<br />
சிறப்பு பொது விநியோக திட்டம்: சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு வகைகள், எண்ணெய், மசாலாப் பொருள்கள் வழங்குவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,036 கோடி செலவாகிறது. இதில் பாதியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.<br />
<br />
தரமான மருத்துவ சேவைக்கு: மூன்றாம் நிலை மருத்துவமனைகளை மேம்படுத்தி கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்காக அடுத்த இரு ஆண்டுகளில் மத்திய அரசு சிறப்பு மானியமாக ரூ.1800 கோடி வழங்க வேண்டும்.<br />
<br />
மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்த அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.500 கோடி தேவைப்படும்.<br />
<br />
நகர்ப்புற அடிப்படை வசதிகளுக்கு: வளரும் நகர்ப்புறங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும்.<br />
<br />
நகர்ப்புறங்களின் குடிநீர் சப்ளையை மேம்படுத்த ரூ.9,500 கோடி தேவைப்படும்.<br />
<br />
சாலை வசதியை மேம்படுத்த ரூ.5,700 கோடி, பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற ரூ.1,100 கோடி தேவை.<br />
<br />
நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க, ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி தேவை. இவற்றுக்காக ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் இரண்டாம் பகுதியைத் தொடங்க வேண்டும்.<br />
<br />
சூரிய சக்தி பசுமை வீடுகள்: சூரியசக்தி மின் வசதியுள்ள பசுமை வீடுகள் கட்ட ஆண்டுக்கு ரூ.1,125 கோடி தர வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்சார வசதி செய்ய ரூ.300 கோடி சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.<br />
<br />
இவை உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.<br />
<br />
<b>* உள்ளாட்சித் தேர்தல்: மாநில ஆணையம் ஆலோசனை</b><br />
<br />
சென்னை, ஜூன் 14- உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.<br />
<br />
இக்கூட்டத்திற்கு மாநிலத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.<br />
<br />
<b>* பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறை அறிமுகம்<br />
<br />
<img alt="school.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.9&disp=emb&realattid=ii_13090c08800f9997&zw" title="school.jpg" /></b><br />
சென்னை, ஜூன் 14: தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.<br />
<br />
பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு பயிற்றுவிக்கும் முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.<br />
<br />
இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால், மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்தத் தரத்தை ஆராய்வதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்துள்ளதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />
<br />
2005-ம் ஆண்டு தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆகியவற்றில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்கள் எளிமையான முறையில் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கவும், அதன் மூலம் அவர்கள் மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு சொந்தமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வேண்டும்.<br />
<br />
அதன்படி, "குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள்' என்ற முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.<br />
<br />
புதன்கிழமை பள்ளிகளைத் திறக்கும்போது இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு வகுப்பறை நடத்தப்படும். இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவசப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.<br />
<br />
ஆகவே, கல்வி நிறுவனங்கள் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் இந்தக் கல்வியாண்டில், அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தை கடைப்பிடித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.<br />
<br />
மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு, நல்ல முறையில் கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் பெற்றொர்களும், மாணவர்களும் எந்தவித குழப்பத்துக்கும் இடம்தர வேண்டாம். மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.<br />
<br />
கல்லூரிகள் திறப்பு:தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட உள்ளன.<br />
<br />
<br />
<b style="color: #33cc00;">மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள்</b><br />
<br />
<img alt="14-courtallam-falls-19.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090ce54fde1312&attid=0.8&disp=emb&realattid=ii_13090bf868a431d4&zw" title="14-courtallam-falls-19.jpg" /><br />
<br />
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.<br />
<br />
குற்றால சீசன் காலம்<br />
<br />
தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.<br />
<br />
தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.<br />
<br />
மூலிகைகளும், பழவகைகளும்<br />
<br />
இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.<br />
<br />
ஒன்பது அருவிகள்<br />
<br />
குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.<br />
<br />
பேரருவியும், குற்றாலநாதரும்<br />
<br />
மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது.<br />
<br />
சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.<br />
<br />
செண்பகாதேவி அருவி<br />
<br />
பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.<br />
<br />
தேனருவி<br />
<br />
செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
ஐந்தருவி<br />
<br />
குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.<br />
<br />
பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)<br />
<br />
ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும்.<br />
<br />
புலியருவி<br />
<br />
குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.<br />
<br />
பழைய குற்றாலம் அருவி<br />
<br />
குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.<br />
<br />
பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.<br />
<br />
சுற்றுலா மையங்கள்<br />
<br />
குற்றாலத்தை சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் நமது கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது.<br />
<br />
கேரளா எல்லை அருவிகள்<br />
<br />
குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.<br />
<br />
அமைவிடம்<br />
<br />
தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.<br />
<br />
<b style="color: #00cccc;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்</b><br />
பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.<br />
<br />
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.<br />
<br />
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.<br />
<br />
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.<br />
<br />
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. <br />
<br />
இனிப்பு பண்டங்கள் செய்யும் போது வாசனைக்காக ஏலக்காயை சேர்ப்பார்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏலக்காயில் பல்வேறு அரிய குணங்கள் உள்ளன.<br />
<br />
புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏலக்காயில் கலந்துள்ளன.<br />
<br />
அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.<br />
<br />
பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும்.<br />
<br />
அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். <br />
<br />
<b style="color: #00cccc;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்வு</b><br />
<br />
மும்பை, ஜூன் 14- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.<br />
<br />
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்து 18,308 புள்ளிகளில் முடிவடைந்தது.<br />
<br />
ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, டாடா பவர், எல் அன் டி, டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.<br />
<br />
டாடா மோட்டார்ஸ், சிப்லா, டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.<br />
<br />
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில், குறியீட்டெண் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 5,500 புள்ளிகளில் முடிவடைந்தது.<br />
<br />
<b style="color: #00cccc;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> 4-வது ஒருதினப் போட்டி: 103 ரன்களில் இந்தியா தோல்வி</b><br />
ஆன்டிகுவா, ஜூன் 13: 4-வது ஓருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது.<br />
<br />
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.<br />
<br />
அடுத்து ஆடிய இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.<br />
<br />
இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.<br />
<br />
ஆன்டிகுவாவில் நேற்று மாலை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தது. மேற்கிந்தியத்தீவுகளின் சிம்மன்ஸ், ஹெயத் ஆகியோர் தொடக்கவீரர்களாகக் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட் விழுந்தது. 1 ரன் எடுத்திருந்த ஹெயத், இஷாந்த் சர்மா பந்தில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.<br />
<br />
அடுத்து வந்த சர்வானும் நீடிக்கவில்லை, அவரும் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து பிராவா, சிம்மன்ஸýடன் ஜோடி சேர்ந்தார். இந்தஜோடியும் நிலைக்கவில்லை, பிராவோ 15 ரன்களில் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்தியத்தீவுகள் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்களை எடுத்திருந்தது.<br />
<br />
மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சிம்மன்ஸின் ஆட்டம் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அவர் 78 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளையும் விளாசினார். முன்னதாக சாமுவேல்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.<br />
<br />
பொல்லார்டு, பாக் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக பேட் செய்த பொல்லார்டு 72 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பக் தனது பங்குக்கு 39 ரன்களும், ரஸல் 25 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.<br />
<br />
இந்திய தரப்பில் பிரவீண் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.<br />
<br />
இந்தியா 146/39<br />
<br />
அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக பார்தீவ் படேல், மனோஜ் திவாரி ஆகியோர் களம் இறங்கினர். 39 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.<br />
<br />
<b style="color: #00cccc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #00cccc;">* அருள்மிகு ஜெகநாதன் திருக்கோவில்</b><br />
மூலவர் : ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன்.<br />
உற்சவர் : ஜெகநாதன்.<br />
அம்மன்/தாயார் : செண்பகவல்லி<br />
தல விருட்சம் : செண்பக மரம்<br />
தீர்த்தம் : நந்தி புஷ்கரிணி<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : நந்திபுர விண்ணகரம்<br />
ஊர் : நாதன்கோயில்<br />
மாவட்டம் : தஞ்சாவூர்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
பாடியவர்கள்:<br />
<br />
<br />
மங்களாசாஸனம்<br />
<br />
திருமங்கையாழ்வார்<br />
<br />
<b>உம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் <br />
தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர்<br />
வம்புமலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் <br />
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே.<br />
<br />
-திருமங்கையாழ்வார் </b><br />
தல சிறப்பு:<br />
<br />
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.<br />
<br />
இத்தல இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சிதருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் மந்தார விமானம் எனப்படுகிறது. நந்தி, சிபிசக்கரவர்த்தி ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
பெயர்க்காரணம்: கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.<br />
<br />
நந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,""எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,''என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,""பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,''என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள்பாலித்தார்.<br />
<br />
தலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.<br />
<br />
திருவிழா:<br />
<br />
வைகுண்ட ஏகாதசி<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #00cccc;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #00cccc;">வாழ்க்கை ஒரு மாயப்பேழை - வள்ளலார்.</b><br />
<br />
* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.<br />
<br />
* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.<br />
<br />
* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.<br />
<br />
<b style="color: #00cccc;">வினாடி வினா </b>:<br />
<br />
<b>வினா</b> - அரபிக் கடலின் ராணி எனப்படுவது எது ?<br />
<br />
<b>விடை</b> - கேரளம்.<br />
<br />
<b style="color: #00cccc;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேகரிப்பிற்கு வித்திட்ட சமணர்கள்</b><br />
<br />
மதுரை:மதுரை தானம் அறக்கட்டளை, தேசிய கலை, கலாச்சார, பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், நேற்று செக்கானூரணி அருகேயுள்ள கொங்கர் புளியங்குளம் மலைக்குன்றுக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.அதில் தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியதாவது :"சமவயங்க சுத்த' எனும் சமண நூலில், "தமிழி' என்று தமிழ்மொழி குறித்து முதன்முதலாய் பதிவு செய்துள்ளது. பிராமி எழுத்து வடிவத்தில்தான் தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.<br />
கொங்கர் புளியங்குளம் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளில், இங்குள்ள படுக்கைகளை திருப்பணியாய் செய்து கொடுத்த "உபாசன் உப்பறுவன்', "சிறு ஆதன்', "பேராதன் பிட்டன்' போன்றோரின் பெயர்களும், தற்போதைய சோழவந்தான், 2000 ஆண்டுகளுக்கு முன் "பாகனூர்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வெள்ளை உடை மட்டும் அணிந்த சமண முனிவர்கள் இம்மலைக்குன்றுகளில் தங்கி வாழ்ந்தனர்.<br />
<br />
தேவையான தண்ணீரை மழை மூலமாக சேகரித்து, பருகி வாழ்ந்தனர். மழைநீர் சேகரிப்பு இவர்கள் முன்னுதாரணமாய் இருந்தனர், என்றார்.இங்குள்ள அரிய கல்வெட்டுகளில் பல, சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் புதிய கல்வெட்டுகளை வைக்கவும், அதை முறையாக பராமரிக்கவும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br />
பேராசிரியர் வெங்கட்ராமன், ஊராட்சித் தலைவர் பாண்டியராஜன், தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணி திட்டத் தலைவர் பாரதி, மனிதநேய அறக்கட்டளை திட்ட அலுவலர் முனிராம்சிங் பங்கேற்றனர்.<br />
<br />
<b>* ஆர்வமுள்ள பெண்களுக்கு ஏற்ற தொழில்! <br />
<br />
<img alt="large_257695.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13090e90228e9a3f&attid=0.1&disp=emb&realattid=ii_13090e34f7cb133a&zw" title="large_257695.jpg" /></b><br />
வீணாகும் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் மீனாட்சி சர்மா: உத்திரபிரதேச மாநிலம், அலிகர் நகர் தான் என் சொந்த ஊர்; இப்போது, டில்லியில் வசிக்கிறேன். சிறுவயதிலிருந்தே எனக்கு, கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். பள்ளிப்படிப்பை முடித்ததும், ஒரு வருடம் அதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். வித்தியாசமாக ஏதாவது செய்தால் தான், மார்க்கெட்டில் இடம் கிடைக்கும் என்று புரிந்தது. அப்போது தான் வீணாகும் பொருட்களில் இருந்து பல கைவினைப் பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். அன்றிலிருந்து, "ஆர்ட், ப்ரேம் வேஸ்ட்' என்பது என் அடையாளம் ஆனது. என் கைவினைத் திறமைகளுக்கு, பழைய பேப்பர்கள், அட்டைகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், வளையல்கள், தகடுகள், மரச்சட்டங்கள் இவற்றை தான் பயன்படுத்துவேன். இவற்றைப் பயன்படுத்தி, வளையல் பெட்டி, சாமி சிலைகள், பேனா ஸ்டாண்ட், ப்ளவர் வாஸ் என, பலவித பொருட்களை செய்கிறேன். தேவையான அளவில் பிளைவுட் வாங்கி, வீட்டில் வீணாகி உள்ள பேப்பர்களை, மிக்சியில் அரைத்து, அதன் மீது பூசி, அதில் பிடித்தமான வண்ணம் பூசி, உடைந்த கண்ணாடி வளையல்களை ரசனைக்கேற்ப ஒட்டினால், வளையல் பெட்டி தயார். இயற்கையிலேயே பெண்களுக்கு, கைவினைத் தொழிலில் திறமை அதிகம். ஆர்வத்துடன் செய்தால், நல்ல வருமானம் ஈட்டலாம். வீணான பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து, பல பெண்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன். என் கைவினைப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், விரைவில், டில்லியில், "÷ஷா ரூம்' திறக்க உள்ளேன். ஆர்வமும், கற்பனை திறனும் உள்ள பெண்களுக்கு, கைவினைப் பொருட்கள் செய்து விற்பது ஏற்ற தொழில் தான்.<br />
<br />
<br />
நன்றி - தின மணி, வெப்துனியா, கூகிள் செய்திகள்.</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-11176504294645827202011-06-14T07:58:00.001+05:302011-06-14T08:39:59.288+05:30இன்றைய செய்திகள் - ஜூன் , 14, 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #009900;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>காந்தியின் மூக்குக்கண்ணாடிகள் மாயம் </b><br />
<br />
<img alt="eyeglass.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.5&disp=emb&realattid=ii_1308b9dacfe40b00&zw" title="eyeglass.jpg" /><br />
<br />
தேசப்பிதா மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடிகள் காணாமல் போய்விட்டதாக தெரிவிகப்பட்டுள்ளது.<br />
<br />
வர்தா (மகாராஷ்டிரம்), ஜூன் 13: மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி மாயமாகியுள்ளது.<br />
<br />
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் யாரும் இதுகுறித்து வாய் திறக்காததால், கண்ணாடி மாயமான விவரம் தெரியாமல் போனதாக ஆசிரமத் தலைவர் எம்.எம்.கட்கரி கூறினார்.<br />
<br />
மகாத்மா காந்தி பயன்படுத்தி வந்த பொருட்களின் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் மூக்கு கண்ணாடி மட்டும் எப்படியோ விடுபட்டு விட்டது. காந்தியடிகள் பயன்படுத்தி வந்த பொருள்கள் அனைத்தும், அவர் தங்கியிருந்த குடிசையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. குடிசையை சில தினங்களுக்கு முன் சுத்தம் செய்த ஊழியர் ஒருவர், அங்கு மூக்கு கண்ணாடி இல்லாததைக் கண்டுபிடித்ததாக கட்கரி மேலும் குறிப்பிட்டார்.<br />
<br />
வர்தா காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.ஜி.நலே கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஆசிரம நிர்வாகிகள் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதனால் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார். போலீஸôரிடம் புகார் தராதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆசிரம நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படிதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் மகாத்மாவின் மற்ற உடைமைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்று கட்கரி தெரிவித்தார்.<br />
<br />
நாக்பூரில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வர்தா ஆசிரமத்தில் 1936-ம் ஆண்டு மகாத்மா காந்தி வந்து தங்கினார். அங்கு அவர் பயன்படுத்தி வந்த அவரது உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?<br />
<br />
<img alt="raviraja.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.6&disp=emb&realattid=ii_1308b9c9884443e6&zw" title="raviraja.jpg" /></b><br />
சென்னை, ஜூன் 13: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிகிறது.<br />
<br />
மேல்முறையீடு செய்த 6,400 தனியார் பள்ளிகளுக்கான திருத்திய கட்டண நிர்ணயப் பணிகளை முடித்தவுடன், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ராஜிநாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அவர் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண திருத்திய நிர்ணய அறிவிப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.<br />
<br />
இதையடுத்து, கட்டண நிர்ணயக் குழு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் திங்கள்கிழமை சென்றனர். அங்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் அறைக்கு முன் இருந்த பெயர்ப் பலகை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எதையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். நீதிபதி ராஜிநாமா குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என கல்வித் துறை அதிகாரிளும் மறுத்துவிட்டனர்.<br />
<br />
கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவருக்கு அரசு வழங்கியிருந்த வாகனத்தையும் அவர் திருப்பி வழங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.<br />
<br />
இரண்டாவது தலைவர் ராஜிநாமா: தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் 07.12.2009-ம் தேதி அமைத்து அரசு உத்தரவிட்டது.<br />
<br />
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயத்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து ஏறத்தாழ 6,400 பள்ளிகள் நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்தன.<br />
<br />
ஏறத்தாழ 10 மாதங்கள் பணியாற்றிய பிறகு, நீதிபதி கோவிந்தராஜன் தனது உடல் நலன் கருதி, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். அதன்பிறகு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை இந்தக் குழுத் தலைவராக நியமித்து தமிழக அரசு 30.10.2010-ம் தேதி உத்தரவிட்டது.<br />
<br />
அந்தப் பதவியில் அவர் நியமிக்கப்பட்டபோது அவருக்கு 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4 வரை மேல்முறையீடு செய்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் இவர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.<br />
<br />
பள்ளிகள் திறக்கும் தேதியான ஜூன் 15-ம் தேதிக்குள் மறுகட்டண நிர்ணய அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பதற்காக இந்தக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், ஜூன் 13-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்விக் கட்டண மறுநிர்ணய உத்தரவுகள் அனுப்பப்பட்டன.<br />
<br />
இந்தப் பணிகள் முடிவடைந்த நேரத்தில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.<br />
<br />
காரணம் என்ன? நீதிபதி ரவிராஜபாண்டியனுக்கு மேலும் ஓர் ஆண்டுக்கு மேல் பதவிக் காலம் உள்ள நிலையில் அவரது ராஜிநாமாவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.<br />
<br />
தி.மு.க. அரசால் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.<br />
<br />
இப்போது அ.தி.மு.க. அரசு பதவியேற்றிருப்பதால், தனது பணிகள் முடிந்ததும் பதவியிலிருந்து அவர் விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.<br />
<br />
<b style="color: #009900;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b style="color: #009900;"> செவ்வாய் கிரகத்தில் காந்திஜி உருவில் பாறை!</b><br />
<br />
லண்டன், ஜூன் 13: செவ்வாய் கிரகத்தில் மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுள்ள பாறை ஒன்று இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.<br />
<br />
ஐரோப்பிய விண்வெளிக் கழகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்பிட்டர் எனும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது தொடர்ந்து விண்வெளியிலிருந்து படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்தபோது, அங்கு மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுடைய ஒரு பெரும் பாறையைக் கண்டதாக மட்டியோ லானியோ என்பவர் தெரிவித்துள்ளார்.<br />
<br />
மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் வழுக்கைத் தலை, கனத்த புருவம், மீசை ஆகியவற்றைக் கொண்ட தோற்றமுள்ள பாறையைக் கண்டதாக, படங்களை ஆய்வு செய்த அவர் கூறியுள்ளார். இச்செய்தியை இங்கிலாந்து நாளேடான டெய்லி மெய்ல் வெளியிட்டுள்ளது.<br />
<br />
<b>* இராக்கில் குண்டு வெடிப்பு: 4 போலீஸார் உள்பட 7 பேர் சாவு</b><br />
பாக்தாத், ஜூன் 13: இராக் தலைநகர் பாக்தாதின் தெற்கே உள்ள ஜிகாத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள் சிலர் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் இறந்தனர். 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
அதேபோல, பாக்தாதின் மத்திய நகரான பாகுபாவில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 3 போலீஸôர் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.<br />
<br />
மற்றொரு சம்பவத்தில், நினேவியா மாகாணத்தில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொய்யரா பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து, ஒரு போலீஸ்காரர் இறந்துள்ளார், மற்றொருவர் காயமடைந்தார். தற்கொலைப் படை தாக்குதல்: ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான பஸ்ராவில், திங்கள்கிழமை காரில் வந்த மர்ம நபர், அங்குள்ள காவல் நிலையம் எதிரே குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 3 போலீஸôர் உள்பட நான்கு பேர் அதே இடத்தில் இறந்தனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
காலை 7.50 மணிக்கு அரசின் மாகாண அலுவலகம் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவசரகால நடவடிக்கை குழு அலுவலக கட்டடத்தின் முன்பகுதியும், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்களும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
அமெரிக்க படைகள் இராக்கில் இருந்து முற்றிலுமாக வாபஸ் பெற உள்ள நிலையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் மட்டும் இதுபோன்ற சம்பவங்களில் 177 பேர் இறந்திருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
<b>* சைபீரியாவில் 37,500 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரை</b><br />
சைபீரியா, ஜூன் 13: சைபீரியாவின் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயினால் 37,512 ஹெக்டேர் வனப்பகுதி நாசமாகியுள்ளது.<br />
<br />
அந்நாட்டின் ராஸ்னோயார்க், இர்குட்ஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள வனப்பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.<br />
<br />
சுமார் 206 முறை ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தின் காரணமாக கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் அப்பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் இடார்-டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.<br />
<br />
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 6,515 தீயணைப்பு வீரர்களும், 636 தீயணைப்பு இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆளில்லாத விமானங்கள் நான்கை இப்பணியில் ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* நியூஸிலாந்தில் கடும் நில நடுக்கம்</b><br />
<br />
வெலிங்டன், ஜூன் 13: நியூஸிலாந்தின் பெரும்பாலான நகரங்களில் திங்கள்கிழமை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. கிறைஸ்ட் சர்ச் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிறு சிறு அதிர்வுகளால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள புறநகர்ப்பகுதியில் 10 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கத்தால் இப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் இந்நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது.<br />
<br />
இந்நகரின் 80 சதவீத கட்டடங்கள் பூகம்ப தாக்குதலுக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்விதம் கண்டறியப்பட்ட கட்டடங்களில் 700 வீடுகள் முற்றிலுமாக இடிந்துவிட்டன. நிலநடுக்கத்தோடு ஏற்பட்ட புழுதிக்காற்றும் மீட்புப் பணிகளை தாமதப்படுத்தியது. புழுதி வீசியதால் மக்கள் மேலும் பீதியடைந்ததாக கிறைஸ்ட்சர்ச் மேயர் பாப் பார்க்கர் தெரிவித்தார். நிலநடுக்கத்தால் களிமண் படிவங்கள் பெரும்பாலான இடங்களில் காணப்பட்டன.<br />
<br />
நகரின் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. விமான ஓடு பாதைகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் கீழே விழுந்ததில் இவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 5.2 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க நிலவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.3 அலகுகள் பதிவானது. இதில் 181 பேர் உயிரிழந்தனர்.<br />
<br />
ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஏற்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.<br />
<br />
<b>* சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்ட தமிழர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி</b><br />
<br />
சிங்கப்பூர், ஜூன் 13: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, வழிப்பறி தகராறில், உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சென்னையைச் சேர்ந்த தில்லித்துரை கட்டட வேலைக்காக சிங்கப்பூர் சென்றார். கடந்த ஆண்டு மே மாதம், பணி முடிந்து சக தொழிலாளர்களுடன் திரும்பிக் கொண்டு இருந்த போது, மலேசியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்துள்ளனர். அவர்களிடமிருந்த பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். தகராறின் போது, கத்தியால் குத்தப்பட்டு தில்லித்துரை உயிரிழந்தார். வெல்டர் கருப்பையாவுக்கு கை மற்றும் கண்களிலும், பஞ்சாபைச் சேர்ந்த சந்தீப் சிங்குக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. கருப்பையாவுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது.<br />
<br />
இந்நிலையில், சிங்கப்பூர் மக்கள் அளித்த நன்கொடையிலிருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் தில்லித்துரை குடும்பத்தினரிடம் அளிக்கப்பட்டது. இதே போன்று, கருப்பையாவுக்கு கொடுக்கப்பட்ட ரு 32 லட்சத்தை அவரது இரு குழந்தைகளின் கல்வி செலவுக்கும்,குடும்ப செலவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தீப் சிங்குக்கு இருமுறை கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு ரூ.22 லட்சம் அளிக்கப்பட்டது. கொலை மற்றும் வழிப்பறி வழக்கு தொடர்பாக, 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஒருவர் தலைமறைவாக உள்ளார். மீதமுள்ள 6 பேரில், 4 பேருக்கு 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைத்துள்ளது. கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.<br />
<br />
<b>* மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தானில் நீதிபதி மாற்றம்</b><br />
<br />
இஸ்லாமாபாத், ஜூன் 13: மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் பாகிஸ்தான் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.<br />
<br />
இந்த வழக்கில் தொடர்புடையதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ராணா நிசார் அகமது மாற்றப்பட்டுள்ளார்.<br />
<br />
இதுவரையில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் செய்யப்படுவது இது நான்காவது முறையாகும். கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதியாக ராணா நிசார் அகமது நியமிக்கப்பட்டார். இவர் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.<br />
<br />
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மீது 2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை வழக்கையும் ராணாதான் விசாரிக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
பணி மாற்றல் உத்தரவை லாகூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷகர்காரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக ராணா நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு நிரந்தர கைது வாரண்டை பிறப்பித்த சில மணி நேரங்களில் ராணா நிசார் அகமதின் பணி மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேநசீர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பர்வேஸ் முஷாரபுக்கு நிரந்தர கைது வாரண்டை ராணா பிறப்பித்திருந்தார். அத்துடன் முஷாரபின் சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, அதுபற்றிய விவரங்களை அளிக்குமாறு கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஜூன் 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. முஷாரபுக்கு முதலில் தலைமறைவு குற்றவாளி என அறிவித்து அறிவிக்க உத்தரவிட்டவர் ராணா நிசார் அகமது. அதேபோல பர்வேஸ் முஷாரப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞரை நிர்பந்தித்து வந்தார்.<br />
<br />
ராண நிசார் அகமது மாற்றம் செய்யப்பட்டதால், மும்பை தாக்குதல் சம்பவ விசாரணையில் தேக்க நிலை ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2009-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியபோதிலும், பல்வேறு காரணங்களால் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.<br />
<br />
இதற்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகளுக்கும், பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததால் மாற்றப்பட்டனர். ஆனால் இப்போது பர்வேஸ் முஷாரபுக்கு நிரந்தர கைது வாரண்ட் பிறப்பித்ததற்காக மாற்றப்பட்டுள்ளார் ராணா நிசார் அகமது.<br />
<br />
*<b> பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்: வைத்திலிங்கம் பேட்டி<br />
<br />
<img alt="pdygov.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.3&disp=emb&realattid=ii_1308b99aa148b50e&zw" title="pdygov.jpg" /></b><br />
புதுச்சேரி, ஜூன் 13: சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தப் பிறகுதான் நியமன எம்எல்ஏக்களை ரங்கசாமி தலைமையிலான அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் எம்எல்ஏவுமான வி. வைத்திலிங்கம் கூறினார்.<br />
<br />
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால்சிங்கை திங்கள்கிழமை சந்தித்து தன்னுடைய தொகுதி வளர்ச்சி குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தப் பிறகுதான் நியமன எம்எல்ஏக்களை நியமிக்க வேண்டும். அதற்கு முன் நியமனம் செய்தால் தவறான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடும்.<br />
<br />
காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக யார் நியமிக்கப்படுவர் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவிப்பார். இப்போது அவர் ஊரில் இல்லை. வந்தவுடன் அந்த அறிவிப்பை வெளியிடுவார்.<br />
<br />
சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்று கேட்டதற்கு, இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பிறகு முடிவு செய்வோம் என்றார். <br />
<br />
<b>* சமச்சீர் கல்வி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை<br />
<br />
<img alt="supremcourt.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.4&disp=emb&realattid=ii_1308b9eaf4df1686&zw" title="supremcourt.jpg" /></b><br />
புது தில்லி, ஜூன் 13: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.<br />
<br />
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது.<br />
<br />
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.<br />
<br />
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.<br />
<br />
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது.<br />
<br />
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த சனிக்கிழமை தில்லி சென்று மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.<br />
<br />
தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.<br />
<br />
அப்போது நீதிபதி பி.எஸ். சௌகான் தலைமையிலான அமர்வு, வழக்கின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளாமல் விசாரணை நடத்த முடியாது என்று கூறி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 14) ஒத்திவைத்தது.<br />
<br />
<b>* கறுப்புப் பண விவகாரம்: தகவல் அளிக்க மறுக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை: பிரணாப் முகர்ஜி<br />
<br />
<img alt="pranap2.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.2&disp=emb&realattid=ii_1308b988c9bc1741&zw" title="pranap2.jpg" /></b><br />
புது தில்லி, ஜூன் 13: கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். வரிச் சலுகை அளிக்கும் நாடுகள் தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்கள் பற்றிய விவரத்தை அளிக்க மறுக்கின்றன. சம்பந்தப்பட்ட நாடுகள் கோரும் விவரம் உரிய காலத்திற்குள் கிடைக்காவிட்டால், தகவல் கோருவதில் பயன் கிடைக்காது என்றும் அவர் சொன்னார்.<br />
<br />
மத்திய நிதி அமைச்சகம் தில்லியில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு (ஓஇசிடி) கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது:<br />
<br />
பொதுவாக அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளில் செயல்படும் வங்கிகள் பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் சில நாடுகள் குறிப்பிட்ட தேதி வரையிலான விவரத்தை மட்டுமே அளிக்க முன்வந்துள்ளன. இது வங்கி பற்றிய தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். ஏற்கெனவே உள்ள சட்ட விதிமுறைகளை நடைமுறைக்கு ஏற்ப மாற்ற வேண்டியது அவசர அவசியமானதாகும்.<br />
<br />
வரிச் சலுகை அளிக்கும் நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தை போடுவோர் பற்றிய விவரத்தை வணிக நலன் கருதி அளிப்பதில்லை. இவை முற்றிலும் வரிவிதிப்புக்குள்படாதவை என கருத முடியாது. வங்கிகள் இதுபோன்ற ரகசியத்தைக் காப்பாற்ற முயன்றால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படும் வரி விதிப்பு முறையே முற்றிலும் சிதைந்துபோகும். கறுப்புப் பணத்துக்கு வரிச் சலுகை அளிக்கும் நாடுகளில் உள்ள வங்கிகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுகளுக்கு போதிய சட்ட அதிகாரம் இல்லை என்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.<br />
<br />
2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு கறுப்புப் பணமும் முக்கியக் காரணமாகும் என்று முகர்ஜி குறிப்பிட்டார்.<br />
<br />
பணம் போட்டவர்கள் பற்றிய தகவலை அளிக்க மறுப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வர வேண்டிய வருமானத்தை பாதிக்கும் விஷயம் மட்டும் அல்ல, நிதி சார்ந்த விஷயங்களையும் அது வெகுவாக பாதிக்கும். இது தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
2009-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் உள்ள வங்கிகள், அது பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது போன்ற நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
சர்வதேச நிதியமைப்பு சுழற்சியை பாதிக்கும் இதுபோன்ற கறுப்புப் பண விவகாரம் சார்ந்த விவரங்களை அளிக்க மறுக்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டும், இரண்டு ஆண்டுகளாகியும் அது செயல்படுத்தப்படாதது வேதனையளிக்கிறது.<br />
<br />
இதுவரையில் 65 நாடுகளுடன் வங்கி சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டு பேச்சு நடத்தப்பட்டது. இதுவரையில் 14 நாடுகளுடன் வரி பரிவர்த்தனை தகவல் ஒப்பந்தமும் (டிஐஇஏ), 36 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி. <br />
<br />
<b>* கனிமொழி ஜாமீன்: விசாரணை 20-க்கு ஒத்திவைப்பு</b><br />
புது தில்லி, ஜூன் 13: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிறையில் உள்ள கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
கனிமொழியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு திங்கள்கிழமை வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று விளக்கவேண்டும் என சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.<br />
<br />
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி. ரியாலிட்டி நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக 214 கோடி ரூபாயை கலைஞர் டிவிக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சி.பி.ஐ. தயாரித்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில், கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி. கனிமொழி, நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரைக் குற்றவாளிகளாகச் சேர்த்தது. அதையடுத்து இருவரும் கைதாயினர்.<br />
<br />
திகார் சிறையில் உள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறி, ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.<br />
<br />
இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை என்பதால், விடுமுறைகால நீதிமன்ற நீதிபதி பி.எஸ். செüகான் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.<br />
<br />
விசாரணையின் போது, கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 214 கோடி ரூபாய் எங்கே போனது; ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் குறைவாகவே இருக்கிறது என்றாலும் காவல்துறை இவர்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஏன் விசாரணை நடத்தவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.<br />
<br />
மேலும் இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் எவ்வளவு என்பதை துல்லியமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பி.எஸ். செüகான் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. <br />
<b><br />
* அமைதிக்கான நோபல் பரிசு: இந்திய பேராயர் பெயர் பரிந்துரை<br />
</b><br />
குவாஹாட்டி, ஜூன் 13: அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவைச் சேர்ந்த குவாஹாட்டி கிறிஸ்தவ மறை மாவட்ட பேராயர் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
அசாம் மாநிலத்தில் குவாஹாட்டி மறை மாவட்ட பேராயராக இருப்பவர் தாமஸ் மெனாம்பர் அம்பிள்(74). இவருடைய பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு போராட்டக் குழுக்களிடம் சமாதானம் செய்ய இவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ÷இத்தாலி நாட்டில் இருந்து வெளியாகும் பொல்லிட்டினோ செலேசியானோ என்ற பத்திரிகை இவருடைய பெயரை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளது.<br />
<br />
இது பற்றி பேராயர் தாமஸ் மெனாம்பர் அம்பிள் கூறும்போது,நோபல் பரிசுக்கு எனது பெயர் சிபாரிசு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமாதான முயற்சிக்கு விருது ஒரு பொருட்டல்ல.<br />
<br />
எனது பணி அங்கீகரிக்கப்படாவிட்டாலும்,வி<br />
<div dir="ltr"><wbr></wbr>ருது வழங்கப்படாவிட்டாலும் சமாதானப் பணி தொடரும். இப்போது மக்களிடம் மோதல் அல்லாத மனப்பான்மையும்,சகிப்பு தன்மையும்,ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பக்குவமும் தான் தேவை என்றார்.<br />
<br />
தாமஸ் மெனாம்பர் அம்பிள் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1995-ம் ஆண்டு குவாஹாட்டி மறை மாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டார். சமாதான முயற்சிக்காக இவர் பல்வேறு விருகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* வெளிநாட்டுப் பயண விவரங்களைத் தர சோனியாவுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு</b><br />
புதுதில்லி, ஜூன் 13 : தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிஸôரைச் சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர் இத்தகவல்களைக் கேட்டு பிரதமரின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து இருந்தார். அதில், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா காந்தி எந்த எந்த வெளிநாடுகளுக்குப் போனார், அவற்றுக்கான செலவு விவரம், பயணத்துக்கான காரணம், அதனால் ஏற்பட்ட பயன் போன்ற தகவல்களை கேட்டிருந்தார்.<br />
<br />
கடந்த 10 ஆண்டுகளில் சோனியா காந்தி மேற்கொண்ட எந்த வெளிநாட்டு பயணத்துக்கும் அரசு பணம் எதுவும் செலவழிக்கப்படவில்லை என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப்பயணம் விவரங்கள் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டதா என்பது அமைச்சரவை செயலகத்திடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இக்கடிதம், அதே ஆண்டு மார்ச் மாதம் வெளியுறவுத்துறைக்கும், பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கும் சென்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனுப்பப்பட்ட கடிதத்தை உரியமுறையில் பிரதமர் அலுவலகம் கையாள தவறியதற்கு மத்திய தகவல் ஆணையர் சத்தியானந்தா மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார். இனி,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் கடிதங்களை உரிய அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டார்.<br />
<br />
ரமேஷ் வர்மா, பிரதமர் அலுவலகத்தில் உள்ள தலைமை தகவல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் மிஸ்ரா குறிப்பிட்டார். ஆனால், அப்படி செய்யாமல், ஒவ்வொரு அமைச்சகமாக அனுப்பப்பட்டு கால தாமதம் ஆகியதாக அவர் கூறினார். எனவே,தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #009900;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
*<b> தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 11-ல் தொடங்க திட்டம்<br />
<br />
<img alt="tnsec.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.8&disp=emb&realattid=ii_1308b9f793f4a199&zw" title="tnsec.jpg" /></b><br />
சென்னை, ஜூன் 13: தமிழகப் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூலை 11-ம் தேதி தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
அதிமுக அரசு பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டுக்காகத் துறை வாரியாக நிதிகளை ஒதுக்க வேண்டும். இதற்காக, சட்டப் பேரவையின் ஒப்புதல் பெறுவது அவசியம். புதிய அரசு என்பதால் புதிதாக நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.<br />
<br />
அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூலை 11-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அன்றைய தினம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இதன்பின் துறை வாரியாக நிதி ஒதுக்கும் வகையில் கூட்டத் தொடர் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு துறை என்ற அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டப் பேரவைச் செயலாளர் வெளியிடுவார்.<br />
<br />
தில்லி பயணம்: பட்ஜெட் கூட்டத் தொடரை முன்வைத்தே, முதல்வர் ஜெயலலிதா தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதிகளைப் பெற்று பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் தில்லி பயணத்துக்குப் பின், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் கூடுதல் நிதிகள் மூலமாக பல துறைகளில் புதிய திட்டங்களுக்கு வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.<br />
<br />
<b>* ஜூன் 19-ல் பவானி அணை திறப்பு: முதல்வர் உத்தரவு</b><br />
சென்னை, ஜூன் 13: பவானி அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 19-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:<br />
<br />
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின் கீழுள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.<br />
<br />
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின் கீழுள்ள பாசன சாகுபடிக்காக ஜூன் 19-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.<br />
<br />
<b>* தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவை தொடங்கியது 201 பயணிகளுடன் பயணம்<br />
<br />
<img alt="gkvas.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.7&disp=emb&realattid=ii_1308b95fc84168c0&zw" title="gkvas.jpg" /></b><br />
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன். (வலத<br />
தூத்துக்குடி, ஜூன் 13: தென் மாவட்ட மக்களால் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. 80 நல்லெண்ணத் தூதர்கள் உள்ளிட்ட 201 பயணிகளுடன் முதல் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.<br />
<br />
தூத்துக்குடி- கொழும்பு இடையே 1907-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ.உ. சிதம்பரனார் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.<br />
<br />
அக் கப்பல் போக்குவரத்து தடைபட்ட பிறகு தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறவில்லை.<br />
<br />
இந்நிலையில், இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் முடிவு செய்தன.<br />
<br />
இதற்கு தேவையான குடியுரிமை, சுங்க சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்படுத்தப்பட்டன. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.<br />
<br />
இதையடுத்து, பயணிகள் கப்பலை இயக்க "பிளம்மிங்கோ லைனர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந் நிறுவனம் சார்பில், "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற அதிநவீன சொகுசுக் கப்பல் இப் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.<br />
<br />
அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததைத் தொடர்ந்து 104 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.<br />
<br />
தூத்துக்குடி துறைமுகத்தின் முதலாவது கூடுதல் கப்பல் தளத்தில் நடைபெற்ற விழாவில், பயணிகள் கப்பல் சேவையை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.<br />
<br />
முன்னதாக, அமைச்சர் ஜி.கே. வாசன் கப்பலில் உள்ள வசதிகளைப் பார்வையிட்டார். குத்துவிளக்கேற்றி கப்பல் பயணத்தைத் தொடங்கிவைத்த அவர், முதல் கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களுக்கு வாழ்த்து கூறினார். முதல் கப்பல் திங்கள்கிழமை மாலை 4.10 மணிக்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.<br />
<br />
இக்கப்பலில் துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட 80 நல்லெண்ணத் தூதர்கள் மற்றும் 121 பயணிகள் என மொத்தம் 201 பேர் கொழும்பு செல்கின்றனர்.<br />
<br />
தூத்துக்குடி- கொழும்பு இடையே 152 கடல்மைல் தொலைவை இக்கப்பல் 14 மணி நேரத்தில் கடக்கும் இப் பயணிகள் கப்பல் வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்து செல்லும். அதுபோல, புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்து புறப்பட்டு வரும்.<br />
<br />
இதில் மொத்தம் 1040 பேர் பயணம் செய்யலாம். 300 டன் வரை சரக்குகளைக் கொண்டு செல்லலாம். 9 அடுக்குகளைக் கொண்ட இக் கப்பலில் 322 பயணிகள் அறை, 98 கப்பல் சிப்பந்திகள் அறைகள் உள்ளன. இதைத் தவிர விசாலமான உணவுக் கூடம், காபி அருந்தும் கூடம், மதுக்கூடம், பரிசுப் பொருள்கள் அங்காடி, மருத்துவமனை, கேளிக்கை வசதி போன்றவை உள்ளன. மேலும், 24 பெரிய டிரெய்லர்கள், 53 பஸ்கள், 200 கார்களை இக் கப்பலில் நிறுத்தும் வசதி உள்ளது. குறைந்தபட்ச பயணிகள் கட்டணம் ரூ. 2,243 ஆகும்.<br />
<br />
முதல் கப்பலில் சென்ற பயணிகள் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். "முதல் கப்பலில் கொழும்பு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.<br />
<br />
இக் கப்பல் மூலம் இந்தியா- இலங்கை இடையே நல்லுறவு ஏற்படும்' என்றார் நல்லெண்ண தூதுக் குழுவில் இடம்பெற்ற துறைமுக சபை ஊழியரான எஸ். சண்முககுமாரி. <br />
<br />
*<b> தனியார் பள்ளிகளுக்கு புது கல்விக் கட்டணம் அறிவிப்பு</b><br />
சென்னை, ஜூன் 13: மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் திருத்திய நிர்ணய விவரங்களை கட்டண நிர்ணயக் குழுவின் சிறப்பு அலுவலர் அ.திருஞானசம்பந்தம் திங்கள்கிழமை வெளியிட்டார்.<br />
<br />
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் இந்தக் கட்டண விவரங்கள் திங்கள்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டண விவரங்கள் செவ்வாய்க்கிழமை காலைக்குள் தெரிவிக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
ஏற்கெனவே அறிவித்த கட்டணத்தைவிட சராசரியாக 5சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
இந்தக் கட்டண நிர்ணய விவரங்கள் புதன் அல்லது வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டணம் நிர்ணயித்தது. இதில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.<br />
<br />
இதை எதிர்த்து சுமார் 6,400 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்தன. நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு இந்த மனுக்களை நவம்பர் 15 முதல் மே 4-ம் தேதிவரை விசாரித்தது.<br />
<br />
இந்த விசாரணைக்குப் பிறகு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, இப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
இது தொடர்பாக, கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள செய்தி:<br />
<br />
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன.<br />
<br />
மேல்முறையீடு செய்த ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் பெறப்பட்ட வினாப்பட்டியல், மேல்முறையீட்டின் போதும், நேர்முகக் கேட்பின் போதும் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப் பெற்று, தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.<br />
<br />
பள்ளி அமைவிடம், மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-பணியாளர் ஊதியம், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் இவையனைத்தும் மறுகட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணிகளாகக் கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
இந்தக் கட்டண நிர்ணயம் வரும் 2012-13 கல்வியாண்டு வரை பொருந்தும். அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
"மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை எதிர்பார்க்கிறோம். கட்டண உயர்வு அதற்குக் குறைவாக இருந்தால் மேல்முறையீடு செய்வோம்' என்று மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்.விஜயன் தெரிவித்தார்.<br />
<br />
இணையதளத்தில் வெளியீடு: திருத்திய கட்டண நிர்ணய விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகளில் கட்டண நிர்ணயக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதன் அல்லது வியாழக்கிழமை இந்தக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் என்று தெரிகிறது.<br />
<br />
<b>* கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை இன்று திறப்பு<br />
<br />
<img alt="papanasam.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=1308ba10844c3615&attid=0.1&disp=emb&realattid=ii_1308b94a0e366150&zw" title="papanasam.jpg" /></b><br />
திங்கள்கிழமை நீர்மட்டம் 57 அடியாக உள்ள பாபநாசம் அணை.<br />
அம்பாசமுத்திரம், ஜூன் 13: கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.<br />
<br />
கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாண்டு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்ததால், அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. மணிமுத்தாறு அணையில் இருந்து மே இறுதியில் பெருங்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.<br />
<br />
இதனிடையே, தென்மேற்குப் பருவமழை இம்மாதம் 1-ம் தேதி தொடங்கியது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் இரண்டே நாளில் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் கார் பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
அதன்படி, செவ்வாய்க்கிழமை பாபநாசம் அணை திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 18160 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது.<br />
<br />
திங்கள்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 57.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 530 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.68 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 25 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படுகிறது.<br />
<b><br />
* கலர் டி.வி. ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சரண்</b><br />
சென்னை, ஜூன் 13: கலர் டி.வி. ஊழல் வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.<br />
<br />
1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.வி. வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக டி.வி. வாங்கியதில் ஊழல் நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.<br />
<br />
இந்த ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விஜயகுமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.<br />
<br />
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த செல்வகணபதி உள்ளிட்ட மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், விஜயகுமார் மீதான வழக்கு மட்டும் நிலுவையில் இருந்து வந்தது.<br />
<br />
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. ஜெயபாலன் முன்னிலையில் விஜயகுமார் சரணடைந்தார்.<br />
<br />
<b style="color: #009900;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>வீட்டிலிருக்கும் மருந்து பொருட்கள்</b><br />
<br />
கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது. உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செய்து கொடுக்கலாம். இஞ்சி துவையல் சாப்பிட்டால் வாய் கசப்பு போய், நாக்குக்கு சுவை கிடைக்கும்.<br />
<b style="color: #009900;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<b>பங்குச் சந்தையில் லேசான சரிவு</b><br />
<br />
மும்பை, ஜூன் 13: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று லேசான சரிவு காணப்பட்டது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 100 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால் பிற்பகலுக்குப் பிறகு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வர்த்தகம் முடிவில் 3 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 18,266 புள்ளிகளாக இருந்தது.<br />
<br />
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 2 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,482 புள்ளிகளானது. மாதாந்திர ஒட்டுமொத்த பணவீக்க பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் காரணமாக பங்குகளை வாங்குவதை முதலீட்டாளர்கள் தவிர்த்தனர். கைவசம் இருந்த பங்குகளை விற்பனை செய்யவும் முன்வரவில்லை. இதனால் சரிவு மட்டுப்பட்டு 3 புள்ளிகளோடு நின்றது.<br />
<br />
கிருஷ்ணா கோதாவரி படுகையில் கேஜி-6டி பகுதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3 இடங்களில் கண்டுபிடித்த ஹைட்ரோ கார்பன் படிமங்கள் மற்றும் இயற்கை எரிவாயு பகுதிகளை டைரக்டரேட் ஜெனரல் அலுவலகம் நிராகரித்தது. இதனால் இந்நிறுவனப் பங்கு விலை 1.84 சதவீதம் சரிந்தது.<br />
<br />
திங்களன்று காலையில் இறங்கு முகமும், பிற்பகலில் ஏறுமுகமும் இருந்ததால் வர்த்தகம் முடியும்போது சரிவு மிகக் குறைவாக இருந்தது. ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் குறிப்பாக இரு சக்கர, ஆட்டோ வாகன தயாரிப்பு நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கினர். ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளுக்கு ஏற்றுமதி மேம்பாட்டு இயக்குநரகம் 3 மாத சலுகை அளித்ததால் இந்நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்தன.<br />
<br />
ஹின்டால்கோ நிறுவனப் பங்கு விலை 2.22 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.12 சதவீதமும், டிசிஎஸ் 1.10 சதவீதமும், எஸ்பிஐ பங்கு விலை 1.02 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.<br />
<br />
சீன பொருளாதாரம் சரிவைச் சந்திப்பதாக வெளியான தகவலை அடுத்து உலோக நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்திய சந்தையைப் போல ஆசிய சந்தையிலும் சரிவு காணப்பட்டது. சீனா, ஹாங்காங் பங்குச் சந்தையில் சரிவு தவிர்க்க முடியாததானது. சிங்கப்பூர், தைவான், ஜப்பான், ஷாங்காய் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இருப்பினும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை மிக அதிகபட்சமாக 3.18 சதவீதம் உயர்ந்தது. என்டிபிசி, சிப்லா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்சி ஆகிய பங்குகள் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை முன்னேறின.<br />
<br />
மொத்தம் 1,438 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,379 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,483.55 கோடி.<br />
<br />
* இறக்குமதி வரியைக் குறைக்க டாடா கோரிக்கை<br />
<br />
புது தில்லி, ஜூன் 13: கார், மோட்ட சைக்கிள் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா வலியுறுத்தினார். இந்திய-ஐரோப்பிய அன்னிய வர்த்தக சங்கக் கூட்டத்தில் ஆட்டோமொபைல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா வரிகுறைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
ஆட்டோமொபைல் தொடர்பான ஜேடி பவர் இதழுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா கூறியிருப்பது: உள்நாட்டு நிறுவனங்களைக் காப்பதற்காக அதிக அளவில் இறக்குமதி வரி விதிப்பது கொஞ்சமும் நடைமுறை சாத்தியமானதாகத் தெரியவில்லை. இந்தியாவில் அன்னிய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆலை இல்லை. இத்தகைய சூழலில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இணைத்து விற்பனை செய்யும் சூழல்தான் உள்ளது. டாடா நிறுவனம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மட்டும்தான் உள்நாட்டில் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் திறன் பெற்றவையாக உள்ளன. இந்நிலையில் அதிக அளவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும். உள்நாட்டு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் வரி விதிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதேபோல ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான வரியும் பெருமளவு குறைக்கப்பட வேண்டும். இதன் மூலம் சர்வதேச அளவில் குறைந்த விலையிலான உதிரி பாகங்களை இந்திய தயாரிப்பாளர்கள் பெறுவதற்கு வழியேற்படும்.<br />
<br />
இந்திய ஆட்டோமொபைல் துறையில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபட்டிருப்பதால், வரி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் ஆட்டோமொபைல் உதிரிபாக இறக்குமதியாளர்களும், அதிக அளவில் பொருள்கள் குவிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இறக்குமதி வரி குறைப்பைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.<br />
<br />
தற்போது முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வாகனத்தின் மீதான இறக்குமதி வரி 60 சதவீதமாக உள்ளது. விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்டவை அனைத்தும் நிர்ணயித்தபிறகு அந்த வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட வரியின் அளவு 110 சதவீதமாக உயர்கிறது.<br />
<br />
வெளிநாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜின், டிரான்ஸ்மிஷன்ஸ், கியர் பாக்ஸ் உள்ளிட்டவை மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி இப்போது 30 சதவீதமாக உள்ளது. பிற ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கு ஒருங்கிணைக்கின்றன. இத்தகைய வாகனங்களில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.<br />
<br />
இந்திய சந்தையில் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முனையும்போது அவை இந்திய சாலைகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2020-ம் ஆண்டில் எட்டப்படும் என நம்புவதாக டாடா கூறினார். அப்போது இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக தொழில் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக இருக்கும். அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி பெற்றதாகவும் திகழும்.<br />
<br />
ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த ஆண்டில் இந்தியா கையெழுத்திடும் என நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், இதேபோன்ற ஒப்பந்தம் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.<br />
<br />
<b><span style="color: #009900;">விளையாட்டுச் செய்தி மலர் :</span><br style="color: #009900;" /><span style="color: #009900;">* </span><br />
கிரிக்கெட்<br />
<br />
4வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி</b><br />
<br />
ஆன்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், 103 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளில் வென்ற இளம் இந்திய அணி, தொடரை(3-0) எளிதாக கைப்பற்றியது. நேற்று ஆன்டிகுவாவில் முக்கியத்துவமில்லாத நான்காவது போட்டி நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங் தேர்வு செய்தார்.<br />
<br />
துவக்கம் மோசம்: வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் ஒரு முறை திணறல் துவக்கம் கண்டது. இஷாந்த் வேகத்தில் டான்சா ஹியாத்(1) காலியானார். பிரவீண் குமார் பந்தில் சர்வான்(1) அவுட்டானார். அப்போது 2 விக்கெட்டுக்கு வெறும் 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் டேரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ் இணைந்து போராடினர். அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ், இஷாந்த் சர்மா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தொடர்ந்து அமித் மிஸ்ரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். மிஸ்ரா சுழலில் பிராவோ(15), மர்லான் சாமுவேல்ஸ்(8) சிக்கினர். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ் அரைசதம் கடந்தார். இவர் 67 ரன்களுக்கு ரன் அவுட்டாக, நிலைமை மோசமானது. இதற்கு பின் போலார்டு, கார்ல்டன் பாக் இணைந்து அணியை மீட்டனர். மனோஜ் திவாரி ஓவரில் போலார்டு ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிஸ்ரா ஓவரிலும் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். அரை சதம் கடந்த போலார்டு(70), அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் இணைந்து அதிரடி காட்டினர். இஷாந்த் ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, பாக் 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.<br />
<br />
நழுவிய "ஹாட்ரிக்: பிரவீண் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கார்ல்டன் பாக்(39), ரசல்(25) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதை யடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி ஒரு ரன் எடுக்க, பிரவீண் வாய்ப்பு பறிபோனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. டேரன் சமி(1), ரோச்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.<br />
<br />
விக்கெட் சரிவு: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். டேரன் சமி வேகத்தில் மனோஜ் திவாரி(2), பார்த்திவ் படேல்(26) அவுட்டாகினர். ரசல் பந்தில் பத்ரிநாத்(12) வெளியேறினார். மார்ட்டின் வலையில் விராத் கோஹ்லி(22) சிக்கினார். தொடர்ந்து ரோகித் சர்மா 39 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி, 39 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து, 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை மார்டின் தட்டிச்சென்றார். தொடரின் 5வது மற்றும் இறுதிப்போட்டி 16ம் தேதி நடக்கிறது.<br />
<br />
100வது போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று 100வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதன் மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா சமன் செய்தது. இந்திய அணி ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியுள்ளது.<br />
<br />
கீமர் ரோச் காயம்: இஷாந்த் வீசிய போட்டியின் கடைசி ஓவர் பரபரப்பாக இருந்தது. 4வது பந்தை இவர் "பவுன்சராக வீச, அது கீமர் ரோச்சின் "ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதன் விளைவாக அவரது வாய் பகுதியில் இருந்து ரத்தம் வந்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட, ஆட்டத்தை தொடர்ந்தார்.<br />
<br />
* ஐந்தாவது பந்தில் ரோச் ஒரு ரன்னுக்காக ஓடினார். அப்போது இஷாந்த் "த்ரோ செய்ய "பெயில்ஸ் பறந்தது. இந்திய வீரர்கள் அரைகுறையாக "அப்பீல் செய்தனர். அம்பயர் மால்கமும், "டிவி அம்பயரிடம் கேட்கவில்லை. "ரீப்ளேயில் ரோச் ரன் அவுட்டானது தெளிவாக தெரிந்தது. இதனை "டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்த ஹர்பஜன் "அவுட் என அலறியும் பலன் கிடைக்கவில்லை.<br />
<br />
*<b> டென்னிஸ்<br />
<br />
ஏகான் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா வெற்றி</b><br />
<br />
ஈஸ்ட்போர்ன்: ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா வெற்றி பெற்றார்.<br />
இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட்போர்ன் நகரில், ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜார்ஜியாவின் அனா டடிஷ்விலியை சந்தித்தார்.<br />
<br />
முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய சானியா, இரண்டாவது செட்டை 3-6 எனக் கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட சானியா, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். இறுதியில் சானியா மிர்சா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தகுதிச்சுற்றுக்கான மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரியாவின் தமிரா பசக்கை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பு பெறலாம்.<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* <span style="color: #009900;">அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்</span></b><br />
<br />
மூலவர் : ரத்தினகிரி முருகன் -<br />
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் -<br />
ஊர் : சரவணம்பட்டி<br />
மாவட்டம் : கோயம்புத்தூர்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார்<br />
<br />
இங்கு ஆதியில் பெரிய பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். <br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார்.<br />
<br />
தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார்.<br />
<br />
அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.<br />
<br />
இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் பிரபாவளையத்துடன் அருட்காட்சி தருகிறார். <br />
<br />
பூப்பறிக்கும் சடங்கு : இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளைகளும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர்.<br />
<br />
பின்னர், முருகப்பெருமானுக்கு மாலையணிவித்து தங்களை மணமக்களாக சிரமமின்றி இணைத்து வைக்க வேண்டுவர். இந்த வழிபாட்டிற்கு சூபூப்பறித்தல் நோன்பு' என்று பெயர். இப்பழக்கம் தற்போதைய நாகரீகத்தின் காரணமாக குறைந்து விட்டது. இருப்பினும், விஷயமறிந்த காதலர்கள் இப்போதும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.<br />
<br />
எப்படியிருப்பினும், இக்கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் கையாலேயே மலர் பறித்து, மாலை கட்டி முருகனுக்கு அணிவித்தால் நினைத்த கணவன் அல்லது மனைவியை அடையலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்றளவும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தம்பதி சமேதராக வந்து வணங்கிச் சென்றால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை.<br />
<br />
பள்ளிக்காலத்து நண்பர்கள் பணி காரணமாக வேறு ஊரில் இருந்தால், பொங்கலன்று தங்கள் ஊருக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் பொங்கலுக்கு மறுநாள் மலைக்கோயிலுக்கு வந்து தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து அண்டசராசரங்களையும்அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான்.<br />
<br />
இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.<br />
<br />
பிரார்த்தனை<br />
<br />
<br />
முருகன் தலம் ஒன்றில் சூபூப்பறித்தல் நோன்பு' என்ற சடங்கு பிரபலமாக உள்ளது. இந்த நோன்பை நோற்பவர்கள், திருமணத்தடை நீங்கி, விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவர் என்பது நம்பிக்கை.<br />
<br />
இங்கு வேண்டிக்கொள்ள புத்திரபாக்கியம் கிட்டும், பயம் நீங்கும், தீராத நோய்கள், மனக்குறைகள் தீரும், தொழில் விருத்தியடைந்து சகல செல்வங்களும் பெருகும்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
தைப்பூசம், மாட்டுப்பொங்கல், அமாவாசை, கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<b style="color: #009900;">மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்.</b><br />
<br />
* மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.<br />
<br />
* அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.<br />
<br />
* நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.<br />
<br />
* "அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.<br />
<br />
* அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.<br />
<br />
* கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.<br />
<br />
<b style="color: #009900;">வினாடி வினா :</b><br />
<b>வினா </b>- பருத்தி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் பெரும் மாநிலம் எது ?<br />
<br />
<b>விடை</b> - குஜராத்.<br />
<br />
<b>இதையும் படிங்க:</b><br />
<br />
<b>உயிர்காக்கும் "செங்குருதி'யை பகிர்ந்தளித்தலே இன்பம் : "கொடையாளர்களின்' உன்னத அனுபவங்கள்</b><br />
தானத்தில் சிறந்ததென அன்னதானம், கல்வி தானம், கண் தானம்... என ஆயிரம் தானங்களைச் சொல்வோம். ஒவ்வொரு தானமும் உயர்ந்தது தான், சந்தேகமில்லை.<br />
<br />
உடம்பில் ஓடும் மூலாதாரமான செங்குருதியை, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க, பரந்த மனம் வேண்டும். நல்இதயம் படைத்தோர் செய்யும் உன்னத தானம் தான் ரத்த தானம். இன்று ரத்ததான தினம். உதிரம் கொடுத்து, பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தங்களது அனுபவங்களை விளக்குகின்றனர்.<br />
<br />
விவேகானந்தன் (சுயதொழில், மதுரை): 24 வயதில் ஆரம்பித்து, கடந்த 26 ஆண்டுகளாக 80 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். ஆண்டுக்கு ஐந்துமுறை தானம் செய்வேன். போனில் தகவல் தெரிவித்தால், மருத்துவமனைக்கு நேரில் சென்று தானம் செய்வது எங்கள் நண்பர்களின் வழக்கம். மதுரையைச் சேர்ந்த ஒருவரின் ஆறுமாத குழந்தைக்கு ரத்தத்தில் அணுக்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டியிருந்தது. அதன்பின் மாதந்தோறும் ரத்தம் செலுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக நண்பர்கள் அட்டவணையிட்டு ரத்ததானம் செய்தோம். தற்போது அந்த சிறுவன் நன்றாக இருக்கிறான். இனிமேல் ரத்தம் செலுத்த வேண்டியதில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். எங்களைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையை காப்பாற்றியதை பெருமையாக நினைக்கிறோம்.<br />
<br />
பானுமதி (வங்கிஅலுவலர், மதுரை): இதுவரை 14 முறை தானம் செய்துள்ளேன். ஒருமுறை கடலூரிலிருந்து நெய்வேலிக்கு பணிஇடமாற்றத்தின் காரணமாக, வீட்டை காலி செய்து, வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். "கர்ப்பப்பை வெடித்ததால், உயிருக்கு போராடும் பெண்ணுக்கு ரத்ததானம் தேவைப்படுகிறது' என, போன் வந்தது. சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தேன். அந்தப் பெண் தற்போது நலமாக உள்ளார். அதேபோல மதுரையில் "அப்பென்டிசைட்டிஸ்' பிரச்னையால், ரத்தப்போக்கு ஏற்பட்டபோது, ரத்ததானம் செய்தேன். அவரும் நன்றாக உள்ளார். உயிரைக் காப்பதை விட, பெரிய தானம் எதுவும் இல்லை.<br />
<br />
பாஸ்கர் (போட்டோகிராபர், திண்டுக்கல்): 18 வயதில் துவங்கி, இதுவரை 100 முறை ரத்தானம் செய்துள்ளேன். 75 முறை ரத்ததானம் அளித்ததற்காக 2004 ல் தமிழக அரசின் தங்கபதக்கம், சான்றிதழ் பெற்றேன். ஐந்தாண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாங்கரை பிரிவில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடந்த லாரியின் மீது ரயில் மோதியது. இதில் உயிருக்கு போராடிய இருவருக்கு ஒரே நேரத்தில் ரத்தம் கொடுத்து காப்பற்றினேன். 2008 ல் நந்தவனப்பட்டியில் நடந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். அவர்கள் உயிர் பிழைத்து என்னை வாழ்த்திய போது, பிறவி பயனடைந்ததை உணர்ந்தேன்.<br />
<br />
டாக்டர் செல்வராஜ் (வடுகபட்டி): மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது ரத்ததானக் குழு செயலாளராக இருந்தேன். ஒரே ஆண்டில் 50 ஆயிரம் பாட்டில்கள் ரத்தம் சேகரித்து கொடுத்தோம். 61 தடவை ரத்ததானம் செய்துள்ளேன். 1999ல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த பெண்ணுக்கு, ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். தானம் செய்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புத்துணர்வு ஏற்படும். தேனி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.<br />
<br />
டாக்டர் சரவணன் (பரமக்குடி):கல்லூரி பருவத்திலிருந்து 58 முறை ரத்ததானம் செய்துள்ளேன். நம் உடலில் உள்ள வயதான ரத்த சிவப்பணு செல்கள் அழிந்து சுழற்சி முறையில் புதுப்பிக்கப்படுகின்றன. ரத்தம் கொடுக்கும் போதும் புது செல்கள் உருவாகி, உடலுக்கு புத்துணர்வை தரும். மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரின் கல்லீரல் ஆப்பரேஷனுக்காக எட்டுபேர் ரத்ததானம் செய்தோம். அங்கிருந்த பேராசிரியர் எங்களை அழைத்து ஆப்பரேஷனை நேரடியாக பார்க்க அனுமதித்தார்.<br />
<br />
ஏ.ஆர்., தேவராஜன் (காஸ்மாஸ் லயன்ஸ் சங்க துணை தலைவர், காரைக்குடி): 18 ஆண்டுகளில் 75 முறை ரத்தம் வழங்கியுள்ளேன். எனது ரத்தம் அரியவகை,"ஓ' நெகடிவ். 1993ல் மருத்துவமனையில் இருந்த எனது தாயை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் தேவைப்பட்டது. வலியசென்று ரத்ததானம் செய்தேன். இன்று வரை தொடர்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் வியாபார ரீதியாக இலங்கை சென்றிருந்தேன். அங்கு ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்ததானம் செய்தேன். இன்றுவரை அவர் யாரென எனக்கு தெரியாது. குறைந்தது 100 முறையாவது தானம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.<br />
<br />
ஆர். சந்திரமோகன் (விவசாயி, விருதுநகர்): 53 முறை ரத்ததானம் செய்துள்ளேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தேன். பந்தல்குடியை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரத்ததானம் செய்ததன் மூலம் ஒன்பது மாதங்கள் உயிர்வாழ்ந்தார். பிரசவ நேரத்தில் நிறைய பெண்களுக்கு அதிகமுறை ரத்தம் வழங்கியுள்ளேன். சிறுகுழந்தைகளுக்கு 100 மில்லி ரத்தம் கொடுத்தால் போதும் என்று சொல்லும் போது, மனதுக்கு வருத்தமாக இருக்கும்.<br />
<br />
அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது : மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் பிரபா சாமிராஜ்: ஆரோக்கியமான உடல்நலம் உடையவர்கள் தாராளமாக ரத்ததானம் செய்யலாம். அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது. ஒருவரின் ரத்தத்தில் இருந்து சிவப்பணு, பிளாஸ்மா, பிளேட்லெட் செல்கள் தனியாக பிரிக்கப்பட்டு மூவரின் உயிர் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. நபருக்கேற்ப 100, 350, 450 மில்லி ரத்தம் சேகரிக்கப்படுகிறது. எட்டு முதல் 10 நிமிடங்களாகும். அதன்பின் குறைந்தது ஒருமணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.<br />
250 மில்லி பழச்சாறு, அரைலிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். அன்றைய தினம் கடினமாக உடற்பயிற்சி, உடல் வேலை, வாகனம் ஓட்டுதலை தவிர்க்கலாம். மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 9 முதல் மதியம் ஒருமணி வரை, தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யலாம்.<br />
<br />
யார் கொடையாளி?*18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ எடைக்கு மேல் உள்ள ஆண், பெண்கள்.<br />
*ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருப்பவர்கள்.<br />
*ரத்தஅழுத்தம் 120/70 முதல் 140/90 இருப்பவர்கள்.<br />
*ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை, பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தானம் செய்யலாம்.<br />
*மாதவிடாய் துவங்கிய ஒன்று முதல் ஐந்து நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தபின், ரேபிஸ் நோய் சிகிச்சைக்கு பின் ஓராண்டு வரை, டைபாய்டு, மலேரியா நோய் சிகிச்சைக்கு பின், டாட்டூஸ் (பச்சை) குத்தியபின் ஆறுமாதங்கள் வரை, மது குடித்த பின், 24 மணி நேரம் வரை ரத்த தானம் செய்யக் கூடாது.<br />
*இருதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, இன்சுலின் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்துபவர்கள், மனநலம் குன்றியவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாத பிரச்னையுள்ளவர்கள், எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் நிரந்தரமாக ரத்ததானம் செய்யக்கூடாது.<br />
<br />
"உதிர தான' கழகமும், உயிர்காக்கும் மகத்துவமும் : அரிய வகை ரத்தம் கொண்ட உறுப்பினர்களை இணைத்து "உதிரம்' அமைப்பை உருவாக்கியுள்ளார் டாக்டர் தங்கபாண்டியன். இவர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலக திட்ட அலுவலராகவும் உள்ளார்.<br />
<br />
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து ஏழு மணி நேரம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அரியவகை ஓ, ஏ, பி, ஏபி, ஏ2பி நெகடிவ் மற்றும் ஏ2பி பாசிட்டிவ் ரத்தபிரிவை சேர்ந்தவர்கள் "உதிரத்தின்' உறுப்பினர்கள். கடந்தாண்டு துவங்கி, ஐந்து முகாம்களின் மூலம் 650 அலகுகள் ரத்தம் தானம் செய்தனர். அமைப்பின் தலைவர் தங்கபாண்டியன் கூறியதாவது: ரத்தத்திற்கு மாற்று ரத்தம் தான். அரசு மருத்துவனையோ, தனியார் மருத்துவமனையோ, ரத்தம் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகக்கூடாது. நாங்கள் தானம் செய்த 150 அலகுகள் ரத்தம், நோயாளிகளின் உயிரை காத்துள்ளது. மாற்றுத் திறனாளி ஒருவருக்கு "ஓ நெகடிவ்' ரத்தவகை கிடைக்காததால், நான்கு மாதங்களாக இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை. 13 வயது பெண்ணுக்கு ஹீமோபிலியா (ரத்தம் உறையாது) பாதிப்பால், மாதவிடாய் காலத்தில் தொடர் உதிரப் போக்கு (பி நெகடிவ்) ஏற்பட்டது. அனுமந்தன்பட்டியில் ஒரு பெண்ணுக்கு (ஏ நெகடிவ்) தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டார். இதுபோன்றவர்களுக்கு உதிரம் கொடுத்து, அவர்களை வாழ வைத்ததே எங்கள் சாதனை, என்றார்.<br />
இன்று, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை, ரத்த தான முகாம் நடக்கிறது.<br />
உதிரத்தில் உறுப்பினராக சேர வேண்டுமா, டாக்டர் தங்கபாண்டியன் (80125 02345), ஜோஸ்வா சாமுவேல் ஜெபராஜ்(90424 21911) ஐ தொடர்பு கொள்ளலாம்.<br />
<br />
உயிரை காப்பாற்றும் குருதிக் கொடை : - இன்று சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம்-:தானங்களிலேயே சிறந்தது ரத்த தானம். உடலுறுப்புகளை இறந்த பிறகு தான் தானம் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போதே ரத்ததானம் செய்ய முடியும். உலகில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பான ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.<br />
<br />
பல நாடுகளில் ரத்தம் தேவைப்படும் போது நோயளியின் உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தான் ரத்தம் பெறப்படுகிறது. சில நாடுகளில், ரத்த தானம் செய்வோர் பணம் பெறுகின்றனர். பெரும்பாலான நேரங்களில், சுயமாக ரத்ததானம் செய்ய முன்வருவோரின் ரத்தமே பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல, தொண்டுள்ளம் படைத்தோருக்காகத் தான் சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம், ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.<br />
<br />
யார் தரலாம் : ரத்தத்தை வகைப்படுத்தும் முறையை கண்டறிந்த, கார்ல் லேண்ட்ஸ்டெய்னரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம், உலக ரத்த தானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது.எல்லோரிடமிரு<br />
<div dir="ltr"><wbr></wbr>ந்தும் ரத்தம் தானமாக பெறப்படுவதில்லை. ரத்தம் கொடுப்பவரின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும். எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும், உடலின் வெப்ப நிலையும் சரியான அளவில் இருப்பது அவசியம். நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது. இதில் 350 மி.லி., மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படுகிறது. 2 நாட்களுக்குள் இழந்த ரத்தத்தை உடல் மீட்டுவிடுகிறது. 2 மாதங்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.<br />
<br />
அதிகரிக்கும் தேவை : உலகில் ஆண்டுதோறும், 9 கோடியே 20 லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில் 45 சதவீதம், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. 25 நாடுகளில் 40 சதவீதத்துக்கும் மேலானோர் ரத்த தானம் செய்கின்றனர். மருத்துவமனைகளில் ரத்த அளவை, போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சை தர முடியும். வளரும் நாடுகளில் ரத்த தானம் செய்வோரின் சதவீதம் (1000 பேருக்கு 10 பேர் மட்டுமே) குறைவாக உள்ளது. அனைவரும் தாமாக முன்வந்த ரத்த தானம் செய்வோம் என இத்தினத்தில் உறுதி எடுப்போம்</div><div dir="ltr"></div><br />
<br />
நன்றி - தின மணி, வெப்துனியா, தின மலர்.</div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-73212571496634655532011-06-13T07:34:00.000+05:302011-06-13T07:34:33.756+05:30இன்றைய செய்திகள் - ஜூன் 13, 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #993399;">முக்கியச் செய்திகள் </b><span style="color: #993399;">:</span><br />
<br />
<b>ராணா மீதான வழக்கு விசாரணை முடிவு: விரைவில் தீர்ப்பு!</b><br />
<br />
<img alt="Untitled-1.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130867681d109eb3&attid=0.3&disp=emb&realattid=ii_1308674bc90fd1c3&zw" title="Untitled-1.jpg" /><br />
<br />
மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டி,தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட தஹவூர் ராணா. சிகாகோ நீதிமன்றத்தில் ஆஜரான அவரது வரைபடம்.<br />
<br />
சிகாகோ, ஜூன் 8: மும்பை தாக்குதலில் தஹவூர் ராணாவின் பங்கு குறித்த வழக்கில்,சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.<br />
<br />
கடந்த 2009ம் ஆண்டு டேவிட் கோல்மென் ஹெட்லியை சிகாகோ போலீஸôர் கைது செய்தனர். மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டம் தீட்டிக்கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஹெட்லியின் கல்லூரி நண்பர் தஹவூர் ராணாவும் கைது செய்யப்பட்டு, அவர் மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 50 வயதான ராணா மீது, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தது, மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.<br />
<br />
மும்பை தாக்குதலில் பலியான 166 பேரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க, ராணாவுக்கு தண்டனை வழங்கபட வேண்டும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்த தம்மை ஹெட்லி ஏமாற்றி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தியதாக ராணா ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளார்.<br />
<br />
12 பேர் கொண்ட ஜூரிகளின் முன் நடந்த இந்த வழக்கில் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு மேல் நீடித்த விசாரணையின் போது, ராணா சாட்சியம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி ஹாரி டி லீயினன்வெபர், ராணாவை சாட்சியம் அளிக்க அழைத்த போதும், விருப்பமில்லை என அவர் கூறினார். மும்பை தாக்குதலில், குற்றத்தை ஹெட்லி ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ராணா குற்றமற்றவர் என அவரது வழக்கறிஞர் சார்லி சுவிஃப்óட் தெரிவித்தார். ராணா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால், அவர் சாட்சியம் அளிக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார். ஹெட்லி சாமர்த்தியமாக ராணாவை ஏமாற்றிவிட்டதாவும், அவருக்கு மும்பை மற்றும் கோபன்ஹேன் தாக்குலில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அனைவரையும் ஹெட்லி முட்டாள் ஆக்கி விடுவார் என்றும் ராணாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். தம்மை காபாற்றிக் கொள்ள, ஹெட்லி, ராணாவை பலிகடா ஆக்க முயல்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.<br />
<br />
தொழில் அதிபரான ராணா, இந்தியா, டென்மார்க், காராச்சி,லாகூர் உள்ளிட்ட பல இடங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பினார் என்றும் ஹெட்லியின் சதி செயல்கள் எதுவும் அவருக்கு தெரியாது என்றும் அவர் வாதிட்டார். ராணாவின் வர்த்தக தொடர்புகளை லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஐஎஸ்ஐயின் சதி வேலைகளுக்கு ஹெட்லி சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார் என்று அவர் மேலும் கூறினார்.<br />
<br />
வாக்குமூலம் தொடர்பாக,நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட விடியோவை தமது கட்சிக்காரர் இதுவரை பார்க்கவில்லை எனவும் அவர் வாதிட்டார்.<br />
<br />
மிகவும் பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை காண அமெரிக்க அரசு அதிகாரிகள், பல நாடுகளிலிருந்தும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் குவிந்தனர்<br />
<br />
<b>* கனிமொழி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை</b><br />
புது தில்லி, ஜூன் 12: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூன் 13) விசாரிக்கிறது.<br />
<br />
இருவரது ஜாமீன் மனுக்களும் நீதிபதிகள் பி.எஸ்.செüகான், ஸ்வதந்திர குமார் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரவுள்ளன. இந்த பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள வழக்குகளில் 16-வது வழக்காக இந்த வழக்கு இடம்பெற்றுள்ளது.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்து தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரது மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்து.<br />
<br />
இதையடுத்து இருவரும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் உயர் நீதிமன்றமும் இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.<br />
<br />
தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு கருதப்படுகிறது. இதனால் கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் ஜாமீன் அளித்தால் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கக்கூடும், சாட்சியங்களை திசை திருப்பக்கூடும் என்று சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கருதின. இதனால் அவர்களுக்கு ஜாமீன் தர மறுத்தன.<br />
<br />
இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் இருவருக்கும் ஜாமீன் வழங்காது என்றே சட்டநிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.<br />
<br />
<b style="color: #993399;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை?<br />
</b><br />
கொழும்பு, ஜூன் 12: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்தியா தெரிவித்த யோசனைகளை இலங்கை நிராகரித்துவிட்டது என அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.<br />
<br />
இதனிடையே, இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பணியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பது என அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது.<br />
<br />
இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.<br />
<br />
ஆனால், இந்தியக் குழுவினர் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பிய பிறகு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.<br />
<br />
முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை மாகாண அரசுகளுக்கு விட்டுத் தர முடியாது என்று இந்தியக் குழுவினரிடம், இலங்கை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.<br />
<br />
காவல்துறை மற்றும் நிலம் மீதான அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது, இந்தியா அளித்த யோசனைக்கு எதிராக அமைந்துள்ளது. இது இரு நாட்டு அரசியல் தலைமைக்கு இடையே நெருடலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ""சண்டே டைம்ஸ்'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
இந்நிலையில், அதிபர் ராஜபட்ச மற்றும் இந்தியக் குழுவினருடனான பேச்சு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்த் இடம்பெற்றிருந்தார்.<br />
<br />
மாகாணக் கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு ராஜபட்ச கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே மாகாணக் கவுன்சில்கள் அதிகாரமின்றி செயலற்று உள்ளன.<br />
<br />
மத்திய மாகாணக் கவுன்சில் கூட்டு அதிகாரம் வழங்குவதற்கு தமது அரசு தயாராக உள்ளதாக இந்தியக் குழுவிடம் அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாகத் தெரிகிறது.<br />
<br />
தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுவதால் இவ்விரு பகுதிகளிலும் நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ராஜபட்ச அப்போது சுட்டிக் காட்டியதாகவும் ""டைம்ஸ்'' தெரிவிக்கிறது.<br />
<br />
ஆனால் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக அரசியல் சாசன திருத்த சட்டத்தை இலங்கை அமல்படுத்தும் என்று நம்புவதாக சிவசங்கர் மேனன் குறிப்பிட்டிருந்தார். சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு அரசியல் மூலமான தீர்வுதான் சிறந்ததாக இருக்கும் என்று இந்தியக் குழுவினர் வலியுறுத்தியதாக மேனன் குறிப்பிட்டார்.<br />
<br />
கடந்த மாதம், இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா சற்று கடுமையாக குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அங்கு நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.<br />
<br />
இந்தியாவின் யோசனையை, இந்தியக் குழு தில்லி திரும்புவதற்குள்ளாகவே இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை செல்ல பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். இவரது பயணம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வாக அமையும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.<br />
<br />
<b>* 31 பேர் சாவுக்கு காரணமான இ கோலி: பீன்ஸிலிருந்து பரவியது கண்டுபிடிப்பு*</b><br />
பெர்லின், ஜூன் 12: ஜெர்மனியில் 31 பேரை பலி வாங்கிய இ கோலி பாக்டீரியா பீன்ஸிலிருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
÷ஜெர்மன் நாட்டில் சமீபத்தில் இ கோலி பாக்டீரியா தொற்றால் 31 பேர் இறந்தனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. காய்கறி மூலம் இந்த பாக்டீரியா பரவும் என்பதால் மக்கள் காய்கறிகளைக் கண்டாலே ஓடும் நிலை ஏற்பட்டது. காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டாமென்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.<br />
<br />
÷இந்நிலையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள காய்கறிப் பண்ணையில் விளைவிக்கப்பட்ட பீன்ஸிலிருந்து இ கோலி பாக்டீரியா பரவியதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆய்வ சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.<br />
<br />
÷சமீபத்தில் இ கோலி பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு பெண்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவர்கள் சமீபத்தில் சாப்பிட்ட பீன்ஸ் மூலம் அவர்களை இ கோலி தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பீன்ஸ் வாங்கிய இடம் குறித்து விசாரித்தபோது அந்த பீன்ஸ் வடபகுதியில் உள்ள பண்ணையில் விளைவிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பண்ணைக்கு சென்ற அதிகாரிகள் பண்ணையை மூடி பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பண்ணையில் பாக்டீரியா எப்படி வந்தது என்பதும் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.<br />
<br />
÷அந்தப் பண்ணையில் இருந்து காய்கறி விநியோகிக்கப்படும் இடங்களுக்கும் மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை ஜெர்மனியின் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.<br />
<br />
<b>* பாகிஸ்தானில் அமெரிக்க உளவாளி கைது</b><br />
இஸ்லாமாபாத்,ஜூன் 12: பாகிஸ்தானில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
÷அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேத்யூ கிரெய்க் பேரட்(27). இவர் இஸ்லாமாபாத் அருகே பெத்ஜங் என்ற இடத்தில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் போலீஸôர் இவரை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி ராவல்பிண்டி சிறையில் அடைத்தனர்.<br />
<br />
÷முன்னதாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு இவருக்கு கடந்த 4-ம் தேதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இவர் பெத்ஜங் பகுதியில் இருந்து தப்பித் தலைமறைவானார். இதையடுத்து பாகிஸ்தான் போலீஸôர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இவரைக் கைது செய்தனர்.<br />
<br />
÷ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேத்யூ பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.<br />
<br />
<b style="color: #993399;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* மழைகால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றம் -பிரணாப் முகர்ஜி <br />
</b><br />
மழைகால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.<br />
<br />
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் நடத்தும் போராட்டம் ஜனநாயக மாண்புக்கு எதிரானது என்றார்.<br />
<br />
கருப்பு பணம், ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.<br />
<br />
லோக்பால் குழு நடவடிக்கையை வீடியோ எடுக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.<br />
<br />
<b>* உ.பி.,யில் சிறுமி கொலை: 11 போலீஸார் சஸ்பெண்ட்</b><br />
<br />
லக்னோ, ஜூன் 12- உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் 11 போலீஸார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
லக்கிம்பூர் அருகே நிகாஷன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவத்தை கண்டித்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.<br />
<br />
இந்நிலையில், 2 எஸ்.ஐ.,கள் உட்பட 11 போலீசாரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.கே. ராய் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.<br />
<br />
சிறுமியை போலீஸார் கொன்றதாக கூறப்படும் தகவலால், லக்கிம்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<br />
<br />
<b>* திகார் சிறையில் இட்லி, தோசை</b><br />
புது தில்லி, ஜூன் 12: தில்லி திகார் சிறையின் உணவுப் பட்டியலில் தென்னிந்திய உணவு வகையான இட்லி, தோசை, சாம்பார், தேங்காய் சட்னி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உணவு வகைகளை சமைக்க சிறை சமையல்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
தென்னிந்திய உணவுகளை வழங்கும் இந்த ஏற்பாடு பிப்ரவரியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உணவுகளுக்கு சிறைக் கைதிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
<b>* உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பாபா ராம்தேவ்</b><br />
டேராடூன், ஜூன் 12: ஊழல் ஒழிப்பு, வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய யோக குரு பாபா ராம் தேவ் தனது போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொண்டார்.<br />
<br />
ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தனது பிடிவாத்ததைத் தளர்த்திக் கொண்டார் பாபா. இதையடுத்து பழச்சாறு கொடுத்து பாபா-வின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ரவிசங்கர்.<br />
<br />
கடந்த 4-ம் தேதி தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பாபா ராம் தேவ். அதற்கு முன்பாக மத்திய அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால்,சுபோத் காந்த் சகாய் ஆகியோர் தில்லி விமான நிலையத்தில் சென்று பாபா ராம் தேவுடன் பேச்சு நடத்தினர்.<br />
<br />
தனது உண்ணாவிரத போராட்டத்தை மாலைக்குள் முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் பின்னர் போராட்டம் தொடரும் என அறிவித்தார். இதையடுத்து நள்ளிரவில் தில்லி போலீஸôர், அதிரடிப்படி கமாண்டோக்கள் தில்லி ராம் லீலா மைதானத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பாபா ராம் தேவ் உள்ளிட்ட ஆதரவாளர்களை வெளியேற்றினர்.<br />
<br />
இதையடுத்து ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.<br />
<br />
ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீட மையத்தில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பாபா ராம்தேவின் உடல் நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை ராம்தேவ் இங்குள்ள ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<br />
<br />
பாபாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக மருத்துவமனை இயக்குநர் விஜய் தஸ்மனா தெரிவித்தார். அவரது உடல் நிலையில் வேறு எந்த கோளாறும் இல்லை. இருப்பினும் இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையின் பொதுப் பிரிவில் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.<br />
<br />
ராம்தேவுடன் உண்ணாவிரதம் இருந்த அவரது நெருங்கிய சகா பாலகிருஷ்ணாவும் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.<br />
<br />
பல்வேறு சன்னியாசிகள், ஆதரவாளர்கள் பலரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டதால், தனது போராட்டத்தை ராம்தேவ் முடித்துக் கொண்டதாக பாலகிருஷ்ணா குறிப்பிட்டார்.<br />
<br />
போராட்டம் தொடரும்: இருப்பினும் ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பண விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். பாபா ராம்தேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த அனைவரும் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாலகிருஷ்ணா மேலும் கூறினார். கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான தங்களது போராட்டத்தை மக்களிடையே சென்று சேர்த்த ஊடகங்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
உண்ணாவிரத போராட்டத்தில் அரசு வென்று விட்டதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்பது பிரச்னையல்ல. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து அதை வெற்றிகரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட்டோம் என்று குறிப்பிட்டார்.<br />
<br />
மக்கள் விழிப்படைந்துவிட்டதால் ஊழலுக்கு எதிரான போராட்டம் தானாகவே தொடரும் என்றார்.<br />
<br />
ராம்தேவ் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் காலமான தனது தந்தையின் அஸ்தியைக் கரைப்பதற்காக அவர் ஹரித்வாருக்கு சென்ற ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அங்கிருந்து மருத்துவமனைக்கு வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார் என்றும் பாலகிருஷ்ணா குறிப்பிட்டார்.<br />
<br />
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செüதாலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை பாபா ராம்தேவை சந்தித்தனர். நாட்டின் நலன் கருதி உண்ணாவிரதம் இருக்கும் ராம்தேவின் கோரிக்கையை ஏற்குமாறு மத்திய அரசைக் வலியுறுத்தப் போவதாக மருத்துவமனைக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பாதல் கூறினார். மக்களுக்காகப் போராடும் ஒருவரின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
*ஏமனில் இருந்து 68 பேர் தாயகம் திரும்பினர் <br />
<br />
ஞாயிறு, 12 ஜூன் 2011( 12:51 IST )<br />
<br />
ஏமன் நாட்டில் தவித்து வந்த தமிழக, கேரள செவிலியர்கள் 68 பேர் தாயகம் திருப்பியுள்ளனர்.<br />
<br />
இந்தியாவில் இருந்து ஏமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ள நூற்றுக்கணக்கான செவிலியர்கள் உள்நாட்டு கலவரத்தில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.<br />
<br />
இவர்களில் முதல் கட்டமாக 68 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த நிர்மலா என்ற செவிலியர் தாம் நாடு திரும்புவேன் என கனவில் கூட நினைக்கவே இல்லை என்றார்.<br />
<br />
<b style="color: #993399;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* மாற்றுத்திறனாளி மாணவிக்கு பரிசு வழங்க வேண்டுகோள்<br />
<br />
<img alt="girl.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130867681d109eb3&attid=0.1&disp=emb&realattid=ii_130866d5ff8d8fb0&zw" title="girl.jpg" /></b><br />
சென்னை, ஜூன் 12: பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள பார்வையற்ற மாணவி ஆஷாவுக்கு அரசின் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.<br />
<br />
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும்.<br />
<br />
இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ஆஷா என்ற மாணவி 1,028 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.<br />
<br />
இவர் மாற்றுத்திறனாளிகள் அளவில் மாநிலத்தில் 3-வது இடத்தையும் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.<br />
<br />
இவர் தெலுங்கு வழியில் படித்துள்ளார் என்ற காரணத்தினால் இவருக்கு பரிசுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. மாணவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மேலும் நான்கு பெண் குழந்தைகள் உள்ள அவரது குடும்பத்தில் இவரது மூத்த சகோதரியும் பார்வையற்றவர்.<br />
<br />
தினமும் சுமார் 6 கி.மீ. நடந்து சென்று, பின்னர் பஸ்ஸில் பயணம் சென்று படித்துள்ளார்.<br />
<br />
இவருக்கு மாநில அளவில் 3-வது இடத்தைப் பெற்றதற்காக ரூ. 9 ஆயிரம், மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்றதற்காக ரூ. 12 ஆயிரம், பிரெயில் அச்சுப் புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ. 13 ஆயிரம் என மொத்தம் ரூ. 34 ஆயிரம் அரசின் சார்பில் வழங்கலாம்.<br />
<br />
எனவே இவருக்கு மறுக்கப்பட்டுள்ள பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் எஸ்.நம்பிராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.<br />
<br />
*<b> புதிய முறையில் ஐ.ஏ.எஸ். தேர்வு: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்<br />
</b><br />
சென்னை, ஜூன் 12: நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலைத் தேர்வை ஏறத்தாழ 3 லட்சம் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.<br />
<br />
தமிழகத்தில் இந்தத் தேர்வை ஏறத்தாழ 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.<br />
<br />
இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சி-சாட் என்ற திறனறியும் தேர்வுமுறை எளிமையாக இருந்ததாகப் பல மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு சில மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு நேரம் போதவில்லை என்றும் தெரிவித்தனர்.<br />
<br />
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இந்த ஆண்டு 880 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.<br />
<br />
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடம், விருப்பப்பாடம் என இரண்டுத் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு விருப்பப் பாடத்தை நீக்கி விட்டு, ஆங்கிலம், கணிதம் அடங்கிய சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் தேர்வு (சி-சாட்) அறிமுகப்படுத்தப்பட்டது.<br />
<br />
பொதுஅறிவுப் பாடம் காலையிலும், ஆப்டிடியூட் தேர்வு மாலையிலும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு கேள்வித் தாள்களிலும் முறையே 100, 80 கேள்விகள் இருந்தன. இந்தப் பாடங்களுக்கு 200 மதிப்பெண் வழங்கப்படும்.<br />
<br />
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் 70-க்கும் அதிகமான தேர்வு மையங்களில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.<br />
<br />
வழக்கமாக, தேர்வு மையங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் காணப்படுவர். இந்த ஆண்டு பதிவு செய்த பல மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்<br />
<br />
*<b> இலங்கை மீது பொருளாதாரத் தடை: உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும்- பழ. நெடுமாறன்.<br />
<br />
<img alt="nedu.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130867681d109eb3&attid=0.2&disp=emb&realattid=ii_130866c14107ee8f&zw" title="nedu.jpg" /></b><br />
தஞ்சாவூர், ஜூன் 12: இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கைக்கு எதிராக அந்த நாட்டின் மீது பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உலக நாடுகளிடையே இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.<br />
<br />
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல.<br />
<br />
தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக வாழும் கறுப்பின மக்களுக்கும், இந்தியர்களுக்கும் அதனால் பாதகம் விளையும் என்று யாரும் வாதாடவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகள் சில இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டன. ஆனாலும், பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவு நடவடிக்கையின் விளைவாக தென்னாப்பிரிக்க அரசு இறுதியில் பணிய நேர்ந்தது.<br />
<br />
எனவே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.<br />
<br />
<b>* தமிழ் வழி பி.இ.: தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாமா?</b><br />
<br />
சென்னை, ஜூன் 12: தேர்வுகளைத் தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி பி.இ. படிக்கும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.<br />
<br />
பள்ளிகளில் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்கள், பொறியியல் பட்ட பாடங்களை எளிதாகப் புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக பி.இ. மெக்கானிகல் மற்றும் சிவில் பிரிவுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது படித்து வருகின்றனர்.<br />
<br />
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இந்த தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.<br />
<br />
அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க. பொன்முடி, தமிழ் வழி பி.இ. படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தேர்வுகளை தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாம் எனக் கூறினார். ஆனால், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளைத் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று துறைத் தலைவர்கள் சிலர் வலியுறுத்தினர். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதல் மாதிரித் தேர்வின்போது, தூய தமிழில் கேள்வித் தாள் தயாரிக்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.<br />
<br />
இதைத் தொடர்ந்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாம் என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹரும் கூறினார். இதனையடுத்து, மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதி வந்தனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புதிதாக சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழிருந்த உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் அதன் கீழ் மாற்றப்பட்டன. இந்த நிலையில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அனைத்துக் கல்லூரிகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பினார். இதனால் மீண்டும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.<br />
<br />
இந்த உத்தரவு காரணமாக, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை (விழுப்புரம் வளாகம்) சேர்ந்த 4 தமிழ் வழி பி.இ. மாணவர்கள், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் கூறுகின்றனர். இப்போது 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து, அண்ணா பல்கலைகழகத்தை முன்பிருந்த நிலைக்கு மாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தங்களுக்கும் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுத தமிழக அரசு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி மாணவர்களிடைய எழுந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் சில, பாடத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன. இப்போது 5 பல்கலைக்கழகங்களும் ஒன்றாக இணைக்கப்படுவதால், பாடத் திட்ட ரீதியாக தங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்ற அச்சமும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.<br />
<br />
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (விழுப்புரம் வளாகம்) பேராசிரியர் ஜெயச்சந்திரன் கூறியது:<br />
<br />
பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தில் சிறிய அளவில்தான் மாற்றங்களைச் செய்துள்ளன. அதே நேரம், தரத்தைக் குறைக்கும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, மீண்டும் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கப் போவதில்லை. மேலும், தமிழ் வழி பி.இ. படிப்புகளின் பாடத் திட்டத்தில் மாற்றம் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது: அண்ணா பல்கலைக்கழகங்களை இணைப்பது என்ற தமிழக அரசின் முடிவால், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டம் சர்வதேச தரம் உடையது என்பதை அனைவரும் அறிவர். எனவே, ஒருங்கிணைப்பு முடிவால் மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும். தொடக்கத்தில் சிறு பிரச்னைகள் எழும் என்றபோதும், பின்னர் சரியாகிவிடும் என்று அவர் கூறினார்.<br />
<br />
<b style="color: #993399;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு: ஆய்வில் தகவல்</b><br />
லண்டன், ஜூன் 10 : பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<br />
<br />
பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை,தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.<br />
<br />
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால், பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன், கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும், சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.<br />
<br />
அதாவது, 1 டம்ளர் பழச்சாறில், 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே,பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில், 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. <br />
<br />
*<b> வேர்க்கடலையின் மகத்துவம் <br />
<br />
</b><br />
உயர்ந்த புரத சத்து நிறைந்த உணவில் சோயா பீன்சிற்கு அடுத்தபடியாக வேர்க்கடலை இடம்பெறும். அதில்லாமல், பாஸ்பரஸ், கால்சிம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் அதிகப்படியாக வேர்க்கடலையில் இடம்பெற்றுள்ளது.<br />
<br />
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வேர்க்கடலைக்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.<br />
<br />
வயிற்றில் பிரச்சினை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலாம். வேர்க்கடலை சாப்பிட்டதும், சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பசித்த பிறகு சாப்பிடச் சென்றால் குறைவான அளவே சாப்பிட முடியும். இதனால் உடல் எடை குறையும்.<br />
<br />
வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. <br />
<b>ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம்<br />
<br />
<img alt="large_256554.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130869ce0b50ff40&attid=0.4&disp=emb&realattid=ii_130869453cd733d6&zw" title="large_256554.jpg" /><br />
</b><br />
புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் மூலமாக, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.<br />
<br />
இதுதொடர்பாக, குழந்தைகள் உரிமை நல அமைப்பான "பச்பன் பச்சாவ்' வெளியிட்ட தகவல், பல ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்களைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு வெளியீடான "காபிடல் கரப்ஷன்: சைல்ட் லேபர் இண்டியா' இத்தகவல்களைக் கொண்டிருக்கிறது. வயது வந்த தொழிலாளர்களுக்கு மாற்றாக, குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதைக் கணக்கிட்டு, அதனால் முறைகேடாக ஏற்படும் வருவாய் ஆதாயம் கறுப்புப் பணமாகிறது என்பதே, இத்தகவலில் உள்ள கருத்தாகும்.இந்தியா முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் ஒருநாளைய வருவாய் மற்றும் பணி நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வில் கணக்கிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்தது.<br />
<br />
இவர்களுக்கு, சராசரியாக 15 ரூபாய் ஒரு நாளைய சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில், இவர்களுக்கு 200 பணி நாட்கள் என தெரிகிறது. பல இடங்களில், மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கில், வயதானவர்களுக்கு பதிலாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மலிவான சம்பளத்திற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதும் ஒரு காரணம்.வயதான நபர்களுக்கு ஒரு நாள் குறைந்தபட்ச சம்பளமாக, 115 ரூபாய் வழங்கப்பட வேண்டும். சம்பளம் முறையாக வழங்காவிட்டால், வயதான நபர்கள் சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவர்.<br />
அதுவே, குழந்தைத் தொழிலாளர் எனில், சம்பளத்தை சிறிது சிறிதாக வழங்கினால் போதுமானது. கூடுதல் பணி சுமையும் சுமத்தப்படுகிறது. இவர்களால், சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாது என்பது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.<br />
<br />
இப்படியாக, ஆறு கோடி வயதானவர்களுக்கு பதில், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் சேர்ப்பதால், சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் மிச்சமாகிறது. இதற்கு வரி ஏதும் செலுத்தப்படுவதில்லை. இதுபற்றி, அரசிடம் முறையான கணக்கு விவரங்களும் சமர்ப்பிக்கப்படாது.இப்படியாக, குழந்தைத் தொழிலாளர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கறுப்புப் பணம் பல இடங்களில், அவரவர் துறைகளின் வசதிக்கேற்ப முதலீடு செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #993399;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>சிமென்ட் விற்பனையை தமிழக அரசே ஏற்குமா?</b><br />
<br />
ஜூன் 13,2011,02:05<br />
விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டேபோகும் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த, அதன் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.<br />
<br />
தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. ஒரு மூட்டை சிமென்ட், 150 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக அதிகரித்தது.<br />
<br />
சிமென்ட் விலை உயர்வை தடுக்கும் வகையில், கடந்த ஆட்சியில், 2008, ஜனவரி முதல் 1,000 சதுரடி வரை வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, சலுகை விலையில் 50 கிலோ மூட்டை ஒன்று 200 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு அதிகபட்சமாக 400 மூட்டைகள் வரை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.<br />
<br />
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, தனியார் சிமென்ட் ஆலை அதிபர்களை நேரடியாக அழைத்து விலையை குறைக்கும்படி கூறினார். இதனால், வெளிச்சந்தையில் சிமென்ட் விலை சற்று குறைந்தது. அரசு சிமென்ட் விற்பனை செய்ததற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.தமிழகத்தில் ஆலங்குளம் மற்றும் அரியலூரில், அரசுக்கு சொந்தமான சிமென்ட் ஆலைகள் உள்ளன. ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ஆண்டுக்கு 2.90 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு, ஈரப்பத தொழில்நுட்பம் மூலம் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.<br />
<br />
ஆண்டுக்கு 5 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட அரியலூர் சிமென்ட் ஆலையில், உலர்பத தொழில்நுட்பத்தில் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.இவ்வாலைகளி<br />
<div dir="ltr"><wbr></wbr>ல், உற்பத்தி செய்யப்படும் சிமென்ட் முழுமையும், அரசு துறைகளுக்கு ஒரு மூட்டை, 200 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது.<br />
<br />
தமிழகத்தில், தனியார் துறையைசேர்ந்த, இந்தியா சிமென்ட் நிறுவனத்திற்கு மூன்று ஆலைகளும், மெட்ராஸ் சிமென்ட் நிறுவனத்திற்கு மூன்று ஆலைகளும், டால்மியா சிமென்ட் நிறுவனத்திற்கு இரண்டு ஆலைகளும், செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்திற்கு நான்கு ஆலைகளும், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஏ.சி.சி., நிறுவனத்திற்கு தலா ஒரு ஆலையும் உள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சிமென்ட் மூட்டை 290 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.<br />
<br />
தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தி ஆலைகள், ஆண்டுக்கு மூன்று கோடியே 27 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த மார்ச் வரை இரண்டு கோடியே 60 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 80 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய்க்கு மேலாக சிமென்ட் விற்பனை நடக்கிறது. எதிர் காலங்களில் தமிழகத்தில், பல நிறுவனங்கள் கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.<br />
<br />
தமிழகத்தில், நாளுக்கு நாள் கட்டுமானத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, மதுபானம், மணல் போன்றவற்றை விற்பனை செய்வது போல், சிமென்ட் விற்பனையிலும் தமிழக அர” ஈடுபட??வண்டும் என்ற பொதுவான கருத்து எழுந்துள்ளது. இதன் மூலம், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுவதை தடுக்க முடியும். அரசுக்கும் வருவாயும் கிடைக்கும்.<br />
<br />
இதுகுறித்து இந்திய கட்டுமானத் துறையினர் சங்கத் தலைவர் (தென்னக மையம்) ரகுநாதன் கூறும்போது, 'தனியார் மதுபான ஆலைகளிலிருந்து, மதுபானத்தை வாங்கி அரசு விற்பது போல், தனியார் சிமென்ட் நிறுவனங்களிடமிருந்து, சிமென்ட் கொள்முதல் செய்து, அரசே விற்பனை செய்ய வேண்டும்.இதன் மூலம் அடிக்கடி உயரும் சிமென்ட் விலையை கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கும். நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிக வருவாயும் கிடைக்கும்' என்றார்.- வீ.அரிகரசுதன் - <br />
<br />
<b style="color: #993399;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>கிரிக்கெட்</b><br />
<br />
<b>இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா: இன்று வெ. இண்டீசுடன் 4வது மோதல்</b><br />
ஆன்டிகுவா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடக்கவுள்ளது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இளம் இந்திய அணி காத்திருக்கிறது. சொந்த ஊரில் எழுச்சி கண்டு, ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராக உள்ளது.<br />
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி கண்ட இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடக்கவுள்ளது.<br />
ரோகித் நம்பிக்கை:<br />
இந்திய அணியின் துவக்க வீரராக பார்த்திவ் படேல் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் ஷிகர் தவான் தொடர்ந்து ஏமாற்றி வருவது பின்னடைவு அளிக்கிறது. கடந்த போட்டியில் "டக்-அவுட்' ஆன விராத் கோஹ்லி இன்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் சாதிக்காத தமிழக வீரர் பத்ரிநாத், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட 161 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா, இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். கடந்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத மனோஜ் திவாரி, விரிதிமன் சகா உள்ளிட்டோர் இன்று களமிறக்கப்படலாம்.<br />
முனாப் அபாரம்:<br />
கடந்த மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு பிரவீண் குமார் கைகொடுக்கும் பட்சத்தில் வேகத்தின் பலம் அதிகரித்து விடும். சுழலில் இதுவரை ஏழு விக்கெட் கைப்பற்றிய அமித் மிஸ்ரா நம்பிக்கை அளிக்கிறார். அனுபவ ஹர்பஜன் சிங், சுழலில் எழுச்சி கண்டால் நல்லது. இவர்களை தவிர சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம். கடந்த போட்டிகளில் பங்கேற்காத அஷ்வின், இஷாந்த் சர்மா, வினய் குமார் உள்ளிட்டோருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம்.<br />
<br />
சர்வான் எதிர்பார்ப்பு:<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. துவக்க வீரராக சிம்மன்ஸ் ஆறுதல் அளிக்கிறார். ஆனால் எட்வர்ட்ஸ் இதுவரை சொல்லிக் கொள்ளும் படி விளையாடாதது பின்னடைவான விஷயம். கடந்த மூன்று போட்டிகளில், இரண்டு அரைசதம் உட்பட 140 ரன்கள் எடுத்துள்ள அனுபவ சர்வான் இன்றும் கைகொடுக்கலாம். அதிரடி போலார்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களை "சிக்சர்' மழையில் மகிழ்விக்கலாம். கடந்த போட்டியில் அதிரடியாக ரன் குவித்த ஆன்ட்ரி ரசல், இன்றும் தனது அபார ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு சாமுவேல்ஸ், கார்ல்டன் பாக் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.<br />
<br />
ஏமாற்றும் வேகம்:<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் சமி, ரவி ராம்பால் உள்ளிட்ட திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், போட்டியில் இவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாதது ஏமாற்றமான விஷயம். போலார்டு, ரசல், கீமர் ரோச், டுவைன் பிராவோ உள்ளிட்ட வேகங்கள் சாதிக்கும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழலில் தேவேந்திர பிஷு சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு அந்தோனி மார்டின் ஒத்துழைப் அளித்தால் நல்லது.<br />
<br />
"ஹாட்ரிக்' வெற்றி<br />
<br />
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆன்டிகுவா நகரில், நேற்று முன்தினம் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங்' தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரசல் (92*), சிம்மன்ஸ் (45) உள்ளிட்டோர் கைகொடுக்க, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. பின் சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (86), பார்த்திவ் படேல் (46), ஹர்பஜன் (41), பிரவீண் (25*) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இந்திய அணி 46.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.<br />
<br />
<b style="color: #993399;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #993399;">* அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோவில்</b><br />
மூலவர் : சுவாமிநாத பாலமுருகன்<br />
உற்சவர் : பாலமுருகன்<br />
அம்மன்/தாயார் : -<br />
தல விருட்சம் : வன்னி<br />
தீர்த்தம் : -<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 500 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : மேட்டுக்குப்பம், வானகரம்<br />
மாவட்டம் : திருவள்ளூர்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
மச்சம் உள்ள முருகன்<br />
<br />
<br />
இத்தலத்தின் தலவிநாயகர் ஸ்ரீசக்ர விநாயகர், விமானம்: மயில் விமானம்<br />
<br />
பிரார்த்தனை<br />
<br />
<br />
புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.<br />
<br />
கடன் தொல்லையில் இருப்பவர்கள் விஷ்ணுதுர்காலட்சுமி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வணங்குகிறார்கள். <br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
கிரக வஸ்திர பூஜை: முருகப்பெருமான் இக்கோயிலில், பால வடிவில் நின்ற கோலத்தில் அருளுகிறார். மயில் விமானத்தின் கீழ் காட்சி தருவதால், மூலஸ்தானத்தில் மயில் இல்லை.<br />
<br />
விசேஷ நாட்களில் இவரது கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். அப்போது மட்டுமே மச்சத்தைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்வதால், மச்சத்தைக் காண முடியாது.<br />
<br />
ஒவ்வொரு நாளும், அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்வது மற்றொரு சிறப்பு.<br />
<br />
கிரக தோஷம் உள்ளவர்கள், அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில், கிரகத்திற்குரிய நிறத்தில் முருகனுக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கிருத்திகை உச்சிக்காலத்தில் முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடாகிறார்.<br />
<br />
ஸ்ரீசக்ர விநாயகர்: முருகன் சன்னதிக்கு வலப்புறம் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர், அம்பிகையிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரை சக்தி அம்சமாக கருதுகின்றனர். இதன் அடிப்படையில், அம்பாளுக்குரிய ஸ்ரீசக்ரம் இவரது சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, "ஸ்ரீசக்ர விநாயகர்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.<br />
<br />
பிரகாரத்தில் சீதை, லட்சுமணனுடன் ராமர், யோக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், விஷ்ணு துர்க்கா லட்சுமி ஆகியோர் உள்ளனர்.<br />
<br />
கடன் நிவாரண பூஜை: இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். பைரவர் கையிலுள்ள கும்பத்தில் மகாலட்சுமி சிற்பம் உள்ளது. அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கடன் தொல்லையிலிருந்து விடுபட துர்க்கை மற்றும் பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, தினைப்புனம் நிறைந்த திருத்தணியில் தோழியருடன் தங்கியிருந்தாள். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இறைவனுக்கு கிடையாது. ஏற்கனவே உயர் இனத்து தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த வள்ளியையும் ஆட்கொள்ள முடிவு செய்தார்.<br />
<br />
மனிதனாகப் பிறந்தவர்கள் இந்த உலக இன்பங்கள் நிரந்தரமானதென்றும், நிஜமானதென்றும் கருதி, மரணத்தைப் பற்றியே அக்கறையே இல்லாமல், இங்கேயே மூழ்கிக் கிடக்க எண்ணுகிறார்கள். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கும். அதில் மூழ்கிக் கிடந்தாள் வள்ளி. இவ்வாறு அறியாமல் மூழ்கிக் கிடக்கும் உயிர்களையும் தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வருகிறான் இறைவன். முருகனும் வள்ளியை ஆட்கொள்ள வலிய வந்தார்.<br />
<br />
இறை சிந்தனையே இல்லாத உயிர்கள் அவனைச் சிந்திப்பதே இல்லை. இது முருகனைக் கண்டு வள்ளி ஒதுங்கி ஓடியதைக் குறிக்கிறது. பின்னர் விநாயகர் உதவியுடன் அவளை மணந்தார். இது கந்தபுராணக்கதை,<br />
ஆனால், கர்ண பரம்பரையாக மற்றொரு செய்தி கூறப்படுகிறது.<br />
<br />
முருகன் முதியவர் வடிவில் வள்ளியைத் தேடிச்சென்ற போது. ""கிழவரே! கன்னியர் இருக்கும் இடத்தில் உமக்கென்ன வேலை?'' என்று கேட்டாள். முருகனும் திரும்பிவிட்டார். மறுநாள் அழகிய இளைஞன் வடிவில் சென்றார். அவரிடம், ""என்ன முதியவரே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வருகிறீரே! நேற்று கிழவன், இன்று இளைஞனா? வந்ததன் காரணம் என்னவோ?'' என்றாள்.<br />
<br />
தான் வேடம் மாறி வந்தது வள்ளிக்கு எப்படித் தெரிந்தது என முருகனுக்கு ஆச்சரியம்! தன்னைக் கண்டுபிடித்தது எப்படி? என அவளிடமே கேட்டார். அவள் முருகனின் வலது கன்னத்தைச் சுட்டிக்காட்டி, ""உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது!'' என்றாள். வள்ளியின் ஞானத்தை மெச்சிய முருகப்பெருமான், அவளை பாராட்டினார்.<br />
<br />
இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு முருகப்பெருமான், வலது கன்னத்தில் மச்சத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், "மச்சக்காரன்' என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அபூர்வம்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ராமநவமி.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்<br />
<br />
<b style="color: #993399;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #993399;">அகங்கார முடிச்சை வெட்டு - அன்னை </b><br />
<br />
முடிச்சு? அது ஒரு உருவகம். ஆனால், அது நல்ல உறுதியான கயிற்றினால் போடப்பட்ட முடிச்சைப்போல உன்னை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒன்று. ஆகவே ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. <br />
<br />
இது ஒரு நல்ல உருவகம், கருத்தை விளக்கமாகக் கூறுகிறது, அல்லவா? - உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது. உனக்குள்ளேயே நீ அடைபட்டுக் கிடக்கிறாய், சிறையில் அடைக்கப்பட்டதைப் போல ஜீவனின் எல்லாப் பாகங்களும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்டிருப்பதால்தான் - ஒட்டியிருத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அது வரம்பிற்கு உட்படுத்துகிறது.<br />
<br />
உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் அடைபட்டிருப்பதால் நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.<br />
<br />
<b style="color: #cc33cc;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா -</b> இந்தியாவின் மின்னணு மைய நகரம் எது ?<br />
<br />
<b>விடை</b> - பெங்களூரு - கர்நாடகம்.<br />
<br />
<b style="color: #993399;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>வீரத்தாய் வேலுநாச்சியார் வரலாற்று நடன நாடகம்<br />
<br />
<img alt="large_256343.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130869ce0b50ff40&attid=0.2&disp=emb&realattid=ii_1308695efae52709&zw" title="large_256343.jpg" /></b><br />
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2011,00:00 IST<br />
<br />
சென்னை: "வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டை விட்டு சென்று எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து, சிவகங்கையை ஆண்டார். <br />
<br />
இந்திய விடுதலை போர் வரலாற்றில், 1730ல், வெள்ளையர்களை ஓட, ஓட விரட்டி அடித்தவர் வீரத்தாய் வேலுநாச்சியார். அதன்பின், 20 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்டார். மக்களுக்கு நீண்ட நிம்மதியான ஆட்சி தந்த வேலுநாச்சியாரின் வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களை மையமாக வைத்து, "வீரத்தாய் வேலுநாச்சியார்' வரலாற்று நடன நாடகம் பரதாஸ்ரம் அமைப்பின் மூலம் சென்னையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு, பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பேசும் போது, "வீரத்தாய் வேலுநாச்சியார் வரலாறு சரித்திர புத்தகத்தில் காட்டப்படவில்லை; மறைக்கப்பட்டுள்ளது. வைகோவின் முயற்சியால், இந்த வீரத்தாயின் வரலாறு நடன நாடகமாக பரதாஸ்ரம் அமைப்பின் மூலம், அற்புதமாக மனதை தொடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மதிநுட்பத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் "வீரத்தாய் வேலுநாச்சியார்' நடன நாடகம், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட வேண்டும்' என்றார்.<br />
<br />
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: சிவகங்கையை ஆண்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாற்றை நடன நாடகமாக செய்ய உள்ளதாக பரதாஸ்ரம் அமைப்பினர் கூறினர். வீரத்தாயின் போற்றுதற்குரிய வரலாற்றை நடன நாடகமாக உருவாக்குவதற்கான செலவுகளை நானே செய்து விடுகிறேன் என்றேன். இந்த வரலாற்று நடன நாடகம், ஒவ்வொருவரின் மனதை தொடும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வீரத்தாய் வேலுநாச்சியாரின் கணவர் வெள்ளையரால் கொல்லப்பட்ட பிறகு, அவர்களுடன் உடனே எதிர்த்து போரிட சாதகமான சூழ்நிலைகள் இல்லாமல் போனதால், போரிட வலுவான சூழ்நிலைகளை ஏற்படுத்த, வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இதன்பின், மருது சகோதரர்கள் <உதவியுடனும், முஸ்லிம் மன்னர் ஐதர் அலியின் படையினரின் உதவியுடனும் போரிட்டு, தன் கணவரை கொன்ற வெள்ளையரை ஓட, ஓட விரட்டுகிறார். இதன்பின், சிவகங்கையை வேலுநாச்சியார், 20 ஆண்டுகள் ஆண்டுள்ளார்<br />
<br />
இந்த வரலாற்று நடன நாடகத்தை வடிவமைத்து இயக்கிய ஸ்ரீராம் சர்மா மற்றும் வேலுநாச்சியராக நடித்த மணிமேகலை சர்மா உட்பட அனைத்து கலைஞர்களும் பாராட்டப்பட்டனர். <br />
<br />
<b>* "உதவி செய்ய தயாராக இருக்கிறேன்!'</b><br />
<br />
<img alt="large_256421.jpg" src="https://mail.google.com/mail/u/1/?ui=2&ik=2996d71d52&view=att&th=130869ce0b50ff40&attid=0.1&disp=emb&realattid=ii_130869484da8b8ba&zw" title="large_256421.jpg" /><br />
<br />
கோல்டு ஹார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ஸ்ரீபிரியா: ஆசிரியர் பணி என்பதால், எல்லா நேரமும் குழந்தைகளுடனேயே இருக்கும் வாய்ப்பு எனக்கு. பள்ளி நேரம் தவிர, நிறைய குழந்தைகள் என் வீட்டிற்கும் வருவர். ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்று யோசித்து, முதலில் முதியோர் இல்லத்திற்குச் சென்று, மாணவர்களின் உதவியுடன், எங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்தோம்.இந்நிலையில், மின்ட்டில், உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், என்னை அழைத்திருந்தார். எல்லா விதத்திலும் பின்தங்கிய மாணவர் கள் படிக்கும் பள்ளிக்கு, நான் செல்வது அதுதான் முதல் முறை.சுகாதாரமற்ற சுற்றுப்புறம், அழுக்கு உடை, நான்கு வார்த்தை கூட நாகரிகமாகப் பேசத் தெரியாமல் பரிதாபமாய் நின்றனர், அந்த பள்ளி மாணவர்கள். அவர்களைப் பார்த்து பதறிப் போனது மனது. அந்த நிமிடத்தில் தான், இந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று திடமாக முடிவெடுத்தேன். நண்பர்கள், தெரிந்தவர்கள், மாணவர்கள் மூலம், அவர்கள் பள்ளியிலேயே வகுப்பெடுத்தேன். சனி, ஞாயிறுகளில் முழுநேரமும், பாடங்கள் நடத்தினோம்.அவர்களுடன் நெருக்கமாகப் பழகியதால், பிரச்னைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்களே செய்தோம். எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு தேவையான புத்தகம், யூனிபார்ம் என்று அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறோம்.இந்தக் குழந்தைகளிடம் நான் சொல்வது ஒன்று தான், என்ன தேவையோ, உரிமையுடன் இந்த அம்மாவிடம் கேளுங்கள்; செய்து தருகிறேன். எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை மட்டும் விட்டுவிட வேண்டாம்..</div><div dir="ltr"></div><div dir="ltr"></div><br />
<br />
நன்றி - தின மணி, வெப் துனியா, கூகிள் செய்திகள்.</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-75293382221360432632011-06-11T07:28:00.000+05:302011-06-11T07:28:22.419+05:30இன்றைய செய்திகள் - ஜூன் , 11, 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #6666cc;">முக்கியச் செய்திகள் :</b><br />
<br />
<img alt="tn_assembly1.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c3818b040817&attid=0.1&disp=emb&realattid=ii_1307c3407a6f2cd5&zw" title="tn_assembly1.jpg" /><br />
<br />
*<b>சமச்சீர் கல்வியை நிறுத்த உயர்நீதிமன்றம் தடை<br />
</b><br />
சென்னை, ஜூன் 10- தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.<br />
<br />
இந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.<br />
<br />
சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. <br />
<br />
<b>* மும்பை தாக்குதல் வழக்கில் ராணா விடுதலை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு <br />
</b><br />
மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி ராணாவை விடுதலை செய்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.<br />
<br />
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக டேவிட் கோல்மேன் ஹெட்லி, தகாவுர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.<br />
<br />
இந்த வழக்கில் மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி ராணாவை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.<br />
<br />
ஆனால், டென்மார்க் பத்திரிகை அலுவலகம் தாக்குதல், லஷ்கர் இ தைய்பா தீவிரவாதிகளுக்கு உதவி செய்தது ஆகிய 2 குற்றச்சாற்றுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
இந்த குற்றங்களுக்கான தண்டனை விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #6666cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<b>* ஹிலாரி கிளிண்டனுக்கு உலக வங்கி தலைவர் பதவி? <br />
</b><br />
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.<br />
<br />
தற்போது உலக வங்கியின் தலைவராக இருக்கும் ராபர்ட் சோலிக்கின் பதவி காலம் வருகிற 2012 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.<br />
<br />
பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே வழங்கப்பட்டு வரும் இந்த பதவிக்கு தற்போது அமெரிக்காவின் அயலுறவுத் துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.<br />
<br />
அயலுறவுத் துறை அமைச்ச்ராக அவரது செயல்பாடுகள் வெள்ளை மாளிகைக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும் நிலையில், உலக வங்கி தலைவர் பதவிக்கு அவரது பெயர் அடிபடுகிறது.<br />
<br />
ஆனால் இந்த தகவல் முற்றிலும் ஆதரமற்றது என்று ஹிலாரியின் செயலாளரான பிலிப் ரீன்ஸ் மறுத்துள்ளார்.<br />
<br />
*<b> இந்திய உயர்மட்ட குழு இலங்கை வருகை </b><br />
இந்திய உயர்மட்டக் குழு ஒன்று இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை வர உள்ளது.<br />
<br />
இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு வரும் இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.<br />
<br />
இலங்கை அதிகாரிகளை சந்திக்கும் இந்த குழுவினர் வடக்கின் புனரமைப்பு, ஐ.நா அறிக்கை, இருதரப்பு உறவுகள் ஆகிய விடயங்கள் குறித்து பேசுவார்கள் என்றும், அதிபர் மகிந்த ராஜபக்ச, அயலுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல். பீரீஸ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சந்திப்பார்கள் என்றும் இலங்கை அயலுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. <br />
<br />
<b>* எம்.எப்.ஹுசேன் உடல் லண்டனில் அடக்கம்-நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்பு<br />
<br />
<img alt="10-mf-hussain-300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c3818b040817&attid=0.6&disp=emb&realattid=ii_1307c3220bc87298&zw" title="10-mf-hussain-300.jpg" /></b><br />
டெல்லி: பிரபல ஓவியர் எம்.எப். ஹுசேனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தபோதும் அவரது கடைசி விருப்பப்படி லண்டனிலேயே அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.<br />
<br />
இந்துக் கடவுள்கள் குறித்த ஹுசேனின் சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.<br />
<br />
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. ஹுசேனின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.<br />
<br />
மீண்டும் இந்தியாவுக்கு வந்து வாழ ஆசைப்பட்ட அவர் லண்டனிலேயே இறந்தார். இந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.<br />
<br />
இருப்பினும் நான் எங்கு இறக்கிறேனோ, அங்கேயே எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று ஹுசேன் முன்பு தனது குடும்பத்தாரிடம் கூறியிருந்தார். இதனால் அவரது கடைசி ஆசைப்படி லண்டனிலேயே உடல் அடக்கத்தை நடத்த குடும்பத்தினர் தீர்மானித்தனர்<br />
<br />
அதன்படி லண்டன், ப்ரூக்வுட் சிமெட்டரி எனப்படும் கல்லறைத் தோட்டத்தில் ஹுசேனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.<br />
<br />
உடல் அடக்க நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்கின்றனர். கலையுலகைச் சேர்ந்த பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.<br />
<br />
<b style="color: #6666cc;">தேசியச் செய்தி மலர் </b>:<br />
<br />
<b>* அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ராஜ்காட்டிற்கு மாற்றம்<br />
</b><br />
புதுதில்லி, ஜூன்.8: யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக போலீஸ் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து சமூக சேவகர் அண்ணா ஹசாரே ராஜ்காட்டில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.<br />
<br />
காலை 10 மணியளவில் அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.<br />
<br />
அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.<br />
<br />
பொதுநல அமைப்பின் உறுப்பினர்களான சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி உள்ளிட்டோரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து அருகில் உள்ளனர்.<br />
<br />
உண்ணாவிரதம் அமைதியாக நடைபெற தில்லி போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.<br />
<br />
முன்னதாக தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருந்தார். ஆனால் தில்லி போலீசார் அதற்கு அனுமதி மறுத்ததால் போராட்டத்தை ராஜ்காட்டுக்கு மாற்றிக் கொண்டார்.<br />
<br />
அமைதிப் போராட்டம் நடத்துவது குடிமகனின் அடிப்படை அரசியல் சாசன உரிமை. அதற்கு அனுமதி மறுப்பதற்கு பல்வேறு பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.<br />
<br />
உண்ணாவிரதத்தில் பங்கேற்க ராஜ்காட்டில் காலை முதலே ஹசாரே ஆதரவாளர்கள் குழுமத் தொடங்கினர்.<br />
<br />
ஏராளமான இளைஞர்கள் காந்தி குல்லாவுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். வயதான முதியவர்களும் தேசியக் கொடியுடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர்.<br />
<br />
ஒருவர் மகாத்மா காந்தியைப் போன்று உடை அணிந்து வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.<br />
<br />
உண்ணாவிரதத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி போலீஸ் தலைவர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.<br />
<br />
* <b>விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு</b><br />
ஆலந்தூர், ஜூன் 10: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.<br />
<br />
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போனில் வந்த மிரட்டலையடுத்து 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.<br />
<br />
தில்லியில் உள்ள வெளிறவுத்துறை அமைச்சகத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது 1 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறி இணைப்பை துண்டித்தார்.<br />
<br />
இந்த தகவலைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் விமானநிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.<br />
<br />
ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே சென்னை விமானநிலையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து இப்போது 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.<br />
<br />
விமானநிலையத்தில் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கபடுகின்றன. அதேபோல பயணிகளின் உடமைகளும் சோதிக்கப்படுகின்றன.<br />
<br />
மேலும் விமானநிலையத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.<br />
<br />
*<b> பண பலத்துக்கு நீதி அடிபணியாது: நீதிபதி ஓ.பி. சைனி</b><br />
<br />
புது தில்லி, ஜூன் 10: நீதிமன்ற நிர்வாகத்தை பணபலத்தால் அடி பணிய வைக்க முடியாது என்று தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கூறினார்.<br />
<br />
சிறப்பு நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை (ஜூன் 11) தொடங்கி, ஜூலை 4 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இதைக் காரணம் காட்டி, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிறையில் உள்ள ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.<br />
<br />
நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குவதால், இந்த விடுமுறை காலத்தில் தங்களது நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் வகையில் மும்பை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களையும் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.<br />
<br />
அவர்களது மனுவை நிராகரித்த நீதிபதி சைனி, நீதி நிர்வாகத்தைப் பணபலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்று கூறினார்.<br />
<br />
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவர்கள் அனைவரும் தலா ரூ.15,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.<br />
<br />
<br />
<b>* தீவிர சிகிச்சைப் பிரிவில் பாபா ராம்தேவ் அனுமதி</b><br />
<br />
<img alt="babauramdev.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c3818b040817&attid=0.2&disp=emb&realattid=ii_1307c2fcb8b63088&zw" title="babauramdev.jpg" /><br />
<br />
ஹரித்வார், ஜூன் 10: யோகா குரு பாபா ராம்தேவின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து டேராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.<br />
<br />
ஊழல், கறுப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, கடந்த 4-ம் தேதி தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கிய அவர், போலீஸôரால் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள அவரது பதஞ்சலி ஆஸ்ரமத்தில் போராட்டத்தை ராம்தேவ் தொடர்ந்து வந்தார்.<br />
<br />
உண்ணாவிரத போராட்டத்தின் 7-வது நாளான வெள்ளிக்கிழமை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.<br />
<br />
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெத்தானி, தேவையான பரிசோதனைகளை மருத்துவர்கள் துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக அவருக்கு குளுகோஸ் ஏற்றப்படுகிறது என்றார்.<br />
<br />
உத்தராகண்ட் மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆஷா மாத்தூர் கூறுகையில், ராம்தேவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவை சீராக இல்லை. சிறுநீரில் நோய்த்தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.<br />
<br />
மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெத்தானி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராம்தேவின் கல்லீரல் இயக்கத்தில் சிறிய மாறுபாடு காணப்படுகிறது. சிறுநீரக இயக்கம் நன்றாக உள்ளது. அவர் சுயநினைவுடன் உள்ளார். இப்போதைய நிலவரப்படி அவர் நலமாக உள்ளார் என்றார். <br />
<br />
இதற்கிடையே, ராம்தேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அவரது சீடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீஸôருடன் மோதல் ஏற்பட்டது. ஆசிரம நிர்வாகிகளின் தலையீட்டை அடுத்து நிலைமை சீரடைந்தது.<br />
<br />
ஸ்ரீ ரவிசங்கர்: இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மறைந்த தனது தந்தையின் அஸ்தியை கரைப்பதற்காக ஹரித்வார் சென்ற வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மருத்துவமனையில் ராம்தேவை சந்தித்துப் பேசினார்.<br />
<br />
பின்னர் அவர் கூறுகையில், ராம்தேவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இப்போது சற்று சீராக உள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரை கேட்டுக்கொண்டேன் என்றார்.<br />
<br />
முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நடவடிக்கை: பதஞ்சலி பீடத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பாபா ராம்தேவை மருத்துவமனைக்கு மாற்றும் முடிவு முதல்வரால் எடுக்கப்பட்டது. அவர்தான் மாவட்ட நிர்வாகத்துக்கு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். சிறப்பு கவனம் எடுத்து பாபாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களையும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி பாபா ராதேவையும் முதல்வர் கேட்டுக்கொண்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.<br />
<br />
<br />
<b>* பயங்கரவாதிகளின் பிடியில் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் போகும் அபாயம்: ஏ.கே. அந்தோனி</b><br />
<br />
<img alt="aka.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c3818b040817&attid=0.5&disp=emb&realattid=ii_1307c2f11d1fd185&zw" title="aka.jpg" /><br />
<br />
புதுதில்லி, ஜூன் 10 : பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் பிடியில் செல்லும் அபாயம் உள்ளது அச்சமளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.<br />
<br />
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணு ஆயுதங்களை பாதுகாக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிகிறது. எனினும், அவை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் பிடியில் சிக்கும் வாய்ப்புகள் இருப்பது மிகவும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். " இதுகுறித்து கவனமாக உள்ளோம். தேவையில்லாமல் நாங்கள் கவலைப்படவில்லை. எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் இந்தியா வகையில் தயாராக உள்ளது ‘' என்றார் அவர்.<br />
<br />
முன்னதாக, எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறிய 11 இந்திய விமானப்படையின் பெண் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்<br />
<br />
* <b>கொல்கத்தா, ஜூன் 10:இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.<br />
</b><br />
மேற்கு வங்க மாநிலத்தில் "யுனிசெஃப்' மற்றும் "மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டி' ஆகிய அமைப்புகள் இணைந்து எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கை கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடத்தின. கருத்தரங்கில் பேசியவர்கள் "தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின்' ஆய்வில் 70,000 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வந்ததைக் குறிப்பிட்டுப் பேசினர். மேலும் அந்த ஆய்வில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரிடமிருந்தே இந்த நோய் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கில் பேசிய இந்தியாவுக்கான யுனிசெஃப் அமைப்பின் தலைவர் இவோன் காமரோனி தெரிவித்ததாவது:<br />
<br />
யுனிசெஃப் அமைப்பு எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு உதவும். குறிப்பாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவதைத் தடுக்க உதவும். வருடத்துக்கு 21,000 குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெறுகின்றனர். இந்நோயைத் தடுக்கத் தேவையான மருந்துகள், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், கண்காணிப்பை முறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான காரணம், தாயிடமிருந்து தொற்றுதல், இரத்தம் செலுத்தும்போது தொற்றுதல், நோய்க்கிருமி பாதிப்புள்ள தாய் கர்ப்ப காலத்தில் உரிய தடுப்பு முறைகளை கடைபிடிக்காதது ஆகியவையாகும். இந்நோய் பற்றிய கள ஆய்வின் மூலம், சமூகப் பொருளாதார அடிப்படையில் பாதிப்படைந்தவர்களுக்கான உதவிகள், முந்தைய நடவடிக்கைகளில் மேம்படுத்த வேண்டியவை மற்றும் உரிய மருத்துவ வசதிகளைத் தருதல் ஆகியவற்றில் செய்ய வேண்டிய முன்னேற்றம் பற்றிய புதிய பார்வை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.<br />
<br />
யுனிசெஃப் அமைப்பு மேற்கு வங்கத்தில் "எச்ஐவி/எய்ட்ஸ் நோயுள்ளவர்களுக்கான வங்காள அமைப்பு' என்ற அமைப்புடன் இணைந்து, எய்ட்ஸ் நோய் பாதிப்படைந்த 995 குடும்பங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் எய்ட்ஸ் பாதித்தவர்களில் பெரும்பாலோனோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலோனோர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, கிழக்கு மிதுனபுரி, ஜல்பைகுரி, டார்ஜிலிங், 24 தெற்கு பர்கானா மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.<br />
<br />
<b style="color: #6666cc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* விவேகானந்தர் சிறப்பு கண்காட்சி ரயில் இன்று சென்னை வருகை<br />
</b><br />
விவேகானந்தர் சிறப்பு கண்காட்சி ரயில் மக்கள் பார்வைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வருகிறது.<br />
<br />
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.<br />
<br />
இதன் ஒரு பகுதியாக விவேகானந்தர் சிறப்பு கண்காட்சி ரயிலை இந்திய ரயில்வேத் துறை சார்பில் இயக்க முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
இந்த சிறப்புக் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, சிகாகோ பயணத்தின் போது உலக மக்களை ஈர்க்கும் வகையில் விவேகானந்தர் பேசிய அறிய குறிப்புகள், விவேகானந்தரின் அறிய புகைப்படங்கள், அவரது சிந்தனை நூல்கள், பொன்மொழிகள் ஆகியன இந்த ரயில் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.<br />
<br />
கடந்த ஜனவரி 12-ம் தேதி மேற்குவங்க மாநிலம் ஹெüராவில் இருந்து இந்தச் சிறப்பு கண்காட்சி ரயிலை அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.<br />
<br />
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்த இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தடைகிறது.<br />
<br />
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த ரயில் மக்களின் பார்வைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.<br />
<br />
மதுரையில் 4 நாள்கள்: இதைத் தொடர்ந்து ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலும், ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை 3 நாள்கள் காட்பாடியிலும், ஜூன் 26 முதல் 28-ம் தேதி வரை புதுச்சேரியிலும் இந்த ரயில் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்படும்.<br />
<br />
மதுரையில் ஜூன் 29 முதல் ஜூலை 2-ம் தேதி வரை 4 நாள்களும், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரையிலும், கொல்லத்தில் ஜூலை 6, 7 ஆகிய நாள்களும், எர்ணாகுளத்தில் ஜூலை 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது<br />
<br />
<b>* கல்வி பரிமாற்ற ஒப்பந்தங்கள் இரு நாட்டு உறவை மேம்படுத்தும்: சிம்கின்<br />
<br />
<img alt="simsan.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c3818b040817&attid=0.4&disp=emb&realattid=ii_1307c2ad0ce0c576&zw" title="simsan.jpg" /></b><br />
சென்னை, ஜூன் 9: கல்வி நிறுவனங்கள் இடையே மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஆண்ட்ரூ சிம்கின் கூறினார்.<br />
<br />
அமெரிக்க நிதி உதவியுடன் உணவுத் திட்டக் கல்வி நிதியுதவித் திட்ட தொடக்க விழா சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்ட்ரூ சிம்கின் பேசியது:<br />
<br />
இந்தியாவிலிருந்து இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பரிமாற்ற திட்டங்களின் கீழ், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்று நாடு திரும்பியுள்ளனர். இதுபோல் அமெரிக்க கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.<br />
<br />
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகச் சிறப்பாக உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய வேளாண் உதவித் திட்டங்களை அமெரிக்க வேளாண் துறை, இந்தியாவில் நிறைவேற்றி வருகிறது என்றார்.<br />
<br />
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். பிரபாகரன்: அமெரிக்க நிதி உதவியுடன் கூடிய மூன்று ஆண்டு உணவுத் திட்டக் கல்வி நிதியுதவித் திட்டத்தின் கீழ், முதல் தவணையாக ரூ. 67.5 லட்சத்தை அமெரிக்க வேளாண் துறை அளித்துள்ளது.<br />
<br />
இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உள்ள மிட்சிகன் நகரப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 6 பேரும், இரண்டு ஆசிரியர்களும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு பயிற்சிக்காகவும், கல்வி கற்பிக்கவும் வந்துள்ளனர்.<br />
<br />
இதுபோல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு விரைவில் செல்ல உள்ளனர்.முட்டை உற்பத்தியில் இந்தியா (ஆண்டுக்கு 5,890 கோடி முட்டை) உலக அளவில் 3-வது இடத்திலும், கறிக்கோழி உற்பத்தியில் (ஆண்டுக்கு 200 கோடி) உலக அளவில் 4-வது இடத்திலும் உள்ளது.<br />
<br />
இருந்தபோதும், இந்தியாவில் கால்நடை உற்பத்தி முறை, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது மாறுபட்டு காணப்படுகிறது. பல்வேறு காரணங்களால் இந்தியாவில் மூன்று வகையான கால்நடை உற்பத்தி முறைகள் கையாளப்படுகின்றன. எனவே, இந்தியா வந்துள்ள அமெரிக்க மாணவர்கள் இங்குள்ள மூன்று வகையான கால்நடை உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ முறைகளையும் கற்றுக்கொள்ள முடியும்.<br />
<br />
இதுபோல் அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள், அங்குள்ள அமைப்பு சார்ந்த கால்நடை உற்பத்தி முறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.<br />
<br />
<b>* சென்னையில் வாகன தொழில்நுட்பக் கண்காட்சி: 125 நிறுவனங்கள் பங்கேற்பு<br />
</b><br />
சென்னை, ஜூன் 9: சென்னையில் போகஸ்டு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் வாகன தொழில்நுட்பக் கண்காட்சி ஜூன் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.<br />
<br />
இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் கட்கேர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:<br />
<br />
"ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயரிங் ஷோ' என்ற இந்தக் கண்காட்சியை சென்னையில் இரண்டாவது முறையாக நடத்துகிறோம். நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் இக் கண்காட்சி இம் மாதம் 10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.<br />
<br />
125 நிறுவனங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கண்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியாக 7 சிறந்த தொழில்நுட்ப சிந்தனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. கண்காட்சியில் வாகன தொழில்நுட்ப தயாரிப்பாளர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிக்கு வைக்கின்றனர். மேலும் இதில் அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., ராயல் என்ஃபீல்டு, ஃபோர்டு, எஸ்கார்ட்ஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றார் அவர்.<br />
<br />
<b>* தூர்ந்து கிடக்கும் கெடிலம் ஆற்று அணைகள்: மணல் குவாரி அமைக்கப்படுமா?</b><br />
<br />
<img alt="cdr.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c3818b040817&attid=0.3&disp=emb&realattid=ii_1307c2b0f2099e30&zw" title="cdr.jpg" /><br />
<br />
கடலூர், ஜூன் 10: காமராஜர் ஆட்சி காலத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை, 40 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கிறது. அணையைத் தூர்வாரி அங்கு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.<br />
<br />
கெடிலம் ஆறு கல்வராயன் மலைப் பகுதியில் கருடன் பாறை என்ற இடத்தில் உற்பத்தியாகி விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி, கடலூர் உப்பனாற்றில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது. கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம், திருவதிகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு உள்ளன. காமராஜர் ஆட்சி காலத்தில் இவைகள் கட்டப் பட்டவை. இந்த அணைகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் வரை பாசன நிலங்களைக் கொண்டது.<br />
<br />
திருவந்திபுரம், திருவதிகை அணைகள் கடந்த 40 ஆண்டுகளாகத் தூர்ந்து கிடக்கின்றன. கெடிலம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள நிலங்களில், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீóர் தாரளமாகக் கிடைப்பதால், இந்த அணைகளில் இருந்து கிடைக்கும் நீரை விவசாயிகள் எதிர்பார்ப்பது இல்லை. இதனால் தூர்ந்து கிடக்கும் அணைகள் பற்றி பொதுப் பணித்துறை கவலை கொள்வது இல்லை.<br />
<br />
கடலூர், பண்ருட்டி தாலுகாக்களில் மலைப் பாங்கான புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில், நீர் வடி முகடுகள் அமைக்கும் திட்டத்தில், பல கோடி ரூபாய் கடந்த காலங்களில் செலவிடப்பட்டு இருக்கிறது. மழை காலத்தில் வழிந்தோடி வீணாகும் நீரை, ஆங்காங்கே தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.<br />
<br />
இதற்கெல்லாம் கோடிக் கணக்கில் செலவிடும் பொதுப்பணித் துறை, தூர்ந்து கிடக்கும் கெடிலம் அணைகளைத் தூர்வாரி, அவற்றில் மழைநீரைச் சேமிப்பது குறித்தோ, ஆண்டு தோறும் மழை காலத்தில் கெடிலம் ஆற்றில் பல டி.எம்.சி. தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலப்பது குறித்தோ, சற்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. <br />
<br />
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேட்டதற்கு, அணை தூர்ந்து கிடப்பது உண்மை. அணையைத் தூர்வாரினால் நல்லதுதான். ஆனால் ஆறுகளைத் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறையில் திட்டம் எதுவும் இல்லை. கெடிலம் ஆறு நீர்வள நீலவள ஆதாரத் திட்டத்தில், கெடிலம் ஆற்றின் கரைகளை பலப் படுத்தும் திட்டம் தற்போது, ரூ. 30 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அணையைச் சீரமைக்க நிதி பெறலாம். ஆனால் அணையத் தூர்வார நிதி கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கான திட்டமும் இல்லை. அணையில் குவாரி அமைத்து மணலை அப்புறப் படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.<br />
<br />
திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணை, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. 132 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், அதிக பட்சம் 7.9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகக்<br />
<br />
கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது ஒருமீட்டர் உயரத்துக்குகூட தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு, தூர்ந்து கிடப்பதுதான் அணையின் பரிதாப நிலை. <br />
<br />
<b>* சீரற்ற இதயத்துடிப்பு: அலட்சியம் வேண்டாம்: இதய மின்சீரமைப்பு நிபுணர் உல்ஹாஸ் பாண்டுரங்கி<br />
</b><br />
சென்னை, ஜூன் 10: சீரற்ற இதயத்துடிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதய மின்சீரமைப்பு நிபுணர் உல்ஹாஸ் பாண்டுரங்கி தெரிவித்தார்.<br />
<br />
இது குறித்து டாக்டர் உல்ஹாஸ் பாண்டுரங்கி, இதய மருத்துவ நிபுணர் முல்லாசாரி அஜித் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அனைத்து வயது பிரிவிலும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.<br />
<br />
சீரற்ற இதயத்துடிப்பின் மூலம் மூளை, இதயம், சிறுநீரகங்கள் மற்றும் முக்கிய உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக திடீர் மரணங்கள் கூட நிகழ்கிறது.<br />
<br />
சென்னையைப் பொறுத்தவரை 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேருக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருக்க வாய்ப்புள்ளது.<br />
<br />
படபடப்பு, தலைசுற்றல், வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.<br />
<br />
எனவே இந்த அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.<br />
<br />
சீரற்ற இதயத்துடிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 5.30 மணிக்கு நடை பயணம் நடைபெறவுள்ளது.<br />
<br />
<b style="color: #6666cc;">ஆரோக்கியச் செய்தி மலர் :<br />
</b><br />
புற்றுநோய் பரவலைத் தடுக்கும் பீட்ரூட் <br />
<br />
புற்றுநோய் பரவுவதை தடுக்கும்...<br />
<br />
மலச்சிக்கலைப் போக்கும்...<br />
<br />
பித்தத்தைக் குறைக்கும்...<br />
<br />
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்...<br />
<br />
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.<br />
<br />
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.<br />
<br />
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 1.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மேலும், கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும், இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10 மில்லிகிராமும், வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.<br />
<br />
கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.<br />
<br />
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.<br />
<br />
பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படுபவர்களும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.<br />
<br />
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.<br />
<br />
தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.<br />
<br />
புற்றுநோயினால் (Cancer) துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமையும் படைத்தது பீட்ரூட் என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<br />
<b style="color: #6666cc;">வர்த்த்கச் செய்தி மலர் </b>:<br />
<br />
<b>* மும்பை பங்குச் சந்தையில் 116 புள்ளிகள் சரிவு</b><br />
<br />
<img alt="10bse.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c575c30b0acd&attid=0.1&disp=emb&realattid=ii_1307c527a1e1de8b&zw" title="10bse.jpg" /><br />
<br />
மும்பை, ஜூன் 10: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று கடுமையான சரிவு காணப்பட்டது. 116 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,268 புள்ளிகளாகக் குறைந்தது.<br />
<br />
ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடுமையாக சரிந்தது தொடர்பான விவரம் வெளியானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் முக்கியமான பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் சரிவைச் சந்தித்தன.<br />
<br />
தேசிய பங்குச் சந்தையில் 35 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,485 புள்ளிகளானது.<br />
<br />
தொழில்துறை உற்பத்தி சரிந்தது தொடர்பான அறிக்கை வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் சரிவு மளமளவென ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 6.3 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தொழில்துறை உற்பத்தி 13.1 சதவீதமாக இருந்தது. அத்துடன் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது ஆகியனவும் பங்குச் சந்தையை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன.<br />
<br />
ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக் கொள்கையில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பது உறுதியாக தெரியவந்ததால் பங்குகளின் விலைகள் சரிந்தன.<br />
<br />
ஆசிய சந்தையில் சீனா, ஜப்பான் பங்குச் சந்தைகள் கணிசமான முன்னேற்றம் கண்டன. ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.<br />
<br />
<b style="color: #6633ff;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
* <b>கிரிக்கெட்</b><br />
<br />
<b>"ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் மூன்றாவது மோதல்</b><br />
<br />
ஆன்டிகுவா: ஆன்டிகுவாவில் இன்று நடக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த இரு போட்டியில் வென்ற இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இந்திய அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.<br />
<br />
இந்திய அணியில் சச்சின், தோனி போன்ற சீனியர்கள் இல்லாத குறையே தெரியவில்லை. இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். சிகர் தவான், பார்த்திவ் படேல் நல்ல துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, கேப்டன் ரெய்னா, பத்ரிநாத் மீண்டும் அசத்துவார்கள் என்று நம்பலாம். பின்வரிசையில் யூசுப் பதான், ஹர்பஜன் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.<br />
மிஸ்ரா அபாரம்:<br />
வேகப்பந்து வீச்சில் பிரவீண் குமார், முனாப் படேல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி தான். சுழலில் ஹர்பஜன் சிங்குடன் சேர்த்து, அமித் மிஸ்ரா, யூசுப் பதானும் மிரட்டுகின்றனர். இன்று தங்களது அசத்தலை தொடரும் பட்சத்தில், இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை கைப்பற்றலாம்.<br />
பிராவோ ஓய்வு:<br />
தொடர்ந்து இரண்டு தோல்விகளால் துவண்டு கிடக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் "மிடில் ஆர்டரில்' டுவைன் பிராவோவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது மேலும் சிக்கலைக் கொடுப்பது உறுதி. துவக்க வீரர் சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ், சீனியர் சர்வான், சாமுவேல்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தருவது உறுதி. கேப்டன் சமியும் பேட்டிங்கில் சற்று ஜொலிக்க முயற்சித்தால் நல்லது.<br />
ரோச் வருகை:<br />
பவுலிங்கை பொறுத்தவரையில் எதிர்வரும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு வருகிறது. இதனால் முதல் இரண்டு போட்டியில் இடம் பெறாத கீமர் ரோச், ஆன்ட்ரூ ரசல் இன்று அணிக்கு திரும்புகின்றனர். ராம்பால் நீக்கப்பட்டுள்ளார்.<br />
பேட்டிங்கிற்கு சாதகமான ஆன்டிகுவா ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்கள் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றனர். இந்நிலையில் பவுலர்கள் மாற்றம் எந்தளவுக்கு பலன் தரும் என்பது இன்று தான் தெரியும்.<br />
வெற்றி யாருக்கு?<br />
முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இன்று வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று வென்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இதனால் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.<br />
----<br />
சோதனை "களம்'<br />
இன்று போட்டி நடக்கும் ஆன்டிகுவா மைதானம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எப்போதும் சோதனையாகவே அமைந்துள்ளது. இங்கு 2009ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி, 10 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மோசமான ஆடுகளம் காரணமாக ரத்துசெய்யப்பட்டது.<br />
* தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு பங்கேற்ற 4 ஒருநாள், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் என, அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.<br />
--<br />
மழை வாய்ப்பு<br />
ஆன்டிகுவாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக காணப்படும். இருப்பினும் மழை வரும் வாய்ப்பு இல்லை.<br />
--<br />
தொடர்கிறது கெய்ல் புறக்கணிப்பு<br />
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான அணியில், கெய்ல் புறக்கணிக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது போட்டிக்கான அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.<br />
<br />
<b style="color: #6666cc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b style="color: #6666cc;"> அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோவில்</b><br />
மூலவர் : நரசிம்ம ஆஞ்சநேயர்<br />
<br />
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : வரதராஜபுரம்<br />
மாவட்டம் : சென்னை<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு<br />
<br />
முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.<br />
<br />
சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார். <br />
<br />
சிறப்பம்சம்:<br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு.<br />
<br />
திருவிழா:<br />
<br />
நரசிம்ம ஜெயந்தி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
ஆன்மீகச் சிந்தனை மலர் :<br />
<br />
தான் தானாயிருத்தலே பரமானந்தம் - ரமணர்<br />
<br />
வெளிமுக நாட்டம் நீங்கி மூல சொரூபத்தை உணர்தல் வேண்டும் என்பதே சாஸ்திரங்கள் அனைத்தின் உட்கருத்து. புதிதாய் எதனையும் அடைய வேண்டியதில்லை. அஞ்ஞானம் அகல வேண்டும். விபரீதப் பிரமைகளே ஒழியவேண்டும். அமைதியும் ஆனந்தமும் தன்னைவிட்டு வேறெங்கோ இருப்பதாக எண்ணி அலையாமல், அயலேதுமில்லாத தன் பரிபூரண நிலையில் அமரவேண்டும். தான் தானாயிருத்தலே பரமானந்தம். அவ்வமைதியே ஆனந்தமயம்.<br />
<br />
'முக்தி அடைவதற்கு மனத்தை அடக்க வேண்டும்' என்றே எந்த நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், மனோ சிக்ரமே சாஸ்திரங்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்டபின் நூல்களை அளவின்றி படிப்பதால் பயனில்லை. மனத்தை அடக்குவதற்குத் தன்னை யாரென்று விசாரிக்க வேண்டுமே அல்லாமல் எப்படி நூல்களை விசாரிப்பது.<br />
<br />
தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால் தானே அறிய வேண்டும். ராமன் என்பவன் தன்னை ராமன் என்று அறிய நிலைக்கண்ணாடி வேண்டுமா? 'தான்' என்பது பஞ்சகோசங்களுக்குள் இருப்பது. நூல்களோ அவற்றிற்கு வெளியே இருப்பவை. ஆகவே, பஞ்சகோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை, நூல்களில் விசாரிப்பது வீணே. பந்தத்தில் இருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி. சதா காலமும் மனத்தை ஆன்மாவில் வைத்திருப்பதற்குத்தான் 'ஆன்ம விசாரம்' என்று பெயர். தியானமோ தன்னை சத்-சித்-ஆனந்த பிரும்மமாகப் பாவிப்பது. கற்றவை அனைத்தையும் ஒரு காலத்தில் மறக்க வேண்டிவரும்.<br />
<br />
சுருதிகள் இயம்பும் இலக்கணங்களுக்கெல்லாம் இலக்கியப் பொருளாக விளங்கும் ஞானியர்களுக்கு, அச்சுருதிகளால் யாதொரு பிரயோஜனமும் இல்லை. <br />
<br />
<b style="color: #6666cc;">வினாடி வினா </b>:<br />
<br />
<b>வினா </b>- உலகின் அதிக வருவாயைத் தரும் நகரம் எது ?<br />
<br />
<b>விடை </b>- வாடிகன் நகரம்.<br />
<br />
<b style="color: #6633ff;">இதையும் படிங்க :</b><br />
<b style="color: #6666cc;">நம்பினார் கெடுவதில்லை!<br />
<br />
<img alt="E_1307073098.jpeg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c575c30b0acd&attid=0.4&disp=emb&realattid=ii_1307c4fea9e2a1ca&zw" title="E_1307073098.jpeg" /><br />
</b><br />
நம்பிக்கையே மனிதனின் வெற்றிக்கு ஆதாரம். இறைவன் மீது, யாரொருவர் ஆழமாக நம்பிக்கை வைக்கிறாரோ, அவர், தன் மீதே நம்பிக்கை வைக்கிறார். நம்பிக்கை உள்ளவனுக்கு, தெய்வம் பக்க பலமாக இருந்து, அவனது செயல்கள் வெற்றி பெற உதவும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருக்கு, வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படுகிறது.<br />
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ளது திருநாரையூர். இங்குள்ள சவுந்தரேஸ்வரர் கோவில், பொள்ளாப் பிள்ளையார் சன்னிதியில் அனந்தேசர் என்பவர் பூஜை செய்து வந்தார்.<br />
<br />
சுவாமிக்குப் படைத்த நைவேத்யத்தை, அவர் பக்தர்களுக்கு கொடுப்பார்; மீதி இருந்தால், வீட்டுக்கு கொண்டு செல்வார். அதை, அவரது ஐந்து வயதான மகன், நம்பியாண்டார் நம்பி விரும்பி சாப்பிடுவான்.<br />
<br />
பிரசாதம் காலியாகி விடும் சமயங்களில், "அப்பா... பிள்ளையாருக்கு படைத்த நைவேத்யத்தில், எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்...' என்று கேட்பான். அனந்தேசர் மகனைச் சமாதானப்படுத்துவதற்காக, "எல்லாவற்றையும் விநாயகர் சாப்பிட்டு விட்டாரே...' என்பார்; இது, சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.<br />
<br />
ஒருசமயம், அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகன் நம்பியாண்டார் நம்பியை பூஜை செய்ய அனுப்பினார். விநாயகருக்கு நைவேத்யம் படைத்தார் நம்பி. தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தார்; ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்; நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால், சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டார். அவருக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை எடுத்துக் கொண்டார் விநாயகர்.<br />
<br />
வெளியே பிரசாதத்துக்காக காத்திருந்த பக்தர்களிடம், "பிள்ளையார் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்...' என்றான்; அவர்கள் நம்பவில்லை. எல்லாவற்றையும் பையனே சாப்பிட்டு விட்டான் என்று முடிவெடுத்து, அவரது தந்தையிடம் முறையிட்டனர்.<br />
<br />
பிள்ளையார் தான் சாப்பிட்டார் என பையன் திடமாகச் சொல்லவே, மறுநாளும் அவனையே விநாயகருக்கு நைவேத்யம் படைக்க கூறினர். விநாயகரும் நேரில் வந்து சாப்பிட்டதைக் கண்டு, அதிர்ந்தனர் பக்தர்கள். நம்பிக்கையுள்ள பக்தி, நம்பிக்கு, கை கொடுத்தது.<br />
<br />
பொள்ளாப் பிள்ளையாரைப் போற்றி, "விநாயகர் இரட்டை மணிமாலை' பாடினார் நம்பி. இவருக்கு, சவுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியில் சன்னிதி உள்ளது. இவரது குருபூஜையன்று இரவில் தேவார பதிகங்களை பாராயணம் செய்வர். இதை, "திருமுறை விழா' என்பர்.<br />
<br />
மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க, ராஜராஜசோழன் முயற்சித்தான். அவனுக்கு, பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், தனக்கு உதவும்படி கேட்டான். விநாயகரிடம் முறையிட்டார் நம்பி; அப்போது, அசரீரி ஒலித்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக் கூறியது. மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தனர். அவை, 11 திருமுறைகளாக நம்பியால் தொகுக்கப்பட்டது.<br />
<br />
பக்தி செலுத்தியதுடன், தமிழுக்கும் தொண்டு செய்த நம்பியாண்டார் நம்பி, நம் நினைவில் என்றும் நிற்பார்.<br />
***<br />
<br />
- தி. செல்லப்பா <br />
<br />
<b style="color: #6633ff;">* "குழந்தைகளுக்காக உழைத்தேன்!' </b><br />
<br />
<img alt="large_255383.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=1307c575c30b0acd&attid=0.2&disp=emb&realattid=ii_1307c4f04f7fa5ca&zw" title="large_255383.jpg" /><br />
<br />
பார்க்கிங் வேலை பார்த்து தன் பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி உள்ள ராணி: விழுப்புரம் மாவட்டம் தான் என் சொந்த ஊர். ஆசைபட்டு காதலித்து, ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்தேன். எங்களை இழிவுபடுத்தியவர்கள் முன் கவுரவமாக காப்பாற்றுவார் என நம்பினேன். ஆனால், என் கனவு பொய்யானது.என் மாமனார், மிலிட்டரியில் வேலை பார்த்தவர் என்பதால், வாரிசு அடிப்படையில், அண்ணா சாலையில், காதிபவன் வளாகத்தில், பார்க்கிங் வேலை கொடுக்கப்பட்டது. அவர் சம்பாதித்து எங்களை காப்பாற்றுவார் என நினைத்தேன். மாறாக, குடிபழக்கத்திற்கு ஆளாகி, ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்தார்.எனக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அப்போது தான், வாழ்க்கையின் மீது பயம் ஏற்பட்டது. தோட்ட வேலைக்கு போனேன். குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருக்கும். அதன்பின், ஒரு யோசனை வந்தது... கார்ப்பரேஷனில், என் கணவர் வேலையை கேட்டேன். முதலில் மறுத்த அதிகாரி, என் மீது நம்பிக்கை வைத்து வேலை கொடுத்தார்.வெயில், மழை பாராமல் வேலை செய்தேன். 350 ரூபாயில் ஆரம்பித்த என் சம்பளம் தற்போது, 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலேயே, என் குழந்தைகளையும் படிக்க வைத்து விட்டேன். இந்த வேலையில் பல கஷ்டங்கள் இருந்தாலும், என் குழந்தைகளுக்காக அதை செய்தேன்.இப்போது என் மகன், மகள் வேலை செய்தாலும், என்னால் இந்த வேலையை விட முடியாது. காரணம், ஆரம்ப காலத்தில், இந்த வேலை என் குடும்பத்தை காப்பாற்றியது. இந்த வேலை எனக்கு, வாழ்க்கை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது. <br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - கூகில் செய்திகள்,வெப்துனியா, தின மணி, தின மலர்.<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-84609408770386019692011-06-10T08:55:00.000+05:302011-06-10T08:55:43.412+05:30இன்றைய செய்திகள் - ஜீன் , 10, 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">- <b style="color: #009900;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>* பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம்<br />
<br />
<img alt="09-mf-hussain300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13077412c7f69d0f&attid=0.5&disp=emb&realattid=ii_130773f150cff293&zw" title="09-mf-hussain300.jpg" /><br />
</b><br />
லண்டன்: பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.<br />
<br />
மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர்.<br />
<br />
கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.<br />
<br />
நடிகை மாதுரி தீக்ஷித்தை தேவதையாக உருவகப்படுத்தி ஹூசேன் வரைந்த ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. மாதுரி மீது பித்தாகிவிட்டேன் என்று கூறிய இவர், மாதுரியை வைத்து கஜகாமினி என்ற இந்திப் படத்தையும் இயக்கினார்.<br />
<br />
பிறகு தபுவை வைத்து மீனாக்ஷி- தி டேல் ஆப் த்ரீ சிட்டிஸ் என்ற படத்தை இயக்கினார். ஆனால் வெளியான சில தினங்களில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக இந்தப் படம் தூக்கப்பட்டது.<br />
<br />
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் இன்று காலமானார்.<br />
<br />
நாட்டை விட்டு வெளியேறினாலும் நாட்டின் மீது அதீத பற்று கொண்டவர். இந்தியாவில் தன்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை என்பது குறித்து தொடர்ந்து தனது கவலையைத் தெரிவித்து வந்தவர் ஹூசேன்.<br />
<br />
அவரது உடல் அடக்கம் லண்டனிலேயே நடைபெறும் என்று தெரிகிறது.<br />
<br />
இந்தியாவின் உயரிய சிவில் விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவற்றைப் பெற்றவர் ஹூசேன். 1986ல் ராஜ்ய சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.<br />
<br />
இந்தியாவின் மிக அதிக ஊதியம் பெற்ற ஓவியர் எனப் புகழப்பட்ட எம்எஃப் ஹூசேன், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.<br />
<br />
இவரது மறைவு தேசிய இழப்பு என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.<br />
<br />
<b>* சட்டப் பேரவையில் தீர்மானம்: கச்சத்தீவு வழக்கில் தமிழக அரசு<br />
<br />
<img alt="kachathiv.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13077412c7f69d0f&attid=0.4&disp=emb&realattid=ii_130773fcaba0cc14&zw" title="kachathiv.jpg" /><br />
</b><br />
சென்னை, ஜூன் 9: கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என அதிமுக சார்பில் 2008-ல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறை தன்னையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்த நாளில் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.<br />
<br />
இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.<br />
<br />
தீர்மான விவரம்: ""இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அன்னிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்'' என 1960-ல் உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பு அளித்தது.<br />
<br />
ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கை இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.<br />
<br />
இந்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.<br />
<br />
இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.<br />
<br />
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்தத் தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்பதாகக் கூறினார்.<br />
<br />
இத் தீர்மானத்தின் மீது கருத்து கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இரண்டாவது முக்கியமான மைல்கல்லாக இருக்கும் வகையில் இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். இந்தப் பிரச்சினைக்காக இந்த பேரவையிலேயே ஒரு தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.<br />
<br />
இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.பி. முத்துக்குமரன் (புதுக்கோட்டை) : தமிழக மீனவர்களுக்கு யார் பாதுகாப்பு தர முடியும் என்ற ஏக்கம் இருக்கும் சூழ்நிலையில் இத் தீர்மானம் கூடுதல் பலமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மீன்பிடித் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதை இந்த ஒரு தீர்மானம் மூலமாகத்தான் செய்ய முடியும் என்றார் அவர்.<br />
<br />
ஏற்கெனவே தமிழக மீனவர்கள் சென்ற எல்லை வரை மீண்டும் செல்ல இந்தத் தீர்மானம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என மார்க்சிஸ்ட் குழு தலைவர் அ. சவுந்திரராஜன் கூறினார்.<br />
<br />
கச்சத்தீவு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1983 தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, கச்சத்தீவு எல்லை மாற்றி குறிப்பிடப்பட்டதும் இப்போதைய சங்கடங்களுக்கு காரணம் என்பதால் அந்தச் சட்டத்தையும் திருத்த வேண்டும் என ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கேட்டுக் கொண்டார்.<br />
<br />
முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.<br />
<br />
<b style="color: #009900;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* அமெரிக்காவை முஸ்லீம்கள் அழிப்பர்: பின்லேடன் உதவியாளர்</b><br />
<br />
கெய்ரோ, ஜூன்.9: அமெரிக்காவை அழிக்க முஸ்லீம்கள் முயற்சிசெய்வார்கள் என அல் காய்தாவின் நம்பர் 2 எனக் கருதப்படும் அல்-ஜவாஹிரி எச்சரிக்கை விடுத்தார்.<br />
<br />
அவரது விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விடியோ காட்சிகளில் சுமார் 28 நிமிடங்கள் அவர் பேசுகிறார்.<br />
<br />
பின்லேடன் உயிரோடு இருக்கும்போது அமெரிக்காவை மிரட்டி வந்ததாகவும், மரணத்திலும் அது தொடரும் என அல்-ஜவாஹிரி தெரிவித்தார்.<br />
<br />
பின்லேடனைக் கொன்ற பிறகு அவரது உடலை அமெரிக்கா கடலில் வீசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.<br />
<br />
அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் அழிக்க சர்வதேச முஸ்லீம் சமூகத்தினர் முயற்சி செய்வார்கள் என அவர் தனது வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்-ஜவாஹிரி அல் காய்தா இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவரது விடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* காஷ்மீர் பண்டிட்களுக்கு நம்பிக்கை உள்ளதா?</b><br />
<br />
<img alt="large_255269.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13077412c7f69d0f&attid=0.3&disp=emb&realattid=ii_130773cfd441baa7&zw" title="large_255269.jpg" /><br />
<br />
ஜம்மு : "காஷ்மீரில் இருந்து குடி பெயர்ந்து சென்ற பண்டிட்களை, மீண்டும் இங்கு குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனாலும், பண்டிட்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே இந்த முயற்சி வெற்றி பெறும்' என, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.<br />
<br />
காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது: காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட பண்டிட்கள், வன்முறை காரணமாக இங்கிருந்து குடி பெயர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் இங்கு குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில், இந்த முயற்சிக்கு அவர்கள் தயாராக வேண்டும். மீண்டும் காஷ்மீர் திரும்புவதற்கு, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.<br />
<br />
மாநிலத்தில், ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல்கள் அமைதியாக நடந்துள்ளன. இதில், காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள் போன்ற சமுதாயத்தினரும் பங்கேற்றுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள், பண்டிட்கள் மீண்டும் இங்கு குடியேறுவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
இந்து கோவில்கள் மற்றும் புனித தலங்களை பாதுகாக்க வகை செய்யும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றுவதற்கு, இந்து அமைப்புகளைச் சேர்ந்த சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், காஷ்மீரில் 2008ல் நடந்தது போன்ற நிகழ்வுகள் ஏற்படக் கூடும் என, அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.<br />
<br />
<b>* ஆஸி.,யில் தலாய்லாமா சுற்றுப்பயணம்</b><br />
மெல்போர்ன்: திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா 11 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அவருடைய ஆதரவாளர்கள் திபெத்திய கொடிகளை அசைத்து வரவேற்பு அளித்தனர். 11 நாட்கள் தங்கியிருக்கும் அவர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்நிலையில் தற்போதைய பிரதமர் ஜூலியா கில்லார்டு தலாய்லாமாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் முன்னாள் பிரதமர் கெவின் ரூத் சந்தித்து பேச உள்ளார். தலாய்லாமா எட்டும் மேற்பட்ட தடவை ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*<b> ராணா குற்றவாளி அல்ல : சிகாகோ கோர்ட் தீர்ப்பு </b><br />
சிகாகோ : மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தகாவூர் ராணா குற்றவாளி இல்லை என சிகாகோ கோர்ட் கூறியுள்ளது. மும்பையில், 2008, நவ., 26ல், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட நான்கு இடங்களில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி. 2009 அக்டோபரில், ஹெட்லியை சிகாகோ போலீசார் கைது செய்தனர். மும்பை மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஹெட்லி ஒப்புக்கொண்டார். இவரது கல்லூரி நண்பரான தகாவுர் ராணாவும் கைது செய்யப்பட்டு, அவர் மீதும் சிகாகோ கோர்ட்டில் விசாரணை நடந்தது.<br />
<br />
ராணா மற்றும் ஹெட்லி மீதான விசாரணையை, 12 பேர் கொண்ட நடுவர்களும் ஒரு நீதிபதியும் கவனித்து வந்தனர். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஹெட்லி மற்றும் ராணாவுக்கு எந்தவிதமான தண்டனை வழங்குவது என்பது குறித்து, 12 நடுவர்களும், நீதிபதி ஹாரி லினென்வெப்பரும் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் தகாவூர் ராணா குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக ராணாவின் வக்கீல் பாட்ரிக் பிளிஜென் கோர்ட்டில் குறிப்பிடுகையில், "ஹெட்லி, ராணாவை மட்டுமல்ல எல்லாரையும் ஏமாற்றியுள்ளார். அந்த வகையில் ஏமாந்து போன ராணாவுக்கு கடும் தண்டனை அளிக்கக்கூடாது' என, வாதாடினார்.<br />
<br />
*<b> ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒபாமா மன்னிப்பு<br />
<br />
<img alt="09-obama300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13077412c7f69d0f&attid=0.1&disp=emb&realattid=ii_130773aa2db11c5f&zw" title="09-obama300.jpg" /></b><br />
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானதற்கு மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.<br />
<br />
இதுகுறித்து அவர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.<br />
<br />
சமீபத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது அமெரிக்கப் படை. இதில் பல அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர். இதுகுறித்து ஹமீத் கர்ஸாய் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.<br />
<br />
இந்த நிலையில்தான் கர்ஸாயைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் ஒபாமா. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானதற்காக ஆப்கானிஸ்தான் அதிபரிடம் பேசி மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்தார் ஒபாமா. குறிப்பாக ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவிகள் பலியானதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் என்றார்.<br />
<br />
இரு தலைவர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மறு சீரமைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.<br />
<br />
<b>* 2020-ல் எய்ட்ஸ் இல்லா உலகம்: பான்கீமூன் பேச்சு</b><br />
<br />
ஐ.நா. 2020-ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீ-மூன் கூறினார்.எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து ஐ.நா.வின் சிறப்பு மாநாடு ஐ.நா. பொதுசபையின் தலைமையகமான நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ மூன் பேசியதாவது: உலகம் முழவதும் ஆட்கொண்டுள்ள கொடிய நோய் எய்ட்ஸை ஒழிப்பது குறித்து விவாதிக்க இந்த சிறப்பு மாநாடு நடக்கிறது. அதன்படி வரும் 2020-ம் ஆண்டிற்குள் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொடர்புள்ள நோய்களை ஒழித்து எய்ட்ஸ் இல்லாத உலகினை படைப்பதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். அதனை முழுமூச்சாக செயல்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை . இவ்வாறு அவர் கூறினா<br />
<br />
<b>* எய்ட்ஸ் மருந்துகளின் விலையைக் குறைக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்<br />
<br />
<img alt="kulamnapiasath.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13077412c7f69d0f&attid=0.2&disp=emb&realattid=ii_13077398d86d26ae&zw" title="kulamnapiasath.jpg" /></b><br />
நியூயார்க், ஜூன் 9: எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது பேரவைக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.<br />
<br />
இந்திய அரசின் சுகாதாரம், குடும்ப நலன் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இக் கூட்டத்தில் புதன்கிழமை பேசுகையில் இதை வலியுறுத்தினார்.<br />
<br />
"எச்.ஐ.வி. கிருமித்தொற்றுக்கு உள்ளானவர்களும், எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களும் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வது அவசியம். ஆனால் அதன் விலை ஏழைகளால் வாங்கிச் சாப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அந்த மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சர்வதேசச் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எய்ட்ஸ் - எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இந்த நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் அதிக நிதியை ஒதுக்கி மருந்து - மாத்திரைகளை நாம் வழங்கியாக வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் நாம் காட்டும் வேகத்தைவிட அந்த நோய் பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே இனியும் மெத்தனம் கூடாது.<br />
<br />
கடந்த முப்பதாண்டுகளாகவே இந் நோயைக் கட்டுப்படுத்த சர்வதேசச் சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவந்தாலும் இந்த நிலைமை தொடருகிறது.இந்திய அரசு இந்த நோயின் வளர்ச்சி வீதத்தை வெறும் 0.31% ஆகக் கட்டுப்படுத்திவிட்டது. புதிதாக நோய்த் தொற்று ஏற்படுவது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50%-க்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.<br />
<br />
கடந்த பத்தாண்டுகளாக சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஆராயும்போது இந்தியாவில் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பதுடன் சில பகுதிகளில் இது குறைந்தும் வருகிறது என்பது தெரிகிறது.இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் நாடு முழுவதும் கண்காட்சியாகச் சென்றுவருகிறது. இதனால் 80 லட்சம் பேர் ஆண்டுதோறும் விழிப்புணர்வு பெறுகின்றனர்.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் அடுத்த கட்டத்தில் இந்தியா இப்போது நுழைகிறது.தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே இப்போது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2 கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவை அனைத்தும் மருத்துவமனைகளிலேயே பிறக்க வேண்டும் என்பதற்கான பிரசார முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2006 கணக்கெடுப்பின்படி சுமார் 7 லட்சம் பேரே மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுள்ளனர். மற்றவர்கள் பழைய வழக்கப்படி வீடுகளிலேயே பிள்ளை பெற்றுள்ளனர். 2010-ல் இதுவே ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.<br />
<br />
இதற்குக் காரணம் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள்தான். அரசு மருத்துவமனைகளில் பிள்ளைப் பேறுக்காக சேரும் தாய்மார்களுக்கு சிகிச்சை, மருந்து - மாத்திரை அனைத்துமே இலவசம். மருத்துவ சோதனைகளுக்கும் பணம் வசூலிக்கப்படுவதில்லை. பிள்ளைப் பேறுக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் தாய்மார்களுக்கு அரசு இலவசமாகவே சாப்பாடு தருகிறது. மருத்துவமனைக்கு வருவதற்கான ஆம்புலன்ஸ் சேவையும் இலவசமே.<br />
<br />
கர்ப்பத்தடைக்கான ஆண், பெண் உறைகளை வீடுகளுக்கே கொண்டுசென்று விநியோகிக்கும் திட்டம் அடுத்து செயல்பட உள்ளது. இதற்காக 8 லட்சம் சமூக சுகாதார சேவகர்கள் (ஆஷா) பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 17 மாநிலங்களின் 233 மாவட்டங்களில் முதல் கட்டமாக இது அமல்படுத்தப்படும். பிறகு நாடு முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்படும்.<br />
<br />
மிகவும் சக்திவாய்ந்த, வாங்கக்கூடிய விலையில் எய்ட்ஸ் மருந்துகளை இந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அத்துடன் இவற்றை 200 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன' என்றார் குலாம் நபி ஆசாத்.<br />
<br />
<b style="color: #009900;">தேசியச் செய்தி மல்ர் :</b><br />
<br />
<b>* அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி</b><br />
பாலசோர்: ஆணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த பிருத்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது.<br />
<br />
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவி சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. சோதனை முழு வெற்றி அடைந்தது என்றனர்.<br />
<br />
ஏற்கனவே பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*<b> கறுப்புப் பணம் ஒழிப்பு: பொதுமக்களிடமும் கருத்து அறிய முடிவு</b><br />
புது தில்லி, ஜூன் 9: கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்துகளை அறிந்து கொள்ள அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தில்லியில் வியாழக்கிழமை கூறியது: கறுப்புப் பண விஷயத்தில் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இணையதளத்தின் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம் என்றார் அவர். கறுப்புப் பணம் உருவாவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள், ஏற்கெனவே பதுக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை வழங்க மத்திய அரசு புதிய குழுவை அமைத்தது. நேரடி வரிவருவாய் துறையின் இயக்குநர் தலைமையில் இக்குழு தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும்.<br />
<br />
<b>* ஊழல் எதிர்ப்பில் வன்முறைக்கு இடமில்லை: அண்ணா ஹசாரே</b><br />
அகமது நகர், ஜூன் 9: ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் வன்முறைக்கு இடம் ஏதுமில்லை என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வியாழக்கிழமை தெரிவித்தார். வருங்காலங்களில் நடைபெற உள்ள லோக்பால் மசோதா வரைவு க்குழு கூட்டங்களில் தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.<br />
<br />
தில்லியில் இருந்து திரும்பிய அவர் மஹாராஷ்டிரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். 11 ஆயிரம் இளைஞர்களை தயாபடுத்த இருப்பதாக ராம்தேவ் தெரிவித்தது குறித்து கருத்து தெரித்த ஹசாரே, வன்முறை பாதையை கைவிடாவிட்டால் ராம்தேவுடன் நாங்கள் இருக்க மாட்டோம். அவர் மேலும் கூறுகையில், ராம்லீலாவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக எழுந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, கடந்த லோக்பால் மசோதா வரைவுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இனிவரும் கூட்டங்களில் பங்கேற்போம். என்றார் ஹசாரே <br />
<br />
*<b> இம்மாத இறுதியில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் பேச்சு</b><br />
<br />
புது தில்லி, ஜூன் 9: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஜூன் இறுதியில் நடைபெறுகிறது. இந்தத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வியாழக்கிழமை புதுதில்லியில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை செயலாளருடன், நிருபமா ராவ் இம் மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால் எந்தத் தேதியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என இன்னும் முடிவாகவில்லை என்றார் அவர்.<br />
<br />
*<b> பிரமாண்ட தொழில் மண்டலங்கள்: மத்திய அரசு அனுமதி</b><br />
<br />
புது தில்லி, ஜூன் 9: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவையின் உயர்நிலைக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உற்பத்தித் துறையில் இந்தியாவை உலக அளவில் முன்னிலை அடையச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.<br />
<br />
இதில், சர்வதேச தரத்தில் பிரமாண்டமான தொழில் மண்டலங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும். இதில் ஒரு தொழில் நகருக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
*<b> ஆ.ராசா மீது சி.பி.ஐ. புது குற்றச்சாட்டு</b><br />
புதுதில்லி,ஜூன் 9: டாடா குழும நிறுவனங்களைவிட ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை ஊழியர்களை மிரட்டியும் எச்சரித்தும் செயல்பட வைத்தார் அப்போதைய அமைச்சர் ஆ.ராசா என்று சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.<br />
<br />
பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. தில்லியில் நடைபெறும் இந்த விசாரணையில் சி.பி.ஐ. பங்கேற்று இதுவரை தான் விசாரித்த, திரட்டிய தகவல்களை குழுவிடம் தெரிவித்து வருகிறது.<br />
<br />
சி.பி.ஐ. (மத்தியப் புலனாய்வுக் கழகம்) அமைப்பின் தலைவரான இயக்குநர் ஏ.பி. சிங், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.<br />
<br />
ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்; டாடா குழுமத்துக்கு அல்ல என்று தொலைத்தொடர்புத்துறையின் பிற ஊழியர்களை அப்போதைய அமைச்சர் ஆ.ராசாவும் அவருடைய துறைச் செயலாளர் சித்தார்த்த பெகுராவும் ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும்<br />
<br />
மிரட்டியும் எச்சரித்தும் காரியம் சாதித்ததாக ஏ.பி. சிங் தெரிவித்தார்.<br />
<br />
வயர்லெஸ் உரிமம் வழங்குவதற்கான ஆலோசகர் ஆர்.பி. அகர்வாலை மிரட்டியும் நிர்பந்தப்படுத்தியும் தில்லி சர்க்கிளில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கே உரிமம் வழங்க வேண்டும் என்ற குறிப்பை அவர் மூலம் பெற்றனர் என்று சிங் தெரிவித்தார்.<br />
<br />
டாடா நிறுவனம்: டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டி.டி.எஸ்.எல்.) என்ற நிறுவனம் 20 சர்க்கிள்களில் இரட்டைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொலைத் தொடர்புத் துறையின் கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தது. 2008 ஜனவரி 10-ம் தேதி அதற்கான அனுமதிக் கடிதத்தையும் அது பெற்றது.<br />
<br />
துறை விதித்த நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்த டாடா குழுமம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வயர்லெஸ் பிரிவிடம் (திட்டமிடல், ஒருங்கிணைத்தல்) மனுச் செய்தது. ஆனால் அந்த மனு தொலைத் தகவல் தொடர்புத்துறையில் எங்கோ காணாமல் போய்விட்டது.<br />
<br />
டாடா குழுமத்திலிருந்து துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, புதிதாக மனு அளிக்குமாறு 2008 மார்ச் 5-ம் தேதி கூறப்பட்டது. ஆனால் அதற்குள் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் அளிக்கப்பட்டுவிட்டன என்று கூட்டுக்குழுவிடம் தெரிவித்தார் ஏ.பி. சிங்.<br />
<br />
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு குறித்தும் சில தகவல்களை அவர் அளித்தார். அனில் அம்பானி தலைமையிலான நிறுவனத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக அல்லாமல் திரைமறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
இது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பத்திரிகைத் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.<br />
<br />
<b style="color: #009900;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* முதியோர் உதவித் தொகை 13.65 லட்சம் பேர் போலியான பயனாளிகள்:அரசு<br />
</b><br />
சென்னை, ஜூன் 9: முதியோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்தாண்டுகளில் பயன் பெற்ற பயனாளிகளில் 13.65 லட்சம் பேர் போலியானவர்கள் என்று தமிழக அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.<br />
<br />
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி இந்தத் தகவலைத் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் க.கிருஷ்ணசாமி (ஒட்டப்பிடாரம்) பேசினார். அவர் பேசியது: பறிக்கப்பட்ட சொத்துகளை மீட்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் போலி பத்திரங்கள் மூலம் பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமூகக் குற்றம் தடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் துணை போனாலும் முதல்வர் தலையிட்டு அவற்றை ஏழை மக்களுக்கு அளித்திட வேண்டும்.<br />
<br />
கொலை-கொள்ளைகளைத் தடுக்க விஞ்ஞான முறைகள் புகுத்தப்படும் அதே நேரத்தில் அதில் அரசியல் தலையீடு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
முதியோர் உதவித் தொகை: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலைக் கொண்டு முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை உள்ளிட்ட சமூகத் திட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் என்பது அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டு எடுக்கப்பட்டது.<br />
<br />
மக்களுக்கு நிறைய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற நலத் திட்டங்களை 100 சதவீதம் முழுமையாக அமல்படுத்தினாலே போதும்.<br />
<br />
வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி: கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் முதியோர் உதவித் தொகையாக 13 லட்சத்து 65 ஆயிரம் போலியான தகுதியில்லாத நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
<b>* அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைப்பால் பாதிப்பு வராது: தமிழக அரசு உறுதி</b><br />
சென்னை, ஜூன் 9: அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைப்பால் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.<br />
<br />
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் கோபிநாத் (ஓசூர்) பேசியது:<br />
<br />
ஆளுநர் உரையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதேசமயம், கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் சில இப்போது இல்லை. திமுக ஆட்சியில் இலவச கலர் டி.வி., கேஸ் அடுப்பு கொடுத்தார்கள். அதற்கு மாறாக அதிமுக ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.<br />
<br />
திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட டி.வி.க்கள் இப்போது கிடக்குகளில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் காரணமாக பொது மக்களுக்கு டி.வி.க்களை அளிக்க முடியவில்லை. அவர்களுக்கு டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அந்த டோக்கன்களை வைத்திருப்பவர்களுக்கு இப்போது இலவச கலர் டி.வி.க்களையும், கேஸ் அடுப்பையும் வழங்க வேண்டும்.<br />
<br />
சமச்சீர் கல்வியில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இல்லாத மாநிலங்களாக தமிழகமும், மேற்கு வங்கமும் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளைக் கொண்டு வந்தால் மத்திய அரசிடம் இருந்து ரூ.620 கோடி அளவுக்கு நிதி கிடைக்கும்.<br />
<br />
நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவதில் பிரச்னைகள் இருந்தால் ஒரு குழு அமைத்து அவற்றை களைய வேண்டும் என்றார்.<br />
<br />
பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம்: தமிழகத்தில் இரண்டு மொழிக் கொள்கை அமலில் உள்ளதால் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வரமுடியவில்லை. இந்தி மொழியை கட்டாயப் பாடமாக படிக்கக் கூடாது என்பதே அந்தப் பள்ளிகளை தொடங்க முடியாததற்குக் காரணம்.<br />
<br />
கோபிநாத்: ஆளுநர் உரையில் அண்ணா பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு ஒரே பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பல்கலைக்கழங்களில் இப்போது படித்து வரும் மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது.<br />
<br />
உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: அண்ணா பல்கலைக்கழகம் பழமை வாய்ந்தது. நான்கு பல்கலைக்கழகங்களை ஒன்றாக மாற்றுவதன் மூலம் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும். மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.<br />
<br />
<b style="color: #009900;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> தயிரின் முக்கியத்துவம்</b><br />
<br />
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.<br />
<br />
கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.<br />
<br />
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.<br />
<br />
பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.<br />
<br />
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.<br />
<br />
தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.<br />
<br />
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.<br />
<br />
<b>* சருமத்தைப் பொலிவாக்கும் ஆவாரை <br />
</b><br />
தைப்பொங்கல் அன்று வீட்டு வாசல்களில் கட்டப்படும் தோரணமாகவும், பசு, எருதுகளுக்கு அணிவிக்கப்படும் மாலையாகவும் ஆவாரை பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்ற ஆவாரை நவக்கிரகங்களில் ஒருவரான குருவிற்கு உரிய மூலிகையாகும். ஆவாரையின் அனைத்து பாகங்களுக்குமே மருத்துவ குணம் உள்ளது.<br />
<br />
ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் இவை ஐந்தையும் சூரணமாக்கி, அதில் 3 பங்கு எடுத்துக் கொள்ளவும்.<br />
<br />
இதேபோல், கோரைக்கிழங்கு சூரணம் ஒரு பங்கு, கிச்சிலி கிழங்கு சூரணம் ஒரு பங்கு கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக இதனை தேய்த்துக் குளித்துவர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் தீரும்.<br />
<br />
தேமல், சொறி, தினவு போன்ற சரும பாதிப்பு இருப்பவர்களும் இதனைப் பயன்படுத்தி குளிக்கலாம். இவ்வாறு குளித்து வர சருமம் புதுப்பொலிவு பெறும்.<br />
<br />
ஆவாரை இலையுடன் பூவரச மர வேர்ப்பட்டை, சிறிது உப்பு சேர்த்து அரைத்து அதை தண்ணீரில் கலந்து குளித்து வர, உடலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.<br />
<br />
<b style="color: #009900;">வர்த்த்கச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> பீ.எஸ்.இ 'சென்செக்ஸ்' 9 புள்ளிகள் குறைந்தது</b><br />
<br />
ஜூன் 10,2011,00:04<br />
மும்பை: -நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்றும் மந்தமாக ருந்தது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளது என்ற செய்தியால், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் தொடர்ந்து சுணக்கம் கண்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பல முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர்.இதன் காரணமாக, வியாழக்கிழமை அன்று மோட்டார் வாகனம், பார்மா, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதே<br />
<br />
சமயம், பொறியியல், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 9.39 புள்ளிகள் குறைந்து, 18,384.90 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,449.64 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,327.01 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 5.80 புள்ளிகள் சரிவடைந்து, 5,521.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,540.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,502.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.<br />
<br />
<b style="color: #009900;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
* கிரிக்கெட்<br />
<br />
இலங்கை அணியில் ஜெயசூர்யா<br />
<br />
கொழும்பு: இரண்டு ஆண்டுகளுக்குப் பின், "சீனியர்' ஜெயசூர்யா மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.<br />
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட், ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. வரும் ஜூன் 25 ல் "டுவென்டி-20' போட்டி நடக்கிறது.<br />
<br />
இதனிடையே அணியின் துவக்க வீரர் தரங்கா, உலக கோப்பை தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்டுள்ளார். தவிர, அணியின் கேப்டன் தில்ஷன், கைவிரல் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.<br />
அணியின் இரண்டு முக்கிய துவக்க வீரர்களும் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20', ஒருநாள் போட்டி மற்றும் அயர்லாந்து, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணியில், மீண்டும் ஜெயசூர்யா (41) சேர்க்கப்பட்டுள்ளார்.<br />
<br />
இலங்கை அணியின் அதிரடி துவக்க வீரரான இவர், கடந்த 2007ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், ஒருநாள் போட்டிகள் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. கடைசியாக, 2009ல் இந்தியாவுக்கு எதிராக, ஒருநாள் போட்டியில் விளையாடினார். கடந்த உலக கோப்பை தொடரில் 30 பேர் அடங்கிய உத்தேச இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த ஜெயசூர்யா, 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை.<br />
<br />
திடீர் ஓய்வு:<br />
<br />
இங்கிலாந்துக்கு தொடருக்குப் பின், சர்வதேச போட்டிகளில் இருந்து முழு அளவில் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து ஜெயசூர்யா கூறுகையில்,"" அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு தடையாக இருக்க விரும்பவில்லை. இங்கிலாந்து தொடரில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன். இத்தொடருக்குப் பின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவேன்,'' என்றார்.<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #009900;">* அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 500 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : பெசன்ட் நகர்<br />
மாவட்டம் : சென்னை<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார ஷேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.<br />
<br />
ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.<br />
<br />
கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.<br />
<br />
இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.<br />
<br />
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.<br />
<br />
திருவிழா:<br />
<br />
புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #009900;">பயமில்லாதவர் யார்? - ஆதி சங்கரர்</b>.<br />
<br />
<img alt="tblanmegamideanews_65076845885.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130776125440d826&attid=0.3&disp=emb&realattid=ii_130775d397bcaa22&zw" title="tblanmegamideanews_65076845885.jpg" /><br />
<br />
<br />
* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.<br />
<br />
* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.<br />
<br />
* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.<br />
<br />
<b style="color: #009900;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா </b>- உலகில் தேயிலை உற்பத்தியில் முதலிடம் பெறும் மாநிலம் எது ?<br />
<b><br />
விடை - </b>அஸ்ஸாம்.<br />
<br />
<b style="color: #009900;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b style="color: #009900;">அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல்கலையில் படிப்பு</b><br />
<br />
<img alt="large_254947.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=130776125440d826&attid=0.1&disp=emb&realattid=ii_130775be4f431ce3&zw" title="large_254947.jpg" /><br />
<br />
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.<br />
<br />
கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்' என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.<br />
<br />
10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது: மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போது தான் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.<br />
<br />
பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன், என்றார்.<br />
<br />
<br />
<br />
நன்றி - கூகில் செய்திகள், தின மணி, தின மலர்.</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-64079680696970932022011-06-09T07:40:00.000+05:302011-06-09T07:40:32.809+05:30இன்றைய செய்திகள் - ஜீன் 09 , 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #00cccc;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி<br />
<br />
<img alt="kani.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.6&disp=emb&realattid=ii_13071dea29b4d84e&zw" title="kani.jpg" /></b><br />
புதுதில்லி, ஜூன்.8: திமுக எம்பி கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.<br />
<br />
குற்றவாளிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குற்றச்செயலில் அவரின் பங்கை ஆராய்ந்து பார்த்து ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி அஜித் பாரிஹோக் தெரிவித்தார்.<br />
<br />
தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.<br />
<br />
ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரணை நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து இருவரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் மே 30-ம் தேதி முடிவடைந்தது. அதன் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.<br />
<br />
2ஜி ஊழலில் தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்தார் என கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.<br />
<br />
2ஜி ஊழல் பணத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்காக ரூ 200 கோடியை பெற்றார் என நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
முன்னதாக சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நிராகரித்தது. அவரது மனுவை நிராகரித்த நீதிபதி ஓ.பி.சைனி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டவுடன் உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
ரூ 214.84 கோடியை கடனாகப் பெற்றதாக கலைஞர் டிவியின் வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ 214.86 கோடி அளித்ததாக சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-10 ஆண்டு வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
சினியுக் நிறுவனம் பால்வா மற்றும் மொரானி சகோதரர்களுக்கு சொந்தமானது. சினியுக் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கின்படி, அந்த நிறுவனம் ஆசிப் பால்வாவுக்கு சொந்தமான குஸேகாவோன் நிறுவனத்திடம் இருந்து ரூ 212 கோடியை கடனாகப் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.<br />
<br />
ஆசிப் பால்வா டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் ஒரு இயக்குநராவார். டிபி ரியாலிட்டி நிறுவனம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b style="color: #00cccc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* பான் கீ முனுக்கு இந்தியா ஆதரவு</b><br />
<br />
வாஷிங்டன்: ஐ.நா.,சபையின்பொதுசெயலாளராக இருப்பவர் பான்கி மூன். இவர் ஐ.நாவின் பொதுச்செயலாளராக கடந்த 2007-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதா பான்கிமூன் தெரிவித்துள்ளார்.பான்கிமூனை ஆதரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநியாக உள்ள மன்ஜீவ்சிங்பூரி இதனை தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே போல் சீனாவும் பான்கிமூனே மீண்டும் ஐநாவின் பொதுசெயலாளராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.<br />
<br />
<b>* கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமி தாக்குதலை சமாளிக்கும்<br />
</b><br />
மாஸ்கோ : "ரஷ்ய உதவியில், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது' என, அந்நாட்டைச் சேர்ந்த அணுமின் நிலைய கட்டமைப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், சர்வதேச அணுசக்தி மாநாடு நடந்து வருகிறது. இதில், உலக நாடுகளைச் சேர்ந்த முன்னணி அணுமின் சக்தி உற்பத்தியாளர்களும், நுகர்வோர்களும் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.<br />
<br />
அப்போது, ரஷ்யாவைச் சேர்ந்த, "ஆட்டம் ஸ்டோரிக் ஸ்போர்ட்' நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் க்லுகோவ் பேசியதாவது: இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் நம்பகமானது. கடந்த 2004ம் ஆண்டில், இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலை கருத்தில் கொண்டு, அதன் கட்டமைப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் மீண்டும் சுனாமி தாக்கினாலும், சேதங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வெப்பமூட்டும் கருவிகள், குளிர்விப்பான்களில் பிரச்னை ஏற்பட்டாலும், தொடர்ச்சியாக 30 மணி நேரத்திற்கு உருகிவிடாமல், தாக்குப் பிடிக்கக் கூடியவை. இவ்வாறு அலெக்சாண்டர் பேசினார்.<br />
<br />
கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் பலவும் அணுமின் சக்தி பயன்பாடு தொடர்பான தங்கள் கொள்கைகளில், மாற்றம் செய்யத் துவங்கியுள்ளன. ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், அணுமின் சக்தி தொடர்பான புதிய திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டுள்ளன. எனினும், இந்திய தரப்பில், உரிய பாதுகாப்பு முறைகளுடன் அணுமின் சக்தி பயன்பாட்டை தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* இலங்கை மீது பொருளாதாரத் தடை: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை</b><br />
சென்னை, ஜூன் 8- இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:<br />
<br />
இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.<br />
<br />
இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.<br />
<br />
மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது.<br />
<br />
இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார். <br />
<br />
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது<br />
<br />
<b>* லிபியாவை தொடர்ந்து தாக்க திட்டம்</b><br />
<br />
டிரிபோலி:லிபியாவில் நேட்டோ படைகள், அதிபர் கடாபியின் வீட்டருகே தாக்குதல் நடத்தின. அரசுப் படைகளும் பதிலுக்கு, அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவருகின்றன.லிபியாவை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியை பதவி விலகக் கோரி, அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அரசுப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதில், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதையடுத்து, அதிருப்தியாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேட்டோ படைகள், கடாபிக்கு எதிராக களமிறங்கின. தலைநகர் டிரிபோலியில் கடாபியின் மாளிகையையொட்டிய பகுதியில் நேட்போ படைகள் தாக்குதல் நடத்தியதில் பயங்கர குண்டு சத்தமும், வானளாவிய புகை மண்டலமும் காணப்பட்டது. கடாபி ராணுவத் தளபதி வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், உயிர் பலி குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. இதற்கிடையே, கடாபி ராணுவப் படைகள், அதிருப்தியாளர்கள் அதிகமுள்ள அஜிதாபியான் நகரின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால், லிபியாவில் முக்கிய நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதிபர் பதவியிலிருந்து கடாபி இறங்க மறுப்பதால், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன.இதனிடையே, பெங்காசி நகரில் கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர் தலைவர்களுடன் ரஷ்ய தூதர் பேச்சு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.<br />
<br />
<b>* சிகாகோ கோர்ட்டில் ராணா மீதான விசாரணை முடிந்தது-விரைவில் தீ்ர்ப்பு</b><br />
<br />
<img alt="08-rana300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.2&disp=emb&realattid=ii_13071df63fb7fe21&zw" title="08-rana300.jpg" /><br />
<br />
சிகாகோ: பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா மீதான தீவிரவாத வழக்கின் விசாரணை சிகாகோ கோர்ட்டில் முடிவடைந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அரசின் தரப்பில் இறுதி வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பை அறிவிக்கவுள்ளனர்.<br />
<br />
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான தஹவூர் ராணா மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் சிகாகோவில் வைத்து எப்பிஐ படையினரால் கைது செய்யப்பட்டனர்.<br />
<br />
இருவர் மீதும் சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீது பயங்கரவாத செயல்கள், சதிச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களில் ஹெட்லி, ராணாவுக்கு எதிரானவராக, அப்ரூவராக மாறியுள்ளார். மரண தண்டனையிலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறு மாறியுள்ளார்.<br />
<br />
இதில் ராணா மீதான வழக்கு சிகாகோ கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது ராணாவுக்கு எதிராக ஹெட்லி வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும், ராணுவமும் எந்த அளவுக்கு பயங்கரமான சதிச் செயல்களில் ஈடுபட்டன என்பதை புட்டுப் புட்டு வைத்தார். மேலும் மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளையும் அவர் புட்டுப் புட்டு வைத்தார்.<br />
<br />
இந்த வாதங்களை ராணாவின் வக்கீல் முழுமையாக மறுத்து வாதாடினார். இதையடுத்து வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தது. அரசுத் தரப்பும், ராணா தரப்பும் தங்களது இறுதி வாதங்களை எடுத்து வைத்தனர்.<br />
<br />
இதையடுத்து நீதிபதிகள் விரைவில் தீர்ப்பை அளிக்கவுள்ளனர்.<br />
<br />
50 வயதான ராணா மீது முக்கியக் குற்றவாளி ஹெட்லியைக் காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தது, மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கான பூர்வாங்க பணிகளைச் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.<br />
<br />
அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் டேணியல் காலின்ஸ் வாதிடுகையில், ஹெட்லியை நம்பி ராணா மோசம் போனதாகவோ, ஹெட்லி ராணாவை பிரெய்ன் வாஷ் செய்து ஏமாற்றியதாகவோ கூற முடியாது. தீவிரவாத செயல்களில் ராணாக தானாக முன்வந்து ஈடுபட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் உள்ளன.<br />
<br />
மும்பையில் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த பயங்கரவாத செயல்களுக்கு முழுமையான காரணம் ராணாவும், ஹெட்லியும்தான். அப்பாவி மக்களைக் கொல்ல ஹெட்லி துடித்தது இந்த நண்பருக்கு (ராணா) முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.<br />
<br />
மும்பையில் நடந்தது ஒரு வேளை கோபன்ஹேகனில் நடந்திருக்கலாம். தீவிரவாதிகளின் புல்லட் மழைக்கு 164 அப்பாவிகளின் உயிர்கள் மும்பையில் மரித்துப் போயுள்லன. இதுபோன்ற கொடூரமான, கோரமான சம்பவத்தை ஒரு நபர், இருநபர் அல்லாமல் மிகப் பெரிய கட்டமைப்பின் உதவியுடன்தான் நிகழ்த்த முடியும்.<br />
<br />
துப்பாக்கியை ஏந்திச் சென்றால்தான் தீவிரவாதி என்று கூற முடியாது. மாறாக, துப்பாக்கியை எடுத்து் செல்பவருக்கு பெரும் உதவிகளைச் செய்வதும் கூட தீவிரவாதம்தான்.<br />
<br />
ஹெட்லி தன்னை ஏமாற்றி விட்டதாக ராணா கூறுவது ஏற்கக் கூடியதல்ல. உண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்துதான் உலகையே ஏமாற்றியுள்ளனர். ஏன், எப்பிஐயையும் கூட ஏமாற்றியுள்ளனர் என்றார்.<br />
<br />
ராணாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் பாட்ரிக் ப்ளீகன் கூறுகையில், ஹெட்லி அனைவரையும் ஏமாற்றியுள்ளார். உங்களையும் (நீதிபதிகளை) ஏமாற்றப் பார்க்கிறார். அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். ராணாவை இந்த வழக்கில் தண்டிக்கக் கூடாது.<br />
<br />
ராணா ஒருசாதாரண பிஸினஸ்மேன். தனது பிஸினஸை மும்பை, லாகூர், கராச்சி, டென்மார்க்கில் விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.<br />
<br />
ஆனால் ராணாவின் திட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஹெட்லி. தனது திட்டங்களுக்கு ராணாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தீவிரவாத செயல்களுக்கு அவரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.<br />
<br />
தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் இன்று ராணாவை தியாகம் செய்து விட்டார் ஹெட்லி. ஹெட்லியின் திட்டங்கள் எதுவும் ராணாவுக்குத் தெரியாது என்பதே உண்மை என்றார் அவர்.<br />
<br />
இரு தரப்பு இறுதி வாதங்களையும் கேட்டு முடித்துள்ள 12 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விரைவில் தீர்ப்பை வெளியிடவுள்ளது.<br />
<br />
<b>* முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்? </b><br />
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கோரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முஷாரப் தவறியதை தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.<br />
<br />
கடந்த மே 30 ஆம் தேதி வரை முஷாரப்புக்கு அவகாசம் கொடுக்கப்பட்டும் அவர் பதிலளிக்க தவறியதாலேயே அவரை தேடப்படும் குற்றவாளியாக ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது.<br />
<br />
இந்நிலையில் முஷாரப் தொடர்ந்து வெளிநாட்டிலேயே தங்கியிருபதால், பாகிஸ்தானிலுள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அனுமதியை அரசு தரப்பு வழக்கறிஞர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #00cccc;">தேசியச் செய்தி மலர்</b> :<br />
<br />
<b>* மைசூர் நகருக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம்!<br />
<br />
<img alt="elephant.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.5&disp=emb&realattid=ii_13071dbf8ee2e564&zw" title="elephant.jpg" /></b><br />
மைசூர், ஜூன் 8: மைசூர் நகருக்குள் புதன்கிழமை காலை புகுந்த 2 காட்டு யானைகள், வங்கி காவலாளியையும், ரோட்டோரம் கட்டியிருந்த பசு மாட்டையும் குத்திக் கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.<br />
<br />
மைசூர் நகரவாசிகளுக்கு புதன்கிழமை காலைப்பொழுது யானைகளின் அட்டகாசத்துடன் விடிந்தது. எச்.டி.கோட்டை காட்டில் இருந்து பன்னூர் வழியாக மைசூர் நகருக்குள் காலை 5 மணிக்கு ஒரு பெண் யானையும், அதன் ஆண் யானைக்குட்டியும் புகுந்தன.<br />
<br />
இவை இரண்டும் பம்பு பஜார், சரஸ்வதிபுரம், மகாராணி கல்லூரி, ஆட்சியர் அலுவகங்கம் ஆகியப் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மிதித்து துவம்சம் செய்தன.<br />
<br />
தலைதெறிக்க ஓடிய மக்கள்: ஒரு யானை, சயோஜிராவ் சாலையோரம் கட்டியிருந்த பசு மாட்டை தந்தங்களால் குத்திக் கொன்றது. பின்னர், ஆயுர்வேதக் கல்லூரி சந்திப்பு வழியாக சிவராம் பேட்டைக்குள் அந்த யானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சாலைகளில் தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.<br />
<br />
வங்கி காவலாளி சாவு: அப்போது, என்.எஸ்.சாலையில் உள்ள பேங்க் ஆப் மகாராஸ்ட்ராவில் காவலாளியாக பணிபுரியும் ரேணுகாபிரசாத் (58) என்பவரை யானை தும்பிக்கையால் வளைத்து பிடித்துக் கொண்டு, தந்தங்களால் குத்திக் கொன்றது.<br />
<br />
பின்னர் எதிரே வந்த வாகனங்களை மிதித்து, நொறுக்கியபடி ஒரு யானை நாராயணபுரா சாலை வழியாக ஜே.எஸ்.எஸ் பெண்கள் கல்லூரிக்குச் சென்றது. மற்றொறு யானை சுபாஷ் நகர், குச்சடஹள்ளி டோபிகாட்டில் உள்ள நாயுடு பண்ணைக்குள் நுழைந்தது.<br />
<br />
யானையைப் பிடிக்க மயக்க மருந்து: ஜே.எஸ்.எஸ்.பெண்கள் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து யானையைப் பிடித்தனர். பழகிய யானைகளான அர்ஜுன், அபிமன்யூ, கஜேந்திரா, ஸ்ரீராமா மூலம் நாயுடு பண்ணைக்குள் புகுந்த மற்றொரு யானையை வனத்துறையினர் பிடித்தனர்.<br />
<br />
பொதுமக்கள் பீதி: யானைகளின் தொடர் அட்டகாசத்தால் 3 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊருக்குள் யானைகள் புகுந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், அனைத்து தெருக்களிலும் கடைகள், அலுவலகங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டன.<br />
<br />
மைசூர் நகரம் முழுவதும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதுபோல மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இச்சம்பவத்தால் மைசூர் நகர மக்கள் பீதியடைந்தனர்.<br />
<br />
ரூ.5 லட்சம் நிவாரணம்: யானையால் கொல்லப்பட்ட ரேணுகாபிரசாத்தின் கண்களை தானம் செய்வதாக அவருடைய மனைவி வாணி, மகன்கள் தேவராஜ், ராஜு அறிவித்தனர். இதையடுத்து அவரது கண்களை கே.ஆர்.புரம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இறந்த ரேணுகாபிரசாத்தின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது. <br />
<br />
<b>* உண்ணாவிரதத்தைக் கைவிட ராம்தேவுக்கு மருத்துவர்கள் ஆலோசனை<br />
<br />
<img alt="ramdev.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.1&disp=emb&realattid=ii_13071db0cd475e7b&zw" title="ramdev.jpg" /></b><br />
ஹரித்துவார், ஜூன் 8: யோகா குரு ராம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உண்ணாவிரதத்தை கைவிட அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.<br />
<br />
வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும், ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாபா ராம்தேவ் புதன்கிழமை 5-வது நாளாக ஹரித்துவார் அருகேயுள்ள தனது பதாஞ்சலி யோகா பீடத்தில் சீடர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர் யோகேஷ் சர்மா தலைமையிலான மருத்துவக்குழு பரிசோதித்து வருகிறது.<br />
<br />
ராம்தேவின் உடல்நிலை குறித்து யோகேஷ்சர்மா புதன்கிழமை கூறியதாவது: ராம்தேவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு கைவிடாவிட்டால் பழச்சாறு, பால் போன்ற திரவ உணவையாவது அருந்தும்படி அறிவுறத்தியுள்ளோம். அவரது உடல் எடை குறைந்து வருகிறது. இதனால் உடல் நிலை சீர்கெட்டு வருகிறது என்றார்.<br />
<br />
ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட ராம்தேவ் மறுத்துவிட்டார். தனது கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும்வரை உண்ணாவிரதம் நீடிக்கும் என அவர் அறிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான எனது சீடர்கள் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.<br />
<br />
நாட்டிலுள்ள 624 மாவட்டங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. உண்ணாவிரதம் இருந்துவரும் தங்களது சகோதரர்களுடன் மற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தப் போராட்டத்தில் சிறுவர்களும், முதியோரும் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராம்தேவ்.<br />
<br />
*<b> கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்!</b><br />
பெங்களூர், ஜூன் 8: கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.<br />
<br />
தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.<br />
<br />
கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், கோலார், ஷிமோகா, தாவணகெரே, ஹூப்ளி, சாமராஜ் நகர் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 60 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.<br />
<br />
இந்தியா விடுதலையானபிறகு, கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களுக்காக தமிழ் பயிற்றுமொழி பள்ளிகள் தொடங்கப்பட்டன.<br />
<br />
1980-ல் நடைபெற்ற கோகக் போராட்டத்தின் விளைவாக கட்டாய கன்னடம் நடைமுறைக்கு வந்தது.<br />
<br />
இதன்பிறகு, தமிழ்ப்பள்ளிகள் கன்னடப் பள்ளிகளாக நிறம்மாறத் தொடங்கின.<br />
<br />
குறிப்பாக 1990-ல் நடந்த காவிரி கலவரத்துக்கு பிறகு, கன்னடம் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தமிழர்கள் ஆட்பட்டனர். கர்நாடகத்தில் மும்மொழித் திட்டம் அமலில் இருப்பதால், தமிழ், கன்னடம், ஆங்கிலம் படிக்க தமிழ் மக்களை தமிழார்வலர்கள் ஊக்குவிக்கத் தொடங்கினர்.<br />
<br />
ஆனால், தமிழ்ப் பள்ளிகளை படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு இலைமறைவு காயாக செயல்படுத்தி வந்துள்ளது. இதற்கு அரசு தெரிவிக்கும் காரணம், தமிழ் படிக்கும் மாணவர்கள் இல்லை என்பதுதான்.<br />
<br />
இதே காரணத்தை சுட்டிக்காட்டி ஓய்வுபெறும் தமிழாசிரியர்கள் இடத்துக்கு புதிய தமிழாசிரியர்கள் நியமனத்தையும் நிறுத்திவைத்து எழுதப்படாத சட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது.<br />
<br />
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து கர்நாடக தமிழாசிரியர் சங்கத் தலைவர் க.சுப்பிரமணியம், தினமணி நிருபரிடம் கூறியது:<br />
<br />
பெங்களூரைத் தவிர கர்நாடகம் முழுவதும் அரசு, அரசு மானியம்பெறும், பெங்களூர் மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் பணியாற்றினர். மாணவர்களும் அதிக அளவில் படித்து வந்தனர்.<br />
<br />
மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டி, தமிழாசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை.<br />
<br />
இப்போது கர்நாடகம் முழுவதும் ஆயிரம் தமிழாசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.<br />
<br />
அடுத்த 10 ஆண்டுகளில் இது 200 ஆக குறையும் ஆபத்து உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழ் பாடத்தையும் அளிக்கத் தவறக்கூடாது என்றார்.<br />
<br />
செயின்ட் அல்போன்சஸ் பள்ளி தமிழாசிரியர் கார்த்தியாயினி கூறியது:<br />
<br />
10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் 250 அரசு தமிழ் பள்ளிகள் செயல்பட்டன. இப்போது, 101 தமிழ் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.<br />
<br />
இதை காரணம்காட்டி தமிழ் பள்ளிகள், கன்னடப் பள்ளிகளாக உருமாறி வருகின்றன.<br />
<br />
சில பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், தமிழ் மாணவர்கள் தமிழ் கல்வியை கைவிடும் நிலை உள்ளது.<br />
<br />
அரசு மானியம் பெறும் பள்ளிகளோ தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி கன்னட வகுப்புகளுக்கு மாற்றிவருகின்றன.<br />
<br />
தமிழர்கள் தாய்மொழி கற்கும் உரிமை மறைமுகமாக பறிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நாம் நமது அடையாளத்தை இழக்க நேரிடும்.<br />
<br />
தமிழ்க்கல்வியின் நலிவைத் தடுக்க கர்நாடக தமிழர்கள் ஒன்றுசேர்ந்து குரல் எனழுப்ப வேண்டும் என்றார்.<br />
<br />
<b>* கொச்சியில் இலங்கையைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் கைது: தொடர் விசாரணை</b><br />
கொச்சி: கொச்சியில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.<br />
<br />
கொச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்கு செல்ல திட்டமிடலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தி 2 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கடத்தல் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.<br />
<br />
கடந்த மே மாதம் கொல்லத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லாட்ஜில் தங்கியிருந்த 39 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் உள்ளூர் ஏஜெண்ட் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.<br />
<br />
<b>* புதுச்சேரியில் 4 அமைச்சர்கள் பதவியேற்பு-இழுபறி முடிந்தது</b><br />
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறியில் இருந்து வந்த அமைச்சரவை அமைக்கும் பணிகள் இன்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தன. நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.<br />
<br />
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வென்றன. ஒரு இடத்தை திமுக ஆதரவு சுயேச்சை வென்றார். மீதமுள்ள 9 இடங்களில் மட்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்றது.<br />
<br />
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே அங்கு பெரும் பிரளயம் வெடித்தது. முதல்வராகப் பதவியேற்ற என்.ரங்கசாமி, தனித்து ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்து அதிமுகவை டென்ஷனாக்கினார். இதனால் கூட்டணி அங்கு பிளவுபட்டது.<br />
<br />
இருப்பினும் அதிமுகவை சமாதானப்படுத்த கடுமையாக முயன்றார் ரங்கசாமி. ஆனால் அதற்குப் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இந்த குளறுபடியால் அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல் அரசு நிர்வாகம் பெரும் தேக்கத்தை சந்தித்தது.<br />
<br />
இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் நியமனத்தை இறுதி செய்தார் ரங்கசாமி. அமைச்சரவைப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் குண்டூசி வாங்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். மத்திய அரசின் தயவு இல்லாமல் ஒரு புல்லைக் கூட புதுச்சேரி அரசால் பிடுங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.<br />
<br />
ஆனால் ரங்கசாமி அனுப்பிய பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்து வந்தது. இன்று காலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆளுநர் மாளிகையில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மத்திய அரசின் தாமதத்தால் அது நடைபெறாமல் ரத்தானது.<br />
<br />
இந்த நிலையில், பிற்பகலில் அனுமதி கொடுத்தது உள்துறை அமைச்சகம். இதையடுத்து மாலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.<br />
<br />
அப்போது சந்திரகாசு, ராஜவேலு, கல்யாண சுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.<br />
<br />
நான்கு பேரின் இலாகாக்களும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
புதிய அமைச்சர்களில் சந்திரகாசுவும், ராஜவேலுவும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். மற்றவர்கள் புதியவர்கள்.<br />
<br />
<b style="color: #00cccc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<img alt="tnsec.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.4&disp=emb&realattid=ii_13071d9728a8ddf7&zw" title="tnsec.jpg" /><br />
<br />
<b>* மெட்ரோ ரயில் திட்டத்தைக் கைவிடவில்லை: தமிழக அரசு அறிவிப்பு</b><br />
சென்னை, ஜூன் 8: மெட்ரோ ரயில் திட்டத்தைக் கைவிடவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.<br />
<br />
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள மோனோ ரயில் திட்டம் என்பது பல நாடுகளில் தோல்வி அடைந்துள்ளது. ஜப்பானில் 108 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என உலக நாடுகளில் மொத்தம் 164 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக அந்தத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.<br />
<br />
எனவே மோனோ ரயில் திட்டம் சரியானது தானா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றார்.<br />
<br />
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதைப் போலவும், அதற்குப் பதிலாக மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் பேசுகிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கைவிடவில்லை.<br />
<br />
அப்படியே இருக்கிறது. சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறைந்த காலத்தில் செயல்படுத்தும் திட்டமாக மோனோ ரயில் திட்டம் உள்ளது.<br />
<br />
மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அதிக ஆண்டுகள் ஆகும். மோனோ ரயில் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறுவது தவறான கருத்து.<br />
<br />
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் அந்தத் திட்டம் அமலில் உள்ளது.<br />
<br />
மோனோ ரயில் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி முடிக்க வாய்ப்பு இருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோனோ ரயில் கொண்டு வரப்படுகிறது என்றார் நத்தம் விஸ்வநாதன்.<br />
<br />
*<b> பள்ளிக் கட்டணம் முறைகேடாக வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை</b><br />
சென்னை, ஜூன் 8: நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பள்ளிக் கட்டணம் முறைகேடாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.<br />
<br />
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாமக உறுப்பினர் கணேஷ்குமார் பேசினார்.<br />
<br />
பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்க, மெட்ரிக் பள்ளிகள் லட்சக்கணக்கில் கட்டணம் கேட்கின்றன. பெற்றோர்களிடமிருந்து புகார்களை எதிர்பார்க்காமல் அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் பேசிய பின், அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில்:<br />
<br />
பள்ளி கட்டணக் கொள்ளை என்பது அதிமுக ஆட்சியில் செய்யப்படுவது போன்று பேசுகிறார்கள். திமுக ஆட்சியில் பள்ளிக் கட்டண நிர்ணய சட்டம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், அளவை மீறி வசூலிக்கப்பட்ட கட்டணத்தை வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.<br />
<br />
கடும் நடவடிக்கை: பள்ளிக் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையில் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு முதலில் அறிக்கை கொடுக்கட்டும். இந்தச் சூழ்நிலையில் கட்டண நிர்ணயம் தொடர்பாக முடிவு செய்வதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.<br />
<br />
அதேசமயம், இந்தப் பிரச்னையில் தலையிட முடியாது எனவும் அரசு கூறவில்லை. முறைகேடான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனப் புகார் தெரிவித்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறது என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.<br />
<br />
<b>* லத்திகா சரணுக்கு எதிரான தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை<br />
<br />
<img alt="lathikaran.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.7&disp=emb&realattid=ii_13071d81cff4666e&zw" title="lathikaran.jpg" /></b><br />
சென்னை, ஜூன் 8: தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்தது செல்லாது என்ற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.<br />
<br />
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரண் 8.1.2010-ம் தேதி நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழிகாட்டு விதிமுறைகள்படி இந்த நியமனம் நடைபெறவில்லை என்று கூறி தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை முன்னாள் இயக்குநர் ஆர். நடராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.<br />
<br />
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்தது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிந்துரை செய்யும் அதிகாரிகளின் பட்டியலில் இருந்து தகுதியானவரை டி.ஜி.பி.யாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், தகுதியான மூத்த காவல் துறை அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில் இருந்து, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து தமிழக அரசுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரை செய்தது.<br />
<br />
அந்தப் பட்டியலில் ஆர். நடராஜ் முதலாவது இடத்தில் இருந்தார். பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த லத்திகா சரணை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக மறு நியமனம் செய்து 27.11.2010-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனம், உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஆர். நடராஜ் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், லத்திகா சரணை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. இந்நிலையில், தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லத்திகா சரண் மேல்முறையீடு செய்தார்.<br />
<br />
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு விதிமுறைகளின் அடிப்படையில்தான் நான் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டேன்.<br />
<br />
எனவே, இந்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பு வரும் வரை, என்னை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்தது செல்லாது என்று தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று லத்திகா சரண் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.<br />
<br />
மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.<br />
<br />
<b>* டாப் ஸ்லிப்பில் கனமழை: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு<br />
<br />
<img alt="08-top-slip300.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071e29992ec1b4&attid=0.3&disp=emb&realattid=ii_13071e0ad716d296&zw" title="08-top-slip300.jpg" /></b><br />
பொள்ளாச்சி: டாப் ஸ்லிப் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுத்தமாக இல்லை. மேலும், யானை சவாரியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
டாப் ஸ்லிப்<br />
<br />
பொள்ளாச்சிக்கு அருகேயுள்ளது ஆனைமலை வனப்பகுதி. இங்குள்ள டாப் ஸ்லிப் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகும். இங்குள்ள மர வீடுகள், யானைச் சவாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்ப்பதாகும். இந்த ஆண்டும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.<br />
<br />
கன மழை<br />
<br />
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் டாப் ஸ்லிப் வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன மழையும், யானைச் சவாரி நிறுத்தப்பட்டதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுத்தமாக குறைந்துள்ளது.<br />
<br />
“யானை மேல் சுற்றுலாப் பயணிகளை அமர வைக்கப்படும் இருக்கை புல் மற்றும் தேங்காய் மஞ்சியால் செய்யப்பட்டது. இருக்கைகள் மழையில் நனைந்தால் அவற்றை உலர வைப்பது கடினம். யானை சவாரி நிரந்தரமாக நிறுத்தப்படவில்லை. மழை நின்றால் அடுத்த நாளே யானை சவாரி தொடரும்” என வனத்துறையினர் தெரிவித்தனர்.<br />
<br />
<b style="color: #00cccc;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<b>* முதுகுவலி வராமல் இருக்க <br />
<br />
தூங்கும்போது...</b><br />
<br />
(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.<br />
<br />
(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.<br />
<br />
(இ) ஒருபக்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.<br />
<br />
8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...<br />
<br />
(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.<br />
<br />
(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.<br />
<br />
(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.<br />
<br />
9. கார் ஓட்டும்போது...<br />
<br />
(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.<br />
<br />
10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.<br />
<br />
11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.<br />
<br />
12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.<br />
<br />
13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.<br />
<br />
உடற்பயிற்சி!<br />
<br />
தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.<br />
<br />
உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.<br />
<br />
எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்<br />
<br />
<br />
சீரகத்தின் மருத்துவ குணங்கள்<br />
<br />
சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும். அதனை எந்த விஷயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை.<br />
<br />
வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும்.<br />
<br />
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.<br />
<br />
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.<br />
<br />
திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.<br />
<br />
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.<br />
<br />
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.<br />
<br />
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.<br />
<br />
<b><span style="color: #00cccc;">வர்த்தகச் செய்தி மலர் :</span><br />
<br />
* சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவு <br />
</b><br />
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிந்து 18,394 புள்ளிகளில் முடிவடைந்தது.<br />
<br />
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 5,526 புள்ளிகளில் முடிவடைந்தது.<br />
<br />
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹீரோ ஹோண்டா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்ஸி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.<br />
<br />
ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, பெல், டிஎல்எப், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது<br />
<br />
<b>* கருப்புப் பணத்தை வெளிக்கொணர மேலும் ஒரு குழு </b><br />
கருப்புப் பணத்தை வெளிக்கொணர மேலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ள மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்கவும், அவர்களை பொதுமக்களிடம் வெளிப்படுத்தவும் இக்குழு முனைப்பாக செயல்படும் என்று கூறியுள்ளது.<br />
<br />
மத்திய நிதியமைச்சகத்தின் ஒரு அங்கமாக செயல்படவுள்ள இக்குழு, தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்துவருவோரை பொதுமக்களிடம் பட்டியலிடும் என்று கூறப்பட்டுள்ளது.<br />
<br />
கருப்புப் பணத்தை வெளிக்கொணர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று கூறி, யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதும், அவருக்கு ஆதரவாக இன்று அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதும் மத்திய அரசிற்கு பெரும் அழுத்தத்தைத் தந்துள்ளது.<br />
<br />
<b><span style="color: #00cccc;">விளையாட்டுச் செய்தி மலர் :</span><br />
<br />
* கிரிக்கெட்<br />
<br />
விராத் கோஹ்லி அபாரம் : இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி</b><br />
போர்ட் ஆப் ஸ்பெயின்: விராத் கோஹ்லி, பார்த்திவ் படேல் சிறப்பாக விளையாடி ரன் குவித்ததில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.<br />
<br />
போலார்டு வாய்ப்பு:நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ நீக்கப்பட்டு, போலார்டு வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரெய்னா சற்று வித்தியாசமாக "பீல்டிங் தேர்வு செய்தார்.<br />
<br />
சிம்மன்ஸ் அரைசதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லெண்டில் சிம்மன்ஸ், கிர்க் எட்வர்ட்ஸ் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முனாப் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார் எட்வர்ட்ஸ். பின் ஹர்பஜன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில், அமித் மிஸ்ரா பந்தில் எட்வர்ட்ஸ்(25) வெளியேறினார். அடுத்து வந்த சர்வான் ஒத்துழைப்பு அளிக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் சிம்மன்ஸ். இவர், மிஸ்ரா, யூசுப் பதான் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்தார். பின் யூசுப் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சிம்மன்ஸ், ஒரு நாள் அரங்கில் தனது 7வது அரைசதம் எட்டினார். இவர் 53 ரன்களுக்கு யூசுப் பதான் வலையில் சிக்கினார்.<br />
<br />
வெஸ்ட் இண்டீஸ் 240 : இதன் பின்னர் சர்வானும், சாமுவேலும் ஜோடி சேர்ந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். சர்வான் 56 ரன்களிலும், சாமுவேல் 36 ரன்களிலும்ஆட்டமிழந்தனர். போலார்டு ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். சமி 22 ரன்களிலும், ரவி ராம்பால் 14 ரன்களிலும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்களும், முனாப் படேல் 3 விக்கெட்களையும், யூசுப் பதான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.<br />
<br />
மழையால் பாதிப்பு : இதன் பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் பார்த்திவ் படேலும் விராத் கோஹ்லியும் ஜோடி சேரந்து ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் இந்திய அணி 22 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் போட்டி துவங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 37 ஓவரில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.<br />
<br />
இந்தியா வெற்றி : போட்டி துவங்கிய பின்னர் பார்த்திவ் படேல் 56 ரன்கள் எடுத்திருந்த போது மார்ட்டின் பந்தில் விக்கெட் கீ்ப்பர் கார்ல்டன் பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் விராத் கோஹ்லியும் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்திருந்த போது பிஸ்போ பந்தில் போலார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 33.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்ற மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிகணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.<br />
<br />
<b>* சர்வதேச டென்னிஸ்:சானியா தோல்வி</b><br />
<br />
<img alt="1spt.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071f76754ec231&attid=0.3&disp=emb&realattid=ii_13071f3ad8f8d91d&zw" title="1spt.jpg" /><br />
<br />
பர்மிங்காம், ஜூன் 8: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் ஏஇஜிஓஎன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சானியா மிர்சா தோல்வியடைந்தார்.<br />
<br />
இந்த ஆட்டத்தில் 3-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் தமிராவிடம் தோல்வியடைந்தார் சானியா.<br />
<br />
சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றோடு வெளியேறினார் சானியா.<br />
<br />
ஆனால் இரட்டையர் பிரிவில் ரஷியாவின் வெஸ்னினாவுடன் இணைந்து இறுதிச்சுற்று வரை சானியா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b style="color: #00cccc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b style="color: #00cccc;"> அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : மருந்தீஸ்வரர்<br />
உற்சவர் : தியாகராஜர்<br />
அம்மன்/தாயார் : திரிபுரசுந்தரி<br />
தல விருட்சம் : வன்னி<br />
தீர்த்தம் : பஞ்ச தீர்த்தம்<br />
ஆகமம்/பூஜை : காமீகம்<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : திருவான்மீகியூர், திருவான்மியூர்<br />
ஊர் : திருவான்மியூர்<br />
மாவட்டம் : சென்னை<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
பாடியவர்கள்:<br />
<br />
<br />
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்<br />
<br />
<b>மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து <br />
அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று <br />
எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் <br />
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.</b><br />
-திருநாவுக்கரசர்<br />
<br />
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம் .<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.<br />
<br />
இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது.<br />
<br />
பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.<br />
<br />
சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது. அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.<br />
<br />
மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார்.<br />
<br />
கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.<br />
<br />
கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது .<br />
<br />
பாடல்: தேவாரப்பதிகம் மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
பங்குனி பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்<br />
<br />
<b style="color: #00cccc;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #00cccc;">உனக்குள்ளேயே விலகி நில் - அன்னை </b><br />
சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும். அதுவே தெய்வ ஒளி, தெய்வ அன்பு, தெய்வ வாழ்வு - அதுவே பரம சாந்திர, பூரண மகிழ்ச்சி, புவி மீது அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துதல், அதன் சிகரம் இறைவனின் முழு வெளிப்பாடு.<br />
<br />
இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும். <br />
<br />
<b>வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா </b>- வடகிழக்குப் பகுதியின் மிகப் பெரிய மாநிலம் எது ?<br />
<br />
<b>விடை</b> - அருணாச்சல் பிரதேசம்.<br />
<br />
<b style="color: #00cccc;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர்<br />
<br />
<img alt="large_253029.jpg" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=2996d71d52&view=att&th=13071f76754ec231&attid=0.1&disp=emb&realattid=ii_13071f723c5226c7&zw" title="large_253029.jpg" /></b><br />
கோவை : கல் மனம் கொண்ட பெற்றோரால் கைவிடப்பட்ட, மனநலம் பாதித்த எட்டு வயது சிறுமியை பராமரிக்க முடியாத பாட்டி, உதவி கேட்டு கோவை கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். கலெக்டர் உள்பட பலரது விழிகளும் கலங்கின.<br />
<br />
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் பலர், நேற்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கருணாகரனிடம் நலத்திட்ட உதவிகளை பெற காத்திருந்தனர். பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த 72 வயது அம்சவல்லி என்ற பாட்டியின் இடுப்பில் தொற்றியவாறு இருந்தாள் பேத்தி முத்துமாரி (8). இக்குழந்தையை கலெக்டரிடம் காண்பித்து பாட்டி கேட்ட உதவி, அருகிலிருந்த பலரது கண்களையும் குளமாக்கியது.<br />
<br />
பிறக்கும்போதே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த முத்துமாரியை, அவளின் பெற்றோர் பெரும் சுமையாகவே நினைத்தனர். அதற்கேற்ப, பிறந்த ஓரிரு மாதங்களில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. தங்களை நம்பி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் குழந்தையை விட்டு எங்கோ பிரிந்து சென்று விட்டனர். இப்போது 72 வயதான பாட்டி அம்சவல்லிதான், முத்துமாரியின் அப்பா, அம்மா எல்லாமே. முத்துமாரியின் பரிதாப நிலைமை காரணமாக தனியாக வீட்டில்விட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமை. இதனால் அக்கம்பக்கத்து வீட்டார் அளிக்கும் சிறு உதவிகள்தான் இருவரின் ஜீவன்களை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.<br />
<br />
பாட்டி அம்சவல்லி கலெக்டரிடம் கூறியதாவது: மனநலம் பாதித்த பிள்ளையை விட்டுட்டுப் போக அவ அப்பா அம்மாவுக்கு எப்படி மனசு வந்துச்சுன்னே தெரியல. ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்கன்னும் தெரியல. எந்த வருமானமும் இல்லாம ஒவ்வொரு நாளையும் கடத்துறது கஷ்டமா இருக்கு. புத்தி சரியில்லாத குழந்தைங்க அதிகமாக சாப்பிடுவாங்களாம். இவளுக்கும் எப்பவும் ஏதாவது சாப்பிடக் குடுத்துட்டே இருக்கணும். தொடர்ந்து "அ...அ'ன்னு சொல்லிட்டே இருந்தா டீயோ, காப்பியோ ஸ்பூன்ல ஊத்தணும். சாப்பிடுற நேரம் வந்தா, "ஆ....ஆ' ன்னு வாயைத் திறந்து கத்திட்டே இருப்பா... இப்படி இவளோட ஒவ்வொரு தேவையையும் புரிஞ்சு வேணுங்கறத குடுக்கணும்.<br />
முகத்தை தடவி, தடவி தினமும் இவ குடுக்கற முத்தம்தான் இப்ப என்னோட ஒரே சொத்து. எனக்கு இப்ப 72 வயசாகுது. எனக்குப் பிறகு இந்த "முத்த' யாரு கவனிப்பாங்களோன்னு நினைச்சா ராத்திரியெல்லாம் தூங்கவே முடியறதில்லை. அதுவும் பொம்பளப் பிள்ளையா போயிட்டா. நான் போய் சேர்றதுக்குள்ள இவ அப்பா அம்மா எங்க இருந்தாலும் திருந்தி இனியாவது ஒண்ணு சேரணும்னு கடவுள பாத்து கும்புடுறேன். கலெக்டர் அய்யா மனசு வச்சு, இந்த பிள்ளைய காப்பாத்த உதவணும்.இவ்வாறு கூறி கலெக்டரை பார்த்து கைகூப்பி அழுதார்.<br />
<br />
குழந்தைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மினுக்கு கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.<br />
<br />
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முத்துக்குமாரி, 18 பி, 3வது தெரு, தண்ணீர் பந்தல், பீளமேடு, கோவை-1.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி -தின மலர் , தின மணி, கூகிள் செய்திகள், வெப்துனியா.<br />
<br />
<br />
-- <br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-44797851558656599102011-06-08T13:31:00.000+05:302011-06-08T13:31:35.704+05:30இன்றைய செய்திகள் - ஜீன், 08 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #009900;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>ஹஸாரே உண்ணாவிரதம் இன்று காலை 10 மணிக்கு துவக்கம்</b><br />
<br />
<img alt="annahazare.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ccb74f6f16fd&attid=0.1&disp=emb&realattid=ii_1306cc77ff4b3308&zw" title="annahazare.jpg" /><br />
<br />
புது தில்லி, ஜூன் 7: யோகா குரு பாபா ராம்தேவ் மீது அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காந்தியவாதி அண்ணா ஹஸாரே நடத்தும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு தில்லி ராஜ்காட்டில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
முன்னதாக இந்த உண்ணாவிரதத்தை தில்லி ஜந்தர் மந்தரில் துவக்க அண்ணா ஹஸாரே திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு போராட்டம் நடத்த தில்லி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதோடு தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் ராஜ்காட்டுக்கு மாற்றப்பட்டதாக அண்ணா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு பக்கபலமாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.<br />
<br />
<b style="color: #009900;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி<br />
<br />
<img alt="07-rwandan-army-chief300.jpg" height="150" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ccb74f6f16fd&attid=0.2&disp=emb&realattid=ii_1306cc654deea22a&zw" title="07-rwandan-army-chief300.jpg" width="200" /></b><br />
அருஷா (தான்சானியா): ருவாண்டாவில் நடந்த வரலாறு காணாத இனப்படுகொலைக்குக் காரணமான முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை விதித்தவர் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வா.<br />
<br />
ருவாண்டாவில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை சம்பவம் தொடர்பாக ஐ.நா. சர்வதேச போர்க்குற்ற டிரிப்யூனல் விசாரித்து வந்தது. இந்த கோர்ட்டுக்கு இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வா தலைவராக இருந்தார். இந்த நீதிமன்றம் தற்போது ருவாண்டா ராணுவத்தின் மாஜி தலைமைத் தளபதி அகஸ்டின் பிஸிமுங்குவுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.<br />
<br />
இவர் தவிர பிரான்காய்ஸ் சேவியர் சுவானமயி மற்றும் இன்னொசன்ட் சகாஹுடு ஆகியோருக்கு தலா 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
போலீஸ் தலைவர் அகஸ்டின் டின்டிலியிமனா என்பவரும் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. இருப்பினும் அவர் ஏற்கனவே சிறையில் நீண்ட காலம் இருந்ததால் அவரை விடுவிக்க சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.<br />
<br />
1994ம் ஆண்டு ருவாண்டாவில் பெரும் இனக் கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அது நீடித்தது. இந்த கால கட்டத்தில் ருவாண்டாவே ரத்தக்களறியானது. கிட்டத்தட்ட 8 லட்சம் டுட்சி இனத்தவரும், நடுநிலையுடன் கூடிய ஹூடு இனத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ருவாண்டாவை ஆட்சி செய்து வந்தது ஹூடு இனத்தவர்கள் ஆவர். இதனால் டுட்சி இனத்தவர்களை அழிக்கும் நோக்கில் கொலை வெறியாட்டம் ஆடியது ராணுவம். இந்த இனப்படுகொலையை தலைமையேற்று நடத்தினார் பிஸிமுங்கு.<br />
<br />
1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தலைநகர் கிகாலி அருகே ருவாண்டா முன்னாள் அதிபர் ஜூவினல் ஹபியாரிமானா பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அதிபர் கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் வெடித்தது.<br />
<br />
100 நாள் நடந்த ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கை விசாரிக்க தான்சானியாவில் சர்வதேச கோர்ட் நிறுவப்பட்டது. முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அசோக டிசில்வாவைத் தலைவராக கொண்ட கோர்ட் அமைக்கப்பட்டது.<br />
<br />
இந்தக் கோர்ட்டில், அசோக டிசில்வா தவிர தக்ரிட் ஹிக்மத் மற்றும் சியோன் கி பார்க் ஆகியோரும் நீதிபதிகளாக செயல்பட்டனர்.<br />
<br />
கிட்டத்தட்ட 250 சாட்சியங்களை விசாரித்த இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது.<br />
<br />
2002ம் ஆண்டு அங்கோலாவில் வைத்து பிஸிமுங்கு கைது செய்யப்பட்டார். வீடு வீடாக போய் டுட்சி இனத்தவரை கும்பல் கும்பலாக கொலை செய்யுமாறு அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹூடு இனத்தவர்களுக்கு உத்தரவிட்டது இந்த பிஸிமுங்குதான். குறிப்பாக ஒரு கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டுட்சி இனத்தவரை நிற்க வைத்து அத்தனை பேரையும் ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தான் இந்த பிஸிமுங்கு.<br />
<br />
மேலும் ருவாண்டா பிரதமர் அகாதே விலிங்கியிமானாவையும் கொல்ல பிஸிமுங்கு உத்தரவிட்டான். அப்போது பிரதமரைப் பாதுகாக்க ஐ.நா. அனுப்பியிருந்த படையில் இடம் பெற்றிருந்த ஏழு பெல்ஜியம் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ருவாண்டாவிலிருந்து ஐ.நா. அமைதி காக்கும் படை வெளியேறியது.<br />
<br />
ராஜபக்சே கும்பலுக்கு எப்போது தண்டனை?<br />
<br />
இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை குறித்து உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் தமிழர்களை வேட்டையாடிய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக அப்போது இருந்த சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும், அவர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.<br />
<br />
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கடும் தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
விரைவில் இதே நிலைமை ராஜபக்சே கும்பலுக்கும், பொன்சேகாவுக்கும் வர வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.<br />
<br />
<b>* ராம்தேவ் வெளியேற்றம் நியாயமா?-கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு!</b><br />
டெல்லி: டெல்லியில் தனது ஆதரவாளர்களோடு உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை டெல்லி போலீஸார் வெளியேற்றிய விதம் சரியா என்பது குறித்து பதிலளிக்க அமெரிக்க அரசு மறுத்துள்ளது.<br />
<br />
பாபா ராம்தேவ் உண்ணாவிரத இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, உண்ணாவிரதம் இருந்தவர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை பிரயோகித்து விரட்டியடித்தது உள்ளிட்டவற்றுக்காக டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் கடும் கணடனங்களை சம்பாதித்துள்ளன.<br />
<br />
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது அமெரிக்கா வரை சென்றுள்ளது. அங்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டனர். ராம்தேவ் விவகாரத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட நடைமுறைகள் நியாயமானவையா, இதில் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு டோனரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.<br />
<br />
அதற்கு அவர் இது இந்தியாவின் உள் விவகாரம். கருத்து தெரிவிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று பதிலளித்தார்.<br />
<br />
<b>* பான் கீ முனுக்கு இந்தியா ஆதரவு</b><br />
<br />
வாஷிங்டன்: ஐ.நா.,சபையின்பொதுசெயலாளராக இருப்பவர் பான்கி மூன். இவர் ஐ.நாவின் பொதுச்செயலாளராக கடந்த 2007-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதா பான்கிமூன் தெரிவித்துள்ளார்.பான்கிமூனை ஆதரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநியாக உள்ள மன்ஜீவ்சிங்பூரி இதனை தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே போல் சீனாவும் பான்கிமூனே மீண்டும் ஐநாவின் பொதுசெயலாளராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.<br />
<br />
<b>* சீனாவில் வெள்ளப்பெருக்கு 14 பேர் பலி.</b><br />
<br />
பீஜிங்: சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 14 பேர் வரை பலியாகியுள்ளனர். 35 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். 45 ஆயிரம் பேர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தது குயிஸ் காவ் மாகாணம்.இம் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சுமார் 27 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளனர்.மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டுவருவதாகவும் மாகாணத்தில் நøடெபற்று வரும் பள்ளி தேர்வுக்கு செல்லும் மாணவர்களை பாதுகாக்கவும் போலீசார் விரைந்து செயல்பட்டு வருவாதகவும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
<b>* அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் </b><br />
<br />
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓடும் ரயிலில் சீக்கியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்குள்ள சீக்கியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
ஜிவான் சிங் என்ற சீக்கியர்,(59) கடந்த 30 ஆண்டுகளாக அமெரி்க்காவில் வசித்து வருவதோடு,பெருநகர போக்குவரத்து ஆணையத்திலும் பணியாற்றி வருகிறார்.<br />
<br />
இந்நிலையில், கடந்த வாரம் அவர் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, அருகே நின்றிருந்த ஒரு நபர் திடீரென ஜிவான் சிங்கை பார்த்து, "நீ பின்லேடனின் சகோதரனா?" என்று கேட்டுக் கொண்டே அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.<br />
<br />
இத்தகவல் தற்போதுதான் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
<b>* சிவசங்கர், நிருபமா இலங்கை செல்கின்றனர் </b><br />
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை உள்ளடக்கியக் குழு கொழும்பு செல்கிறது.<br />
<br />
வரும் 16,17ஆம் தேதிகளில் இக்குழு கொழும்புவில் இருக்கும் என்றும், அப்போது ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் கடந்த மாதம் 15,16,17ஆம் தேதிகளில் டெல்லி வந்திருந்தபோது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ஆகியன குறித்து சிறிலங்க அரசுடன் அவர்கள் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.<br />
<br />
இக்குழுவில் இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாரும் இருப்பார் என்று கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இந்த குழுவின் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்றாலும், அயலுறவு அமைச்சர் பெய்ரீஸின் வருகையினால் தள்ளிப்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* சுதந்திரமாக நடமாட அனுமதி கோரி பாகிஸ்தான் அணு விஞ்ஞானி வழக்கு</b><br />
இஸ்லாமாபாத், ஜூன். 7-<br />
<br />
பாகிஸ்தானின் அணு விஞ்ஞானியை பாகிஸ்தான் அரசு காண்காணித்து வருவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.<br />
<br />
பாகிஸ்தானின் அணு விஞ்ஞானியான அப்துல்காதிர்கான். இவர் அணு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வீட்டுகாவலில் வைக்கப்பட்டார். அப்போதைய முசரப் அதிபர் ஆட்சியின் இவர் வீட்டுக்காவலில் இருந்தார். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு புதிய அரசு இவருக்கு சில நிபந்தனைகள் விதித்து விடுதலை செய்தது. எனினும் இவரது நடவடிக்கைகளை கண்காணித்தது.<br />
<br />
இந்நிலையில் காதிர் கானின் பாதுகாவலர், முகமது பாஹிம் என்பவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அணு விஞ்ஞானி காதிர்கானை பாகிஸ்தான் அரசு கடந்த இரு ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது. லாகூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவாளி ரேமண்ட் டேவிசுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறது. இது இவருக்கு புகழுக்கு களங்கள் விளைவிப்பதாக உள்ளது. ஆகவே பாகிஸ்தான் அரசு இவரை கண்காணிப்பதை விலக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். நீதிபதி இக்பால்-ஹமீத்-ரக்மான் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக கூறினார்.<br />
<br />
<b>* ஜெர்மனியில் 2022ல் அணுசக்தி நிலையங்களை மூட அனுமதி</b><br />
<br />
பெர்லின், ஜூன். 7-<br />
<br />
ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களை மூடும் மசோதாவுக்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.<br />
<br />
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால், புகுசிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இதனால், தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை மூட, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முடிவு செய்தார். இதற்கான மசோதாவுக்கு, ஜெர்மன் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.<br />
<br />
ஜெர்மனியில் ஏற்கனவே ஏழு பழமையான அணு மின் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சமீபத்தில் ஒரு அணுமின் நிலையம் தொழில்நுட்பக் கோளாறால் மூடப்பட்டது. 2022ம் ஆண்டுக்குள் ஒன்பது அணுமின் நிலையங்களையும் மூடி விடுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதாக, ஜெர்மன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்பர்ட் ராட்ஜன் தெரிவித்துள்ளார்.<br />
<br />
வரும் 2030ம் ஆண்டு வரை 17 அணு உலைகள் பயன்பாட்டில் இருக்கும். அணு உலைகள் மூடப்படுவதால் ஏற்படும் மின் பற்றாக்குறையைப் போக்க, நிலக்கரி, எரிவாயு மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை அதிகரிக்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #009900;">தேசியச் செய்தி மலர்:</b><br />
<br />
<img alt="pm.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ccb74f6f16fd&attid=0.6&disp=emb&realattid=ii_1306cc30ac831541&zw" title="pm.jpg" /><br />
<br />
<b>* சொத்து விவரங்களை அறிவிக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு</b><br />
புது தில்லி, ஜூன் 7: வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
அதுபோல் மத்திய அமைச்சர்களின் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.<br />
<br />
இந்தத் தகவலை தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சரவைச் செயலாளர் கே.எம். சந்திரசேகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: மத்திய அமைச்சர்கள் ஆண்டுதோறும் அவர்களது சொத்து விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில் எல்லா அமைச்சர்களும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூன் 2-ம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பிரதமரின் உத்தரவுப்படி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.<br />
<br />
அந்தக் கடிதத்தில் அமைச்சர்கள், அவர்களது மனைவிகள், மற்றும் அமைச்சரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் அமைச்சரும், அவரது மனைவி, அவரைச் சார்ந்தவர்கள் வர்த்தகம் செய்கிறார்களா அல்லது வெளிநாட்டு அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலோ அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்களிலோ பணிபுரிகிறார்களா என்று தெரிவிக்க வேண்டும் என கேட்டக் கொள்ளப்பட்டுள்ளனர். நடத்தை விதிமுறை பத்தி 1 (ஏ), 2 (ஏ), 2 (இ), மற்றும் 3.2 ஆகியவற்றின்படி சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.<br />
<br />
<b>* கனிமொழி ஜாமீன் மனு: தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு<br />
<br />
<img alt="kanimozhli.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ccb74f6f16fd&attid=0.4&disp=emb&realattid=ii_1306cc2131125dd4&zw" title="kanimozhli.jpg" /></b><br />
புது தில்லி, ஜூன் 7: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிறுவன இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அளிக்க உள்ளது.<br />
<br />
இது குறித்து மனுதாரர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி அஜீத் பாரிகோக், மனு மீதான தீர்ப்பை கடந்த மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.<br />
<br />
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேர், ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தனர். சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று கூறி, அவர்கள் அனைவரது மனுக்களையும் நீதிபதி அஜீத் பாரிகோக் சமீபத்தில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*<b> ஜே.பி.சி. முன் ஆஜராக தயாநிதி, ஆ. ராசா, பிரதாப் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு</b><br />
புது தில்லி, ஜூன் 7: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன் ஆஜராகுமாறு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
இதனை ஜேபிசி குழுவின் தலைவர் பி.சி சாக்கோ தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக ஜே.பி.சி. முன்பு சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.<br />
<br />
சிபிஐ இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும், விசாரணை நிலவரத்தையும் ஜேபிசி குழுவிடம் அவர் தெரிவித்தார். ஜூன் 30ஆம் தேதிக்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.<br />
<br />
இதனிடையே, விசாரணைக்காக 85 பேரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நாடாளுமன்றக் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாக சாக்கோ தெரிவித்தார். 1998 முதல் 2008 வரையிலான தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள், தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர்கள், டிராய் தலைவர்கள், சட்ட அமைச்சகத்தின் செயலாளர்கள், நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.<br />
<br />
குறிப்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள ஆ. ராசா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும், இப்போதைய ஜவுளித் துறையின் அமைச்சருமான தயாநிதி மாறன் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.<br />
<br />
<img alt="07-dayanidhi-maran8-300.jpg" height="150" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ccb74f6f16fd&attid=0.3&disp=emb&realattid=ii_1306cc975d39dd20&zw" title="07-dayanidhi-maran8-300.jpg" width="200" /><br />
<br />
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை அனுமதி வழங்க இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு கை மாறிய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஜேபிசி குழுவின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.<br />
<br />
<b>* பிடி இறுகுகிறது; மாஜி ஏர்செல் ஓனரிடம் சி.பி.ஐ., விசாரணை </b><br />
<br />
புதுடில்லி: பிரபல டிஸ்னெட் வயர்லஸ் ( தற்போது ஏர்செல்) மாஜி ஓனரான சிவசங்கரனிடம் சி.பி.ஐ., இன்று விசாரணை நடத்தியது. இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் முக்கிய விஷயங்களை தெரிவித்திருப்பதாகவும், இது முக்கிய தன்மை கொண்டதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.<br />
<br />
கடந்த 2006-ம் ஆண்டு தொலை தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தவர் சிவசங்கரன். அவர் 2ஜி அலைக்கற்றை உரிமை கேட்டு தொலைத் தொடர்பு துறையிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு உரிமம் எதுவும் கொடுக்கப்படவில்லை. பல முறை கேட்டும் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனால் சிவசங்கரன் தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு விற்று விட்டார். அவர் டிஸ்னெட் வயர்லஸ் என்ற பெயரை ஏர்செல் என்று மாற்றினார். அதன் பிறகு ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் உடனடியாக கிடைத்தன. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.<br />
<br />
இந்த நிலையில் தொழில் அதிபர் சிவசங்கரனை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. அதை ஏற்று இன்று (திங்கட்கிழமை) சிவசங்கரன் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்.<br />
<br />
2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அவரிடம் சி.பி.ஐ. பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்தது. தான் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் வரை தள்ளப்பட்டேன் என்றும், இதற்கு ஒரு சிலர் காரணமாக இருந்தனர் என்றும் கூறியுள்ளார். அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. சிவசங்கரனின் வாக்குமூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் பலருக்கு நெருக்கடி வர வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன், இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* காஷ்மீரில் 250 பயங்கரவாதிகள் செயல்பாடு</b><br />
<br />
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது 250 பயங்ரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக போலீஸ் டிஜிபி குல்தீப் கோடா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது. மாநிலத்தில் பயங்கரவாதகளின் செயல்பாடு குறைந்து விட்டதாக கூற முடியாது இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ராணுவத்தினரின் உதவியோடுகட்டுப்படுத்தப்பட்டுள்<br />
<div dir="ltr"><wbr></wbr>ளது. மேலும் கடந்த 90-களில் மாநிலத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்துள்ளனர். இருப்பினும் ஸ்ரீநகர், பத்காம், கந்தர்பால்,போன்ற மாவட்டங்களில் 15 பயங்கரவதா குழுக்கள் செய ல்பட்டு வருகின்றன . பெரும்பாலான பயங்கரவாத குழுக்கள் பிர் பஞ்சால் மலைப்பகுதியை கொண்டுள்ள பத்காம் மாவட்டத்தில் செயல்பட்டு வருதாகவும், தலைநகர் ஸ்ரீநகரில் எந்தவித பயங்கரவாத குழுக்களும் செயல்பட வில்லை என்றும் அவர் கூறினார்.<br />
<br />
<b>* தேர்தல் செலவு கணக்கு விவரங்களை 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு<br />
<br />
<img alt="large_253054.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ccb74f6f16fd&attid=0.5&disp=emb&realattid=ii_1306cbfdf35ba86b&zw" title="large_253054.jpg" /></b><br />
சென்னை : "சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் செலவு தொடர்பான இறுதி கணக்கு விவரங்களை, வரும் 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.<br />
<br />
அவரது செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும், தேர்தல் செலவு குறித்த இறுதி கணக்கு விவரங்களை, தேர்தல் முடிவு வெளியிட்ட தேதியில் இருந்து, ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, வரும் 13ம் தேதிக்குள், வேட்பாளர்கள் அனைவரும், இறுதி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.<br />
<br />
<b>* சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்</b><br />
சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை, சேலம், திருவாரூர் உள்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.<br />
<br />
<br />
திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் செயலை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.<br />
<br />
<br />
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த தமிழக அரசு காலம் தாழ்த்தினால், கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.<br />
<br />
<br />
இதேபோல் திருவாரூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.<br />
<br />
<b>* 6 நாள் முன்னதாக நாளை 'நல்ல நேரத்தில்' மேட்டூர் அணை திறப்பு!</b><br />
மேட்டூர்: வழக்கத்துக்கு மாறாக, ஜூன் 12ம் தேதிக்குப் பதிலாக, நாளையே மேட்டூர் அணை காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக திறந்துவிடப்படவுள்ளது.<br />
<br />
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.<br />
<br />
பல ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் மாத கடைசியிலும், ஜூலை மாதத்தி்லும் அணை திறக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறந்துவிடப்படும் என்று புதிதாக பதவிக்கு வந்த அதிமுக அரசு அறிவித்துள்ளது.<br />
<br />
மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 115.81 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,534 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.<br />
<br />
இந் நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாலும் அணை முன்னதாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 17லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.<br />
<br />
நாளை காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதற்கான விழா ஏற்பாடு மிக எளிமையாக செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
நல்ல நேரமான காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.<br />
<br />
மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 90 நாள் குறுவை பயிருக்கு போதுமானதாக உள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட சாகுபடியான சம்பா பயிருக்கு தேவையான நீர் தென் மேற்கு பருவ மழையைப் பொறுத்தே பூர்த்தியாகும்.<br />
<br />
இல்லாவிட்டால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே சம்பா சாகுபடி முழு அளவில் நடக்கும்.<br />
<br />
<b style="color: #009900;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #009900;">உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!</b><br />
உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.<br />
<br />
அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.<br />
<br />
தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.<br />
<br />
இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.<br />
<br />
இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.<br />
<br />
அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.<br />
<br />
இந்த தகவலை 'த டெய்லி மெயில்' என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது<br />
<br />
வர்த்தகச் செய்தி மலர் :<br />
<br />
* சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு<br />
<br />
மும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண்ணில் 75 புள்ளிகள் உயர்ந்தது.<br />
<br />
இன்று காலை வர்த்தகம் 18,545.95 புள்ளிகளில் தொடங்கியது. இன்றைய நாளில் 75.51 புள்ளிகள் உயர்ந்து 18,495.62 புள்ளிகளில் முடிவடைந்தது.<br />
<br />
தேசிய பங்கு சந்தையான நிப்டி 15.3 புள்ளிகள் உயர்ந்து 5532.05 புள்ளிகளில் நிலைப்பெற்றது.<br />
<br />
ஜிண்டல் ஸ்டீல்ஸ், ஆர்ஐஎல், மாருதி, சிப்லா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின.<br />
<br />
புளூ சிப் பங்குகளான ரிலையன்ஸ், இன்போஸிஸ் போன்றவற்றின் பங்குகள் இன்று முதலீட்டாளர்களால் அதிகம் வாங்கப்பட்டன.<br />
<br />
ஏர்டெல், எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, டாட்டா பவர், ஹீரோஹோண்டா டி.எல்.எப். ,பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று நஷ்டத்தைத் தந்தன.<br />
<br />
இதர ஆசிய சந்தைகளிலும் இன்று ஏறுமுகம் காணப்பட்டது.<br />
<br />
* தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.64 உயர்வு<br />
<br />
சென்னை: தங்கத்தின் விலை லேசாக குறைவதும், எக்கச்சக்கமாக உயர்வதுமாக உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ 64 உயர்ந்துள்ளது தங்கம் விலை.<br />
<br />
கடந்த சனிக்கிழமை அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.40 அதிகரித்திருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 111-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 888-க்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலையில் உயர்வு ஏற்பட்டது.<br />
<br />
ஒரு சவரன் தங்கம் ரூ. 16 ஆயிரத்து 952-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 119-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.64 அதிகரித்தது.<br />
<br />
இன்றும் தங்கத்தின் விலையில் இறங்குமுகம் தெரியவில்லை. காலையிலிருந்தே விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.<br />
<br />
<b style="color: #009900;">விளையாட்டுச் செய்தி ம்லர் :</b><br />
<br />
<b>* டிராவை நோக்கி இலங்கை-இங்கிலாந்து டெஸ்ட்</b><br />
லார்ட்ஸ், ஜூன் 7: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது.<br />
<br />
முன்னதாக இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.<br />
<br />
5-வது நாளான செவ்வாய்க்கிழமை 45 ஓவர்களே மீதமிருந்த நிலையில், இலங்கை அணி 311 ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது.<br />
<br />
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 486 ரன்கள் குவித்தது. அதன்பிறகு பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 479 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய இங்கிலாந்து 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. குக் 61 ரன்களுடனும், பீட்டர்சன் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.<br />
<br />
5-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் குக் சதமடித்தார். அவர் 106 ரன்கள் எடுத்தார். பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். அந்த அணி 335 ரன்களை எட்டியபோது டிக்ளேர் செய்தது. அப்போது இயன் பெல் 57 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.<br />
<br />
343 ரன்கள் இலக்கு: 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. 45 ஓவர்களில் அந்த அணி 311 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.<br />
<br />
<b>* முதல் ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவை வீழ்த்தியது இந்தியா </b><br />
ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<br />
<br />
போர்ட்ஆப்ஸ்பெயினில் நேற்றிரவு நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.<br />
<br />
அதிகபட்சமாக சர்வான் 56 ரன்களும், சாமுவேல்ஸ் 55 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.<br />
<br />
பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களும், பிரண்வீன் குமார், முனாப் பட்டேல், ரெய்னா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.<br />
<br />
215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<br />
<br />
தொடக்க வீரர்கள் பாட்டீல் (13), தவான் ( 51) ரன்னில் வெளியேறினர். வீரட் கோலி 2 ரன்னிலும், பத்ரிநாத் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.<br />
<br />
ரோகித் சர்மா - ரெய்னா இணை அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. அணியின் எண்ணிக்கை 184 ஆக இருந்தபோது ரெய்னா 43 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.<br />
<br />
இதைத் தொடர்ந்து வந்த யூசுப் பத்தான் 10 ரன்னில் வெளியேற இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் ரோகித்துடன் இணை சேர்ந்த ஹர்பஜன் சிங் இந்தியாவின் வெற்றிக்கு உதவினர்.<br />
<br />
44.5 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 68 ரன்னிலும், ஹர்பஜன் சிங் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.<br />
<br />
பந்துவீச்சில் ராம்பால், மார்டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். தேவேந்திரா பிஷூ 1 விக்கெட்டை கைப்பற்றினார்.<br />
<br />
68 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />
<br />
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<img alt="T_500_573.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ce29f84bee70&attid=0.1&disp=emb&realattid=ii_1306ce139aac3c7e&zw" title="T_500_573.jpg" /><br />
<br />
<br />
<b style="color: #009900;">* அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோவில்</b><br />
மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்<br />
உற்சவர் : மாயக் கூத்தர்<br />
அம்மன்/தாயார் : அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : பெருங்குளத்தீர்த்தம்<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : திருக்குளந்தை<br />
ஊர் : பெருங்குளம்<br />
மாவட்டம் : தூத்துக்குடி<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
பாடியவர்கள்:<br />
<br />
<br />
மங்களாசாஸனம்<br />
<br />
நம்மாழ்வார்<br />
<br />
<b>கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்<br />
பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன்<br />
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்<br />
ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.</b><br />
-நம்மாழ்வார்<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம்.<br />
<br />
இத்தலத்தில் வேங்கட வாணன் பெருமாள் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டல நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்<br />
<br />
தலபெருமை:<br />
<br />
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி<br />
<br />
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்<br />
<br />
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)<br />
<br />
3. செவ்வாய் : திருக்கோளுர்<br />
<br />
4. புதன் : திருப்புளியங்குடி<br />
<br />
5. குரு : ஆழ்வார்திருநகரி<br />
<br />
6. சுக்ரன் : தென்திருப்பேரை<br />
<br />
7. சனி : பெருங்குளம்<br />
<br />
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலவில்லிமங்கலம்)<br />
<br />
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி<br />
<br />
<br />
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.<br />
<br />
இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில திரும்பிவிடலாம்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
வைகுண்ட ஏகாதசி<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் சிந்தனை மலர் </b>:<br />
<br />
<b style="color: #009900;">எப்பொழுதும் நேர்மையாயிரு - அன்னை</b><br />
<br />
பாதையில் முன்னேற இது இன்றியமையாதது!<br />
<br />
இந்தப் பாதையில் நடப்பதற்கு உனக்கு எதற்கும் தயங்காத அஞ்சாமை வேண்டும். அற்பமான, இழிவான, பலவீனமான, அருவருப்பான இயக்கமாகிய அச்சத்துடன் ஒருபோதும் உன்னைப் பற்றியே எண்ணக் கூடாது.<br />
<br />
அசைக்க முடியாத துணிச்சல், பூரணமான நேர்மை வேண்டும், கணக்குப் பார்க்காது அல்லது பேரம் பேசாது தன்னை முழுவதுமாகக் கொடுக்க வேண்டும், ஒன்றைப் பெறும் நோக்கத்துடன் கொடுக்கக்கூடாது, பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் உன்னை அர்ப்பணிக்கக் கூடாது, உன்னுடைய நம்பிக்கைக்கு நிரூபணம் தேவைப்படக்கூடாது - பாதையில் முன்னேற இது இன்றியமையாதது - இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலுமிருந்தும் பாதூக்க முடியும்.<br />
<br />
எப்பொழுதும் நேர்மையாயிரு!<br />
<br />
நேர்மையாயிரு,<br />
எப்பொழுதும் நேர்மையாயிரு,<br />
மேன்மேலும் நேர்மையாயிரு.<br />
<br />
நேர்மையாயிருப்பதென்றால்<br />
சிந்தனைகளில்,<br />
மனவெழுச்சிகளில்,<br />
புலுனுணர்ச்சிகளில்,<br />
செயல்களில்<br />
தனது ஜீவனின் மைய உண்மையைத் தவிர வேறு எதையும் வெளியிடாதிருத்தலாகும்.<br />
<br />
<b style="color: #009900;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா</b> - போர் தொடுத்தல் மற்றும் அமைதி உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுதல் யாருடைய பணி ?<br />
<b><br />
விடை </b>- ஜனாதிபதி.<br />
<br />
<b style="color: #009900;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>கொஞ்சம் தண்ணீர்... கொஞ்சம் சாப்பாடு...<br />
<br />
<img alt="large_253933.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1306ce29f84bee70&attid=0.2&disp=emb&realattid=ii_1306cde688cd05ba&zw" title="large_253933.jpg" /></b><br />
சென்னை : சென்னை, எக்மோர் ரயில் நிலைய வெளிவாசலில் நெருங்கவே முடியாத அளவிற்கு நெடி வீசிய சகதி கிடங்கில் ஒரு உருவம் அனத்தியபடி நெளிந்தது.<br />
<br />
அது ஏதோ ஓரு இரண்டு கால்,நான்கு கால் பிராணி அல்ல உயிரும்,உணர்வும் கொண்ட ஒரு மனிதன்வயது 70ற்கு மேல் இருக்கும். இதற்கு மேல் ஒல்லியாக முடியாத என்ற உடல் வாகு. கண்ணில்மட்டுமே உயிர் தேங்கி நின்றது.<br />
பார்த்த உடனேயே யாருக்கும் பரிதாபம் வரக்கூடிய தோற்றம் ஆனால் யாருக்குமே பரிதாபம் வரவில்லையா அல்லது நின்று பார்க்க,என்னாச்சு என்று கேட்க நேரமில்லையா தெரியவில்லை.ஆளாளுக்கு மூக்கை பிடித்துக்கொண்டு பறந்தனர், ஒரே ஒருவர் மட்டும் நெருங்கிவந்தார்.ஆகா... ஒரு மனித நேயம் உள்ளவர் வந்துவிட்டார் என்று நினைத்த போது இந்த வயதானவரின் காலைபிடித்து இழுத்து சென்று கொஞ்ச தூரத்தில் கொண்டு போய் குப்பையை போடுவது போல போட்டுவிட்டு வந்தார். கேட்டபோது, அவர் ரோட்டோர பழக்கடை போடும் இடம் அதுவாம்.<br />
<br />
இருந்த நிழலும்,நிலையும் போய் தன்னை இன்னும் சுருக்கிக்கொண்டு கிடந்த அந்த வயோதிகரின் நிலையை பொறுக்கமுடியாமல் 108 க்கு போன்செய்தபோது விபத்தில் அடிபட்டால் மட்டும் சொல்லுங்கள் "கிழே கிடப்பதை' எல்லாம் எடுத்துச் செல்ல வரமுடியாது என்று சொல்லிவிட்டனர்.தொடர்ந்து பல இடங்களுக்கு போன் போட்டபோதும் முறையான பதில் இல்லை. கடைசியில் காவல் நிலையம் சார்பில் வந்து பார்த்துவிட்டு இதில் நாங்கள் செய்வதற்கு ஏதும் இல்லை என்று கூறியவர்கள் ஒரு லுங்கி மட்டும் உபயமாக வழங்கிவிட்டு சென்றனர்.<br />
<br />
பிறகு அக்கம்,பக்கம் உள்ளவர்களை அழைத்து அவரிடம் பேச்சு கொடுத்த போது பேச்சு வரவில்லை. கொஞ்சம் பிஸ்கெட்டும், தண்ணீரும் கொடுத்ததும்,பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து ஆசையுடன் சாப்பிட்டார்.இவரது தேவை உணவுதான் என்பது தெரிந்ததும் இன்னும் கொஞ்சம்பிஸ்கெட்டும், தண்ணீரும் வழங்கப்பட்டது. பெரியவர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.அவரது பேச்சு யாருக்கும் புரியவில்லை.இவரை சுமையாக கருதியவர்கள் யாரோ இப்படி மனிதாபிமானமில்லாமல் ரோட்டில் வீசிச்சென்று உள்ளனர் என்பது மட்டும் புரிந்ததுபின்னிரவில் போகும் போதும் ஒரு பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து சாப்பிட்டபடி ரோட்டோரமாய் பெரியவர் சாய்ந்து கிடந்தார்.<br />
<br />
<br />
<br />
நன்றி - கூகிள் செய்திகள், தின மணி, தின மலர்.</div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-68924150361513973682011-05-31T07:41:00.000+05:302011-05-31T07:41:33.238+05:30இன்றைய செய்திகள் - மே, 31 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #cc33cc;">முக்கியச் செய்தி </b>:<br />
<br />
<b>தருமபுரி: நகராட்சித் தலைவரே எழுப்பிய தீண்டாமைச் சுவர்!</b><br />
<br />
தருமபுரி: தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி செல்லும் பாதையை ஆக்கிரமித்து தருமபுரி நகராட்சி தலைவர் ஆனந்த குமார் ராஜா தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.<br />
<br />
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த இருளர் இன மக்கள் கடந்த 1981 ம் ஆண்டு ஆந்திராவுக்கு கல் உடைக்க சென்றனர். கொத்தடிமையாக இருந்த அவர்களை<br />
<br />
தருமபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சியில் இருளர் கொத்தடிமை காலனி உருவாக்கப்பட்டு 400 க்கும் மேற்படட மக்கள் தொகுப்பு வீடு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் பெற்று வசித்து வருகின்றனர்.<br />
<br />
ஓசூரிலிருந்து அதியான் கோட்டைக்கு செல்லும் சாலையில் அமலா என்ற பள்ளி உள்ளது. அமலா பள்ளியை ஒட்டியே அரசு புறம்போக்கு சாலை ஒன்று உள்ளது.<br />
<br />
இச் சாலை, இருளர் கொத்த டிமை காலனிக்கும் இக் காலனியை தாண்டி தடங்கம் இருளர் காலனிக்கும் செல்லும் வழியாகும். இவ்வழியை கடந்த மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர்.<br />
<br />
அமலாபள்ளி அருகில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி நகராட்சி தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜாவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் உள்ளது. <br />
<br />
இருளர் கொத்தடிமை காலனி மக்களும் தடங்கம் இருளர் காலனி மக்களும் பயன்படுத்திவந்த பாதையை டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா ஆக்கிரமித்தாக கூறப்படுகின்றது.<br />
<br />
மேலும் சாலையின் நடுவே நடக்க முடியாதபடி குழியை வெட்டியும், பாதையின் குருக்கே கல்லை நட்டும், கொத்தடிமை காலனியை சுற்றி தீண்டாமைச் சுவர் எழுப்பியும் உள்ளார்.<br />
<br />
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மட்டும் கொறட்டை விட்டு தூங்கி வழிகின்றது.<br />
<br />
இதனைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மே 30 ம் தேதி இன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘காதில் பூ சுற்றும்’ ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.<br />
<br />
<br />
<b>* சமூக சேவகி இலா பட்டுக்கு ஹார்வர்ட் விருது</b><br />
<br />
<img alt="30-ela-bhatt-300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.2&disp=emb&realattid=ii_130439f8af5a9d30&zw" title="30-ela-bhatt-300.jpg" /><br />
<br />
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்காக அகமதாபாத்தில் “சேவா” என்ற அமைப்பை நடத்திவரும் சமூக சேவகர் இலா பட்டிற்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ராட்கிளிஃப் இன்டிடியூட் நிறுவனம் பதக்கம் வழங்கி சிறப்பித்துள்ளது.<br />
<br />
இலாபட்டின் வாழ்க்கையும் பணியும் சமூக முன்னேற்றத்தை குறித்து இருப்பதாக தெரிவித்துள்ள அந்த இன்ஸ்டிடியூட் அதற்காக இந்த கவுரத்தை அளித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற இலா பட் “ எப்பொழுது பெண்களால் சொந்தமாக வருமானம் ஈட்ட முடிகிறதோ அப்பொழுதுதான் அவர்களால் சுயமாக போராடி வெற்றி பெறமுடியும்” என்று கூறினார்.<br />
<br />
பெண்களுக்காக போராட்டம்<br />
<br />
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்த இலா பட், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை அளிக்கும், “சேவா’ என்ற அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார். சாலையோர வியாபாரிகள் பலர் இந்த அமைப்பின் மூலம் பலன் பெற்று வருகின்றனர்.<br />
<br />
அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிலில் பயிற்சி அளித்து சுயவேலை வாய்ப்பு அளித்து வருகிறார் இலா. கடந்த 1973ல் அகமதாபாத்தில் ஜவுளி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை என்பதற்காக, தலையில் துணிகளை சுமந்து சாக்கடையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்.<br />
<br />
கடந்த 1976ம் ஆண்டு குஜராத் அரசு விவசாய கூலிகளுக்கு குறைந்த பட்ச கூலியை நிர்ணயித்தது. இந்த கூலி, விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பதை கிராமம் கிராமமாக சென்று பார்வையிட்டு அரசு நிர்ணயித்த கூலியை விட குறைவாக கொடுத்த பண்ணையாளர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்.<br />
<br />
பெண்களுக்கான தொழிற்சங்கம்<br />
<br />
“சேவா’ அமைப்பின் சார்பில் 1974ம் ஆண்டு, “சேவா வங்கி’யை ஆரம்பித்து இலா சாதனை படைத்தார். தற்போது இந்த வங்கி, 12 கோடி ரூபாய் மூலதனத்துடன் சிறப்பாக இயங்கி வருகிறது. சட்டம் பயின்ற இலா பட் அகமதாபாத் ஜவுளி ஆலைகளின் தொழிற்சங்கம் சார்பில், பல வழக்குகளில் ஆஜரானவர்.<br />
<br />
இந்த ஆலைகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்காக தனி தொழிற் சங்கத்தை துவக்கியவர். இவரது முயற்சியால், 1981ம் ஆண்டிலிருந்து அகமதாபாத்தில் பெண்களுக்கான தொழிற்சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1979ம் ஆண்டு பெண்களுக்கான உலக வங்கி நிறுவப்பட்டது. இந்த வங்கி நிறுவனர்களில் இலாவும் ஒருவர்.<br />
<br />
பட்டங்களுக்கு கவுரவம்<br />
<br />
பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவர் இலா பட். கிராமப்புற பெண்களுக்கான மேம்பாட்டிற்காகவே அரை நூற்றாண்டுகளாக உழைத்து வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு இவரது மகத்தான சேவையை பாராட்டி ஹார்வர்டு பல்கலைக் கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.<br />
<br />
கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் உயரிய, “நிவானோ அமைதி விருது’ வழங்கப்பட்டது. ஆன்மிக வேட்கையுடன், காந்திய சிந்தனையுடன் உழைத்து வருவதற்காக, ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட இந்த விருதை ஜப்பான் வழங்கியது. மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார்.<br />
<br />
<b style="color: #cc33cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* இனி அணுமின் நிலையங்கள் கிடையாது: ஜெர்மனி முடிவு</b><br />
<br />
<img alt="germany.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.4&disp=emb&realattid=ii_130439eee9010afe&zw" title="germany.jpg" /><br />
<br />
பெர்லின், மே 30: இனி அணுமின் நிலையங்கள் அமைப்பதில்லை என ஜெர்மனி முடிவு செய்துள்ளது.<br />
<br />
இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022-க்குள் மூடிவிடவும் அந் நாடு முடிவு எடுத்துள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் இத்தகைய முடிவு மேற்கொண்ட முதல் நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இப் பிரச்னை தொடர்பான கூட்டம் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் தலைமையில் 7 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது.<br />
<br />
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மெர்கெல் கூறியதாவது: எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார்.<br />
<br />
இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் கூறியதாவது: இந்த முடிவு இறுதியானது. மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021-லும், 3 அதிநவீன அணுமின் நிலையங்கள் 2022-லும் மூடப்படும் என்றார்.<br />
<br />
அணுமின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
செர்னோபில் அணு உலை கதிர்வீச்சால் ஜெர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.<br />
<br />
ஜப்பான் சம்பவம் நடந்ததும், ஜெர்மனியில் 1980-க்கு முன் நிறுவப்பட்ட 7 பழைமையான அணுமின் நிலையங்களின் செயல்பாட்டை 4 நாள்களுக்கு அரசு நிறுத்திவைத்தது. நாட்டின் 40 சதவீத மின் தேவையை இந்த 7 அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.<br />
<br />
<b>* தேடப்படும் குற்றவாளி முஷாரப்: பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு</b><br />
<br />
இஸ்லாமாபாத், மே 30: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.<br />
<br />
முன்னாள் அதிபர் பேனசீர் புட்டோ 2007-ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், விசாரணை அதிகாரிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காததால் அவர் ஒரு பயங்கரவாதி என்றும் நீதிபதி ராணா நிசார் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
பெடரல் புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.<br />
<br />
பேனசீர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, பாதுகாப்பு காரணங்களுக்காக அடியாலா சிறையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக முஷாரப் தலைமறைவு குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.<br />
<br />
முஷாரப் ஒத்துழைப்பு அளிக்காததால், பேனசீர் புட்டோ கொலைவழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் மீதான வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறவில்லை.<br />
<br />
இந்நிலையில், அல்பின்டி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, பிப்ரவரியில் நீதிபதி அளித்த உத்தரவு நகலை முஷாரபிடம் வழங்க முடியவில்லை. 2009-ம் ஆண்டு முதல் அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அந்நாட்டு அரசும் உதவி செய்ய முன்வராததால் உத்தரவு நகலை அவரிடம் அளிக்க இயலவில்லை என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.<br />
<br />
மேலும், சமீபத்தில் வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் மூலம், இந்த வழக்கு தொடர்பாக அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். <br />
<br />
இதைக்கேட்ட நீதிபதி, முஷாரப் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவும், அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.<br />
<br />
<b>* இலங்கையின் போர்க்குற்றம் விடியோவில் நிரூபணம்</b><br />
ஜெனிவா, மே 30: பிரிட்டிஷ் தொலைக்காட்சி வெளியிட்ட விடியோவின் மூலம் இலங்கையின் போர்க்குற்றம் நிரூபணமாகி இருப்பதாக ஐ.நா. மனித உரிமைக் குழு நிபுணர் தெரிவித்துள்ளார்.<br />
<br />
"இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது எடுக்கப்பட்ட விடியோ படம் உண்மையானது. அந்த விடியோ காட்சிகளின் மூலம் அங்கு போர்க்குற்றம் நடைபெற்றிருப்பது நிரூபணமாகி உள்ளது' என்று ஐ.நா. மனித உரிமைக் குழுவின் விசாரணை அதிகாரி கிறைஸ்ட் ஆப் ஹெய்ன் தெரிவித்துள்ளார்.<br />
<br />
தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணரான அவர், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தார்.<br />
<br />
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசிக் கட்ட போரின்போது ஏராளமானோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
பிரிட்டிஷ் தனியார் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட விடியோவில், கைகள் பின்னால் கட்டப்பட்ட இளைஞர்களை, ராணுவ வீரர்கள் பின்புறமாக தலையில் சுட்டு வீழ்த்தும் காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்<br />
<br />
கின்றன.<br />
<br />
ஆடையில்லாமல் இளைஞர்களும், இளம்பெண்களும் ஓட ஓட விரட்டப்பட்டு சுடப்படும் காட்சிகளும் விடியோவில் இடம் பெற்றுள்ளன. அந்த விடியோ படம் உண்மையானதுதான் என்று கிறைஸ்ட் ஆப் ஹெய்ன் தெரிவித்துள்ளார். 2009 மே மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோ படம் போலியானது என்று இலங்கை அரசு கூறி வந்தது.<br />
<br />
ஆனால், அது உண்மையானது என்று ஐ.நா. மனித உரிமைக் குழு நிபுணர் ஆணித்தரமாக கூறியிருப்பது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
ஐ.நா. நிபுணரின் குற்றச்சாட்டை இலங்கை அரசு அவசர அவசரமாக மறுத்திருக்கிறது.<br />
<br />
அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஊடக மைய இயக்குநர் லஷ்மண் ஹூலுகாலா கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.நா. நிபுணரின் கூற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள<br />
<br />
முடியாது.<br />
<br />
விடியோ படம் போலியானது என்பதை நிரூபிக்கத் தயாராக உள்ளோம் என்றார்.<br />
<br />
<b>* ஏமனில் அரசு எதிர்ப்பாளர்கள் படுகொலை</b><br />
<br />
சானா,மே 30: ஏமன் நாட்டில் டாயீஸ் நகரில் மன்னர் அலி அப்துல்லா சாலே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுதந்திரச் சதுக்கத்தில் முகாமிட்டிருந்தவர்களை ராணுவம் மிக மூர்க்கமாகத் தாக்கியது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். திங்கள்கிழமை இச் சம்பவம் நடந்தது.<br />
<br />
அரசு எதிர்ப்பாளர்கள் இருந்த இடம் நோக்கி ஏராளமான டாங்குகளும் கவச வாகனங்களும் வெகு வேகமாகச் சென்றன. ராணுவ வீரர்கள் தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர்.<br />
<br />
அரசு எதிர்ப்பாளர்கள் அந்தச் சதுக்கத்துக்கு அருகில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். அவற்றுக்குத் தீ வைத்த ராணுவத்தினர் அவற்றை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கினர். அந்த இடத்தில் ராணுவத்தினரின் முந்தைய தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர்களை தெருவில் தரதரவென்று இழுத்துச் சென்றனர். அரசு எதிர்ப்பாளர்கள் ஒருவரையும் விட்டுவைக்காமல் அடித்து உதைத்து ஓடவிட்டனர்.<br />
<br />
அருகில் இருந்த ஹோட்டலில் புகுந்து அங்கே வெளியே நின்று கொண்டிருந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரையும் அடித்து விரட்டினர். ஹோட்டலை துவம்சம் செய்தனர்.<br />
<br />
அரசு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இதுதான் மிகவும் மூர்க்கமானது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.<br />
<br />
தேசிய மனித உரிமை ஆணைய<br />
<br />
செயலராக ராஜீவ் சர்மா நியமனம்<br />
<br />
புதுதில்லி, மே 30: தேசிய மனித உரிமை ஆணைய செகரட்டரி ஜெனரலாக ராஜீவ் சர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.<br />
<br />
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் சர்மா 1976-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில பிரிவில் இருந்து ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். தேசிய மனித உரிமை ஆணைய செயலர் பதவிக்கு நியமிக்கப்படும் முன் இவர் ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகவும், தில்லியில் முதன்மை ஆணையராகவும் (ரெசிடென்டல்)பணியாற்றினார்.<br />
<br />
*<b> நேபாள தலைவர்களிடையே ஒருமித்தக் கருத்து: ஐ.நா. வரவேற்பு</b><br />
நியூயார்க், மே 30: நேபாள அரசியல் நிர்ணய சபையின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசியல் தலைவர்களிடையே ஒருமித்தக் கருத்து ஏற்பட்டதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.<br />
<br />
மேலும் ஆயுதங்களை கீழே போட்டு அமைதி வழிக்குத் திரும்பியுள்ள மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த நேபாள அரசியல் தலைவர்கள் உறுதியுடன் உள்ளதையும் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.<br />
<br />
நேபாளத்தில் அமைதி, மறுவாழ்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை முடிந்த அளவுக்கு விரைவில் வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.<br />
<br />
நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. ஆனால் அப்பணியை மேற்கொண்டிருக்கும் அரசியல் நிர்ணய சபையின் காலம் மே 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது.<br />
<br />
இதையடுத்து அரசியல் நிர்ணய சபையின் காலத்தை மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்மாண்டுவில் ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தனர்.<br />
<br />
கூட்டத்தில் கலந்து கொண்ட 508 உறுப்பினர்களில் 504 பேர் அரசியல் நிர்ணய சபையின் காலத்தை நீட்டிப்பது தொடர்பான மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.<br />
<br />
<b style="color: #cc33cc;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* 2ஜி: நாடாளுமன்ற குழு முன் சிஏஜி வினோத் ராய் ஆஜர்-ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு குறித்து விளக்கம்</b><br />
<br />
<img alt="30-vinod-rai300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.7&disp=emb&realattid=ii_1304396d17766d63&zw" title="30-vinod-rai300.jpg" /><br />
<br />
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி வினோத் ராய் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.<br />
<br />
இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.<br />
<br />
இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.<br />
<br />
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.<br />
<br />
இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.<br />
<br />
இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.<br />
<br />
இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.<br />
<br />
அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.<br />
<br />
1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.<br />
<br />
முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.<br />
<br />
<b>* வரி ஏய்ப்பு தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரிக்க சிறப்புப் பிரிவு</b><br />
<br />
புது தில்லி, மே 30: வரி ஏய்ப்பு தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரிக்க வருமான வரித் துறை இயக்குநரகம் (குற்றப் புலனாய்வு) என்ற சிறப்புப் பிரிவை மத்திய அரசு அமைத்துள்ளது.<br />
<br />
இதற்கான அறிவிப்பை நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.<br />
<br />
போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், ஹவாலாவில் ஈடுபடுதல், மற்ற நாடுகளில் அதிக விலைக்குப் போகும் பொருள்களை சட்ட விரோதமாக கடத்திச் சென்று விற்று பணம் சம்பாதிப்பது, இவ்வாறு பல்வேறு விதங்களில் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து பயங்கரவாதச் செயல்களுக்கு அதைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் பற்றியும், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் இந்த சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்ளும்.<br />
<br />
இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கும் நிதியின் ஆதாரம் குறித்தும், நிதியை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியது குறித்தும் விவரங்களை இந்த சிறப்புப் பிரிவு சேகரிக்கும். நேரடி வரி சட்டங்களின் கீழ் தகுந்த நீதிமன்றங்களில் இந்த சிறப்புப் பிரிவு வழக்கு தொடரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.<br />
<br />
"பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுவதைத் தடுக்கவும், பல்வேறு நாடுகளில் நிலவும் வரி விதிப்பு சலுகைகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. இருப்பினும், இந்த சிறப்புப் பிரிவுக்கு உரிய அதிகாரங்கள் கொடுத்தால்தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்' என டிலாய்ட் ஹாஸ்கின்ஸ் & செல்ஸ் என்ற வரி மற்றும் தணிக்கை நிறுவன அதிகாரி லட்சுமிநாராயண் தெரிவித்தார்.<br />
<br />
<b>* ஊழல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை-லோக்பால் குழு இன்று விவாதம்<br />
<br />
<img alt="30-anna-300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.5&disp=emb&realattid=ii_130439b9d5c9d74a&zw" title="30-anna-300.jpg" /></b><br />
டெல்லி: ஊழலைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கி வரும் லோக்பால் மசோதாவின் 5வது கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடக்கவுள்ளது.<br />
<br />
மேலும் லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கும், அன்னா ஹசாரே தலைமையிலான இந்தக் குழுவினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.<br />
<br />
ஊழலில் திளைக்கும் அதிகாரிகளைக் கைது செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று லோக்பால் குழு தனது சட்டத்தில் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இது மிக அதிகமான தண்டனை என்றும், பொது மக்களில் ஒரு பகுதியான அதிகாரிகளுக்கு மட்டும் கடுமையான தண்டனை வழங்குவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.<br />
<br />
லோக்பால் குழுவில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சரான சாந்தி பூஷண், மத்திய அரசின் இந்தக் கருத்தை எதிர்த்து வருகிறார். அதிகாரிகள் ஊழல் செய்வதைத் தடுக்க மிக மிக கடுமையான தண்டனை அவசியம் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.<br />
<br />
மேலும் லோக்பால் குழுவில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும், ஊழல் அதிகாரிகளை விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு வேண்டும் என்றும் இந்தக் குழு கோருகிறது. இதை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது.<br />
<br />
பேருக்கு மட்டும் குழுவை அமைத்துவிட்டு, அதற்கு உரிய அதிகாரங்களைத் தராமல் காலத்தை கடத்த மத்திய அரசு நினைப்பதாகத் தெரிகிறது. இதை ஹசாரே ஏற்க மறுத்து வருகிறார்.<br />
<br />
மேலும் ஊழலில் சிக்கினால் பிரதமரையே கூட விசாரிக்கும் அதிகாரமும் இந்தக் குழுவுக்கு வேண்டும் என்று லோக்பால் குழு கோருவதையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.<br />
<br />
இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கலைவது குறித்து மத்திய அரசின் சார்பில் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகிய அமைச்சர்களுடன் லோக்பால் குழுவினர் இன்று விவாதிக்கவுள்ளனர்.<br />
<br />
அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.<br />
<br />
அதே போல லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளதால் மத்திய அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.<br />
<br />
இந்த லோக்பால் குழுவில் மேலே குறிப்பிட்ட அமைச்சர்கள், அன்னா ஹசாரே ஆகியோர் தவிர கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி பல ஊழல்களை அம்பலப்படுத்திய அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.<br />
<br />
முன்னதாக இந்தக் குழுவுக்கு அரசியல்வாதிகள் ஒரு சவால் விட்டனர். இதில் உள்ளவர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்களா என்று கேள்வி கேட்டனர். இதையடுத்து 24 மணி நேரத்தில் சொத்து விவரங்களை வெளியிட்டனர் இக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்<br />
<br />
<img alt="30-joseph-lakshmi-gopakumar300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.3&disp=emb&realattid=ii_130439ae8f05fc50&zw" title="30-joseph-lakshmi-gopakumar300.jpg" /></b><br />
திருவனந்தபுரம்: விமானத்தில் பின் இருக்கையில் அமர்ந்தபடி தனக்கு முன்பு அமர்ந்திருந்த மலையாள டிவி நடிகை லட்சுமி கோபக்குமாரிடம் கைகளால் செக்ஸ் சில்மிஷம் புரிந்ததாக சர்ச்சைக்குள்ளாகி, அமைச்சர் பதவியை இழந்து பின்னர் விடுதலையான கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் மீண்டும் ஒரு செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.<br />
<br />
இந்த முறை இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.<br />
<br />
கடந்த இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின்போது அச்சுதானந்தன் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோசப். இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு சென்னையிலிருந்து கொச்சிக்கு சென்ற தனியார் விமானத்தில் பயணித்த ஜோசப், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமி கோபக்குமார் என்ற டிவி நடிகையிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.<br />
<br />
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லட்சுமி கோபக்குமார். இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைத் தொடர்ந்து அமைச்சர் பதவியைப் பறி கொடுத்தார் ஜோசப்.<br />
<br />
இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது ஆலந்தூர் கோர்ட். இதையடுத்து அவர் மீண்டும் அமைச்சரானார்.<br />
<br />
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு முன்பாக தனது கேரள காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு கேரள காங்கிரஸ் மணி பிரிவில் போய் சேர்ந்து கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
இந்த நிலையில் தொடுபுழா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஜோசப் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அசிங்கமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.<br />
<br />
ஜோசப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள், தொடுபுழா பி.எஸ்என்எல் அதிகாரி ஆகியோரையும் அவர் சேர்த்துள்ளார்.<br />
<br />
இந்த வழக்கைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஜூன் 4ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.<br />
<br />
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ஜோசப், தற்போது காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் மாட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
<b>* பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது</b><br />
<br />
புதுதில்லி, மே 30: பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஐஓசி (இந்தியன் ஆயில் கார்பரேஷன்) தலைவர் ஆர்.எஸ். புடோலா தெரிவித்தார்.<br />
<br />
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வீதம் உயர்த்தி கடந்த மே 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விலை உயர்வு போதாது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு குறைவானதே. பெட்ரோல் விலையில் ரூ.5 உயர்த்திய பிறகும் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு லிட்டருக்கு ரூ.4.58 நஷ்டம் ஏற்படுகிறது.<br />
<br />
எனவே பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் இந்த உயர்வு இருக்கும் என்றார் அவர்.<br />
<br />
<br />
<b style="color: #cc33cc;">மாநிலச் செய்திகள் :</b><br />
<br />
<b>* ஜூன் 15-க்குள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள்<br />
</b><br />
ஆ.ரகுராமன்<br />
<br />
சென்னை, மே 30: தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தின் கீழ் 6.4 கோடி புத்தகங்களை அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை ஜூன் 15-ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் புத்தகங்கள் முதலில் அச்சிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பத்தாம் வகுப்புவரை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருந்தது. இதற்காக ரூ.216 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. ஆனால், இந்தப் பாடத்திட்டம் கல்வித் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பழையப் பாடத்திட்டத்தின்படி, புதிதாக 6.4 கோடி புத்தகங்களை அச்சிடுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.<br />
<br />
இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட தொகையில் மிகவும் குறைவான தொகையில், புத்தகத்தை அச்சடித்துத் தரும் ஒப்பந்தத் தொகையாக அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.<br />
<br />
இந்த ஒப்பந்தத் தொகை, பாடப்புத்தகங்களுக்கு ஏற்கெனவே நிர்ணயம் செய்த தொகையைவிட சற்று அதிகம் என்று கூறப்படுகிறது. குறைந்த காலத்தில் புத்தகம் அச்சடிப்பது, பள்ளிகளுக்கே நேரடி விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தத் தொகைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.<br />
<br />
நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள்:<br />
<br />
புத்தகங்களை அச்சிட்டுத் தருவதற்கு 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் போடப்பட்டது. புத்தகங்களை அச்சிட்டு வழங்க நூற்றுக்கும் அதிகமான பதிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுடன் ஓரிரு நாளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
இந்தப் பணிகள் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:<br />
<br />
பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புதிதாகப் புத்தகங்களை அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால், அவர்களுக்கான 60 லட்சம் புத்தகங்களை முதலில் அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களிடம் முதலில் பத்தாம் வகுப்பு புத்தகங்களை அச்சிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அவர்களுக்கான புத்தகங்கள் தயாராகிவிடும்.<br />
<br />
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களில் நிறைய வண்ணப் பக்கங்கள் உள்ளன. இந்தப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க பெரிய பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் பல பெரிய பதிப்பாளர்களும் புத்தகங்களை அச்சிட்டுத் தருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
அதேபோல் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை அச்சிடுவதற்கு சிவகாசியில் உள்ள பதிப்பாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளோம். இந்த முறை பதிப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் குறைந்த காலத்தில் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்படும். இந்தக் கல்வியாண்டுக்குத் தேவையான 6.4 கோடி புத்தகங்களை 15 நாள்களுக்குள் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஆனால், இந்தப் பணிகள் முடிய குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் ஆகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.<br />
<br />
பள்ளிகளுக்கே நேரடியாகப் புத்தகங்கள்: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஒவ்வொரு மண்டலத்திலும் மாவட்ட முதன்மை அதிகாரி அளவிலான அதிகாரி கண்காணிக்க உள்ளார். அவரது கண்காணிப்பின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணி ஒவ்வொரு தொகுப்பாக முடிந்த பிறகு, அந்தப் புத்தகங்களை பதிப்பாளர்களே நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகிப்பர். இதற்காகப் பள்ளிகளில் கான்கிரீட் தளமுள்ள அறையைத் தயாராக வைத்திருக்குமாறு பள்ளிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.<br />
<br />
<b>* இனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்!</b><br />
மதுரை: ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.<br />
<br />
இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது. இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.<br />
<br />
இந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு வைகோவிற்கு ஐரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால்மர்பி அழைப்பு விடுத்துள்ளார்.<br />
<br />
ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து இந்தக் கூட்டம் முடிவெடுக்க உள்ளது.<br />
<br />
இதில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றார் வைகோ என்று கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<br />
<b>* கனிமொழி-சரத் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு</b><br />
<br />
டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது.<br />
<br />
இந் நிலையில் இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது.<br />
<br />
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை இன்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.<br />
<br />
இந்த ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரும் சிறையில் இருந்து வருகிறார்கள். <br />
<br />
இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் கனிமொழி. அதில், தனக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தை உள்ளது. கணவர் வேலை விஷயமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். எனவே அதைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் கனிமொழி. கனிமொழி சார்பில் வக்கீல்கள் வி.ஜி.பிரகாசம், அரிஸ்டாட்டில், சுதர்சன் ராஜன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.<br />
<br />
இந்த மனு கடந்த 24ம் தேதி நீதிபதி அஜீத் பரிகோக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரிகோக், 30ம் தேதியன்று சிபிஐ இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.<br />
<br />
மேலும் இந்த வழக்கின் நிலவர அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும், வழக்கு விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதையு்ம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.<br />
<br />
இந் நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார் ராஜாத்தி அம்மாள்.<br />
<br />
மேலும் கனிமொழியின் கணவர் அரவிந்தன், அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில திமுக பிரமுகர்களும் நீதிமன்றம் வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார்.<br />
<br />
நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார். இதில் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரியவில்லை.<br />
<br />
இதேபோல கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு மீதும் இன்று விசாரணை நடந்தது. இதையடுத்து அதன் மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.<br />
<br />
டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்ததால் ஹைகோர்ட் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.<br />
<br />
கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு:<br />
<br />
இந் நிலையில் இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க பாட்டிலாயா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.<br />
<br />
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்க உதவியதாகவும் அதற்காக ரூ. 6 கோடியைப் பெற்றார் என்றும் கரீம் மொரானி மீது சிபிஐ குற்றம் சாட்டியது.<br />
<br />
இதையடு்த்து தனக்கு ஜாமீன் கோரி அவர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.<br />
<br />
இந்தப் பணத்தை பெற்றதாகத் தான் கனிமொழியையும் சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது.<br />
<br />
<b>* அக்னி நட்சத்திரத்திற்கு விடை கொடுத்த சாரல்!<br />
<br />
<img alt="30-rain-drop2300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.6&disp=emb&realattid=ii_13043962cc4c9bf4&zw" title="30-rain-drop2300.jpg" /><br />
</b><br />
குற்றாலம்: மக்களை கடுமையாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரத்திற்கு சாரல் மழை விடை கொடுத்து அனுப்பியது.<br />
<br />
தமிழகத்தில் கடந்த 1 மாதமாக அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கொளுத்திய கோடை வெயிலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் மக்கள் கோடையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தென்காசி வட்டாரப் பகுதி குற்றாலத்திலிருந்து மேக்கரை வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பலத்த காற்றும், அதிகாலை முதல் சாரல் மழையும் தூவியது.<br />
<br />
மாலை 5 மணிக்கு செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதியில் திடீர் மேகக் கூட்டங்கள் உருவாகி அக்னி நட்சத்திரத்திற்கு விடை கொடுக்கும் வண்ணம் சாரல் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அதற்கு முன்னாதகவே பருவமழை தொடங்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.<br />
<br />
தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை<br />
<br />
தென் மேற்குப் பருவ மழை முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.<br />
<br />
மயிலாடுதுறை, இழுப்பூர், ஆத்தூர், வால்பாறை, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் 20 மில்லி மீட்டர் மழையும், கீரனூர், தேவலா, குந்தா பாலம் ஆகிய பகுதிகளில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.<br />
<br />
<b>* அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் சிக்கியது</b><br />
சென்னை: சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.<br />
<br />
முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.<br />
<br />
அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.<br />
<br />
சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரியம் பிச்சை பபயணித்த கார் டிரைவர் ஆனந்த்தை துருவித் துருவி விசாரித்தனர். அதேசமயம், விபத்துக்குக்காரணமான லாரியைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.<br />
<br />
அந்த லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.<br />
<br />
இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.<br />
<br />
அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.<br />
<br />
இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.<br />
<br />
விரைவில் இந்த வழக்கில் மேலும் பல திருப்புமுனைத் தகவல்கள் வெளியாகலாம் என்று பேசப்படுகிறது.<br />
<br />
நான்கு பேர் கோர்ட்டில் வாக்குமூலம்:<br />
<br />
இந்த நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், சீனிவாசன், சரவணன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார், அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் சட்ட விதி 164ன் கீழ் நான்கு பேரும் தனித் தனியாக ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.<br />
<br />
* <b>செவிகளை குளிர வைத்த பன்னிறு திருமுறைகள்</b><br />
மதுரை: மதுரையில் 100 ஓதுவார்கள் பங்கேற்று பாடிய திருமுறைத் தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கான இசை ரசிகர்கள் கேட்டு ரசித்தனர்.<br />
<br />
தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம், தமிமிழிசைப் பாடல்களுக்குத் தரப்படுவதில்லை என்பது நீண்ட நாட்களாகவே ஒரு மனக்குறையாக உள்ளது. இதனைப் போக்கும் வகையிலும் தமிழிசைப் பாடல்கள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1999ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தமிழிசை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் அறுபத்து மூவரில் சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெருமையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விழா ஓதுவா மூர்த்தி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகள் சீர்காழியில் விழா நடத்தப்பட்ட பிறகு மதுரையில் 7-வது ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9-வது ஆண்டு விழா மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள நால்வர் சன்னதியில் இந்த விழா நடை பெற்றது.<br />
<br />
63 நாயன்மார்களுக்கு சிறப்பு<br />
<br />
பன்னிரு திருமுறை பாடல்கள் பாடிய நாயன்மார்களை வணங்கி தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடுவது இந்த விழாவின் சிறப்பம்சம். சனிக்கிழமை காலை விழா தொடக்கமாக திருக்கோயிலில் உள்ள 63 நாயன்மார் திருவுருவங்களுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலையில் நால்வர் சன்னதியில் ஓதுவார்கள் தமிழிசை பாடத் தொடங்கினர். தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று கேட்பவர்களின் செவிகள் குளிர தேவரம், திருவாசம் பாடி மகிழ்வித்தனர்.<br />
<br />
ஞாயிற்றுக்கிழமை காலையில் நால்வர் சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் நாயன்மார் திருவுருவங்களுக்கு திருமஞ்சனம் பொருத்தி தமிழிசைப் பாடல்களால் அர்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்தர், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்தர், திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கினர்.<br />
<br />
தங்கச் சப்பர வீதி உலா<br />
<br />
மாலையில் நால்வர் திருவுருவங்கள் மற்றும் 12 திருமுறைப்பாடல்கள் அடங்கிய பெட்டகம் வைக்கபப்பட்ட தங்கச் சப்பர வீதி உலா நடைபெற்றது. விழாவில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரி கோ.ஜெயராமன் முன்னிலை வகித்தார். திருமுறை இசைப் பாடல் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.<br />
<br />
பாடசாலை அமைக்கத் திட்டம்<br />
<br />
பழைமை வாய்ந்த தமிழிசை தொடர்பான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதுமான அளவில் இல்லை. கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழிசைக்கு தரப்படுவதில்லை. எனவே, தமிழிசை பாடசாலை அமைக்க ஓதுவா மூர்த்திகள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. தமிழிசைப் பாடல்கள் அனைத்தையும் இளைஞர்கள் அறிந்து கொள்ளும் விதமாக 5 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஓதுவார் கூட்டமைப்புச் செயலர் பொன் முத்துக்குமரன் தெரிவித்தார்..<br />
<br />
<b>* புகைப் பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் மரணங்கள்-ராமதாஸ்<br />
<br />
<img alt="30-world-no-tobacco-day300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043a140cb6d77e&attid=0.1&disp=emb&realattid=ii_1304395461764b5f&zw" title="30-world-no-tobacco-day300.jpg" /></b><br />
சென்னை: புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.<br />
<br />
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.<br />
<br />
அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு மத்திய நலத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.<br />
<br />
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.<br />
<br />
புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.<br />
<br />
இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.<br />
<br />
<br />
<b style="color: #cc33cc;">ஆரோக்கியச் செய்தி மலர் </b>:<br />
<br />
ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய்-தெய்வாம்சம் நிறைந்த இலுப்பை மரம் <br />
<br />
இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்துப் பேணும் மரபு உண்டு. இந்தவகையில் திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தலமரமாக உள்ளது. திருப்பழமண்ணிப்படிக்கரை தலமரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்பொழுது விளங்குகிறது.<br />
<br />
இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் கொண்டது இலுப்பை மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இந்த மரம் இருபபை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.<br />
<br />
திருவிளக்கெண்ணெய்<br />
<br />
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.<br />
<br />
இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான். முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே இதனை விடச் சிறந்த எண்ணெய் பூலோகத்தில் இல்லையென்றே கூறப்படுகிறது.<br />
<br />
ஐஸ்வர்யங்கள் பெருகும்<br />
<br />
பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும். இதேபோல் இங்கு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும்.<br />
<br />
உடலுக்கு குளிர்ச்சி தரும் அரப்பு<br />
<br />
எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் இலுப்பை பிண்ணாக்கு அரப்பு எனப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். வாரத்தில் ஒரு நாள் அரப்பு வைத்து தலையில் முழுகும் மரபு தமிழர்களிடையே உண்டு. இதனால் குளிர்ச்சியும், அமைதியும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் இன்றைக்கு மனிதனின் ஈமக்கிரியை செய்யும்போது இறந்த உடலுக்கு நீராட்டுவதற்காகவே அரப்பு பயன்படுகிறது.<br />
<br />
மருத்துவப்பயன் கொண்ட இலுப்பை<br />
<br />
இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.<br />
<br />
இலுப்பைப்பூ<br />
<br />
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ. நல்ல சுவை கொண்ட இப்பூவினால் பாம்பு கடித்த விஷம், வாதநோய் குணமடையும். இலுப்பைப்பூவை பாலில் போட்டு காய்ச்சி தினமும் பருகினால் தாது விருத்தி ஏற்படும். தாகம் தணியும்.<br />
<br />
<br />
<b style="color: #cc33cc;">வர்த்தகச் செய்தி மலர் </b>:<br />
<br />
<img alt="30-indian-currency300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043bf3024a35f0&attid=0.2&disp=emb&realattid=ii_13043bd3315990bd&zw" title="30-indian-currency300.jpg" /><br />
<br />
<b>* இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது? - மத்திய அரசு ஆய்வு<br />
</b><br />
டெல்லி: இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை கணக்கிட மூன்று ஆய்வு நிறுவனங்களை அணுகியுள்ளது மத்திய அரசு.<br />
<br />
இதன் மூலம் இன்னும் 16 மாதங்களுக்குள் மொத்த கறுப்பு பணத்தையும் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.<br />
<br />
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது. கறுப்பு பண விவகாரத்தில் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என நீதின்றம் சந்தேகம் எழுப்பியது.<br />
<br />
மேலும், ஊழல் மூலமாக கறுப்பு பணம் குவிக்கப்படுவதால் ஊழல்வாதிகளை தண்டிக்கும் 'லோக்பால் சட்ட மசோதா'வை நிறைவேற்றும் பணியை முடுக்கி விடுமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ், வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.<br />
<br />
உயர்மட்ட கமிட்டி<br />
<br />
நாடு முழுவதும் கறுப்பு பணத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் அந்த கமிட்டி அளிக்கும்.<br />
<br />
கறுப்பு பணத்தை 'தேசிய சொத்து' என அறிவிக்க வகை செய்யும் சட்ட வரையறையை கொண்டு வரும் யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக யோகா குரு ராம்தேவை மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தனர்.<br />
<br />
16 மாதங்களுக்குள்<br />
<br />
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணம் எவ்வளவு? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வை, மத்திய அரசின் மூன்று உயர்மட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வை, 'அப்ளைடு பொருளாதார ஆய்வு தேசிய கவுன்சில்', 'பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்', 'நிதி மேலாண்மை தேசிய நிறுவனம்' ஆகிய 3 நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இன்னும் 16 மாதங்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.<br />
<br />
தோராய மதிப்பீடு ரூ.70 லட்சம் கோடி<br />
<br />
ஏற்கனவே, கடந்த 1985-ம் ஆண்டிலும் இதுபோல கறுப்பு பணத்தின் அளவு குறித்து 'பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்' ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ரூ.23 லட்சம் கோடி முதல் ரூ.70 லட்சம் கோடி வரை இந்தியர்களின் கறுப்பு பணம் இருப்பதாக நிதி அமைச்சகம் கருதுகிறது.<br />
<br />
கணக்கில் காட்டப்படாமல் உள்ள இத்தகைய பணம் மற்றும் சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது தவிர, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.<br />
<br />
<b>* 'சென்செக்ஸ்' 34 புள்ளிகள் குறைவு</b><br />
<br />
மே 31,2011,00:54<br />
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. சென்ற வாரம், கடைசி இரண்டு வர்த்தக தினங்களில், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி, லாபம் நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்து போனது.<br />
<br />
இந்நிலையில், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. அதேசமயம், ஹாங்காங்க், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.திங்கள்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மருந்து, ரியல் எஸ்டேட், வங்கி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால், நுகர் பொருள்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.<br />
<br />
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 34.04 புள்ளிகள் சரிவடைந்து, 18,232.06 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,380.17 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,199.52 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 3 புள்ளிகள் குறைந்து, 5,473.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,509.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,458.60 புள்ளிகள் வரையிலும் சென்றது <br />
<br />
<b style="color: #cc33cc;">விளையாட்டுச் செய்திகள்</b> :<br />
<br />
<b>* கிரிக்கெட்</b><br />
<br />
<b>இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி * சுருண்டது இலங்கை</b><br />
கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.<br />
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கார்டிப் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 400 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டிராட் (203), குக் (133) கைகொடுக்க, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (98), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.<br />
<br />
பெல் சதம்:<br />
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் பெல் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 496 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பெல் (103), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர். <br />
<br />
சுருண்டது இலங்கை <br />
<br />
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சில் திணறியது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 82 ரன்களுக்கு சுருண்டதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இலங்கை சார்பில் பெரேரா அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் சுவான், டிரம்லட் தலா 4, பிராட் 2 விக்கெட் கைப்பற்றினர்.<br />
<br />
இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரட்டை சதம் கடந்த டிராட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இரண்டாவது டெஸ்ட் அடுத்த மாதம் 3ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.<br />
<br />
<b style="color: #cc33cc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
!* <b style="color: #cc33cc;">சுகவனேஸ்வரர் கோயிலில் 108 மூலிகையால் சிறப்பு யாகம்</b><br />
<br />
<img alt="TN_103800000000.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043bf3024a35f0&attid=0.3&disp=emb&realattid=ii_13043b91f333e822&zw" title="TN_103800000000.jpg" /><br />
<br />
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில் கடந்த 4ம் தேதி முதல் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெய்யில் மற்றும் தோஷம் நிவர்த்தி அடைந்ததையொட்டி, 108 கலசங்கள் மற்றும் 108 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாகம் நடந்தது. திரளாக பொதுமக்கள் பங்கேற்றனர்<br />
<br />
<b style="color: #cc33cc;">* அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோவில் :</b><br />
<br />
<img alt="T_500_322.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043bf3024a35f0&attid=0.1&disp=emb&realattid=ii_13043be5d39b06bb&zw" title="T_500_322.jpg" /><br />
நன்றி - தின மலர்.<br />
<br />
<br />
மூலவர் : ஆட்கொண்டநாதர்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : சிவபுரந்தேவி<br />
தல விருட்சம் : வில்வம்<br />
தீர்த்தம் : -<br />
ஆகமம்/பூஜை : சிவாகமம்<br />
பழமை : 500 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : இரணியூர்<br />
மாவட்டம் : சிவகங்கை<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி.<br />
<br />
இத்தலம் அஷ்டபைரவ தலங்களில் ஒன்று.<br />
<br />
பைரவர்: கால பைரவர்.<br />
<br />
தலவிநாயகர்: வித்தகவிநாயகர்<br />
<br />
விமானம்: ஒருதள விமானம்<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். கோயில்களில்<br />
<br />
அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இருக்கிறது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணமும் நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.<br />
<br />
அம்பாள் சிவபுரந்தேவி இரண்டே கரங்களுடன், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர், சிவனை வழிபட்டபோது உடனிருந்த அம்பிகை, அண்ணனின் தோற்றத்தைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்தாள். இவள் உக்கிரமானபோது உருவான திகள், இவளது சன்னதி எதிரிலுள்ள மண்டப தூண்களில் நவ திகளாக காட்சி தருவதாகச் சொல்கின்றனர். அஷ்டலட்சுமி மண்டபம் ஒன்றும் இருக்கிறது.<br />
<br />
அம்பாள் சன்னதி அருகில் பைரவர் சன்னதி இருக்கிறது. இவர் இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு கார்த்திகை மாதத்தில் 6 நாட்கள் சம்பகசூர சஷ்டி விழா நடக்கிறது. அப்போது ஜவ்வாது, புனுகு ஆகிய வாசனைப்பொருட்கள், வாசனை மலர் மாலைகள் அணிவித்து, மார்பில் குளிர்ச்சிக்காக சந்தனம் சாத்தி அலங்காரம் செய்கின்றனர்.<br />
<br />
இவ்விழாவின் ஆறு நாட்களும் உற்சவமூர்த்தி பைரவர் மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளி பின்பு, பல்லக்கில் புறப்பாடாகிறார். பிரகாரத்தில் உள்ள விநாயகர் "வித்தக விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். மாணவர்கள் இவரிடம் கல்வி சிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.<br />
<br />
கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்.<br />
<br />
குதிரை வாகன குபேரன்: இங்கு குபேரன், வாயு பகவான் இருவரும் சுவாமியை வழிபட்டதாக ஐதீகம். இவர்கள் இருவரும் குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.<br />
<br />
நவக்கிரக சன்னதி, கஜலட்சுமி சன்னதிகளும் உண்டு. இரண்யனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், "இரணியூர்' என்று அழைக்கப்படுகிறது.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார்.<br />
<br />
திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் "ஆட்கொண்டநாதர்' என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, "நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.<br />
<br />
சிறப்பம்சம்:<br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #cc33cc;">ஆன்மீகச் சிந்தனை மலர் </b>:<br />
<br />
<b style="color: #cc33cc;">பிறரை அவமதிக்காதீர் ! - ஸ்ரீராமானுஜர்.<br />
</b><br />
* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.<br />
<br />
<br />
* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.<br />
<br />
<b style="color: #cc33cc;">வினாடி வினா </b>:<br />
<br />
<b>வினா </b>- நிதி அல்லாத மசோதாக்களின் மீதான ஜனாதிபதியின் அதிகாரங்கள் யாவை ?<br />
<br />
<b>விடை</b> - 1. ஒப்புதல் அளித்தல். 2. மறுத்தல். 3. திருப்பி அனுப்புதல்.<br />
<br />
<br />
<b style="color: #cc33cc;">இதையும் படிங்க </b>:<br />
<br />
<b style="color: #cc33cc;">ஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்!<br />
<br />
<img alt="E_1306485040.jpeg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13043bf3024a35f0&attid=0.4&disp=emb&realattid=ii_13043b97989f80fe&zw" title="E_1306485040.jpeg" /><br />
</b><br />
ஆழ்வார்களில் முக்கியமானவரான நம்மாழ்வாருக்குரிய தலம் ஆழ்வார்திருநகரி; ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், வைகாசி விசாகத்தன்று அவதரித்தவர். இதையொட்டி, நம்மாழ்வார் உற்சவம், பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.<br />
<br />
காரியாருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக அவதரித்தவர் நம்மாழ்வார். இவரது இயற்பெயர் சடகோபர். பிறந்ததிலிருந்தே கண் மூடிய நிலையில் இருந்தார்; குழந்தை அழுவதுமில்லை, <br />
சாப்பிடுவதுமில்லை. உணர்ச்சியே இல்லாமல் இருந்த குழந்தையைப் பார்த்து, பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர்.<br />
<br />
சடகோபரை, ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரான்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரத்தடி பொந்தில் அமர்ந்து கொண்டார் சடகோபர். பெற்றோர், அவரைத் தூக்க முயன்றனர்; ஆனால், அசைக்கவே முடியவில்லை. 16 ஆண்டுகள், அந்த மரத்தடியிலேயே உணவில்லாமல் இருந்தார்; ஆனால், ஒரு இளைஞருக்குரிய வளர்ச்சி ஏற்பட்டு விட்டது.<br />
<br />
அப்போது, வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால், அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. அயோத்தி சென்ற அவர், இறைவனை வணங்கும் போது, தென்திசையில் ஒரு பேரொளியை கண்டார்; அந்த ஒளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த ஒளி வெகுதூரம் அவரை இழுத்து வந்து விட்டது. ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரத்தடிக்கு வந்ததும், ஒளி மறைந்து விட்டது. அந்த மரப்பொந்தில், மகாஞானி ஒருவர் இருப்பதைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.<br />
<br />
ஞான முத்திரையுடன், மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார்; கண் விழித்தார் சடகோபர். "செத்ததன் வயிற்றில் சிறியது பிறக்கின் எத்தை தின்று எங்கே கிடக்கும்...' (உயிரில்லாத உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என, சடகோபரிடம் கேட்டார் மதுரகவி ஆழ்வார்.<br />
<br />
அது வரை பேசாமலிருந்த சடகோபர், "அத்தை தின்று அங்கே கிடக்கும்...' (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவித்தபடி, அங்கேயே இருக்கும்!) என்று பதிலளித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு, சடகோபரை, தன் குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவி. சடகோபர், "நம்மாழ்வார்' எனப்பட்டார். பெருமாளே இவருக்கு இந்தப் பெயரை சூட்டியதாகச் சொல்வர். புளியமரத்தடியில், 31 ஆண்டுகள் வசித்தார் இவர். திருமாலைப் புகழும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை, 1,296.<br />
<br />
இங்கு பெருமாளை விட, நம்மாழ்வாருக்குதத் தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம், ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் இலைகள் மூடாத காரணத்தால், இம்மரம், "உறங்காப்புளி' என்று அழைக்கப் படுகிறது. நம்மாழ்வார் தன், 35ம் வயதில், மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. தன் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி, பெருமை< அடைந்தார் மதுரகவி ஆழ்வார்.<br />
<br />
ஆழ்வார்திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோவிலில், நம்மாழ்வார் உற்சவம் மிகவும் பிரபலம். திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியில், 40 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.<br />
<br />
வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் அவதரித்தார். எனவே, அதற்கு, பத்து நாட்கள் முன்னதாக விழா துவங்கி விடும். இந்த விழாவைக் காணும் மாணவர்கள், குருவாகிய நம்மாழ்வாரின் அருளால் சிறந்த கல்வியறிவைப் பெறுவர்.<br />
***<br />
-தி. செல்லப்பா <br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-31073358021709035352011-05-27T08:02:00.000+05:302011-05-27T08:02:58.160+05:30இன்றைய செய்திகள் - மே, 27 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #3366ff;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?</b><br />
<br />
<img alt="large_247124.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.5&disp=emb&realattid=ii_1302edd6f655bf7f&zw" title="large_247124.jpg" /><br />
<br />
சென்னை, மே 26: சமச்சீர் கல்விச் சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்தக் கல்வியாண்டில் பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என்றும் அண்மையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.<br />
<br />
அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.<br />
<br />
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை வந்தது.<br />
<br />
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு கூறியதாவது:<br />
<br />
சமச்சீர் கல்வி முறை பற்றி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் தலைமையிலான குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.<br />
<br />
2011-2012-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. <br />
<br />
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.<br />
<br />
இது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே ரூ. 200 கோடி செலவு செய்துள்ள அரசு, புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க மேலும் சுமார் ரூ. 200 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.<br />
<br />
எனவே, சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாலு வலியுறுத்தினார்.<br />
<br />
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:<br />
<br />
பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து தங்களுக்கான சிறந்த பாடத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது.<br />
<br />
இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களுக்காகவே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.<br />
<br />
இதற்கிடையே, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.<br />
<br />
அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:<br />
<br />
தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?<br />
<br />
தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.<br />
<br />
இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?<br />
<br />
முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.<br />
<br />
இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.<br />
<br />
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:<br />
<br />
சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?<br />
<br />
இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.<br />
<br />
மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.<br />
<br />
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். <br />
<br />
<b style="color: #3366ff;">உலகச் செய்தி மலர் :<br />
</b><br />
<b>* வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்<br />
<br />
<img alt="26-rajapaksha-fonseka300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.4&disp=emb&realattid=ii_1302ee2acc7f9624&zw" title="26-rajapaksha-fonseka300.jpg" /></b><br />
கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.<br />
<br />
வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.<br />
<br />
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா நீதிமன்ற விசாரணையின்போது கூறுகையில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக இறுதிக் கட்ட யுத்தத்தில் ராணுவத்தினருடன் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.<br />
<br />
ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை.<br />
<br />
மேலும் ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.<br />
<br />
இந்த விவரங்களை நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன்.<br />
<br />
போர் காலத்தில் என்னால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராணுவத் தளபதியே என்னை கைது செய்தார்.<br />
<br />
முன்பு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போரில் பின்னடைவு ஏற்பட்டபோது, மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரி கோழைத்தனமாக கண்ணீர் விட்டு அழுதார். இதனால் படையின் கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினேன். ஆனால், 2010 ஜனவரி மாதம் அந்த அதிகாரி மூலமாகவே என்னை கைது செய்ய வைத்தனர்.<br />
<br />
நாட்டுக்காக நான் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளேன். ஆனால், என்னை கோதபய நம்பவே இல்லை. என் மீது அவருக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது.<br />
<br />
மேலும் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இலங்கை அரசு மதிப்பது தற்போது குறைந்துவிட்டது.<br />
<br />
மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களையும் போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்க நான் முன் வைத்த திட்டத்தையும் அதிபர் ராஜபக்சேவும் கோதபயவும் ஏற்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.<br />
<br />
மேலும் புலிகளுக்கு எதிராக தான் தலைமை தாங்கி நடத்திய தாக்குதல்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.<br />
<br />
<b>* இரண்டாம் உலக போரில் நாய்களை பயன்படுத்திய ஹிட்லர்</b><br />
<br />
ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன.<br />
<br />
யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.<br />
<br />
ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
ஜெர்மன் ஷெஃபர்ட்<br />
<br />
ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன.<br />
<br />
இந்தப் பண்பின் காரணமாகவே அவை இன்றும் புகழ் பெற்று விளங்குகின்றன. நுண்ணறிவைப் பொறுத்த வரையில், பார்டர் கோலி மற்றும் பூடில் என்னும் நாய் வகைகளுக்கு அடுத்தாற்போல, மூன்றாவது இடத்தில் அவை இருப்பதாகக் கருதப்படுகின்றன. இவை எளிய பணிகளை ஐந்தே முறை மீண்டும் மீண்டும் செய்தவுடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்ததாகவும் மற்றும் 95 சத நிகழ்வுகளில் இவை முதலில் அளிக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றன என்றும் நாய்களின் நுண்ணறிவு என்னும் புத்தகத்தில், ஸ்டேன்லி கோரென் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
அவற்றின் உடல் வலிமையுடன் கூடுதலாக, இந்தப் பண்பும் இணைகையில் இந்த இனத்து நாய்கள், காவல்துறை, பாதுகாவலன் மற்றும் தேட்டம் மற்றும் இடர்மீட்பு நாய் ஆகிய பணிகளுக்கு உகந்தவையாகின்றன; இவை பெரும் உருவம் கொண்ட பிற வளர்ப்பின நாய்களை விடவும் விரைவில் பணிகளைக் கற்றுக் கொண்டு, ஆணைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளன.<br />
<br />
ஹிட்லரின் பேசும் நாய்ப்படை<br />
<br />
சர்வாதிகாரி ஹிட்லரும் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் நிறுவியிருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது.<br />
<br />
ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர். அந்த நாய்கள் ஒரு நாள் அவற்றின் பாதங்களை தட்டி பேசின.<br />
<br />
ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும். மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன<br />
<br />
<br />
*<b> சர்வதேச கடற்கொள்ளையர் பிரச்னை: ஐக்கிய நாடுகள் சபை தலையீடு அவசியம்: மன்மோகன் சிங்</b><br />
<br />
<img alt="pm.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.7&disp=emb&realattid=ii_1302ee1cfbca9184&zw" title="pm.jpg" /><br />
<br />
அடிஸ் அபாபா, மே 26: கடல் வழி போக்குவரத்தில் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர் பிரச்னைக்கு முடிவு காண, ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.<br />
<br />
செங்கடல் மற்றும் சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மிகப் பெரும் சவாலாக உள்ளது. இது கடல்சார் வர்த்தகத்தையே பெரிதும் பாதிப்பதாக அமைந்துள்ளது.<br />
<br />
சோமாலியாவில் ஸ்திரமான அரசு அமைய சர்வதேச சமுதாயம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு குந்தகம் ஏற்படாது பார்த்துக்கொள்ளும் அதே வேளையில் கடற்கொள்ளையர் பிரச்னைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையின் குறுக்கீடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
எத்தியோப்பியாவின் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இக்கருத்தை தெரிவித்தார். எத்தியோபியாவுக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர் என்ற பெருமை மன்மோகனுக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மிகச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.<br />
<br />
உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மன்மோகன் சிங்கை வரவேற்றனர். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மன்மோகன் சிங் கூறியதாவது:<br />
<br />
கடற்கொள்ளையைத் தடுக்க இந்திய அரசு மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இப்போது கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதம் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செங்கடல் மற்றும் சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகள் ஒரு தேர்ந்த தொழிலைப் போல உள்ளது. இது கடல்சார் வர்த்தகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது முக்கிய இணைப்பு வழியாகும். இந்த பிரச்னை குறித்து இந்தியா தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறது. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் 11 சதவீதம் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானது. இந்நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் மீது 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 70 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. பிணையாள்களை மீட்பதற்கு மிக அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில் அவரவர் தங்களுக்கு உரிய இலக்கை நிர்ணயித்து அதன்படி வளர்ச்சிக்கு வழி காண வேண்டியுள்ளது. சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் சட்டப்படி மேற்கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் கூறுகிறது. இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரமான சூழலும் உருவாக தனது பங்குக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார் மன்மோகன் சிங்.<br />
<br />
பிரதமர் மன்மோகன் சிங்கின் உரையை எத்தியோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். அடுத்த சில வாரங்களில் புதிதாக உருவாக உள்ள தெற்கு சூடான், இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.<br />
<br />
எத்தியோப்பிய பிரதமர் மெலஸ் ùஸனாவி பேசியது: இந்தியாவும், எத்தியோப்பியாவும் பரஸ்பரம் பலன் அடையும் விஷயத்தில் நீண்ட கால நட்பு நாடுகளாக விளங்குகின்றன. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இரு நாடுகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைத்துள்ளன என்றார் எத்தியோப்பிய பிரதமர் ஸெனாவி.<br />
<br />
<b>* தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் இந்திய நிலைக்கு அமெரிக்கா ஆதரவு</b><br />
வாஷிங்டன், மே 26: தேடப்படும் 50 தீவிரவாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தானிடம் அளிப்பது என இந்தியா முடிவு செய்ததை அமெரிக்கா வரவேற்றுள்ளது.<br />
<br />
இது தொடர்பாக தெற்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் வியாழக்கிழமை கூறியதாவது:<br />
<br />
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்; இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என 2 நிபந்தனைகளை இந்தியா விதித்திருந்தது. இவற்றை நிறைவேற்றினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்றும் இந்தியா வலியுறுத்தியிருந்தது.<br />
<br />
இந்த நிபந்தனைகள் தொடர்பாக பாகிஸ்தான் முழுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும், சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.<br />
<br />
இருந்தபோதிலும், பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதைப் போலவே இந்தியாவும் விரும்புவதால் நிபந்தனைகளை பாகிஸ்தான் பூர்த்தி செய்யாதபோதும், உள்துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தது.<br />
<br />
இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக தேடப்படும் 50 தீவிரவாதிகளின் பட்டியலை இந்தப் பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானிடம் அளிக்க இந்தியா முடிவு செய்ததை அமெரிக்கா வரவேற்கிறது என்றார் அவர்.<br />
<br />
<b>* மும்பை தாக்குதலுக்கு முன்னதாக ஐ.எஸ்.ஐ. தான் பயிற்சி அளித்தது: ஹெட்லி வாக்குமூலம்<br />
<br />
<img alt="terrorist.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.1&disp=emb&realattid=ii_1302ee32d26fcb6c&zw" title="terrorist.jpg" /></b><br />
சிகாகோ, மே 26: மும்பை தாக்குதலுக்கு முன் உளவு பார்ப்பது தொடர்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தனக்குப் பயிற்சி அளித்ததாக டேவிட் ஹெட்லி வாக்கு மூலம் அளித்துள்ளார்.<br />
<br />
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் டேவிட் ஹெட்லி, தஹாவூர் ராணாவுக்கு எதிராக அமெரிக்காவில் சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.<br />
<br />
டேவிட் ஹெட்லியிடம் 3-வது நாளாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.<br />
<br />
விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஹெட்லி கூறியதாவது:<br />
<br />
2006-ல் மேஜர் இக்பாலை சந்தித்தேன். ராணுவப் பயிற்சி, உளவு பார்ப்பது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா அளித்த பயிற்சிகள் சிறப்பானதாக இல்லை என அவரிடம் தெரிவித்தேன்.<br />
<br />
இதையடுத்து லாகூரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 2 மாடிக் கட்டடம் ஒன்றில் வைத்து எனக்கு மேஜர் இக்பால் பல்வேறு விதமான பயிற்சிகள் அளித்தார்.<br />
<br />
மேஜர் இக்பாலை பலமுறை சந்தித்துள்ள போதிலும் அவரது முழு பெயர் எனக்குத் தெரியாது. அவரை எனக்கு ராணுவ அதிகாரி ஒருவர்தான் அறிமுகப்படுத்திவைத்தார்.<br />
<br />
அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகத் தெரிந்தபோதிலும், அவரை ராணுவ சீருடையில் பார்த்ததில்லை.<br />
<br />
மேஜர் இக்பால் என்னைப் பார்க்க வந்தபோதெல்லாம் ராணுவ ஜீப்பில்தான் வந்தார். அவருடன் வந்த கீழ்நிலை அதிகாரிகள் ராணுவப் பதவி பொறித்த அடையாளச் சின்னத்துடன் இருந்தனர்.<br />
<br />
தாக்குதல் நடத்தியவர்களுக்கு விருது: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உயரிய ராணுவ விருதான நிஷான் இ ஹைதர் விருது அளிக்கப்பட வேண்டும் என ஹெட்லி தெரிவித்துள்ளார்.<br />
<br />
அணுமின் நிலையங்களை வேவு பார்த்த ஹெட்லி: மேஜர் இக்பால் கூறியபடி இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களை 2008 ஏப்ரலில் ஹெட்லி வேவு பார்த்துள்ளார்.<br />
<br />
அதே சமயத்தில் மும்பையிலும் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள், முறை குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார்.<br />
<br />
தாக்குதல் நடத்துபவர்கள் ஹிந்துக்கள் போல தெரியும் வேண்டும் என்பதற்காக 15 கைகாப்புகளை (பிரேஸ்லெட்) ஹெட்லி வாங்கியுள்ளார்.<br />
<br />
தடயங்களை விட்டுச் சென்ற தீவிரவாதிகள்: மும்பை தாக்குதலுக்கு மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டபோதும் சில தடயங்களை தீவிரவாதிகள் விட்டுச் சென்றது குறித்தும் சாஜித் மிர் என்பவருடன் ஹெட்லி விவாதித்துள்ளார்.<br />
<br />
தாங்கள் வந்த படகை மூழ்கடிக்க வேண்டும் என கூறியிருந்தபோதிலும், அதை தீவிரவாதிகள் செய்யவில்லை. தீவிரவாதிகளில் ஒருவர் செயற்கைக்கோள் தொலைபேசியை படகில் விட்டுச் சென்றார். இது இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு முக்கிய ஆதாரமாக மாறிவிட்டது என சாஜித்திடம் ஹெட்லி கூறியுள்ளார்.<br />
<br />
2002 பிப்ரவரி முதல் 2003 டிசம்பர் வரை 5 முறை லஷ்கர் இ தொய்பா முகாம்களில் ஹெட்லி பயிற்சி பெற்றுள்ளார். அங்கு அவருக்கு அமைப்பின் கொள்கை, ஆயுதங்கள், கையெறி குண்டுகளை கையாள்வது, தற்காப்புக் கலைகள், தப்பிக்கும் வழிமுறைகள், உளவு பார்ப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
பயிற்சி முடிந்தவுடன் காஷ்மீரில் நாசவேலைகளை நிகழ்த்தவே ஹெட்லி விரும்பியுள்ளார். ஆனால், அவரை மும்பை தாக்குதலுக்குப் பயன்படுத்த லஷ்கர் முடிவு செய்திருந்தது.<br />
<br />
சிகாகோ நீதிமன்றத்தில் அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
இந்தியாவில் தீவிரவாதச் சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் யாரும் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் கூறிவந்தது. இந் நிலையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு உள்ளது தொடர்பான தகவல்கள் தினசரி வெளியாகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது<br />
<br />
<b>* பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட படைகள் குறைக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு</b><br />
வாஷிங்டன், மே 26: பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப்படைகள் குறைக்கப்படும் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் கோல்டேவ் லபான் தெரிவித்தார்.<br />
<br />
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: பாகிஸ்தானில் பதற்றமான சில பகுதிகளில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோரை இம்மாத துவக்கத்தில் இருந்து நிறுத்தியுள்ளோம். இப்போது அமெரிக்கப் படையை வாபஸ் பெற வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தான் விரும்பும்பட்சத்தில் அந்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும். தற்போது அப்பணி துவங்கிவிட்டது என்றார்.<br />
<br />
ஆனால் எவ்வளவு படைகள் வாபஸ் பெறப்படும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் அறிவிக்கவில்லை. பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படை சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்ததாகும். அல்காய்தா, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட பாகிஸ்தான் நாட்டின் துணை ராணுவப் படைக்கு பயிற்சிஅளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் அமெரிக்கப்படை அனுப்பப்பட்டிருந்தது.<br />
<br />
அல்காய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் அமெரிக்கப்படையால் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படையை வாபஸ் பெற வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கைவிடுத்திருந்தது.<br />
<br />
<br />
<b style="color: #3366ff;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* 2013-க்குள் 5 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி: கபில் சிபல்<br />
<br />
<img alt="sibal.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.3&disp=emb&realattid=ii_1302ee0abcc7139c&zw" title="sibal.jpg" /></b><br />
புது தில்லி, மே 26: இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கிராமங்களை இணையதள வசதி மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். தேசிய கண்ணாடியிழை ஒருங்கிணைப்பு வசதி (என்ஓஎப்என்) மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.<br />
<br />
இந்த இலக்கை எட்டுவதற்காக பிரதமரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் சாம் பித்ரோடா மற்றும் இணைத் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.<br />
<br />
என்ஓஎப்என் திட்டத்தின் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள இணைப்பு ஏற்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த ஒரு பரிந்துரையில் 500 பேருக்கு மேல் வாழும் கிராமங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தித் தரலாம் என குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் 3.75 லட்சம் கிராமங்களுக்கு இத்தகைய வசதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் 5 லட்சம் கிராமங்களை இணையதளம் மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
இந்தத் திட்டத்துக்கான செலவு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் யுஎ்ஓ நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும்.<br />
<br />
மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎ்என்எல்) தேசிய பிராட்பேண்ட் (இணையதள இணைப்பு) திட்டத்தை செயல்படுத்தும் என்றும் சிபல் குறிப்பிட்டார்.<br />
<br />
இந்த இணையதள சேவைக்கான கேபிளை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். வீட்டிற்கே கண்ணாடியிழை சேவை என்பது தொடர்பான மாநாட்டை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், "இத்தகைய கண்ணாடியிழை ஒருங்கிணைப்பு வசதியை வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது கண்ணாடியிழை கேபிள் இணைப்பு சில நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மட்டுமே உள்ளது.<br />
<br />
2010-ம் ஆண்டு இறுதியில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 90 லட்சமாக இருந்தது. இதில் கிராமப் பகுதியில் உள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் 2004-ம் ஆண்டு வகுக்கப்பட்ட இணையதள கொள்கையின்படி 2010-ம் ஆண்டில் இணையதள வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என வகுக்கப்பட்டதாகவும், அது எட்டப்படவேயில்லை' என்றும் கபில் சிபல் கூறினார்.<br />
<b><br />
* அடுத்த ஐஎம்எப் தலைவர்: ஆதரவு திரட்டுகிறது இந்தியா: பிரணாப் முகர்ஜி<br />
<br />
<img alt="pranab.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.2&disp=emb&realattid=ii_1302ee020933b65b&zw" title="pranab.jpg" /></b><br />
புது தில்லி, மே 26: சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) அடுத்த மேலாண் இயக்குநர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.<br />
<br />
தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை இதைத் தெரிவித்தார். இதுவரை மேலாண் இயக்குநராக இருந்த டொமினிக் ்டிரா்-கான் பாலியல் புகாரில் சிக்கியதால் பதவியிழக்க நேரிட்டது.<br />
<br />
இதையடுத்து இப் பதவிக்கு இந்தியாவின் மான்டேக் சிங் அலுவாலியாவும் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, இப் பதவிக்கு பிரான்் நிதியமைச்சர் கிறி்டின் லகார்டே போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் லகார்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வளர்ந்து வரும் நாடுகளின் நிதியமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், நமது நிலையை வலுப்படுத்திக் கொண்டால் தகுந்த நேரத்தில் தகுந்த முடிவு எடுக்க முடியும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.<br />
<br />
ஐஎம்எப்-பின் அடுத்த மேலாண் இயக்குநர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கருதுவதற்கு இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.<br />
<br />
கடந்த காலங்களில், ஐஎம்எப்-பின் மேலாண் இயக்குநராக ஐரோப்பியரும், உலக வங்கியின் தலைவராக அமெரிக்கருமே இருந்துள்ளனர். இந்த அமைப்புகளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் உள்ளதால் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.<br />
<br />
<b>* நில விவகாரம்: கிராம சபைக்கு அதிகாரம்</b><br />
<br />
<img alt="landact.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.8&disp=emb&realattid=ii_1302ede055eb956c&zw" title="landact.jpg" /><br />
<br />
ஆமதாபாத், மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br />
<br />
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.<br />
<br />
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.<br />
<br />
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.<br />
<br />
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.<br />
<br />
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை குஜராத்திலிருந்துதான் துவக்க வேண்டியிருக்கும் என கருதுகிறேன் என்றார் ஹஸாரே.<br />
<br />
இந்தக் கலந்துரையாடல்களில் சமூக நல ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகா சாராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்<br />
<br />
<b>* ஜூனில் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு</b><br />
புது தில்லி, மே 26: பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய நிலையில் இப்போது டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.<br />
<br />
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற உள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழுவினர் இதற்கான ஒப்புதலை அளிப்பார்கள் என்று தெரிகிறது. இக்குழுவினரது கூட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை எந்த அளவுக்கு உயர்த்தலாம் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்த இக்குழு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.<br />
<br />
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.<br />
<br />
கடந்த மே 11-ம் தேதி இக்குழுவினர் கூடுவதாக இருந்தது. ஆனால் மே 13-ம் தேதி ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாக இருந்ததால் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.<br />
<br />
அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு தொடரக்கூடாது என்பதற்காக விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* வட இந்தியாவில் மழை உ.பி.யில் சூறாவளி 10 பேர் சாவு</b><br />
புது தில்லி, மே 26: வட இந்தியாவின் பல இடங்களில் வியாழக்கிழமையன்று மழை பெய்தது. உத்தரப் பிரதேசத்தில் வீசிய சூறாவளியால் 10 பேர் உயிரிழந்தனர்.<br />
<br />
தலைநகர் தில்லியிலும் மதிய நேரத்தில் லேசாக மழை பெய்தது. வட மாநிலங்களில் பெரும்பாலும் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது.<br />
<br />
பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் புதன்கிழமை இரவு முதலே மழை பெய்தது.<br />
<br />
உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்டத்தில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பெரும் தூசுப்படலம் ஏற்பட்டது. அப்போது மரங்கள் சாய்ந்தன, சில வீடுகள் இடிந்து விழுந்தன.<br />
<br />
இதில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.<br />
<br />
<b>* சுற்றுச்சூழலுக்கு மாசு: 639 தொழிற்கூடங்களை மூட ஹரியாணா அரசு உத்தரவு</b><br />
சண்டீகர், மே 26: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால், கடந்த ஓராண்டில் 639 தொழிற்கூடங்களை மூட ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் கேப்டன் அஜய் சிங் யாதவ் தெரிவித்தார்.<br />
<br />
இது குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 151 தொழிற்கூடங்களுக்கு எதிராக பரிதாபாத், குருúக்ஷத்திரத்தில் சிறப்பு சுற்றுச்சூழல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.<br />
<br />
9,239 தொழிற்கூடங்களில் மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் உள்ள மாதா மானசா தேவி கோவில், குர்காவோனில் உள்ள மாதா ஷீதலா தேவி கோவில், புனித நகரங்களான குருúக்ஷத்திரம், தானே்வர், மோர்னி மலைப் பிரதேசம், தேசிய பூங்காக்கள், வன சரணாலயங்களில் பிளா்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.<br />
<br />
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாசு ஏற்படுத்தும் தொழிற்கூடங்கள் மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாமல் இயங்க அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.<br />
<br />
<br />
<b style="color: #3366ff;">மாநிலச் செய்தி மலர் </b>:<br />
<br />
*<b> இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்</b><br />
<br />
சென்னை, மே 26: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.<br />
<br />
தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ம் தேதி வழங்கப்படுகிறது.<br />
<br />
பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. பள்ளிகளின் மூலம் 8.5 லட்சம் பேரும், மொத்தமாக 9.5 லட்சம் மாணவ, மாணவியரும் தேர்வை எழுதினர்.<br />
<br />
மாணவ, மாணவியர் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணையதளங்கள், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.<br />
<br />
"தினமணி'யின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ழ்ங்ள்ன்ப்ற்ள்.க்ண்ய்<br />
<div dir="ltr"><wbr></wbr>ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.<br />
<br />
தேர்வு முடிவுகளை வெளியிடும் அரசு இணையதளங்கள்:<br />
<br />
<a href="http://www.pallikalvi.in/" target="_blank">www.pallikalvi.in</a><br />
<br />
<a href="http://www.tnresults.nic.in/" target="_blank">www.tnresults.nic.in</a><br />
<br />
<a href="http://www.dge1.tn.nic.in/" target="_blank">www.dge1.tn.nic.in</a><br />
<br />
<a href="http://www.dge2.tn.nic.in/" target="_blank">www.dge2.tn.nic.in</a><br />
<br />
<a href="http://www.dge3.tn.nic.in/" target="_blank">www.dge3.tn.nic.in</a><br />
<br />
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவைப் பெறுவதற்கு <a href="http://tnpubliclibraries.gov.in/" target="_blank">tnpubliclibraries.gov.in</a> என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.<br />
<br />
மதிப்பெண் சான்றிதழ்: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஜூன் 20-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.<br />
<br />
மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பங்கள் மே 30 முதல் ஜூன் 3 வரை வழங்கப்பட உள்ளன.<br />
<br />
சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 8 வரை நடைபெற உள்ளன.<br />
<br />
மறுகூட்டல்: மறுகூட்டலுக்கும் மே 30 முதல் ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.<br />
<br />
சி.டி. இல்லை: வழக்கமாக, தேர்வு முடிவுகள் அடங்கிய சி.டி.க்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு முடிவு வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அனுப்பப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்வு முடிவு சி.டி.க்கள் அனுப்பப்படவில்லை. பள்ளிகளில் ஒட்டுவதற்கான மதிப்பெண் பட்டியல் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* பி.இ. கலந்தாய்வு: 4 இடங்களில் நடத்த திட்டம்: தமிழக அரசு</b><br />
சென்னை, மே 26: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னை உள்பட 4 இடங்களில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.<br />
<br />
கலந்தாய்வு நடைமுறைகளை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.<br />
<br />
இந்த கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 484 பொறியியல் கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கை, இந்த ஒரு மையத்தின் மூலமே நடைபெற்று வருகிறது.<br />
<br />
இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்தாய்வில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக, பெற்றோர் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள், சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால் பொருள் செலவும் ஏற்படுவதாக பெற்றோர் தெரிவித்து வருகின்றனர்.<br />
<br />
இந்த சிரமங்களை நீக்கும் வகையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மேலும் சில இடங்களில் நடத்த வேண்டுமென பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.<br />
<br />
ஆனால், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வை பல இடங்களில் நடத்துவது என்பது, தேவையற்ற கால விரயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்துவதுதான் சிறந்தது என்று கூறி, பெற்றோரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து வந்தனர்.<br />
<br />
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.<br />
<br />
மேலும், கலந்தாய்வு நடைமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அல்லாமல், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய 10 நாள்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. எனவே சென்னையில் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளில் கலந்தாய்வை நடத்துவதே சிறந்தது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.<br />
<br />
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் உயர் அதிகாரிகள் கூறியது:<br />
<br />
பொறியியல் கலந்தாய்வுக்கு, குறைந்த நாள்களே உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 3. அதன் பிறகு ஒரு சில நாள்களில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு விடும். தொடர்ந்து ரேங்க் பட்டியல் தயாரிப்பது என அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜூன் மூன்றாம் வாரம் முதல் கலந்தாய்வும் தொடங்கி விடும்.மட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களில் நடத்துவது என்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். தேவையற்ற குழப்பமும் ஏற்படும் என்றனர்.<br />
<br />
6 ஆண்டுகளுக்கு முன்பு... கடந்த 2004- 05 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் அல்லாமல் 4 மையங்களில் நடத்தப்பட்டன.<br />
<br />
ஆனால் பல்வேறு காரணங்களால் தேவையற்ற தாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன. எந்தக் கல்லூரியில் இடம் உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒற்றைச் சாளர முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டு ஒரே மையமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது கலந்தாய்வு செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதால் சில நொடிகளிலேயே கல்லூரிகளில் இடம் உள்ளதை அறிந்து கொள்ள முடியும். எனவே முன்பு உள்ளது போல் 4 மையங்களில் நடத்துவதால் காலவிரயம் ஏற்படாது என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
<b>* எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய வசதி<br />
<br />
<img alt="medical.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302ee717545a8f9&attid=0.6&disp=emb&realattid=ii_1302ede7d1d9c112&zw" title="medical.jpg" /></b><br />
சென்னை, மே 26: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்கள், தங்களது விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சென்று விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.<br />
<br />
விண்ணப்பத்தைப் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி, முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.<br />
<br />
இணையதளத்தில் வசதி: பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (மே 25) முதல் வழங்கப்பட்டு வருவதால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற்ற மாணவர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வருகின்றனர். சில மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போட்டு வருகின்றனர்.<br />
<br />
இதே போன்று டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேரவும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.<br />
<br />
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதை தமிழக அரசின் இணையதளம்ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்<wbr></wbr>ய் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.<br />
<br />
இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு பதிவு எண் ஆகிய ஏதாவது ஒன்றை "டைப்' செய்யும் நிலையில் விண்ணப்பம் சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.<br />
<br />
<b>* பெரியாறு அணையில் ஆய்வுப் பணி தொடங்கியது</b><br />
கம்பம், மே 26: புது தில்லி சி.எஸ்.எம்.ஆர்.எஸ் வழிகாட்டுதலின்படி நவீன தானியங்கி (ஆர்.ஓ.வி) இயந்திரத்தின் மூலம் பெரியாறு அணையில் ஆய்வுப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.<br />
<br />
பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உச்ச நீதிமன்றத்தின் சார்பில், ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், 2010 டிசம்பர் 21-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.<br />
<br />
இதனைத் தொடர்ந்து அணையின் தரைப் பகுதியில், ஆர்.ஓ.வி. இயந்திரத்தின் மூலம் படம் எடுக்க கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆர்.ஓ.வி. இயந்திரத்துக்கு போதிய மின் அழுத்தம் கிடைக்காததால், படம் எடுக்க இயலாமல் ஆய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.<br />
<br />
இந்நிலையில், வியாழக்கிழமை புது தில்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருள்களின் ஆராய்ச்சி நிலையத்தின் (சி.எஸ்.எம்.ஆர்.எஸ்.) ஆராய்ச்சியாளர்கள் அலெக்ஸ் வர்கீஸ், பீரேந்திர பிரதாப், சிவசேரன் உள்ளிட்ட குழுவினர், ஆர்.ஓ.வி. இயந்திரத்தைத் தயாரித்த பிரான்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் சுசில்குமார், ராகவேந்திர பாண்டே ஆகியோர் உதவியுடன் 1,200 அடி நீளமுள்ள மெயின் அணையில் 136 அடி உயரத்தில், ஒவ்வொரு 100 அடியையும் அடையாளமிட்டு ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.<br />
<br />
நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் நவீன காமிராக்களைத் தண்ணீருக்குள் கொண்டு சென்று அணையில் விரிசல், சேதம், நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய படம் எடுத்தனர்.<br />
<br />
நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் நவீன காமிராக்களைத் தண்ணீருக்குள் கொண்டு சென்று அணையில் விரிசல், சேதம், நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய படம் எடுத்தனர்.<br />
<br />
இந்த ஆய்வின்போது, தமிழகத்தின் சார்பில், காவிரித் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் ராமச்சந்திரன், அணையின் செயற்பொறியாளர் ராஜேஷ், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜகோபால், உதவிப் பொறியாளர்கள் நாகஜோதி, மல்லிகா உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.<br />
<br />
கேரளத்தின் சார்பில், நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், கேரள நீர்ப்பாசனப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் கொச்சப்பன் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர். தமிழக-கேரளப் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.<br />
<br />
ஆய்வு குறித்து தமிழக அதிகாரிகள் தினமணி நிருபரிடம் கூறியதாவது:÷உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் உத்தரவுப்படி புது தில்லி சி.எஸ்.எம்.ஆர்.எஸ். நிபுணர்கள் அடங்கிய குழுவினரின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை குறித்தும், அதன் உறுதித் தன்மை குறித்தும் ஏற்கெனவே பலமுறை ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தற்போது நடத்தப்படும் தொழில்நுட்ப ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்றனர்.<br />
<br />
<br />
<b style="color: #3366ff;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<b style="color: #3366ff;">பட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா?</b><br />
<br />
அழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம்.<br />
<br />
கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
கூந்தல் பளபளப்பிற்கு<br />
<br />
தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று விற்பனை செய்யப்படுகின்றன. இவை தலைமுடியின் ஆயுளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுத்தமான நல்லெண்ணெய்யும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.<br />
<br />
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.<br />
<br />
சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.<br />
<br />
இளநரை நீங்கி முடி கருப்பாக<br />
<br />
நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.<br />
<br />
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.<br />
<br />
சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்<br />
<br />
பேன், பொடுகு தொல்லை நீங்க<br />
<br />
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். இதனால் பேன் தொல்லை குறையும்.</div><div dir="ltr"></div><div dir="ltr"><br />
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.<br />
<br />
50 கிராம் உப்பு கலக்காத வேப்பம்பூவுடன் 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.<br />
<br />
தலை முடி செழித்து வளர<br />
<br />
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். பின்னர் முடி செழித்து வளரும்.<br />
<br />
முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.<br />
<br />
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.</div><div dir="ltr"></div><div dir="ltr"></div><b style="color: #3366ff;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<b>* ஏறுமுகத்தில் பங்குச் சந்தை<br />
</b><br />
மும்பை, மே 26: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 197 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 18,044 புள்ளிகளாக உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்ததால் குறியீட்டெண் உயர்ந்தது.<br />
<br />
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 63 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,412 புள்ளிகளானது. உலோகம், வங்கி, கட்டுமானத்துறை பங்குகள் விலை உயர்ந்ததால் குறியீட்டெண் கணிசமாக உயர்ந்தது.<br />
<br />
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் உயர்ந்ததால் அந்நிறுவனப் பங்கு விலை 1.98 சதவீதம் உயர்ந்து ரூ. 572.60-க்கு விற்பனையானது. கோல் இந்தியா நிறுவனப் பங்கு விலை 3.22 சதவீதம் உயர்ந்து ரூ. 389.60-க்கும் விற்பனையானது.<br />
<br />
உணவுப் பணவீக்கம் மே 14-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயர்ந்த போதிலும் அது பங்குச் சந்தையை பாதிக்கவில்லை.<br />
<br />
முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை 2.92 சதவீதம் உயர்ந்து ரூ. 933.25-க்கு விற்பனையானது.<br />
<br />
ஓஎன்ஜிசி நிறுவனப் பங்கு விலை 4.44 சதவீதம் உயர்ந்தது. இந்நிறுவனத்தின் மானியச் சுமையைக் குறைக்க முடிவு செய்து டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதால் இந் நிறுவனப்பங்கு விலை உயர்ந்தது.<br />
<br />
ஆசிய பங்குச் சந்தையில் சீனாவை தவிர பிற நாடுகளின் பங்குச் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 0.16 சதவீதம் முதல் 2.75 சதவீதம் வரை உயர்ந்தது. சீன பங்குச் சந்தை மட்டும் 0.24 சதவீதம் சரிந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது.<br />
<br />
ஹீரோ ஹோண்டா பங்கு விலை 3.97 சதவீதமும், ஸ்டெர்லைட் பங்கு விலை 3.45 சதவீதமும், டிஎல்எஃப் பங்கு விலை 2.95 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.45 சதவீதமும், சிப்லா 2.38 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனி லீவர் 2.18 சதவீதமும், எல்&டி 2.05 சதவீதமும், என்டிபிசி 1.76%, ஐசிஐசிஐ வங்கி பங்கு 1.55 சதவீதமும் உயர்ந்தன.<br />
<br />
மொத்தம் 1,496 நிறுவனப் பங்கு விலைகள் ஏற்றம் பெற்றன. 1,275 நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 2,679.76 கோடி. புதன்கிழமை வர்த்தக அளவு ரூ. 2,885.74 கோடியாகும்<br />
<br />
<b>* பவுனுக்கு ரூ. 56 குறைந்தது</b><br />
<br />
சென்னை, மே 26: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 56 குறைந்து ரூ. 16,912-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2114.<br />
<br />
புதன்கிழமை விலை: ஒரு பவுன்: ரூ. 16,968. ஒரு கிராம்: ரூ.2121.<br />
<br />
<b style="color: #3366ff;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> கிரிக்கெட்</b><br />
<b>பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்</b><br />
சென்னை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்றில் இன்று மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும் என்பதால் ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.<br />
<br />
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய "பிளே ஆப்' சுற்றின் கடைசி "நாக்-அவுட்' போட்டியில் சச்சினின் மும்பை அணியும், வெட்டோரியின் பெங்களூரு அணியும் சந்திக்கின்றன.<br />
மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக உள்ளது. துவக்க வீரர் பிரச்னைக்கு பிளிஜார்டு முடிவு கட்டியுள்ளார். கோல்கட்டாவுக்கு எதிராக சச்சினுடன் இணைந்து அசத்திய இவர் அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார்.<br />
பிராங்க்ளின் அபாரம்<br />
<br />
"மிடில் ஆர்டரில்' அம்பதி ராயுடு, ரோகித் சர்மா திடீரென சறுக்கலை சந்தித்து வருவது பலவீனமாகியுள்ளது. தவிர, போலார்டு இன்னும் "பார்முக்கு' திரும்பாதது அதிர்ச்சி தான். பிராங்க்ளினின் சமீபத்திய நங்கூரம் போன்ற உறுதியான ஆட்டம் தான், அணியை காப்பாற்றி வருகிறது. இன்றும் இவர் அசத்தும் பட்சத்தில், மும்பை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு தகுதி பெறலாம்.<br />
முனாப் அபாரம்:<br />
<br />
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் மலிங்கா, முனாப் படேல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். சுழலில் ஹர்பஜன் சிங், குல்கர்னி போன்றவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு அசத்த காத்திருக்கின்றனர். இன்று எப்படியாவது கெய்லை துவக்கத்திலேயே பெவிலியன் அனுப்பினால், பெங்களூரு அணியின் ரன்குவிப்பை தடுக்கலாம்.<br />
<br />
பேட்டிங் பலம்:<br />
பெங்களூரு அணியின் பேட்டிங், கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் அபார வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள கெய்ல் (519), இன்று ஏமாற்ற மாட்டார் என நம்பலாம். தவிர, சென்னைக்கு எதிரான போட்டியில் கெய்ல் கைவிட்ட பின்பும், 175 ரன்கள் குவித்தது, பின் வரிசை வீரர்களின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது.<br />
இதில் விராத் கோஹ்லி (514), பாமர்ஸ்பச், சவுரப் திவாரி, டிவிலியர்ஸ் போன்றவர்கள் முக்கியமானவர்.<br />
ஜாகிர் நம்பிக்கை:<br />
<br />
ஜாகிர் கானின எழுச்சி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இவரது சகா அரவிந்த் தன்பங்கிற்கு அசத்தலை தொடர்கிறார். சுழலில் அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் போன்றவர்கள் மீண்டும் நம்பிக்கை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
கடந்த போட்டியில் பெங்களூரு பவுலர்கள் கடைசி 4 ஓவர்களில் மட்டும், 58 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதை இன்று திருத்திக் கொள்வார்கள் என்று நம்பலாம்.<br />
-------<br />
பழி தீர்க்குமா<br />
* ஐ.பி.எல்., தொடரில் மும்பை, பெங்களூரு அணிகள், இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 5ல் வென்றுள்ளது. மும்பை 3ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.<br />
<br />
* கடந்த 2010 ஐ.பி.எல்., அரையிறுதியில் மும்பை அணி, பெங்களூருவை 35 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறி இருந்தது. இதனால் இன்று மும்பை அணியை வென்று, பெங்களூரு பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
<b style="color: #3366ff;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<img alt="T_500_229.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302f008905454f4&attid=0.1&disp=emb&realattid=ii_1302efd9f0e56248&zw" title="T_500_229.jpg" /><br />
<br />
<b>* அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : நிலாத்துண்டப்பெருமாள்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : நேர்உருவில்லாவல்லி<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : நிலாத்திங்கள் துண்டத்தான்<br />
ஊர் : நிலாதிங்கள்துண்டம்<br />
மாவட்டம் : காஞ்சிபுரம்<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
பாடியவர்கள்: <br />
<br />
மங்களாசாஸனம்<br />
<br />
திருமங்கையாழ்வார்<br />
<br />
<b>நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி <br />
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும் <br />
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு <br />
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே.</b><br />
-திருமங்கையாழ்வார் <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.<br />
<br />
தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலத்தில் பெருமாள் அருள்பாலிப்பது சிறப்பு<br />
<br />
தலபெருமை:<br />
<br />
மகாலட்சுமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் இதயத்தில் குடிகொண்டிருப்பவள் மகாலட்சுமி. இவள் விஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருவாள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை<br />
<br />
சகோதர தலம்: சிவனின் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவத்திற்கு தன் தங்கை பார்வதிதேவி விமோசனம் பெற்ற இத்தலத்தில் அவளது அண்ணன் மகாவிஷ்ணுவும் நோய் நீங்கப்பெற்றுள்ளார். பார்வதிக்கு கங்கையையும், மகாவிஷ்ணுவிற்கு சந்திரனையும் பயன்படுத்தி சிவன் அருள் செய்த தலம். சகோதர சகோதரிகள் நிலாத்துண்ட பெருமாளையும், ஏகாம்பரேஸ்வரரையும் வணங்கினால் அவர்களிடையே ஒற்றுமை கூடும் என நம்புகிறார்கள்.<br />
<br />
கோயிலின் முதல் பிரகாரத்தில் சிறிய சன்னதியில் புருஷசூக்த விமானத்தின் கீழ், பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கென தனியே பிரகார தெய்வங்கள் இல்லை.நோய் நீங்குவதற்காக தனியே வந்தவர் என்பதால் தாயார் சன்னதியும் கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே "நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது.<br />
<br />
சிவனை வணங்கி குணமாகியவர் என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர். பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இத்தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ""நிலாத்திங்கள் துண்டத்தாய்'' என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். "சந்திர சூடப் பெருமாள்' என்ற பெயரும் இவருக்கு உண்டு.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளை செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற வழி கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினார். சிவனிடம் வேண்டினால் உஷ்ணம் குறைந்து நிறம் மாறும் என ஆலோசனை கூறினார் பிரம்மா.அதன்படி மகாவிஷ்ணு, சிவனை எண்ணி தவமிருந்தார். விஷ்ணுவுக்கு காட்சி தந்த சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டது, இங்கே வடகிழக்கு பாகத்தில் (ஈசானிய மூலை) பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால் வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. சந்திரனின் ஒளியால் இயல்பு நிறம் பெற்றதால் இத்தலத்து பெருமாளை "நிலாத்திங்கள் துண்ட பெருமாள்' என்று அழைக்கின்றனர்.<br />
<br />
சிறப்பம்சம்:<br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
சந்திரனின் ஒளி பெற்றவர் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம்.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<br />
<b style="color: #3366ff;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #3366ff;">அனைவரிடமும் அன்பாயிருங்கள் - திருக்குரான்</b><br />
<br />
நபிகள் நாயகம்(ஸல்) மொழிந்தார்கள்:<br />
* ""படைப்புகள் அனைத்தும்<br />
இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவர்''<br />
(நூல்: பைஹகி)<br />
<br />
* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால்<br />
விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.<br />
(நூல்: திர்மிதி)<br />
<br />
* நபிகள் நாயகம்(ஸல்): நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறை நம்பிக்கையாளர்களாக முடியாது.<br />
* நபித்தோழர்கள்: நாங்கள் ஒவ்வொருவரும் அன்பு செலுத்துபவர்களாகவே உள்ளோம்.<br />
<br />
* நபிகள் நாயகம்(ஸல்): அன்பு என்பது உங்கள்<br />
உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.<br />
(நூல்: பத்ஹுல் பாரி)<br />
<br />
<b style="color: #3366ff;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா</b> - இந்தியக் குடியரசின் உண்மை அதிகாரங்கள் யாருடைய கையில் உள்ளன ?<br />
<br />
<b>விடை</b> - அமைச்சர்கள் குழுவிடம்.<br />
<br />
<b style="color: #3366ff;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b style="color: #3366ff;">கருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப்பு<br />
<br />
<img alt="26-female-infanticide300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302f008905454f4&attid=0.2&disp=emb&realattid=ii_1302efb69db63420&zw" title="26-female-infanticide300.jpg" /><br />
</b><br />
<br />
பெண்களை தெய்வமாக வணக்கும் இந்தியாவில்தான் பெண் குழந்தைகைளை பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். ஆண் குழந்தைகளை மட்டுமே பலரும் விரும்புவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.<br />
<br />
கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் தெரியவந்துள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் அதிக வேறுபாடு எழுந்துள்ளது.<br />
<br />
ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம்<br />
<br />
இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே முதலில் உருவாகும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்து விடுகின்றனர்.<br />
<br />
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி வந்தபின்னர் படித்த பெண்கள் பலரும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு பெண் என்றால் தயங்காமல் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். இப்படி கருவிலேயே கொல்லப்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 12 மில்லியனை எட்டியுள்ளதாக கனடா நாட்டின் டொராண்டாவில் உள்ள உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.<br />
<br />
கருவில் முதலில் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையை எதுவும் செய்யாமல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அதுவே பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதற்கு தயங்குவதில்லை.<br />
<br />
இந்தியார்களின் சமூக வாழ்க்கையில் ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்ல காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனப்பான்மை படித்த மற்றும் பணக்காரர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.<br />
<br />
ஒரு குழந்தை பாலிசி<br />
<br />
அண்டை நாடான சீனாவில் ஒரு குழந்தை கொள்கை கடைபிடிக்கப்படுவதால் முதலில் உருவாகும் பெண் குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்கள் ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்ற <br />
எண்ணத்தில் ஸ்கேன் செய்து பார்த்து பெண்குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆண், பெண் பாலினத்திற்கு இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.<br />
<br />
1990 முதல் 2005 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது 1990 ஆம் ஆண்டில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகளே பிறந்துள்ளன என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.<br />
<br />
1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான கடைசி 30 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 1.2 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதே இந்த விகிதாச்சார மாறுபாட்டிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 : 1 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து விடும். பெண் குழந்தைகளை திருமணம் செய்வதற்காக ஆண்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும்.<br />
<br />
கேள்விக்குறியான ஸ்கேன் தடைச்சட்டம்<br />
<br />
கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை ஸ்கேன் பரிசோதனை செய்து பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடை செய்வதற்காக இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்வதை எதன் மூலமும் தடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் வருங்கால தலைமுறை ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடி வேற்றுகிரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்<br />
<br />
<br />
<b>* "நிச்சயம் படிப்பேன்!' </b><br />
<br />
<img alt="large_246997.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1302f008905454f4&attid=0.4&disp=emb&realattid=ii_1302ef9d077469b1&zw" title="large_246997.jpg" /><br />
<br />
செங்கல் சூளையில் வேலை பார்க்கும், நர்சிங் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள இருளாயி: பழநிக்கு அருகில் உள்ள, கோதைமங்கலம் எனும் சிறிய கிராமம் தான் சொந்த ஊர். என் பெற்றோர், கூலி வேலைக்கு, பழநியிலிருந்து, தாராபுரம் வரை செல்பவர்கள். நான் அதிகாலையே எழுந்தால் தான், சமையலை முடிக்க முடியும். அவர்களுக்கான மதிய உணவை தயார் செய்து கொடுக்கும் பொறுப்பு, என்னுடையது. நான்கு மணிக்குள் வேலைகளை முடித்துவிட்டு, 6 மணி வரை உறக்கம். அதற்கு பின், தம்பி தங்கையை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். அது முடிந்த பின், அவர்களுக்கான உணவை தயாரிக்க வேண்டும். வீட்டில் காஸ் அடுப்பெல்லாம் கிடையாது; விறகு அடுப்பு தான். ஊதாங்குழலால் ஊதி, ஊதி சமைக்க வேண்டும். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து, மீண்டும் சமையல், துணி துவைத்தல் என்று, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, தம்பிக்கு வீட்டுப்பாடம் கற்றுக் கொடுத்து முடிக்க, இரவு 10 மணியாகிவிடும். அதற்கு மேல், தான் படிக்க முடியும். வீட்டிலிருக்கும் ஒரே ஒரு குண்டு பல்பு, 10 மணிக்கு மேல் எரிந்தால், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால், தெருவிளக்கில் அமர்ந்து, இரண்டு மணி வரை படிப்பேன். இத்தனை வறுமைக்கு நடுவில் படித்து தான், நர்சிங் பாடத்தில், 200க்கு, 181 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்தேன். இனி இதற்கு மேல் படிக்க முடியாது; ஏதாவது வேலை தேட வேண்டும். அதனால், நல்ல வேலை கிடைக்கும் வரை, வீட்டிற்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தேன்; தினக் கூலி தான். ஆனால், நிச்சயம் மேலே படிப்பேன். இப்ப இல்லாட்டியும், நானே சம்பாதித்து படிப்பேன். நர்சிங் படிக்க வேண்டும் என்பது என் லட்சியம். டிப்ளமோ நர்சிங் படிச்சா கூட போதும். ஏன்னா, நான் சீக்கிரம் படித்தால் தான், என் தம்பியை படிக்க வைக்க முடியும்.<br />
<br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-27919636505321605892011-05-24T07:21:00.000+05:302011-05-24T07:21:16.473+05:30இன்றைய செய்திகள் - மே 24, 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #009900;"><br />
<img alt="23-kodaikanal-lake300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.2&disp=emb&realattid=ii_1301f7a889aefadc&zw" title="23-kodaikanal-lake300.jpg" /><br />
<br />
கொடைக்கானல் ஏரி.<br />
<br />
<br />
முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: அரசுக்கு அமைப்புகள் கோரிக்கை</b><br />
<br />
சென்னை, மே 23: சமச்சீர் கல்வியை அமல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.<br />
<br />
இந்திய மாணவர் சங்கம்: பொதுப்பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் நிறுத்திவைக்கும் புதிய அரசின் அமைச்சரவை முடிவு சரியானதல்ல. எனவே, அதை அமல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.<br />
<br />
பொதுப்பாடத்திட்டத்தில் சில குறைகள் உள்ளதையும், அதில் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்கிறோம்.<br />
<br />
ஆனால், அதை இந்தப் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டேதான் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.<br />
<br />
கடந்த தி.மு.க. அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல், பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பான முழுமையான சமச்சீர் கல்வியை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.<br />
<br />
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:<br />
<br />
இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நவடிக்கை எடுக்கலாம். ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.<br />
<br />
பழைய பாடத்திட்டத்தின் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும். அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள். தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.<br />
<br />
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:<br />
<br />
சமச்சீர் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணழர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறத்தக்க வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.<br />
<br />
<b style="color: #009900;">உலகச் செய்தி மலர் :</b><br />
<b>* ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இலங்கை அரசை சிக்கவைக்குமா?</b><br />
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியும் என ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ தெவித்துள்ளார்.<br />
<br />
இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான முதன்மையான அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகாரம் அவ்வரசாங்கத்துக்கே உரித்துடையதாகும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.<br />
<br />
இது தொடர்பில் பேச்சாளர் நெசர்கீ மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்ள முடியும். மேற்படி அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளையும் எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.<br />
<br />
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 17ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. 47 நாடுகளும், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இந்த அமர்வில் கலந்து கொள்ள உள்ளன.<br />
<br />
மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றியோ, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பற்றியோ விசேடமாக குறிப்பிடப்படாவிட்டாலும், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சில நாடுகள் முன்மொழிந்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்வதற்காக கொழும்பிலிருந்து மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஒன்று அடுத்த வாரத்தில் ஜெனிவாவுக்கு செல்ல உள்ளது.<br />
<br />
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் அக்குழுவில் அடங்கியுள்ளனர்.<br />
<br />
ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் 28ஆவது அங்கமாக இணைக்கப்பட்டுள்ள நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கூட்டுப் படுகொலைகள் என்ற அம்சத்தின் கீழ் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படலாம் என்ற மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
எனினும், நிகழ்ச்சி நிரலில் இதுவரை இலங்கைக்கு எதிரான எந்தவொரு பிரேரணையும் சேர்க்கப்படவில்லை. நீதிக்கு புறம்பான கொலைகள் என்ற விடயம் ஆராயப்படும் போது ஐ.நா.நிபுணர்குழு முன்வைத்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டை சில நாடுகள் முன்மொழியலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.<br />
<br />
இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன<br />
<br />
<b>* முல்லா உமர் உயிருடன்தான் இருக்கிறார் - தாலிபான் </b><br />
<br />
தாலிபான் தலைவர் முல்லா உமர் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளை தாலிபான் மறுத்துள்ளது. மேலும் அவர் உயிருடந்தான் இருக்கிறார் என்றும் ஆப்கானிஸ்தானத்தில்தான் இருக்கிறார் என்றும் தாலிபான் தெரிவித்துள்ளது.<br />
<br />
தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறுகையில், "இந்தச் செய்தி முழுதும் தவறு, இது ஒரு பிரச்சாரமே தவிர வேறில்லை. நாங்கள் இந்த வதந்திகளை முழுமையாக மறுக்கிறோம்" என்றார்.<br />
<br />
மேலும், "அவர் ஆப்கானில்தான் இருக்கிறார், அவர் தனது ராணுவப்பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார்" என்றார்.<br />
<br />
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரிலிருந்து வடக்கு வாஜிரிஸ்தான் நோக்கி உமர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் ஹமீத் குல் என்பவருடன் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.<br />
<br />
இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஜெனரல் குல் தெரிவிக்கையில் உமர் கொல்லப்பட்டார் என்பது முற்றிலும் தவறு என்றார்.<br />
<br />
அவர் குவெட்டாவிலிருந்து வடக்கு வாஜிரிஸ்தான் பகுதிக்கு 2 நாட்கள் முன்னரே சென்று விட்டதாகவும் தாலிபான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.<br />
<b><br />
* தீவிரவாதிகளிடம் இருந்து கடற்படைத் தளம் மீட்பு </b><br />
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தை கைப்பற்றி உள்ளிருந்து முற்றுகையிட்ட தாலிபான் தீவிரவாதிகளிடமிருந்து 18 மணி நேர கடும் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தான் இராணுவம் மீட்டுள்ளது.<br />
<br />
பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பெரிய உளவு விமானங்களும், 12 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.<br />
<br />
மே 2ஆம் தேதி அமெரிக்காவின் அதிரடிப்படையினர் அபோட்டோபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை கொன்றதற்கு பழி தீர்க்க இத்தாக்குதலை தாங்கள் நடத்தியதாகத் தெரிவித்துள்ள தாலிபான் பேச்சாளர் அசானுல்லா கான், இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் தியாகத்தை தழுவும் நோக்கோடு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.<br />
<br />
நேற்று இரவு கராச்சியில் உள்ள மெஹ்ரான் கடற்படைத் தளத்திற்குள் கையெறி குண்டுகளை வீசியும், ராக்கெட்டுகளை சுட்டுக்கொண்டும் உள்ளே நுழைந்த 10 முதல் 15 தீவிரவாதிகள், அங்கு பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.<br />
<br />
இந்தத் தளத்தில் இருந்த 6 அமெரிக்கப் படையினர் அங்கிருந்து காயமின்றித் தப்பியதாகவும் செய்திகள் கூறுகின்றன.<br />
<br />
தீவிரவாதிகளுடனான சண்டை முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை பேச்சாளர் இர்ஃபான் உல் ஹக், “கடற்படை தளம் மீட்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.<br />
<br />
<b>* அமெரிக்க சூறாவளிக்கு 30 பேர் பலி </b><br />
அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட ராட்சத 'டொர்னாடோ' சூறாவளிக்கு 30 பேர் பலியாகினர்<br />
<br />
ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். "கட்டடங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள், வால்மார்ட் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள் என்று நகரம் முழுவதும் முழுமையாக சேதமடைந்துள்ளது.<br />
<br />
மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.<br />
<br />
இதனிடையே, சூறாவளி பாதிப்புகள் மேலும் தொடரலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மிசெளரி மாகாணத்தில் ஆளுநர் ஜே நிக்ஸன், அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.<br />
<br />
சூறாவளியில் உயிரிழந்தவர்களில் இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.<br />
<br />
<b>* சுழற்காற்றில் 24 பேர் பலி</b><br />
<br />
<img alt="suravalirain.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.7&disp=emb&realattid=ii_1301f77c18e60d2c&zw" title="suravalirain.jpg" /><br />
<br />
சிகாகோ, மே 23: தென்கிழக்கு அமெரிக்க மாநிலமான மிசூரியில் வீசிய சுழற்காற்றில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மிசூரி மாகாணத்தின் ஜோப்லின் நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலமான சுழற்காற்று வீசியது. இதில் பல வீடுகள் நொறுங்கின. பல கடைகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. அங்கிருந்த மருத்துவ மனைக் கட்டடம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில ஆளுநர் ஜே நிக்ஸன் இந்தப் பகுதியில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இப்பகுதியில் மேலும் சுழற்காற்று தொடர்ந்து வீசக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* மும்பை தாக்குதல்: "ஐஎஸ்ஐ.யுடன் ராணாவுக்கு தொடர்பு'</b><br />
<br />
சிகாகோ, மே 23: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் டேவிட் ஹெட்லியின் கூட்டாளி ராணாவுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யுடன் தொடர்பு இருந்துள்ளது என்று அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அரசுத் தரப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக சிகாகோ நீதிமன்றத்தில் தனது வாதங்களை எடுத்துரைத்த அமெரிக்க துணை அட்டர்னி சாரா ஸ்ட்ரீக்கர், மும்பை தாக்குதல் நடந்து முடிந்த பிறகு அது குறித்த தகவலை டேவிட் ஹெட்லியிடம் ரணா தெரிவித்துள்ளார். அதே போல் மும்பையில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்துவது என்று குறிக்கும் படங்கள் அடங்கிய உறை ஒன்றையும் முன்னதாக டேவிட்டிடம், ராணா அளித்ததாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.<br />
<b style="color: #009900;"><br />
தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> 2ஜி ஊழல்: பெரு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பிணைய விடுதலை மறுப்பு</b><br />
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பயனடைந்ததாக குற்றஞ்சாற்றப்பட்டுள்ள பெரும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணைய விடுதலை அளிக்க மறுத்துவிட்டது.<br />
<br />
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனமான ஸ்வான் டெலகாமின் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி நிறுவனத்தின் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய ஐந்து பேரும் சி.பு.ஐ.சிறப்பு நீதிமன்றத்தால் பிணைய விடுதலை மறுக்கக்கட்டவர்களாவர்.<br />
<br />
ம.பு.க.சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஜித் பாரியோக், ம.பு.க. சார்பாக வாதிட்ட அரசு வழக்குரைஞர் லலித் முன்வைத்த வாதத்தை ஏற்று இவர்களின் பிணைய விடுதலை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.<br />
<br />
“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் இவர்களும், இவர்களின் நிறுவனங்களும் பெரும் பயனை அடைந்துள்ளன. அது மட்டுமின்றி, இந்த முறைகேட்டை அமைச்சராக இருந்த ஆ.இராசாவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றியும் உள்ளனர். எனவே இவர்களுக்கு பிணைய விடுதலை அளிக்கக் கூடாது” என்று லலித் வாதிட்டார்.<br />
<br />
இதே நீதிமன்றத்தி்ல்தான் கனிமொழியின் சார்பாக பிணைய விடுதலை கோரிக்கை மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<b>* 2 ஜி வழக்கு: ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு</b><br />
<br />
டெல்லி: 2 ஜி வழக்கில் சிறையில் உள்ள யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநர் கவுதம் தோஷி உள்ளிட்ட 5 கார்ப்பொரேட் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவி்ட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.<br />
<br />
2 ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிபி ரியல்டிஸ் புரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸின் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா உள்ளிட்டோரும் தங்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.<br />
<br />
இந்த ஐவரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி அஜீத் பாரிஹோக், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இவர்களின் கோரிக்கையில் அடிப்படை நியாயமில்லாததால் ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்த நீதிபதி, தனது விரிவான ஆணையை படித்துக் காட்டவில்லை.<br />
<br />
<b>* கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி-ஆளுநர் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு</b><br />
டெல்லி: கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் என்ற மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி வருமா என்ற குழப்பத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.<br />
<br />
கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கர்நாடக ஆளுநராக்கப்பட்டார். அன்று முதல் தொடர்ந்து முதல்வர் எதியூரப்பாவுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
இவர்களது சண்டையால் கர்நாடகத்தில் தொடர்ந்து பரபரப்பும், பதட்டமும் நிரந்தரமாக நிலவி வருகிறது.<br />
<br />
எதியூரப்பாவுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே பரத்வாஜ், முதல்வருடன் மோதத் தொடங்கி விடுவார். பள்ளிக்கூடக் குழந்தைகள் போல இருவரும் இப்படி தொடர்ந்து விளையாடி வருவதால் கர்நாடக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.<br />
<br />
கடந்த ஆண்டு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் நடந்து கொண்டதற்குக் கண்டனம் தெரிவித்த பரத்வாஜ், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால் அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.<br />
<br />
இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாக சட்டசபை சபாநாயகர் கோபிநாத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பாஜக மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார் பரத்வாஜ்.<br />
<br />
அவரது இந்த செயலால் பாஜக கடும் கோபமடைந்தது. உடனடியாக தனது எம்.எல்.ஏக்களை படை திரட்டி டெல்லி சென்ற முதல்வர் எதியூரப்பா அவர்களை குடியரசுத் தலைவர் முன்பு ஆஜர்படுத்தினார். இதனால் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடமானது.<br />
<br />
மேலும் உடனடியாக பரத்வாஜை நீக்க வேண்டும் என்று எதியூரப்பாவும், பாஜகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். எதியூரப்பா தொடர்ந்து டெல்லியில் முற்றுகையிட்டு பரத்வாஜுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலானது.<br />
<br />
இதையடுத்து பரத்வாஜ் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு எதியூரப்பா எனது நண்பர் என்று பல்டி அடித்தார். எதியூரப்பாவும் பரத்வாஜ் எனது நண்பர் என்று பல்டி அடித்தார். ஆனாலும் பரத்வாஜ் மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் எதியூரப்பா.<br />
<br />
இந்தப் பின்னணியில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆளுநரின் பரிந்துரையை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இதன் மூலம் கர்நாடக ஆளுநரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எதியூரப்பா அரசும் தப்பியுள்ளது.<br />
<br />
<b style="color: #009900;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* 228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு</b><br />
<br />
<img alt="mlas.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.4&disp=emb&realattid=ii_1301f752dbbbcbed&zw" title="mlas.jpg" /><br />
<br />
சென்னை, மே 23: முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட 228 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.<br />
<br />
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சிவபதி, அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் என 4 பேர் பேரவைக்கு வரவில்லை.<br />
<br />
அவர்கள் வேறொரு நாளில் பேரவைத் தலைவரின் அறையில் பதவியேற்றுக் கொள்வார்கள் என சட்டப் பேரவையின் தாற்காலிகத் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.<br />
<br />
14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணிக்குக் கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பேரவை மண்டபத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.<br />
<br />
காலை 11.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவர்களைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் பேரவைக்கு வந்தனர்.<br />
<br />
*<b> தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்</b><br />
<br />
<img alt="23-minister-mariam-pichai-300.jpg" height="150" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.1&disp=emb&realattid=ii_1301f738b4954fa9&zw" title="23-minister-mariam-pichai-300.jpg" width="200" /><br />
<br />
திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.<br />
<br />
சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.<br />
<br />
இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை, காலையிலேயே தயாராகி விட்டார்.<br />
<br />
அமைச்சருடன் அவரது நண்பர் கார்த்திகேயன், உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர்.<br />
<br />
இவர்களது கார், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த டிப்பர் லாரி வலது புறமாக திரும்பியுள்ளது.<br />
<br />
இதை எதிர்பாராததால், கார், டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார் மரியம் பிச்சை. அவருடன் இருந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் அப்படியே உயிர் தப்பினார்.<br />
<br />
அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் இன்று மாலை பாலக்கரை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.<br />
<br />
*<b> கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி </b><br />
<br />
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியை அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.<br />
<br />
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,கடந்த 20-ம் தேதி கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்.<br />
<br />
வழக்கம்போல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. பின்னர் சிறையில் அவர் கருணாநிதியை சந்தித்திருந்தார்.<br />
<br />
அதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத்குமார் ஆகியோரையு்ம் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.<br />
<br />
சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
கனிமொழியைப் பார்த்த பிறகு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிய கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.<br />
<br />
இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழியின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஷரத்குமார் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
ஐவர் ஜாமீன் மனு நிராகரிப்பு<br />
<br />
இதனிடையே, அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் தொழி்ல் நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து முக்கியப் பிரமுகர்களின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது.<br />
<br />
யுனிடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி மேலாண் இயக்குநர் கெளதம் தோஷி, ரிலையனஸ் நிறுவன அதிகாரி ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா மற்றும் டி.பி. ரியால்டி உரிமையாளர் வினோத் கோயங்கா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் ஆதாரமற்றவை என்று கூறி, நீதிபதி அஜித் பாரிஹோக் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.<br />
<br />
இன்னொரு புறம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டடுள்ள சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கனிமொழி, ஷரத்குமாருடன், கரிம் மொரானியும் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார்.<br />
<br />
<b>* முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே சென்னை வருகிறார்?<br />
<br />
<img alt="23-jaya-ranil300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.3&disp=emb&realattid=ii_1301f7268fd5b63b&zw" title="23-jaya-ranil300.jpg" /></b><br />
சென்னை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ரணிலும் ஏற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.<br />
<br />
ரணில் சென்னை வருவது உறுதியானால், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் இலங்கைத் தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கே தரப்பில் கூறுகையில், சென்னைக்கு வருமாறு ஜெயலலிதாவிடமிருந்து ரணிலுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் அதை ஏற்றுள்ளார். இருப்பினும் எப்போது முதல்வர் ஜெயலலிதாவை ரணில் சந்திப்பார் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றனர்<br />
<br />
<b>* சபாநாயகர் வேட்பாளராக ஜெயக்குமார் அறிவிப்பு-துணை சபாநாயகராகிறார் ப.தனபால்<br />
<br />
<img alt="23-jayakumar-dhanapal300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.6&disp=emb&realattid=ii_1301f71c81431316&zw" title="23-jayakumar-dhanapal300.jpg" /></b><br />
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் எம்.எல்.ஏ.வான ப.தனபாலை அறிவித்துள்ளது.<br />
<br />
இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதாவே இன்று வெளியிட்டார். சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.<br />
<br />
கடந்த அதிமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தற்போதைய அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை. இதனால் லேசான சலசலப்பு கூட எழுந்தது. ஆனால் சக்தி வாய்ந்த சபாநாயகர் பொறுப்பை அவருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.<br />
<br />
சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். மே 27ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.<br />
<br />
ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல ராசிபுரம் தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியை தோற்கடித்தவர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பழ. கருப்பையா நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வழக்கறிஞரான ஜெயக்குமாரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று முதல்வர் ஜெயலலிதா கருதியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.<br />
<br />
<b>* 29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளருக்கு தேசிய விருது: எழுத்தாளர்கள் பெருமிதம்</b><br />
கோவை: கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தன் எழுதிய நூலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சுமார் 29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.<br />
<br />
தேசிய விருது<br />
<br />
மத்திய அரசின் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகையருக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. திரைப்பட விருதுகளோடு ஒவ்வொரு ஆண்டும் சினிமா பற்றிய சிறந்த நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருது கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தனுக்கு கிடைத்துள்ளது.<br />
<br />
ஓவியர் ஜீவானந்தன்<br />
<br />
கோவையின் பிரபல ஓவியர் ஜீவானந்தன். இவர் புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் உலக சினிமாக்கள் குறித்து எழுதி வந்தார். சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘திரைச்சீலை’ எனும் நூலை வெளியிட்டது. இது ஓவியர் ஜீவானந்தனின் முதல் நூலாகும்.<br />
<br />
வெளியான போதே பரவலான கவனிப்பைப் பெற்ற இந்த நூல் 58வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றுள்ளது.<br />
<br />
29 ஆண்டுகளுக்கு பின்<br />
<br />
கடைசியாக இந்த விருது 1982-ம் ஆண்டு அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து இந்த விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்தது இலக்கிய உலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது<br />
<br />
* <b>பாரத் பல்கலை. பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்</b><br />
சென்னை, மே 23: மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.<br />
<br />
பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.<br />
<br />
இதுகுறித்து பாரத் அறிவியல் தொழில்நுட்ப மைய முதல்வர் ஆர். காரி தங்கரத்தினம் திங்கள்கிழமை கூறியது:<br />
<br />
வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி அளிப்பதற்காகவும், ஐபிஎம் நிறுவனத்துடன் பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.<br />
<br />
போட்டிகள் நிறைந்த இந்த சூழலில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மிகவும் அவசியம். குறிப்பாக -டெஸ்ட்டிங் சாஃப்ட்வேர்- துறையில் மாணவர்களுக்கு, ஐபிஎம் நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது என்றார்.<br />
<br />
<b>* பாளையங்கோட்டையில் 106 டிகிரி வெயில்</b><br />
<br />
சென்னை, மே 23: தமிழகத்திலேயே அதிக அளவாக பாளையங்கோட்டையில் 106 டிகிரி வெப்பம் திங்கள்கிழமை பதிவானது.<br />
<br />
இதற்கடுத்தபடியாக, வேலூரில் 102 டிகிரியும், திருச்சி, புதுவையில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானது.<br />
<br />
சென்னையில்... சென்னையில் திங்கள்கிழமை 99 டிகிரி வெப்பம் பதிவானது. விமான நிலையத்தில் 102 டிகிரி வெப்பம் பதிவானது. பகல் பொழுதில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக, அனல் காற்று வீசியது.<br />
<br />
மாநகரில் வெப்பம் செவ்வாய்க்கிழமை 102 டிகிரியை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<br />
<br />
<b style="color: #009900;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்<br />
<br />
<img alt="23-castor-oil300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f7cfa6cc2c5b&attid=0.5&disp=emb&realattid=ii_1301f703e0585c50&zw" title="23-castor-oil300.jpg" /></b><br />
தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும்.<br />
<br />
குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.<br />
<br />
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்<br />
<br />
விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.<br />
<br />
ஆமணக்கு வேலி<br />
<br />
மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும்.<br />
<br />
தோலில் கட்டி மற்றும் புண்கள் ஏற்பட்டால் அவற்றின் மீது ஆமணக்கு செடியின் இலைகளை வதக்கி கட்டினால் அவை உடையும், வலி குறையும். வேர்ப்பட்டை பேதி மருந்தாகவும், தோல் வியாதி மருந்தாகவும் பயன்படும்.<br />
<br />
கொட்டைமுத்து, காய்கள்<br />
<br />
ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள். பச்சை நிறமாக இருக்கும் காய்கள் முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும்.<br />
<br />
இவ்விதைகளையே 'ஆமணக்கு முத்து' என்பர். விதைகள் நச்சுச்தன்மை கொண்டவை. இரண்டு விதைகளை தின்றால் கூட மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பின்னர் நச்சு கலப்பதில்லை.<br />
<br />
குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்<br />
<br />
விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பேதியைத் தூண்டும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதன் மருத்துவப்பயன் தெரியவந்துள்ளது. குழந்தைகளை அடிக்கடி இந்த எண்ணெயை குடிக்கச்செய்து வயிற்றினை சுத்தமாக வைப்பர். குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மார்பகங்களின் மீது விளக்கெண்ணெயை தேய்த்து விட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.<br />
<br />
குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர்.<br />
<br />
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.<br />
<br />
பண்டைய பயன்பாடு<br />
<br />
ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. விளக்கெரிக்க இவ்வெண்ணெயைப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் என்று பெயர் வந்ததாக பண்டித அயோத்திதாசர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் சமண முனிவர்கள் விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார்.<br />
<br />
இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர். இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரீஸ்' ஆகும்.<br />
<br />
<b style="color: #009900;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>பங்குச் சந்தையில் 333 புள்ளிகள் சரிவு</b><br />
<br />
மும்பை, மே 23: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும் சரிவு காணப்பட்டது. 333 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 18 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழாக சரிந்தது. கடந்த 2 மாதங்களில் புள்ளிகள் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.<br />
<br />
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 100 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,386 புள்ளிகளாகக் குறைந்தது.<br />
<br />
மூலதன பொருள்கள், மின்சாரம், வங்கித்துறை பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. கிரேக்கத்தின் கடன் சுமையால் கடும் பாதிப்பு ஏற்படும் என கடந்த வாரம் பிட்ச் தர நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதன் பலனாக ஆசிய பங்குச் சந்தையிலும் சரிவு இருந்தது. சர்வதேச அளவில் அனைத்து பங்குச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டதால் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.<br />
<br />
ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஓஎன்ஜிசி, எல்&டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜின்டால் ஸ்டீல், ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டிஎல்எப், ஹிண்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனி லீவர், டாடா பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிஹெச்இஎல் பங்கு விலை அதிகபட்சமாக 6.69 சதவீதம் சரிந்து ரூ. 1,935-க்கும், எல்&டி பங்கு விலை 2.36 சதவீதம் சரிந்து ரூ. 1,612.85-க்கும், பாரத் எர்த் மூவர்ஸ் பங்கு விலை 2.34 சதவீதம் சரிந்து ரூ. 629.60-க்கும் விற்பனையானது.<br />
<br />
பங்குச் சந்தையில் மொத்தம் 1,973 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 801 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்தம் ரூ. 2,371.47 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.<br />
<br />
<b style="color: #009900;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* பிரெஞ்சு ஓபன்: முதல் சுற்றில் சானியா வெற்றி</b><br />
பாரீஸ், மே 23: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா வெற்றி பெற்றார்.<br />
<br />
பாரீஸில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெர்மனியின் கிறிஸ்டினா பரோûஸ 6-3,6-3 என்ற நேர் செட்களில் அவர் வென்றார். சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆக்ரோஷமாக ஆட்டத்தைத் தொடங்கிய சானியா, முதலில் சில தவறுகளைச் செய்தார். தொடக்கத்தில் சர்வீஸ் செய்வதிலும் அவர் திணறினார். எனினும் ஆட்டத்தில் அவரது கையே ஓங்கியது. இதனால் நேர் செட்களில் அவர் வெற்றி பெற்றார்.<br />
<br />
முன்னதாக 2005-ல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் 4 -வது சுற்றுவரை முன்னேறினார். இதுவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவரது அதிகபட்ச சாதனை. பின்னர் 2009-ஆம் ஆண்டுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற அவர் மிகவும் சிரமப்பட்டார். இப்போது பிரெஞ்சு ஓபனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.<br />
<br />
அடுத்த சுற்றில் 12-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னிஸ்கா ரெட்வான்ஸ்கா அல்லது ஆஸ்திரியாவின் பாட்ரிசியாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சர்வதேச தரவரிசையில் சானியா இப்போது 72-வது இடத்தில் உள்ளார்.<br />
<br />
<b>* மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 251 ரன்கள் முன்னிலை</b><br />
<br />
<br />
பùஸட்டரெ, மே 23: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் 251 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் உள்ளது.<br />
<br />
÷முன்னதாக 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்ற 2-வது நாள் ஸ்கோருடன் தனது 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த மேற்கிந்தியத்தீவுகள் 223 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.<br />
<br />
அந்த அணியில் சாமுவேல்ஸ் 57 ரன்கள் எடுத்தார். ராம்பால் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்தது.<br />
<br />
÷பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், தபீக் உமர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடர்ந்தனர்.<br />
<br />
÷ஹபீஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அசார் அலி முதல் இன்னிங்ûஸப் போல இந்த இன்னிங்கிஸýம் அரைசதம் அடித்தார்.<br />
<br />
அவர் 53 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்கிஸில் அவர் எடுத்த 67 ரன்களே பாகிஸ்தான் அணியில் அதிகபட்ச ரன் ஆகும்.<br />
<br />
÷முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன ஆசத் அலி இந்த இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.<br />
<br />
÷தபீர் உமர் கொடுத்த 3 கேட்ச்சுகளை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் கோட்டை விட்டனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் 97 ரன்கள் எடுத்து ஆட்டநேரம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மிஸ்பா 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.<br />
<br />
÷3-வது நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 251 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.<br />
<br />
மேலும் இரண்டு நாள்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தான் மேலும் 100 ரன்கள் குவித்தால், அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த இருநாள்களில் மேற்கிந்தியத்தீவுகள் சிறப்பாக ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.<br />
<br />
÷இந்த டெஸ்ட் தொடர் இரண்டு ஆட்டங்களைக் கொண்டது. முன்னதாக முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத்தீவுகள் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #009900;">* அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில்<br />
<br />
<img alt="T_500_415.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f997ad39b01b&attid=0.2&disp=emb&realattid=ii_1301f959adde941b&zw" title="T_500_415.jpg" /></b><br />
மூலவர் : பொன்னழகியம்மன்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : அழகியநாயகி<br />
தல விருட்சம் : மகிழம்<br />
தீர்த்தம் : அம்பாள் தெப்பம்<br />
ஆகமம்/பூஜை : <br />
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : <br />
ஊர் : ஓ.சிறுவயல்<br />
மாவட்டம் : சிவகங்கை<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது. இங்கு அனுமான் ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களைப் பிடித்த நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும்.<br />
<br />
கோயிலுக்கு முன்புறம், சிறிய கல்வடிவில், "கல்லுச்சியம்மன்' காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம்.<br />
<br />
அனுமான் அஞ்சலி ஹஸ்தம் எனப்படும் ராமனை வணங்கிய நிலையிலும், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற அபய ஹஸ்த நிலையிலும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களை பிடித்த நிலையிலுள்ள அனுமானை சிவகங்கை மாவட்டம் ஓ.சிறுவயலில் உள்ள பொன்னழகியம்மன் கோயிலில் தரிசிக்கலாம்.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
அம்பாள் அமைப்பு: அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது.<br />
<br />
ராமர் பாதம் பிடித்த ஆஞ்சநேயர்: பிரகாரத்தில் ராமர், சீதை ஆகியோர் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். ராமரின் இருக்கைக்கு கீழ் இருக்கும் ஆஞ்சநேயர், அவரது காலைப்பிடித்தபடி இருக்கிறார். இதனை, ராமருக்கு ஆஞ்சநேயர் கீழ்பணிந்து பணிவிடை செய்த கோலம் என்கிறார்கள். அருகில் இருக்கும் சீதாதேவி தனது வலதுகாலை மடக்கி உயர்த்திக் கொண்டு, இடக்காலை மட்டும் தொங்க விட்டபடி அனுமன் வணங்குவதை பார்ப்பவள் போல காட்சி தருகிறாள்.<br />
<br />
தன் கணவரின் சேவகனான ஆஞ்சநேயர் எங்கே தன் காலையும் பிடித்து விடுவாரோ என்ற எண்ணத்தில் அவள் தன் ஒரு காலை மட்டும் இப்படி தூக்கி வைத்துக்கொண்டதாக சொல் கிறார்கள்.<br />
<br />
சகோதர தலம்: பிரச்னைகளால் பிரிந்துள்ள சகோதரர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் மீண்டும் சேர்ந்து கொள்வர் என்கிறார்கள். இதற்காக இங்கு "தத்துக் கொடுத்தல்' எனும் சடங்கைச் செய்கிறார்கள்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிழங்கின் மீது கத்தி பட்டு ரத்தம் வெளிப்பட்டது.<br />
<br />
பயந்த தொழிலாளர்கள் ஊர் மக்களிடம் இதனை தெரிவித்தனர். மக்கள் சென்று பார்த்தபோது அம்பாள் சுயம்புவாக இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் கோயில் கட்டினர். <br />
<br />
திருவிழா:<br />
<br />
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #009900;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #009900;">உணவு மண்ணில் வளர்வது எதற்காக? - சாந்தானந்தர்.<br />
<br />
<img alt="tblanmegamideanews_60784548522.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f997ad39b01b&attid=0.4&disp=emb&realattid=ii_1301f94765a33135&zw" title="tblanmegamideanews_60784548522.jpg" /></b><br />
* மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம். சிந்திக்கும் ஆற்றலுடையவர்கள், அளப்பரிய சக்தியுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. சூநான் யார்' என்று சிந்திக்கும்போதே, அவர்களுக்கு உலகம் பற்றிய அனைத்து உண்மைகளும் விளங்கிவிடுகிறது. அனைத்தும் சொந்தமாகி விடுகிறது.<br />
<br />
* நீங்கள் இறைவனின் பாதத்தை சேரவேண்டும் என விரும்பினால், அதிக புண்ணியம் செய்யுங்கள். அதன் பலனை முழுமனதுடன் தியாகம் செய்து விடுங்கள். அவ்வாறு செய்பவர்கள் புண்ணியத்தின் பலனால் இறைவனை சென்றடைவதைவிட, இன்னும் விரைவாக அவரிடம் சேர்ந்து விடுவர். அவர்களுக்கு நிரந்தரமான மனஅமைதியும், பேரின்பமும் கிடைத்துவிடும்.<br />
<br />
<b style="color: #009900;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா - </b>இந்தியக் குடியரசின் நிர்வாகத் தலைவர் யார் ?<br />
<br />
<b>விடை </b>- ஜனாதிபதி.<br />
<br />
<b style="color: #009900;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு சாதனை <br />
<br />
<img alt="large_245233.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301f997ad39b01b&attid=0.3&disp=emb&realattid=ii_1301f939affb3764&zw" title="large_245233.jpg" /></b><br />
திருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.<br />
<br />
அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.<br />
<br />
தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.<br />
<br />
இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.<br />
<br />
ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.<br />
<br />
டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.<br />
<br />
<br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், கூகில் செய்திகள், தின மணி, தின மலர்.<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-42022773838159148172011-05-23T07:14:00.000+05:302011-05-23T07:14:08.271+05:30இன்றைய செய்திகள் - மே , 23, 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #6600cc;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>சட்டசபையில் நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு-27ம் தேதி சபாநாயகர் தேர்வு</b><br />
<br />
சென்னை: 14வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர். சபாநாயகர் தேர்தல் 27ம் தேதி நடைபெறவுள்ளது.<br />
<br />
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டது. புதிய சட்டசபை உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்காமல் உள்ளனர். இடையில் புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு மாறியிருந்த சட்டசபை தற்போது மீண்டும் பழைய கட்டடத்திற்கே இடம் பெயர்ந்து வருகிறது.<br />
<br />
பழைய சட்டசபை அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன.<br />
<br />
இங்கு நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நாளை முற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏக்களுக்கு் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.<br />
<br />
இதற்கு முன்னதாக இன்றுகாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் செ.கு. தமிழரசனுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.<br />
<br />
நாளை எம்.எல்.ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை மண்டபம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
நாளை முதலில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொள்வார். பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
பின்னர் 27ம் தேதி மீண்டும் சட்டசபை கூடும். அப்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.<br />
<br />
அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும். ஜூன் 3ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சபையில், ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும்.<br />
<br />
இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.<br />
<br />
<b>* மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்</b><br />
<img alt="22-chinna-kuthoosi-300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.6&disp=emb&realattid=ii_1301a45262f8fde1&zw" title="22-chinna-kuthoosi-300.jpg" /><br />
<br />
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.<br />
<br />
77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனைக்குச் சென்று சின்னக் குத்தூசியின் உடல் நலம் விசாரித்தனர்.<br />
<br />
மறைந்த சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறந்த முறையில் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் கூட அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் பார்த்து வந்தார்.<br />
<br />
மறைந்த சின்னக் குத்தூசியின் உடல் ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.<br />
<br />
இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் குத்தூசியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>லண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை</b><br />
<br />
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் மரணத்திற்குப் பின்னர் அல் கொய்தாவின் புதிய தலைவராக மாறியிருக்கும் சைப் அல் அதெல், லண்டனைத் தாக்கித் தகர்ப்போம் என எச்சரித்துள்ளார்.<br />
<br />
பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் வகையில் லண்டனில் தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதை சந்திக்க லண்டன் தயாராக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.<br />
<br />
இதுகுறித்து தலிபான் தலைவர்களின் பேச்சுக்களை இடைமறித்து கேட்டு கண்டுபிடித்துள்ளது இங்கிலாந்து உளவுத்துறை. அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் தாக்கி அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என அதெல் உறுதி பூண்டுள்ளாராம்.<br />
<br />
முதலில் லண்டனில் தாக்குதல் நடத்துவோம் என்று அதெல் கூறியதாக அந்த தலிபான் தலைவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை லண்டனில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரயில்களில் நடந் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி அப்போது 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். தற்போதும் அதே போன்ற ஒரு தாக்குதலுக்கு அல் கொய்தா திட்டமிட்டுள்ளதாம்.<br />
<br />
தாக்குதலுக்கு விரைவில் அதெல் உத்தரவிடுவார் என்றும், அது வந்த பிறகு தாக்குதல் நடத்தப்படும் என்றும் தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.<br />
<br />
மேலும் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலைப் போல மிகப் பெரிய சர்வதேச தாக்குதலுக்குத் தயாராகுமாறும் அல்கொய்தா அமைப்பினருக்கு அதெல் உத்தரவிட்டுள்ளாராம்.<br />
<br />
தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் இஷானுல்லா இஷான் கூறுகையில்,எங்களது புதிய தலைவர் லண்டனைத் தாக்க தயாராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஐரோப்பாவின் முதுகெலுப்பு இங்கிலாந்துதான், முதலில் அதை முறிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும். லண்டனில் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அங்கு எங்களுக்கு ஆட்கள் நிறைய இருப்பதால் லண்டனை முதலில் தேர்வு செய்துள்ளோம் என்றார் இஷான்.<br />
<br />
<b>* தாக்குதலைத் தொடர்ந்தால் பதிலடி : அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை </b><br />
தங்கள் நாட்டில் இதற்குமேலும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.<br />
<br />
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.<br />
<br />
இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதை மேலும் விரிவாக்குவது, பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவது குறித்து விவாதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.<br />
<br />
இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் பாஷா, அமெரிக்கா இதற்கு மேலும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன<br />
<br />
<b>* தேவைப்பட்டால் பாக்.கில் மீண்டும் தாக்குதல் - ஒபாமா <br />
<br />
<img alt="opama2.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.7&disp=emb&realattid=ii_1301a43d1a62afa8&zw" title="opama2.jpg" /></b><br />
பயங்கரவாதத் தலைவர்கள் வேறு யாரேனும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தால், பின் லேடனை சுட்டுக் கொன்றதைப் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.<br />
<br />
பிரிட்டனுக்குப் புறப்படுதற்கு முன் பிபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளிட்ட ஒபாமா, பாகிஸ்தானின் இறையாண்மை மீது மரியாதை வைத்துள்ளோம். ஆனால், அமெரிக்க மக்களையோ, கூட்டணி நாட்டு மக்களையோ கொல்லும் பயங்கரவாதிகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.<br />
<br />
அல் கய்டாவின் மற்ற தலைவர்களோ அல்லது தாலிபான் தலைவர் முல்லா ஒமரோ பாகிஸ்தானிலோ அல்லது பிற நாட்டிலோ இருப்பது தெரியவந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, தேவைப்பாட்டால் அமெரிக்கா தன்னிச்சையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.<br />
<br />
<b>* காஷ்மீர்: கண்ணி வெடி கண்டுபிடித்து அழிப்பு </b><br />
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா எல்லையில், பீரங்கிகளை அழிக்கவல்ல கண்ணி வெடி பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
சர்வதேச எல்லை அமைந்துள்ள மாலு சாக் பகுதியில் பாதுகாப்பு கட்டமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் இந்த பீரங்கியை அழிக்கப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கண்ணி வெடியைக் கண்டுபிடித்துள்ளனர்.<br />
<br />
பின்னர், அந்த கண்ணி வெடி செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். <br />
<br />
<b>* ஐஎம்எஃப் முன்னாள் தலைவர் ஜாமீனுக்கு வீட்டை அடமானம் வைத்த மனைவி<br />
<br />
<img alt="imfexcr.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.4&disp=emb&realattid=ii_1301a4221cb06338&zw" title="imfexcr.jpg" /><br />
</b><br />
வாஷிங்டன், மே 22: பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) முன்னாள் தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ் கானை ஜாமீனில் விடுவிக்க வாஷிங்டனில் உள்ள வீட்டை அவரது மனைவி அடமானம் வைத்தது தெரியவந்துள்ளது.<br />
<br />
ஐஎம்எஃப் தலைவராக இருந்த டோமினிக் ஸ்ட்ராஸ் கான், மன்ஹாட்டான் ஹோட்டல் ஊழியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவரை அமெரிக்கப் போலீஸôர் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜாமீனில் அவர் வெளிவந்தார். 27 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை தாக்கல் செய்தால் மட்டுமே ஸ்ட்ராûஸ ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இதையடுத்து ஸ்ட்ராஸின் மனைவி, வாஷிங்டனில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை அடமானம் வைத்து ரூ.27 கோடிக்கான பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்தே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.<br />
<br />
வாஷிங்டனில் உள்ள அந்த வீட்டை கடந்த 2007-ல்தான் ஸ்ட்ராஸ் மனைவி வாங்கினார். ஆசையோடு வாங்கிய அந்த வீட்டை அடமானம் வைக்க நேர்ந்தது ஸ்ட்ராஸின் மனைவிக்கு லேசான சோகத்தை ஏற்படுத்தினாலும் கணவனை ஜாமீனில் மீட்டுவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் என்று<br />
<br />
அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
<b>* ஜப்பான் பொருள்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தளர்த்தப்படும்: சீனப் பிரதமர் அறிவிப்பு.<br />
<br />
<img alt="chinapm.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.1&disp=emb&realattid=ii_1301a41d8a76f2db&zw" title="chinapm.jpg" /><br />
</b><br />
டோக்கியோ, மே 22: ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவையொட்டி அந்நாட்டின் உணவுப் பொருள்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்த சீனா ஒப்புக் கொண்டுள்ளது.<br />
<br />
ஜப்பான், சீனா, மற்றும் தென் கொரியா நாடு பிரதமர்கள் கலந்து கொண்ட 3 நாடுகள் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமி, பூகம்பம், அதனால் ஏற்பட்ட அணு மின் நிலைய பாதிப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் ஜப்பான் பிரதமர் நெüடோ கான், சீனப் பிரதமர் வென் ஜியோபோ மற்றும் தென் கொரியா நாட்டு அதிபர் லீ மியுங்க்பாக் ஆகியோர் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர். அப்போது இயற்கைப் பேரழிவில் இருந்து ஜப்பான் நாடு மீள தேவையான உதவிகளை செய்வோம் என சீனா, கொரிய நாடுகள் உறுதி அளித்தன.<br />
<br />
அணுக்கதிர் கசிவையடுத்து ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 12 வகை உணவுப் பொருள்களுக்கு சீனா தடை விதித்திருந்தது. இதில் 2 பொருள் மீதான தடையை விலக்கிக் கொள்வதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ அறிவித்தார். மேலும் சீன மக்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதற்காக அனுமதி பெற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா முகவர்கள் சீனாவில் அனுமதிக்கப்படுவர் என்றார்.<br />
<br />
ஜப்பான், சீனா, மற்றும் கொரியா பிராந்தியத்தில் உணவு பாதுகாப்பு அவசியம் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. புகுஷிமா அணு மின்நிலையத்தில் இருந்து அதிக அளவு கதிர் இயக்க வீச்சுள்ள தண்ணீரை ஜப்பான் நாடு, கடலில் திறந்துவிட்டதற்கு சீனப் பிரதமரும், கொரிய அதிபரும் அவர்களது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர்.<br />
<br />
மாநாடு துவங்குவதற்கு முன் அதாவது சனிக்கிழமை சீனப் பிரதமர் வென் ஜியோபோ, தென்கொரிய அதிபர் லீ மியுங்க்பாக் மற்றும் ஜப்பான் பிரதமர் நெüடா கான் ஆகியோர் புகுஷிமா அணு உலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.<br />
<br />
*<b> ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா</b><br />
<br />
நியூயார்க், மே 21: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஸ்விட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் தற்போது 14 இடங்களுக்கு உறுப்பினராக இடம்பெற பல்வேறு நாடுகளிடையே போட்டியெழுந்தது.<br />
<br />
ஆசியப் பிராந்தியத்தில் 4 இடம் மட்டுமே இந்த சுற்றில் நிரப்பப்பட வேண்டியிருந்தது. இதில் இந்தியா கலந்து கொள்ளும் திட்டம் இருக்கவில்லை. இருப்பினும், 189 நாடுகள் கலந்து கொண்ட வாக்கெடுப்பின் போது இந்தியாவுக்கு 181 வாக்குகள் கிடைத்தது.<br />
<br />
இந்தோனேசியா (184), பிலிப்பின்ஸ் (183), குவைத் (166) ஆகிய மற்ற நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற நாடுகள்.<br />
<br />
இந்த நாடுகளின் பதவிக்காலம் ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது. மூன்று ஆண்டு காலத்துக்கு இந்தக் கவுன்சிலில் இந்தியா இடம் வகிக்கும்.<br />
<br />
இது குறித்து ஐ.நா.வில் இந்தியாவின் துணைத் தூதுவரகா உள்ள மன்ஜீவ் சிங் புரி கூறியது:<br />
<br />
""உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது. பல மொழிகள், பல இனங்கள், வாழும் சமூகம் இங்குள்ளது. இந்தியாவின் முக்கியத்துவத்தை ஐ.நா. அங்கீகரித்துள்ளது என்பதையே நமது வெற்றி சுட்டிக்காட்டுகிறது'' என்றார் அவர். <br />
<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* சிக்க வைத்த "செக்!': கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம்<br />
<br />
<img alt="large_244292.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.8&disp=emb&realattid=ii_1301a3fc72720689&zw" title="large_244292.jpg" /><br />
</b><br />
புதுடில்லி: "ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் "டிவி' துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது.<br />
<br />
ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றம், காசோலை மூலம் நடந்ததே, தற்போது, கனிமொழியைச் சிறைக்கு அனுப்பியுள்ளது.<br />
<br />
நேற்று முன்தினம், டில்லி, திகார் சிறையில் கனிமொழியை அடைத்த பின், சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தில், காசோலை மூலம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது, எங்கள் அதிர்ஷ்டம். மூளையைக் குழப்பும் புதிர் போல, ஆங்காங்கே சிதறிக் கிடந்த தகவல்களை ஒன்று திரட்ட, இந்தப் பணப் பரிமாற்றம் தான், முக்கிய ஆதாரமாக விளங்கியது."ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டுக்காக வாங்கப்பட்ட லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, கலைஞர் "டிவி'க்குச் சென்ற பாதையை மட்டும் தான் தற்போது எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அதன் வழியாகத் தான், அந்த, "டிவி'யில், 20 சதவீத பங்கு வைத்துள்ள கனிமொழி சிக்கினார்.மீத லஞ்சப் பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய, மொரீஷியஸ் நாட்டுக்குச் செல்ல உள்ளோம். அங்கு, கணிசமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.சுப்பிரமணி<br />
<div dir="ltr"><wbr></wbr>யசாமி கூறியுள்ளது போல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான பணப் பரிவர்த்தனைகளும், இந்த விவகாரத்தில் நடந்துள்ளதா என்பதை, நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.<br />
<br />
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நிரா ராடியா ஈடுபட்டதாக நாங்கள் கருதவில்லை. எனினும், வோல்டாஸ் நிலம் தொடர்பான விவகாரங்களில், அவர் தலையீடு இருப்பது குறித்து, நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.மேலும், 2001-07ம் ஆண்டுகளில் நடைபெற்ற, "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான புலனாய்வை, நாங்கள் விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.<br />
<br />
<b>* தில்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஜாமீன் மனு?</b><br />
புதுதில்லி, மே 22: 2 ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
2ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழிக்கு தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி கனிமொழி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஜாமீன் மனு திங்கள் கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
கோபாலபுரம் வீட்டில் ஆலோசனை: கனிமொழி கைது நடவடிக்கையின் காரணமாக, அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது சென்னை கோபாலபுரம் வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.<br />
<br />
விருந்துக்கு அழைப்பு: இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மற்றும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.<br />
<br />
<br />
<b>* கர்நாடக அரசு கலைப்பு: ஆளுநர் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு</b><br />
<br />
புது தில்லி, மே 22: எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை கலைத்துவிட்டு கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அம்மாநில ஆளுநர் எச். ஆர். பரத்வாஜ் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துவிட்டது.<br />
<br />
மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.<br />
<br />
கர்நாடக அரசை கலைக்குமாறு ஆளுநர் பரத்வாஜ் அளித்துள்ள பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக ஏற்கெனவே எச்சரித்திருந்தது.<br />
<br />
மேலும், ஆளுநர் பரத்வாஜ் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவரது பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென முதல்வர் எடியூரப்பாவும், பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* 2ஜி வழக்கு: பெருநிறுவன அதிகாரிகள் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு?</b><br />
<br />
<br />
புதுதில்லி, மே 22: 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக யூனிடெக், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 5 அதிகாரிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக யூனிடெக் தமிழ்நாடு நிறுவன மேம்பாட்டாளர் சஞ்சய் சந்திரா, டி.பி.ரியாலிட்டி மேம்பாட்டாளர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும நிர்வாக இயக்குநர் கெüதம் தோஷி, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
ஏப்ரல் 20-ம் தேதி இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை 2ஜி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.<br />
<br />
இதை எதிர்த்து இவர்கள் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த 9-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.<br />
<br />
* <b>ஜிசாட்-8 சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது</b><br />
பெங்களூர், மே 22: ஜிசாட்-8 செயற்கைக்கோளின் சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.<br />
<br />
தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து 3,100 கிலோ எடை கொண்ட இந்திய விண்கலம் ஜிசாட்-8 சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள வீடுகளில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உதவும் ஜிசாட்-8 செயற்கைக்கோள் புவிநிலை மாற்று சுற்றுவட்டத்தில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹாசனில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) தலைமைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 3.58 மணிக்கு, ஜிசாட்-8 செயற்கைக்கோளில் இருக்கும் 440 நியூட்டன் திரவ அபோகி மோட்டார் (எல்ஏஎம்) இயக்கப்பட்டது.<br />
<br />
இதன் மூலம், பூமியில் இருந்து 15,786 கி.மீ. உயரத்துக்கு செயற்கைக்கோளை கொண்டு செல்லும் பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதற்காக எல்ஏஎம் 95 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நீள்வட்டப் பாதையில் 35,768 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோள் பறக்கும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
பூமத்திய ரேகையை மையமாக கொண்டு 2.503 டிகிரி சாய்வாக இயங்கிவந்த ஜிசாட்-8, இப்போது 0.5 டிகிரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இப்போதைய சுற்றுவட்டப்பாதையை 15 மணி 56 நிமிடங்களில் செயற்கைக்கோள் வலம் வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.<br />
<br />
<b>* ரூ.19 கோடி மோசடி: 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்</b><br />
கவுகாத்தி,மே 22 :போலி உத்தரவு மூலம் போலீசாரை நியமனம் செய்து ரூ.19 கோடி மோசடி செய்தது தொடர்பாக 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.<br />
<br />
அசாம் மாநிலத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் பலர் போலியாக நியமிக்கப்பட்டு அரசு பணம் ரூ.19 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது.இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த 2009-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் போலி உத்தரவு மூலம் போலீசார் பலர் நியமிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பரேஷ் நாக், இந்திர கந்தா,ஜெய்பான்சிங் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.<br />
<br />
* <b>குளிர் பானத்தில் பூச்சி: நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு<br />
</b><br />
புதுதில்லி, மே 22: குளிர்பானத்தில் பூச்சி கிடந்ததையடுத்து அதை தயாரித்த நிறுவனம், விற்பனை செய்த கடைக்காரர் ஆகியோர் ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தில்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.<br />
<br />
தில்லியைச் சேர்ந்தவர் மோகன்லால். வியாபாரியான இவரைச் சந்திக்க சில மாதங்களுக்கு முன் தொழில் தொடர்பான பிரதிநிதிகள் வந்தனர். அப்போது அவர்களுக்கு மோகன்லால் "லிம்கா' குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். மொத்தம் 5 பாட்டில் குளிர்பானம் வாங்கினார். அதில் ஒரு பாட்டிலில் கொசு போன்ற பூச்சி ஒன்று கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டார். இதனால் வியாபாரப் பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தாமலேயே அவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.<br />
<br />
இதைத்தொடர்ந்து பூச்சி கிடந்த அந்த பாட்டிலுடன் கடைக்குச் சென்று விசாரித்தபோது கடைக்காரர் சரியான பதில் சொல்லவில்லை.<br />
<br />
இதையடுத்து அந்த குளிர்பானத்தை தயாரித்த ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனத்துக்கும் கடிதம் எழுதினார். ஆனால் அவர்களும் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தில்லி நுகர் நீதிமன்றத்தில் மோகன்லால் வழக்குத் தொடர்ந்தார். அதில் தனது புகாரைக் குறிப்பிட்டு இதனால் தனது வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதற்காக நஷ்டஈடாக ரூ.5.75 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.<br />
<br />
இதையடுத்து லிம்கா குளிர்பானத்தை தயாரித்த ஹிந்துஸ்தான் கோககோலா நிறுவனத்துக்கும் அதை விற்பனை செய்த சில்லரை வியாபாரி ஹேமந்த் குமாருக்கும் நோட்டீஸ்<br />
<br />
அனுப்பப்பட்டது. இந்த புகாரை நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் எம்.பி. மகேந்தர் அட்டா விசாரித்து வந்தார். இதில் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரி மோகன்லாலுக்கு நீதிமன்றச் செலவுடன் சேர்த்து ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். இத்தொகையை குளிர்பான தயாரிப்பு நிறுவனமும் சில்லரை வியாபாரி ஹேமந்த்குமாரும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.<br />
<br />
குளிர்பான தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுகையில் மோகன்லால் குளிர்பானம் வாங்கியதற்கான ரசீதை தாக்கல் செய்யவில்லை என கூறப்பட்டது. ஆனால் இதை நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஏற்கவில்லை. குளிர்பானம் வாங்குவோர் யாரும் பில் வாங்குவதில்லை என்றார் அவர்.<br />
<br />
* <b>மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கைது</b><br />
<br />
<img alt="sachinf.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.5&disp=emb&realattid=ii_1301a3d2bfb9a15d&zw" title="sachinf.jpg" /><br />
புதுதில்லி, மே 22: போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட்டை உத்தரப்பிரதேச போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.<br />
<br />
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள கிராமங்களில் சாலை மேம்பாட்டுப் பணிக்காக அம்மாநில அரசு விவசாயிகள் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி நொய்டா அருகேயுள்ள பட்டா மற்றும் பர்செüல் கிராம மக்கள் கடந்த 7-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஆண்களும்,பெண்களுமாக ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸôர் கலைந்து செல்லும்படி கூறியும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸôர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம்போல காட்சியளித்தது. விவசாயிகள், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
இச்சம்பவத்தையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், காஸியாபாத்திலுள்ள தாஸ்னா சிறையில் இருப்போரைச் சந்திக்கவும் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு பட்டா மற்றும் பர்செüல் கிராமங்களுக்கு காங்கிரஸ் பிரமுகர்களுடன் சச்சின் பைலட் சென்றார்.<br />
<br />
ஆனால் அவரை அக்கிராமத்துக்குச் செல்லக்கூடாது என போலீஸôர் தெரிவித்தனர். அதை மீறி சச்சின் பைலட் செல்லவே அவரை போலீஸôர் கைது செய்தனர். ஏற்கெனவே இதுபோல் விவசாயிகளைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் போலீஸôர் கைது செய்து பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: நொய்டா சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி யாஸ்மின் அப்ரார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பட்டா மற்றும் பர்செüல் கிராம மக்கள் போலீஸôர் துன்புறுத்தலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். பலர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச அரசு விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சாட்சியங்களை உத்தரப்பிரதேச அரசு கலைக்கும்முன் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.<br />
<br />
பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு: யாஸ்மினின் இந்த கருத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக யாஸ்மின் கூறியிருப்பது சரியல்ல. அது தவறான தகவல் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.<br />
<br />
இதுதொடர்பாக சனிக்கிழமை அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்தை தேசிய மகளிர் ஆணையத் தலைவி எதிரொலித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீது தனக்குள்ள விசுவாசத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு பிரதமர் இன்று பயணம்</b><br />
<br />
புதுதில்லி,மே 22: 6 நாட்கள் சுற்றுப்பயணமாக எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.<br />
<br />
இந்தத் தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் (மேற்கு) விவேக் கட்சுý ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:<br />
<br />
ஆப்பிரிக்க நாடுகளிடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மன்மோகன் சிங் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு மே 24, 25-ம் தேதிகளில் அடிஸ் அபாபா நகரில் நடைபெறவுள்ளது. அல்ஜீரியா, எகிப்து, கென்யா, லிபியா, நமீபியா, நைஜீரியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 15 நாட்டுப் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் அந்த மாநாட்டில் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார். அடிஸ் அபாபாவில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை சீர்திருத்தம், தீவிரவாதம், சோமாலியா கடல் கொள்ளையர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கிறார்.<br />
<br />
சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதம், கடற்கொள்ளையர்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பது, அதற்கான வழி என்ன என்பது குறித்தும், இந்த பிரச்னையில் ஆப்பிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் அந்நாட்டுத் தலைவர்களுடன் மன்மோகன் சிங் விவாதிக்கிறார்.<br />
<br />
இந்த பேச்சுவார்த்தையின்போது சோமாலியா கடற்கொள்ளையர்கள் பிரச்னைக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும். ஏனெனில் இந்தக் கொள்ளையர்களால் இந்திய கப்பல் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றன. கப்பல்களை கடத்துவதோடு, அதில் பணியாற்றும் ஊழியர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றனர்.<br />
<br />
இதுவரை 200 முறை கடல் கொள்ளையர்கள் இந்தியக் கப்பல்களை தாக்கியுள்ளனர். இதில் 70 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களை விடுவிக்க ரூ.225 கோடி பிணைத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
மாநாட்டின்போது கென்ய அதிபரும், ஆப்பிரிக்க நாடுகள் கூட்டமைப்பின் தற்போதைய தலைவருமான ஓபியங் நுகுமா பாசோகோவுடன் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உறவு குறித்து பிரதமர் மன்மோகன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அடிஸ் அபாபா மாநாட்டு முடிவில் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளுடையே உள்ள உறவைப் பலப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்படும். ஆப்பிரிக்க நாட்டுடன் நமது உறவு எந்தவிதத் தலையீடும் இல்லாதது. இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் நல்ல நண்பர்கள், நல்ல சகோதரர்கள். இது நீடிக்கும்.<br />
<br />
ஆப்பிரிக்க நாடுகளுடன் மனித வளம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், அடிப்படை கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் விவாதிக்கிறார். அப்போது அவர் அந்நாட்டு சுற்றுப்பயணம் நினைவாக அஞ்சல் தலை, "2 பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற நூலையும் வெளியிடுகிறார்.<br />
<br />
மாநாடு முடிந்த பின்னர் மன்மோகன் சிங் எத்தியோப்பியா நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் மெலிஸ் செனாவியை சந்தித்து இரு நாட்டு உறவுகள், சர்வதேசப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார். மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.<br />
<br />
இதைத்தொடர்ந்து 3 நாள் பயணமாக மன்மோகன்சிங் மே 26-ம் தேதி தான்சானியா நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜகையா கிக்வேட்டுடன் இரு நாட்டு வர்த்தக உறவு குறித்து விவாதிக்கிறார்.<br />
<br />
தான்சானியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதுபோல் இரு நாடுகளின் வளர்ச்சி குறித்தும் அந்நாட்டு பிரதமருடன், மன்மோகன் சிங் விவாதிக்கிறார் என்றார் விவேக் கட்சு.<br />
<br />
இந்த சுற்றுப்பயணத்தில் மன்மோகன் சிங்குடன், அவரது மனைவி குருசரண் கெüர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமரின் முதன்மைச் செயாளர் டிகேஏ நாயர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் செல்கின்றனர்<br />
<br />
<b style="color: #6600cc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம் </b><br />
<br />
இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.<br />
<br />
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தற்போதைய சமச்சீர் பாடத் திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இலலை. எனேவ, சமச்சீர் பாடத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தையே தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், ஜூன் 15ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. <br />
<br />
<b>* தமிழகத்தில் முதல் முறையாக மேட்டூர் அணை ஜூன் 6-ல் திறப்பு<br />
<br />
<img alt="mettur.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.3&disp=emb&realattid=ii_1301a4198c5762c5&zw" title="mettur.jpg" /></b><br />
சென்னை, மே 22: மேட்டூர் அணை ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.<br />
<br />
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:<br />
<br />
மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் குறுவைப் பாசனத்துக்கு உதவிகரமாக இருக்கும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், மேட்டூர் அணையில் நீர் இருப்பதையும், இயல்பான தென்மேற்கு பருவ மழையை எதிர் நோக்கியும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி நீர்வரத்து வரப்பெறும்.<br />
<br />
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவைப் பாசனத்தை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு வசதியாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்து விட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.<br />
<br />
முதல் முறையாக திறப்பு: நாடு குடியரசான பின்பு, மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறை. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை எடுத்துள்ளது.<br />
<br />
நீர் இருப்பு எவ்வளவு? மேட்டூர் அணையின் இப்போதைய நீர் மட்டம் 113.63 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 118 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் இருப்பின் அளவு ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நிலவரப்படி 83.67 டி.எம்.சி. ஆகும்.<br />
<br />
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணையில் நீர் இருப்பு வெறும் 36 டி.எம்.சி.ஆக மட்டுமே இருந்தது. இதனால் கடந்த ஆண்டு விவசாயத்துக்காக<br />
<br />
ஜூலை 28-ம் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு வழக்கமான தேதிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
<br />
<b>* சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு</b><br />
<br />
சென்னை, மே 22: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட உள்ளன.<br />
<br />
இந்த ஆண்டு மொத்தம் 7 லட்சத்து 69 ஆயிரத்து 929 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர்.<br />
<br />
இதில் பாட்னா மண்டலத்தைத் தவிர பிற மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகளை காலை 10 மணி முதல் தெரிந்துகொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. பாட்னா மண்டலத்துக்கு மே 27-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.<br />
<br />
தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.<br />
<br />
<a href="http://www.results.nic.in/" target="_blank">www.results.nic.in</a>,<br />
<br />
<a href="http://www.cbseresults.nic.in/" target="_blank">www.cbseresults.nic.in</a>,<br />
<br />
<a href="http://www.cbse.nic.in/" target="_blank">www.cbse.nic.in</a><br />
<br />
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் 011-24357270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.<br />
<b><br />
* சொல்வன்மை சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும்: பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்<br />
<br />
<img alt="bharathibaskar.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a47e347ae20b&attid=0.2&disp=emb&realattid=ii_1301a38f14a8a260&zw" title="bharathibaskar.jpg" /></b><br />
மதுரை, மே 22: சொல்வன்மை சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும். அப்போதுதான் அது மக்களின் வாழ்த்தைப் பெறும் என்று பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.<br />
<br />
மதுரை கம்பன் கழக எட்டாம் ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிர் அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:<br />
<br />
மனிதனின் மனது நன்மையை நாடுவதைவிட தீமைகளை ஆராய்ச்சி செய்வதிலேயே மகிழ்ச்சி அடைகிறது. கம்பராமாயணத்தில் வரும் மந்தரை எனும் கூனியின் கதாபாத்திரம் இத்தகையது.<br />
<br />
ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் சில விஷயங்கள் கேள்விக்குறியாகவே கம்பன் வைத்துள்ளான். குழந்தையை யாராவது வாரி எடுக்கும்போது அது எடுப்பவரை அடிக்கும். அதற்காக யாரும் குழந்தை மீது கோபப்பட மாட்டார்கள். இந்த விஷயத்தில் சிறுவயதில் இருந்தபோது ராமனின் செயலுக்கு மந்தரையின் கோபம் நியாயமானதாகத் தெரியவில்லை. எனினும், ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேறவே மந்தரை என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.<br />
<br />
மந்தரை கதாபாத்திரக் காட்சியில், கைகேயியின் இரும்பு போன்ற மனச்சங்கிலியின் மெல்லிதான பாகத்தை தட்டி வீழ்த்த தெரிந்திருக்கும் தந்திரத்தை தெரிந்து வைத்திருந்தாள் மந்தரை. அதற்காக அவள் உசுப்பிவிட்டது தாய்ப்பாசத்தை. அதேபோன்று அற உணர்வை அசைத்துப் பார்க்கிறாள். இறுதியில் தந்தைப் பாசத்தை வைத்து கைகேயியின் உடைக்கிறாள்.<br />
<br />
அதேபோன்று, ராவணனின் மகத்தான வீழ்ச்சியானது சூர்ப்பனகையின் சொல்வன்மையால் ஏற்பட்டது. சூர்ப்பனகை மனதுக்குள் இருந்தது காமம். அதற்காக அவள் உபயோகித்தது பொய். ராமன் மீது கொண்ட காமம் நிறைவேறாததால் சூர்ப்பனகைக்கு கோபம் வருகிறது. அதன் விளைவால் அரக்கர் குலமே அழிந்து போகிறது.<br />
<br />
மந்தரை, சூர்ப்பனகை ஆகிய இரு கதாபாத்திரங்களின் சொல்வன்மை பெரிதாக கூறப்பட்டாலும், சொல்லின் செல்வன் என்று ஏன் அனுமனைக் கூற வேண்டும். ஏனெனில், ஒருவரது சொல்வன்மை சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் போதுதான் அது வாழ்த்தப்படும். கண்டேன் சீதையை என்ற அனுமனின் சொல்வன்மை அப்படிப்பட்டது என்றார் பாரதி பாஸ்கர். <br />
<br />
இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, கம்பன் கழக புரவலர் சங்கர சீதாராமன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் புலவர் கி.வேலாயுதன் நன்றி கூறினார்.<br />
<br />
<b>* நாடு முழுவதும் நூற்பாலைகள் இன்று ஸ்டிரைக்<br />
</b><br />
கோவை, மே 22: நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, அதைச் சரிகட்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் திங்கள்கிழமை (மே 23) ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துகின்றன. மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு குறைக்கவும் முடிவு செய்துள்ளன.<br />
<br />
கடந்த இரு மாதங்களில் நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்து வருகின்றன.<br />
<br />
நூல் கொள்முதல் குறைந்துவிட்ட சூழலில், தொடர்ந்து உற்பத்தி செய்தால் மேலும் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால் திங்கள்கிழமை ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துவதாக, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு அறிவித்தது.<br />
<br />
தில்லியில் அண்மையில் நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் முக்கிய நூற்பாலை சங்கங்கள் பங்கேற்றன. இக் கூட்டத்தில், ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தவும், அதன்பிறகு தினசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
ஜவுளித் துறையில் நூற்புத் தொழில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் நூல் உற்பத்தியில் 47 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், குஜராத், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.<br />
<br />
"<b>நூற்பாலைகளின் இயக்கம் ஒரு நாள் நிறுத்தப்படுவதால் ஒரு கோடி கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்படும்.</b><br />
இதன் மதிப்பு ரூ. 250 கோடி. தமிழகத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 2,200 நூற்பாலைகள் உள்ளன. இவற்றில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.<br />
<br />
செவ்வாய்க்கிழமை முதல் ஒரு ஷிப்ட் நிறுத்தப்படுவதால், நாளொன்றுக்கு ரூ. 15 லட்சம் உற்பத்தி இழப்பு ஏற்படும்' என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் செயலர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.<br />
<b><br />
* வரும் கல்வியாண்டில் பழைய பாடத்திட்டம் அரசின் முடிவு சரியா? கல்வியாளர்கள் கருத்து<br />
</b><br />
சென்னை, மே 22: வரும் கல்வியாண்டில் பழைய பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.<br />
<br />
தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தையும் உயர்த்தும் வகையில் அமையவில்லை. எனவே, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும்போது கல்வித் தரத்தையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது.இந்தக் கல்வியாண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்று தமிழக அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுத்துள்ளது.<br />
<br />
கல்வியாண்டு தொடங்கும்போது அரசு எடுத்துள்ள இந்த முடிவு மாணவர்களைப் பாதிக்கும் என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.<br />
<br />
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: சமச்சீர் கல்விக்காக கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத்திட்டம் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்டது. வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறு ஆய்வுக் குழு ஆகிய மூன்றுக் குழுக்களால் பாடநூல்கள் எழுதப்பட்டன.<br />
<br />
இந்தப் பாடத்திட்டத்தின் ரூ.200 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாடப்புத்தகங்களில் எழுத்து, கருத்துப் பிழைகள் இருக்குமானால் சுற்றறிக்கைகள் மூலம் அதை நீக்கலாம்.<br />
<br />
ஆனால், பாடத்திட்டத்தையே மாற்றுவது மாணவர்களைப் பாதிக்கும். எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளின் வணிக நோக்கம் நிறைவேற பயன்படும் இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுப்பாடத்திட்டம் அமலில் இருக்கும்போதே, கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசு வல்லுநர் குழு நியமித்து ஆராயலாம் என்றார் அவர்.<br />
<br />
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி: இப்போது அறிமுகப்படுத்தப்பட இருந்தது பொதுப்பாடத்திட்டம் மட்டுமே. சமச்சீர் கல்வி அல்ல. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே சமச்சீர் கல்வி அளிக்க முடியும். பாடப்புத்தகங்களில் சிறிய தவறுகள் இருந்தால், சுற்றறிக்கைகள் மூலம் அதை சரிசெய்யலாம். ஆனால், புத்தகங்களில் உள்ள கருத்துகள் முழுமையாகத் தவறாக இருப்பதாக நினைத்தால் அரசின் இந்த முடிவு தவறல்ல. உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர அரசு முயற்சி எடுக்க வேண்டும்.<br />
<br />
பொதுக்கல்வி வாரிய உறுப்பினர் விஜயன்: சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறேன். பள்ளிக் கல்வி தரமானதாக இருக்க அரசுப் பாடத்திட்டமும், மெட்ரிக் பாடத்திட்டமும் அவசியம்.<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br style="color: #666600;" /> <br />
<b>* ஏலக்காயின் மருத்துவ குணங்கள் </b><br />
<br />
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.<br />
<br />
ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும்.<br />
<br />
மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது.<br />
<br />
பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும்.<br />
<br />
செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள்.<br />
<br />
குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.</div><div dir="ltr"></div><div dir="ltr"></div><div dir="ltr"></div><div dir="ltr"><b style="color: #6600cc;"><br />
<img alt="WR_867449.jpeg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a67b5eab1be3&attid=0.4&disp=emb&realattid=ii_1301a654165a588e&zw" title="WR_867449.jpeg" /><br />
<br />
வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி பிடிவாதப் பேச்சு!</b><br />
<br />
<img alt="22-pranab-41-300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a67b5eab1be3&attid=0.3&disp=emb&realattid=ii_1301a645e2f4645b&zw" title="22-pranab-41-300.jpg" /><br />
<br />
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.<br />
<br />
மும்பையில், இந்திய வங்கிகள் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார்.<br />
<br />
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல் விலை உயர்வு, வாபஸ் பெறப்பட மாட்டாது. பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி மானியம் அளித்தது. டீசலுக்கு லிட்டருக்கு 16 ரூபாயும், மண்எண்ணெய்க்கு லிட்டருக்கு 26 ரூபாயும் மானியம் வழங்கி வருகிறோம். எனவே, பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது.<br />
<br />
சில அத்தியாவசிய உணவு பொருட்களின் உற்பத்தியில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த பொருட்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது. உலக சந்தைகளில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது. இதனால் நாம் இறக்குமதியை நம்பி இருக்கும் பொருட்களின் விலை உயர்வது இயல்புதான்.<br />
<br />
விலைவாசி எந்த திசையில் செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது. பொருட்களின் விலை நிலவரம், இப்போதும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது.<br />
<br />
இருப்பினும், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து உரிய நிதிக்ள்கைகளை பின்பற்றுவதன் மூலம், அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவும், பணவீக்க விகிதத்தை ஏற்றுக்ள்ளத்தக்க அளவுக்கு குறைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது," என்றார்.<br />
<br />
<b>* உலகளவில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம்மகாராஷ்டிராவில் அமைகிறது<br />
<br />
<img alt="8171918.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a67b5eab1be3&attid=0.2&disp=emb&realattid=ii_1301a637a4eae8b4&zw" title="8171918.jpg" /></b><br />
மே 23,2011,01:47<br />
மும்பை:உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைய உள்ளது.<br />
<br />
இந்தியாவில் மின்சாரத் தேவையை பூர்த்திச் செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. இதனை ஈடுசெய்யும் அளவில் மத்திய, மாநில அரசுகள் மரபுசாராத வகையில் மின் உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் ஒர் அங்கமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.<br />
<br />
இதுகுறித்து, மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியதாவது:மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில், உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைய உள்ளது. 1,987 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம், 150 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். வரும் 2012ல், இங்கு மின் உற்பத்தி துவங்கும்.மேற்கண்ட மொத்த முதலீட்டில், மாநில அரசு 20 சதவீதத்தை (394.40 கோடி ரூபாய்), 80 சதவீதத்தை (1,592.60 கோடி ரூபாய்) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கே.எப்.டபிள்யூ நிறுவனமும் முதலீடு செய்கின்றன . சந்திரபூரில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தின் விரிவாக்கத்திற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.இந்த மின் நிலையத்தை மகாராஷ்டிர மாநில பவர் ஜெனரேஷன் நிறுவனம் செயல்படுத்தும். மின்சார வினியோகத்தை மகாராஷ்டிர மாநில மின் உற்பத்தி நிறுவனம் ஏற்கும். மின் கட்டண விலையை மகாராஷ்டிர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும். இவ்வாறு சவான் கூறினார்<br />
<br />
<b style="color: #6600cc;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* கிரிக்கெட்</b><br />
<br />
மு<b>ம்பை அணிக்கு "திரில்' வெற்றி!* கடைசி பந்தில் ராயுடு "சிக்சர்' * கோல்கட்டா பரிதாபம்</b><br />
<br />
கோல்கட்டா: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 23 ரன்களை வாரி வழங்கிய பாலாஜி கோல்கட்டா அணிக்கு "வில்லனாக' மாறினார். இவ்வெற்றியின் மூலம் மும்பை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. கோல்கட்டா அணி நான்காவது இடமே பெற முடிந்தது.<br />
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்.,"டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த கடைசி லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டன. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.<br />
துவக்கம் மோசம்:<br />
<br />
கோல்கட்டா அணி துவக்கத்தில் தடுமாறியது. கோஸ்வாமி(1) ரன் அவுட்டானார். அகமது ஓவரில் ஒரு சிக்சர் அடித்த கேப்டன் காம்பிர்(8) அடுத்த பந்தில் போல்டானார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தவித்தது. பின் காலிஸ், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். பிரைஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய திவாரி(35), ரன் அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ரன் சேர்த்தார். பிரைஸ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசிய இவர், போலார்டு ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். பிராங்க்ளின் வேகத்தில் யூசுப்(36) வீழ்ந்தார்.<br />
காலிஸ் அரைசதம்:<br />
<br />
தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த காலிஸ், ஹர்பஜன் சுழலில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்தார். பின் பிராங்க்ளின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்த இவர், அரைசதம் கடந்தார். காலிஸ் 59 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) பிராங்க்ளின் பந்தில் அவுட்டானார். மலிங்கா பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட டசாட்டே, ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அகமது வீசிய கடைசி ஓவரில் டசாட்டே(18) வெளியேறினார். இதே ஓவரில் 2 பவுண்டரி அடித்த பாட்யா(11) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.<br />
<br />
கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, பிரட் லீ வீசிய முதல் ஓவர் சாதகமாக அமைந்தது. சுமன் ஒரு பவுண்டரி, சச்சின் இரண்டு பவுண்டரி அடிக்க, 13 ரன்கள் கிடைத்தன. அப்துல்லா சுழலில் சுமன்(4) அவுட்டானார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் "ஒன்-டவுனாக' களமிறக்கப்பட்ட ஹர்பஜன் தனது பணியை கச்சிதமாக செய்தார். பிரட் லீ, பாலாஜி வேகத்தில் பவுண்டரிகளாக விளாசினார். மறுபக்கம் சச்சினும் பொறுப்பாக ஆட, ஸ்கோர் சீராக உயர்ந்தது.<br />
பாட்யா அசத்தல்:<br />
<br />
இந்த நேரத்தில் ரஜத் பாட்யா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது முதல் ஓவரில் ஹர்பஜன்(30) சிக்கினார். அடுத்த ஓவரில் ரோகித் சர்மாவை(10) வெளியேற்றினார். தனது 3வது ஓவரில் சச்சினை(38) அவுட்டாக்கிய பாட்யா, மும்பை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார்.<br />
பின் போலார்டு, பிராங்க்ளின் சேர்ந்து போராடினர். அப்துல்லா ஓவரில் பிராங்க்ளின் ஒரு சிக்சர், போலார்டு ஒரு பவுண்டரி அடித்தனர். மீண்டும் பந்துவீச வந்த பாலாஜி வேகத்தில் போலார்டு(18) போல்டானார்.<br />
<br />
"வில்லன்' பாலாஜி: கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. பாலாஜி சொதப்பலாக பந்துவீசினார். முதல் நான்கு பந்துகளில் பிராங்க்ளின் வரிசையாக நான்கு பவுண்டரிகள் விளாச, "டென்ஷன்' எகிறியது. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டன. இம்முறை அம்பதி ராயுடு ஒரு இமாலய சிக்சர் விளாச, ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டிருந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கட்டா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. "ஹீரோவாக' ஜொலித்த பிராங்க்ளின்(45), ராயுடு(17) அவுட்டாகாமல் இருந்தனர்.<br />
<br />
ஆட்ட நாயகன் விருதை பிராங்க்ளின் தட்டிச் சென்றார்.<br />
<br />
<b style="color: #6600cc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<img alt="T_500_1483.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a67b5eab1be3&attid=0.6&disp=emb&realattid=ii_1301a66562801249&zw" title="T_500_1483.jpg" /><br />
<br />
<b style="color: #6600cc;">அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : சுப்ரமணியர்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : -<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : தாமிரபரணி<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 500 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : ஸ்ரீவைகுண்டம்<br />
மாவட்டம் : தூத்துக்குடி<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.<br />
<br />
சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பழநியாண்டவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட,,, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை !<br />
<br />
வள்ளி - தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.<br />
<br />
சிறப்பம்சம்:<br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: :பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.<br />
<br />
பிரார்த்தனை<br />
<br />
சுப்ரமணிய சுவாமியை, சஷ்டி நாளில் விரதமிருந்து தரிசிக்க, தடைபட்ட திருமணம் நடந்தேறும், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவர் என்பது நம்பிக்கை. மேலும் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #6600cc;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #6600cc;">உண்மையான முன்னேற்றம் - அன்னை</b> <br />
<br />
யோக சாதனைதான் உண்மையான முன்னேற்றம், அதுதான் மிகவும் உணர்வோடு செய்யப்படுகிற மிகவும் வேகமான முன்னேற்றம். சாதனை செய்யாவிட்டால் ஒருவன் இயற்கைப் பிரமாணத்தின்படியே முன்னேறுவான், அப்படியென்றால், ஒரு சிறு முன்னேற்றத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகள், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.<br />
<br />
சாதனை மூலம் நிகழும் முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம். இயற்கைப்போக்கில் செய்யக் கணக்கற்ற காலம் பிடிக்கும் ஒன்றை யோகசாதனை மூலம் வெறு குறுகிய காலத்தில் செய்துவிடலாம். இந்த வேலை எப்பொழுதும் இப்புவியில், ஓர் உடலில் தான் நடைபெறுகிறது, வேறு எங்கும் நடப்பதில்லை.<br />
<br />
<b style="color: #6600cc;">வினாடி வினா </b>:<br />
<br />
வினா - பாராளுமன்றத்தைக் கலைக்கவோ, கூட்டவோ அதிகாரம் பெற்றவர் யார் ?<br />
<br />
விடை - ஜனாதிபதி.<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b style="color: #33cc00;">* தன்னம்பிக்கை தோழிகள்! </b><br />
<br />
<img alt="large_244674.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a67b5eab1be3&attid=0.1&disp=emb&realattid=ii_1301a601e1f8d777&zw" title="large_244674.jpg" /><br />
<br />
சாக்லெட் பொக்கே தயாரிக்கும் தோழிகள் ரீனி, ஏக்தா: பி.காம்., படிக்கும் போது, பிசினஸ் ஆர்வம் தலைதூக்கியது. வீட்டிலிருந்தபடியே சிறிய அளவில் சாக்லெட்டுகளைத் தயாரித்து, தோழிகள், உறவினர்களுக்கு வழங்க ஆரம்பிச்சோம். எங்க தயாரிப்புகளை ரசித்து, சுவைத்து, "ச்சோ சுவீட்' என்று பாராட்டுகள் குவிந்தன. இந்த பாராட்டுகள் தான், எங்களை சாக்லெட் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட தூண்டியது.நாங்க இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும், சாக்லெட் பிசினசும் ஒரு பக்கம் தொடர்கிறது. வீட்டில் இருக்கும் மைக்ரோவேவ் ஓவன், டபுள் பவுலரைப் பயன்படுத்தி சாக்லெட் தயாரிக்கிறோம். நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என, எங்க தயாரிப்புக்கு வாடிக்கையாளர் கூட்டமும் அதிகரித்தது.வேலை பார்க்கும் நிறுவன கேன்டீனிலும், எங்க தயாரிப்பு இடம் பிடிக்க போராடி வருகிறோம். தோழி ஏக்தாவின் அம்மா, "குக்கீஸ்' தயாரிப்பில் கைதேர்ந்தவர். சாக்லெட்டுகளுடன் இரண்டு, மூன்று குக்கீஸ்களையும் சேர்த்து, சாக்லெட் பொக்கே செய்து தந்தது, பிசினசுக்கு பக்கபலமாக இருந்தது. சாக்லெட் பொக்கே, ஸ்டால்களுக்கு வருபவர்கள் மூலம் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் குவிந்தன.வழக்கமான சாக்லெட்டாக இல்லாமல், பிசினசில் புதுமையைப் புகுத்தினோம். டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட், திராட்சை, ஆல்மண்ட், உலர் பழங்கள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைகளை சாக்லெட்டில் நிறைய உபயோகிக்கிறோம். வெறும் தயாரிப்புடன் நில்லாமல், சாக்லெட்டுகளை அழகிய வண்ணக் காகிதங்களில் சுற்றி, கண்கவரும் வகையில் பேக் செய்து வழங்குவது தான் எங்க ஸ்பெஷாலிட்டி.பகுதி நேர பிசினசான சாக்லெட் தயாரிப்பை, எதிர்காலத்தில் முழு நேர பிசினசாக்கி பெரியளவில் சாக்லெட் தொழிற்சாலைத் தொடங்குவோம்!<br />
<br />
<br />
<b>* சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்<br />
<br />
<img alt="large_244749.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301a67b5eab1be3&attid=0.5&disp=emb&realattid=ii_1301a5f34d642d09&zw" title="large_244749.jpg" /></b><br />
ஓசூர் : ஓசூரில் சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள், சந்திரசூடேஸ்வரர் மலையில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில், சின்னஞ்சிறு கல் மற்றும் மண் வீடுகள் கட்டி, வினோத வேண்டுதலில் ஈடுபடுகின்றனர்.<br />
<br />
சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைவதற்கு முன், ஓசூர் மிகவும் பின்தங்கிய நகரமாகக் காணப்பட்டது. அப்போது, குடியிருப்புகள் இல்லாத காட்டுப்பகுதியாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த 1977ம் ஆண்டு, மிகப்பெரிய இரு தொழிற்பேட்டைகள் துவங்கப்பட்டன. இதனால், வேலைவாய்ப்பு ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஓசூர் நகரப் பகுதியில் குடியேறத் துவங்கினர்.அதன் பின், நகரப் பகுதி விரிவடைந்து வளர்ச்சியடைந்ததால், மக்கள் தொகை பல மடங்கு பெருகியது. நிலத்தின் மதிப்பும், "கிடுகிடு'வென உயர்ந்துவிட்டது. தற்போது, நடுத்தர, ஏழை மக்களுக்கு சொந்த வீடு என்பது வெறும் கனவாக உள்ளது.<br />
<br />
சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்ற, வருமானத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், மக்கள் இஷ்ட தெய்வங்களிடம் வேண்டுதல் வைப்பது அதிகரித்துள்ளது. அவர்களில் சிலருக்கு, சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்போது, வேண்டுதல் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும் நடைமுறையில் உள்ளது.ஓசூர் சுற்று வட்டார பகுதி மக்கள், கிருஷ்ணகிரி பை-பாஸ் சாலையில் உள்ள, 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் மலைக் கோவிலில் சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக, வேண்டுதல் வைத்து பூஜைகள் செய்கின்றனர்.மலைக்கோவிலுக்கு பின்னால் உள்ள அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையில், சொந்த வீடு வேண்டும் மக்கள், சிறு சிறு கல் மற்றும் மண் வீடுகள் கட்டி வேண்டுதல் வைத்து பூஜை செய்து வருகின்றனர். அவர்களில் சிலரது சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளதால், இந்த வேண்டுதல் வழிபாடு, தற்போது ஓசூர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.<br />
<br />
இதனால், சொந்த வீடு கனவில் இருக்கும் ஏராளமான பக்தர்கள், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் வேண்டுதல் வைக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.அம்மன் கோவில் செல்லும் பாதை நெடுகிலும், கண்ணுக்கு தெரியும் இடமெல்லாம் சின்னஞ்சிறு கல் வீடுகள், மண் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விசித்திரமாக வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.தற்போது கோடை விடுமுறை என்பதால், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களும், வெளியூர் மக்களும் சொந்த வீடு கனவு நிறைவேற, சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் பாதையில், நம்பிக்கையோடு கல் வீடுகளைக் கட்டி வேண்டுதல் பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.</div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-9341787172043599952011-05-21T08:42:00.000+05:302011-05-21T08:42:06.981+05:30இன்றைய செய்திகள் - மே, 21 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="gmail_quote"><br />
<blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><b style="color: #ff6600;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்<br />
<br />
<img alt="20-kanimozhi-300-1.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=130105436c32bdf2&attid=0.1&disp=emb&realattid=ii_1301004d5682f50c&zw" title="20-kanimozhi-300-1.jpg" /><br />
</b><br />
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.<br />
<br />
அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.<br />
<br />
இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.<br />
<br />
இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.<br />
<br />
கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.<br />
<br />
அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.<br />
<br />
இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.<br />
<br />
இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.<br />
<br />
காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.<br />
<br />
அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.<br />
<br />
இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.<br />
<br />
உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:<br />
<br />
கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br />
<br />
கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி:<br />
<br />
முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.<br />
<br />
தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.<br />
<br />
முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.<br />
<br />
சிறையில் யார் யார்?:<br />
<br />
இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.<br />
<br />
உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:<br />
<br />
இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.<br />
<br />
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.<br />
<br />
<b style="color: #ff6600;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* புலிகளின் முக்கியத் தளபதி கைது? </b><br />
<br />
விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன், நார்வே நாட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.<br />
<br />
எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.<br />
<br />
நார்வேயில் உள்ள நெடியவன் வீட்டை எல் சல்வடார் நாட்டில் இருந்து வந்த சர்வதேச காவல்துறையினர் சோதனை நடத்தியதுடன் அவரை கைது செய்ததாகவும், பின்னர் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
ஆனால், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிப்பதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
நார்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றி வரும் நெடியவன், விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் நிதி திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.<br />
<br />
<b>* மும்பை தாக்குதல் பயங்கரவாதியைக் கைது செய்ய உதவிய சவூதி அரேபியா</b><br />
<br />
இஸ்லாமாபாத், மே 20: மும்பை தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கைது செய்த 7 பேரில் ஒருவரைப் பற்றிய விவரங்களை சவூதி அரேபியாதான் அளித்தது. இந்த தகவலை வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.<br />
<br />
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தனது வாஷிங்டன் அலுவலகத்துக்கு அனுப்பிய செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூதரக ரகசிய செய்தியை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.<br />
<br />
2008-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை 7 பேரைக் கைது செய்தது.<br />
<br />
அதில் ஒருவர் ஜமீல் அகமது. சர்வதேச காவல் படையான இண்டர்போல் ஒரு துப்பு கொடுத்திருந்தது. இந்த விவரத்தை சவூதி அரசு பாகிஸ்தானுக்கு அளித்தது. இந்த தகவலின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை ஜமீல் அகமதைக் கைது செய்ய முடிந்தது.<br />
<br />
மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு ஜமீல் அகமது, இவருடன் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ஷாஹித் ஜமீல் ரியாஸýக்கு சவூதி அரேபியாவிலிருந்து பணம் அனுப்பினார்.<br />
<br />
2008 நவம்பர் 26-ம் தேதி தாக்குதல் நடந்த பின்பு, அது தொடர்பாக பாகிஸ்தானில் பலர் கைது செய்யப்பட்டனர்.<br />
<br />
இதில் ஆறாவதாக கைதானவர் ஜமீல் அகமது. பாகிஸ்தானின் மத்திய புலனாய்வுத் துறையால் இவர் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக உள்ளவர் என்று இவர் பெயர் காவல் துறை ஆவணங்களில் இருந்து வந்தது.<br />
<br />
இண்டர்போல் தந்த தகவலின் அடிப்படையில், ஜமீல் அகமது மற்றும் ஷாஹித் ஜமீல் ரியாஸ் ஆகியோரது தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜமீல் அகமது அவருடைய வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார்.<br />
<br />
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விசாரணை இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. மும்பை தாக்குதல் சதியைத் திட்டமிட்டு, அதை நடத்தி முடிக்க பணம் வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.<br />
<br />
இதில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் ஸக்கியூர் ரஹ்மான் லக்வி என்பது குறிப்பிடத் தக்கது.<br />
<br />
இவர்கள் மீது நடைபெறும் வழக்கில் பயன்படுத்த இந்தியாவில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் அளித்த வாக்குமூலத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அது ஒரு சாட்சியமாக இவ்வழக்கில் பயன்படுத்தப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.<br />
<br />
அதைத் தவிர, லஷ்கரின் முக்கிய தலைவர்களான ஸக்கியூர் ரஹ்மான் லக்வி மற்றும் அபு அல் காமா ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களின் பதிவு பாகிஸ்தான் காவல்துறை வசம் உள்ளது.<br />
<br />
இந்த தகவல்கள் யாவும் அமெரிக்க தூதரக அதிகாரி வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் உள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ் இப்போது பகிரங்கமாக்கியுள்ளது.<br />
<br />
<b>* ஐ.எம்.எஃப். முன்னாள் அதிகாரிக்கு பிணை </b><br />
கற்பழிப்புக் குற்றசாற்றில் கைது செய்யப்பட்ட ஐ.எம்.எஃப். முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ் கானுக்கு பிணை விடுதலை வழங்கப்பட்டுள்ளது.<br />
<br />
சர்வதேச நிதியகத்தின் தலைவராக இருந்தவர் டொமினிக் ஸ்டாரஸ்கான் (65). அமெரிக்காவில் ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு பணிபுரியும் பெண்ணை கற்பழிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<br />
<br />
இதை தொடர்ந்து அவர் தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில், அவர் தன்னை பிணையில் விடுதலை செய்யும்படி நியூயார்க் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.<br />
<br />
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சர்வதேச நிதியக முன்னாள் தலைவர் ஸ்டாரஸ்கானுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினார். ஜாமீன் தொகையாக ரூ.4 கோடியே 50 லட்சம் செலுத்தவும், மற்றும் வீட்டுக்காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.<br />
<br />
இதை தொடர்ந்து அவர் மேன்காட்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன் தங்கி கொள்ளலாம். அதே நேரத்தில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகள் நீக்கப்படவில்லை.<br />
<b><br />
* ஐஎம்எப் தலைவராவாரா சிங்கப்பூர் நிதியமைச்சர் சண்முகரத்தினம்?</b><br />
<br />
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நிதிக் கழகத்தின் (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.<br />
<br />
யாழ்ப்பாண வம்சாவளித் தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் நியமித்தார் அந் நாட்டு பிரதமர் லீ சென் லூங்.<br />
<br />
அந் நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான சண்முகரட்னம் நேற்று தான் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் (Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.<br />
<br />
இந் நிலையில் இவரை சர்வதேச நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பான்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br />
<br />
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.<br />
<br />
ஐஎம்எப் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதி்த்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.<br />
<br />
இப்போது சண்முகரட்னம் ஐஎம்எப்பின் ஸ்டீரிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* ஹூரியத் தலைவர் கிலானிக்கு வீட்டுக்காவல் </b><br />
காஷ்மீர் அரசியல் அமைப்பான ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சயத் அலி ஷா கிலானி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல், கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.<br />
<br />
காஷ்மீரில் அரசியல் கைதிகளாக உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆனந்த்நாக் நகரில் பேரணி நடத்த கிலானி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.<br />
<br />
ஷோபியன் மாவட்டத்தில் இதுபோல ஏற்கெனவே ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்ததால், கடந்த வாரமும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* நோய் தடுப்பில் இந்தியாவை தாண்டிய சீனா</b><br />
ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் தொற்று நோய்களை தடுப்பதலும், நகர மயமாக்கால் அதிகரிக்கும் உயிர்கொல்லி தொற்று நோய்களால் பாதிக்கப்படுவோரை குறைப்பதிலும் இந்தியாவை விட சீனா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உலக நல்வாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.<br />
<br />
ஜெனீவாவில் உலக நல்வாழ்வு அமைப்பின் 64வது மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நோய் தடுப்பில் சிறப்பாக செயலாற்றியதன் விளைவாக சீனாவில் சராசரி வாழ்க்கைக் காலம் 2000 ஆவது ஆண்டில் 61 ஆக இருந்தது 2009இல் 74 ஆக உயர்ந்துள்ளது என்றும், இதே காலகட்டத்தில் இந்தியாவில் 61 வயது என்பது 65 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
2003ஆம் ஆண்டிற்குப் பிறகு நலவாழ்விற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களையும் சீனா அதிகப்படுத்தியுள்ளதே அதன் சிறப்பான செயல்பாட்டிற்குக் காரணம் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.<br />
<br />
இந்தியாவில் இன்னமும் குழந்தை பிறப்பின்போது தாய் மரணிப்பதும், குழந்தை இறந்து பிறப்பதும், பிறந்த பின் குறுகிய காலத்தில் இறப்பதும் அதிகமாக உள்ளதெனவும், ஏழை எளிய மக்களிடையே தொற்று நோய் பரவல் அதிகமாக உள்ளதெனவும், நகர வாழ் நடுத்தட்டு மக்களிடையே தொற்று நோயற்ற இதர நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் ஐ.நா.உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. <br />
<br />
<b>* எங்களது உள் விவகாரங்களில் தலையிடுகிறது அமெரிக்கா: சிரியா குற்றச்சாட்டு</b><br />
பெய்ரூட், மே 20: தங்கள் நாட்டு உள் விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டு வருவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை கூறுகையில், "சிரிய அதிபர் பஷார் அஸ்ஸôத் ஜனநாயக வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் பதவி விலக வேண்டும்' என்று கூறியிருந்தார்.<br />
<br />
இது தங்களது நாட்டின் உள் விவகாரத்தில் அப்பட்டமாகத் தலையிடும் செயல் என்றும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை மேலும் தூண்டிவிடும் செயல் என்றும் சிரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஒபாமாவின் இந்தப் பேச்சு சிரியா போன்ற பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்ற அமெரிக்காவின் மனநிலையையே காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
<br />
<b style="color: #ff6600;">தேசியச் செய்தி மலர் </b><span style="color: #ff6600;">:</span><br />
<br />
<b>* உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பம் அவசியம்: வேளாண் விஞ்ஞானி</b><br />
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியாக வேண்டும் என்று நாட்டின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானி கூறியுள்ளார்.<br />
<br />
டெல்லியில் ஆசிய - பசிபிக் பகுதிக்கான வேளாண் உயிரிதொழில்நுட்ப ஒன்றிணைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வேளாண் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் முன்னாள் செயலராக இருந்த ஆர்.கே.பரோடா, “நமது நாட்டின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 23.5 கோடி டன் அளவிற்கு உள்ளது. இதனை 28.5 டன்களாக 2020ஆம் ஆண்டிற்குள் உயர்த்த வேண்டும். அதற்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.<br />
<br />
நமது நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 2 விழுக்காடாக உள்ளது, இதனை 4 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் பரோடா கூறியுள்ளார். <br />
<br />
<b>* மீண்டும் குழப்பம்-பாக்.கிடம் கொடுத்த பட்டியலில் உள்ள தீவிரவாதி மும்பை சிறையில்!<br />
</b><br />
டெல்லி: பாகிஸ்தானும், உலக நாடுகளும் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் நிலைக்கு நாட்டை கொண்டு சென்று வருகிறது சிபிஐ. இந்தியாவால் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் என்று கூறி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு நபரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்து, இந்தியாவின் நிலை வெட்கக்கேடாகியுள்ளது.<br />
<br />
இந்தியாவால் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகள் குறித்த ஒரு பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டு நாட்டின் பெயரைக் கெடுப்பதாக அமைந்துள்ளது.<br />
<br />
இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த வஸூல் கமர் கான் என்பவரின் பெயரால் முதலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.<br />
<br />
இவர் 2003 மும்பையின்முலுந்த் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டிருந்தார். இவர் தற்போது தானேவில் உள்ள வாங்க்லே எஸ்டேட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி இவர் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.<br />
<br />
இவர் விலே பார்லே, கட்கோபர் குண்டுவெடிப்புகளிலும், 2002 மும்பை ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.<br />
<br />
மும்பைக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வரும் இவரை அதிகம் தேடப்படும் நபர் பட்டியலில் சேர்த்து அதை பாகிஸ்தானுக்குக் கொடுத்துள்ளது இந்தியா. அதிகம் தேடப்படும் நபர்கள் பட்டியலிலிருந்து கானின் பெயரை சிபிஐ நீக்காததால் வந்த குழப்பம் இது. மேலும் இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீஸ் பிரிவிலும் இவரது பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இந்தியாவின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த குழப்பத்தால் உள்துறை அமைச்சகத்திற்கும் அவப் பெயர் ஏற்பட்டது. இருப்பினும் சிபிஐதான் இதற்குக் காரணம் என்று உள்துறை அமைச்சகம் விளக்கியது. சிபிஐ கூறினால் அதை அப்படியே ஏற்காமல், பரிசீலனை செய்திருக்கலாமே என்று கேள்விக்கு உள்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் இல்லை.<br />
<br />
மீண்டும் ஒரு குழப்பம்<br />
<br />
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழப்பத்தை செய்துள்ளன சிபிஐயும், உள்துறை அமைச்சகமும்.<br />
<br />
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரின் பெயரையும், தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்து பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது இந்தியா. அதாவது, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபரை இன்னும் தேடி வருவதாக கூறியுள்ளது இந்தியா.<br />
<br />
இந்தக் குழப்பத்திற்கு பாஜக கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு குழப்பமான பட்டியலால் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கேலிக்கூத்தாக்கி விட்டதாக பாஜக கண்டித்துள்ளது.<br />
<br />
இந்தக் குழப்பத்திற்கும் சிபிஐதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து ப.சிதம்பரம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓம்கார் கேடியா இதுகுறித்துக் கூறுகையில், பெரோஸின் பெயர் தவறுதலாக அதிகம் தேடப்படுவோர் பட்டியலி்ல இடம் பெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவரது பெயரை பட்டியலிலிருந்து நீக்காமல் விட்டு விட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது என்றார்.<br />
<br />
இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து எஸ்.பி, டிஎஸ்பி அந்தஸ்திலான இரு அதிகாரிகளை சிபிஐ சஸ்பெண்ட் செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
சிபிஐ செய்தித் தொடர்பாளரான தரணி மிஸ்ரா என்பவர் கூறுகையில், அப்துல் ரஷீத் கான் கைது குறித்த தகவல் 2010 பிப்ரவரியில் சிபிஐயின் இன்டர்போல் பிரிவுக்கு தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ரெட் கார்னர் நோட்டீஸ் பட்டியலிலிருந்து கானின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி அதைச் செய்யவில்லை. அதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.<br />
<br />
மேலும் ஒரு குழப்பம்<br />
<br />
இதேபோல இன்னொரு குழப்பத்தையும் சிபிஐ செய்துள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர் உல்பா தலைவரான ராஜ் குமார் மேகான். ஆனால் அவரது பெயர் இன்னும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. நல்ல வேளையாக இவரது பெயரையும் சேர்த்து பாகிஸ்தானிடம் கொடுக்காமல் விட்டது இந்தியா.<br />
<br />
'காலாவதி வாரண்ட்டுடன் டென்மார்க் போன சிபிஐ'<br />
<br />
இதற்கிடையே புரூலியா ஆயுத வழக்கில் தேடப்பட்டு வரும் கிம் டேவியைக் கைது செய்ய காலாவதியான வாரண்ட்டுடன் டென்மார்க் போய் இந்தியாவின் பெயரை கேவலப்படுத்தி விட்டு வந்துள்ளது சிபிஐ. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.<br />
<br />
இதுகுறித்து பாஜக மூ்த்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், டென்மார்க்கை சேர்ந்த கிம் டேவியை கைது செய்வதற்காக அந்த நாட்டுக்கு காலாவதியான வாரண்ட்டுடன் சிபிஐ சென்று நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தவறு, இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம். இந்த தவறுக்கு மத்திய அரசில் யாரேனும் இதுவரை பொறுப்பேற்றுக் கொண்டார்களா?.<br />
<br />
இதேபோல சிறையில் இருப்பவர்களையும், ஜாமீனில் வெளியே இருப்பவர்களையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அதனை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளா என்று சாடியுள்ளார் சுஷ்மா.<br />
<br />
கிம் டேவி குறித்த குழப்பத்திற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், பாஜக குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பு உண்மையான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை. பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்தின் கீழ்தான் சிபிஐ செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.<br />
<br />
பாகிஸ்தான் மீதான தீவிரவாதப் புகார்களை இந்தியா அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக கூறி வரும் நிலையில் அதுதொடர்பான ஆதாரங்களையும், தீவிரவாதிகள் குறித்த பட்டியலையும் எவ்வளவு துல்லியமாக அது வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி அடுத்தடுத்து குப்பாச்சு, குழப்பாச்சு வேலைகளில் சிபிஐயும், மத்திய உள்துறையும் செயல்பட்டால் இந்தியா சொல்வதை யாராவது நம்புவார்களா அல்லது இந்தியாவின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மைதான் வருமா...?<br />
<br />
<b>* சீனா - பாக்., ராணுவ உறவு: சவால் என்கிறார் அந்தோணி <br />
<br />
<img alt="large_243889.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=130105436c32bdf2&attid=0.4&disp=emb&realattid=ii_130100203cce902c&zw" title="large_243889.jpg" /></b><br />
<br />
புதுடில்லி:""சீனா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவுகள் அதிகரித்து வருவது, இந்தியாவுக்கு மிகவும் கவலை தரும் விஷயமே. இருந்தாலும், இந்த சவாலைச் சந்திக்க, இந்தியா தன்னுடைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்,'' என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.<br />
<br />
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு சீனா, 50 புதிய ஜே.எப்-17 ரக விமானங்களை தர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான சொர்க்கமாக பாகிஸ்தான் இருப்பதும் கவலை தரும் விஷயமாகும். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் உண்மையிலேயே விரும்பினால், அந்நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம்களையும் அழிக்க வேண்டும். சீனா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவுகள் அதிகரித்து வருவதால், நாமும் நமது நாட்டின் படைத்திறனை மேம்படுத்த வேண்டும். சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.<br />
<br />
பாகிஸ்தான் அபோதாபாத்தில், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை ஒழித்துக் கட்ட, அமெரிக்கப் படையினர், திடீரென ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய தாக்குதலை நடத்தும் திறன் இந்திய ராணுவத்திற்கும் உள்ளது என, ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங்கும், விமானப்படை தளபதி பி.வி.நாயக்கும் கூறியுள்ளனர். இது தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமர் இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டார். அதனால், நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.<br />
<br />
கடந்த காலங்களை ஒப்பிடுகையில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, வன்முறை குறைந்துள்ளது. இருந்தாலும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதும் தொடர்கிறது. இருந்தாலும், நிலைமை மேம்பாடு அடைந்துள்ளது.ராணுவ தளபதியின் வயது தொடர்பாக, சட்ட அமைச்சகமும், அட்டர்னி ஜெனரலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நான் எதுவும் தெரிவிக்க முடியாது. இந்தப் பிரச்னையை பெரியதாக்கவும் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அரசு முடிவு எடுக்கும்போது, அது பற்றி அறிவிக்கப்படும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.<br />
<br />
*<b> போயிங் விமானம் வாங்கியதில் ஹசன்அலிக்கு கமிஷன் </b><br />
மும்பை: அன்னியச்செலவாணி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புபண வழக்கில் கைதாகியுள்ளள , மும்பையின் பிரபல குதிரைப்பண்ணை உரிமையாளர் ஹசன்அலி, அமெரிக்காவிடமிருந்து இந்தியாவிற்கு இரு போயிங் விமானங்கள் வாங்கியதில் தரகராக இருந்து 11.5 மில்லியன் டாலர் கமிஷனாக பெற்றுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 1986-87-ம் ஆண்டுகளில் இந்திய விமானப்படைக்கு போயிங் ரக விமானம் 747 வாங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது ஹசன் அலிகான், தன்னுடைய ஆர்.எஸ். இன்வெஸ்மென்ட் பி லிமிட்ெ பெயரில் 230 மி்ல்லியன் டாலர் மதிப்பிலான போயிங் விமானங்கள் வாங்கியதில் தரகராக செயல்பட்டார். ஹசன் அலிகான் இதற்காக 11. 5 மி்ல்லியன் டாலர் கமிஷனாக பெற்றுள்ளதாக அமாலாகத்துறையினர் கடந்த 2007-ம் இவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியது, மற்றும் அன்னியச்செலவாணி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானம் வாங்கியதில் நிகழ்ந்த பண பரிவர்த்தனையில் ஏராளமான அளவுக்கு வங்கி சட்டதிட்டங்களை மீறியுள்ளதாகவும், சர்வதேச அளவில் மோசடி செய்திரு்ப்பதாகவும் அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.<br />
<br />
<br />
<br />
<b style="color: #ff6600;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #ff6600;">* புகழ் பெற்ற ஊட்டி மலர்க்கண்காட்சி தொடக்கம்<br />
<br />
<img alt="20-ooty1-300.jpg.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=130105436c32bdf2&attid=0.2&disp=emb&realattid=ii_1300ffda7dd3d6ad&zw" title="20-ooty1-300.jpg.jpg" /><br />
</b><br />
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது.<br />
<br />
கோடை விழா<br />
<br />
ஊட்டியில் கோடை விழா கடந்த 7ம்தேதி ரோஜா கார்டனில் ‘ரோஜா கண்காட்சி’ மூலம் துவங்கியது. அதனை அடுத்து கடந்த 14,15ம்தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. ஊட்டி சீசனின் மிக முக்கிய நிகழ்வான மலர்க்கண்காட்சிஇன்று முதல் துவங்க இருக்கிறது. 22ம் தேதிவரை இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.<br />
<br />
பூக்களால் உலகக் கோப்பை<br />
<br />
இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றியை நினைவூட்டும் வகையில் பூக்களால் ஆன பிரம்மாண்டமான உலகக்கோப்பை அலங்காரம் இந்த ஆண்டு மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சம் ஆகும். இது தவிர, பிரம்மாண்டமான கங்காரு ஒன்றின் உருவத்தையும் தாவரவியல் பூங்காவில் உருவாக்கி வருவார்கள். இந்த ஆண்டு கண்காட்சிக்கென பிரத்யேகமாக 15 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.<br />
<br />
சிறப்பு ஏற்பாடுகள்<br />
<br />
மலர்க்கண்காட்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தினரால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.<br />
<br />
<b>* சிறுத்தைப் புலி தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி</b><br />
சென்னை, மே 20: கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.<br />
<br />
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு: கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா தாய்முடி எனும் இடத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகள் ஜனனி (3). சிறுத்தைப் புலி தாக்கியதில் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.<br />
<br />
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் ரூ.1.5 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
*<b> பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது: ஆர்.பாலகிருஷ்ணன்<br />
<br />
<img alt="rbalaki.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=130105436c32bdf2&attid=0.3&disp=emb&realattid=ii_1300ffc076d6741e&zw" title="rbalaki.jpg" /></b><br />
மதுரை, மே 20: பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றார் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விஜிலென்ஸ் முதன்மைக் கண்காணிப்பு அலுவலர் ஆர்.பாலகிருஷ்ணன்.<br />
<br />
மதுரை கம்பன் கழகத்தின் நிறைவு விழா 3 நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் விஸ்வாஸ் கலை, பண்பாட்டு மையம் இலவச பதிப்பாக தொகுத்துள்ள கம்பனில் "சொல் புதிது! பொருள் புதிது!' என்னும் நூலை வெளியிட்டு கம்பனும் பன்முகத் திறனும் என்ற தலைப்பில் அவர் பேசியது:<br />
<br />
நான் பிறந்த மதுரையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பன் விழாவில் பங்கேற்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது பெருந்தலைவர் காமராஜருடன் காரில் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.<br />
<br />
காமராஜர் பற்றிய சொற்பொழிவை நான் ஆற்றியதற்காக அவர் என்னை காரில் அழைத்துச் சென்றார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் என் நினைவில் இன்றும் நிழலாடுகிறது. உன்னைப் போன்ற இளைஞர்களை தவறான வழியில் அழைத்துச் சென்றுவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன். உனக்கு பொது வாழ்வில் அக்கறை இருக்கிறது என்று சொன்னால் நீ ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.<br />
<br />
அதன்படி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளேன். நான் ஐஏஎஸ் தேர்வுக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 40 நிமிட நேர்காணலில் 10 நிமிடம் கம்பராமாயணம் பற்றியதாக கேள்வி இருந்தது.<br />
<br />
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியாற்றிய போதுகூட கம்பராமாயணம் தொடர்புடைய பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய போது இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்றுள்ளேன்.<br />
<br />
இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துரைக்கும் முகவரிச் சீட்டாக இருப்பது நமது மக்களாட்சியும் பம்மியம் எனும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும்தான். இந்த விஷயத்தில் உலகில் இந்தியா ஒரு உதாரணமாக போற்றப்படுகிறது.<br />
<br />
கம்ப ராமாயணத்தில் உளப்பாட்டு பம்மியம் குறித்து கூறப்பட்டுள்ளது. இது பாரதத்தின் வாழ்வியல் நடைமுறையாகும். இந்திய இலக்கிய மரபுகளில் இந்த வாழ்வியல் தாக்கத்தை நாம் காண முடிகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒப்பரிய தத்துவத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்துள்ளனர். அந்த வார்த்தையின் அடித்தளத்தில்தான் இந்த ஒற்றுமை கோபுரம் ஓங்கி நிற்கிறது.<br />
<br />
கம்பராமாயணம் இந்தியாவுக்கு தமிழகம் அளித்த கொடை. உலகத்துக்கு இந்தியா அளித்த கொடை. நாம் நமது குழந்தைகளை நம்முடைய கனவுகளைச் சுமப்பதற்காக தயார் படுத்துகிறோம். குழந்தைகள் அவர்களது கனவுகளை மட்டுமே சுமக்க வேண்டும். அவர்கள் மறந்தும் மற்றவர்களின் கனவுகளை சுமக்க விடக்கூடாது.<br />
<br />
குழந்தைகளே உங்களுக்கு பிடித்ததை விடாதீர்கள். பிடிக்காததைத் தொடாதீர்கள்.<br />
<br />
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. என்னை ஒருவேளை அரசியலோ அறிவியலோ எடுத்துப் படிக்க கட்டாயப்படுத்தியிருந்தால் நான் உங்கள் முன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்திருக்கமாட்டேன். நான் தேர்தல் பணியிலிருந்து தற்போது சென்னையில் வந்து பணியாற்றுவது கூட சிந்துசமய நாகரிகம் பற்றிய ஆங்கில நூலை எழுதி முடிப்பதற்காகத்தான். நாம் அடையவேண்டிய இலக்கு நிறைய உள்ளது.<br />
<br />
இது போன்ற வாழ்க்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கட்டாயக் கடமையாகும் என்றார்.<br />
<br />
*<b> ஊர்தோறும் கம்பன் கழகங்கள் உருவாக வேண்டும்: சாலமன் பாப்பையா<br />
</b><br />
மதுரை, மே 20: செந்தமிழைப் பாதுகாக்க வேண்டுமானால் ஊர்தோறும் கம்பன் கழகங்கள் உருவாக வேண்டும் என்று தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசினார்.<br />
<br />
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதுரைக் கம்பன் கழகத்தின் 8-ம் ஆண்டு நிறைவு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் தலைமை வகித்துப் பேசியது:<br />
<br />
பண்டையகால மன்னர்கள் தமிழைப் போற்றினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்று தெரியாது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதற்கான காலவரையறையும் தெரியவில்லை. குறுநில மன்னர்கள் காலத்தில் தமிழ் அவர்களது கைகளில் தவழ்ந்தது. பின்னர் மடங்கள், சமயங்கள் தமிழை வளர்த்தன. இன்றைக்கு தமிழ் வளர்ச்சிக்கு இத்தகைய கம்பன் கழகங்கள் இல்லை என்று சொன்னால் தமிழ் இல்லாமல் போனாலும் போய்விடலாம்.<br />
<br />
திருவள்ளுவர் கழகம் ஒருபுறமும் அதற்குப் போட்டியாக கம்பன் கழகம் ஒருபுறமும் பெரிய புராணம் தொடர்பான சொற்பொழிவுகளும் இருந்த ஒரு காலம் உண்டு. ஆனால் அவையெல்லாம் பல்கலை ஆய்வு நோக்காக போய்விட்டன. எப்போது வீதி தோறும் தெருவோர மக்களையும் சராசரி மனிதனையும் தமிழ் போய்ச்சேரவில்லையோ அப்போது அது சளிபிடித்துச் செத்தாலும் சாகும்?<br />
<br />
ஆகவே செந்தமிழ் பூந்தமிழ் பைந்தமிழான தமிழைக் காத்து வைக்க வேண்டுமானால் இத்தகைய கம்பன் கழகங்கள் பகுதி பகுதியாக வரவேண்டும். இது போன்ற இலக்கியக் கூட்டங்களிலேயே பணியில் உள்ள தமிழாசிரியர்கள் கூட வருவதில்லை. பணி முதிர்வு பெற்ற தமிழாசிரியர்களே வருகின்றனர். இச்சூழலில் தமிழைக் காக்க கழகங்கள் சார்பில் வந்துள்ள அறிஞர்கள் அத்தனை பேரின் திருவடித் தொட்டு தமிழைக் காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.<br />
<br />
நிகழ்ச்சியில் கம்பனில் சொல் புதிது பொருள் புதிது என்ற நூலை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விஜிலென்ஸ் முதன்மைக் கண்காணிப்பு அலுவலர் ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட, அதைப் பெற்றுக்கொண்டார் கம்பன் கழகத் துணைத் தலைவர் புரவலர் எஸ்.சீதாராமன்.<br />
<br />
பள்ளி, கல்லூரிகள் அளவிலான கம்பன் போட்டிகளில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவிகளுக்கு இந்து நாளிதழ் பிராந்திய பொது மேலாளர் டி.முரளி பரிசுகள் வழங்கினார்.<br />
<br />
மதுரை கம்பன் கழகச் செயலர் ரா.சொக்கலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். புரவலர் எஸ்.சீத்தாராமன் வரவேற்றார். டாக்டர் வி.விஜயலட்சுமி குழுவினரின் கம்பன்மலர் வழிபாடு நடைபெற்றது. விஸ்வாஸ் புரொமோட்டர்ஸ் இயக்குநர் பத்ம லெட்சுமி சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். பொருளாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் நன்றி கூறினார்.<br />
<br />
முன்னதாக கம்பன் திருவீதி உலா பேரணியை மூத்த பொறியாளர் எஸ்.முகமது ரபீக் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் கம்பன் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எடுத்துவரப்பட்டது. மலர்க் குடங்களுடன் பெண்களும் தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.<br />
<br />
<br />
*<b> 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்</b><br />
<br />
சென்னை, மே 20: தமிழகத்தில் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள துறைகளில் மூத்த, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள<br />
<br />
ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.<br />
<br />
<b>* பாரதிதாசன் பல்கலை.யில் 6 ஆண்டு எம்.டெக். படிப்புக்கு மே 28-ல் நுழைவுத் தேர்வு<br />
</b><br />
திருச்சி, மே 20: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 6 ஆண்டு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது.<br />
<br />
இதுகுறித்து பல் கலைக்கழகப் பதிவாளர் த. ராமசாமி தெரிவித்திருப்பது: "ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். (உயிரித் தொழில்நுட்பவியல், உயிரித் தகவலியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், புவிநுட்பவியல், புவித் தகவலியல்) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. கேள்விகள் 12 ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமையும். ஆங்கிலம், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டையும், 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் கொண்டு வர வேண்டும். எனவே, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்' என்றார் ராமசாமி.<br />
<br />
<br />
<b style="color: #ff6600;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>தயிரை சாப்பிட்டு வந்தால்</b><br />
<br />
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.<br />
<br />
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.<br />
<br />
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.<br />
<br />
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.<br />
<br />
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.<br />
<br />
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.<br />
<br />
சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.<br />
<br />
தயிரின் முக்கியத்துவம் <br />
<br />
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.<br />
<br />
கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.<br />
<br />
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.<br />
<br />
பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.<br />
<br />
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.<br />
<br />
தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.<br />
<br />
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.</div></div></div></blockquote><br />
<br />
<div class="gmail_quote"><blockquote class="gmail_quote" style="border-left: 1px #ccc solid; margin: 0 0 0 .8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><br />
<br />
<div dir="ltr"><b style="color: #ff6600;"><img alt="T_500_35.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301054af7252e82&attid=0.1&disp=emb&realattid=ii_13010515a8249ad3&zw" title="T_500_35.jpg" /><br />
</b><b style="color: #ff6600;">* அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்<br />
<br />
<span style="font-size: xx-small;"><span style="color: #999999;">நன்றி - தின மலர்.</span></span><br />
</b><b style="color: #ff6600;"><br />
வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>'சென்செக்ஸ்' 185 புள்ளிகள் உயர்வு</b><br />
<br />
மே 21,2011,00:11<br />
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. ஹாங்காங், தென்கொரியா ஆகிய நாடுகளில் பங்கு வியாபாரம், சூடுபிடித்து காணப்பட்டது.<br />
<br />
இந்நிலையில், சில நிறுவனங்களின் லாபவரம்பு அதிகரித்துள்ளது என்ற செய்தியால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சரிவடைந்துள்ளது.<br />
<br />
இதனால், ஜப்பான் நாட்டின் 'நிக்கி' பங்கு சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க பங்கு சந்தைகளில் வியாபாரம் சூடுபிடித்து இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்தது.வெள்ளிக்கிழமையன்<wbr></wbr>று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம், நுகர்பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 184.69 புள்ளிகள் அதிகரித்து, 18,326.09 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,429.47 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,161.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பாரத ஸ்டேட் வங்கி, ஐ.டி.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 58.25 புள்ளிகள் உயர்ந்து, 5,486.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,517.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,432.75 புள்ளிகள் வரையிலும் சென்றது. <br />
<br />
<b style="color: #ff6600;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
* <br />
<b>கிரிக்கெட்</b><br />
<br />
<b>வெற்றியுடன் விடைபெற்றார் வார்ன்! * மீண்டும் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்</b><br />
<br />
மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன் "ஆல்-ரவுண்டராக' ஜொலிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தனது கடைசி ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்ன் வெற்றியுடன் விடைபெற்றார்.<br />
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 66வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின் "பேட்டிங்' தேர்வு செய்தார்.<br />
திணறல் துவக்கம்:<br />
<br />
மும்பை அணி வாட்சன் பந்துவீச்சில் திணறியது. இவரது வேகத்தில் முதலில் சுமன்(5) வெளியேறினார். தனது அடுத்த ஓவரில் ராயுடுவை(2) அவுட்டாக்கிய வாட்சன் இன்னொரு "அடி' கொடுத்தார். அப்போது 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது.<br />
<br />
ரோகித் அரைசதம்:<br />
பின் சச்சின், ரோகித் சர்மா இணைந்து நிதானமாக ஆடினர். அமித் சிங் பந்தில் சச்சின்(31) வீழ்ந்தார். தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா, அமித் சிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். மறுபக்கம் மனேரிய ஓவரில் போலார்டு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் உயரத் துவங்கியது. இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த வாட்சன், போலார்டை(20) போல்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். வார்ன் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட ரோகித் சர்மாவின் பேட் பறந்து போனது. இதனை பயன்படுத்திய கீப்பர் பினல் ஷா "ஸ்டம்பிங்' செய்ய, சர்மா 58 ரன்களுக்கு அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன் "ஆல்-ரவுண்டராக' ஜொலிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தனது கடைசி ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்ன் வெற்றியுடன் விடைபெற்றார்.<br />
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 66வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின் "பேட்டிங்' தேர்வு செய்தார்.<br />
திணறல் துவக்கம்:<br />
<br />
மும்பை அணி வாட்சன் பந்துவீச்சில் திணறியது. இவரது வேகத்தில் முதலில் சுமன்(5) வெளியேறினார். தனது அடுத்த ஓவரில் ராயுடுவை(2) அவுட்டாக்கிய வாட்சன் இன்னொரு "அடி' கொடுத்தார். அப்போது 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது.<br />
ரோகித் அரைசதம்:<br />
<br />
பின் சச்சின், ரோகித் சர்மா இணைந்து நிதானமாக ஆடினர். அமித் சிங் பந்தில் சச்சின்(31) வீழ்ந்தார். தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா, அமித் சிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார். மறுபக்கம் மனேரிய ஓவரில் போலார்டு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் உயரத் துவங்கியது. இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த வாட்சன், போலார்டை(20) போல்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். வார்ன் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட ரோகித் சர்மாவின் பேட் பறந்து போனது. இதனை பயன்படுத்திய கீப்பர் பினல் ஷா "ஸ்டம்பிங்' செய்ய, சர்மா 58 ரன்களுக்கு அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டும் எடுத்தது. பிராங்க்ளின்(11), ஹர்பஜன்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.<br />
ராஜஸ்தான் தரப்பில் வாட்சன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.<br />
அசத்தல் துவக்கம்:<br />
<br />
சுலப இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு வாட்சன் அதிரடி துவக்கம் தந்தார். மும்பை அணியின் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தார். ஹர்பஜன் ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்களை விளாசினார். மலிங்காவின் ஓவரில் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் பறந்தது. தொடர்ந்து குல்கர்னி ஓவரிலும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மீண்டும் பந்துவீச வந்த ஹர்பஜன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து அசத்தினார் வாட்சன். மறுபக்கம் அடக்கி வாசித்த டிராவிட், போலார்டு ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். பிராங்க்ளின் பந்தில் டிராவிட் ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து, தொடரை வெற்றியுடன் நிறைவு செய்து ஆறுதல் தேடியது. வாட்சன் 89(9 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிட் 43(6 பவுண்டரி)ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.<br />
ஆட்ட நாயகன் விருதை வாட்சன் வென்றார்.<br />
<br />
இப்போட்டியில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனது அடுத்த போட்டியில்(மே 22) கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தினால் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் முன்னேற முடியும்.<br />
<br />
<b style="color: #ff6600;">ஆன்மீகச் செய்தி மலர் </b>:<br />
<br />
<b style="color: #00cccc;">* சம்பந்தருக்கு ஞானப்பால்</b><br />
<br />
பழநி: பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. திருஞான சம்பந்தருக்கு, பழநி கோயிலில் விழா நடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில் சம்பந்தருக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்தார். "தோடுடைய செவியன்' என்னும் பாடலை சம்பந்தர் பாட, உமையாள் பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது.<br />
<br />
<b style="color: #ff6600;">* அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்</b><br />
மூலவர் : மாதவப்பெருமாள்<br />
உற்சவர் : அரவிந்த மாதவன்.<br />
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி<br />
தல விருட்சம் : புன்னை<br />
தீர்த்தம் : சந்தானபுஷ்கரிணி<br />
ஆகமம்/பூஜை : வைகானஸம்<br />
பழமை : 500 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : மாதவபுரம்<br />
ஊர் : மயிலாப்பூர்<br />
மாவட்டம் : சென்னை<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.<br />
<br />
<br />
பிரகாரத்தில் பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.இக்கோயிலுக்கு அருகில் கபாலீஸ்வரர் கோயில், பின்புறம் முண்டககண்ணியம்மன் கோயில் இருக்கிறது.இத்தல பெருமாளை தரிசிக்கச் செல்பவர்கள் இக்கோயில்களுக்கும் சென்று வரலாம்.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
இங்குள்ள மூலவர் அமர்ந்த திருமண கோலத்தில் அருளுகிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உள்ளது.மூலவரின் விமானம் ஆனந்த நிலை என அழைக்கப்படுகிறது.வேதவியாசர் நாரதரிடம் பூலோகில் தோஷம் இல்லாத தலம் எது என்று கேட்க, அவர் இத்தலத்தை கூறினாராம். இத்தலத்தில் மாதவப்பெருமாள், அமர்ந்து திருமணக்கோலத்தில் இருக்கிறார். அமிர்தவல்லித்தாயார் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரிணியில் ஒரு மாசி மகத்தன்று குழந்தையாக தோன்றினாள். எனவே இத்தீர்த்தம், "சந்தான புஷ்கரிணி' என்றழைக்கப்படுகிறது. தாயார் அவதரித்த நாளில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இத்தீர்த்தத்தில் சங்கமித்ததாம். இதன் அடிப்படையில் மாசி மகத்தன்று இங்கு விழா நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் தாயார், சுவாமியுடன் சேர்ந்து தீர்த்தக்குளத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது தீர்த்த நீராடி, தாயாரை வணங்கிட பாவம் நீங்கி, புண்ணியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் மூன்றும் சேர்ந்த கலவையை நைவேத்யமாக வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் குழந்தைப்பேறு உண்டாவதாக நம்பிக்கை.உற்சவர் தாமரை மலர் போன்று, அழகான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், "அரவிந்த மாதவன்' என்று அழைக்கப்படுகிறார். அரவிந்தம் என்றால், தாமரை என்று பொருள். சதய நட்சத்திர நாட்களில் இவர், வீதி புறப்பாடாகிறார்.<br />
<br />
சம்பத்குமாரர்: பெருமாள் தலங்களுக்கு யாத்திரை சென்ற ராமானுஜர், கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்குச் சென்றார். அங்கு உற்சவர் சம்பத்குமாரர் இல்லை. கலங்கிய ராமானுஜர், டெல்லியை ஆண்ட மன்னர் தன் மகளின் விருப்பத்திற்காக சிலையை கொண்டு போனதை அறிந்தார். பின்பு டெல்லி சென்ற அவர், திருமாலை வேண்டி வணங்கினார். அப்போது மன்னரின் அரண்மனையில் இருந்த பெருமாள் சிலை, அவரது மடியில் வந்தது. அச்சிலையை நாராயணபுரம் கொண்டு வந்த ராமானுஜர், மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த சம்பத்குமாரர் இங்கு உற்சவராக இருக்கிறார். இவரது பாதத்தில் டெல்லி மன்னரின் மகள் பீபி நாச்சியார் இருக்கிறாள். இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே இவருக்கு, "செல்வப்பிள்ளை' என்ற பெயரும் உண்டு. பங்குனியில் சம்பத்குமாரருக்கு 10 நாட்கள் விழா நடக்கிறது. இவ்விழாவில் சுவாமி, ராமானுஜர் மடியில் அமரும் வைபவம் பிரசித்தி பெற்றது.<br />
<br />
பேயாழ்வார் அவதார தலம்: முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்று துõரத்திலுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. திருக்கோவிலுõர் தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், "திருக்கோவிலுõர் வைபவம்' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. தாயார் சன்னதி முன்மண்டப துõண்களில் இவர் கிளி, யானை, குதிரை, சூரிய பிரபை மற்றும் அம்ச வாகனங்களில் காட்சி தரும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
திருமாலின் சாந்த குணத்தை சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி, அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி, சுவாமியை பிரிந்தார். தன் தவறுக்கு பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். லட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "அமிர்தவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.<br />
<br />
திருவிழா:<br />
<br />
சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை6.30 மணி முதல் 11மணி வரை, மாலை 4.39 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்<br />
<br />
<b style="color: #ff6600;">ஆன்மீகச் சிந்தனை மலர்</b> :<br />
<br />
<b style="color: #ff6600;">சும்மா இருப்பது சிரமம்! - ரமணர்.</b><br />
<br />
* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.<br />
<br />
* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.<br />
<br />
<b style="color: #ff6600;">வினாடி வினா</b> :<br />
<br />
<b>வினா</b> - பாராளுமன்றத்தில் செயல்படும், பாராளுமன்றத்தின் உறுப்பினர் அல்லாதவர் யார் ?<br />
<br />
<b>விடை</b> - ஜனாதிபதி.<br />
<br />
<b style="color: #ff6600;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>வறுமையின் பிடியில் "வீர தீர விருது' பெற்ற வாலிபர்: "காற்றில் போனது' அரசு வாக்குறுதி</b><br />
<br />
<img alt="large_243387.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1301054af7252e82&attid=0.2&disp=emb&realattid=ii_130104e5fba94166&zw" title="large_243387.jpg" /><br />
<br />
<br />
புதுச்சேரி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூன்று சிறுமிகளைப் காப்பாற்றி, பிரதமர் கையால் "வீர தீர விருது' பெற்ற, வாலிபர் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்.<br />
<br />
புதுச்சேரி மாநிலம் செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குப்புராமன் (26). கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். மாணவர் குப்புராமன் விடுமுறை நாளில் மாடு மேய்ப்பது வழக்கம். கடந்த 1998ம் ஆண்டு விடுமுறை நாளில் குப்புராமன் ஆற்றங்கரையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, சங்கராபரணி ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதைக் கண்ட குப்புராமன் துணிச்சலாக ஆற்றில் குதித்து மூன்று சிறுமிகளையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான். இதற்காக அவருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி "வீரதீர செயல் விருது' டில்லியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் கையால் வழங்கப்பட்டது. சிறுவன் குப்புராமனின் அசாத்திய திறமைக்காகவும் வீரதீர செயலுக்கான விருது பெற்றதற்காகவும் அவருக்கு புதுச்சேரி அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. 10ம் வகுப்பு வரை படித்த குப்புராமன் மேலே படிக்காமல் பள்ளியை விட்டு நின்றான்.<br />
<br />
புதுச்சேரி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூன்று சிறுமிகளைப் காப்பாற்றி, பிரதமர் கையால் "வீர தீர விருது' பெற்ற, வாலிபர் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்.<br />
<br />
கால ஓட்டத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வீரதீர சாதனை புரிந்த சிறுவனுக்கு இன்று 26 வயதாகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை சிறுவனின் படிப்பைப் பாதித்து, அவனது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. விளைவு... தற்போது செல்லிப்பட்டு பகுதியில் செங்கல் சூளையில் அவர் கூலி வேலை செய்யும் அவல நிலை அரங்கேறியுள்ளது. அன்று சாதனை புரியும் போது, சிறுவனைப் பாராட்டி மகிழ்ந்த அரசு, அதன் பிறகு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள குப்புராமன் தினமலர் நிருபரிடம் கூறியதாவது: மூன்று சிறுமிகளைக் காப்பாற்றிய போது, முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த எனது ஆசிரியர் ஸ்ரீராம், நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்தார். நான் 18 வயதைத் தாண்டிய போது, கல்வித்துறை இயக்குனராக இருந்த ராகேஷ் சந்திரா எனக்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்தார். பல முறை தலைமைச் செயலத்திற்குச் சென்று திரும்பிய அந்த "கோப்பு' தற்போது எங்கிருக்கிறது என்றே தெரிய வில்லை என்றார். குப்புராமனுக்கு அரசு வேலை வழங்குவதற்காக அனுப்பப்பட்ட கோப்பைக் கண்டெடுத்து தூசி தட்டி நடவடிக்கை எடுக்குமா ரங்கசாமி தலைமையிலான அரசு?<br />
<br />
<br />
நன்றி - தின மலர், தின மணி, தட்ஸ்தமிழ்.<br />
<br clear="all" /><br />
-- <br />
<div dir="ltr"><div><br />
<br />
</div></div></div></div><br />
<br clear="all" /><br />
-- <br />
<div dir="ltr"><div><br />
</div></div></div></blockquote></div><br />
<blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><br />
<br />
<br />
<br />
-- <br />
<div dir="ltr"><div><br />
</div></div></div></div></div></blockquote><br />
<blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><br />
</div></div><br />
<br clear="all" /><br />
-- <br />
<div dir="ltr"><div><br />
</div><div></div></div></div></blockquote><br />
<br />
<blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div dir="ltr"><div> </div></div><br />
</div></blockquote></div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-34112733943519325442011-05-20T07:07:00.000+05:302011-05-20T07:07:10.549+05:30இன்றைய செய்திகள் மே, 20 2011 ,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b>முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>சிறுத்தைகளிடம் கடிபட்டுச் சாகும் வால்பாறை குழந்தைகள்: ஓர் அலசல் ரிப்போர்ட்<br />
<br />
<img alt="19-leopard300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.7&disp=emb&realattid=ii_1300acf02e8b91f2&zw" title="19-leopard300.jpg" /><br />
</b><br />
வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள குழந்தைகள் சிறுத்தைகளுக்கு பலியாகும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.<br />
<br />
சிறுமி பலி:<br />
<br />
வால்பாறையைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மூன்று வயது மகள் ஜனனி. நேற்று, வால்பாறையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள தாய்முடி எஸ்டேட்டில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றார்.<br />
<br />
இரவு 7 மணி அளவில் விருந்து முடிந்து ஜெகமூடி எஸ்டேட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்கு சக்திவேல், அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் தேயிலை தோட்டம் வழியாகச் சென்றுள்ளனர்.<br />
<br />
பாய்ந்த சிறுத்தை:<br />
<br />
அப்போது தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை, சிறுமி ஜனனியை குறிவைத்து பாய்ந்தது. சிறுத்தை சிறுமியின் கழுத்தை கவ்விக்கொண்டு, புதருக்குள் ஓட முற்பட்டது. சிறுமியின் தாயார் உதவி கேட்டு போட்ட கூச்சலில் சிறுத்தை சிறுமியை போட்டுவிட்டு ஓடிவிட்டது.<br />
<br />
தாய் கண் எதிரே பலி:<br />
<br />
சிறுத்தையால் கடிபட்ட சிறுமி ஜனனி, சம்பவ இடத்திலேயே தாயின் கண்ணெதிரில் துடிதுடித்து இறந்தார். சிறுமியின் உடல் முடீஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.<br />
<br />
தொடர்கதையாகும் உயிர்பலி:<br />
<br />
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை மூன்று குழந்தைகள் சிறுத்தைகளுக்குப் பலியாகியுள்ளனர். இது தவிர, கடந்த ஆண்டு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள் சிறுத்தையினால் தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தனர்.<br />
<br />
சிறுத்தை மட்டுமல்லாமல் யானைகளும் அடிக்கடி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. யானையிடம் மிதிபட்டு கடந்த ஆண்டுகளில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தவிர மலைப்பாம்புகள், செந்நாய் போன்றவற்றின் தொல்லைகளும் அதிகரிக்கிறது. நேற்றுகூட, வால்பாறை தொழிலாளர் குடியிருப்புக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது.<br />
<br />
கண்டுகொள்ளாத எஸ்டேட் அதிபர்கள்:<br />
<br />
கடந்த பலவருடங்களாக எஸ்டேட் பகுதிகளில் மின்விளக்கு அமைக்குமாறு அதன் உரிமையாளர்களை வனத்துறை எச்சரித்து வருகிறது. ஆனால் பலரும் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லை. பொதுமக்களையும் இரவு இருட்டியதற்குப்பின் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறது.<br />
<br />
முன்னெப்போதும் இருந்ததை விட, வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிகளில் எப்போதும் அச்சத்துடனேயே நடமாட வேண்டி உள்ளது. வேட்டை தடை செய்யப்பட்டதனால் வால்பாறை பகுதிகளில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவதும் ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியளாளர்கள்.<br />
<br />
போராட்டம்:<br />
<br />
இந்நிலையில் சிறுத்தைகளின் அட்டகாசத்தை அடக்கும் வரை சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று போராட்டம் செய்தார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் வந்து எங்களது பாதுகாப்பான வாழ்விற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இதனால் அப்பகுதியில் இரவு பத்து மணி வரை பதட்டம் நீடித்தது.<br />
<br />
<b style="color: #33cc00;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* கடாபியின் மனைவி, மகள் துனிசியாவுக்கு தப்பி ஓட்டம்: அகதி முகாமில் தஞ்சம்</b><br />
<br />
மாஸ்கோ: லிபிய அதிபர் கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா ஆகியோர் துனிசியாவுக்கு தப்பியோடிவிட்டதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.<br />
<br />
இது குறித்து துனிசிய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள ஒருவர் கூறியதாவது,<br />
<br />
சபியாவும், ஆயிஷாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பே துனிசியா வந்துவிட்டனர். அவர்கள் தற்போது ஜெர்பா தீவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் உள்ளனர்.<br />
<br />
அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. தன்னை எதிர்க்கும் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறார் கடாபி. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.<br />
<br />
லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வரும்போதிலும் கடாபியின் ராணுவம் தொடர்ந்து மக்களைத் தாக்கி வருகிறது.<br />
<br />
கடந்த ஒரு வாரத்திற்கு முன் திரிபோலியில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் கடாபியின் இளைய மகனும், 3 பேரக் குழந்தைகளும், பல நண்பர்களும் கொல்லப்பட்டனர். <br />
<br />
இதற்கிடையே பெரும்பாலான மக்கள் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு தப்பிச் செல்லும் சாலையை கடாபியின் படை தகர்த்துள்ளது.<br />
<br />
கடாபி படைகள் யாப்ரின் நகரைச் சுற்றியே பெரும்பாலும் தாக்குதல்கள் நடத்துகிறது. அந்நகரத்தாரும், போராட்டக்காரர்களும் கூறுகையில்,<br />
<br />
கடாபியின் படைகள் கிராட் ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் பயன்படுத்தி தாக்குகின்றன. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் உணவும், மருத்துவ வசதியும் இன்றி தவிக்கின்றனர் என்றனர்.<br />
<br />
* <b>பின்லேடன் பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிட்டது அல் கொய்தா<br />
</b><br />
வாஷிங்டன்: அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் பேச்சு அடங்கிய ஒலிநாடாவை வெளியிட்டுள்ளது அல் கொய்தா. கொல்லப்படுதவற்கு முன்பு பின்லேடன் பேசிய பேச்சு இது.<br />
<br />
பல்வேறு அல் கொய்தா ஆதரவு இணையதளங்களில் இது வெளியாகியுள்ளது. அதில், அரபு உலகை ஆட்டிப்படைத்து வந்த மக்கள் புரட்சிகளை வெகுவாக புகழ்ந்துள்ளார் பின்லேடன்.<br />
<br />
12 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ஆடியோ ஓடுகிறது. தனது மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு இந்த ஆடியோவைப் பதிவு செய்துள்ளார் பின்லேடன் என்று தெரிகிறது.<br />
<br />
பின்லேடன் தனது பேச்சில் கூறுகையில், வடக்கு ஆப்பிரிக்காவின் மெகரப் நகரில் தொடங்கிய புரட்சி இன்று அரபு நாடுகளில் பரவி வருவது பாராட்டுக்குரியது.<br />
<br />
மெகரப்பில் புரட்சியின் உதயம் தொடங்கியுள்ளது. துனிசியாவிலிருந்து வந்த இந்த புரட்சி ஒளி, மக்கள் மனங்களிலும், முகங்களிலும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.<br />
<br />
பின்னர் எகிப்தில், தஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய மக்கள் போராட்டத்தின் அலை இன்று எகிப்து மக்கள் முகங்களிலும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. இது ஆட்சியாளர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார் பின்லேடன்.<br />
<br />
*<b> லிபியாவில் வெளிநாட்டு செய்தியாளர்கள் விடுதலை<br />
<br />
<img alt="reporter.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.4&disp=emb&realattid=ii_1300ac538962a029&zw" title="reporter.jpg" /></b><br />
திரிபோலி, மே 19: லிபியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 4 வெளிநாட்டு செய்தியாளர்களை அரசு அதிகாரிகள் புதன்கிழமை விடுவித்தனர்.<br />
<br />
லிபியா அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்று வரும் மோதல் குறித்து செய்தி சேகரிக்க பல நாடுகளிலிருந்து செய்தியாளர்கள் லிபியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேரை லிபிய அதிகாரிகள் கைது செய்தனர்.<br />
<br />
இதில் இணையதள செய்தி நிறுவனமான குளோபல் போஸ்ட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் போலி, செய்தி எழுத்தாளரான கிளேர் மார்கானா கில்லிஸ் ஆகிய இருவரும் அமெரிக்கர்கள்.<br />
<br />
பிரிட்டனைச் சேர்ந்த நைஜல் சாண்ட்லர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மனு பிராபோ ஆகியோர் மற்ற இருவர். இவர்கள் நால்வரும் கடந்த 6 வாரங்களாக லிபிய அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.<br />
<br />
இவர்களை புதன்கிழமை லிபிய அரசு விடுவிக்க உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட நால்வரும் லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள ரிக்úஸôஸ் ஹோட்டலுக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.<br />
<br />
லிபியாவில் செய்தி சேகரிக்க வந்துள்ள அனைத்து வெளிநாட்டு செய்தியாளர்களும் இங்குதான் தங்கியுள்ளனர்.<br />
<br />
லிபியா நிலைமை குறித்து ஐ.நா: லிபியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் பான்-கி-மூன் கருத்து தெரிவித்துள்ளார்.<br />
<br />
நியூயார்க்கில் அளித்த பேட்டியொன்றில் அவர் கூறியது:<br />
<br />
லிபியாவில் நடந்து வரும் சண்டையை நிறுத்தி, அமைதி திரும்புவதற்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவராக அப்துல் இலா அல்-காதிப் அனுப்பப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் திரிபோலி போய்ச் சேர்ந்தார்.<br />
<br />
இவர் அங்குள்ள முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார். அந்நாட்டில் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கூறிவருகிறார். ஆயினும் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக மிஸராட்டா பகுதியில் கடந்த 2 மாதங்களாக லிபிய ராணுவத்தின் முற்றுகை தொடர்கிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு உயிரிழந்திருக்கக் கூடும்.<br />
<br />
லிபியாவில் பல்வேறு மூத்த அதிகாரிகளை காதிப் சந்தித்திருக்கிறார். ஆனால் கடாஃபியை அவர் இதுவரை சந்திக்கவில்லை என்று பான்-கி-மூன் தெரிவித்தார்.<br />
<br />
கடந்த 41 ஆண்டுகளாக லிபிய அதிபராக உள்ள மம்மர் கடாஃபிக்கு எதிராக பிப்ரவரி மாதம் பென்காஸி நகரில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கும், கடாஃபியின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் கிளர்ச்சியாளர்களை அடக்க ராணுவத்தை அனுப்பினார் கடாஃபி.<br />
<br />
இதைக் கண்டித்து ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லிபியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என இதில் முடிவு செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.<br />
<br />
ஐ.நா. தீர்மானத்துக்குப்பின் லிபியாவில் அமெரிக்க நேசப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ஆயினும் லிபியாவின் பல நகரங்களில் கடாஃபிக்கு தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களால் அவற்றை முழுவதும் கைப்பற்ற இயலவில்லை.<br />
<br />
தனது ஆட்சியைக் கவிழ்த்து, லிபியாவின் வளங்களை மேற்கத்திய நாடுகள் சூறையாடவே இந்த சர்வதேசத் தாக்குதல் நடத்தப்படுகிறது என கடாஃபி கூறி வருகிறார்.<br />
<br />
<b style="color: #33cc00;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்</b><br />
<br />
புது தில்லி, மே 19: நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.<br />
<br />
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.<br />
<br />
ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதன் மூலம், மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து தெரியவரும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.<br />
<br />
மக்கள்தொகை கணக்கெடுக்கும் மாபெரும் பணியில் ஜாதி வாரியாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும் கணக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.<br />
<br />
இந்த கணக்கெடுப்பு நடத்துவது முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்காக குறைந்த விலையிலான கையடக்க கம்ப்யூட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இந்த கையடக்க கம்ப்யூட்டர் அளிக்கப்படும். இந்தக் கருவியை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.<br />
<br />
12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அடையாள அட்டை வழங்கும் (யுஐடி) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்போது இந்த கணக்கெடுப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிய உதவும்.<br />
<br />
ஊரக மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு அமைச்சகங்களும் இந்திய பதிவாளர் துறையும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தும்.<br />
<br />
<br />
<b>* கல்மாடிக்கு எதிராக மற்றொரு வழக்கு</b><br />
<br />
புதுதில்லி, மே 19: பதவி நீக்கம் செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி மீது மற்றொரு வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்திருக்கிறது.<br />
<br />
இந்த வழக்கில் அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் கல்மாடி மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.<br />
<br />
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கல்மாடி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.<br />
<br />
ஏற்கெனவே கல்மாடி மீது அன்னியச் செலாவணி விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. கல்மாடியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அனுமதி கோரியிருக்கிறது. இந்த நிலையில், அன்னியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கல்மாடி மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை புதிதாக வழக்குப் பதிவு செய்திருப்பதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
வங்கிக் கணக்குகள், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், கடந்த ஆண்டு செய்த அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகள் போன்றவை தொடர்பான விவரங்களை அளிக்குமாறு கல்மாடியிடம் அமலாக்கப் பிரிவு கூறியிருக்கிறது.<br />
<br />
இந்தத் தகவல்களை அளிப்பதற்கு தமக்கு சில வார அவகாசம் அளிக்குமாறு கல்மாடி கோரியிருப்பதாகவும் தெரிகிறது.<br />
<br />
<br />
<b>* புத்ததேவ் ராஜிநாமா: ஆளுநர் ஏற்பு<br />
<br />
<img alt="buddhadev.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.3&disp=emb&realattid=ii_1300acb98165ec83&zw" title="buddhadev.jpg" /><br />
</b><br />
கொல்கத்தா, மே 13: மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ராஜிநாமாவை ஆளுநர் எம்.கே.நாராயண் ஏற்றுக் கொண்டார்.<br />
<br />
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை ஆளும் கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆளுநர் நாராயணைச் சந்தித்துப் பேசினார்.<br />
<br />
அப்போது தனது அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட நாராயண், மாற்று ஏற்பாடு செய்யும்வரை முதல்வரையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் பதவியில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை புத்ததேவ் ஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
*<b> மக்களவை இடைத்தேர்தல்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகன்மோகன் வெற்றி</b><br />
கடப்பா (ஆந்திரம்), மே 13: கடப்பா மக்களவைத் தொகுதியில் 5 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்றார்.<br />
<br />
புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.<br />
<br />
கடப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெகன்மோகனின் தாயாரும், மறைந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயலட்சுமி ஆகியோர்<br />
<br />
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும் எம்பி, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்.<br />
<br />
இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் ஜெகன் புதிய கட்சியைத் துவக்கினார்.<br />
<br />
இந்நிலையில் கடப்பா மக்களவை மற்றும் புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 8-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் விஜயலட்சுமியும் போட்டியிட்டனர்.<br />
<br />
வெள்ளிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டி.எல்.ரவீந்திரரெட்டியை 5 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜெகன்மோகன் மொத்தம் 6,55,496 வாக்குகள் பெற்றார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 70 சதவிகிதம் ஆகும். ரவீந்திர ரெட்டி 1,34,496 வாக்குகளும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும்<br />
<br />
மாநிலங்களவை மூத்த உறுப்பினருமான எம்.வி.மைசூரா ரெட்டி 1,28,727 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் காங்கிரஸ், தெலுங்கு தேசகட்சி வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.<br />
<br />
புலிவெந்துலா: புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் விஜயலட்சுமி 85,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விஜயலட்சுமிக்கு 1,14,039 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சகோதரருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டிக்கு 28,729 வாக்குகளும், தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் பி.ரவிக்கு 12,051 வாக்குகளும் கிடைத்தன.<br />
<br />
இடைத்தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைத்தொடர்ந்து ஜெகன்மோகன் கூறுகையில், ஆந்திர சட்டப்பேரவைக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றார். அவர் மேலும் கூறுகையில் ஆறுதல் யாத்திரையை மே 14-ம் தேதி முதல் விஜயநகர் மாவட்டத்திலிருந்து துவங்கப்போவதாக அறிவித்துள்ளார்.<br />
<br />
*<b> லோக்பால் குழுவுக்கு எதிரான மனு இன்று விசாரணை</b><br />
லக்னெü, மே 19: லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.<br />
<br />
லக்னெüவைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.<br />
<br />
அரசியல் சட்டப்படி லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு ஒரு குழுவை அமைப்பது தொடர்பான தீர்மானத்தையோ, அறிவிக்கையையோ மத்திய அரசு பிறப்பிக்க முடியாது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
நீதிபதிகள் பிரதீப் காந்த், வேத்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விசாரணைக்கான தேதியை வியாழக்கிழமை முடிவு செய்தது. முன்னதாக, இந்த மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு ஏப்ரல் 20-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.<br />
<br />
*<b> தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 6 விருதுகளை அள்ளியது "ஆடுகளம்'<br />
<br />
<img alt="filimcommi.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.5&disp=emb&realattid=ii_1300ac920133d620&zw" title="filimcommi.jpg" /></b><br />
புது தில்லி, மே 19: தனுஷ் நடித்த ஆடுகளம் தமிழ்த் திரைப்படம் ஆறு தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் (ஆடுகளம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரஜத் கமல் பதக்கத்துடன் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.<br />
<br />
இப் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. அவருக்கு தங்கத் தாமரை பதக்கத்துடன் இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.<br />
<br />
சிறந்த தமிழ்த் திரைப்படமாக தென்மேற்குப் பருவக் காற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ரஜத் கமல் பதக்கமும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதினை படத்தின் தயாரிப்பாளர் ஷிபு ஐசக், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொள்வர்.<br />
<br />
இது தவிர, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட பல்வேறு விருதுகளைத் தமிழ்ப் படங்கள் குவித்துள்ளன.<br />
<br />
58-வது தேசிய திரைப்பட விருதுகள் புது தில்லியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.<br />
<br />
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் சார்பில் விருதுக் குழுவின் தலைவர் ஜே.பி. தத்தா விருது பெறுவோர் பட்டியலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.<br />
<br />
சிறந்த திரைப்படம்: தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக ஆதாமிண்டே மகன் அபு என்ற மலையாளப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப் படத்துக்கு தங்கத் தாமரை (ஸ்வர்ண கமல்) பதக்கமும், இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.<br />
<br />
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சலீம் அகமது விருதினைப் பெறுகிறார். இப் படத்தில் நடித்த சலீம் குமாருக்கு ரஜத் கமல் பதக்கமும் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.<br />
<br />
ஆடுகளம் திரைப்படத்துக்கு சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நாட்டிய இயக்கம் (கோரியோகிராபி) ஆகியவற்றுக்கான விருதுகளுடன், சிறப்புப் பரிசாக இப்படத்தின் வில்லன் நடிகருக்கும் விருது கிடைத்துள்ளது.<br />
<br />
ஆடுகளம் பெற்ற விருதுகள் விவரம்:<br />
<br />
இயக்கம்: வெற்றிமாறன் (ஸ்வர்ண கமல் - இரண்டரை லட்சம் ரூபாய்).<br />
<br />
நடிகர்: தனுஷ் (ரஜத் கமல் - ரூ. 50,000).<br />
<br />
திரைக்கதை: வெற்றிமாறன் (ரஜத் கமல் - ரூ.50,000).<br />
<br />
படத் தொகுப்பு: டி.இ. கிஷோர் (ரஜத் கமல் - ரூ.50,000).<br />
<br />
கோரியோகிராபி: தினேஷ் குமார் ( ரஜத் கமல் - ரூ.50,000).<br />
<br />
சிறப்புப் பரிசு (வில்லன் நடிப்பு): வ.ஐ.செ. ஜெயபாலன் (சான்றிதழ்).<br />
<br />
பெருமை பெற்ற தமிழ்ப் படங்கள்: ஆடுகளம் திரைப்படத்துடன் தமிழ்ப் படங்களான தென்மேற்குப் பருவக்காற்று, மைனா, நம்ம கிராமம், எந்திரன் ஆகியவையும் தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளன.<br />
<br />
சிறந்த பாடலுக்கான விருது தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. ஆறாவது முறையாக அவர் தேசிய விருதினைப் பெறுகிறார்.<br />
<br />
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது எந்திரன் படத்துக்கு கிடைத்துள்ளது. அந்த விருதினை சாபு சிரில் பெறுகிறார்.<br />
<br />
இதே படம் சிறப்புக் காட்சி அமைப்புக்கான (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) விருதினையும் பெறுகிறது. இவ் விருதினை வி.ஸ்ரீநிவாஸ், எம். மோகன் பெறுகின்றனர்.<br />
<br />
சிறந்த நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதினை மைனா படத்தில் நடித்த ஜே.தம்பி ராமையா பெறுகிறார். அது போல் சிறந்த துணை நடிகைக்கான விருதினை நம்ம கிராமம் படத்தில் நடித்த சுகுமாரி பெறுகிறார்.<br />
<br />
இவர்கள் அனைவருக்கும் ரஜத் கமல் பதக்கமும், ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இவற்றுடன், சிறந்த ஆடை அலங்காரத்துக்கான விருது நம்ம கிராமம் படத்தில் பணியாற்றிய இந்திரன்ஸ் ஜெயநுக்குக் கிடைத்துள்ளது. இவர் ரஜத் கமல் பதக்கம் பெறுவார்.<br />
<br />
இதர படங்களுக்கான விருதுகள் விவரம் வருமாறு: இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குநர் படம்: பாபு பண்ட் பாஜு (மராத்தி). ஸ்வர்ண கமல், ரூ.1.25 லட்சம்.<br />
<br />
முழுநேர பொழுதுபோக்கு: தபாங் (ஹிந்தி). ஸ்வர்ண கமல், ரூ.2 லட்சம்.<br />
<br />
தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது : மொனேர் மனுஷ். ரஜத் கமல், ரூ.1 .50 லட்சம்.<br />
<br />
சமூகப் பிரச்னைகளுக்கான சிறந்த படம்: சாம்பியன்ஸ் (மராத்தி). ரஜத் கமல், ரூ.1 .50 லட்சம்.<br />
<br />
சிறந்த குழந்தைப் படம்: ஹெஜ்ஜகலு (கன்னடம்) ஸ்வர்ண கமல், ரூ.1.50 லட்சம்.<br />
<br />
சிறந்த நடிகைக்கான விருது பாபு பண்ட் பாஜு (மராத்தி) படத்தில் நடித்த மிதாலி ஜகதப் வரத்கருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது ஐ ஆம் கலாம் ஹிந்தி படத்தில் நடித்த ஹர்ஷ் மாயர், சாம்பியன்ஸ் மராத்தி படத்தில் நடித்த சாந்தனு, மாசென்ற கர்கர், பாபு பண்ட் பாஜு (மராத்தி) படத்தில் நடித்த விவேக் சபுகஸ்வர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.<br />
<br />
பின்னணி பாடகருக்கான விருது சுரேஷ் வட்கர் (மீ சிந்து சப்கல்-மராத்தி), பின்னணிப் பாடகிக்கான விருது ரேகா பரத்வாஜ் (இஷ்கியா - ஹிந்தி), சினிமாடோகிராபருக்கான விருது மது அம்பட் (ஆதாமின்டே மகன் அபு - மலையாளம் ), சிறந்த திரைக்கதைக்கான விருது ஆனந்த் மகாதேவன், சஞ்சய் பவார் (மீ சிந்து சப்கல்-மராத்தி) ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரஜத் கமல் பதக்கமும் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.<br />
<br />
இவற்றுடன், அசாமி, வங்கம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கும் தனித்தனி விருதுகள் வழங்கப்படுகின்றன.<br />
<br />
பொழுதுபோக்கு அல்லாத படம், இனக்குழுவுக்கான படம், வாழ்க்கை வரலாறு, கலை-பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், வளர்ச்சிப் பணி, சமூகப் பிரச்னைகள், குடும்ப மதிப்பீடுகள், கல்வி, விளையாட்டு, புலனாய்வு, சிறு கதைப்படம் ஆகிய பல்வேறு தலைப்புகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
*<b> மேற்கு வங்க மாநிலத்தின்முதல் பெண் முதல்வராக மம்தா இன்று பதவியேற்பு</b><br />
கொல்கத்தா, மே 19: மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.<br />
<br />
நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸீம், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 34 ஆண்டுகால இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் பறித்தது.<br />
<br />
கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.<br />
<br />
இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு, மாநில ஆளுநர் எம்.கே. நாராயணன் அழைப்பு விடுத்தார்.<br />
<br />
மேலும் மாநில முதல்வராக மம்தாவை, நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார்.<br />
<br />
இந்த நிலையில் பதவியேற்பு விழா கொல்கத்தாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.01 மணிக்கு நடைபெறவுள்ளது.<br />
<br />
பதவியேற்பு விழாவுக்கு 3,200 பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அரசியல், தொழில், கலை, கலாசாரத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.<br />
<br />
அப்போது மேற்கு வங்க மாநிலத்தின் 11-வது முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார். மேலும் இந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
மம்தாவுக்கு, ஆளுநர் எம்.கே. நாராயணன் பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைப்பார். பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பர் என்று தெரிகிறது.<br />
<br />
விழாவுக்காக ஆளுநர் மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.<br />
<br />
தேர்தலில் 42 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும், அமைச்சரவையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, அவரது மனைவி மீனா உள்ளிட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி, இடதுசாரி கட்சிகளின் தலைவர் பிமன் போஸ், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்பர் என்று தெரிகிறது. பதவியேற்பு விழாவை நேரடியாகக் காண ஷாஹித் மினார் மைதானத்தில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.<br />
<br />
பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர்.<br />
<br />
இதைத் தொடர்ந்து பிபிபி பாக் அருகே அமைந்துள்ள தலைமைச் செயலக கட்டடத்துக்கு மம்தா செல்வார். மாலையில் அவர் அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்வார் என்று தெரிகிறது.<br />
<br />
<br />
<br />
புத்ததேவுக்கு மம்தா அழைப்பு<br />
<br />
மேற்கு வங்க முதல்வராக வெள்ளிக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார்.<br />
<br />
தனது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாசார்யாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.<br />
<br />
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி இதற்கான அழைப்பிதழை புத்ததேவ் இல்லத்திற்கு சென்று அளித்தார். பதவி ஏற்பு விழாவில் புத்ததேவ், அவரது மனைவி மீரா பட்டாசார்யா ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு திரிணமூல் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் புத்ததேவ் பட்டாசார்யா வீட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.<br />
<br />
மம்தா பானர்ஜி கூறியதன்பேரில் புத்ததேவ் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் சாட்டர்ஜி கூறினார். அனைத்துத் தரப்பினருக்கும் அளிக்க வேண்டிய உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் வீட்டிற்கு நேரில் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.<br />
<br />
மம்தா பானர்ஜியின் செயல் பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்று புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் மனோஜ் பட்டாசார்ஜி குறிப்பிட்டார். இத்தகைய மனிதநேயப் பண்புகள் கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் பரவ வேண்டும் என்று தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்<br />
<br />
*<b> புரூலியா ஆயுத வழக்கு: காலாவதியான வாரண்டுடன் டென்மார்க் சென்ற சிபிஐ அதிகாரிகள்</b><br />
புது தில்லி, மே 19: புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கு தொடர்பாக, காலாவதியான வாரண்டுடன் டென்மார்க் நாட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். இது நாட்டுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.<br />
<br />
1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில், வெளிநாட்டு விமானத்திலிருந்து ஏகே-476 ரக துப்பாக்கிகள், குண்டுகள், பயங்கர ஆயுதங்கள் கொட்டப்பட்டன. ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த வெளிநாட்டு விமானம், இந்திய எல்லைக்குள் பறந்துவந்தபோது, விமானப்படையைச் சேர்ந்த மிக் விமானம், அதை தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக பம்பாயில் (இப்போது மும்பை) இறக்கச் செய்தது. இது லாட்வியா நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்பது விசாரணையில் தெரியவந்தது. 1995-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதுமுதல் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.<br />
<br />
இந்த வழக்கில் லாட்வியாவைச் சேர்ந்த 5 பேர் மீதும், டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டேவி, பீட்டர் பிளீச் என்பவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கிம் டேவி, கிம் பிளீச் ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.<br />
<br />
இதுதொடர்பான வழக்கு டென்மார்க்கிலும் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு கிம் டேவியைக் கொண்டு செல்வதற்கான உத்தரவை டென்மார்க்கிலுள்ள மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து டென்மார்க் அரசு, டென்மார்க் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதற்கான விசாரணைதான் இப்போது நடைபெற்று வருகிறது.<br />
<br />
இந்த நிலையில் கிம் டேவியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான வாரண்டை கொல்கத்தாவிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்தது.<br />
<br />
அந்த வாரண்டுடன் சிபிஐ அதிகாரிகள் 2 பேர் இம்மாதம் 16-ம் தேதி டென்மார்க் சென்றுள்ளனர். ஆனால் அந்த வாரண்ட், கடந்த ஜனவரியுடன் காலாவதியானது, என்ற விவரமே டென்மார்க் சென்றதும்தான் அந்த அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இது இந்திய அரசுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
இதையடுத்து கிம் டேவி மீது புதிய வாரண்டை பிறப்பித்து, அதை தங்களுக்கு அனுப்புமாறு டென்மார்க்கிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கோரினர். இதையடுத்து புதிய வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்டை, ஸ்கேன் செய்து கொல்கத்தா சிறப்பு குற்றப்பிரிவு போலீஸôர் அனுப்பியுள்ளனர். அசல் வாரண்டை போலீஸôர் பின்னர் அனுப்பியுள்ளனர்.<br />
<br />
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறியதாவது: கிம் டேவி தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ-யிடம் தயாராக, உள்ளன. டென்மார்க்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் வியாழக்கிழமை துவங்கிவிட்டன என்றார் அவர்.<br />
<br />
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: புரூலியா போன்ற முக்கியமான வழக்குகளில் காலாவதியான வாரண்டை எடுத்துச் சென்று நாட்டுக்கு பெருத்த அவமானத்தைத் தேடித் தந்துள்ளனர். மத்திய அரசின் மற்றுமொரு மிகப் பெரியத் தவறாகும் இது என்றார் அவர்.<br />
<br />
<b style="color: #33cc00;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<b>* 23ம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்பு: 27ல் சபாநாயகர் தேர்வு<br />
<br />
<img alt="19-fort-st-george300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.1&disp=emb&realattid=ii_1300ad02cfb6ca34&zw" title="19-fort-st-george300.jpg" /><br />
</b><br />
சென்னை: தமிழக சட்டசபை வரும் 23ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். 27ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.<br />
<br />
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.<br />
<br />
புதிதாக தேர்வான எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைக்கப்பட வேண்டும்.<br />
<br />
சட்டசபை கூட்டத்தை புதிய கட்டிடத்தில் இருந்து மீண்டும் பழைய இடமான புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த முடிவு செய்யப்பட்டதால் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கை நிர்மாணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி ஓரிரு நாட்களில் இந்த பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
இந் நிலையில் சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,<br />
<br />
14வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் மே 23ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.<br />
<br />
மே 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள்.<br />
<br />
இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையின் முதல் கூட்டம் நடக்கும். அன்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்துவார் என்று கூறப்பட்டுள்ளது.<br />
<br />
*<b> புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுகிறது சத்தி வனப்பகுதி</b><br />
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் வனக் காப்பகமாக அறிவிக்கப்படவுள்ளது.<br />
<br />
புரொஜக்ட் டைகர்<br />
<br />
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் சுமார் 40,000 புலிகள் இருந்தன. தொடர்ந்த வேட்டை மற்றும் வனப்பகுதிகள் அழிப்பின் காரணமாக, 1973ல் புலிகளின் எண்ணிக்கை 1,800 ஆக குறைந்தது.<br />
<br />
புலிகளைக் காக்கும் வகையில் அவ்வாண்டு ‘புரொஜக்ட் டைகர்’ எனும் திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. ஆனபோதும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. 2006ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,411 புலிகளே இந்தியாவில் இருந்தன.<br />
<br />
கணக்கெடுப்பு<br />
<br />
புரொஜக்ட் டைகர் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த துவங்கியது மத்திய அரசு. அதன்படி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் கணக்கெடுப்பு நடைபெறும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 1,706ஆக உயர்ந்தது கண்டறியப்பட்டது.<br />
<br />
தமிழகத்தில் 2006ல் 68 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் நூற்றுக்கும் மேல் உயர்ந்தது தெரிய வந்தது.<br />
<br />
புலிகள் காப்பகம்<br />
<br />
ஒரு வன டிவிஷனில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட புலிகள் இருப்பதாக தெரிய வந்தால் அவ்வனப்பகுதியை அரசு புலிகள் காப்பகமாக அறிவித்து விடும். ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சத்தி டிவிஷனில் ஆறு முதல் எட்டு புலிகள் வரை இருப்பதாக வனத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.<br />
<br />
எனவே, இப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க கடந்த ஆண்டே மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். ஆனால், அப்போதைய திமுக அரசு சத்தி டிவிஷனை புலிகள் காப்பகமாக அறிவிக்கவில்லை.<br />
<br />
விரைவில் அறிவிப்பு வெளியாகும்<br />
<br />
இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரோடு வனத்துறையினர் தேசிய அளவில் 42வது புலிகள் காப்பகமாக சத்தி டிவிஷன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனத் தெரிவித்தார்கள்.<br />
<br />
<b>* தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிப்பு: புது அரசு முடிவு<br />
<br />
<img alt="large_242855.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.2&disp=emb&realattid=ii_1300ac5d5fceb50f&zw" title="large_242855.jpg" /></b><br />
சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார். அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி, பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உடனே நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.<br />
<br />
கடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்ட அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்கென சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்தாகுமா, பழையபடி ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.<br />
<br />
பள்ளி கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று, துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், துறை செயலர் சபீதா, பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் மற்றும் பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் துறை, தேர்வுத்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் நடந்து வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளுக்கான கட்டண அறிவிப்பு குறித்தும், அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.<br />
<br />
<br />
<b style="color: #33cc00;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #33cc00;">பசியை தூண்டும் புதினா</b><br />
<br />
<img alt="19-mint300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af52ad091287&attid=0.6&disp=emb&realattid=ii_1300ac3e2d3ad374&zw" title="19-mint300.jpg" /><br />
<br />
நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
புதினாவில் உள்ள சத்துக்கள்:<br />
<br />
புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.<br />
<br />
வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்:<br />
<br />
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது<br />
<br />
புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும்.<br />
<br />
புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது.<br />
<br />
புதினா தேநீர்:<br />
<br />
புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.<br />
<br />
சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.<br />
<br />
புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்<br />
<br />
மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
<b style="color: #33cc00;"><br />
<img alt="T_500_1464.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af5e957056de&attid=0.1&disp=emb&realattid=ii_1300af109a64c2b5&zw" title="T_500_1464.jpg" /><br />
<br />
அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில்<br />
<br />
<span style="color: #999999; font-size: xx-small;">நன்றி - தின மலர்</span>.<br />
<br />
<br />
வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> சென்செக்ஸ்' 55 புள்ளிகள் அதிகரிப்பு</b><br />
<br />
மே 20,2011,00:07<br />
மும்பை: பல நாள்களுக்கு பிறகு, நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஒரு சில ஆசிய பங்கு சந்தைகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை தொடர்ந்தும், லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் நிதிநிலை செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்தும், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 55.20 புள்ளிகள் உயர்ந்து, 18,141.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,198.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,057.82 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 7.50 புள்ளிகள் அதிகரித்து, 5,428.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,452.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,411.25 புள்ளிகள் வரையிலும் சென்றது. <br />
<br />
<br />
*<b> தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.56 குறைந்தது</b><br />
சென்னை: தங்கத்தின் விலையில் நேற்று திடீரென சவரனுக்கு ரூ 56 குறைவு ஏற்பட்டது.<br />
<br />
சென்னையில் கடந்த 15-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,044-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.16,352-க்கும் விற்பனை செய்யப்பட்டது.<br />
<br />
16-ந் தேதி (மறுநாள்), தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.96 அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,056-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.16,448-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.<br />
<br />
இந்த நிலையில் நேற்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,049-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 16,392-க்கும் விற்பனை செய்யப்பட்டது.<br />
<br />
<b style="color: #33cc00;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> கிரிக்கெட்</b><br />
<br />
<b>கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்</b><br />
<br />
மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் "ஆல்-ரவுண்டராக' அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொண்டது.<br />
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 65வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. புனே அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. கோல்கட்டா அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. "டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர் "பீல்டிங்' தேர்வு செய்தார்.<br />
சுழல் ஜாலம்:<br />
<br />
புனே அணி துவக்கத்திலேயே திணறியது. யூசுப் பதான் சுழலில் ஜெசி ரைடர்(1) காலியானார். அப்துல்லா பந்தில் மனிஷ் பாண்டே(16) வெளியேறினார். பெர்குசன்(16) தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து 3 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும் தத்தளித்தது. பின் கங்குலி, உத்தப்பா இணைந்து அணியை காக்க முயன்றனர். தன்னை புறக்கணித்த கோல்கட்டா அணிக்கு கங்குலி சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப அப்துல்லா பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். இம்மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சாகிப் பந்தில் கங்குலி(18) பரிதாபமாக அவுட்டானார். யூசுப் பதான் வலையில் உத்தப்பாவும்(12) சிக்க, நிலைமை மோசமானது.<br />
<br />
யுவராஜ் மந்தம்:<br />
<br />
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அறிமுக வீரர் சச்சின் ராணா, காலிஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். மறுமுனையில் போராடிய கேப்டன் யுவராஜ், ஒரு நாள் போட்டி போல மந்தமாக ஆடியதால், ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. பாலாஜி வீசிய கடைசி ஓவரில் யுவராஜ்(24), ராணா(18) அவுட்டாகினர். புனே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது.<br />
காம்பிர் அபாரம்:<br />
<br />
சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. தாமஸ் வேகத்தில் கோஸ்வாமி(6) வீழ்ந்தார். பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். தாமஸ் பந்தில் திவாரி சிக்சர் அடித்தார்.பார்னல் ஓவரில் காம்பிர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். புவனேஸ்வர் வேகத்தில் திவாரி(24) போல்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். ராகுல் சர்மா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து புவனேஸ்வர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மறுபக்கம் பவுண்டரிகளாக பறக்க விட்ட காம்பிர், அரைசதம் கடந்தார். பார்னல் பந்தில் கங்குலியின் சூப்பர் "கேட்ச்சில்' யூசுப்(29) அவுட்டானார். கோல்கட்டா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் (54), பாட்டியா(1)அவுட்டாகாமல் இருந்தனர்.<br />
ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் வென்றார்.<br />
<br />
<b style="color: #33cc00;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #33cc00;">* அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில்</b><br />
மூலவர் : நரசிம்ம சாஸ்தா<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : -<br />
தல விருட்சம் : இலுப்பை மரம்<br />
தீர்த்தம் : சரப தீர்த்தம்<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 500 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : -<br />
ஊர் : அங்கமங்கலம்<br />
மாவட்டம் : தூத்துக்குடி<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இக்கோயிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.<br />
<br />
பிரகாரத்தில் மகாகணபதி, பாலசுப்ரமணியர், அகத்தியர், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோயிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அப்போது புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸஅவரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்க பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது. தாமிரபரணி ஓடை கடம்பா குளத்தில் தென்திசை நோக்கி நரசிம்ம சாஸ்தாவும், அவருக்கு வலப்புறம் அன்னபூரணியும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர்.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார். அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார். தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார். நரசிம்மரின் தோற்றத்திற்குக் காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை. நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன. அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது இக்கோயிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார். இதனால் இவ்வூரில் உள்ள லிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும்; இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோயில் கோயில் என்றும் பெயர் பெற்றது. <br />
<br />
திருவிழா:<br />
<br />
நரசிம்ம ஜெயந்தி<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #33cc00;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<b style="color: #33cc00;">எல்லாம் அவன் கையில்! - ராமானுஜர்.</b><br />
<br />
* பழமையான பெரிய ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலக இன்பங்களில் ஒரு பொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள்.<br />
<br />
* இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே அடிக்கடி பயிலுங்கள்.<br />
<br />
* பரமனுடைய திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழி களையும் செவியுற்று மகிழுங்கள்.<br />
<br />
* நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு செய்தால் தான் வாழ்க்கையில் உய்வு பெற முடியும்.<br />
<br />
<b style="color: #33cc00;">வினாடி வினா :</b><br />
<br />
வினா - திட்டக் கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது ?<br />
<br />
விடை - 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை.<br />
<br />
<b style="color: #33cc00;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b>* உலக அருங்காட்சியக தினம்</b><br />
<br />
<img alt="large_243239.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=1300af5e957056de&attid=0.2&disp=emb&realattid=ii_1300aeda442a87c9&zw" title="large_243239.jpg" /><br />
<br />
சென்னை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் "மகத்தான பாரதத்தின் மரபுச்சின்னங்களில் மகாபாரதம்' எனும் புகைப்படங்களின் கண்காட்சி நேற்று நடந்தது.இதை பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி<br />
<br />
<br />
<b>* தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்</b><br />
ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்த ஆய்வு கட்டுரை எழுத, 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.<br />
<br />
கடந்த, 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' தேசிய விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல், கூகையூரில் வசிக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 6ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் அவ்விருதை வழங்கினர்.<br />
<br />
அடிகளாசிரியரின், 102வது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கூகையூர் கிராம மக்கள் நேற்று(மே-11)விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு அடிகளாசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.<br />
<br />
தொடர்ந்து, அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்து எளிதான முறையில் ஆய்வு கட்டுரை எழுதுவதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளது.<br />
இதுகுறித்து, "தொல்காப்பியர்' தேசிய விருது பெற்ற அடிகளாசிரியர் கூறியதாவது:<br />
<br />
உலகத்தில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது. எந்த மொழிக்கும் கிடைக்காத இலக்கண நூல், தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு மொழி அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<br />
<br />
தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து, எளிமையான முறையில் கட்டுரைகள் எழுதி கொடுக்கும்படி, மத்திய உயர்கல்வி மற்றும் மனிதவள மேட்டுத்துறையின் கீழ் சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை பணிகளைமுடித்துகொடுக்க உள்ளேன்.<br />
இவ்வாறு அடிகளாசிரியர் கூறினார்.<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.<br clear="all" /><br />
-- </div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-15882298002099397142011-05-19T08:08:00.000+05:302011-05-19T08:08:13.770+05:30இன்றைய செய்திகள் - மே , 19 , 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #990000;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b style="color: #33cc00;">அழிக்கப்படும் ஒüஷதகிரி?</b><br />
<br />
<img alt="kadu.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f2a9d723099&attid=0.3&disp=emb&realattid=ii_13005c376fb10ee3&zw" title="kadu.jpg" /><br />
<br />
கடலூர், மே 18: கடலூரில் இருந்து 12 கி.மீ. தென் மேற்காக அமைந்து இருப்பது ஒüஷதகிரி என்னும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் மலைப் பகுதி. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மலைப்பகுதி ஒüஷதகிரிதான்.<br />
<br />
÷மா, பலா, முந்திரி, தேக்கு மரங்களால் சூழப்பட்டு பார்க்கும் போது, பச்சை பசேலென்று அழகு கொஞ்சும் பச்சை மலையாகக் காட்சி அளிப்பது ஒüஷதகிரி. இந்த அழகுமிகு ஒüஷதகிரியில்தான் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகியவை அமைந்து உள்ளன.<br />
<br />
÷மேற்குப் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்து இருக்கும் பகுதி கேப்பர் மலை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் மத்திய சிறைச்சாலை மட்டுமே அமைந்து இருந்த கேப்பர் மலைப் பகுதி, இன்று 40 கிராமங்களைக் கொண்டதாக மாறி, வாழைத் தோட்டங்கள், மலர்த் தோட்டங்கள், கரும்பு வயல்கள் என மாறி, வேளாண்மையின் செழிப்பைக் காண முடிகிறது.<br />
<br />
÷ஒüஷதகிரியைக் கிழித்துக் கொண்டு கெடிலம் ஆறு ஓடுகிறது. கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய கொண்டங்கி ஏரி உள்ளது. இந்த மலைப் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் நல்ல சுவை நிறைந்தது. எனவே கடலூர் நகருக்குத் தேவையான குடிநீர், ஒüஷதகிரியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.<br />
<br />
÷ஆனால் இந்த அழகு கொஞ்சும் மலைப் பகுதி, அரசுத் துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, இயற்கை எழிலும் சுற்றுச்சூழலும் வெகுவாகச் சிதைக்கப்பட்டு வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.<br />
<br />
÷கடலூர் மத்திய சிறை அருகே பெண்கள் சிறை 10 ஏக்கரில் அண்மையில் உருவாக்கப்பட்டது. சிறைக் காவலர்களுக்காக ஏற்கெனவே ஓடுகள் வேயப்பட்ட 50 வீடுகள் இருந்தன. அவைகள் சிதைந்து கிடக்கும் நிலையில் புதிய இடங்களைத் தேர்வு செய்து, ஏராளமான மரங்களை வெட்டி வீழ்த்தி, அடுக்குமாடி வீடுகள் பல அண்மையில் கட்டப்பட்டன.<br />
<br />
÷மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துடன் துணை மின் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அரசுத் துறைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, இந்த மலைப் பகுதியில், தற்போது சுமார் 40 நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.<br />
<br />
÷இதற்காக எவ்விதத் தடையுமின்றி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் ஆயிரம் ஆயிரமானவை. இதற்கு வனத்துறை அனுமதி கோரப்பட்டதா என்று தெரியவில்லை.<br />
<br />
÷இந்த மலைப் பகுதியில் இருந்து, பெருமளவில் சரளைக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் மட்டுமன்றி, புதுவை மாநிலத்துக்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு போகப்படுகின்றன.<br />
<br />
÷இந்நிலையில் இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அரசு மருத்துவக் கல்லுரிக்கான இடமும் இங்குதான் தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. இதற்காக மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.<br />
<br />
÷மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அங்கு கொண்டு செல்லவும் திட்டம் இருக்கிறதாம். அரசுத் துறைகளின் படையெடுப்பாலும், அவர்களின் தயவால் நுழைந்து இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களால் பேராசையாலும் அங்கு விரைவில் ஒரு டவுன்ஷிப் உருவாகும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.<br />
<br />
÷இதற்காக இன்னும் எத்தனை ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஒüஷதகரி மலைப் பகுதி முழுவதும் விரைவில் மரங்கள் அற்ற மொட்டை மலையாகி விடும் என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்த மலைப் பகுதி முழுவதும், ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வருவதால், கேட்பாரின்றி மரங்களை வெட்டிக் குவிப்பதும், அலுவலகங்களையும், குடியிருப்புகளையம் தாராளமாகக் கொண்டுவந்து குவித்து வருவதும், நிச்சயம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.<br />
<br />
÷அங்கு மேற்கொண்டு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்காத வகையில், குறைந்தபட்சம், அரசு மருத்துவக் கல்லூரியையாவது, கடலூரை அடுத்த நத்தப்பட்டு அருகேயுள்ள, அரசுக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலத்துக்கு மாற்றலாம் என்கிறார் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்.<br />
<br />
÷அங்கு மருத்துவக் கல்லூரி அமைந்தால் ஒüஷதகிரியில் கட்டுமானங்கள் பெருமளவில் அதிகரிக்கும். கடலூர் பகுதியில் இருந்து நோயாளிகள் சென்று வருவதும் மிகவும் சிரமமாக இருக்கும். நத்தப்பட்டு பகுதியில் மருத்தவக் கல்லூரி அமைந்தால், கடலூர் புறவழிச் சாலை, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அகியவற்றின் அருகாமையில் இருப்பதால், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் வசதியாக இருக்கும். அத்துடன் அழகிய ஒüஷதகிரி மலை, ஒரு டவுன்ஷிப்பாக மாற்றப்பட்டு, மொட்டை மலையாவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.<br />
<br />
<b style="color: #990000;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
<br />
<b>* பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு 'புல்லட் புரூப்' கார்<br />
<br />
<img alt="18-bullet-proof-car300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f2a9d723099&attid=0.2&disp=emb&realattid=ii_13005cbc76dad006&zw" title="18-bullet-proof-car300.jpg" /><br />
</b><br />
டெல்லி: அல்-கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினை காரணமாக, பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டுள்ளது.<br />
<br />
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகளை தாலிபன் தீவிரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நடத்திய அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் தனியாக சென்று கொண்டிருந்த சவுதி தூதரை வழிமறித்து சுட்டுக்கொன்றனர். இதனால், அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.<br />
<br />
இந்த நிலையில், பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகி்ஸ்தானில் எழுந்துள்ள நிலைமை குறித்து சமீபத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடி்வு செய்யப்பட்டது.<br />
<br />
இதைத்தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாவலர்களின் துணையின்றி தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அவர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.<br />
<br />
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை எதுவும் விடு்க்காத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தூதகரத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
*<b> சிரியாவில் அரசுக்கு எதிராக முழு அடைப்புக்கு அழைப்பு</b><br />
பெய்ரூட், மே 18: சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான போராட்டக் குழுவினர் புதன்கிழமை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர்.<br />
<br />
கிழக்காசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக அரசுகளுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். ஜனநாயக முறையிலான அரசு வேண்டும், தனி மனித சுதந்திரம் வேண்டும் என இவர்கள் கோரி வருகின்றனர். எகிப்து, யேமன் தொடங்கி இப்போது சிரியாவிலும் இது பரவி வருகிறது.<br />
<br />
சிரியாவின் அதிபர் பஷார் அல்-அஸôத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கடுமையான வழிகள் மூலம் அரசு அடக்கி வருகிறது. இதுவரை 800 பேர் இதில உயிரிழந்துள்ளனர் என்றும், 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித நேய ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.<br />
<br />
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சிரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கத் திட்டமிட்டுள்ளன.<br />
<br />
சிரிய அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் புதன்கிழமை முழு அடைப்பு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.<br />
<br />
அனைத்துக் கல்விக்கூடங்களும் அன்று இயங்கக் கூடாது என அவர்கள் கூறினர். அது போல, நாடு முழுவதும் வர்த்தகம் முடங்கும் விதமாக அனைத்துக் கடைகளும், நிறுவனங்களும் புதன்கிழமை அடைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.<br />
<br />
இதற்காக அவர்கள் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்தனர். ஆயினும், இந்த முழு அடைப்புக்குப் போதிய ஆதரவு இருக்கவில்லை. வாகனங்கள் வழக்கம் போல ஓடின. கடைகள் திறந்திருந்தன.<br />
<br />
ராணுவ வீரர்கள், போலீஸôர் கொல்லப்பட்டனர்: இதனிடையே, எல்லைப் பகுதியில் சிரியாவைவிட்டு வெளியேற முயன்றவர்களுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள், போலீஸôர் 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.<br />
<br />
தப்பித்து ஓட முயன்றவர்களை ராணுவத்தினர் வளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
*<b> குவைத்: புகைப்பிடிக்க ரூ.832 கோடி செலவு</b><br />
<br />
துபை,மே 18:குவைத் நாட்டில் புகைபிடிக்க மக்கள் ஆண்டுக்கு ரூ.832 கோடி செலவு செய்கின்றனர்.<br />
<br />
÷புகையிலை இல்லாத உலக தினம் வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.<br />
<br />
÷இதையொட்டி குவைத்தில் நடந்த ஒரு விழாவில் அந்த நாட்டு அரசு துணைச் செயலாளர் யூசுப் அலி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, குவைத் நாட்டு மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலம் கெடுகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br />
<br />
÷குவைத் நாட்டில் புகைப்பிடிக்க மக்கள் ஆண்டுக்கு ரூ.832 கோடி செலவு செய்கின்றனர். குவைத்காரர் ஒருவர் ஆண்டுக்கு 2330 சிகரெட் புகைக்கிறார். புகையிலை இல்லாத உலக தினத்தை அனுசரிப்பதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.<br />
<b><br />
* மும்பை தாக்குதல் வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் பூர்வாங்க நடவடிக்கை</b><br />
சிகாகோ, மே 18: மும்பை தாக்குதல் சதியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராணா, ஹெட்லி ஆகியோர் மீதான வழக்கின் ஆரம்ப கட்ட பணிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை தொடங்கியது.<br />
<br />
சிகாகோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கின் நேரடி விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது.<br />
<br />
கனடாவைச் சேர்ந்த தஹவூர் ராணா மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சதிக்குத் துணை போனதாகக் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு ஆள் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதல் நடப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பிருந்தே திட்டம் தீட்டப்பட்டது. இதைத் திட்டமிட்டவர் டேவிட் கோல்மன் ஹெட்லி என்று அறியப்படும் தாவூத் கிலானி. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடும் பொருட்டு பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார்.<br />
<br />
மும்பை தாக்குதலைத் திட்டமிட அவர் அங்கு சென்று தங்கியிருந்தார். தஹவூர் ராணாவும் ஹெட்லியும் நண்பர்கள். பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். இதில் ராணா பின்னர் கனடாவில் குடியேறினார்.<br />
<br />
மும்பை தாக்குதலுக்கு அவர் பொருள் உதவி செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் நடத்தி வந்த வெளிநாடு செல்லும் பயணிகள் உதவி மையத்தின் மூலம் ஹெட்லி மறைவாக செயல்பட உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.<br />
<br />
ராணா மீதான வழக்கு: அமெரிக்க நீதிமன்றங்களில் ஜூரி என்கிற நடுவர் முறை பின்பற்றப்படுகிறது.<br />
<br />
பன்னிரண்டு பேர் அடங்கிய இந்த நடுவர் குழு வழக்கு விசாரணை முழுவதையும் நீதிமன்றத்தில் அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்து கவனிப்பார்கள். வழக்கறிஞர்களின் வாதங்களின்போது அவர்கள் குறுக்கிட முடியாது. ஆனால் அந்த வாதங்களின்போது நடுவர்களுக்கு சட்ட விளக்கங்கள் அளித்து, நீதிபதி வழிகாட்டுவார்.<br />
<br />
விசாரணையின்போது குற்றவாளி, அரசு தரப்பு ஆகிய இரு தரப்பினரின் வாதம், எதிர்வாதம் முழுவதையும் கேட்டபின், அது முடிந்தவுடன், தனியே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, தங்களுக்குள் விவாதிப்பார்கள். அவர்களின் முடிவின்படி நீதிபதி தீர்ப்பளிப்பார்.<br />
<br />
இந்த நடுவர் குழுவுக்கு பொதுமக்களிலிருந்து 12 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் பதிவு செய்த வாக்காளர்கள் அல்லது ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் ஆகியோரது பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படலாம். பல பேரை நடுவர் குழுவில் இடம்பெறுவதற்காகத் தேர்ந்தெடுத்து, நீதிபதி, வழக்கின் இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முறையாக விசாரணை செய்து இறுதியில் 12 பேர் ஜூரி என்கிற நீதி நடுவர் குழுவில் நியமிக்கப்படுவர். இந்தக் குழுவில் உள்ளவர்கள் இரு தரப்பினருக்கும் ஏற்புடையவர்களாக இருப்பார்கள். வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் இவர்கள் நீதிமன்றம் வர வேண்டும்.<br />
<br />
ராணா வழக்கில் நீதி நடுவர் குழு: தஹவூர் ராணா வழக்கில் நடுவர் குழுவில் இடம்பெற இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சிகாகோ நீதிமன்றத்தில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் மதம் பற்றி அவர்கள் கொண்டுள்ள கருத்து, பயங்கரவாதத்தைக் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.<br />
<br />
இதில் தீவிர நிலைப்பாடுகள் கொண்டிருந்ததால் பலர் நடுவர் குழுவில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
அடுத்த சில நாட்களில் 12 பேர் முடிவு செய்யப்பட்டுவிடுவார்கள். வழக்கு மே 23 தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
*<b> "அகிம்சை, மனித உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு'</b><br />
<br />
வாஷிங்டன், மே 18: அமெரிக்காவின் முக்கிய கொள்கைகளான அகிம்சை, மனித உரிமைகள், அரசியல்-பொருளாதார சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி அதிபர் ஒபாமா தனது வெளியுறவுத் துறை கொள்கை வெளியீட்டின்போது பேசுவார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.<br />
<br />
வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, நல்ல மாற்றங்கள் குறித்துப் பேசுவார் என வெள்ளை மாளிகை பத்திரிகைத் தொடர்பு அதிகாரி ஜே கார்னி கூறினார்.<br />
<br />
அவர் செவ்வாய்கிழமை கூறியது: கிழக்கு ஆசிய நாடுகளில் நல்ல அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவதை அமெரிக்கா எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பது பற்றி ஒபாமா பேசுவார். அகிம்சை, மனித உரிமைகளுக்கு ஆதரவு, அரசியல்துறை மற்றும் பொருளாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் ஆகியவைதான் அமெரிக்காவின் முக்கிய கொள்கைகள். இவற்றை வலியுறுத்தி அதிபர் ஒபாமா வியாழக்கிழமை உரையாற்றுவார் என கார்னி தெரிவித்தார்.<br />
<br />
அமெரிக்காவின் அரசியல் கொள்கைகள், மத்திய கிழக்குப் பகுதியில் அந்நாட்டின் நிலைப்பாட்டை அவர் வெளியிடுவார். இந்தப் பகுதிவாழ் மக்களின் ஜனநாயக விருப்பங்களை ஆதரித்து அவர் பேசுவார். கடந்த 5 மாதங்களாக அப்பகுதியில் உள்ள நாடுகளின் குடிமக்கள், தங்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும் எனக் கோரி வருகின்றனர். பொருளாதார ரீதியில் தங்களுக்குத் தனித்துவம் தேவை என்று அவர்கள் கூறி வருகின்றனர். தனி மனித சுதந்திரத்துக்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.<br />
<br />
எதிர்காலத்தில் இவையெல்லாம் அந்தப் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக நிலையற்றத் தன்மையை உருவாக்கும் நிலையுள்ளது. அந்த மக்களின் நியாயமான, ஜனநாயக எதிர்பார்ப்புகளுக்கு அந்தப் பகுதியின் அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.<br />
<br />
அரபு வசந்தம் என்று அழைக்கப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் மாற்றங்களை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் வரவேற்று, ஆதரிப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது என அவர் கூறினார்.<br />
<br />
<b>* அல்-காய்தா இடைக்காலத் தலைவர் சயீஃப் அல்-ஏடெல்</b><br />
வாஷிங்டன், மே 18: அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் இடைக்காலத் தலைவராக சயீஃப் அல்-ஏடெல் பொறுப்பேற்றுள்ளார்.<br />
<br />
இந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2-ம் தேதி அமெரிக்க கமாண்டோக்களால் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் உள்ள சொகுசு விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த பயங்கரவாத அமைப்புக்கு யார் தலைமை ஏற்பது என்ற நிலை உருவானது.<br />
<br />
இந்நிலையில் எகிப்து ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி அல்-காய்தா அமைப்பில் உள்ள பயங்கரவாதி சயீஃப் அல்-ஏடெல் தலைமை ஏற்கிறார். முறைப்படியான தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சயீஃப் தலைமையில் இந்த இயக்கம் செயல்படும்.<br />
<br />
எகிப்தில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் குழு உறுப்பினராக சயீஃப் செயல்பட்டு வருகிறார். 1981-ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்த ஜிஹாத் குழுதான் காரணம். அத்துடன் ஆப்கானிஸ்தானில் ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டதும் இந்த பயங்கரவாத குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
அல்-காய்தா அமைப்பின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சயீஃப் அல் - ஏடெல், இந்த அமைப்பில் நீண்ட காலமாக இருப்பதோடு, பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக செயல்பட்டுள்ளார் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.<br />
<br />
லிபியாவில் உள்நாட்டுக் கலவரத்தில் ஈடுபடும் இஸ்லாமிய குழுக்களுக்கு தலைமை ஏற்றுள்ளார். இந்தக் குழு அல்-காய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆனால் ச மீப காலமாக அல்-காய்தா அமைப்புடனான உறவை இந்தக் குழு துண்டித்துக் கொண்டுள்ளதாக சிஎன்என் செய்தியாளர் நோமன் பெனோட்மன் தெரிவித்துள்ளார். அல்-காய்தா அமைப்பின் செயல்பாடுகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உன்னிப்பாகக் கவனித்து வருபவர் நோமன் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
ஜிஹாதி குழுக்கள் மத்தியில் சயீஃப் அல் ஏடெல் மிகவும் பிரபலமானவர். இவரது மற்றொருபெயர் முகமது இப்ராஹிம் மக்காவி என்பதாகும். உலகம் முழுவதும் உள்ள ஜிஹாதி குழுக்கள், பின் லேடனுக்குப் பிறகு தகவல் பரிமாற்றத்தில் பெரும் இடைவெளி நிலவுவதால் சயீஃபை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளன.<br />
<br />
இருப்பினும் பின் லேடனுக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் தலைவராக அய்மான் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்பார் என தெரிகிறது. இவரும் எகிப்து நாட்டவரே.<br />
<br />
இடைக்கால தலைவராக சயீஃப் தலைமையேற்று இந்த அமைப்பை வழிநடத்துவார் என நோமன் தெரிவித்துள்ளார். 2001-ம் ஆண்டு ஆப்கனில் தலிபான் அமைப்பின் செயல்பாடு குறைந்துபோனதால் சயீஃப் அங்கிருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றார்.<br />
<br />
ஈரானிலிருந்து சவூதி அரேபிய அரச குடும்பத்தினருக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டார் சயீஃப். ரியாத்திலிருந்து 2003-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்றும் நோமன் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
<br />
<b>* மும்பை தாக்குதலுக்கு உடந்தை பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டும்: அமெரிக்கா</b><br />
வாஷிங்டன், மே 17: மும்பைத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அந்நாடு பதில் கூற வேண்டும் என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.<br />
<br />
2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் ஏறத்தாழ 170 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் அமெரிக்க பிரஜைகள். இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானிலிருந்து கடல் வழி வந்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான்.<br />
<br />
இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. உதவி புரிந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.<br />
<br />
இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் வாழும் வர்த்தகர் தஹவூர் ராணா என்பவர் அமெரிக்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு இவர் ஆள் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.<br />
<br />
இது குறித்த வழக்கு சிகாகோ நகரில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. வழக்கிற்கான ஜூரி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.<br />
<br />
இந்தப் பின்னணியில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு உண்டு என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்டது.<br />
<br />
அப்போது அவர் கூறியது: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-க்கும் பங்குண்டு என கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் அரசு முறையாக பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்திருக்கிறது.<br />
<br />
ஆனால் தாக்குதல் குறித்த வழக்கு பற்றி இப்போது விவரமாக எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கின் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆனால் மும்பைத் தாக்குதலைப் பொருத்தவரையில், அந்த பயங்கரவாத சம்பவம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அனைத்து நாடுகளும், அனைத்து தரப்பினரும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.<br />
<br />
ராணா வழக்கு: மும்பை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக டேவிட் கோல்மன் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் குழந்தைப் பருவம் முதலே நண்பர்கள். இதில் ராணா ஒரு மருத்துவர். பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் இவர் கனடாவில் குடியேறினார்.<br />
<br />
மும்பை தாக்குதலுக்கு அவர் பொருள் உதவி செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும், உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் தூண்டியதால் பயங்கரவாத தாக்குதலுக்குத் துணை போனதாக இவர் கூறியுள்ளார். ஆனால் ராணாவை நயவஞ்சகமாக இந்த சதியில் உள்படுத்தியது ஹெட்லிதான் என ராணாவின் வக்கீல் கூறி வருகிறார்.<br />
<br />
ஹெட்லி என்று இப்போது அறியப்படுபவரின் உண்மையான பெயர், தாவூத் சையத் கிலானி. தனது அடையாளம் வெளிப்படாமல் இருக்க பெயரை மாற்றிக் கொண்டார். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடும் பொருட்டு பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார்.<br />
<br />
மும்பை தாக்குதலைத் திட்டமிட அவர் அங்கு சென்று தங்கியிருந்தார். தாக்குதல் நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் அவர் அங்கு தங்கியிருந்தார். தாக்குதலுக்குப் பின் அவருடைய வெளிநாட்டுப் பயணத்தின்போது விமான நிலையத்தில் அவர் கொடுத்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களினால் சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
விசாரணையின்போது, பாகிஸ்தான் உளவு நிறுவனம் தனக்கு 25 ஆயிரம் டாலர்கள் தந்து இந்த பயங்கரச் செயலைச் செய்யுமாறு சொன்னதாக ஒப்புக்கொண்டார் ஹெட்லி.<br />
<br />
* வங்க தேசத்தில் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு<br />
<br />
டாக்கா,மே 18: வங்க தேசத்தில் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம். ஹூசைன் பதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். வங்க தேச நாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஹைருல் ஹக் செவ்வாய்க்கிழமை பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து எம்.எம். ஹூசைன் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.<br />
<br />
÷புதிய நீதிபதி பதவி ஏற்கும் விழா டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் புதன்கிழமை காலை நடந்தது. ÷விழாவில் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஹூசைன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ஜில்லூர் ரகுமான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் வங்க தேசத்தின் 20-வது தலைமை நீதிபதி ஆவார்.<br />
<br />
பின்னர் நடந்த வரவேற்பு விழாவில் நீதிபதி எம்.எம். ஹூசைன் பேசும்போது,மனித உரிமைகளை பாதுகாப்பதில் நீதிதுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட தனிச் செயலகம் தேவை என்று தெரிவித்தார்.<br />
<br />
தேசியச் செய்தி மாலை :<br />
<b><br />
* கேரள, அசாம் முதல்வர்கள் பதவியேற்பு<br />
<br />
<img alt="acmkcrcsm.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f2a9d723099&attid=0.1&disp=emb&realattid=ii_13005c3fdf53bb77&zw" title="acmkcrcsm.jpg" /></b><br />
திருவனந்தபுரம்/குவாஹாட்டி, மே 18: கேரளத்தில் உம்மன் சாண்டியும் அசாமில் தருண் கோகோயும் முதல்வர்களாக புதன்கிழமை பதவியேற்றனர்.<br />
<br />
கேரள ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.எஸ். கவாய், உம்மன் சாண்டிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.<br />
<br />
21-வது முதல்வராகப் பதவியேற்ற உம்மன் சாண்டியுடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.<br />
<br />
கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) 72 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது.<br />
<br />
இப்போது எதிர்க்கட்சியாக அமர உள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது சாரி முன்னணிக்கு (எல்டிஎப்) 68 இடங்கள் கிடைத்துள்ளன.<br />
<br />
நான்கு தொகுதிகளைக் கூடுதலாகப் பிடித்த காரணத்தால் ஆட்சியில் அமர்ந்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி.<br />
<br />
முதல்வர் உம்மன் சாண்டியுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் குஞ்ஞாலி குட்டி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.எம். மாணி (கேரள காங்கிரஸ்-எம்), கே.பி. மோகன் (சோஷலிஸ்ட் ஜனதா தளம்), டி.எம். ஜேகப் (கேரள காங்கிரஸ் - ஜே), கே.பி. கணேஷ் குமார் (கேரள காங்கிரஸ்-பி) மற்றும் ஷிபு பேபி ஜான் (புரட்சிகர சோஷலிஸ்ட்-பி) ஆகியோர் பதவியேற்றனர்.<br />
<br />
அமைச்சரவை மே 23-ம் தேதி விரிவுபடுத்தப்படும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும், ஐயுஎம்எல் கட்சியிலிருந்து 3 பேரும் கேரள காங்கிரஸ்-எம் பிரிவைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்பர்.<br />
<br />
பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முல்லபள்ளி ராமச்சந்திரன், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br />
<br />
பதவியேற்பு விழாவைக் காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான தொண்டர்கள் வந்திருந்தனர்.<br />
<br />
2004-06-ம் ஆண்டில் இடைக்கால அரசில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார்.<br />
<br />
காங்கிரஸýக்கும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி அளிப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.<br />
<br />
உம்மன் சாண்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சரியான போட்டியாக காங்கிரûஸ வளர்த்ததில் 67 வயதாகும் உம்மன் சாண்டிக்கு பெரும் பங்குண்டு. நிர்வாகத் திறன் மிக்க இவர், இப்போது காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆட்சி அமைத்திருந்தாலும், திறம்பட நிர்வகிப்பார் என்று நம்பப்படுகிறது.<br />
<br />
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களான கே. கருணாகரன், ஏ.கே. அந்தோனி போன்றோர் மத்திய அரசுக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் கடைசியில் இப்பதவிக்கு ஏற்றவர் என்ற வகையில் சாண்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 10-வது முறையாக காங்கிரஸ் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான புதுபள்ளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவரது மனைவி ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உண்டு.<br />
<br />
மூன்றாவது முறையாக கோகோய்: அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தருண் கோகோய்(76) முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.<br />
<br />
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோகோய்க்கு ஆளுநர் ஜே.பி.பட்நாயக் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். வேறு அமைச்சர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்ளவில்லை.<br />
<br />
விழாவில் மத்திய அமைச்சர். பி.கே.ஹண்டிக், மேகாலய முதல்வர் முகுல் சங்மா, அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர், பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 77 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br />
<br />
தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கு கோகோய் திட்டமிட்டிருக்கிறார். <br />
<br />
<b>* 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு: ஷாகித் பல்வா ஜாமீன் மனு மீது 24-ம் தேதி தீர்ப்பு<br />
<br />
<img alt="cbi.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f2a9d723099&attid=0.5&disp=emb&realattid=ii_13005c3b24230f3a&zw" title="cbi.jpg" /></b><br />
புது தில்லி, மே 18: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.<br />
<br />
குசேகான் நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிப் பல்வா, ராஜீவ் பி.அகர்வால் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் சனிக்கிழமை (மே 21) பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி புதன்கிழமை தெரிவித்தார்.<br />
<br />
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக ஷாகித் உஸ்மான் பல்வா, <br />
<br />
ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இவர்கள் மூவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை வந்தது.<br />
<br />
குற்றம்சாட்டப்பட்ட மூவரின் சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதாடினார். "2ஜி முறைகேட்டில் இவர்களுக்கு பெரிய அளவில் தொடர்பு இல்லை. இவர்களைத் தொடர்ந்து சிறையில் வைத்து அலைக்கழிக்கக்கூடாது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருவார்கள். எனவே இவர்களுக்கு ஜாமீன் அளிக்கவேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.<br />
<br />
இதற்கு சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. "நாட்டிலேயே நடைபெற்ற மிகப்பெரிய ஊழலில் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.<br />
<br />
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜாமீன் அளித்தால் முக்கிய சாட்சிகளை கலைக்க இவர்கள் முயற்சிக்கக்கூடும் எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங் கோரிக்கை விடுத்தார்.<br />
<br />
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷைனி, ஷாகித் பல்வாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் 24-ம் தேதிக்கும் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் சனிக்கிழமைக்கும் ஒத்திவைத்தார்.<br />
<br />
இதற்கிடையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தது. வாதம் தொடர்ந்து நடைபெற்றதால், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் சனிக்கிழமைக்கு (மே 21) நீதிபதி ஷைனி ஒத்திவைத்தார்.<br />
<br />
வழக்கு விசாரணை தொடர்பாக கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டி ஆகியோர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகியிருந்தனர்.<br />
<br />
கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்தனும், தமிழக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும் இருந்தனர்.<br />
<br />
<b>* ஆளுநரை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை : மல்லிகார்ஜுன கார்கே<br />
<br />
<img alt="mallikajanan.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f2a9d723099&attid=0.4&disp=emb&realattid=ii_13005c21c7ca230d&zw" title="mallikajanan.jpg" /></b><br />
குல்பர்கா, மே 18: இப்போதைய சூழ்நிலையில், கர்நாடக ஆளுநரை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்தார்.<br />
<br />
இதுகுறித்து குல்பர்காவில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:<br />
<br />
மாநிலத்தில் நிலவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையால் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ளன. கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசித்து வருகிறார். பாஜகவினர் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பாதயாத்திரை மற்றும் போராட்டங்களை நடத்துவது தேவையில்லாதது. அரசியலமைப்புச் சட்டப்படி அரசால் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆளுநரை சில அரசியல் கட்சிகள் கேட்டுக் கொள்வதால் திரும்பப் பெற முடியாது. மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவரும், சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவருமான ஆளுநர் பரத்வாஜ், சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவே கருதுகிறேன் என்றார்.<br />
<br />
*<b> ஜூலை முதல் 25 காசு நாணயம் செல்லாது</b><br />
<br />
மும்பை, மே 18: 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாக்காசாகிவிடும். ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கி இந்தத் தகவலை புதன்கிழமை வெளியிட்டது.<br />
<br />
25 காசு நாணயம், 10 காசு நாணயம் ஆகியவை ஜூன் 30-க்குப் பிறகு செல்லாது.<b><br />
</b><br />
எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.<br />
<br />
அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29-ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.<br />
<br />
இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, இந்த நாணயங்களை எங்குமே மாற்ற இயலாது. சட்ட ரீதியாக செல்லுபடியாகாது<br />
<br />
<b>* ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு: சிபிடிடி தலைவர் தகவல்<br />
<br />
</b><br />
புது தில்லி, மே 18: நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்தார்.<br />
<br />
தில்லியில் புதன்கிழமை கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:<br />
<br />
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் இவ்விதம் கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றார்.<br />
<br />
கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் ரூ. 18,500 கோடி கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது.<br />
<br />
ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், எவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்வது கிடையாது.<br />
<br />
பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிக வருமானம் ஈட்டும் அதிகாரிகள்அனைவருமே எங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் வருகின்றனர் என்றார்.<br />
<br />
கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடி.<br />
<br />
மார்ச் வரையான காலத்தில் மொத்தம் வசூலான வருமான வரித் தொகை ரூ. 74 ஆயிரம் கோடி. இத்துடன் ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணமும் சேரும் என்றார்.<br />
<br />
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15-ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
வருமான வரித்துறையில் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தகவல் பரிமாற்றத்துக்கென தனியான கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பிரிவை ஏற்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் தகவல் கோரும் நாடுகள் விவரங்களை இந்தப் பிரிவுக்கு அனுப்பினால் போதுமானது. இது தவிர, கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.<br />
<br />
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை அமலாக்கப் பிரிவுக்குத் தருவதில்லை. எனவே இப்போது வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் இத்தகைய தகவலைப் பெறுவதற்கு வழி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.<br />
<br />
கறுப்புப் பணம் சார்ந்த விஷயங்களைப் பெறுவதில் இந்தியா அதிக தீவிரம் காட்டுவதாகவும், இப்போது இதுபோன்ற விவரங்களை அளிப்பது தொடர்பான நடைமுறைகள் மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.<br />
<br />
வரி விதிக்கப்படாத14 நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பஹாமஸ், நெர்முடா, ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தகவல்களை அளிக்கின்றன.<br />
<br />
இதுபோன்ற தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிப்பதற்கு விதிமுறையில் இடமுள்ளது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலோ, அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்தாலோ அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றார் அவர்.<br />
<br />
<br />
<b>* சீன நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 7 பேர் சாவு</b><br />
<br />
பெய்ஜிங்,மே 18:சீன நாட்டில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் இறந்தனர்.<br />
<br />
÷சீனாவில் ஏராளமான தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றாததால் நிலக்கரிச் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கம்.<br />
<br />
÷இங்குள்ள யானன் மாகாணத்தில் வெய்சின் நகரில் ஒரு தனியார் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. ÷<br />
<br />
÷இதில் சிக்கி 7 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர். 13 பேர் உயிர் தப்பினர். இதையொட்டி இந்த சுரங்க நிர்வாகியை போலீஸôர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.<br />
<br />
÷ சீனாவில் கடந்த ஆண்டு நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 2433 பேர் இறந்து விட்டனர்.<br />
<br />
<b>* இணைப்பு வசதி இல்லாத புதுச்சேரி ரயில் நிலையம்</b><br />
<br />
புதுச்சேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்கள்.<br />
புதுச்சேரி, மே 18: போதிய நிறுத்தும் இணைப்பு வசதி இல்லாமல் புதுச்சேரி ரயில் நிலையம் தவித்து வருகிறது. இதனால் புதிய ரயில்கள் இந்த நிலையத்துக்கு வரவும் முடியவில்லை. இங்கிருந்து புதிய ரயில்களை இயக்கவும் முடியவில்லை.<br />
<br />
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இப்போது 3 பிளாட்பாரங்கள்தான் இருக்கின்றன. இவை போதுமானவை அல்ல. ரயில்கள் இயங்க வேண்டிய இந்த பிளாட்பாரங்களில் ஒன்று அல்லது இரண்டில் ரயில்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுகின்றன.<br />
<br />
ரயில்கள் இயங்க வேண்டிய நேரத்தில் மட்டும்தான் பிளாட்பாரத்துக்கு ரயில்கள் வர வேண்டும். மற்ற நேரங்களில் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிக்காக நிறுத்தும் இணைப்பு வசதி கொண்ட இடம் இருக்க வேண்டும். அது போன்ற வசதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் இல்லை. இதனால் இயங்க வேண்டிய பிளாட்பாரத்தில்தான் இயக்கப்படாத ரயில்கள் நிற்கின்றன.<br />
<br />
மேலும் இப்போதுள்ள பிளாட்பாரங்களின் நீளமும் போதுமானதாக இல்லை. புதுச்சேரி ரயில் நிலையத்தில் இப்போதுள்ள பிளாட்பாரங்களில் 17 பெட்டிகள் கொண்ட ரயில்கள்தான் நிற்க முடியும். இப்போது வரும் ரயில்களில் 21 பெட்டிகளுக்கு மேல் இருக்கின்றன.<br />
<br />
அதனால் அவை பிளாட்பாரத்துக்கு வெளியே இருக்கின்றன. அதனால் இது போன்ற பெட்டிகளில் பயணிகள் ஏறுவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. வில்லியனூர் ரயில் நிலையத்திலும் பிளாட்பாரம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதைத் தவிர விஐபிக்கள் வந்தால் பயன்படுத்த வேண்டிய ஒரு ரயில் பாதையும் இந்த நிலையத்தில் இருக்கிறது. இந்தப் பாதையையும் நீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களையொட்டியுள்ள ரயில் பாதைகள் பள்ளமான இடமாக இருக்கின்றன.<br />
<br />
இதனால் மழைக்காலத்தில் ரயில் பாதைகள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. மழையின் காரணமாக அருகில் உள்ள ரயில்வே குடியிருப்புகளும் பாதிக்கப்படுகிறது. இந்த எல்லா பிரச்னைகளுக்கும் தலையாய பிரச்னையாக இருப்பது போதிய நிறுத்தும் இணைப்பு வசதி இல்லை என்பதுதான்.<br />
<br />
இந்த வசதி இல்லாததால் புதுச்சேரிக்குப் புதிய ரயில்களைப் பெற முடியவில்லை. சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று கிடக்கும் ரயில்களை புதுச்சேரி வரை நீட்டிக்கவும் முடியவில்லை. இத் திட்டத்தை சுமார் ரூ. 6 கோடி மசிப்பீட்டில் நிறைவேற்ற அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இருப்பினும் இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. பெரும்பாலான ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யப்படுகின்றன. புதுச்சேரியின் இந்த ரயில்வே திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யப்படுவதால், புதுச்சேரி போக்குவரத்து வசதியில் பல்வேறு பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்றன.<br />
<br />
இது குறித்து புதுச்சேரி அரசின் போக்குவரத்துத்துறை ஓய்வு பெற்ற செயலர் ச. ஹேமச்சந்திரன் கூறுகையில், "எந்த ரயில் நிலையத்துக்கும் ரயில்கள் நிறுத்தும் இட வசதி முக்கியம். இந்த வசதியை உடனடியாகச் செய்து முடிக்கவில்லையென்றால் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் வசதியைப் பெற முடியாமல் போகும். அதைத் தவிர மக்களுக்கு வசதியான நேரங்களில் ரயில் இயக்கம், சென்று சேரும் நேரம் இப்போதே பெறாவிட்டால் அந்த நேரம் வேறு ஏதாவது ரயில் நிலையங்களுக்குக் கிடைத்துவிடும்.<br />
<br />
இப்படி இப்போது இழக்கும் இந்த ரயில் நேரத்தை பின்னால் பெறவே முடியாது. புதுச்சேரி ரயில் நிலையம் அருகேயுள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான கிடங்கு அமைந்துள்ள காலி இடத்தை இந்த இரண்டு நிறுவனத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற முடியும்' என்றார்.<br />
<br />
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதிய நிறுத்தும் வசதி இருந்தால் புதிய ரயில்கள் பெற முடியும். சென்னை எழும்பூரில் காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் நாள் முழுவதும் நின்று கிடக்கிறது. அந்த ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடியும். இந்த ரயில் புதுச்சேரிக்கு வந்து செல்வதால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் யேனம் பகுதிக்கு ரயில் இணைப்பு கிடைக்கும்.<br />
<br />
மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயில் தில்லியில் இருந்து எர்ணாகுளம் செல்கிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் 60 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதிய இட வசதி இருந்தால் இந்த ரயிலை இங்கு கொண்டு வர முடியும். இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதிக்கு ரயில் இணைப்பு கிடைக்கும். மேற்கு வங்க மாநிலம் கரக்பூரிலிருந்து விழுப்புரத்துக்கும், புருலியாவிலிருந்து விழுப்புரத்துக்கும் 2 ரயில்கள் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகின்றனர்.<br />
<br />
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதிய நிறுத்தும் வசதி இருந்தால் இந்த 2 ரயில்களும் புதுச்சேரிக்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல்வேறு ரயில்களின் பட்டியலைக் குறிப்பிட்டு அந்த ரயில்களைப் புதுச்சேரிக்குக் கொண்டு வர முடியும். ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் ஏதாவது ஒருவகையில் புதுச்சேரிக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று பெயர் வெளியிட விரும்பாத, ரயில்வே திட்டங்களில் அனுபவம் வாய்ந்த ஒரு சமூக சேவகர் கூறுகிறார்.<br />
<br />
<b style="color: #990000;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி</b><br />
<br />
<img alt="1rajini.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f2a9d723099&attid=0.6&disp=emb&realattid=ii_13005bf4a388d3ad&zw" title="1rajini.jpg" /><br />
<br />
சென்னை, மே 18: சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை (மே 18) அனுமதிக்கப்பட்டார்.<br />
<br />
""மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் சார்பில் புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.<br />
<br />
நுரையீரல்-சிறுநீரகங்கள்-இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் அளிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.<br />
<br />
சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், அதீத சோர்வு காரணமாக அவர் மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.<br />
<br />
தனி அறையிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு... எனினும் நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் 7-வது மாடியில் உள்ள தனி அறையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீரகங்கள்-நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன.<br />
<br />
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் இல.கணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். ரஜினிகாந்த் உற்சாகமாக உள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினிக்கு மூச்சுத்திணறல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுவாசத்தை சீராக்க அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் நிபுணர்கள் குழு புதன்கிழமை முடிவு செய்தது.<br />
<br />
154 படங்களில்... "அபூர்வ ராகங்கள்' மூலம் 1975-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த்துக்கு 60 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்பட இதுவரை சுமார் 154 படங்களில் நடித்துள்ளார்.<br />
<br />
<b>* 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்</b><br />
சென்னை, மே 18: தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்தால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை .<br />
<br />
மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும். விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.<br />
<br />
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.<br />
<br />
வாய்ப் புண், அம்மை நோய்<br />
<br />
ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.<br />
<br />
இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.<br />
<br />
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.<br />
<br />
பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.<br />
<br />
தூக்கமின்மையை போக்கும்<br />
<br />
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.<br />
<br />
மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.<br />
<br />
அழகே ஆபத்தாகும்<br />
<br />
இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.<br />
<br />
<br />
<br />
<b style="color: #990000;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>உள்நாட்டில் நடப்பு 2011- 12ம் நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13 சதவீதம் உயரும்<br />
<br />
<img alt="7718884.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f40db788211&attid=0.2&disp=emb&realattid=ii_13005e76913b8361&zw" title="7718884.jpg" /><br />
</b><br />
மே 19,2011,01:52<br />
புதுடில்லி:இந்தியாவின் உருக்கு பொருள்கள் பயன்பாடு நடப்பாண்டில், 13.3 சதவீத அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உருக்கு பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா, சீனாவை விஞ்”ம் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அர”, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) நாட்டின் மின் உற்பத்தி, குடிநீர் வசதி, தொழில் துறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.மேலும் அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகளால், உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் பெருகி, பொறியியல் சாதனங்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. இதனால், இத்துறைகளில் உருக்கு பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.கடந்த 2010ம் ஆண்டு நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 6.4 சதவீதம் உயர்ந்து 6.68 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13.3 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இது, சீனாவின் உருக்கு பொருள்கள் பயன்பாட்டை விட அதிகம். நடப்பாண்டில், சீனாவின் உருக்கு தேவை 5 சதவீத அளவிற்கே உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில், உருக்கு பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா, சீனாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
இந்தியாவின் உருக்கு உற்பத்தி, வரும் 2012ல், 12.40 கோடி டன்னாக உயரும் என்றும், உருக்கு பொருள் களுக்கான தேவை 16 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் உருக்கு உற்பத்தியை, வரும் 2020ல், 20 கோடி டன்னாக உயர்த்த, மத்திய அர” இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ற செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. 2019-20ம் ஆண்டிற்குள் நாட்டின் ஓராண்டிற்கான உருக்கு உற்பத்தி திறன் 27.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனமொன்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய செயல்பாடு களால், 2016ம் ஆண்டிற்கு முன்பாகவே உருக்கு உற்பத்தியில் இந்தியா, 2வது மிகப்பெரிய நாடு என்ற சிறப்பை பெறும் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இந்தியாவில் முதலீடு: இந்திய உருக்கு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு மேற்கொண்டு, அதி நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருள்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. செயில், ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வதேச உருக்கு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த் தை நடத்தி வருகின்றன.<br />
<br />
உலகில் உருக்கு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், இந்தியாவில் ஆண்டிற்கு 1.20 கோடி டன் உருக்கு உற்பத்தி திறன் கொண்ட இரண்டு தொழிற்சாலைகளை அமைக்கிறது. அசெரினாக்ஸ் நிறுவனம், ஜப்பானின் நிஷின் ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உருக்காலை அமைக்க உள்ளது. சீனாவின் சினோ ஸ்டீல் நிறுவனம் கல்யாணி ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கு வங்கத்தில் உருக்கு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது.மெஸ்கோ ஸ்டீல் நிறுவனம், 280 கோடி டாலர் முதலீட்டில் ஒரிசாவில் விரிவாக்க திட்டம் மற்றும் புதிய உருக்கு தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் உருக்கு உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ள டாட்டா ஸ்டீல் நிறுவனம், வரும் 2015ம் ஆண்டிற் குள், கூடுதலாக 3.50 கோடி டன் உருக்கு உற்பத்தியை மேற்கொண்டு, அதன் உருக்கு உற்பத்தி திறனை இரு மடங் காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில் செயில் நிறுவனம், அதன் உருக்கு உற்பத்தியை 1.20 கோடி டன்னில் இருந்து, 2.50 கோடி டன்னாக உயர்த்த உள்ளது. இதுபோல் தைசென்க்ருப் போன்ற பன்னாட்டு உருக்கு நிறுவனங்களும் விரிவாக்க திட்டத்தை கைவிட்டு, கூட்டு நடவடிக்கையில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. <br />
<br />
<b>* சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை<br />
<br />
<img alt="9586255.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f40db788211&attid=0.4&disp=emb&realattid=ii_13005ee2ba3931e7&zw" title="9586255.jpg" /><br />
<br />
மே 19,2011,01:46</b><br />
ஈரோடு:ஈரோட்டில் சாயப்பட்டறைகளை மூடியதால், 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடக்கப்பட் டுள் ளதாக, ஜவுளி மார்க்கெட் வியாபாரிகள்கவலை தெரிவித்துள்ளனர்.ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட் கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இங்கு ஒடிசா, கேரளா, கர்நாடகா, மகாராஷ் டிரா உள்ளிட்ட பிற மாநில வியாபாரிகள் அதிகளவில், துணிகளை வாங்கி செல்வது வழக்கம். வியா பாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் சந்தை நாள்களில் குவிந்து விடுவர். வாரந்தோறும் கனி மார்க்கெட்டில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி வகைகள் விற்பனையாகின்றன.ஈரோடு மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. மாசு பிரச்னை காரணமாக, ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, ஈரோட்டில் இயங்கி வந்த சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல பட்டறைகள் மூடப்பட்டன; பல சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.துணிகளுக்கு சாயமிடும் பணி முற்றிலும் நின்று போனது. மார்க்கெட் டுக்கு வரும் புதிய ரக துணிகளின் வரத்து அடியோடு நின்று போனது. செவ்வாய்கிழமை யன்று கூடிய ஜவுளி சந்தையில், பழைய இருப்பு துணிகளையே விற்பனை செய்ததால், வெளிமாநில வியா பாரிகள் அதிருப்தி அடைந்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளுக்கு, 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடங்கியது.இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், செயலர் செல்வராஜ் ஆகியோர் கூறிய தாவது: வாரந்÷ தாறும் செவ்வாய்கிழமை கூடும் ஜவுளி சந்தையில், சூரம்பட்டி, மாணிக்கம்பாளையம், திருச் செங் கோடு, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் வருகின்றனர். சாயப்பட்டறைகளை மூடியதால், ஜவுளி சந்தைக்கு புதிய ரகங்கள் வரத்து குறைந்து விட்டது. தற்போது, பழைய இருப்பு துணிகளை தான் விற்பனை செய்து வருகிறோம்.ஆனால், இன்னும் மூன்று வாரத்தில், பழைய இருப் பும் குறைந்து விட்டால், கனி மார்க்கெட்டில் துணியே இருக்காது. செவ்வாய்கிழமை யன்று நடந்த ஜவுளி சந்தை யில் புதிய ரக துணிகள் இல்லாததால், வெளிமாநில வியாபாரிகள் துணிகளை வாங்காமல் மற்ற மாநி லங்க ளுக்கு சென்று விட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். <br />
<br />
<b style="color: #990000;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>கிரிக்கெட்</b><br />
<br />
<b>சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்</b><br />
<br />
சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில், 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் ஏமாற்றிய கொச்சி அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.<br />
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.<br />
<br />
பார்த்திவ் கேப்டன்:<br />
கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுவிட்டதால், பார்த்திவ் படேல் அணியை வழிநடத்தினார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கொச்சி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. பரமேஸ்வரன், பிரசாந்த், ஜெயவர்தனா நீக்கப்பட்டு, முத்தையா முரளிதரன், வினய் குமார், ஜாதவ் தேர்வு செய்யப்பட்டனர்.<br />
<br />
ரெய்னா ஏமாற்றம்:<br />
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஆர்.பி. சிங் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில், மூன்று "பவுண்டரி' விளாசிய முரளி விஜய் (16), அதே ஓவரில் "போல்டானார்'. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, அதிரடியாக ரன் சேர்த்தார். ஸ்ரீசாந்த் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், 2 "சிக்சர்', ஒரு "பவுண்டரி' அடித்த ரெய்னா (19), அதே ஓவரில் ஆர்.பி. சிங்கிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.<br />
<br />
"சபாஷ்' சகா:<br />
பிராட் ஹாட்ஜ் சுழலில் ஒரே ஒரு "சிக்சர்' அடித்த பத்ரிநாத் (13), நீண்டநேரம் நிலைக்கவில்லை. பின் இணைந்த மைக்கேல் ஹசி-விரிதிமன் சகா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய இந்த கூட்டணி, நான்காவது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த போது மைக்கேல் ஹசி (32), ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் தோனி (9), ஜடேஜா பந்தில் பார்த்திவ் படேலிடம் "கேட்ச்' கொடுத்து ஏமாற்றினார். ஜடேஜா, முரளிதரன், ஆர்.பி. சிங் பந்தில் தலா ஒரு "சிக்சர்' விளாசிய சகா, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.<br />
<br />
சென்னை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. விரிதிமன் சகா (46), ஆல்பி மார்கல் (13) அவுட்டகாமல் இருந்தனர். கொச்சி அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா 2, ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த், பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.<br />
<br />
பார்த்திவ் ஏமாற்றம்:<br />
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு, கேப்டன் பார்த்திவ் படேல் (6) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த ஞானேஸ்வரா ராவ் (19) நீண்டநேரம் நிலைக்கவில்லை. போலிஞ்சர் பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த பிரண்டன் மெக்கலம், நிதானமாக ரன் சேர்த்தார். இவர், 37 பந்தில் 33 ரன்கள் எடுத்த போது, ஜகாதி சுழலில் "போல்டானார்'.<br />
<br />
ஹாட்ஜ் அபாரம்:<br />
பின் இணைந்த பிராட் ஹாட்ஜ், ரவிந்திர ஜடேஜா ஜோடி, பெரிய அளவில் சாதிக்கவில்லை. போலிஞ்சர் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் ஒரு "சிக்சர்', ஒரு "பவுண்டரி' அடித்த ஜடேஜா (19), அதே ஓவரில் ரெய்னாவிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராட் ஹாட்ஜ், பிராவோ பந்தில் அடுத்தடுத்து இரண்டு "சிக்சர்' அடிக்க, கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கொச்சி அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பிராட் ஹாட்ஜ் (51), ஜாதவ் (1) அவுட்டகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அஷ்வின், போலிஞ்சர், ஜகாதி, பிராவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.<br />
<br />
<b style="color: #990000;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #990000;">* தெய்வக் குழந்தை!</b><br />
<br />
<img alt="E_1305192666.jpeg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f40db788211&attid=0.3&disp=emb&realattid=ii_13005eaa8d9c94be&zw" title="E_1305192666.jpeg" /><br />
<br />
<b style="color: #990000;">மே 19 - குமரகுருபரர் குருபூஜை!</b><br />
<br />
திருச்செந்தூர் குமரப் பெருமான் அருளால், உலகிற்கு கிடைத்த புண்ணிய புருஷர் குமரகுருபரர்.<br />
திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வசித்த சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாமி சுந்தரி தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. திருச்செந்தூர் சென்று, சஷ்டி விரதம் அனுஷ்டித்தனர்; அதன் பின், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனை, முருகன் பெயரால், "குமரகுருபரன்' என அழைத்தனர். ஐந்து வயதாகியும் குழந்தை பேசாமல் இருந்தது கண்டு, பெற்றோர் கவலை அடைந்தனர். திருச்செந்தூர் சென்று, குழந்தை பேசும் வரை, அங்கேயே தங்கி, விரதமிருப்பது என உறுதி கொண்டனர்.<br />
அங்கு தங்கியிருந்த காலத்தில், கரையில் மோதிய கடல் அலைகள், "ஓம்' என்ற நாதம் எழுப்புவதைக் கேட்டார் குமரகுருபரர். அவர்கள், நாற்பது நாட்களுக்கு மேலாக அங்கு தங்கி விட்டனர்; குழந்தை பேசுவதாக தெரியவில்லை. 45வது நாள், குழந்தையுடன் கோவிலுக்குள் நுழைந்தனர். கண்ணீர் அருவியாய் கொட்ட, "இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிக்கப் போகிறாய்?' என்று முருகனிடம் முறையிட்டனர்.<br />
அப்போது. குமரகுருபரர் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டார்; பெற்றோர் கூர்ந்து கேட்டனர். தெளிவில்லாமல் ஏதோ சில சொற்கள் வெளிப்பட்டன. அடுத்த சில நொடிகளில், அந்த ஐந்து வயது பாலகன், கரியமேகம் மழை பொழிவது போல கவிமழை பொழிந்தார். "இதுவரை பேசாமல் இருந்த பிள்ளை, முருகப் பெருமானை புகழ்ந்து பாடுகிறாரே...' என, பெற்றவர்களும், மற்ற பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர். தேனினும் இனிய அந்த பாடல்களே, "கந்தர் கலிவெண்பா' ஆயிற்று; அதுவே, குமரகுருபரரின் முதல் நூல். இந்த நூலில், "சரவணபவ' என்ற மந்திரத்தின் மகிமை பற்றி, குமரகுருபரர் பாடியுள்ளார்.<br />
பெற்றோர் மனம் மகிழ்ந்து, முருகனுக்கு நன்றி சொல்லி ஊர் திரும்பினர். ஆனால், பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை குமரகுருபரர். அவர்களது ஆசி பெற்று, தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை, "குமரகுருபர சுவாமிகள்' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அம்பாள் சன்னிதியில் நின்று, மடைதிறந்த வெள்ளம் போல் கவிதைகளை பொழிந்தார். அதுவே, "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' ஆயிற்று. அப்போது, மதுரையை திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர், ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருந்தனர். சிறுவனாய் இருந்த குமரகுருபரர், அருமையாக அம்பாளைப் பற்றி பாடினார். "தொடுக்கும் கடவுட் பழம்பாடல்...' என்ற பாடலை பாடும் போது, மன்னரின் மடியில் வந்து அமர்ந்த ஒரு சிறுமி, அவரது கழுத்தில் கிடந்த முத்து மாலையை எடுத்து, குமரகுருபரருக்கு அணிவித்து மறைந்தாள்; அவள், மீனாட்சி அம்மன் என்பது பின்னர் தெரிய வந்தது. திருமலைநாயக்கர் மகிழ்ச்சி அடைந்து, குமரகுருபரருக்கு பல பரிசுகளை அளித்தார்.<br />
இதன்பிறகு, குமரகுருபரர் தருமபுரம் சென்று ஆதீன குருமூர்த்தி மாசிலாமணி தேசிகரிடம் தம்மை ஆட்கொள்ள வேண்டினார். காசி சென்று, தர்மப்பணி செய்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டார். அப்போது, காசியை ஆட்சி செய்த சுல்தானிடம், காசியில் சைவ மடம் நிறுவ அனுமதி பெறுவதற்காக அங்கு சென்றார் குமரகுருபரர். சுல்தானுக்கு இந்துஸ்தானி மொழி மட்டுமே தெரியும். எனவே, கலைவாணியை புகழும், "சகல கலாவல்லி மாலை' என்ற பாடலை பாடினார் குமரகுருபரர். அதைக்கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி, அவருக்கு பிறமொழி பேசும் ஆற்றலைக் கொடுத்தாள்.<br />
அம்பாளின் அருளால், ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து, சுல்தானின் சபைக்கு சென்றார் குருபரர். இந்துஸ்தானி மொழியில் பேசி, மடம் கட்ட இடம் தரும்படி கேட்டார். சிங்கத்தின் மீது வந்த வீரப் புலவரைப் பார்த்த சுல்தான், அவர் கேட்ட இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தில், "குமாரசுவாமி மடம்' அமைக்கப்பட்டது. இன்றும் காசியில் குமரகுருபரரின் பெயரில் உள்ள இந்த மடம், சமயப்பணியில் ஒரு ஈடுபட்டு வருகிறது.<br />
வைகாசி மாதம் தேய்பிறை திரிதியை திதியில் முக்தியடைந்தார் குமரகுருபரர். அந்த நாளில், அவருக்கு குருபூஜை நடக்கிறது. முருகனையும், மீனாட்சி அம்மனையும் பாடிய குருபரை, அந்நாளில் வணங்கி, அவரது நல்லாசி பெறுவோம்.<br />
***<br />
<br />
தி. செல்லப்பா<br />
<br />
<b style="color: #990000;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
*<b><span style="color: #990000;"> பிறரை மதிக்கப் பழகுங்கள் - வள்ளலார்.</span></b><br />
* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.<br />
<br />
* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.<br />
<br />
* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.<br />
<br />
<b style="color: #990000;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா</b> - இந்திய நாட்டின் அனைத்து முடிவுகளும் யாரின் பெயரால் எடுக்கப்படுகின்றன ?<br />
<br />
<b>விடை</b> - ஜனாதிபதியின் பெயரால்.<br />
<br />
<b style="color: #990000;">இதையும் படிங்க :</b><br />
<br />
<img alt="large_242776.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f40db788211&attid=0.1&disp=emb&realattid=ii_13005e85bde62f49&zw" title="large_242776.jpg" /><br />
<br />
"ஏழைகளையும் படிக்க வைக்கணும்!' வளர் கல்வி மையம் மூலம் மாணவர்களை படிக்க வைக்கும் சின்னப்பன்: விழுப்புரம் மாவட்டம், திருவதிகைகுன்னம் என் சொந்த ஊர். எட்டு பட்ட படிப்புகள், எம்.எட்., இரண்டு, எம்.பில்., இரண்டு, பி.எச்.டி., முடித்து, பல்கலைகழகத்திலேயே முதல் மாணவனாக வந்துள்ளேன். தற்போது, தஞ்சை தமிழ் பல்கலை கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் பணி. குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தவன். நான் படிப்பதற்காக, என் அம்மா, விவசாய கூலியாக கஷ்டப்பட்டார். வீட்டைத் தவிர பூர்வீக சொத்து இல்லை. "ஒவ்வொரு மனுஷனுக்கும், அவன் உழைப்பு மட்டுமே பூர்வீக சொத்து' என்பார் என் அம்மா. எனக்காகவே வாழ்ந்த அம்மா, நான் பிளஸ் 2 படிக்கும் போது, என்னுள் வைராக்கியத்தை விதைத்து இறந்தார். அதன்பின், திருச்சி சென்று, பல இடங்களில் பணி புரிந்தபடி, தூயவளனார் கல்லூரியில் படித்தேன். நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம். பல நாள், கல்லூரியின் மதிய உணவு மட்டுமே, என் ஒரு நாள் உணவு. அதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். படிப்பு என்ற ஆயுதத்தால் மட்டுமே வாழ்க்கையை வளமாக்க முடியும் என்ற நம்பிக்கை, என்னை பல பட்டங்களை பெற வைத்தது. தற்போது,"வளர்கல்வி மையம்' என்ற அமைப்பின் மூலம், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களின் கிராமப்புற ஏழை மாணவர்களை, பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்தல், நுழைவுத் தேர்வு பயிற்சி,முன் ஆயத்தப் பயிற்சி, வழிகாட்டுதல், கல்வி உதவித் தொகை வழங்கல் ஆகியவற்றை செய்கிறேன். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர். கிராமம், கிராமமாக சென்று, ஏழை மாணவர்களை படிக்க வைத்து,வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். வாய்ப்பில்லாத ஏழைகளையும் படிக்க வைக்க வேண்டும்; அதுதான் என் நோக்கம்.<br />
<br />
<br />
<b>* சிறுமி கால் மீது ஏறிய கலெக்டர் கார்: கலெக்டரின் அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி<br />
<br />
<img alt="large_242880.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13005f40db788211&attid=0.5&disp=emb&realattid=ii_13005e7a010b006d&zw" title="large_242880.jpg" /></b><br />
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், அங்கப் பிரதட்சணம் செய்த சிறுமியின் காலில், கரூர் கலெக்டர் கார் ஏறியது. கரூர், இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் மேகலா (12). லாலாப்பேட்டை அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு, தன் தாத்தாவுடன், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில், அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு படுத்தார். அப்போது, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்ள, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, "ஸ்கார்பியோ' காரில் வந்தார். கோவிலுக்கு முன் பக்தர்கள் நெரிசல் நிறைந்த, குறுகலான பாதையில், கலெக்டர் கார் வந்தது. அந்தப் பாதையில், அங்கப் பிரதட்சணத்துக்கு மேகலா படுத்திருந்ததை கவனிக்காத கார் டிரைவர், அவர் கால் பாதம் மீது காரை ஏற்றி, சிறிது தூரம் சென்று நிறுத்தினார். மேகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் பதறியபடி ஓடி வந்தனர். "ரேடியல்' டயர் என்பதால், சிறுமியின் காலில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. காரை விட்டு இறங்கிய கலெக்டர் உமாமகேஸ்வரி, பாதிக்கப்பட்ட மேகலாவிடம் நலம் விசாரிக்காமல், அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறி விட்டு, "விறுவிறு'வென கோவிலுக்குள் சென்றுவிட்டார். கலெக்டரின் அலட்சிய போக்கால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தை பத்திரிகையாளர்கள் கவனித்துவிட்டதால், சிறுமியை கலெக்டர் காரில் ஏற்றி, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மலர், தின மணி. <br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-12990786041531714332011-05-18T07:07:00.000+05:302011-05-18T07:07:48.959+05:30இன்றைய செய்திகள் , மே 18 , 2011 .<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #33ff33;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b>புதிய தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஷீலா ராணி-ஜெ நியமனம்<br />
<br />
<img alt="17-sheela-rani-debendranath-sa.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.3&disp=emb&realattid=ii_1300090e0b08760d&zw" title="17-sheela-rani-debendranath-sa.jpg" /><br />
</b><br />
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி, அதிகாரமில்லாத துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
அதே போல உள்துறைச் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் ஞானதேசிகன் இருந்தார். சுங்கத் இதுவரை தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு வாரிய முதன்மைத் தலைவராக இருந்து வந்தவர் ஆவார். இப்போது இவர் வசம் காவல்துறை வந்துள்ளது.<br />
<br />
முதல்வராக பதவியேற்றவுடன் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார், உள்துறைச் செயலாளராக சுங்கத்தை நியமித்துள்ளார். சாரங்கி இப்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குநராக உள்ளார்.<br />
<br />
லைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வு பெற்றபோது, அடுத்த தலைமைச் செயலாளர்களாக வருபவர்களின் பட்டியலில் சாரங்கியின் பெயர் இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.<br />
<br />
இந் நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த இவர் 1977 பேட்ச் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாவார். இவரை விட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சூசன் மேத்யூ, பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமைச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களை ஒதுக்கிவிட்டு சாரங்கியை நியமித்துள்ளார் ஜெயலலலிதா.<br />
<br />
மிக நடுநிலையானவர் என பெயர் எடுத்த சாரங்கியின் மனைவி தமிழ்ப் பெண் ஆவார். இவர்களது மகன் ஐடி துறையில் பணியாற்றுகிறார். மகள் அமெரிக்காவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார்.<br />
<br />
உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலாராணி சுங்கத், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1978ம் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக திறம்பட பணியாற்றினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.<br />
<br />
தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகள் தெரிந்தவர். ஷீலாராணி சுங்கத்தின் கணவர் மோகன் வர்க்கீஸ் சுங்கத், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.<br />
<br />
முதல்வரின் புதிய செயலாளர்கள்:<br />
<br />
தே போல முதல்வரின் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.<br />
ஜெயலலிதாவின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
இதில் வெங்கடரமண் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளராகவும், ராவ் விவசாயத்துறை செயலாளராகவும் இருந்தவர்கள்.<br />
<br />
இதில் ஷீலா ப்ரியா முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாராகவும், ராவும் வெங்கடரமணும் முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாகவும் இருப்பர்.<br />
<br />
அதே போல ராமலிங்கம், ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி இப்போது புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி அந்தஸ்து கூடுதல் செயலாளர் என்ற நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது.<br />
<br />
திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அந்தத் துறையின் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சிறப்பு ஆணையாளராக டம்மி போஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.<br />
<br />
இந் நிலையில் சட்டப் பேரவையின் செயலாளராக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
முன்னதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சிறைத்துறை இயக்குனராக மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பில் கூடுதல் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இவர்களைத் தொடர்ந்து பல துறைகளின் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும், கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது.<br />
<br />
<b style="color: #33ff33;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வாய்ப்பளியுங்கள்! - ஐநாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை</b><br />
எங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.<br />
<br />
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
அந்த அறிக்கை:<br />
<br />
அன்பான தமிழ் மக்களே,<br />
<br />
காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.<br />
<br />
பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள்.<br />
<br />
இருக்க இடமின்றி உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் என சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.<br />
<br />
பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.<br />
<br />
கூக்குரலை புறந்தள்ளிய உலகம்<br />
<br />
எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச் சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.<br />
<br />
போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல்இ பக்கச்சார்பானவையென்றும்இ உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.<br />
<br />
அறிக்கையை வரவேற்கிறோம்<br />
<br />
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.<br />
<br />
எம் அன்பிற்குரிய தமிழக மக்களே ,<br />
<br />
எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.<br />
<br />
எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும் வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.<br />
<br />
அன்பான உலகத்தமிழ் உறவுகளே,தமிழீழத் தாயகமமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்த வெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்<br />
<div dir="ltr"><wbr></wbr>. பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்ற நிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மை நிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்கு முறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.<br />
<br />
இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.<br />
<br />
* <b>மும்பை தாக்குதலுக்கு உடந்தை பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டும்: அமெரிக்கா</b><br />
வாஷிங்டன், மே 17: மும்பைத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அந்நாடு பதில் கூற வேண்டும் என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.<br />
<br />
2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் ஏறத்தாழ 170 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் அமெரிக்க பிரஜைகள். இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானிலிருந்து கடல் வழி வந்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான்.<br />
<br />
இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. உதவி புரிந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.<br />
<br />
இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் வாழும் வர்த்தகர் தஹவூர் ராணா என்பவர் அமெரிக்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு இவர் ஆள் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.<br />
<br />
இது குறித்த வழக்கு சிகாகோ நகரில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. வழக்கிற்கான ஜூரி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.<br />
<br />
இந்தப் பின்னணியில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு உண்டு என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்டது.<br />
<br />
அப்போது அவர் கூறியது: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-க்கும் பங்குண்டு என கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் அரசு முறையாக பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்திருக்கிறது.<br />
<br />
ஆனால் தாக்குதல் குறித்த வழக்கு பற்றி இப்போது விவரமாக எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கின் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆனால் மும்பைத் தாக்குதலைப் பொருத்தவரையில், அந்த பயங்கரவாத சம்பவம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அனைத்து நாடுகளும், அனைத்து தரப்பினரும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.<br />
<br />
ராணா வழக்கு: மும்பை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக டேவிட் கோல்மன் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் குழந்தைப் பருவம் முதலே நண்பர்கள். இதில் ராணா ஒரு மருத்துவர். பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் இவர் கனடாவில் குடியேறினார்.<br />
<br />
மும்பை தாக்குதலுக்கு அவர் பொருள் உதவி செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும், உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் தூண்டியதால் பயங்கரவாத தாக்குதலுக்குத் துணை போனதாக இவர் கூறியுள்ளார். ஆனால் ராணாவை நயவஞ்சகமாக இந்த சதியில் உள்படுத்தியது ஹெட்லிதான் என ராணாவின் வக்கீல் கூறி வருகிறார்.<br />
<br />
ஹெட்லி என்று இப்போது அறியப்படுபவரின் உண்மையான பெயர், தாவூத் சையத் கிலானி. தனது அடையாளம் வெளிப்படாமல் இருக்க பெயரை மாற்றிக் கொண்டார். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடும் பொருட்டு பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார்.<br />
<br />
மும்பை தாக்குதலைத் திட்டமிட அவர் அங்கு சென்று தங்கியிருந்தார். தாக்குதல் நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் அவர் அங்கு தங்கியிருந்தார். தாக்குதலுக்குப் பின் அவருடைய வெளிநாட்டுப் பயணத்தின்போது விமான நிலையத்தில் அவர் கொடுத்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களினால் சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
விசாரணையின்போது, பாகிஸ்தான் உளவு நிறுவனம் தனக்கு 25 ஆயிரம் டாலர்கள் தந்து இந்த பயங்கரச் செயலைச் செய்யுமாறு சொன்னதாக ஒப்புக்கொண்டார் ஹெட்லி.<br />
<br />
<b>* இந்திய விஞ்ஞானிக்கு விருது<br />
</b><br />
வாஷிங்டன்,மே17 :குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மலேசியாவில் உருவாக்கியுள்ள இந்திய விஞ்ஞானிக்கு,அமெரிக்காவின் விருது கிடைத்துள்ளது.<br />
<br />
இந்தியாவைச் சேர்ந்த கே எஸ் சிவபிரசாத், குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளார். இத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மலேசியாவில் 700 டன் குப்பையிலிருந்து 8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்நிறுவனம்,அதன் சுய தேவைகளுக்குப் போக, மீதமுள்ள 5.5 மெகாவாட் மின்சாரத்தை தேசிய தொகுப்புக்கு விற்பனை செய்து வருகிறது. இத்தொழில் நுட்பத்துக்கான காப்புரிமையை சிவபிரசாத் அவரிடமே வைத்துள்ளார். மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் ஆறு பெரிய நிறுவனங்களில் மலேசியாவில் உள்ளது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ரோஸ்மாண்ட்டில் நடைபெற்ற ஆண்டு விழாவில், இந்திய விஞ்ஞானி சிவபிரசாத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத குப்பையிலிருந்து,மின்சாரம் தயாரிக்கும் தொழிற் சாலைகளை இந்தியாவில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த சிவபிரசாத் இந்தியா வரவுள்ளார்.<br />
<br />
<b>* இந்தியக் குடியுரிமை கோரும் பாகிஸ்தான் ஹிந்துக்கள்</b><br />
கன்னா, மே.17: பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் புலம் பெயர்ந்த பாகிஸ்தான் நாட்டு ஹிந்துக்கள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.<br />
<br />
பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஹிந்துக்கள் சிலர், அங்கு நடக்கும் தீவிரவாதச் செயல்களால் பாதிப்புற்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துள்ளனர். 1999 -ம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், வருடந்தோறும் இங்கு தங்குவதற்கான உரிமையைப் புதுப்பித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவும் வன்முறைச் சூழ்நிலையால் மீண்டும் அங்கு திரும்ப விரும்பாத இவர்கள் நிரந்தரக் குடியுரிமை கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.<br />
<br />
பஞ்சாப் அரசின் உள்துறை மற்றும் நீதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ள இவர்களது விண்ணப்பம், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.<br />
<br />
விண்ணப்பித்தவர்களில் ஒருவரான ஓம் லால் இதுபற்றிக் கூறுகையில், பாகிஸ்தானில் தீவிரவாதச் சூழ்நிலை நிலவுவதால், தான் ஒருபோதும் பாகிஸ்தானுக்குத் திரும்பப்போவதில்லை என்று கூறினார். குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற உரிமைகளை பெறச் சிரமப்படுவதால் இந்திய அரசு தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டினார்.<br />
<br />
இவரைப் போன்றே புலம் பெயர்ந்த பல பாகிஸ்தான் பிரஜைகளும் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கிடையில் பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அவினாஷ் ராய் கன்னா இந்த விஷயத்தை தான் மாநிலங்களவையில் சமீபத்தில் எழுப்பியுள்ளதாகக் கூறினார்.<br />
<br />
<b>* பிரதமர் மன்மோகனுக்கு அமெரிக்கா பாராட்டு</b><br />
<br />
<img alt="pm.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.5&disp=emb&realattid=ii_13000946011d6155&zw" title="pm.jpg" /><br />
<br />
வாஷிங்டன்,மே 17: பிரதமர் மன்மோகன்சிங்கை அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் பாராட்டியுள்ளார்.<br />
<br />
இது பற்றி அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியது: மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருப்பது உலகத்துக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிர்ஷ்டமானது. தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்கியபோதும் மன்மோகன்சிங் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் மோதல் ஏற்படுவதை தவிர்த்தார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவை கட்டுப்படுத்த முடியாது. இதை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெளிவாக கூறிவிட்டது.<br />
<br />
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் சில இடங்கள் தீவிரவாதிகளுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் சொர்க்கமாக உள்ளன. இதனால் தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அதிக விலை கொடுக்க வேண்டியதுள்ளது என்று ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்தார்.<br />
<br />
<b>* இந்திய, சீன மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா அறிவுரை<br />
<br />
<img alt="obamaa.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.1&disp=emb&realattid=ii_1300093bc4508ce4&zw" title="obamaa.jpg" /></b><br />
வாஷிங்டன், மே 17: எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீன மாணவர்களின் போட்டியைச் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்க மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.<br />
<br />
டென்னஸ்ஸீ மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் கல்லூரி மாணவர்களுடன் உரையாடியபோது அவர் இக்ருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:<br />
<br />
அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.<br />
<br />
எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்நாட்டு போட்டியை சமாளித்தால் போதும் என்ற நிலை இனி இருக்காது. வெளிநாட்டிலிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழல் உருவாகி வருகிறது.<br />
<br />
இந்திய, சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர். இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.<br />
<br />
படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது நீங்கள் நாஷ்விலே பகுதியைச் சேர்ந்தவருடனோ அல்லது அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவருடனோ போட்டியிடப் போவதில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.<br />
<br />
இதற்கு அனைத்து அமெரிக்க மாணவர்களும் தயாராக வேண்டும். வெறுமனே ஒரு சில அமெரிக்க மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். மாணவர்கள் வெறும் படிப்புடன் நின்றுவிடாமல் பட்டயப் படிப்போ அல்லது தொழில் படிப்போ கூடுதலாக கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. இவையில்லாமல் வெற்றி பெற முடியாது. போட்டிகளை எதிர்கொள்வதும் கடினம்.<br />
<br />
கல்வியானது ஒருவரை பலவழிகளில் சிறந்த மனிதராக உருவாக்குகிறது. மிகக் கடுமையான போட்டிகளை எதிர்கொள்வதற்குக் கற்றுத் தருகிறது. பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண வழியேற்படுத்தித் தருகிறது.<br />
<br />
அல்ஜீப்ரா கணிதத்தைப் போட வேண்டியதன் அவசியம் என்ன? என்று எங்களது இளமைக் காலத்தில் ஆசிரியர்களைக் கேட்டது நினைவுக்கு வருகிறது.<br />
<br />
அல்ஜீப்ரா கணக்குகளுக்குத் தீர்வு காணாமல் நல்ல வேலையைப் பெற முடியாது அல்லது நல்ல தந்தையாக இருக்க வேண்டியாது என்று பேராசிரியர் குறிப்பிட்டார். அவரவர் தங்களது சொந்தக்காலில் நிற்பதற்குப் பழக வேண்டும்.<br />
<br />
தகவல்களை எந்தெந்த வழிகளில் பெறலாம் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். எனவே கணக்கு ஆசிரியர்கள் தங்களது மாணாக்கர்களுக்கு கணக்குப் பாடத்தில் அல்ஜீப்ராவை நன்கு கற்றுத் தர வேண்டும் என்று சிரித்தபடியே கூறினார்.<br />
<br />
ஒவ்வொரு பாடப் பிரிவில் உள்ள சாதக அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. அத்துடன் ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். ஸ்திரமான கட்டுப்பாடு, கடின முயற்சி ஆகியன மூலம் மாணவர்கள் மிகச் சிறந்த இடத்துக்கு உயரலாம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.<br />
<br />
இத்தகைய போதனைகளை மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்துவதன் மூலம்தான் ஏற்படுத்த முடியும். வாழ்க்கையில் இலக்கை நிர்ணயித்து அதை எட்டுவதற்காகப் போராடி முன்னேறும்போதுதான் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். பிரபலமானவர்களாக ஆவதும் இத்தகைய கடின முயற்சியால்தான்தான் என்று ஒபாமா குறிப்பிட்டார்.<br />
<br />
உண்மை சம்பவ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது நீங்கள் பிரபலமாகக் கூடும். ஆனால் அது கடைசி வரை நீடித்திருக்காது. ஸ்திரமான சாதனைகள் மட்டுமே நிலைத்திருக்கும்.<br />
<br />
உங்கள் வீடுகளில் மற்றும் பள்ளிகளில் பயிலும் சரியான கல்வி உங்களை மிகச் சிறந்த மனிதர்களாக உருவாக்குகிறது. நீங்கள் கதைகள் படிக்கும்போதோ அல்லது வரலாறு படிக்கும்போதோ உங்களது கற்பனை விரிந்து அந்த கதாபாத்திரமாக மாறவும், அந்த கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சவாலை சமாளிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.<br />
<br />
அமெரிக்காவின் எதிர்கால பொருளாதார நிலை மாணவர்களின் திறமையில்தான் அடங்கியிருக்கிறது. அதேபோல அமெரிக்க சமூகத்தின் எதிர்காலம் நீங்கள் பின்பற்றும் விதிமுறைகளில்தான் அடங்கியிருக்கிறது. உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதேபோல மற்றவர்களை நீங்கள் நடத்துவதற்கு முயலுங்கள் என்றார் ஒபாமா.<br />
<br />
<br />
<b style="color: #33ff33;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* நெடுஞ்சாலைத் துறை செயல்பாடு: மே 30-ல் பிரதமர் மறு ஆய்வு</b><br />
புது தில்லி, மே 17: தேசிய நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாடு குறித்து வரும் 30-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மறு ஆய்வு செய்யவுள்ளார்.<br />
<br />
இதை நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.<br />
<br />
11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-2012) நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவு புதிய சாலையை உருவாக்குவதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் கோருதல் , நிலம் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுதலில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக புதிய சாலை உருவாக்குவதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை.<br />
<br />
இதனால் நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய பிரதமர் திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தின் போது 11-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் கடந்த 4 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதுடன், இன்னும் ஓராண்டில் விரைந்து சாலை அமைப்பதற்கான சிறப்புத் திட்டத்தை உருவாக்குவது குறித்து அந்த துறை அதிகாரிகளுடன் ஆலோசிப்பார்.<br />
<br />
இந்தக் கூட்டத்தின் போது கடந்த ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வரும் காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அந்த துறையின் அமைச்சர் சி.பி.ஜோஷி விளக்குவார்.<br />
<br />
<b>* பயங்கரவாதிகள் பட்டியல்: உள்துறை அமைச்சகம் குழப்பம்</b><br />
மும்பை, மே 17: பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட பயங்கரவாதக் குற்றம்சுமத்தப்பட்டுள்ள இந்தியரான வாஜுல் கமார் கான் என்பவர் தாணேயில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.<br />
<br />
இது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஜுல் கமார் கானின் பெயரை மகாராஷ்டிர மாநில உள்துறையும், காவல்துறையும்தான் மத்திய அரசுக்கு அளித்தன.<br />
<br />
இதுதொடர்பாக விளக்கம் தருமாறு மகாராஷ்டிர அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.<br />
<br />
2002, 2003 ஆண்டுகளில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக வாஜுல் கமார் கான் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில் ஜூலையில் ஜாமீனில் வெளி வந்தார்.<br />
<br />
இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்துறை செயலர்கள் கடந்த மார்ச் மாதம் தில்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது. அதில் வாஜுல் கமார் உள்பட 50 பேரின் பெயர் இடம்பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.<br />
<br />
இந்த பயங்கரவாதிகள் பெயர் பட்டியல் கடந்த வாரம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இதையடுத்துதான் வாஜுல் கமார் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதும், அவர் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டதும் தெரியவந்தது.<br />
<br />
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆங்கில பத்திரிகை ஒன்று வாஜுல் கமார் பாகிஸ்தானில் இல்லை. இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் மகாராஷ்டிரத்தின் தாணேயில் தொழில் செய்து வருகிறார். அவர் ஜாமீனில்தான் இருந்துவருகிறார் என்று செய்தி வெளியிட்டது.<br />
<br />
இதையடுத்து பிற பத்திரிகையாளர்கள் தாணேயில் வாஜுல் கமார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் பேட்டி கண்டனர். அப்போது அவர், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள இந்தியாவில்தான் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.<br />
<br />
மேலும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இதனால் தனது தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.<br />
<br />
*<b> மம்தாவை முதல்வராக நியமித்து ஆளுநர் உத்தரவு</b><br />
<br />
<img alt="mamthapa.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.6&disp=emb&realattid=ii_13000920e6d8f672&zw" title="mamthapa.jpg" /><br />
<br />
கொல்கத்தா, மே 17: மேற்கு வங்கத்தின் முதல்வராக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நியமிக்கப்படுவதாக ஆளுநர் எம்.கே.நாராயணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.<br />
<br />
"அரசியல் சட்டப் பிரிவு 164(1)-ன் படி வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் மம்தா பானர்ஜியை முதல்வராக நியமிப்பதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்திருக்கிறார்' என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் பேரவை திரிணமூல் கட்சித் தலைவராக மம்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, ஆட்சியமைக்கும் உரிமையை ஆளுநரிடம் அவர் கோரினார். அதன்படி, ஆட்சியமைக்க வருமாறு மம்தாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், மம்தாவை முதல்வராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.<br />
<br />
வரும் 20-ம் தேதி மம்தா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
<b>* அசாம் முதல்வராக தருண் கோகோய் இன்று பதவியேற்பு<br />
<br />
<img alt="pranap.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.7&disp=emb&realattid=ii_13000914fe72f924&zw" title="pranap.jpg" /></b><br />
குவாஹாட்டி, மே 17: அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தருண் கோகோய் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் முதல்வராக புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.<br />
<br />
பதவியேற்பு: சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தருண் கோகோய், மாநில முதல்வராக புதன்கிழமை (மே 18) பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கோகோய் மட்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அவர் அமைச்சரவை விரிவாக்கும் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்துவதற்காக தில்லி செல்ல உள்ளார். அங்கு ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவை இறுதி செய்யப்படும்.<br />
<br />
முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கோகோய் பெயரை பூமிதர் பர்மான் முன்மொழிந்தார். இதை ராமேஸ்வர் தனோவார், மூத்த சட்டப் பேரவை உறுப்பினர் ஜி.சி. லங்தஸô, அமியா கோகோய், சந்தன் சர்க்கார் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கோகோய் பெயரை ஒருமனதாக ஆதரித்தனர்.<br />
<br />
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரும், அசாம் மாநில பொறுப்பாளருமான திக்விஜய் சிங், வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் பிஜோய் ஹண்டிக்கும் பங்கேற்றனர்.<br />
<br />
*<b> எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளில் மன்மோகன் 6 நாள் சுற்றுப்பயணம்</b><br />
புதுதில்லி,மே 17: பிரதமர் மன்மோகன்சிங் 6 நாள் சுற்றுப்பயணமாக எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளுக்கு செல்கிறார்.<br />
<br />
ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு வருகிற 24,25-ம் தேதிகளில் அடிஸ்அபாபா நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆப்ரிக்காவில் உள்ள 15 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.<br />
<br />
மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மேலும் அவர் எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் 23-ம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்டு அடிஸ்அபாபா நகருக்கு செல்கிறார். அவருடன் மனைவி குருசரண் கவுர், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரும் செல்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங் ஆப்பிரிக்க தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.<br />
<br />
முன்னதாக 23-ம் தேதி வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடக்கிறது. இதில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் இந்திய குழு கலந்து கொள்கிறது.<br />
<br />
மேலும் 21-ம்தேதி வர்த்தக அமைச்சர்கள் சிறப்புக் கூட்டமும் நடக்கிறது. இதில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் ஒரு குழு கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை நடத்துகிறது.<br />
<br />
மாநாடு முடிந்த பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் எத்தியோப்பியா நாட்டுக்கு செல்கிறார். அங்கு அவர் எத்தியோப்பியா பிரதமர் மெலிஸ் செனாவியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசுகிறார். மேலும் மன்மோகன்சிங் எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.<br />
<br />
பின்னர் 3 நாள் பயணமாக மன்மோகன்சிங் 26-ம் தேதி தான்சானியா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். தான்சானியா அதிபர் ஜகையா கிக்வேட்டுடன் இரு நாட்டு வர்த்த உறவுகள் குறித்து பேசுகிறார்.<br />
<br />
இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விவேக் கட்சு தில்லியில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது,இந்தியாவும்,ஆப்பிரி<wbr></wbr>க்க நாடுகளும் தீவிரவாதிகளாலும், சோமாலிய கடற் கொள்ளையர்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.<br />
<br />
எனவே இந்திய,ஆப்பிரிக்க தலைவர்கள் தீவிரவாதத்தையும் கடற்கொள்ளைர்களையும் ஒடுக்க முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்தியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நெடுங்காலமாக தொடர்பு உள்ளது. நாங்கள் நண்பர்களாக உள்ளோம். எப்போதும் நண்பர்களாக இருப்போம் என்று கட்சு தெரிவித்தார்.<br />
<br />
<br />
<b style="color: #33ff33;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<b><br />
* கட்டண வசூலில் மெட்ரிக் பள்ளிகள்: நகைகளை அடகு வைக்கும் பெற்றோர்</b><br />
நெல்லை: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 13 தினங்களே உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றன.<br />
<br />
கோடை காலம் முடிந்தவுடன் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை களை கட்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பிரபலமான பள்ளிகளில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்களி்ன் வருமானத்தை பெருக்கிக்கொள்ள இப்போதே வசூலில் இறங்கிவிட்டன.<br />
<br />
புதிதாக ஒரு மாணவரை பள்ளியில் சேர்க்க குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரமாவது வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் நச்சரிக்கின்றன. அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தக கட்டணம், சுற்று கட்டணம் என அடுத்தடுத்து பல அதிர்ச்சிக்ள் காத்திருக்கின்றன. ஏற்கனவே பளளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், இவ்வாண்டு சில புதிய விதிமுறைகளை பிறபிக்கத் துவங்கியுள்ளன. பாளையி்ல் ஒரு பள்ளியில் கடந்த வாரத்துக்கு முன்பு பெறறோர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி புத்தக கட்டணமாக ரூ.2000 முதல் 5000 வரை செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. நேற்று இறுதி நாள் என்பதால் பணத்தை கட்ட சென்ற பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் மேலும் ரூ.6 ஆயிரம் செலுத்துமாறு கூறியது. 4, 5-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் கூட ரூ.8,500 செலுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.<br />
<br />
பெறறோர்கள் அவசரம், அவசரமாக ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து செலுத்தியபோது ரூ. 4 ஆயிரத்துக்கு ஒரு டிராப்ட் பெயரில் பில் போடப்பட்டது. மீதி தொகைக்கு பின் பில் தருகிறோம் என கூறி பெற்றோர்களை திருப்பி அனுப்பி விட்டது. பாளையில் உள்ள மற்றொரு மெட்ரிக் பள்ளி இவ்வாண்டு பல மாணவர்களுக்கு தேர்ச்சி அட்டைகளை அனுப்பவில்லை. பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் கடந்த ஆண்டு பாக்கி தொகையை முழுமையாக கட்டினால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி கடந்த ஆண்டு பல பெற்றோர்கள் குறைவான கட்டணத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
பழைய கட்டணத்தோடு, புதிய கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருப்பதால் பல பெற்றோர்கள் இப்போதே நகைகளை அடகு வைக்கத் துவங்கிவிட்டனர். பள்ளிகள் துவங்கும் முன்பே வசூலிக்கப்படும் இத்தகைய கட்டணங்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.<br />
<br />
<br />
<b>* மானிய விலை உரங்கள் விற்பனையில் ரூ. 1.34 கோடி ஊழல் 5 அதிகாரிகள் கைது<br />
<br />
<img alt="arrest.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.2&disp=emb&realattid=ii_130008dfabd32502&zw" title="arrest.jpg" /></b><br />
கரூர், மே 17: அரசிடமிருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று, அவற்றை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து, தமிழக அரசுக்கு சுமார் ரூ. 1.34 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக கரூர், சேலம், திருச்சியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களை கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸôர் கைது செய்தனர்.<br />
<br />
வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் சி. பாக்கியநாதன், கரூரிலுள்ள வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.<br />
<br />
அதன் விவரம்:<br />
<br />
திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் பி. செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.<br />
<br />
2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடியால் அரசுக்கு ரூ. 1,33,63,261 இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
இதையடுத்து, புகார் மீது விசாரணை நடத்த வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில், துணைக் கண்காணிப்பாளர் ஏ. சூர்யகலா தலைமையில், ஆய்வாளர்கள் வேணுகோபால், ரவிச்சந்திரன், அயுப்அலிகான், விஜயகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.<br />
<br />
தனிப் படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் பி. செல்லமுத்து (48), (உர ஊழல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்), திருச்சி டான்பெட் துணை மேலாளர் இ. பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்து, தற்போது ஸ்ரீரங்கம் வேளாண்மை துணை இயக்குநராக பதவி வகித்து வரும் பி. மீனாட்சிசுந்தரம் (53), கரூர் மாவட்டம், காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் சி. ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் (கொள்முதல்) எஸ். கல்யாணசுந்தரம் (56) ஆகியோரை தனிப் படையினர் கைது செய்து, செவ்வாய்க்கிழமை கரூர் கொண்டு வந்தனர்.<br />
<br />
அவர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திய பின்னர், குளித்தலை குற்றவியல் நடுவர் நீதித் துறை எண். 1-ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.<br />
<br />
இதுகுறித்து துணைக் கண்காணிப்பாளர் ஏ. சூர்யகலா கூறியது: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக பெறப்பட்ட உரங்களை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்த வகையில் அரசுக்கு ரூ. 1.34 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்திய தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் தனி அலுவலர், உரங்களை வழங்குவதற்கு உறுதுணையாகச் செயல்பட்டவர்கள், உரங்களைப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இதுவரை 5 பேரைக் கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார் அவர்.<br />
<br />
<br />
<b style="color: #33ff33;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>காயப்படுத்தினால் பலன் தரும் பெருங்காயம்</b><br />
<br />
<img alt="17-asafoetida300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b5e2f364568&attid=0.4&disp=emb&realattid=ii_130008cc107aef42&zw" title="17-asafoetida300.jpg" /><br />
<br />
தமிழ்நாட்டின் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் பெருங்காயம். இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது."ஃபெருலா ஃபொட்டிடா" அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து பெருங்காயம் கிடைக்கிறது..<br />
<br />
இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகள் மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக வாசனையுள்ள பால் காணப்படுகிறது.<br />
<br />
இந்த தாவரமானது இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் வளர்ந்த தாவரத்தின் வேர்பகுதியில் இருந்து பெறப்படும் மணம் கொண்ட பிசின் போன்ற பொருளே பெருங்காயம் ஆகும்.<br />
<br />
உயர்வகை பிசின்<br />
<br />
தண்டு முதல் வேர்வரை வெட்டி காயப்படுத்தப்படும்போது இதிலிருந்து பிசின் போன்ற பொருள் வெளியேறி கெட்டியாகிறது. சிவப்பு வண்ணத்தில் உள்ள பிசின் சுரண்டி எடுக்கப்பட்டு தோல்பைகளில் சேகரிக்கப்படுகிறது. இதுவே பெருங்காயமாகும்.<br />
<br />
ஜூன் மாதங்களில் பிசின் எடுக்கப்படும். வணிக ரீதியான பெருங்காயம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் பெறப்படுகிறது. வேரின் மையத்தில் உள்ள இலை மொட்டில் இருந்து உயர்ந்த வகை பெருங்காயம் பெறப்படுகிறது. இது ‘கந்தகாரி’ பெருங்காயம் எனப்படுகிறது.<br />
<br />
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்<br />
<br />
பெருங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ரெசின் மற்றும் பிசின் காணப்படுகிறது. இதில் டை- சல்பைட்கள் மற்றும் பெரூலிக் அமிலம், பிட்டிடன் ஆகியவற்றுடன் கௌமரின்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்காயத்தின் மருத்துவ பயன்களுக்கு அடிப்படையாகின்றன.<br />
<br />
ஃபெருலா என்றழைக்கப்படும் தாவரத்தின் இலைகள், தண்டு, வேர் மற்றும் பிசின் – ரெசின் ஆகியன மருத்துவ பயன் உடையவை.<br />
<br />
பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.<br />
<br />
கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதேசமயத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். இது சுவைக்காக மட்டுமின்றி, உணவு செரிக்கவும் உதவுகிறது. வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களையும் இது அழிக்கிறது.<br />
<br />
நரம்பு கோளாறு நீங்கும்<br />
<br />
வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயத்திற்கும் உள்ளது. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.<br />
<br />
பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.<br />
<br />
பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.<br />
<br />
அஜீரணம் நீங்கும்<br />
<br />
இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. தண்டுப்பகுதி மூளை மற்றும் கல்லீரலை வலுப்படுத்துகின்றன.மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவில் பெருங்காயம் சாதாரண அஜீரணம், வாயு, உப்புசம், மலச்சிக்கல், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.<br />
<br />
மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.</div><div dir="ltr"></div><div dir="ltr"></div><b style="color: #33ff33;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>பங்குச் சந்தையில் கரடியின் பிடி இறுகுகிறது</b><br />
மும்பை, மே 17: பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரடியின் பிடி இறுகியதால் 208 புள்ளிகள் சரிந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் குறைந்தது, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மானிய சுமை அதிகரிப்பு, எண்ணெய் அகழ்வுப் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் தாமதப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது.<br />
<br />
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 18,137 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 60 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,438 புள்ளிகளாகக் குறைந்தது.<br />
<br />
பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் ரூ. 203.70 குறைந்து ரூ. 2,413.60-க்கு விற்பனையானது. இவ்வங்கிப் பங்குகள் 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்குக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. <br />
<br />
ஜூன் மாதம் நடைபெற உள்ள நிதி ஆய்வுக் கொள்கையில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது.<br />
<br />
முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 23.90 சரிந்து ரூ. 920.40-க்கும், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை ரூ. 5.80 சரிந்து ரூ. 2,843.95-க்கும் விற்பனையானது.<br />
<br />
ஓஎன்ஜிசி பங்கு விலை ரூ. 19.95 சரிந்து ரூ. 277.95-க்கும், ஆயில் இந்தியா பங்கு விலை ரூ. 66.80 சரிந்து ரூ. 1,289.20-க்கும் விற்பனையானது. கெயில் இந்தியா பங்கு விலை ரூ. 17.65 குறைந்து ரூ. 433-க்கு விற்பனையானது. ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங், தென் கொரியா, தைவான் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. சீனா, ஜப்பான் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன.<br />
<br />
மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 19 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மற்றவை கணிசமான லாபம் ஈட்டின. ஹீரோ ஹோண்டா (3.39%), ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் (2.17%), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (2.06%), என்டிபிசி (1.72%), ஐசிஐசிஐ வங்கி (1.70%), டாடா மோட்டார்ஸ் (1.54%), மாருதி சுஸýகி (1.23%), எல்&டி (0.82%) அளவுக்குச் சரிவைச் சந்தித்தன.<br />
<br />
ஜின்டால் ஸ்டீல் (1.97%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (1.60%), டிசிஎஸ் (1.30%), ஐடிசி (0.83%), டிஎல்எப் (0.64%) அளவுக்கு முன்னேற்றம் பெற்றன.<br />
<br />
பங்குச் சந்தையில் மொத்தம் 1,725 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,063 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,797.54 கோடி.<br />
<br />
<br />
<b style="color: #33ff33;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
* <b>கிரிக்கெட்</b><br />
<br />
"<b>கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி</b><br />
"கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி<br />
தர்மசாலா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் அதிரடி சதம் விளாச, பஞ்சாப் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி பரிதாபமாக வீழ்ந்தது.<br />
ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் 63வது லீக் போட்டி, தர்மசாலாவில் நடந்தது. இதில் கில்கிறிஸ்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராத் கோஹ்லியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.<br />
வல்தாட்டி ஏமாற்றம்:<br />
பஞ்சாப் அணிக்கு வல்தாட்டி, கில்கிறிஸ்ட் இணைந்து துவக்கம் கொடுத்தனர். லாங்கிவெல்ட் பந்தில் ஒரு சிக்சர் அடித்த வல்தாட்டி 20 ரன்னுடன் திரும்பினார். இதன் பின் கில்கிறிஸ்ட்டுடன், ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.<br />
"பெஸ்ட்' ஜோடி:<br />
துவக்கத்தில் சற்று பொறுமை காத்த இவர்கள், போகப் போக பெங்களூரு பவுலர்களை ஒரு "கை' பார்க்கத்துவங்கினர். கில்கிறிஸ்ட், மார்ஷ் இருவரும் மாறி, மாறி பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். கெய்ல் பந்துகளை அடுத்தடுத்து சிக்சருக்கு அனுப்பிய "கில்லி', லாங்கிவெல்ட் ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் அடித்து மிரட்டினார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.<br />
6 பந்து 30 ரன்:<br />
மறுமுனையில் மார்ஷ் தன் பங்கிற்கு ரன்மழை பொழிந்தார். வான் டர் வாத்தின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 ரன்கள் குவித்து, அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய கில்கிறிஸ்ட், ஐ.பி.எல்., தொடரில் 2வது சதம் கடந்தார். இவர் 55 பந்துகளில் 106 ரன்கள் (9 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.<br />
20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்தது. மார்ஷ் 79 ரன்னுடன் (49 பந்து, 5 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.<br />
கெய்ல் "டக்':<br />
எட்டமுடியாத இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கெய்ல் இம்முறை "டக்' அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். நான்காவது ஓவரில் பெங்களூரு அணிக்காக முதல் பவுண்டரி அடித்த கேப்டன் விராத் கோஹ்லி (11) நிலைக்கவில்லை. சவுரப் திவாரி (6), ஆசாத் பதான் (7) அடுத்தடுத்த ஓவர்களில் திரும்ப, 43 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி திணறியது.<br />
இதன் பின் டிவிலியர்ஸ், முகமது கைப் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கைப் 11 ரன்னுக்கு அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது. டிவிலியர்ஸ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.<br />
பின் வந்த "டெயிலெண்டர்கள்' அருண் கார்த்திக் (6), வான் டர் வாத் (4), அபிமன்யு மிதுன் (10), லாங்கிவெல்ட் (8) விரைவில் திரும்பினர். பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 17 ஓவரில் 121 ரன்னுக்கு சுருண்டு, 111 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது. அரவிந்த் (11) அவுட்டாகாமல் இருந்தார்.<br />
பஞ்சாப் அணி சார்பில் சுழலில் அசத்திய பியுஸ் சாவ்லா 4, ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை கில்கிறிஸ்ட் தட்டிச் சென்றார். இதையடுத்து கடந்த 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த, பெங்களூரு அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.<br />
<br />
சூப்பர் ஜோடி<br />
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை பதம்பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்-மார்ஷ் ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக கடந்த 2008ல், டெக்கான் அணிக்காக விளையாடிய கில்கிறிஸ்ட்-லட்சுமண் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.<br />
* தவிர இந்த ஜோடி, சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 2006ல், சாமர்சட் அணிக்காக விளையாடிய ஜஸ்டின் லாங்கர்-கேமிரான் ஒயிட் ஜோடி 186 ரன்கள் (எதிர்-குளோவ்சஸ்டர்ஷயர்) சேர்த்தது.<br />
<br />
<b style="color: #33ff33;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #33ff33;">* அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்</b><br />
<br />
மூலவர் : குந்தளேஸ்வரர்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : குந்தளாம்பிகை<br />
தல விருட்சம் : வில்வம்<br />
தீர்த்தம் : கணபதி நதி<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : திருக்கரக்காவல்<br />
ஊர் : திருக்குரக்கா<br />
மாவட்டம் : நாகப்பட்டினம்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
பாடியவர்கள்:<br />
<br />
<br />
திருநாவுக்கரசர்<br />
<br />
தேவாரப்பதிகம்<br />
<br />
ஆல நீழல் அமர்ந்த அழகனார் காலனை உதை கொண்ட கருத்தனார் <br />
கோல மஞ்ஞை களாலும் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே..<br />
<br />
-திருநாவுக்கரசர்<br />
<br />
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.<br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
இங்கு சிவன் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.<br />
<br />
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன், கோஷ்டத்தில் வனதுர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர்.<br />
<br />
இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.<br />
<br />
தலபெருமை:<br />
<br />
<br />
சிவ ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார்.<br />
<br />
அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, "சிவஆஞ்சநேயர்' என்றும், "சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.<br />
<br />
இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.<br />
<br />
சிறப்பம்சம்: அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளு கிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார். <br />
<br />
தல வரலாறு:<br />
<br />
<br />
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார்.<br />
<br />
இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.<br />
<br />
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார்.<br />
<br />
ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் "குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார். <br />
<br />
திருவிழா:<br />
<br />
சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #33ff33;">ஆன்மீகச் சிந்தனை மலர் :<br />
</b><br />
<b style="color: #33ff33;">நல்லவனாக வாழ்வோம்! - குரு நானக்.</b><br />
* உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது? சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும்.<br />
<br />
* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.<br />
<br />
<b style="color: #33ff33;">வினாடி வினா :</b><br />
<br />
வினா - அவசரக் கூட்டம் எப்போது பிறப்பிக்கப்படுகிறது ?<br />
<br />
விடை - பாராளுமன்றம் கூடாத சமயங்களில்.<br />
<br />
<br />
<b style="color: #33ff33;">இதையும் படிங்க :</b><br />
<br />
<b style="color: #33ff33;">அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்</b><br />
<br />
<img alt="17-bael-tree300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=13000b699ee97460&attid=0.2&disp=emb&realattid=ii_13000ae1bdf1b492&zw" title="17-bael-tree300.jpg" /><br />
<br />
இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது.<br />
<br />
இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம்.<br />
<br />
இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.<br />
<br />
அஸ்வமேதயாகம்<br />
<br />
வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.<br />
<br />
வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.<br />
<br />
தங்கமலர் அர்ச்சனை<br />
<br />
சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.<br />
<br />
ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.<br />
<br />
வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..<br />
<br />
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.<br />
<br />
வேடனுக்கு மோட்சம்<br />
<br />
ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை.<br />
<br />
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.<br />
<br />
ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம்.<br />
<br />
அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது.<br />
<br />
கற்பக மூலிகையான வில்வம்<br />
<br />
திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.<br />
<br />
வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.<br />
<br />
இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.<br />
<br />
சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
எப்பொழுது பறிக்கக்கூடாது<br />
<br />
வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு.<br />
<br />
இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.<br />
<br />
<br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-77955794850547815512011-05-17T18:46:00.000+05:302011-05-17T18:46:10.469+05:30இன்றைய செய்திகள் - மே 17 , 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><table cellpadding="0" class="Bs nH iY"><tbody>
<tr><td class="Bu"><br />
</td><td class="Bu"><br />
</td><td class="Bu"><br />
</td></tr>
</tbody></table><div class="nH"><div class=" iE D E"><div class="iH"><div><div class="VP5otc-tOAp0c" tabindex="0">«<b style="color: #6666cc;">முக்கியச் செய்தி :<br />
</b><br />
<b>கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு</b><br />
<br />
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இதைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர்.<br />
<br />
இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர்.<br />
<br />
சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன.<br />
<br />
முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />
<br />
இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.<br />
<br />
ஜெ. ஜெயலலிதாவாகிய நான்<br />
<br />
ஜெயலலிதா எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழி...<br />
<br />
ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,<br />
<br />
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.<br />
<br />
ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.<br />
<br />
அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.<br />
<br />
<br />
<b style="color: #6666cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> பாகிஸ்தானில் சவுதி தூதரக அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை</b><br />
<br />
இஸ்லாமாபாத்: கராச்சியில் சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்கு பாகிஸ்தானில் உள்ள சவுதி தூதரகத்தில் குண்டுகள் வீசப்பட்ட 5 நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.<br />
<br />
சவுதி தூதரக அதிகாரி ஹசன் எம். எம். அல் கதானி அலுவலகத்திற்கு செல்கையில் அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழி மறித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஹசனை சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவரை ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.<br />
<br />
இந்த சம்பவம் பஹ்ரைன் தூதரக்கத்திற்கு அருகில் நடந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி தூதரகம் இறந்தவர் தூதரக அதிகாரி தான் என்று உறுதி செய்துள்ளது.<br />
<br />
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 11-ம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரண்டு குண்டுகளை கராச்சியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் வீசினர். இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை.<br />
<br />
ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதலில் தூதரக வளாகத்திற்குள் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
இந்த தாக்குதல்கள் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு தான் நடந்துள்ளன. பாகிஸ்தானில் இருக்கும் சவுதி அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளை சவுதி துணை வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சௌத் கேட்டுக் கொண்டுள்ளார்.<br />
<br />
*<b> என்ஜினில் தீ: சிங்கப்பூரில் அவசரமாக தரையிங்கிய காதே பசிபிக் விமானம்</b><br />
ஹாங்காங்: காதே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் 2-வது என்ஜினில் தீப்பிடித்ததால் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.<br />
<br />
சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவுக்கு காதே பசிபிக் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலேயே விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.<br />
<br />
இது குறித்து அந்த விமான நிறுவனம் கூறியதாவது,<br />
<br />
தரையிறங்கிய பிறகு சிங்கப்பூர் தீயணைப்பு படையினர் விமானத்தின் 2-வது என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டனர். அதில் இருந்த விமானிகளும், பயணிகளும் சிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் இன்று வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றது.<br />
<br />
<br />
<b>* பாலியல் புகாரில் சிக்கிய ஐ.எம்.எஃப் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு</b><br />
<br />
<img alt="large_241936.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ffbe4123dbf3fd&attid=0.5&disp=emb&realattid=ii_12ffb7526d6a040a&zw" title="large_241936.jpg" /><br />
<br />
நியூயார்க்,மே 16: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவருக்கு நியூயார்க் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் மறுத்துவிட்டது.<br />
<br />
÷ஐஎம்எஃப் அமைப்பின் தலைவராக உள்ளவர் டொமினிக் ஸ்ட்ரஸ்சன்( 62). இவர் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள மன்காட்டன் நகருக்கு சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.<br />
<br />
÷ அப்போது அறைக்கு வந்த ஓட்டல் பணிப்பெண்ணை டொமினிக் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டது. போலீஸôர் வருவதற்குள் டொமினிக் அங்கிருந்து தப்பி நியூயார்க் நகருக்கு சென்றார்.<br />
<br />
÷போலீஸôர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். டொமினிக் பிரான்ஸ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர். அவர் விரைவில் நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்தார். அதற்குள் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் அந்த வாய்ப்பை இழந்து விட்டார்.<br />
<br />
கைது செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக திங்கள்கிழமை அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மெலீஸô ஜாக்சன் வழக்கை விசாரித்தார். தன்மீதான குற்றச்சாட்டுகளை டொமினிக் மறுத்தார்.<br />
<br />
ரூ.5 கோடிக்கு டொமினிக்கு ஜாமீனில் விட வேண்டும் என்று அவரத் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.<br />
<br />
ஆனால், அவர் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பிருப்பதால் வரும் 20-ம் தேதி வரை காவலில் வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை அதே தேதிக்கு ஒத்திவைத்தார்<br />
<br />
*<b> எண்டவர் விண்கலம் புறப்பட்டது</b><br />
<br />
ஹூஸ்டன், மே16: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, எண்டவர் விண்கலம் திங்கள்கிழமை புறப்பட்டது.<br />
<br />
ஆறு விண்வெளி வீரர்களுடன் எண்டவர் விண்கலம்,விண்வெளியிலுள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்குத் தேவையான 2 பில்லியன் டாலர் மதிப்பிலானப் பொருட்களை எடுத்து செல்கிறது. 16 நாட்களுக்கு பிறகு அது பூமிக்கு திரும்பும். 25 முறை விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ள எண்டவருக்கு இதுவே கடைசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்திற்கு பிறகு அதற்கு ஓய்வு கொடுக்க நாஸô விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இது,எண்டவர் விண்கலத்தின் கடைசி பயணம் என்பதால், அது விண்ணுக்கு செலுத்தப்படுவதை காண கென்னடி விண்வெளி மையத்துக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். கடந்த மாதம் எண்டவர் விண்கலத்தை செலுத்த முயன்ற போது,தொழில் நுட்ப கோளாறு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது<br />
<br />
<b>* மிகப்பெரிய தங்கநாணயம் ஏலம் </b><br />
<br />
பீஜிங்: சீனாவின் மிகப்பெரிய தங்க நாணயம் 1.18 மில்லியன் டாலர் அளவுக்கு ஏலம் போனது. சீனாவின் சீன கார்டியன் ஏலம் எனும் நிறுவனம் , அந்நாட்டு அரசினால் கடந்த 2000-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கநாணயத்தை விலைக்கு வாங்கியது. இந்த நாணயம் சுமார் 10 கிலோ எடை கொண்டது. 99.9 சதவீதம் தூய தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நாணயம் நேற்று ஏலம்விடப்படடது. 22 ரவுண்டுகளுக்குபின் 1.18 மில்லியன் டாலர் ஏலம் போனது. இதன் உண்மையான மதிப்பு 30 ஆயிரம் யுவான் ஆகும்.<br />
<b style="color: #6666cc;"><br />
தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> 2ஜி வழக்கு: வருமான வரித்துறை தூங்குகிறதா? உச்ச நீதிமன்றம்</b><br />
<br />
புது தில்லி, மே 16: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.<br />
<br />
இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதன் மூலம் பெற்ற பணத்துக்கு முறையாக வருமான வரி செலுத்தாதது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.<br />
<br />
அப்போது இந்த வரி ஏய்ப்பு விவகாரம் 2008-ஆம் ஆண்டே தெரியவந்தும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர்தான் வருமான வரித்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது. இவ்வளவு தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.<br />
<br />
வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் விவேக் தங்கா, இந்த தாமத்தை நியாயப்படுத்தி வாதாடினார். மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் விசாரணையில் தடைகளை ஏற்படுத்தின என்று கூறினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களின் நகல்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.<br />
<br />
<br />
<br />
எனினும் நீதிபதிகள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினர். வருமான வரித்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் மீது முழுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று கூறினர்.<br />
<br />
÷இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய முன்றும் தங்களுக்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.<br />
<br />
மோரீஷஸ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி ஒரு நிறுவனம் அந்த நாட்டில் வரி செலுத்தி விட்டால், நமது நாட்டில் வரி செலுத்த வேண்டியதில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட 2ஜி ஒதுக்கீடு பெற்ற பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மோரீஷஸ் மூலமாக வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளை விற்று வரிவிலக்கு பெற்றுள்ளன.<br />
<br />
<br />
*<b> கர்நாடக விவகாரம்: அரசியல் சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது- பிரதமர்</b><br />
புதுதில்லி, மே 16: கர்நாடக விவகாரத்தில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது என்று அத்வானி தலைமையில் தன்னைச்சந்தித்த தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.<br />
<br />
கர்நாடகத்தைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்வானி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கை அத்வானியும் கூட்டணி கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.<br />
<br />
அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அத்வானி கூறுகையில், கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், அரசியல் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். அவரது நடவடிக்கைகளும், செயல்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக உள்ளது. எனவே பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். கர்நாடக அரசை கலைக்க பரத்வாஜ் அளித்துள்ள பரிந்துரையை ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினோம்.<br />
<br />
இதை மிகவும் கவனத்தோடு கேட்டுக் கொண்ட பிரதமர், "கர்நாடக ஆளுநர் அனுப்பிய பரிந்துரை என்னும் தனது அலுவலகத்திற்கு வரவில்லை. அது உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது' என்றார்.<br />
<br />
மேலும், பிரதமர் கூறுகையில் "கர்நாடக விவகாரத்தில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது' என்று பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார் அத்வானி.<br />
<br />
மத்திய அரசு அவசரப்படாது: இதற்கிடையே கர்நாடக அரசை கலைக்கக்கோரி ஆளுநர் பரத்வாஜ் அனுப்பியுள்ள பரிந்துரை மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்,<br />
<br />
கர்நாடக ஆளுநரின் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஆளுநர் அவசரமாக இந்த பரிந்துரையை அனுப்பிவைத்துள்ளார். உள்துறை இந்த பரிந்துரையை பரிசீலிக்கும். கர்நாடக ஆளுநருக்கும், அம்மாநில முதல்வருக்குமிடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருப்பதை மத்திய அரசு அறிந்துள்ளது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த<br />
<br />
2 நாட்களிலேயே பரத்வாஜ் இந்த பரிந்துரையை அனுப்பியுள்ளார். எனவே கர்நாடகத்தைப் பொறுத்தவதவரை ஆளுநரின் அறிக்கை அடிப்படையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் மத்தியஅரசு எடுத்துவிடாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
குடியரசுத் தலைவர் முன் இன்று பேரணி: இதற்கிடையே சட்டப்பேரவையில் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேரவைக் கூட்டத்தைக்கூட்டும்படி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதை ஆளுநர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து குடியரசுத்தலைவர் முன் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 121 பேருடன் திங்கள்கிழமை இரவு தில்லி வந்து சேர்ந்தார்.<br />
<br />
தில்லியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குடியரசுத் தலைவரைச் சந்திக்க எடியூரப்பா தலைமையிலான குழுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சிதம்பரம் ஆலோசனை: இதற்கிடையே ஆளுநர் அனுப்பியுள்ள பரிந்துரையை அடுத்து கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.<br />
<br />
*<b> ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை விவகாரம்: தில்லியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் சந்திப்பு<br />
<br />
<img alt="smk.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ffbe4123dbf3fd&attid=0.1&disp=emb&realattid=ii_12ffb7d24cc7a437&zw" title="smk.jpg" /></b><br />
புதுதில்லி, மே 16: இந்தியாவில் 3 நாள் பயணமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் திங்கள்கிழமை தில்லி வந்தார்.<br />
<br />
இந்தப் பயணத்தின்போது இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் பலரை அவர் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.<br />
<br />
விடுதலைப் புலிகளுடனான போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பதால் எழுந்திருக்கும் நெருக்கடியான நிலையில், தங்களுக்கு ஆதரவாக இருக்கும்படி இந்தியாவிடம் கோருவதற்காக அவர் வந்திருப்பதாகத் தெரிகிறது.<br />
<br />
எனினும் இது தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.<br />
<br />
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த அவர் இருதரப்பு, பிராந்திய விஷயங்கள் குறித்துப் பேசினார்.<br />
<br />
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.<br />
<br />
தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கைக் கடற்படையினர் அவர்கள் மீது அத்துமீறி நடந்துகொள்வது குறித்து சுட்டிக்காட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்களைக் கையாளும்போது இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் வலியுறுத்தினார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.<br />
<br />
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் மிகவும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் என்று தெரிவித்தார்.<br />
<br />
தனது இந்தியப் பயணத்தின்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் பெரீஸ் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது<br />
<br />
<br />
*<b> ராணுவத் தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை. *</b><br />
புதுதில்லி, மே 16: பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு உஷார்நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தளபதிகள் உள்ளிட்டோரிடம் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.<br />
<br />
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின் லேடனை அமெரிக்க கமாண்டோ படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர்.<br />
<br />
இதையடுத்து பின் லேடனுக்கு ஆதரவாக இருந்ததாக பாகிஸ்தான் மீது உலக நாடுகள் குற்றம்சாட்டி வரு<br />
<br />
கின்றன.<br />
<br />
இதையடுத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.<br />
<br />
இதை உறுதி செய்வது போல, பாகிஸ்தான் ஐ.எ.ஐ. உளவு அமைப்பின் தலைவர் சுஜா பாஷா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அபோட்டாபாத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுபோல, இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பதிலடி கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், இந்தியாவுக்குள் சில தாக்குதல் இலக்குகளுக்கு குறி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.<br />
<br />
இந்த நிலையில், இந்தியாவின் ராணுவத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மற்றும் ராணுவத் தளபதிகள் கலந்து கொண்ட கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடந்தது.<br />
<br />
தரைப்படைத் தலைமைத் தளபதி, வி.கே.சிங், விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக், கடல்படைத் தலைமைத் தளபதி நிர்மல் வர்மா, பாதுகாப்புத்துறைச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், டிஆர்டிஓ தலைவர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.<br />
<br />
90 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான், இந்திய-சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.<br />
<br />
<b>* குவாஹாட்டி, மே 16: அசாம் மாநில முதல்வராக தருண் கோகோய் புதன்கிழமை (மே 18) பதவியேற்கவுள்ளார். தொடர்ந்து 3-வது தடவையாக அவர் முதல்வர் பதவியில் அமரவுள்ளார்.<br />
<br />
<img alt="tharunkoka.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ffbe4123dbf3fd&attid=0.4&disp=emb&realattid=ii_12ffb77165e9bec2&zw" title="tharunkoka.jpg" /><br />
</b><br />
குவாஹாட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மாநில ஆளுநர் ஜானகி வல்லப பட்நாயக், தருண் கோகோய்க்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணத்தை செய்து வைப்பார்.<br />
<br />
இதனிடையே, செவ்வாய்க்கிழமை அந்த மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கட்சியின் பேரவைத் தலைவராக தருண் கோகோய் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அசாம் மாநிலத்துக்கான கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் திக்விஜய் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
முதல்வர் பதவி ஏற்றபின் தமது அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்களின் பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு தருண் கோகோய் தில்லிக்குச் செல்வார். இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இறுதி செய்வார்.<br />
<br />
*<b>கேரள அமைச்சரவை நாளை பதவியேற்பு<br />
<br />
<img alt="umansan.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ffbe4123dbf3fd&attid=0.3&disp=emb&realattid=ii_12ffb7488b2ebbc0&zw" title="umansan.jpg" /></b><br />
திருவனந்தபுரம், மே16: கேரள மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து திங்கள்கிழமை பேச்சு வார்த்தை நடத்தி முடித்தது காங்கிரஸ் கூட்டணி.<br />
<br />
சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை (மே 18) பதவியேற்க உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்கும் எனத் தெரிகிறது.<br />
<br />
கூட்டணியில் 20 பேரவை உறுப்பினர்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. தங்களுக்கு 5 அமைச்சர் பதவிகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது இக்கட்சி.<br />
<br />
மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ் -மாணி பிரிவு 4 அமைச்சர் பதவி கேட்டு வருகிறது. அத்துடன் பேரவை துணைத் தலைவர் பதவியும் தர வேண்டும் எனவும் கூறியுள்ளது. இக்கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இக்கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளே கிடைக்கும் எனத் தெரிகிறது. முஸ்லிம் லீக்கைப் பொருத்தவரை, அக்கட்சி விரும்பும் துறைகள் ஒதுக்கப்பட்டால், அமைச்சர்கள் எண்ணிக்கையில் பிடிவாதம் பிடிக்காது எனக் கூறப்படுகிறது. முன்னணிக் கட்சிகளிடையே திங்கள்கிழமை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து, ஒரே எம்.எல்.ஏ கொண்ட கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தரலாம் என முடிவெடுக்கப்பட்டது.<br />
<br />
இதன்படி, கேரள காங்கிரஸ்-ஜேக்கப் கட்சியின் டி.எம்.ஜேக்கப், கேரள காங்கிரஸ்- பாலகிருஷ்ணன் பிரிவைச் சேர்ந்த கே.பி. கணேஷ்குமார், ராஷ்டிரீய சோஷியலிஸ்ட் கட்சி- பேபி பிரிவைச் சேர்ந்த ஷிபு பேபி ஜான் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.<br />
<br />
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, அக்கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதற்கு கட்சி மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அமைச்சர்கள் பெயர் வெளியிடப்படும்.<br />
<br />
*<b> கனிமொழி, ராசாவின் ஆடிட்டர்களிடம் சிபிஐ விசாரணை</b><br />
புது தில்லி, மே 16: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை விசாரித்து வரும் சி.பி.ஐ. திங்கள்கிழமை கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் கணக்குத் தணிக்கையாளர்களிடம் (ஆடிட்டர்) விசாரணை நடத்தியது.<br />
<br />
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூட்டுச் சதியாளர் என குற்றம் சாட்டப்பட்டார். கனிமொழி ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 7 மற்றும் 11-ன் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.<br />
<br />
இந்நிலையில், திங்கள்கிழமை கனிமொழியின் கணக்குத் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ரத்தினத்தை சி.பி.ஐ. விசாரணை செய்தது. டிபி ரியாலிட்டி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதாகக் கூறப்பட்ட பணம் குறித்து ரத்தினத்திடம் விசாரணை நடத்தியது. கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளுக்கும் ரத்தினம்தான் தணிக்கை அதிகாரியாக உள்ளார்.<br />
<br />
இந்நிலையில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் கணக்குத் தணிக்கையாளர் வி. கணபதியையும் சி.பி.ஐ. திங்கள்கிழமை விசாரணை செய்தது.<br />
<br />
சென்னை தேனாம்பேட்டையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நில விற்பனை தொடர்பாக கணபதி விசாரணை செய்யப்பட்டார். இந்த நில பேரத்தில் 2ஜி ஊழல் பணம் செலுத்தப் பட்டிருக்கலாம் என சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.<br />
<br />
2ஜி ஊழல் மூலம் நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தலைமைத் தணிக்கை அதிகாரி அறிக்கையளித்திருந்தார். தில்லியில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது<br />
<br />
<b style="color: #6666cc;">மாநிலச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* தேவேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச் செயலாளர்</b><br />
<br />
<img alt="secdeventhira.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ffbe4123dbf3fd&attid=0.2&disp=emb&realattid=ii_12ffb75780005e9c&zw" title="secdeventhira.jpg" /><br />
<br />
சென்னை, மே 16: தமிழகத்தில் புதிய அரசின் தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கி பொறுப்பேற்றுள்ளார். அவர் இப்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.<br />
<br />
அதேபோன்று, முதல்வரின் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறை, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை என பல முக்கிய துறைகளின் செயலாளர் பொறுப்புகளை வகித்தவர் சாரங்கி. தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ். ஸ்ரீபதி ஓய்வு பெற்ற போது, அடுத்த தலைமைச் செயலாளர்களாக வருபவர்களின் பட்டியலில் சாரங்கி பெயர் இருந்தது. ஆனால், மாலதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
முதல்வரின் செயலாளர்கள்: முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளராக வெங்கடரமணனும், வேளாண் துறை செயலாளராக ராம மோகன ராவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
தலைமைச் செயலாளராக இருந்த மாலதி இப்போது புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
பேரவைச் செயலாளர் யார்?: சட்டப் பேரவைச் செயலாளராக இருந்த எம்.செல்வராஜ் அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவர் பணி நீட்டிப்பில் இருந்தார். அவரது பணி மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டப் பேரவைச் செயலராக ஜமாலுதீன் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.<br />
<br />
*<b> பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: முதல் நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்</b><br />
*<b> தமிழகத்தில் முதல்முறையாக பழங்குடியின வன அதிகாரி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி!</b><br />
கோவை, மே 16: தமிழகத்தில் முதல்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த கே.கே.சரவணக்குமார், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர், 815-வது ரேங்க் பிடித்துள்ளார்.<br />
<br />
ஏற்கெனவே, இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்.) தேர்வில் வெற்றி பெற்று, நாகலாந்து மாநிலத்தில் வன அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயி காமராஜ், ரம்பா தம்பதியின் மகன் கே.கே.சரவணக்குமார் (32). கோட்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு வரையிலும், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வரையிலும் படித்தார்.<br />
<br />
இதையடுத்து, 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படித்தார். இதையடுத்து, புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் எம்.எஸ்சி. படித்து முடித்துவிட்டு, பி.எச்டி. ஆய்வை மேற்கொண்டார். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுக்குத் தயாராகி வந்தார். இதனால், பி.எச்டி. ஆய்வை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.<br />
<br />
கடந்த 2004-2005 ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் நேர்காணல் வரை சென்றார். ஆனால், வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் 2007-ல் ஐ.எஃப்.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.<br />
<br />
பின்னர், டேராடூன் மையத்தில் 2 ஆண்டு பயிற்சி முடித்துவிட்டு, நாகலாந்து மாநில பிரிவில் திம்மாபூர் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக (டி.எஃப்.ஓ.) பணிபுரிந்து வருகிறார். ஐ.ஏ.எஸ். ஆர்வம் இவரை விட்டு வைக்கவில்லை. 2010-ல் மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இப்போது 815-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.<br />
<br />
இது குறித்து, நாகலாந்தில் வன அலுவலராகப் பணிபுரிந்து வரும் கே.கே.சரவணக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியது: புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.எஸ்சி. படிக்கும்போது, அகில இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு எழத வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதன்பேரில் கடுமையாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால், நேர்காணலில் தோற்று வெளியேறினேன். கடந்த 2007-ல் ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, நாகலாந்தில் மாவட்ட வன அலுவலராகப் பணிபுரிந்து வருகிறேன்.<br />
<br />
மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வு பாடத்திட்டம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டதால், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி மூலம் பாடங்களுக்கு தேவையான புத்தகங்களை பெற்று படிக்க ஆரம்பித்தேன். இப்போது, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு ஐ.ஆர்.எஸ். அல்லது ஐ.பி.எஸ். கிடைக்க வாய்ப்புள்ளது.<br />
<br />
இதில் ஏதாவது ஒரு சர்வீஸில் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், ஐ.எஃப்.எஸ். பணியை விட்டுவிட உள்ளேன் என்றார் கே.கே.சரவணக்குமார்.<br />
<br />
*<b> தமிழக நிதி நிலவரம்: ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்</b><br />
<br />
சென்னை, மே 16: தமிழகத்தின் 2009-10 ஆம் ஆண்டின் நிதி நிலவரம், மாநில சிவில் நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய தணிக்கைத் துறை, ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவிடம் வழங்கியுள்ளது.<br />
<br />
இந்த அறிக்கை சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும். அரசியல் சட்டத்தின் படி, மாநில அரசின் கணக்குகள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் தணிக்கைத் துறை சமர்ப்பிக்க வேண்டும்.<br />
<br />
<br />
<b style="color: #6666cc;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>பங்குச் சந்தையில் 186 புள்ளிகள் சரிவு</b><br />
<br />
மும்பை, மே 16: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 186 புள்ளிகள் சரிந்தது. கடந்த வாரம் சனிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் வர்த்தகம் முடிவில் பங்குச் சந்தை குறியீட்டெண் 18,345 புள்ளிகளாக இருந்தது.<br />
<br />
2008-ம் ஆண்டு ஜூன் மாத்ததுக்குப் பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.<br />
<br />
தேசிய பங்குச் சந்தையும் சரிவிலிருந்து தப்பவில்லை. அங்கு 45 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,499 புள்ளிகளானது.<br />
<br />
ஆசிய பங்குச் சந்தையிலும் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற-இறக்கம் ஆசிய பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனம் கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் ஜப்பான், தென்கொரியா பங்குச் சந்தைகளின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டதால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. தென் கொரியா, தைவான், சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் 0.73 சதவீதம் முதல் 1.36 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.<br />
<br />
கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தையில் பெட்ரோல் விலையேற்றம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.<br />
<br />
சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அவ்விதம் உயர்த்தப்பட்டால் அது பங்குச் சந்தையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்த போதிலும், பெட்ரோல் விலை உயர்வு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட விவகாரங்களின் தாக்கம் அடுத்த மாதம் தெரியும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.<br />
<br />
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 2.72 சதவீதம் சரிந்து ரூ. 1,300.85-க்கும், டாடா மோட்டார்ஸ் 0.23 சதவீதம் சரிந்து ரூ. 1,208.15-க்கும் விற்பனையாயின. எரிவாயு விலையை 8.5 சதவீதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உயர்த்தியதே இதற்குக் காரணமாகும். வங்கித் துறையில் எஸ்பிஐ பங்குகள் 1.20 சதவீதம் சரிந்து ரூ. 2,617.30-க்கும், ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் 1.70 சதவீதம் சரிந்து ரூ. 2,145.61-க்கும், டிஎல்எப் பங்கு விலை 2.58 சதவீதம் சரிந்து ரூ. 226.20-க்கும் விற்பனையானது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை 3.20 சதவீதம் சரிந்து ரூ. 84.75-க்கும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்கு விலை 2.10 சதவீதம் சரிந்து ரூ. 598.10-க்கும் விற்பனையானது.<br />
<br />
முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.46 சதவீதம் சரிந்து ரூ. 944.30-க்கும், இன்ஃபோசிஸ் பங்கு விலை 1.05 சதவீதம் சரிந்து ரூ. 2,849.75-க்கும் விற்பனையானது.<br />
<br />
ஹீரோ ஹோண்டா, பார்தி ஏர்டெல், பிஹெச்இஎல், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ஹெச்டிஎப்சி, ஜிண்டால் ஸ்டீல், ஐடிசி ஆகிய நிறுவனப் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.<br />
<br />
மொத்தம் 1,713 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,052 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,112.54 கோடியாகும்.<br />
<br />
<br />
<b style="color: #6666cc;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
கிரிக்கெட் <br />
<br />
* நான்காவது ஐ.பி.எல்., தொடர்: கிங்ஸ்லெவன் பஞ்சாப்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (தரம்சாலா)<br />
<br />
மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.<br />
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 62வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா "பீல்டிங்' தேர்வு செய்தார்.<br />
விக்கெட் சரிவு:<br />
புனே அணிக்கு ஜெசி ரைடர், மனிஷ் பாண்டே இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். டுமினி வீசிய முதல் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, ரைடர் ஒரு இமாலய சிக்சர் அடித்தனர். ஸ்டைன் வேகத்தில் ரைடர்(18) வெளியேறினார். இதற்கு பின் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஓஜா சுழலில் கங்குலி "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ஓஜா பந்தில் பாண்டேவும்(23) வீழ்ந்தார்.<br />
மிஸ்ரா ஜாலம்:<br />
போட்டியின் 8வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா இரட்டை "அடி' கொடுத்தார். 4வது பந்தில் உத்தப்பாவை(4) வெளியேற்றினார். 5வது பந்தில் மன்ஹாஸ்(0) போல்டானார். அடுத்து வந்த பெர்குசன் தடுத்து ஆட மிஸ்ராவின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. அப்போது புனே அணி 5 விக்கெட்டுக்கு 45 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.<br />
பின் பெர்குசன், கேப்டன் யுவராஜ் இணைந்து போராடினர். ஓஜா சுழலில் யுவராஜ் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். டுமினி வலையில் பெர்குசன்(11) சிக்கினார். கிறிஸ்டியன் பந்தில் யுவராஜ்(23) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.<br />
கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் கைகொடுத்தார். அமித் மிஸ்ரா, ஓஜா பந்துகளில் சிக்சர்களை பறக்க விட்ட இவர் 37 ரன்கள் எடுத்தார். பார்னல்(16) ரன் அவுட்டானார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்தது.<br />
அசத்தல் ஆட்டம்:<br />
சுலப இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு ஷிகர் தவான், சன்னி சோகல் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். மிட்சல் மார்ஷ் ஓவரில் சோகல் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் பந்தில் தவான்(28) அவுட்டானார். ராகுல் சர்மா சுழலில் சோகல்(34) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சங்ககரா(25), ராகுல் சர்மா பந்தில், விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் "கேட்ச்' கொடுத்தார். "அவுட்' என தெரிந்ததும், அம்பயரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் தானாகவே வெளியேறி "ஜென்டில்மேனாக' நடந்து கொண்டார் சங்ககரா.<br />
பின் கிறிஸ்டியன், டுமினி இணைந்து நம்பிக்கை தந்தனர். யுவராஜ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த டுமினி 23 ரன்கள் எடுத்தார். பார்னல் பந்தில் சிப்லி ஒரு அசத்தல் பவுண்டரி அடிக்க, டெக்கான் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது.<br />
இத்தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை புனே அணி இழந்தது.<br />
ஆட்ட நாயகன் விருதை அமித் மிஸ்ரா வென்றார்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b style="color: #6666cc;">ஆன்மீகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b style="color: #6666cc;">அருள்மிகு சவுமியநாராயணபெருமாள் திருக்கோவில்<br />
</b><br />
மூலவர் : சவுமியநாராயணர்<br />
உற்சவர் : -<br />
அம்மன்/தாயார் : திருமாமகள்<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : திருக்கோட்டியூர்<br />
ஊர் : திருகோஷ்டியூர்<br />
மாவட்டம் : சிவகங்கை<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
பாடியவர்கள்: <br />
<br />
மங்களாசாஸனம்<br />
<br />
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்<br />
<br />
கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே.<br />
<br />
-பெரியாழ்வார் <br />
<br />
தல சிறப்பு: <br />
<br />
மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.<br />
<br />
அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது. <br />
<br />
தலபெருமை: <br />
<br />
<br />
சவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு "பிரார்த்தனை கண்ணன்' என்று பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.<br />
<br />
விளக்கு நேர்த்திக்கடன்: தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். "ஓம்', "நமோ', "நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.<br />
<br />
மகாமக கிணறு: புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.<br />
<br />
ராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, "யார்?' என்று கேட்க, "நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,'' என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, "ஓம் நமோநாராயணாய' என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி "நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்' என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானு<div dir="ltr"><wbr></wbr>ஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு "கல்திருமாளிகை' என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.<br />
<br />
<br />
தல வரலாறு: <br />
<br />
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியரும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்றும் பெயர் பெற்றது. <br />
<br />
சிறப்பம்சம்: <br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.<br />
<br />
திருவிழா: <br />
<br />
மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்டஏகாதசி, நவராத்திரி.<br />
<br />
திறக்கும் நேரம்: <br />
<br />
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். <br />
<br />
<br />
<b style="color: #6666cc;">ஆன்மீகச் சிந்தனை மலர் </b>:<br />
<br />
<b style="color: #6666cc;">தடைகளை வெல்ல வழி - சுவாமி விவேகானந்தர்.</b><br />
‘மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள். <br />
<br />
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது அதைவிட மிக நல்லதாகும்.<br />
<br />
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத் தன்மை குடி கொண்டிருக்கிறது,உள்ளேயும் வெளியேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வீகத் தன்மையை மலரச் செய்வதுதான் முடிவான லட்சியமாகும்.<br />
<br />
<br />
<b style="color: #6666cc;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா </b>- ஒரு மசோதா எப்போது சட்டமாகிறது ?<br />
<br />
<b>விடை</b> - ஜனாதிபதியின் கையெழுத்தைப் பெற்ற பிறகு.<br />
<br />
<b style="color: #6666cc;">இதையும் படிங்க :</b><br />
<br />
ஜெய்ப்பூர் மன்னராக 12 வயது சிறுவன் !<br />
<br />
<img alt="E_1305193378.jpeg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ffbe7f5a4b7b3d&attid=0.1&disp=emb&realattid=ii_12ffbd8158122b2e&zw" title="E_1305193378.jpeg" /><br />
<br />
இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது; ஆனாலும், அரச வம்சங்கள் இன்னமும் உள்ளன. கோட்டைகள், அரண்மனைகள் என, ஏராளமான சொத்துக்கள் அரச வம்சத்திடம் உள்ளன. ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இழந்து விட்ட போதிலும், பரம்பரை பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னமும் விடவில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மன்னராக, 12 வயது சிறுவன் பத்மநாபசிங் என்பவர் பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன் ஜெய்ப்பூர் மன்னராக, எண்பது வயது சவாய் பவானிசிங் என்பவர் இருந்தார். ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்தில் பதவி வகித்து வந்த அவர், ஏப்., 17ம் தேதி மரணமடைந்தார். துக்க தினம் முடிந்த பின், ஏப்., 27ம் தேதி, ஜெய்ப்பூர் அரண்மனையில், மன்னராக, முறைப்படி பொறுப்பேற்றார் பத்மநாபசிங். பவானிசிங்கின் மகள் தியா குமாரி; அவரது மகன்தான் பத்மநாபசிங். நவம்பர் 2002ல், தன் வாரிசாக பத்மநாபசிங்கை அறிவித்தார் பவானிசிங். இப்போது, கச்வாகா ராஜ்புத் வம்ச மகாராஜாவாக பத்மநாபசிங் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர் நகரில் உள்ள பல அரண்மனைகள், கோட்டைகள் இவருக்கு சொந்தம்.<br />
<div dir="ltr"><div><br />
</div><div>நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.</div></div></div></div></div></div></div></div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-66590073931888605582011-05-16T08:54:00.000+05:302011-05-16T08:54:09.846+05:30இன்றைய செய்திகள் - மே,16 , 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="gmail_quote"><blockquote class="gmail_quote" style="border-left: 1px #ccc solid; margin: 0 0 0 .8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><br />
<div dir="ltr"><b style="color: #3366ff;">முக்கியச் செய்தி :</b><br />
<br />
<b style="color: #3366ff;">ரயில் தண்டவாளம் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு இளைஞருக்கு பாராட்டு</b><br />
திருத்தணி, மே 15: திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை வாலிபர் ஒருவர் பார்த்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.<br />
<br />
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மின்சார ரயில் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழியாக திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தது.<br />
<br />
திருத்தணி தர்மராஜாகோயில் எதிரே உள்ள ஏரியில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வாலிபர் ரமேஷ்(21), ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்்ற போது தண்டவாளம் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, சென்னையில் இருந்து திருத்தணிக்கு வந்துகொண்டிருந்த மின்சார ரயிலைப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சியடைந்தார். உடனே ரமேஷ் தான் அணிந்திருந்த சிவப்புநிற பனியனைக் கழற்றி கொடிபோல் காட்டியும், கூச்சலிட்டும் ரயிலை நிறுத்தினார்.<br />
<br />
பின்னர் ரயில் ஓட்டுநர் கீழே இறங்கிவந்து ரயில் தண்டவாளம் விரிசலடைந்தது பார்த்து திருத்தணி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர்.<br />
<br />
இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸôர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பெரும் விபத்தில் இருந்து ரயிலை தடுத்து நிறுத்திய வாலிபர் ரமேஷை திருத்தணி போலீஸôரும், ரயில்வே நிர்வாகத்தினரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இதனால் திருத்தணி - அரக்கோணம் இடையே 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. <br />
<br />
<b style="color: #3366ff;">உலகச் செய்தி மலர் </b>:<br />
<br />
<b>* இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். ஒத்திகை'</b><br />
இஸ்லாமாபாத், மே 15: மற்றுமொரு அபோடாபாத் சம்பவத்தைப் நிகழ்த்திப் பார்க்க இந்தியா முயற்சிக்குமானால், பாகிஸ்தான் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும். அதற்காக இந்தியாவில் சில இடங்களை குறித்து வைத்துள்ளோம். மேலும் அதற்கான ஒத்திகையையும் நடத்திப் பார்த்துள்ளோம் என்று அந்நாட்டின் ஐஎஸ்ஐ உயரதிகாரி அஹமத்சுஜா பாஷா எச்சரித்துள்ளார்.<br />
<br />
பாகிஸ்தானின் செனட், தேசிய சபை கூட்டுக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஷா இவ்வாறு இந்தியாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
அபோடாபாத் நகரில் பின் லேடன் வசித்து வந்தது, அவரை அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது என எதையுமே முன்கூட்டி கண்டுபிடிக்க தவறியதற்காக ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு உள்ளானவர் தான் பாஷா.<br />
<br />
*<b> பின்லேடன் உடலை எடுத்துச் சென்ற போர்க்கப்பலை பார்க்க அனுமதி<br />
<br />
<img alt="kappal.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.1&disp=emb&realattid=ii_12ff667fc3671759&zw" title="kappal.jpg" /></b><br />
வாஷிங்டன், மே 15: அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.<br />
பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்று அவரது உடலை ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பின்லேடன் உடல் கார்ல் வின்சன் போர்க் கப்பல் மூலமே கடலுக்குள் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.<br />
<br />
இதனால் இந்த போர்க்கப்பலை பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதை புரிந்து கொண்ட அமெரிக்கா கப்பலைப் பார்க்க அனுமதி அளித்துள்ளது. கார்ல் வின்சன் கப்பல் இப்போது பிலிப்பின்ஸின் மணிலா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் 3-வது பெனிங்கோ அகியூனோ, அவரது அமைச்சரவை சகாக்கள், முக்கிய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் கார்ல் வின்சன் கப்பலை சனிக்கிழமை பார்வையிட்டனர்.<br />
<br />
இதைத்தொடர்ந்து சில பத்திரிகையாளர்களும் சென்று பார்வையிட்டனர்.<br />
<br />
கப்பலைப் பார்வையிட வருபவர்கள் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து கப்பலுக்குள் விரிவாக ஏதும் விவாதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இதனால் பார்வையாளர்கள் கார்ல் வின்சன் கப்பலை அமைதியாகப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.<br />
<br />
பின்லேடனின் உடலை எடுத்துச் சென்ற கப்பல் என்பதால் அதன் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கோபத்தை தீர்த்துக்கொள்ள முயலலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அக்கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b>* சீனாவில் 7 ஆயிரம் கிலோ எடையுள்ள டைனோசரின் எலும்புகள்</b><br />
<img alt="tinosar.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.8&disp=emb&realattid=ii_12ff66776b969836&zw" title="tinosar.jpg" /><br />
<br />
பெய்ஜிங், மே 15: சீனாவில் 7 ஆயிரம் கிலோ எடையுள்ள பிரமாண்டமான டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு சாங்டாங் பகுதியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த எலும்புகளை கண்டெடுத்துள்ளனர்.<br />
<br />
÷இவை மிகவும் பிரமாண்டமான எலும்புகளாக உள்ளன. டைசோனரின் மண்டை ஓடு, மேல் தாடை ஆகியவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை சுமார் 11 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரத்துடன் மொத்தம் 7 ஆயிரம் கிலோ எடையுடன் உள்ளன.<br />
<br />
÷இப்பகுதியில் இதுபோன்ற பல படிமங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், ஆனால் அவை சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.<br />
<br />
இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசரின் எலும்புகளைப் பார்க்கும் போது அவை மிகவும் பிரமாண்டமான உருவத்தில் இருந்திருக்க வேண்டும். முன்கால்கள் உயரம் குறைந்தவை, மிக நீண்ட தலை, தாடையைக் கொண்ட டைனோசர் வகைகள் இங்கு வாழ்ந்துள்ளன.<br />
<br />
÷இவை டைரனொசோரஸ் எனப்படும் டி ரெக்ஸ் இனத்தைச் சேர்ந்தவை. 65 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளன. இதே வகையைச் சேர்ந்த டைனோசர்களின் படிமங்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கிடைத்துள்ள படிமங்களைவிட இவை அளவில் பெரியது.<br />
<br />
÷வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற டைனோசர்கள் வாழ்ந்துள்ளன. இவற்றின் முன்னங்கால்களில் இரண்டு விரல்களே இருக்கும். ஆனால் பிரமாண்டமான தலையும், தாடைகளும் மிகவும் பலம் வாய்ந்தவையாக இருந்துள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் சீன செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
÷உலகிலேயே சீனாவின் சுசியாங் பகுதியில்தான் அதிக அளவில் டைனோசரின் எலும்புகள் கிடைத்து வருகின்றன. 1960-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 10 முறை அங்கிருந்து டைனோசரின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகை டைனோசர்கள் அங்கு வாழ்ந்துள்ளன.<br />
<br />
<b>* பின்லேடன் ஆதரவாளர்கள் எந்நேரத்திலும் தாக்கலாம்?அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு</b><br />
சிகாகோ, மே 15: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றுவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.<br />
<br />
பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்லேடனின் எதிர்காலத் திட்டம் குறித்த ஆவணங்களையும் அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் கைப்பற்றினர். அதன் மூலம் இரட்டை கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான்று (செப்டம்பர் 11) அமெரிக்கா மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அல்-காய்தா திட்டமிட்டிருந்தது அம்பலமானது.<br />
<br />
அப்படி நடத்தவிருக்கும் தாக்குதல் அமெரிக்காவையே நிலைகுலைய வைப்பதாக இருக்கும் வகையில் பின்லேடன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்லேடன் இறந்தாலும் அவரது ஆசையை, திட்டத்தை அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.<br />
<br />
நாட்டின் மத்தியில் அமைந்துள்ள சிகாகோ நகரைத் தாக்குவதே அல்-காய்தாவின் நீண்டகாலத் திட்டமாக இருந்து வருகிறது. நகரில் உயரமான கட்டடங்கள் அமைந்துள்ளதால் தாக்குவதற்கு எளிது என்பதால் அவர்கள் இந்நகரை தேர்ந்தெடுத்து பல முறை தாக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.<br />
<br />
இருப்பினும் சிகாகோவை தாக்க மீண்டும் முயற்சிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அந்நகரின் மூலை முடுக்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
அல்-காய்தாவினரிடம் இருந்து சிகாகோ நகருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை. இருப்பினும் நகரை யார் தாக்க நினைத்தாலும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுக்கப்படும். உள்ளூர் போலீஸôரும், எப்பிஐ அதிகாரிகளும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர். <br />
<br />
இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை என்று சிகாகோ எப்பிஐ பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.<br />
பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்துள்ளார். நாங்கள் அவரை வலைவீசித் தேடியபோதெல்லாம் பாகிஸ்தான் வாயைத் திறக்கவில்லை. பின்லேடனுக்கு பாகிஸ்தான் உதவியதை அந்நாட்டு புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.<br />
<br />
""அல்-காய்தாவிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உஷாராகவே உள்ளது.<br />
<br />
நாட்டின் அனைத்துப் பகுதியுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
பாதுகாப்புப் பிரிவுகளுடன் உளவு அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தால் அவர்கள் தப்ப முடியாது'' என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் மாத்சாண்ட்லர் தெரிவித்தார்.<br />
<br />
<br />
<b>* மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் பயங்கரவாதிகள்தான்: அமெரிக்கா</b><br />
வாஷிங்டன், மே 15: மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்தான். இதனை மறுத்துக் கூற முடியாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது.<br />
<br />
இதனை கடந்த டிசம்பர் 2008-ஆம் ஆண்டில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் பாகிஸ்தானிடம் கூறியுள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.<br />
<br />
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. அதில் மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தானின் ராணுவ உளவு நிறுவனம் தொடர்ந்து ஆதரவும், உதவியும் அளித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கர் பயங்கரவாதிகள் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பையில் புகுந்து ரயில் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் என முக்கிய இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.<br />
<br />
இதற்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கம்தான் காரணம் என்பதற்கு இந்தியா பல ஆதாரங்களை அளித்தும் தங்கள் நாட்டில் உள்ள அந்த பயங்கரவாத இயக்கத்தினர் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.<br />
<br />
இந்நிலையில் மும்பை தாக்குதலுக்கு லஷ்கர்தான் காரணம் என அப்போதே பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டபின் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.<br />
<br />
எனவே பாகிஸ்தானுக்கு எதிராக மற்ற நாடுகளை அணி திரட்டும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மும்பை தாக்குதல் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடித விவரம் அமெரிக்காவில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.<br />
<br />
<b style="color: #3366ff;">தேசியச் செய்தி மலர்</b> :<br />
<br />
<b>* இன்று கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் முன் அணிவகுப்பு</b><br />
<br />
பெங்களூர், மே 15: பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் முன் அணிவகுப்பு நடத்துவார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.<br />
<br />
கர்நாடகத்தில் உள்ள எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை கலைக்க மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பரிந்துரை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுக்கு ஆதரவாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுக்க முயன்ற பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களையும் சந்திக்க பரத்வாஜ் மறுத்துவிட்டார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அவசரக்கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.<br />
<br />
இக்கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் அக்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் கூறுகையில், ஆளுநரின் முடிவை எதிர்த்தும், கர்நாடக பாஜக அரசுக்கு முழுப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கவும் அனைத்து எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை தில்லி செல்லவுள்ளோம். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாஜக எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்துவர்.<br />
<br />
224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதை குடியரசுத் தலைவர் முன் நிரூபிப்போம் என்று அவர்கள் கூறினர்.<br />
<br />
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேரின் எம்எல்ஏ பதவியை பறித்து பேரவைத் தலைவர் கேஜி போபையா கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டார். அந்த உத்தரவை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.<br />
<br />
<br />
<b>* எரிபொருள் விலை உயர்வு: அமைச்சரவைக் குழு கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது</b><br />
புது தில்லி, மே 15: எரிபொருள்களின் விலை உயர்த்துவது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவைக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.<br />
<br />
அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக அமைச்சரவைக் குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.<br />
<br />
"எரிபொருள்களின் விலை உயத்துவது பற்றி அடுத்த வாரம் கூட உள்ள அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்' என்று, இக்குழுவுக்கு தலைமை ஏற்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்துவது குறித்து முடிவு செய்வதற்காக பணிக்கப்பட்ட அமைச்சரவை குழு, அதற்கான கூட்டத்தை 5 மாநில தேர்தல் முடிவு வரை ஒத்திவைத்திருந்தது.<br />
<br />
இந்நிலையில், தமிழகம் தவிர, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக விலை லிட்டருக்கு ரூ.5 என பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* கர்நாடக சட்டப் பேரவையைக் கலைக்க மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை?</b><br />
பெங்களூர்,மே 15: கர்நாடக சட்டப்பேரவையைக் கலைக்கப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.<br />
<br />
÷16 எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து கர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூர் திரும்பிய ஆளுநர் பரத்வாஜ், உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.<br />
<br />
÷இந்நிலையில், மஜத செய்தி தொடர்பாளர் ஒய்.எஸ்.வி. தத்தா ஆளுநரின் உதவியாளரைச் சந்தித்து, பாஜக அரசைக் கலைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யக் கோரி கடிதம் கொடுத்தார். இதையடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மோட்டம்மா ஆகியோரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி அவரிடம் கடிதம் கொடுத்தனர்.<br />
<br />
÷இந்நிலையில், அரசுக்கு ஆதரவளிப்பதாக புதுதில்லியில் இருந்து தொலைநகல் அனுப்பிய பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும், ஞாயிற்றுக்கிழமை மாலையே பெங்களூர் திரும்பினர். அவர்கள் ஆதரவுக் கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகைக்கு மாலை 6 மணிக்கு வந்தனர்.<br />
<br />
ஆனால், 9 மணி வரை ஆளுநரைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கர்நாடக அரசின் புதுதில்லி பிரதிநிதி தனஞ்செய்குமார் உள்ளிட்ட 5 பாஜக தலைவர்களை மட்டும் உள்ளே அனுமதித்த ஆளுநர், அதிருப்தி எம்எல்ஏக்களின் கடிதத்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.<br />
<br />
சட்டப்பேரவையைக் கலைக்கப் பரிந்துரை: இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளபடி மாநிலத்தில் அரசியலமைப்புச்சட்டம் சீர்குலைந்துள்ளதால், கர்நாடக சட்டப்பேரவையைக் கலைக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக நம்பத்தகுந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடிதத்ததை ஆளுநரின் உதவியாளர் திவாரி, இரவு 8 மணிக்கு புதுதில்லிக்கு கொண்டு சென்றதாகத் தெரிகிறது.<br />
<br />
குடியரசுத் தலைவருக்கு எடியூரப்பா கடிதம்: ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக ஆட்சேபித்துள்ள முதல்வர் எடியூரப்பா, அப்படி ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதனை ஏற்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.<br />
<br />
அதில், 11 அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு தனக்கிருப்பதாகவும், சட்டப்பேரவையில் 121 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அரசியலில் நடந்து வரும் இந்த திடீர் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.<br />
<br />
*<b> திருமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு: சணல், காகிதப் பையில் லட்டு</b><br />
திருப்பதி,மே.15: திருமலை கோவில் நிர்வாகம் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.<br />
இதன் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு பிளாஸ்டிக் கவரில் லட்டு வழங்கப்படுவதற்கு மாற்றாக சணல், காகிதத்தால் ஆன பைகளில் லட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணியை ஆந்திர மாநில மாற்றுத் திறனாளிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.<br />
<br />
இந்நிலையில் சணல் பை ரூ.6, காகித பை ரூ.4 விலையில் தயாரித்து சோதனை அடிப்படையில் பக்தர்களிடம் விற்பனை செய்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.<br />
<br />
எனவே கோவில் நிர்வாகம் விரைவில் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலுமாக ஒழித்து சணல் பைகளில் லட்டு வழங்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.<br />
<br />
*<b> புதுவை முதல்வராக புதன்கிழமை பதவியேற்கிறார் ரங்கசாமி<br />
<br />
<img alt="pdyrenkasa.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.5&disp=emb&realattid=ii_12ff662717e5852a&zw" title="pdyrenkasa.jpg" /></b><br />
புதுச்சேரி, மே 15: புதுச்சேரி முதல்வராக புதன்கிழமை பதவியேற்கவுள்ளார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி (60).<br />
<br />
புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றது.<br />
<br />
இதில், என்.ஆர். காங்கிரஸ் மட்டும் 15 இடங்களை பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. அத்துடன் சுயேச்சை எம்.எல்.ஏ.வான வி.எம்.சி. சிவக்குமார், ரங்கசாமிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.<br />
<br />
இந்நிலையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அக் கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக என்.ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.<br />
<br />
ரங்கசாமி அளித்த கடிதம் மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் ஒப்புதல் திங்கள்கிழமை கிடைக்கும் என தெரிகிறது.<br />
<br />
அதையடுத்து ரங்கசாமி, புதன்கிழமை முறைப்படி பதவியேற்பார் என அக் கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.<br />
<br />
என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமே தனித்து ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது.<br />
<br />
இதற்கிடையே தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை திங்கள்கிழமை சந்தித்து ரங்கசாமி ஆலோசனை நடத்துகிறார். <br />
<br />
<b>* கேரள முதல்வராக உம்மன் சாண்டி தேர்வு<br />
</b><br />
<img alt="umansandi1.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.7&disp=emb&realattid=ii_12ff6697317eb797&zw" title="umansandi1.jpg" /><br />
<br />
திருவனந்தபுரம், மே 15: கேரள சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக (முதல்வராக) உம்மன்சாண்டி அக்கட்சி எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />
<br />
நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 68 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி கேரளத்தில் ஆட்சியமைக்கிறது. இதையடுத்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.<br />
<br />
கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக (முதல்வராக) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை அடைய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் முயற்சி செய்தார். ஆனால் அனுபவசாலியான உம்மன்சாண்டியைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் மேலிடம் ஆதரவு தெரிவித்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்தே உம்மன்சாண்டி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
அரசியல் சட்டப்படி கேரள அமைச்சரவையில் முதல்வரைத் தவிர 20 அமைச்சர்கள் இடம் பெற வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது குறித்து உம்மன்சாண்டி முடிவு செய்வார். இதைத்தொடர்ந்து புதிய அரசு வரும் புதன்கிழமை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <br />
<br />
<b>* ஐ.நா. அறிக்கை: இந்திய ஆதரவை கோருகிறார் இலங்கை அமைச்சர்</b><br />
<br />
புதுதில்லி,மே 15 : இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு திங்கள் கிழமை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.<br />
<br />
உள்நாட்டுப் போர் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துள்ள ஐ.நா. அறிக்கை குறித்து தங்கள் நாட்டின் நிலை குறித்து விளக்கவும், இலங்கைக்கு ஆதரவு திரட்டவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.<br />
<br />
தில்லி வரும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்து இதுகுறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை அவர் கொழும்பு திரும்புவார்.<br />
<br />
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகளை அந்நாட்டு அரசு மீறியதாகவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உணவு சரிவர வழங்கப்படவில்லை, பலர் பட்டினியால் இறந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.<br />
<br />
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலை என்று ஐ.நா. குழு குற்றம் சாட்டியது. இதை அடுத்து, அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.<br />
<br />
ஆனால், அந்த நாடு இது குறித்து கவலைப்படவில்லை. இனப்படுகொலை குறித்து பல நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்தியாவோ அமைதி காத்தது.<br />
<br />
இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐ நா பாதுகாப்பு சபையில் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இத்தகைய பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தில்லியில் இந்தியாவிடம் தங்களது நிலையை விளக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*<b> ஆந்திர விவசாயிகள் பிரச்னை: ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்</b><br />
<img alt="jehanmohan.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.6&disp=emb&realattid=ii_12ff669180df0672&zw" title="jehanmohan.jpg" /><br />
<br />
குண்டூர், மே 15: ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மக்களவை இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, விவசாயிகள் பிரச்னைகளுக்காக 48 மணி நேர உண்ணாவிரதத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.<br />
<br />
குண்டூரின் புறநகரப் பகுதியில் உள்ள ரெட்டி கல்லூரி மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.<br />
<br />
அவருடன் 8 எம்எல்ஏக்கள், 3 மேலவை உறுப்பினர்கள், ஒரு எம்.பி. உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கின்றனர். 13 ஏக்கர் பரப்புள்ள கல்லூரி மைதானம் முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரால் நிரம்பியுள்ளது.<br />
<br />
விவசாயிகளின் இன்னலை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காவே இந்த உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
"நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அந்த விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அரசே அவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டும்' என்று உண்ணாவிரதத்தின்போது ஜெகன்மோகன் வலியுறுத்தினார்.<br />
<br />
மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்கிற தனிக்கட்சியைத் தொடங்கினார். அண்மையில் நடந்த கடப்பா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.<br />
<br />
<b style="color: #3366ff;">மாநிலச் செய்தி மலர் </b>:<br />
<br />
<b>* பேரவையின் வரலாறு</b><br />
<br />
<img alt="sec.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.3&disp=emb&realattid=ii_12ff6629899c573c&zw" title="sec.jpg" /><br />
<br />
சென்னை, மே 15: தமிழக சட்டப் பேரவைக் கட்டடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.<br />
<br />
கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.<br />
<br />
இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது, "செயின்ட் ஜார்ஜ் கோட்டை' என்று பெயரிடப்பட்டது.<br />
<br />
கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. 1678ம் ஆண்டு இது கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில்தான் 1753 ஆம் ஆண்டு கவர்னல் ஜெனரல் ராபர்ட் கிளைவின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.<br />
<br />
1687 முதல் 1692 வரை ஆளுநராக இருந்த யேல் என்பவர் காலத்தில்தான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிமரம் இங்கு அமைக்கப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட கொடிமரம் இது.<br />
கோட்டைக்குள் சட்டப்பேரவை கூட்ட மண்டபம் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது நூற்றாண்டு கண்ட புராதான கட்டமாக இது இருக்கிறது.<br />
<br />
சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு முதல் தேர்தல் 1920-ல் நடைபெற்றது. இதில் நீதிக் கட்சி வெற்றிபெற்று ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் பிரிமியர் என்ற அழைக்கப்பட்ட முதல்வர் பதவியை ஏற்றார்.<br />
12.1.1921-ல் இருந்து 1937 வரை நடைபெற்ற நீதிக் கட்சி ஆட்சியில் பேரவைக் கூட்டங்கள் கோட்டையிலேயே நடைபெற்றன. இதற்கிடையில், சென்னை மாகாண ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு 6.3.1922-ல் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். அப்போது தேக்கு மரத்தால் செய்யப்பட்ட நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய பேரவைத் தலைவர் இருக்கையைப் பரிசளித்தார். அந்த இருக்கையே இன்றும் பேரவைத் தலைவரின் இருக்கையாக இருந்து வருகிறது.<br />
<br />
14.7.1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபத்துக்கு பேரவை மாற்றப்பட்டது. 21.12.1937 வரை சுமார் 5 மாதங்கள் இங்குதான் பேரவை நடைபெற்றுள்ளது.<br />
<br />
இதன் பின் 27.1.1938 முதல் 26.10.1939 வரை சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டத்தில் பேரவை இயங்கியது.<br />
<br />
30.10.1939-ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களும் ஈடுபட பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்ததைக் கண்டித்து ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ராஜிநாமா செய்தது. இதன்பின் 30.4.1946 வரை தேர்தலே நடைபெறாமல் ஆளுநர் ஆட்சியே தொடர்ந்தது. பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆந்திரகேசரி டி.பிரகாசம் 24.5.1946-ல் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, 27.3.1952 வரை மீண்டும் கோட்டையிலேயே பேரவை திரும்பிச் செயல்பட்டது.<br />
<br />
1952-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று, மேலவை உறுப்பினராக இருந்த ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது மேலவை உறுப்பினர்களையும் சேர்த்து பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைக்கு கோட்டை மண்டப இடம் போதாது என்பதால் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டு அங்கு பேரவை செயல்பட்டது. பேரவை கட்டுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை அப்போது செலவிடப்பட்டுள்ளது.<br />
<br />
(இந்தப் பேரவை கட்டடம்தான் பின்னர் பாலர் அரங்கமாகவும், கலைவாணர் அரங்கமாகவும் இருந்தது. பின்னர் திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.)<br />
<br />
1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு பேரவை மீண்டும் கோட்டைக்கே திரும்பி 30.3.1959 அங்கு நடைபெற்றது.<br />
<br />
20.4.1959-ல் தொடங்கி 30.4.1959 வரையிலும், 4.5.1959 முதல் 9.5.1959 வரையிலும் உதகையிலுள்ள அரண்மூர் மாளிகையிலும் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.<br />
<br />
இதன்பின் 31.8.1959-ல் இருந்து 13.1.2010 வரை கோட்டையிலேயே பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.<br />
<br />
ஓமந்தூரார், பி.எஸ். குமாரசாமிராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.<br />
இதற்கிடையில் 2001-ல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது புதிய தலைமைச் செயலகம் கட்டு முயற்சி நடைபெற்றது. ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு கட்டத் திட்டமிடப்பட்டு, எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதைப்போல அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தின் இடத்திலும் புதிய தலைமை செயலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.<br />
<br />
÷2006 திமுக ஆட்சி வந்துபோது அரசின் தோட்டத்தில் 1,000 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங் 13.3.2010-ல் திறந்து வைத்தார்.<br />
<br />
இங்கு 19.10.2010 பேரவைக் கூட்டம் தொடங்கப்பட்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.<br />
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த பேரவை மண்டபம் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகமாக மாற்றப்பட்டது.<br />
<br />
இந்நிலையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா திங்கள்கிழமை ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா தெரிவித்தவாறு மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பேரவை செயல்பட உள்ளது.<br />
<br />
<b>* அதிமுக அரசில் 34 அமைச்சர்கள்: சென்னை பல்கலை. அரங்கில் இன்று பதவி ஏற்பு</b><br />
<img alt="govejaya.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.4&disp=emb&realattid=ii_12ff668e307d0ccb&zw" title="govejaya.jpg" /><br />
<br />
சென்னை, மே 15: மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். இவர்களுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
திங்கள்கிழமை மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அந்தக் கட்சி தலைமை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
தமிழக அமைச்சர்கள் பட்டியல்<br />
ஜெயலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,<br />
போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்<br />
அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.<br />
ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை<br />
கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை<br />
நத்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை<br />
கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை<br />
சி.சண்முகவேலு---தொழில் துறை<br />
ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை<br />
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவு<wbr></wbr>த் துறை<br />
சி.கருப்பசாமி---கால்நடைத் துறை<br />
பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை<br />
சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை<br />
செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை<br />
கே.டி.பச்சமால்---வனத் துறை<br />
எடப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும்<br />
சிறு துறைமுகங்கள்.<br />
எஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.<br />
கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.<br />
எஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.<br />
கே.டி.எம்.சின்னய்யா---பிற்படு<wbr></wbr>த்தப்பட்டோர் நலத் துறை.<br />
எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.<br />
பி.தங்கமணி---வருவாய்த் துறை.<br />
ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.<br />
எஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.<br />
செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.<br />
பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.<br />
ஆர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.<br />
என்.சுப்பிரமணியன்---ஆதிதிராவி<wbr></wbr>டர் மற்றும்<br />
பழங்குடியினர் நலத் துறை.<br />
வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.<br />
என்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.<br />
கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.<br />
இ.சுப்பையா---நீதித் துறை.<br />
புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.<br />
எஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலா<wbr></wbr>ளர் நலத் துறை<br />
வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.<br />
என்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.<br />
<br />
<b>* பொறியியல் கல்லூரி விண்ணப்பம் பெற திருப்பூர் மாவட்டத்தில் மையம் இல்லை: பெற்றோர் குமுறல்<br />
</b><br />
உடுமலை, மே 15: பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெற திருப்பூர் மாவட்டத்தில் மையம் அமைக்கப்படாதது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
÷தமிழகத்தில் மொத்தம் 124 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுயநிதி கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அடங்கும். இது தவிர இந்த ஆண்டு 24 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளன.<br />
<br />
÷பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஆண்டு 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.<br />
<br />
÷பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்தே பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களைப் பெற பிளஸ் 2 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 16 முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.<br />
<br />
÷அதாவது மே 16 முதல் 31 ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஜூன் 3 ம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
÷ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு ரூ. 250 எனவும் நேரிலும், தபாலிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. <br />
<br />
இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள திருப்பூர் மாவட்டத்தில் மையங்கள் எதுவும் அமைக்காதது மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 மையங்களையாவது அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.<br />
<br />
*<b> பல லட்சங்கள் சுருட்டிய போலி உளவுத்துறை அதிகாரி கோவையில் கைது</b><br />
கோவை: கோவையில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து பல லட்சம் அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.<br />
<br />
டூபாக்கூர்<br />
<br />
கோவை சித்தாபுதூரில் ஐயப்பன் கோவில் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் தங்கினார். சுற்றியிருந்த நபர்களிடம் தன்னை மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.<br />
<br />
பின்னர் அங்கிருந்தவர்களிடம் தனக்கு ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றும், கொஞ்சம் பணம் செலவழித்தால் மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளார். இவரை நம்பிய சிலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.<br />
<br />
போலீசில் புகார்<br />
<br />
பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால், இவரது நடத்தையில் சந்தேகம் கொண்டனர். இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் உடனே அந்த டூபாக்கூர் ஆசாமியை கைது செய்தனர்.<br />
<br />
விசாரணையில், மேற்படி ஆசாமி கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குலு பகுதியைச் சேர்ந்த ரகுநந்தனின் மகன் சரத்குமார்(25)என்பது தெரிய வந்தது. இவர் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர். அவரது அறையை சோதனை செய்ததில் போலீஸ் உடை, போலி ஆவணங்கள், போலீஸ் லத்தி போன்றவை சிக்கின. இவர் பல்வேறு இடங்களில் பல லட்சம் சுருட்டியுள்ளதும் தெரிய வந்தது.<br />
<br />
களத்தில் இறங்கிய கமிஷனர்<br />
<br />
இதன் பின், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்த ஆசாமி மீதான வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிர விசாரணையில் மேலும் பல மோசடிகள் வெளிவரலாம் என்கிறது காவல்துறை வட்டாரம்.<br />
<br />
<b>* தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்களினின் எண்ணிக்கை அடியோடு குறைவு</b><br />
<img alt="15-tn-assembly300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff681b35bdebcf&attid=0.2&disp=emb&realattid=ii_12ff662102bd9732&zw" title="15-tn-assembly300.jpg" /><br />
<br />
சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த முறையை விட இந்த முறை பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.<br />
<br />
ஆண்டுக்கு ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.<br />
<br />
2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 22 பெண் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தற்போது 14 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.<br />
<br />
இந்த ஆண்டு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் 136 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்களில் 14 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
அதேசமயம், 2006ம் ஆண்டு தேர்தலின்போது 156 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
புதிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதம்தான்.<br />
<br />
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 பெண்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் - கோகுல இந்திரா, ராஜலட்சுமி மற்றும் பா. வளர்மதி. மூவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.<br />
கடந்த முறையை விட இந்த முறை பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.<br />
<br />
ஆண்டுக்கு ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.<br />
<br />
2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 22 பெண் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தற்போது 14 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.<br />
<br />
இந்த ஆண்டு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் 136 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்களில் 14 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
அதேசமயம், 2006ம் ஆண்டு தேர்தலின்போது 156 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
புதிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதம்தான்.<br />
<br />
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 பெண்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் - கோகுல இந்திரா, ராஜலட்சுமி மற்றும் பா. வளர்மதி. மூவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.<br />
<br />
பெரிய கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுக சார்பில், ஜெயலலிதா உள்பட 9 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே வென்றுள்ளனர்.<br />
<br />
திமுக சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களில் புஷ்பலீலா ஆல்பன் மட்டுமே வென்றுள்ளார்.<br />
<br />
காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் நிறுத்தப்பட்டு விஜயதரணி மட்டுமே வென்றுள்ளார்.<br />
<br />
சிபிஎம் சார்பில் பாலபாரதி மட்டும் நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றார்</div></div></div></blockquote><br />
<br />
<table cellpadding="0" class="Bs nH iY"><tbody>
<tr><td class="Bu"><br />
</td><td class="Bu"><table cellpadding="0" class="Bs nH iY"><tbody>
<tr><td class="Bu"><b style="color: #3366ff;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி 43 சதவீதம் வளர்ச்சி</b><br />
மே 16,2011,00:31<br />
<br />
புதுடில்லி:கடந்த, 2010-11ம் நிதியாண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி, 43 சதவீதம் வளர்ச்சியடைந்து, 3.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.<br />
<br />
இது, 2009-10ம் நிதியாண்டில், 2.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ஏற்றுமதி மேம்பாட்டு குழு தெரிவித்துள்ளது.இது குறித்து, இக்குழுவின் தலைவர் ஜாட்டின் ஆர் மேத்தா கூறியதாவது:கடந்த மார்ச் மாதம் வரையிலுமாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 6 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.<br />
<br />
மத்திய அரசு, 584 சிறப்பு பொருளாதார மண்டலங்களை கொள்கை அளவில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், 377 மண்டலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 133 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.<br />
<br />
சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, 100 சதவீத வரிவிலக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 50 சதவீத வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மேத்தா கூறினார்<br />
<br />
<b style="color: #3366ff;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> ஐபிஎல்லை வைத்து சூதாட்டம்-பாக். முன்னாள் கேப்டன் அக்ரம் ரஸா கைது</b><br />
லாகூர் : ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய நடுவருமான அக்ரம் ரஸா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 6 புக்கிகளும் கைதாகியுள்ளனர்..<br />
<br />
11 வருடத்திற்கு முன்பு பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டவர் இந்த ரஸா. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தி்ல ஈடுபட்டு கைதாகியுள்ளார்.<br />
<br />
குல்பர்க் நகர் என்ற இடத்தில் ஹோட்டலில் வைத்து இந்த ஏழு பேரையும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், குல்பர்க்கில் உள்ள லிபர்ட்டி பகுதியில் ஒரு ஹோட்டலி்ல வைத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அக்ரம் ரஸா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன். தற்போது அம்பயராக இருக்கிறார்.<br />
<br />
ஐபிஎல் போட்டிகளை ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நாங்கள் அங்கு சென்று கைது செய்தோம்.<br />
<br />
அவர்களிடமிருந்து பணம், மொபைல் போன்கள், இந்தியாவைச் சேர்ந்த பல தொலைபேசி எண்கள் அடங்கிய டைரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம் என்றனர்.<br />
<br />
46 வயதாகும் ரஸா, 9 டெஸ்ட் மற்றும் 49 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக்கின் நெருங்கிய நண்பர் இந்த ரஸா. இவரும் சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.<br />
<br />
<b>கிரிக்கெட்</b><br />
<br />
<b>கொச்சி டஸ்கர்ஸ் சுலப வெற்றி: ராஜஸ்தான் அணி ஏமாற்றம்</b><br />
இந்தூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பிராட் ஹாட்ஜ் "ஆல்-ரவுண்டராக' அசத்த, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய ராஜஸ்தான் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.<br />
<br />
இந்தூரில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, "பீல்டிங்' தேர்வு செய்தார்.<br />
<br />
மேனரியா ஆறுதல்:<br />
<br />
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு, பசால்-டிராவிட் ஜோடி மோசமான துவக்கம் அளித்தது. ஆர்.பி. சிங் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த பசால் (16), அதே ஓவரில் அவுட்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிட் (1) சோபிக்கவில்லை. அடுத்து களமிறங்கிய அஜின்கியா ரகானே (8) வந்த வேகத்தில் திரும்பினார். பிரசாந்த் வீசிய ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய வாட்சன் (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பினல் ஷா (5), ஜேக்கப் ஓரம் (0), ஷேன் வார்ன் (2) உள்ளிட்டோர் பிராட் ஹாட்ஜ் சுழலில் சிக்கினர். சவான் (1), "ரன்-அவுட்' ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அசோக் மேனரியா, 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஹாட்ஜ் சுழலில் அவுட்டானார். பரமேஸ்வரன் வேகத்தில் தோஷி, "டக்-அவுட்' ஆக, ராஜஸ்தான் அணி 18.3 ஓவரில் 97 ரன்களுக்கு சுருண்டது.<br />
<br />
கொச்சி அணி சார்பில் பிராட் ஹாட்ஜ் 4, ஸ்ரீசாந்த், பரமேஸ்வரன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.<br />
ஹாட்ஜ் அபாரம்:<br />
<br />
சுலப இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு மகிளா ஜெயவர்தனா (6) ஏமாற்றினார். "சிக்சர்' மழை பொழிந்த பிரண்டன் மெக்கலம், 12 பந்தில் 29 ரன்கள் (4 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்து அவுட்டானார். பின் இணைந்த பார்த்திவ் படேல், பிராட் ஹாட்ஜ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தது. டெய்ட் பந்தில் பார்த்திவ் ஒரு "சிக்சர்' விளாசினார். மறுமுனையில் தோஷி, சவான் பந்தில் தலா ஒரு "சிக்சர்' அடித்தார் ஹாட்ஜ். கொச்சி அணி 7.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்த்திவ் (21), ஹாட்ஜ் (33) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் ஜேக்கப் ஓரம், தோஷி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.<br />
<br />
ஆட்ட நாயகனாக பிராட் ஹாட்ஜ் தேர்வு செய்யப்பட்டார்.<br />
<br />
ஸ்கோர் போர்டு<br />
ராஜஸ்தான் ராயல்ஸ்<br />
பசால் எல்.பி.டபிள்யு.,(ப)ஆர்.பி. சிங் 16(15)<br />
டிராவிட் (கே)ஷா (ப)ஸ்ரீசாந்த் 1(4)<br />
வாட்சன் (ப)பரமேஸ்வரன் 20(13)<br />
ரகானே எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் <div dir="ltr"><wbr></wbr> 8(9)<br />
மேனரியா (கே)ஷா (ப)ஹாட்ஜ் 31(28)<br />
பினல் ஷா (கே)ஞானேஸ்வரா (ப)ஹாட்ஜ் 5(5)<br />
ஓரம் (ப)ஹாட்ஜ் 0(3)<br />
வார்ன் (ப)ஹாட்ஜ் 2(9)<br />
சவான் -ரன் அவுட்-(ஜடேஜா/ஹாட்ஜ்) 1(3)<br />
டெய்ட் -அவுட் இல்லை- 10(9)<br />
தோஷி (கே)ஜெயவர்தனா (ப)பரமேஸ்வரன் 0(13)<br />
உதிரிகள் 3<br />
மொத்தம் (18.3 ஓவரில், "ஆல்-அவுட்') 97<br />
விக்கெட் வீழ்ச்சி: 1-18(பசால்), 2-18(டிராவிட்), 3-26(ரகானே), 4-63(வாட்சன்), 5-68(பினல் ஷா), 6-77(ஓரம்), 7-81(வார்ன்), 8-82(சவான்), 9-89(மேனரியா), 10-97(தோஷி).<br />
பந்துவீச்சு: ஆர்.பி. சிங் 4-0-17-1, ஸ்ரீசாந்த் 4-0-16-2, பரமேஸ்வரன் 3.3-0-20-2, பிரசாந்த் 1-0-18-0, ஹாட்ஜ் 4-0-13-4, ஞானேஸ்வரா 1-0-7-0, ஜடேஜா 1-0-5-0.<br />
<br />
<b style="color: #3366ff;">ஆன்மீகச் செய்தி மலர் </b>:<br />
<br />
<b style="color: #3366ff;">* அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்</b><br />
<br />
<img alt="T_500_775.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff6822b0b67fc0&attid=0.1&disp=emb&realattid=ii_12ff68018605573f&zw" title="T_500_775.jpg" /><br />
<br />
மூலவர் : பாலசுப்ரமணிய சுவாமி -<br />
தல விருட்சம் : ஆலமரம்<br />
தீர்த்தம் : நந்தவனக் கிணறு<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : புகழிமலை (ஆறுநாட்டார் மலை )<br />
ஊர் : வேலாயுதம்பாளையம்<br />
மாவட்டம் : கரூர்<br />
மாநிலம் : தமிழ்நாடு<br />
<br />
<b>தல சிறப்பு:</b><br />
<br />
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது.<br />
<br />
இது 360 படிகள் கொண்ட மலைக்கோயில்<br />
<br />
<b>தலபெருமை</b>:<br />
<br />
<br />
360 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.<br />
<br />
கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன . தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.<br />
<br />
<b>தல வரலாறு</b>:<br />
<br />
<br />
இந்த முருகன் கோயில் எப்போது தோன்றியது என்று வரலாற்று அடிப்படையில் கூறமுடியவில்லை. எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் பேரும் புகழும் பெற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கவேண்டும் என்பது உறுதி. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது அருணகிரிநாதர் காலத்தில் இக்கோயிலின் கருவறைப்பகுதி மட்டுமே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.<br />
<br />
<b>திருவிழா:</b><br />
<br />
தைப்பூசம் - 15 நாட்கள் - லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சூரசம்காரம் - 7 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை மற்றும் மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்<br />
<br />
<b>திறக்கும் நேரம் </b>:<br />
<br />
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.<br />
<br />
<b style="color: #3366ff;">ஆன்மீகச் சிந்தனை மலர் </b>:<br />
<br />
<b style="color: #3366ff;">மலர் போல மகிழ்ச்சிப்படுத்து - ஸ்ரீஅன்னை</b>.<br />
<br />
* எத்தனை அன்பு! எத்தனை மென்மை! இனிமை! இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.<br />
<br />
* ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், கருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும்.<br />
<br />
* மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.<br />
-<b>ஸ்ரீஅன்னை</b><br />
<br />
<b style="color: #3366ff;">வினாடி வினா :</b><br />
<br />
<b>வினா</b> - இந்தியாவில் மாநிலத் தேர்தல் கமிஷனால் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?<br />
<br />
<b>விடை</b> - மத்தியப் பிரதேசம்.<br />
<br />
<br />
<br />
<br />
<b style="color: #3366ff;">இதையும் படிங்க :</b><br />
<br />
"<b style="color: #3366ff;">மன திருப்தியுடன் வாழ்கிறேன்!'<br />
<br />
<img alt="large_241298.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff6822b0b67fc0&attid=0.2&disp=emb&realattid=ii_12ff678d9be81642&zw" title="large_241298.jpg" /></b><br />
நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமுகி: என் அப்பா சம்பதி பூபால், அம்மா ரஞ்சனி இரண்டு பேருமே, புகழ் பெற்ற பரதக் கலைஞர்கள்கள். வீட்டில் நாங்கள் ஐந்து பேர். அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த, நான் மட்டும், பரதம் தான் வாழ்க்கை என முடிவெடுத்தேன்.பாவ, ராக, தாளத்துடன் ஆடும் தனித்துவ நடனமான, 108 கர்ணங்களை, நான்கு வயதில் இருந்தே எனக்கு கற்றுக் கொடுத்தார் அப்பா. தினமும் விடியற்காலையில், ஒவ்வொரு கர்ணத்தையும், 100 முறை பயிற்சி செய்ய வைப்பார்.உடம்பெல்லாம் ரணமாக வலிக்கும். ஆனால், அந்தப் பயிற்சிக்கு எல்லாம் பலனாக, 108 கர்ணங்களையும் ஆடிய முதல் பெண் என்ற பெருமை கிடைத்தது. பின் நாட்களில், வியர்வை கூட துளிர்க்காமல், சிரித்த முகத்துடன், முழுத் தெம்புடன், மேடைகளில் பல மணி நேரம் ஆடியதற்கு, அந்தப் பயிற்சி தான் கை கொடுத்தது.கடந்த, 1977ல், எம்.ஜி.ஆர்., என்னை, அரசவை நர்த்தகியாக நியமித்தார். சர்வதேச அரங்குகளில், பல நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பண்ணினேன். காலையில் - லண்டன், மதியம் - பாரிஸ், மாலை - பிராங்பர்ட்னு, மூச்சு விடக் கூட நேரம் இல்லாம ஓடிக் கொண்டிருந்தேன்.பரிசுகள், பாராட்டுகள்னு, புகழின் உச்சியில் இருந்த என் வாழ்க்கையில், விடை தெரியாத கேள்வி ஒன்று இருந்தது. அது, "கடவுள் யார்' என்பது தான். பின், சில மாற்றங்களால், நான் கிறிஸ்தவராக மதம் மாறினேன். திருமணமே வேண்டாம் என முடிவெடுத்திருந்த போது, ஷவுரி பாபுவை சந்தித்தேன். பின் திருமணம் முடிந்து, இப்போது, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரே மகள். அவரும், மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, "ஆடின காலை எப்படி கட்டிப் போட்டீங்க' என்பது தான். நடனத்தை நிறுத்தியதற்காக நான் எப்பவும் வருத்தப்பட்டதில்லை. மன திருப்தியுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். <br />
</div></td><td class="Bu"><br />
</td><td class="Bu"><br />
</td></tr>
</tbody></table><div class="nH"><div class=" iE D E"><div class="iH"><div><br />
</div></div><div class="iG"><div class="h0"> </div></div></div></div></td><td class="Bu"><br />
</td></tr>
</tbody></table><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><br />
<br />
நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.<br clear="all" /> <br />
-- <br />
<div dir="ltr"><div><br />
<br />
<br />
</div><br />
</div></div></div><br />
<br clear="all" /><br />
-- <br />
<div dir="ltr"><div><br />
<br />
</div></div><br />
</div></blockquote></div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-16653774752738668192011-05-15T08:20:00.000+05:302011-05-15T08:20:22.769+05:30இன்றைய செய்திகள் மே, 15, 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: #6600cc;">முக்கியச் செய்தி </b>:<br />
<br />
* <b>நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா-திங்கள்கிழமை பதவியேற்பு?</b><br />
<br />
<img alt="14-jayalalithaa300-1.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff164fd77fda0d&attid=0.5&disp=emb&realattid=ii_12ff142794913fe1&zw" title="14-jayalalithaa300-1.jpg" /><br />
<br />
சென்னை: நாளை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்திக்கவுள்ளதாகவும், அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.<br />
<br />
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 16ம் தேதி, திங்கள்கிழமை, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கலாம் என்று தெரிகிறது.<br />
<br />
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 118 இடங்களைவிட மிக அதிகமான தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது.<br />
<br />
இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வருமாறு அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டது. அதன்படி மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினர். பலர் நள்ளிரவுக்கு மேல் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.<br />
<br />
இன்று அவர்கள் அனைவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து இன்று பிற்பகலில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இக் கூட்டம் இன்று நடக்கவில்லை.<br />
<br />
இக் கூட்டம் நாளை தான் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக (முதல்வராக) எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடு்ப்பர். அதைத் தொடர்ந்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார். இதையடுத்து திங்கள்கிழமை அவர் முதல்வராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.<br />
<br />
பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா:<br />
<br />
ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.<br />
<br />
ஜெயலலிதா பதவியேற்புடன் அமைச்சர்கள் குழுவும் பதவியேற்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே நாளை ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாகப் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.<br />
<br />
நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு:<br />
<br />
அதிமுக அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.<br />
<br />
நாளை ஆளுநரை சந்திக்கிறார்:<br />
<br />
இந் நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அதிமுக செயல்படும். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் நன்மதிப்பை பெறுவோம். அதிமுகவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றி திமுக மீதான எதிர்ப்பு அலைகளால் கிடைத்தது அல்ல, தமிழக மக்கள் அதிமுக மீது கொண்டுள்ள நம்பிக்கை, மதிப்பின் பிரதிபலிப்பு.<br />
<br />
நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளேன். அதற்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். ஆளுநரைச் சந்தித்த பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும் தேதி, இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.<br />
<br />
அதிமுக தலைமையகத்தில் ஜெ-எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை:<br />
<br />
இந் நிலையில் தேர்தலில் வென்ற பின்னர் இன்று முதல் முறையாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அவரை வழியெங்கும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு நின்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு மத்தியில் நீந்தி வந்த ஜெயலலிதாவின் கார் தலைமைக் கழக அலுவலகத்திற்குள் நுழைந்தது.<br />
<br />
பின்னர் காரிலிருந்து இறங்கிய ஜெயலலிதா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பிரமாண்ட மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.<br />
<br />
இதையடுத்து அண்ணா சாலைக்குச் சென்ற ஜெயலலிதா, அங்கு ஸ்பென்சர் பிளாசா அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.<br />
<br />
இதை முடித்துக் கொண்ட பின்னர் ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">உலகச் செய்தி மலர் :</b><br />
<br />
*<b> அத்துமீறிப் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம்: அமெரிக்காவுக்கே பாகிஸ்தான் மிரட்டல்.</b><br />
<br />
இஸ்லாமாபாத், மே 14: தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.<br />
<br />
11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.<br />
<br />
"பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.<br />
<br />
சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.<br />
<br />
"அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்?<br />
<br />
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.<br />
<br />
அபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.<br />
<br />
பாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.<br />
<br />
அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.<br />
<br />
டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.<br />
<br />
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.<br />
<br />
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். <br />
<br />
*<b> விடுதலைப் புலிகள் தப்ப நார்வே உதவியதா?</b><br />
கொழும்பு, மே 14: இலங்கையில் இருந்து விடுதலைப் புலிகள் சிலர் தப்பித்துச் செல்ல கொழும்பில் உள்ள நார்வேத் தூதரகம் உதவியதாக நார்வே நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.<br />
<br />
இலங்கையில் ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்ததால் நாட்டைவிட்டு விடுதலைப் புலிகள் சிலர் தப்பித்துச் செல்ல கொழும்பில் உள்ள நார்வேத் தூதரக அதிகாரிகள் உதவினர். 12 புலிகள் தப்பித்துச் செல்ல உதவியுள்ளனர். அவர்களுக்கு விமான டிக்கெட், விசா வாங்கிக் கொடுத்தது முதல் அனைத்து உதவிகளையும் நார்வேத் தூதரக அதிகாரிகள் செய்தனர் என்று நார்வேயின் ஆப்டென்போஸ்டன் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.<br />
<br />
இந்தத் தகவல் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை அறியுமாறு நார்வேயில் உள்ள தங்களது நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
இதனிடையே, விடுதலைப் புலிகள் தப்பிக்க உதவியது உண்மைதானா என்று நார்வே நாட்டின் வெளியுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்கைமிடம் கேட்டதற்கு, எங்கெல்லாம் மக்கள் இக்கட்டான சூழலில் சிக்குகிறார்களா அவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது நார்வே. மனிதாபிமான உதவிகளை செய்வதை தனது கடமையாகவும் நினைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.<br />
<br />
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் நடந்த போது இருதரப்பையும் சமாதனப்படுத்த நார்வே அரசு நடவடிக்கை எடுத்தது. நார்வே எடுத்த முயற்சியின் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே 2002-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.<br />
<br />
இருப்பினும் இருதரப்பினரிடையே அவ்வப்போது மோதல் நீடித்து வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மாறி மாறி குற்றம்சுமத்தி வந்தனர்.<br />
<br />
<br />
*<b> நேடோ'வால் என்னைக் கொல்ல முடியாது: கடாஃபி பேச்சு<br />
</b><br />
<br />
திரிபோலி, மே 14: ""நேடோ படைகளால் என்னைக் கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன்'' என்று லிபிய நாட்டின் அதிபர் மம்மர் கடாஃபி நாட்டு மக்களுக்கு ஆடியோ கேசட் மூலம் அறிவித்திருக்கிறார்.<br />
<br />
நேடோ படைகள் நடத்திய குண்டுவீச்சில் அவருடைய மாளிகை ""பாப்-அல்-அஜீசியா'' கடுமையாகச் சேதம் அடைந்தது. வியாழக்கிழமை நள்ளிரவு நடந்த இத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள், அப்பாவி சிவிலியன்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.<br />
<br />
அந்த 3 பேர் லிபியாவுக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்துள்ளனர் என்று கடாஃபி தன்னுடைய ஆடியோ கேசட் உரையில் புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.<br />
<br />
அதே இடத்தின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவும் சனிக்கிழமை அதிகாலையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.<br />
<br />
லிபிய அதிபர் கடாஃபி வான் தாக்குதலில் கடுமையாகக் காயம் அடைந்திருக்கிறார், நடமாட முடியாத அவரை மருத்துவ சிகிச்சைக்காக லிபியாவைவிட்டு வேறு எங்கோ எடுத்துச்சென்றுவிட்டனர் என்று நாட்டில் வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் ஒரு சிலர் அவர் உயிரோடு இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்ப ஆரம்பித்துவிட்டனர்.<br />
<br />
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் ராணுவம் தன்னைவிட்டு விலகாமல் இருக்கவும் இந்த ஆடியோ கேசட்டை வெளியிட்டிருக்கிறார் கடாஃபி.<br />
<br />
இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெளிவானாலும், வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார், கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.<br />
<br />
அதிகாரி விளக்கம்: லிபியா அதிபர் மம்மர் கடாஃபி நன்றாக இருக்கிறார், தலைநகர் திரிபோலியிலேயே தங்கியிருக்கிறார் என்று லிபிய அரசின் பத்திரிகைத் தொடர்பாளர் மூசா இப்ராஹிம் அறிவித்தார்.<br />
<br />
இத்தாலி அமைச்சரால் வந்த குழப்பம்: கடாஃபி இப்போது தலைநகர் திரிபோலியில் இல்லை, அவருக்குக் கடுமையான காயம்பட்டிருக்கிறது என்று சந்தேகிக்கிறேன் என இத்தாலி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்கோ பிராட்டினி பேட்டி அளித்தார். அவர் அத்துடன் நிறுத்தாமல், உயிருக்கு அஞ்சி கடாபி ஓடுகிறார் என்ற தகவல் அந் நாட்டு ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் கியோவனி மார்ட்டினேலி மூலம்தான் தனக்குத் தெரிந்தது என்று வேறு குறிப்பிட்டார்.<br />
<br />
ஆனால் பாதிரியார் கியோவனி மார்ட்டினேலி அதை மறுத்துவிட்டார். கடாஃபி காயம் அடைந்தது குறித்தோ, மறைந்து வாழ்வது குறித்தோ நான் ஏதும் கூறவில்லை என்று மறுத்துள்ளார் அவர்.<br />
<br />
புரட்சிக்காரருக்கு வரவேற்பு: அதே நேரத்தில் கடாஃபியின் மிகப்பெரிய எதிர்ப்பாளரும் லிபிய விடுதலை இயக்க அமைப்பின் இரண்டாவது இடத்தில் இருப்பவர் என்று கருதப்படுபவருமான முகம்மத் ஜிப்ரில் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிக்கைக்குச் சென்றார். அவரை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வரவேற்று அழைத்துச் சென்றார். அவர் தன்னுடைய அமைப்பை ""தேசிய இடைநிலை சர்க்கார்'' என்று அழைத்துக் கொள்கிறார்.<br />
<br />
இதையே லிபிய நாட்டுக்கான உண்மையான பிரதிநிதித்துவ அமைப்பு என்று அங்கீகரிக்க மறுக்கிறது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b>* மக்கள் பிரச்னைகளுக்கு தீவிரவாதம் தீர்வாகாது: மன்மோகன் சிங்</b><br />
<br />
<img alt="manmohansingh.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff164fd77fda0d&attid=0.4&disp=emb&realattid=ii_12ff13f10b448082&zw" title="manmohansingh.jpg" /><br />
<br />
காபூல், மே 13: மக்கள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற சித்தாந்தங்கள் தீர்வாகாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.<br />
<br />
ஆப்கானிஸ்தானுக்கு 2 நாள் அரசுப் முறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், சனிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தினார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.<br />
<br />
அவர் உரை வருமாறு: இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற செயல்களால் அமைதி குலைந்துள்ளது. மக்களால் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியவில்லை. எந்த ஒரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அமைதியும், சலனமின்மையும் அவசியம்.<br />
<br />
இருப்பினும் ஆப்கானிஸ்தான் மக்கள் எத்தனையோ தடைகளை தகர்த்தெறிந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாகப் போராடி இதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் கண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்களின் இத்தகைய திறமையையும், தியாகத்தையும் நினைத்து இந்தியா பெருமிதம் அடைகிறது.<br />
<br />
ஆப்கானிஸ்தான், இந்தியாவின் உறவு நேற்றைய இன்றையதல்ல. நீண்டகால பாரம்பரிய உறவு. இதை பேணிக்காத்து முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளுமே அக்கறையாக இருந்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது சொந்த நாட்டு விஷயங்களில் பிற நாடுகளின் தலையீடு இன்றி சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்கிறது.<br />
<br />
பயங்கரவாதத்தால் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்கு இந்தியா ஆரம்பத்தில் இருந்தே தன்னால் முடிந்த உதவியை செய்து உறுதுணையாக இருந்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த உதவி தொடரும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.<br />
<br />
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் சுமார் 25 நிமிடம் உரை நிகழ்த்தினார். அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 354 பேரும் மன்மோகன் சிங் உரையை உன்னிப்பாகக் கேட்டனர். அவ்வப்போது கைதட்டி மன்மோகன் சிங்கை உற்சாகப்படுத்தினர்<br />
<br />
<b style="color: #6600cc;">தேசியச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* கனிமொழி முன்ஜாமீன் வழக்கு மே 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு</b><br />
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.<br />
<br />
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி வந்தது குறித்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் என்பது சிபிஐயின் வாதம். ஆனால் இது கடன் என்றும், திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் டிவி கூறி வருகிறது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக கனிமொழி சேர்க்கப்பட்டுள்ளார்.<br />
<br />
இதையடுத்து அவர் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்காக ராம்ஜேத்மலானி ஆஜரானார். கனிமொழி ஒரு பெண், தாய், எங்கும் ஓடி விட மாட்டார். அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதாடினார் ராம்ஜேத்மலானி. ஆனால், அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.<br />
<br />
இந்த வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கனிமொழி மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஆஜரானார்.<br />
<br />
அப்போது இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி சைனி வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.<br />
<br />
சட்டமன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ள நிலையில் கனிமொழிக்கு 20ம் தேதி வரை கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது.<br />
<br />
*<b> மம்தாவை வரவேற்கப் புதுப்பொலிவு பெறும் மேற்கு வங்க தலைமைச் செயலகம்</b><br />
<br />
<img alt="mamtha.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff164fd77fda0d&attid=0.2&disp=emb&realattid=ii_12ff13d7f4db63be&zw" title="mamtha.jpg" /><br />
<br />
கொல்கத்தா,மே 14: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்காகப் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது அந்த மாநில தலைமைச் செயலகம்.<br />
<br />
ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களது நிர்வாகப் பணிக்காகக் கொல்கத்தாவில் கட்டப்பட்டது ரைட்டர்ஸ் கட்டடம். இந்தக் கட்டடம்தான் அந்த மாநில தலைமைச் செயலகமாக இருந்து வருகிறது. இங்குதான் முதல்வர், அமைச்சர்களுக்கான அலுவலகமும் அமைந்துள்ளன.<br />
<br />
கடந்த 34 ஆண்டுகாலமாக இந்தக் கட்டடத்தில் இருந்தே இடதுசாரியினர் ஆட்சி நடத்தி வந்தனர். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இங்கிருந்தே மாநிலத்தை ஆளுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.<br />
<br />
ரைட்டர்ஸ் கட்டடம் 1780-ல் கட்டப்பட்டாலும் வலுவாக உள்ளது. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதை சீரமைக்கும் பணி நடந்து வருகின்றது. புதிய அரசு பதவி ஏற்பதற்குள் சீரமைப்புப் பணியை முடிக்கத் திட்டமிட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது.<br />
<br />
முதல்வர், அமைச்சர்கள் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக அந்த மாநில பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.<br />
<br />
எப்போதுமே பரபரப்பாக இருக்கும் ரைட்டர்ஸ் கட்டடம் இப்போது வெறிச் சோடிக்கிடக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களை மட்டுமே காண முடிகிறது. முதல்வர் அறை பூட்டிக் கிடக்கிறது.<br />
<br />
புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இடதுசாரி காபந்து அரசு நீடிக்கும். இதனால் முதல்வர் அறை முன்பு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பெயர் பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது.<br />
<br />
முதல்வர் அறைக்குள் அமைந்துள்ள நாற்காலியைப் படம் பிடிக்க வேண்டும் என்பதில் பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.<br />
<br />
<b>* அமர்நாத் ஏற்பாடு: காஷ்மீர் ஆளுநர் ஆய்வு</b><br />
ஸ்ரீநகர்,மே14:அமர்நாத் யாத்திரை குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.<br />
<br />
இமயமலையில் உள்ள அமர்நாத் பனிலிங்க கோவிலுக்கு வருகிற ஜூன் மாதம் 29-ம் தேதி பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை காஷ்மீர் அரசு செய்து வருகிறது.<br />
<br />
ளஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா அமர்நாத் கோவில் நிர்வாகக் குழு தலைவராக உள்ளார். இதனால் வோரா வியாழக்கிழமை யாத்திரை தொடங்க இருக்கும் சந்தன்வாரி,பகல்காம் பகுதிகளுக்கு சென்றார். பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் குடிநீர் வசதி,மின்சார வசதி,சுகாதார வசதி,ரோடு வசதி ஆகியவற்றை பார்வையிட்டார்.<br />
<br />
பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அனைத்து வசதிகளையும் காலவரைக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.<br />
<br />
*<b> ஸ்ரீ காளஹஸ்தி கோயில் அம்பாளுக்கு ரூ.12 கோடியில் வைர கிரீடம்</b><br />
<br />
<img alt="kalakasthi.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff164fd77fda0d&attid=0.1&disp=emb&realattid=ii_12ff13c72101ee7d&zw" title="kalakasthi.jpg" /><br />
<br />
காளஹஸ்தி ஞானபிரசுனாம்பாளுக்கு கர்நாடக அமைச்சர் கருணாகர் ரெட்டி சனிக்கிழமை வழங்கிய பல கோடி மதிப்புள்ள வைர கிரீடம், தங்கக் கவசம், பாதம், ஜடை மற்ற<br />
<br />
<br />
திருப்பதி,மே 14: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி கோயில் அம்பாளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்களை, ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், கர்நாடகா அமைச்சருமான காலி கருணாகர் ரெட்டி அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.<br />
<br />
சனிக்கிழமை குடும்பத்துடன் ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்கு வந்த அவர், அங்குள்ள ஞானபிரசுனாம்பாளுக்கு பல கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்கத்தினாலான கவசம், தோடு, பாதம், பிடி அஸ்தமம், ஒட்டியானம், ஜடை மற்றும் தங்கப் பட்டுப் புடவை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கி, அம்பாளை வழிப்பட்டார்.<br />
<br />
ஆபரணங்களின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.<br />
<br />
<br />
<b>* ஆதர்ஷ் ஊழல்: மேலும் சில கோப்புகள் மாயம்</b><br />
<br />
புது தில்லி, மே 14: ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் தொடர்பான மேலும் சில கோப்புகள் மாயமாகி உள்ளன.<br />
<br />
மும்பையில் கார்கில் வீரர்களுக்கு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டதில் மாபெரும் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சர்ச்சையால் அந்த மாநில முதல்வர் அசோக் சவாண் பதவியைப் பறிகொடுக்க வேண்டியிருந்தது.<br />
<br />
இந்த முறைகேட்டுப் புகாரை சிபிஐ கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வீடுகள் கட்டியது தொடர்பாக மகாராஷ்டிர நகர மேம்பாட்டுத் துறையிடம் இருந்த சில கோப்புகள் ஏற்கெனவே மாயமாகின. ஊழலை மூடிமறைக்கவே இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அத்துறையைச் சேர்ந்த 3 அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.<br />
<br />
இந்நிலையில் மீண்டும் கோப்புகள் மாயமாகியுள்ளன. கடலோரத்தில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கோரி மாநில அரசுக்கு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் எழுதிய கடிதம், அந்தக் கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மாநில அரசு அனுப்பியதற்கான ஆதாரம், அதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பியப் பதில் கடிதம் ஆகியவை உள்பட சில முக்கியமான ஆவணங்கள் கோப்பில் இடம்பெற்றிருந்தன.<br />
<br />
அந்தக் கோப்புகளை ஆய்வு செய்ய சிபிஐ அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போதுதான் கோப்புகள் மாயமானது தெரியவந்தது.<br />
<br />
"சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சென்ற போதுதான் கோப்புகள் மாயமானது தெரியவந்தது. மாயமான கோப்புகள் அனைத்துமே முக்கியமானவை. இதுகுறித்து எழுத்துப்பூர்வாகப் புகார் கொடுக்குமாறு அந்த அமைச்சக அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்' என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
மும்பையில் கார்கில் வீரர்களுக்கு வீடுகள் கட்டியதில் கடலோர ஒழுங்குமுறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குற்றம்சுமத்தியது.<br />
<br />
<b>* விவசாயிகளை கடத்திய நக்சல்கள்</b><br />
<br />
சசாராம், மே.14: பிகார் மாநிலத்தில் 4 விவசாயிகளை கடத்திச் சென்றனர் மாவோயிஸ்டு தீவிரவாதிகள்.<br />
<br />
பிகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்திலுள்ள பரார்யா கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு 40 க்கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்டுகள் வந்தனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றதாக போலீஸôர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையும், விவசாயிகளை மீட்கும் பணியையும் போலீஸôர் மேற்கொண்டுள்ளனர்.<br />
<br />
<b>* கோவா அமைச்சருக்கு அபராதம்</b><br />
<br />
மும்பை, மே.14:அன்னியச் செலாவணி வழக்கில் கைது செய்யப்பட்ட கோவா அமைச்சருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
கோவா மாநில கல்வியமைச்சர் அட்டனாசியோ மோன்ஸிரேட் . இவர் கடந்த ஏப்ரல் மாதம், கணக்கில் வராத வெளிநாட்டு பணங்களை வைத்திருந்ததற்காக மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். துபாய் செல்லவிருந்த இவர் 25,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பயணிகள் காசோலையும். 70,000 திர்ஹாம்கள்,மற்றும் ரூ.1.25 லட்சம் ஆகியவற்றையும் வைத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான அன்னியச் செலாவணியை வைத்திருந்ததால், சுங்க சட்டத்தின் கீழும், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
இப்போது அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில், கூடுதலாக எடுத்துச் செல்ல முயன்ற பணத்துக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திவிட்டு அவர் பணத்தை மீட்டுச் செல்லலாம் என்று சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில், பாகிஸ்தான் பாடகர் ரஹத் ஃபத்தே அலி கானும், அவரது மேலாளர் மரூஃப்பும் ரூ.60 லட்சம் மதிப்பிலான அன்னியச் செலாவணியை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<b style="color: #6600cc;">மாநிலச் செய்தி மல்ர் </b>:<br />
<br />
<b>* பெட்ரோல் விலை உயர்வு: பல்வேறு அமைப்புகள் கண்டனம்</b><br />
<br />
சென்னை, மே 14: பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வு அனைத்துப் பிரிவு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.<br />
<br />
தமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர். சுகுமார்: எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன என்று கூறி பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே நஷ்டம் என்பதில் உண்மையில்லை. பொதுமக்களின் நலன் கருதாமல் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறும் நோக்கிலேயே இவ்வாறு பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.<br />
<br />
இப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதால் எல்லா பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். இதன் பெரும் சுமை சாதாரண மக்களின் மேல் விழும்.<br />
<br />
எனவே பொதுமக்களின் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்வை மேற்கொள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்.<br />
<br />
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்: அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இப்போது பெட்ரோல் விலையைக் குறைப்பதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு ரூ. 16-ம் மாநில அரசுக்கு ரூ.14-ம் வரியாகக் கிடைக்கிறது. இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் ரூ. 30 வரியாக வசூல் செய்வது என்பது மிகப் பெரும் மோசடியாகும்.<br />
<br />
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க வேண்டுமானால் பெட்ரோலின் விலையை உயர்த்தத் தேவையில்லை. மாறாக பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் விலக்கிக் கொண்டாலே போதும் இதனால் எல்லா பொருள்களின் விலையும் 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துவிடும்.<br />
<br />
ஆட்டோ தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் (சிஐடியு): இந்தக் கடுமையான பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.<br />
<br />
பெட்ரோலிய எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் பெரும் முதலாளிகள், லாபத்தை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது.<br />
<br />
<b> </b>எனவே, ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 16) எங்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். <br />
<b><br />
<br />
* திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம்</b><br />
<br />
கே.பாலசுப்பிரமணியன்<br />
<br />
சென்னை, மே 14: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அந்தத் தேர்வை எழுதிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.<br />
<br />
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.<br />
<br />
இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது.<br />
<br />
10 லட்சம் பேர்: வி.ஏ.ஓ. தேர்வை தமிழம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டுகளில் தேர்வு நடத்தப்பட்ட மாதத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி முன்பே அறிவிக்கப்படும்.<br />
<br />
ஆனால், இந்த ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களை நெருங்கும் நிலையில் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.<br />
<br />
என்ன நடக்கிறது? அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பும் தேர்வாணையத்திலேயே பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாகவே வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.<br />
<br />
விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவைகளும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.<br />
<br />
விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.<br />
<br />
இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாளின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.<br />
<br />
இதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. போதுமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
பணியாளர்கள் நியமிக்கப்பட்டும்...தேர்வுக்கா<br />
<div dir="ltr"><wbr></wbr>ன முடிவுகளை வெளியிடுவதற்கு வசதியாகப் புதிய பணியிடங்கள் உருவாக்கப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அனுமதி அளித்து அந்தப் பணியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.<br />
<br />
அதிமுக தேர்தல் அறிக்கையில்... சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் வி.ஏ.ஓ. தேர்வு குறித்து பிரதானமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தேர்தல் அறிக்கையின் 25-வது பக்கத்தில், "கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் உட்பட வெளியிடப்படாமல் உள்ள அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட உத்தரவிடப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியாக அதை நிறைவேற்ற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br />
<br />
<br />
லஞ்ச ஒழிப்புத் துறையின் பிடியில் 800 வி.ஏ.ஓ.க்கள்<br />
<br />
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் வரை கணக்கிடப்பட்டதன் அடிப்படையில் 3 ஆயிரத்து 484 வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் உள்ளன. அதன்படி, அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதனிடையே, இரண்டு ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சுமார் 800-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.<br />
<br />
இந்தக் காலகட்டங்களில் அவர்கள் பணி செய்ய முடியாது. பிழைப்பூதியம் என்ற அளவில் அவர்களுக்கு சிறு தொகை வழங்கப்படும். இதன்படி, தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. <br />
<br />
*<b> நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா</b><br />
நாகப்பட்டினம், மே 14: நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்காவின் 454-ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, சந்தன பூசும் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.<br />
<br />
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.<br />
<br />
நிகழாண்டுக்கான (454-ம் ஆண்டு) கந்தூரி விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 12-ம் தேதி பீர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.<br />
<br />
தொடர்ந்து, சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.<br />
<br />
நாகை யாஹூசைன் பள்ளி தெருவிலிருந்து தொடங்கிய சந்தனக் கூடு ஊர்வலம், சாலா பள்ளித் தெரு, நூல்கடைத் தெரு, பெரிய கடைத் தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக, சனிக்கிழமை அதிகாலை தர்காவின் அலங்கார வாசலை அடைந்தது.<br />
<br />
இதையடுத்து, பாரம்பரிய முறைப்படி மிகுந்த மரியாதையுடன், சந்தனக் கூட்டிலிருந்த சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், ஹஜரத்து ஆண்டவர்கள் புனித ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.<br />
<br />
திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரமுகர்கள், இறை அன்பர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.<br />
<br />
<br />
* <b>நிறைவுபெறும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்</b><br />
<br />
<img alt="kolidam.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff164fd77fda0d&attid=0.3&disp=emb&realattid=ii_12ff137b226d10c0&zw" title="kolidam.jpg" /><br />
<br />
சிதம்பரம், மே 14: சிதம்பரத்தை அடுத்த குமராட்சி பகுதியில் சுமார் 86 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.<br />
<br />
÷சிதம்பரத்தை அடுத்த குமராட்சி, புளியங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட சுமார் 86 கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இக்கிராமங்களில் சுனாமியின் போது ஏற்பட்ட மாற்றத்தால் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீóர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவில்லை.<br />
<br />
÷இந்நிலையில் தமிழக அரசு ரூ.17 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அத்திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் புளியங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் நீருற்று கிணறு அமைக்கப்பட்டு வென்னையூர் வழியாக குழாய்கள் புதைக்கப்பட்டது. ÷இத்திட்டத்தில் 35 கி.மீ. ஒரு பிரிவாகவும், 15 கி.மீ. ஒரு பிரிவாகவும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குழாய்கள் சிதம்பரம் அருகே உள்ள புஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் முடிவடைகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரை சேமித்து வைக்க மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 87 கிராமங்களும், இவையல்லாமல் 121 வழியோர கிராமங்களும் பயன்பெறும்.<br />
<br />
இத்திட்டப் பணிகள் ஒரு பிரிவு மே மாத இறுதியிலும், மற்றொரு பிரிவு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவுறும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். <br />
.<br />
<br />
<b style="color: #6600cc;">ஆரோக்கியச் செய்தி மலர் :</b><br />
<br />
<img alt="14-pineapple300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff164fd77fda0d&attid=0.6&disp=emb&realattid=ii_12ff136f6cc5a7ca&zw" title="14-pineapple300.jpg" /><br />
<br />
<b>* தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…</b><br />
பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.<br />
<br />
இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..<br />
<br />
மருத்துவகுணம்<br />
<br />
அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.<br />
<br />
குழந்தைகளுக்கு மருந்து<br />
<br />
அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.<br />
<br />
அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.<br />
<br />
இதயக்கோளாறு நீங்கும்<br />
<br />
அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.<br />
<br />
ஜீரணசக்தி அதிகரிக்கும்<br />
<br />
அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.<br />
<br />
பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.<br />
<br />
பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.<br />
<br />
தொப்பை கரையும்<br />
<br />
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.</div><div dir="ltr"></div><b style="color: #6600cc;">வர்த்தகச் செய்தி மலர் :</b><br />
<br />
<b>* தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும், ஏற்றுமதியும் கை கொடுக்கவில்லை<br />
</b><br />
மே 15,2011,04:59<br />
நடப்பு வாரத்தில், திங்கள்கிழமை முதல் வியாழன் வரை, பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், வெள்ளிக்கிழமையன்று, வர்த்தகத்தில் ஏற்பட்ட உயர்வு நிலை, இழப்பை ஓரளவிற்கு சரிகட்டியது.<br />
<br />
வெள்ளிக்கிழமையன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 195 புள்ளிகள் அதி கரித்து, 19,531 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 58 புள்ளிகள் உயர்ந்து, 5,544 புள்ளிகளிலும் நிலைபெற்றன. ஆக, சென்ற வாரத்தில்,'சென்செக்ஸ்' 12 புள்ளிகளும், 'நிப்டி' 7 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது.சந்தையில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்: முதலாவதாக, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில், 7.3 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. இது, இதற்கு முந்தைய நான்கு மாதங்களாக, 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இரண்டாவதாக, உணவுப் பொருள் பணவீக்கம், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்., 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.7 சதவீதமாக குறைந்திருந்தது. மூன்றாவதாக,சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி,சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 34 சதவீதம் அதிகரித்திருந்தது. இவையனைத்தும், வியாழக்கிழமையன்று, நடைபெற்ற நிகழ் வுகளே. ஆனால், இவை, அன்றைய பங்கு வர்த்தகத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வெள்ளியின் விலை: வெள்ளி உலோகத்தின் விலை, மேலும், கீழுமாகத் தான் உள்ளது. வாங்க நினைப்பவர்கள், விலையை பொறுத்து, முழு அளவில் வாங்க முடியவில்லை என்றாலும், சிறிய அளவிலாவது வாங்கலாம். இந்தியாவில் இதன் விலை அதிகரித்துள்ள போதிலும், உலகளவில் இதன் விலை சரிந்து கொண்டு தான் உள்ளது.தங்கம், வெள்ளியென்று பார்த்துக் கொண்டுள்ளோம். சத்தமில்லாமல் வைரத்தின் விலையும் உயர்ந்து கொண்டுள்ளது. சென்ற ஆண்டை விட, இவ்வாண்டில், இதன் விலை 40 - 50 சதவீதம் வரை, அதிகரித்துள்ளது. கடந்த பல வருடங்களாக விலைகள் அதிக அளவு உயராததும், பாலிஷ் செய்யும் பணிக்கு ஆட்கள் கிடைக்காததும் தான், இதன் விலை உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.போர்டிஸ் ஹெல்த்கேர்: போர்டிஸ் ஹெல்த்கேர், தொடர்ந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. இதில், தற்போது சேர்ந்திருப்பது, ரெலிகேர் லேபரட்டரீஸ். இந்நிறுவனத்தை, 803 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது போர்டிஸ். மருத்துவமனை நிறுவனப் பங்குகள் என்று பார்க்கும் போது, அப்போலோவுடன் போட்டி போடும் நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. நீண்டகால அடிப்படையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.<br />
<br />
காலாண்டு முடிவுகள்: இன்னும் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்து கொண்டுள்ளன. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், சாந்தி கியர்ஸ், கேரியர் பாயிண்ட், சட்லெஜ் டெக்ஸ்டைல்ஸ், சீமென்ஸ் ஆகிய நிறுவனங் களின் நிதிநிலை செயல்பாடு, சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, வளர்ச்சி கண்டுள்ளது.<br />
<br />
புதிய வெளியீடுகள்: பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. பங்கின் வெளியீட்டு விலை, 193 - 203 ரூபாய் என்றளவில் நிர்ணயிக்கப் பட்டி ருந் தது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியும் இருந்தது. மொத்தமாக, இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 4.34 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், சிறிய முதலீட் டாளர்களிடமிருந்து, 2 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 56 பங்குகள் வேண்டி விண்ணப் பித்தவர்களுக்கு, 28 பங்குகள் கிடைக்க வாய்ப் புள்ளது. விலை 203 ரூபாயில் நிர்ணயிக்கப்படலாம். கேலக்சி சர்பாக்டென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய வெளி யீடு, 13ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிறுவனம், பங்கின் வெளியீட்டு விலையை 325 - 340 ரூபாய் என்றளவில் வெளியிட்டுள்ளது. ரசாயன தொழிலில் ஈடுபட்டு வரும், இந்நிறுவனத்தின் பங்கு வெளி யீட்டிற்கு 'கிரிசில்'அமைப்பு, 5க்கு 4 என்றளவில் தரக்குறியீடு வழங்கியுள்ளது. இடர்பாட்டை எதிர் கொண்டு முதலீடு செய்ய விரும்புபவர்கள், இதன் பங்கு வெளியீட்டில் பங்கேற்கலாம்.<br />
<br />
பங்கு தொகுப்பில் இருக்க வேண்டியவை: உங்கள் பங்கு தொகுப்பில், ஜுபிலியண்ட் புட் வொர்க்ஸ், இண்டஸ்இந்த் பேங்க், தனலட்சுமி பேங்க் போன்றவற்றின் பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம்.<br />
<br />
வரும் வாரம் எப்படி இருக்கும்? இரு மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், வெள்ளிக்கிழமையன்று, பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இந்த நிலை வரும் வாரத்திலும் சிறிது தொடரக் கூடும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை, ஓரளவிற்கு ஈடு செய்யலாம். உள்நாட்டு நிலவரங்கள் சரியாக இருந்தாலும், நம் நாட்டின் பங்கு சந்தைகள், உலக நிலவரத்தை பொறுத்தே உள்ளது. எனவே, நாம் அதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.<br />
<br />
- சேதுராமன் சாத்தப்பன் - <br />
<br />
<br />
<b style="color: #6600cc;">விளையாட்டுச் செய்தி மலர் :</b><br />
<br />
1<b>0 ரன்களில் டெக்கான் வெற்றி</b><br />
மும்பை, மே 14: மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெக்கான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.<br />
<br />
முதலில் ஆடிய டெக்கான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.<br />
<br />
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெக்கான் அணியில் லம்ப் ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே வெளியேறினார். மும்பையின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்ததால் டெக்கான் வீரர்கள் ரன் சேர்க்கத் தடுமாறினர்.<br />
<br />
சங்ககரா 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இரண்டு சிக்ஸர்களை விளாசிய சோஹல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் தவாணும், மிஸ்ராவும் அதிரடியாக விளையாட டெக்கான் அணி 135 ரன்கள் குவித்தது. தவாண் 27 ரன்களும், மிஸ்ரா 6 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.<br />
<br />
மும்பை தோல்வி: பின்னர் ஆடிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிளிஸ்ஸôர்டு 1, ராயுடு 2, ரோஹித் சர்மா 4, சைமண்ட்ஸ் 8 என அடுத்தடுத்து நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் கேப்டன் சச்சின் நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 83 ரன்களை எட்டியபோது சச்சின் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.<br />
<br />
இதன்பிறகு ஜோடி சேர்ந்த பொல்லார்டும், ஹர்பஜனும் போராடினர். கடைசி ஓவரில் பொல்லார்டு ஆட்டமிழக்க மும்பையின் தோல்வி உறுதியானது. இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்களில் தோல்வி கண்டது. ஹர்பஜன் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.<br />
<br />
டெக்கான் தரப்பில் ஆனந்த் ராஜன் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஐபிஎல் தொடரில் டெக்கான் அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும்.<br />
<br />
இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்த டெக்கான் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி அணி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.<br />
<br />
பேட்டிங்கில் 18 ரன்கள் சேர்த்ததோடு, 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்திய மிஸ்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.<br />
<br />
சுருக்கமான ஸ்கோர்<br />
<br />
டெக்கான் - 135/6<br />
<br />
(தவாண் 27*, குல்கர்னி 3வி/26)<br />
<br />
மும்பை - 125/8<br />
<br />
(சச்சின் 37, ஆனந்த் ராஜன் 3வி/27)<br />
<br />
<b>* பெங்களூருக்கு 8-வது வெற்றி</b><br />
<br />
பெங்களூர், மே 14: பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.<br />
<br />
இந்த வெற்றியின் மூலம் 17 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது பெங்களூர். அந்த அணியின் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 38 ரன்கள் குவித்ததன் மூலம் 436 ரன்களுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.<br />
<br />
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் பெங்களூர் அணிக்கு 13 ஓவர்களில் 102 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 12.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து பெங்களூர் வெற்றி கண்டது.<br />
<br />
மழையால் பாதிப்பு: முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் மோர்கன் 2, காலிஸ் 17, கேப்டன் கம்பீர் 7 என அடுத்தடுத்து வெளியேறினர். கொல்கத்தா அணி 11 ஓவர்களில் 69 ரன்களை எட்டியபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது.<br />
<br />
இதன்பிறகு ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பதான் 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். 13 ஓவர்களில் கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்தது.<br />
<br />
பெங்களூர் அணியில் கெயில், போமர்ஸ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார் கெயில். உனட்கட் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்டி விருந்து படைத்தார் கெயில். இதனால் பெங்களூர் 2 ஓவர்களில் 39 ரன்களை கடந்தது.<br />
<br />
கெயில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரெட் லீ வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் இந்த ரன்னை எடுத்தார். போமர்ஸ் 16 ரன்கள் எடுத்தார். கோலி 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். 12.3 ஓவர்களில் பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.<br />
<br />
கெயில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.<br />
<br />
<br />
<br />
சுருக்கமான ஸ்கோர்<br />
<br />
கொல்கத்தா - 89/4<br />
<br />
(பதான் 36, திவாரி 19*)<br />
<br />
பெங்களூர் - 105/6<br />
<br />
(கெயில் 38, போமர்ஸ் 16)<br />
<br />
<br />
<br />
இன்றைய ஆட்டங்கள்<br />
<br />
* பஞ்சாப் - டெல்லி, இடம்: தர்மசாலா, நேரம்: மாலை 4.<br />
<br />
* கொச்சி - ராஜஸ்தான், இடம்: இந்தூர், நேரம்: இரவு 8.<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">ஆன்மீகச் செய்தி மல்ர் :</b><br />
<br />
<b style="color: #6600cc;">* அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோவில்</b><br />
<br />
மூலவர் : தெய்வநாயகப்பெருமாள்<br />
உற்சவர் : மாதவப்பெருமாள்<br />
அம்மன்/தாயார் : கடல் மகள் நாச்சியார்<br />
தல விருட்சம் : -<br />
தீர்த்தம் : சோபன, தேவசபா புஷ்கரிணி<br />
ஆகமம்/பூஜை : -<br />
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்<br />
புராண பெயர் : கீழச்சாலை<br />
ஊர் : திருத்தேவனார்த்தொகை<br />
மாவட்டம் : நாகப்பட்டினம்<br />
மாநிலம் : தமிழ்நாடு <br />
<br />
பாடியவர்கள்<br />
<br />
மங்களாசாஸனம்<br />
<br />
திருமங்கையாழ்வார்<br />
<br />
போதலர்ந்த பொழில் சோலைப் புறமெங்கும் பொறு திறைகள் தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணி தென்கரைமேல் மாதவன் தானுறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு தேதென வென்றிசை பாடும் திருத்தேவனார்த் தொகையே<br />
<br />
-திருமங்கையாழ்வார் <br />
<br />
தல சிறப்பு:<br />
<br />
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மேற்கு பார்த்த பெருமாள் என்பதால் மிகவும் விசேஷம். கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.<br />
<br />
பெருமாளின் திருமணம் நடந்த ஊராதலால் விமானத்தின் பெயர் சோபன (மங்கள) விமானம் என்று பெயர். கர்ப்பகிரகத்தின் முன்பு விசாலமான மண்டபம் இருக்கிறது. கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வசிஷ்டர் தரிசனம் செய்துள்ளார்<br />
<br />
தலபெருமை:<br />
<br />
திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திரு மகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகை என பெயர் ஏற்பட்டது.<br />
<br />
தல வரலாறு:<br />
<br />
துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், "இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்', என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.<br />
<br />
சிறப்பம்சம்:<br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு<br />
<br />
திருவிழா:<br />
<br />
வைகுண்ட ஏகாதசி<br />
<br />
திறக்கும் நேரம்:<br />
<br />
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்<br />
<br />
<br />
<b style="color: #6600cc;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</b><br />
<br />
<img alt="14-peace300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff16603c9d0c5d&attid=0.2&disp=emb&realattid=ii_12ff16290e7335b9&zw" title="14-peace300.jpg" /><br />
<br />
<b style="color: #6600cc;">தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி</b><br />
<br />
மனதிற்கும், உயிருக்கும் தொடர்பு உண்டு. உயிருக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு. மனமும், உயிரும் இறைவனால் இயங்குகின்றன. மனம் தெய்வத்தன்மை வாய்ந்தது. தெய்வ நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும், செய்யும் காரியம் நிச்சயம் நிறைவேறும்.<br />
<br />
மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களுக்கு எந்தவித சங்கடத்தையும், துன்பத்தையும், உண்டாக்கக்கூடாது. மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் முக்கிய சக்தியாக இருப்பது மனத்தூய்மை. மனத்தூய்மை உடையவர் யாரும் எந்தவித கெட்ட சக்திக்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.<br />
<b style="color: #6600cc;"><br />
வினாடி வினா :</b><br />
<br />
வினா - ஆஸ்கார் விருது பெற்ற முதல் நடிகர் யார் ?<br />
<br />
விடை - எமில்ஜேனிங்ஸ்.<br />
<br />
<br />
<b><span style="color: #3333ff;"><span style="color: #6600cc;">இதையும் படிங்க </span>:</span><br />
<br />
திறமை என்னை உயர்த்தியது!'<br />
<br />
<img alt="large_241027.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12ff16603c9d0c5d&attid=0.3&disp=emb&realattid=ii_12ff15dc0b197f0a&zw" title="large_241027.jpg" /></b><br />
என்.சி.சி.,யில் ஆரம்பித்து, இன்று இந்திய ராணுவம் வரை முன்னேறியுள்ள பாரதி: என் பெற்றோர், என்னை ஒரு வட்டத்திற்குள் வளர்க்க நினைக்காமல், தைரியத்துடன் வளர விட்டனர். அது தான், என்.சி.சி.,யில் என்னை சேர வைத்தது. அதில் தலைமை பதவியை, என் திறமை எனக்கு வாங்கிக் கொடுத்தது. இந்தியக் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு, என் செயல்பாடுகளால் கிடைத்தது.அதே நேரம், அமெரிக்க வாய்ப்பும் கிடைத்தது. அதாவது, எங்க கல்லூரியில் இருந்து இரண்டு சிறந்த மாணவியரை தேர்ந்தெடுத்து, அமெரிக்காவில் உள்ள, மேரி பால்டிவின் கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு, நமக்குப் பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க, கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்புவர்.அந்த பயிற்சியில் நான் தேர்ந்தெடுத்த படிப்பு அமெரிக்க ராணுவம். அங்கு அவர்கள், ராணுவத்தின் நுட்பமான அணுகுமுறைகள், விதிமுறைகளை தெரிந்து கொண்டேன். அந்த கல்லூரி மாணவியருடன் இணைந்து, ட்ரக்கிங், துப்பாக்கி சுடுதல் என்று நிறைய பயிற்சிகள் செய்தேன். அமெரிக்க வாய்ப்பு வந்ததால், இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.பின், கடுமையாக உழைத்து, அந்த வாய்ப்பையும் நான் பெற்றேன். கூடவே, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு போய், அவருடன் சேர்ந்து உணவருந்தியதையும் மறக்க முடியாது.சென்னையில் நடந்த மாநில அளவிலான, என்.சி.சி., ஊர்வலத்தில் பங்கேற்கும் போது, மதுரை டீமிற்கு நான் தான் தலைவர்; அதில் நாங்க தான் ஜெயித்தோம். இரவு உணவுக்கு, கவர்னர் வீட்டிற்கு அழைத்திருந்தனர். இவை அனைத்தும் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள்.நான், என்.சி.சி., யை உளமார நேசித்து, கடமையை செய்த பலனால், இப்போது இந்திய ராணுவத்தில் சேரும் வாய்ப்பு வந்துள்ளது. ராணுவத்தில் சேரும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.<br />
<br />
"சேவை, எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிறைவு!' :சேவையையே வாழ்க் கையாக கொண்டிருக்கும் ஆனந்தி: உசிலம்பட்டி தான் என் சொந்த ஊர். சென்னைக்கு வாக்கப்பட்டு வந்தேன். குழந்தை இல்லாததால், நிறைய பிரச்னை. நிம்மதிக்காக கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், அனாதை இல்லம்னு போய், அவங்களுக்கு சின்ன சின்ன சேவைகளை, வீட்டுக்கு தெரியாம செய்தேன்.வீட்டுல தெரிஞ்சு, சேவைன்னு சொல்லி, காசை அழிச்சுக்கிட்டிருக்கியான்னு, மனசு மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்தினாங்க. பிறந்த வீடு மற்றும் கணவர் தரப்பிலிருந்தும் பெருசா சப்போர்ட் இல்லை. நிர்க்கதியா நின்ற நேரத்தில், சின்னதா சேவைகள் செஞ்சப்போ அறிமுகமான அந்தோணியும், அவரது மனைவி பத்மாவதியும், நிதி உதவி அளித்து உதவினாங்க.அதன்பின், சுதந்திரமா, முழுமையா, சேவைப் பயணத்தை தொடர்ந்தேன். சாலையில் அநாதரவா திரிஞ்சவங்களுக்கு உதவும் போது, ஆசிரியர், மார்ட்டின் கென்னடி, ஒரு அமைப்பை துவக்க, அனைத்து உதவிகளையும் செய்தார். கடந்த, 2004ல், ராயபுரத்தில், ஒரு வீட்டில ஆரம்பிச்சது தான் உதவும் கரங்கள். அந்த அமைப்புக்கு, எம்.ஏ., பட்டதாரியான பார்வையற்ற பெண், சுனாமியில பாதிக்கப்பட்ட ஒரு பெண், இவங்க தான் என் முதல் தத்துக் குழந்தைகள். என்னைப் பத்திக் கேள்விப்பட்டவங்க, அவங்களாவே நிதி உதவி அளித்தனர். அந்த நிதியைக் கொண்டு, சேவையை விரிவுபடுத்தினேன். பள்ளியைப் பாதியிலேயே நிறுத்திய குழந்தைகள், படிப்பு பறிபோனவர்கள் என பலரையும், மீண்டும் படிக்க வைக்கிறேன். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டலாக இருப்பதில், ஒரு சின்ன சந்தோஷம்.நான் படிக்க வெச்ச யார் கிட்டயும், அமைப் புக்கு பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கிறதில்லை. சேவைங்கறது, எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிறைவு. ஒரு குழந்தை இல்லைங்கற காரணத்துக்காக துரத்தி அடிக்கப்பட்ட எனக்கு, இப்போ ஆயிரமாயிரம் குழந்தைகள்.</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-80819209255672321142011-05-12T07:12:00.000+05:302011-05-14T02:15:22.960+05:30இன்றைய செய்திகள் - மே,12, 2011.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<div><b><span style="color: #009900;">முக்கியச் செய்தி :</span></b></div><div><br />
</div><div><b>* ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-தேர்தல் ஆணையம் தயார்</b></div><div><b><br />
</b></div><div>டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.</div><div><br />
</div><div>தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதியே தேர்தல் முடிந்து விட்டது. அதே தினத்தில் கேரளா, புதுச்சேரிக்கும் தேர்தல் நடந்தது. அஸ்ஸாமில் 2 கட்டமாக நடந்தது. </div><div><br />
</div><div>மேற்கு வங்க மாநிலத்தில்தான் ஆறு கட்டமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம். மேற்கு வங்க தேர்தல் முடிவதற்காக மற்ற நான்கு மாநிலங்களும் காக்க வேண்டியதாகி விட்டது.</div><div><br />
</div><div>மேற்கு வங்கத்திலும் தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. இதையடுத்து வருகிற 13ம் தேதி இந்த ஐந்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.</div><div><br />
</div><div>ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 839 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.</div><div><br />
</div><div>வாக்கு எண்ணும் மையங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </div><div><br />
</div><div>வாக்கு எண்ணும் பணியில் 43,982 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்புப் பணியில் 17,700 மத்திய படையினர் ஈடுபடவுள்ளனர்.</div><div><br />
</div><div>வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவுள்ளதால் பிற்பகல் 1 மணியளவில்தான் முதல் முடிவு தெரிய வரும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.</div><div><br />
</div><div>வாக்கு எண்ணிக்கை முழுவதும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படவுள்ளது. எந்தவித மோசடியும் நடைபெறாத வகையில் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.</div><div><br />
</div><div>தமிழகத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது குறித்து எக்ஸிட் போல் முடிவுகளை பலரும் வெளியிட்டுள்ளதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. மே 13ம் தேதியன்று நிஜமான முடிவுகள் தெரிந்து விடும் என்பதால் மக்கள் தங்களது பார்வையை ஒட்டுமொத்தமாக மே 13ம் தேதியை நோக்கி திருப்பி வைத்துள்ளனர்.</div><div><br />
</div><div><br />
</div><div><b>* இந்தியாவால் தேடப்படும் 50 பயங்கர குற்றவாளிகள் பட்டியல் பாக்.கிடம் ஒப்படைப்பு</b></div><div><br />
</div><div>டெல்லி: பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவால் தேடப்படும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கர குற்றவாளிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இவர்களில் முதல் இடத்தில் லஷ்கர் இ தொய்பா தலைவனான ஹபீஸ் சயீத் பெயர் இடம் பெற்றுள்ளது.</div><div><br />
</div><div>இந்தியா இதுபோல எத்தனையோ முறை பல பட்டியல்களை பாகிஸ்தானிடம் கொடுத்து விட்டது. ஆனால் அதை வாங்கி குப்பைக் கூடையில் போடுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது பாகிஸ்தான்.</div><div><br />
</div><div>இந்த நிலையில் தற்போது பின்லேடனை அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ள அமெரிக்காவைப் பார்த்து அதே பாணியில் இந்தியாவும் செயல்பட்டு மும்பையில் பயங்கரவாத செயலை அரங்கேற்றிய லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், நீண்ட காலமாக இந்தியாவால் கோரப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் போன்றோரை இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</div><div><br />
</div><div>இதற்கான வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறி விட்டது. இருப்பினும் பின்லேடன் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எழுந்துள்ள சர்வதேச நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது இந்தியா.</div><div><br />
</div><div>இதைத் தொடர்ந்து இந்தியாவால் தேடப்பட்டு வரும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கர குற்றவாளிகளின் பட்டியலைத் தயாரித்து அதை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இப்பட்டியலை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.</div><div><br />
</div><div>இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறான் சயீத். இவன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை நிறுவியவன். அந்த அமைப்புக்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து வேறு பெயரில் இயங்கி வருகிறான். மும்பையில் 3 நாட்கள் தீவிரவாதிகள் அரங்கேற்ற அதி பயங்கர தீவிரவாத சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியவன் இவனே.</div><div><br />
</div><div>அதேபோல ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவன் சயீத் சலாஹுதீன் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.</div><div><br />
</div><div>இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம், அவனது தம்பி அனீஸ் இப்ராகிம், டைகர் மேனன், சோட்டா ஷகீல் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 பேரில் 21 பேர் தாவூத் முகாமைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.</div><div><br />
</div><div>இவர்கள் போக பாகிஸ்தான் ஐஎஸ்ஐயைச்சேர்ந்த மேஜர் இக்பால் (இவன் மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.), மும்பை தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் சமீர் அலி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.</div><div><br />
</div><div>இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு முக்கிய நபர் மசூத் அஸார். இவன் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய்ப புள்ளி ஆவான். இவனைத்தான் கடந்த பாஜக ஆட்சி, தீவிரவாதிகளிடம் பத்திரமாக கொண்டு போய் ஒப்படைத்தது என்பது நினைவிருக்கலாம்.</div><div><br />
</div><div>இப்பட்டியலில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இடம் பெற்றுள்ளனர்.</div><div><br />
</div><div>இவர்கள் போக 2008 பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ரஷீத் அப்துல்லா என்கிற அபு ரெஹான், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த சீமா அஸாம், சையத் சைபுதீன் ஜபி, இப்ராகிம் அத்தார், அஸார் யூசுப், மிஸ்ரி ஸாகுர் இப்ராகிம் என்கிற போலா, சயீத் ஷாஹித் அக்தர், ஷகீர் முகம்மது என்கிற ராம் கோபால் வர்மா, அப்துல் ராப், சுபியான் முப்தி, யாக்கூப் கான் பதான் உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன.</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">உலகச் செய்தி மலர் :</span></b></div><div><br />
</div><div>*<b>அமெரிக்க தாக்குதலிலிருந்து தப்பிய ஒசாமா பின்லேடனின் மகன் எங்கே?</b></div><div><br />
</div><div><img alt="11-hamza-bin-laden300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cabb329ce5c&attid=0.6&disp=emb&realattid=ii_12fe19fb346107db&zw" title="11-hamza-bin-laden300.jpg" /></div><div><br />
</div><div>இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வீட்டை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டு நடத்திய தாக்குதலின்போது உயிர் தப்பிய பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.</div><div><br />
</div><div>அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள பின்லேடன் வசித்து வந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை சுட்டு வீழ்த்தியபோது, பின்டேனின் மகன்களில் காலித் என்பவர் சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் அங்கிருந்த பின்லேடனின் இன்னொரு மகனான ஹம்சா என்பவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் கொல்லப்படவில்லை, அமெரிக்கப் படையினரிடமும் சிக்கவில்லை. அதேபோல பாகிஸ்தான் படையினரிடமும் அவர் சிக்கவில்லை என்று தெரிகிறது.</div><div><br />
</div><div>ஹம்சாவின் தாயார், பாகிஸ்தான் படையினரிடம் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஹம்சா குறித்து யாரிடமும் தகவல் இல்லை.</div><div><br />
</div><div>அதேசமயம், பின்லேடன் உடலைத் தவிர வேறு யாருடைய உடலையும் தாங்கள் கொண்டு செல்லவில்லை. அதேபோல யாரையும் தாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.</div><div><br />
</div><div>ஒசாமா பின்லேடனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் உள்ளனர். அவருடைய பிள்ளைகள் தற்போது 18 பேர் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஹம்சா எத்தனையாவது குழந்தை என்பது தெரியவில்லை.</div><div><br />
</div><div>ஹம்சா தப்பியிருக்கலாம் அல்லது அவரை பாகிஸ்தான் படையினர் தங்கள் வசம் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.</div><div><br />
</div><div><b>* தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள்</b></div><div><b> </b></div><div><b><br />
</b></div><div>வாஷிங்டன்: எங்களது தந்தை ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். இது மிகக் கொடூரமான கொலை. அமெரிக்கப் படையினர் மிகவும் கொடூரமாக நடந்து எங்களது தந்தையின் உடலை கடலில் வீசியுள்ளனர். இது மனித நாகரீகத்திற்கு முரனாணது என்று பின்லேடனின் மகன்கள் குமுறியுள்ளனர்.</div><div><br />
</div><div>இதுகுறித்து பின்லேடனின் மகன்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது...</div><div><br />
</div><div>எங்களது தந்தையை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ள செயல் மிகவும் அத்துமீறிய, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அவரது உடலை கடலில் வீசியதும் கண்டனத்துக்குரியத. </div><div><br />
</div><div>ஏன் எங்களது தந்தையை கைது செய்ய அமெரிக்கப் படையினர் முயலவில்லை. அவரை கோர்ட்டில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும்.</div><div><br />
</div><div>எங்களது தந்தையின் மரணப் பின்னணி குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அடிப்படை மனித உரிமைகள், சட்ட நெறிமுறைகளைக் கூட அமெரிக்கா கடைப்பிடிக்கவில்லை. ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா. அவரது உடலை கடலில் வீசிய செயலும் நியாயமே இல்லாதது.</div><div><br />
</div><div>அரசியல் பிரச்சினைகளுக்கு இப்படிப்பட்ட படுகொலைகள் தீர்வல்ல. எங்களது தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.</div><div><br />
</div><div>பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அதிரடியாக கொன்ற அமெரிக்கப் படையினர் உடலை கடலில் வீசி விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. அவை மிகவும் கோரமாக இருப்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. இதனால் பின்லேடன் வேட்டையாடப்பட்ட விதம் பெரும் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.</div><div><br />
</div><div>இந்த நிலையில்தான் இதுகுறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பின்லேடனின் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</div><div><br />
</div><div><b>* இக்கட்டான நிலையை சமாளிக்க இந்திய உதவியை நாடும் ராஜபக்ஷே</b></div><div><br />
</div><div>கொழும்பு:""இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது,'' என, அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.</div><div><br />
</div><div>இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொது செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.</div><div><br />
</div><div>இது குறித்து கொழும்பில் நிருபர்களிடம் ராஜபக்ஷே குறிப்பிடுகையில், "இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கு தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.</div><div><br />
</div><div><b>* விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை</b></div><div><br />
</div><div>துபை, மே 11: உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.</div><div><br />
</div><div> ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.</div><div> புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.</div><div><br />
</div><div> போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</div><div><br />
</div><div> சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்</div><div><br />
</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">தேசியச் செய்திகள் :</span></b></div><div><br />
</div><div><b>* கனிமொழி, சரத்குமாரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை</b></div><div><br />
</div><div> டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தினர்.</div><div><br />
</div><div>ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். சரத்குமார் ரெட்டியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கலாகியுள்ளது.</div><div><br />
</div><div>இதைடுத்து இருவரும் கடந்த 6ம் தேதி சிபிஐ கோர்ட்டில் ஆஜராகினர். முன்ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த மனு மீதான தீர்ப்பு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.</div><div><br />
</div><div>இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது. அதை ஏற்று இருவரும் இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.</div><div><br />
</div><div>*<b> ஆதர்ஷ் ஊழல்:மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர்களுக்கு சம்மன் </b></div><div><br />
</div><div>ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தின் ஊழல் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் அசோக் சவாண் ஆகியோருக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.</div><div><br />
</div><div>ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக இருநபர் குழு,விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் இருவருக்கும் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.</div><div><br />
</div><div>ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக 14 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியருந்த நிலையில், விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவாண் ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு இருநபர் குழு உத்தரவிட்டுள்ளது.</div><div><br />
</div><div>கார்கில் போர் தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டிய வீடுகளில் 40 விழுக்காடு வீடுகளை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்க அசோக் சவாண் பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.</div><div><br />
</div><div><br />
</div><div><b>* போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்</b></div><div><br />
</div><div><img alt="11-supreme-court3-300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cabb329ce5c&attid=0.2&disp=emb&realattid=ii_12fe1a0838244d00&zw" title="11-supreme-court3-300.jpg" /></div><div><br />
</div><div>டெல்லி: போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி சிபிஐ இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.</div><div><br />
</div><div>இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தாமதமாக மறு விசாரணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இதற்கு என்ன காரணம் என்பதை சிபிஐயும், மத்தியப் பிரதேச அரசும் தெளிவாக விளக்கவில்லை.</div><div><br />
</div><div>முன்பே அவர்கள் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த தாமதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.</div><div><br />
</div><div>இந்த உத்தரவின் மூலம் போபால் விஷ வாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக அளவிலான நிவாரண நிதி கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது.</div><div><br />
</div><div>1984ம் ஆண்டு போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய விஷ வாயுவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்போடு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்.</div><div><br />
</div><div>மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடையும் தரவில்லைய யூனியன் கார்பைடு. இந்த நிலையில் இவ்வழக்கில் 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதில் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீதான கடுமையான குற்றச்சாட்டை நீக்கியது உச்சநீதிமன்றம்.</div><div><br />
</div><div>இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத்தான் இப்போது சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டி, இத்தனை காலம் சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்று காட்டமாக கேட்டுள்ளனர்.</div><div><br />
</div><div>மேலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போபால் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், மிக மிக குறைந்த அளவிலான தண்டனை தரப்பட்டது. இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை விட கொடுமையாக தண்டனை விதிக்கப்பட்ட அத்தனை பேரும் உடனடியாக ஜாமீனிலும் வெளியாகி விட்டனர்.</div><div><br />
</div><div>தற்போது உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள (அதாவது 2 ஆண்டு சிறை) அத்தனை பேரும் இந்த காலத்தை முடித்து விட்டு வெளியாகி விடும வாய்ப்பு உருவாகி விட்டது. மேலும் யூனியன் கார்பைடு ஆலையின் தவறால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மேல் நிவாரணம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டு விட்டது.</div><div><br />
</div><div>போபால் வழக்கில், மகிந்திரா, விஜய் கோகலே, கிஷோர் காம்தார், முகுந்த், செளத்ரி, கே.வி.ஷெட்டி, குரேஷி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.</div><div><br />
</div><div> </div><div>*<b> ஆந்திர எம்.எல்.ஏ வை அடித்து விரட்டிய மலைவாழ் மக்கள்</b></div><div><br />
</div><div>ஹைதராபாத்: தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.</div><div><br />
</div><div>ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.</div><div><br />
</div><div>இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப்படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.</div><div><br />
</div><div>அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.</div><div><br />
</div><div>ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்.</div><div><br />
</div><div>இதை யடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.</div><div><br />
</div><div>இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.</div><div><b><br />
</b></div><div><b>* பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?</b></div><div><br />
</div><div>டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைச் சமாளிக்க பெட்ரோல், சீஸல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.</div><div><br />
</div><div>பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3-ம், டீஸல் விலை ரூ 4-ம், கேஸ் விலை ரூ 25 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு மட்டும் நாளை நள்ளிரவே அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.</div><div><br />
</div><div>சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.</div><div><br />
</div><div>தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ 1.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.</div><div><br />
</div><div>தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.</div><div><br />
</div><div>ஆனால் சில மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.</div><div><br />
</div><div>இதேபோல் டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது.</div><div><br />
</div><div>*<b> தமிழ்நாட்டுப் பெண் ஐ.ஏ.எஸ்ஸில் முதலிடம்</b></div><div><br />
</div><div><img alt="iasstud.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cabb329ce5c&attid=0.5&disp=emb&realattid=ii_12fe1959c6449e60&zw" title="iasstud.jpg" /></div><div><br />
</div><div>சென்னை, மே 11: இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.</div><div><br />
</div><div> மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.</div><div> இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.</div><div><br />
</div><div> 2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.</div><div><br />
</div><div> கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார்.</div><div><br />
</div><div> அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார். இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை.</div><div><br />
</div><div> கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</div><div> </div><div><br />
</div><div><b>* ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்: தமிழகத்தைச் சேர்ந்த98 பேர் தேர்ச்சி</b></div><div><br />
</div><div><img alt="img1110511041_1_1.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cabb329ce5c&attid=0.1&disp=emb&realattid=ii_12fe1a00bd9939ff&zw" title="img1110511041_1_1.jpg" /></div><div><br />
</div><div>மத்திய அரசுப் பணியாளர் தேர்வகம் நடத்திய இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றிற்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவ, மாணவியர் முதல் 10 இடங்களில் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி முதலிடத்தில் தேர்வாகியுள்ளார். </div><div><br />
</div><div>2011ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2,589 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 920 பேர் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். </div><div><br />
</div><div>இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டக் கல்வி பயின்ற பட்டதாரி திவ்யதர்ஷினி முதலிடத்தை வென்றுள்ளார். சைதை சா.துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் இலவச கல்வி பயிற்சியில் பயின்ற ஆர்.வி.வருண்குமார் 3வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். </div><div><br />
</div><div>நெல்லையைச் சேர்ந்த அபிராமி சங்கரன் 7வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேய அறக்கட்டளையைச் சேர்ந்த மற்றொரு மாணவரான எம்.அரவிந்த் 8வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆக முதல் 10 இடங்களில் வென்ற மாணவர்களில் இருவர் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</div><div><br />
</div><div>இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 98 பேர் தேச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 36 பேர் ஆவர். இவர்களில் 29 பேர் மாணவர்கள், 7 பேர் மாணவிகள். </div><div><br />
</div><div>இவர்களில் ஆர்.ராகப்பிரியா 28வது இடத்திலும், மீர் முகமது 59வது இடத்திலும், எஸ்.கார்த்திகேயன் 118வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பி.சீனிவாசன் என்ற மாணவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகத்தைச் சேர்ந்த அவினாஷ் கே.நிலாங்கர், சி.பிரபாகர் ஆகிய மாணவர்கள் மனிதநேயத்தில் பயிற்சி பெற்றுத் தேர்வாகியுள்ளனர்.</div><div><br />
</div><div>கடந்த 3 ஆண்டுகளில் மனித நேயத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு 85 பேரும், வன பணிக்கு 12 பேரும் தேர்வாகி, பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</div><div><br />
</div><div>இவர்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகவே பயிற்சியும், அவர்கள் தேர்வு எதிர்கொள்ளும்போது தேவைப்படும் அனைத்து வசதிகளும் மனித நேய அறக்கட்டளையால் செய்து தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</div><div><br />
</div><div><b>* நீச்சல் உடையில் கடவுள் உருவம்: இந்திய அரசு ஆட்சேபம்</b></div><div><br />
</div><div>புதுதில்லி,மே 11: நீச்சல் உடையில் லட்சுமி தேவியின் படத்தை அச்சிட்டதால் ஹிந்துக்கள் மனம் புண்பட்டிருப்பதை ஆஸ்திரேலிய அரசிடம் தெரிவிக்குமாறு புதுதில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</div><div><br />
</div><div> சிட்னி நகரில் நடைபெற்ற ""ரோஸ் மவுண்ட் ஆஸ்திரேலியன் ஃபேஷன் வீக்'' நிகழ்ச்சியில் நீச்சல் உடையில் அந்நாட்டு அழகிகள் மேடையில் நடைபயின்றனர். அவர்கள் அணிந்திருந்த மேல் சட்டையிலும் ஜட்டியிலும் லட்சுமி தேவியின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்தது.</div><div><br />
</div><div> ஹிந்துக்கள் தெய்வமாக வணங்கும் கடவுளரின் படங்களை இப்படிச் சித்திரித்திருப்பது சரியல்ல, இது ஹிந்துக்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது, இனி எதிர்காலத்தில் இப்படி நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆஸ்திரேலியத் தூதரிடம் தெரிவித்தனர்.</div><div><br />
</div><div> நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அவர், இந்தியர்களின் மனம் புண்பட்டிருப்பதை உரிய வகையில் தெரிவிப்பதாக உறுதி கூறினார்.</div><div><br />
</div><div> லிசா பர்க் என்ற ஆடை வடிவமைப்பாளர்தான் இந்த ஆடைகளை வடிவமைத்திருந்தார். லிசா புளூ ஸ்விம்வேர் என்ற பெயரில் விற்பதற்காக அனுப்பப்பட்ட அனைத்து நீச்சல் உடைகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன, இனி சந்தையில் இவை விற்கப்படமாட்டாது என்று அந்த நிறுவனம் அரசிடம் கூறியிருக்கிறது.</div><div><br />
</div><div> ஹிந்துக்களின் கடவுள் உருவங்களை இப்படி அவமதிப்பது இது முதல் முறையல்ல. ஐரோப்பிய நாடுகளில் செருப்பு போன்ற காலணிகளில் இந்துக்களின் கடவுள் உருவங்கள் அச்சிடப்படுவதும் எதிர்ப்பு பலமாக இருந்தால் அதைத் திரும்பப் பெறுவதும் அவ்வப்போது நடக்கின்றன.</div><div> இப்படி ஹிந்துக் கடவுள்களின் படங்களைத் தேர்வு செய்கிறவர்கள் அவை என்ன படங்கள், அதை யார் வணங்குகிறார்கள் என்றெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.</div><div><br />
</div><div> இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்கள் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு ரோஷம் கொண்டு ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே செய்கின்றனர் என்ற எண்ணம் மேலை நாட்டவரிடையே நிலவுகிறது.</div><div><br />
</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">மாநிலச் செய்திகள் :</span></b></div><div><br />
</div><div>*<b>ஜூலை 1ம் தேதி முதல் மருத்துவ கவுன்சிலிங் தொடக்கம்</b></div><div><br />
</div><div>சென்னை : ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</div><div><br />
</div><div>இதுகுறித்து மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் ஷீலா கிரேஸ் கூறுகையில், </div><div><br />
</div><div>மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்பம் மே 16ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 2ம் தேதி கடைசி நாளாகும்.</div><div><br />
</div><div>ஜூன் 21ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் 30ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.</div><div><br />
</div><div><b>* புதுவையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் கொடும்பாவி எரிப்பு</b></div><div><br />
</div><div>புதுச்சேரி: புதுச்சேரியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். </div><div><br />
</div><div>ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் இந்து கடவுளான லட்சுமி படம் போட்ட நீச்சல் உடையில் ஒரு அழகி வந்தார்.</div><div><br />
</div><div>இது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்டை கண்டித்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.</div><div><br />
</div><div>இந்த நிலையில் புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் மறைமலையடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே இந்து முன்னணி நகர தலைவர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. </div><div><br />
</div><div>அப்போது அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்ரின் உருவ பொம்மையை எரித்தனர். </div><div><br />
</div><div>தகவல் அறிந்த உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாகிகளான முதலியார்பேட்டை மணி வீரப்பன், பெரியார் நகரைச் சேர்ந்த முருகானந்தம், சாம்பல்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.</div><div><br />
</div><div>*<b>ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு : 234 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பம்</b></div><div><br />
</div><div><img alt="11-tamil-nadu-map300.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cabb329ce5c&attid=0.3&disp=emb&realattid=ii_12fe1a05720b44b0&zw" title="11-tamil-nadu-map300.jpg" /></div><div><br />
</div><div>சென்னை: ""வழக்கமான ஓட்டுஎண்ணிக்கையை விட முடிவுகளை வெளியிட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரிபிரவீன்குமார் தெரிவித்தார்.</div><div><br />
</div><div>தேர்தல் ஏற்பாடுகள் குறித்துபிரவீன்குமார் கூறியதாவது:தமிழகத்தில் 91 மையங்களில் 234 தொகுதிகளுக்கான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகிறது. இதில், 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 27 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் 18 கம்பெனிகள் இன்று வருகின்றன.காலை 5 மணிக்கே, ஓட்டுஎண்ணிக்கை மையத்துக்கு,தொகுதியின் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்துவிடுவர். எந்தெந்த மேஜையில் ஓட்டு எண்ணிக்கைக்கு எந்த ஊழியரை பயன்படுத்துவது என்பது அப்போது முடிவு செய்யப்படும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், தொகுதி தேர்தல் அதிகாரியின் மேஜையில் தபால் ஓட்டுகள்எண்ணப்படும்.அரை மணி நேரத்துக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுகள் எண்ணப்படும். </div><div><br />
</div><div>ஒவ்வொரு சுற்று ஓட்டுஎண்ணிக்கை முடிந்ததும்,அதற்கான படிவம் நிரப்பப்பட்டு, தேர்தல் அதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்படும். அனைத்து மேஜைகளிலும் ஒரு சுற்று ஓட்டுஎண்ணப்பட்டு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட பின், அந்த சுற்று விவரம் அறிவிக்கப்படும்.மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் எழுதப்படும். இது தவிர, ஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். அந்த வீடியோ காட்சிகள், "சிடி'யாக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்.தபால் ஓட்டுஎண்ணிக்கைவிவரங்களை அறிவிக்காமல், கடைசி இரண்டு சுற்றுகளுக்கான ஓட்டுஎண்ணிக்கையை துவங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முதலில் வருபவர், இரண்டாவது வருபவர் ஆகியோருக்கு இடையேயான ஓட்டு வித்தியாசம், தபால்ஓட்டுகளை விடகுறைவாக இருந்தால், தபால் ஓட்டுகள்மீண்டும் ஆய்வுசெய்யப்படும். இவை வீடியோவில் பதிவு செய்யப்படும்.</div><div><br />
</div><div>இதை தவிர, ஓட்டு எண்ணிக்கை துவக்கம், இயந்திரங்கள் திறக்கப்படுவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், அசம்பாவித சம்பவங்கள் என அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.தேர்தல் அதிகாரியின் மேஜைக்கு அருகிலேயே, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கான இருக்கையும் ஒதுக்கப்படும். இதனால், அ.தி.மு.க., புகார் கூறியிருப்பது போல, தவறாக எண்ணிக்கையை பதிவு செய்ய வாய்ப்பில்லை. மேலும், வீடியோ பிரதிகளும் உள்ளன. பார்வையாளர், தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஒரிஜினல் படிவங்கள் இருக்கும். டேட்டா பதிவுடன், அதைஒப்பிடலாம். ஒவ்வொரு சுற்றுமுடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின், அடுத்த சுற்று துவங்கஉள்ளதால், வழக்கமாக ஆகும் நேரத்தை விட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்.</div><div><b><br />
</b></div><div><b>* கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு</b></div><div><b><br />
</b></div><div><b><img alt="silai.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cabb329ce5c&attid=0.4&disp=emb&realattid=ii_12fe195f033cf4d0&zw" title="silai.jpg" /></b></div><div><br />
</div><div>கள்ளக்குறிச்சி, மே 11: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், காரல் மார்க்ஸ், அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் அண்மையில் கண்டெடுத்தனர்.</div><div><br />
</div><div> ÷விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது கல்வராயன்மலைப் பகுதியாகும். கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் இம்மலை அமைந்துள்ளது. மலையின் உயரம் 1500 மீட்டரும், 600 சதுர மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இம் மலையில் தேன்பாடி, சிறுக்கலூர், பேராரு, மேகம், முட்டறவி உளளிட்ட 10 அருவிகள் உள்ளன.</div><div><br />
</div><div> ÷15 பஞ்சாயத்துகளை கொண்ட பகுதியாகும். இம் மலையை குரும்பக் கவுண்டன், சடையக் கவுண்டன், அறையக் கவுண்டன், சாதாக்கவுண்டன் உள்ளிட்டோர் ஆண்டு வந்தனர்.</div><div><br />
</div><div> ÷பின்னர் 23.06.1976-ல் கொத்தடிமை முறை சட்டம் செல்லும் என்பதன்படி கொத்தடிமை முறையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 1976-வது ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். ÷இந்த நடைமுறைகள் இருந்தபோது, சென்னை மாநில வருவாய்த் துறைக்கு தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக பத்பநாபன் இருந்தார்.</div><div><br />
</div><div> ÷5.9.77-ல் இந்த நிலையில்தான் கல்வராயன்மலைக்கென்று ஒரு தனி சிறப்புநிலை ஆட்சியர் சம்பந்தம், வருவாய் கோட்டாசியர் செங்கல்வராயன், தனி காவல் துணை ஆய்வாளர் முருகையன் பணியில் இருந்தனர்.</div><div><br />
</div><div> ÷இம் மலையில் தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், கல்வராயன்மலை சிறப்பு கொத்தடிமை மக்களின் வாழ்வும் வரலாறும் புத்தக இணை ஆசிரியர் எம்.காரல்மார்க்ஸ் மை இந்தியா கிராமப் புற ஆய்வாளர் அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் மலையின் வரலாற்றுக்கு களப்பணியில் எருக்கம்பட்டு கிராமத்தில் ஈடுபட்டிருந்தனர்.</div><div><br />
</div><div> ÷அப்போது மலை காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை கண்டெடுத்தனர். இந்த நடுகல் சிற்பம் குறித்து கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவர் இன்னாடு உண்ணாமலை, மலையக விவசாயி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஊர் வழக்கத்தை கூறினர்.</div><div><br />
</div><div> மலை வரலாறு</div><div><br />
</div><div> ÷அக்கா தங்கை இரண்டு பேர் மலையில் வாசம் செய்து வந்துள்ளனர். இவர்களின் தங்கைக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.</div><div> ÷மலைக்காட்டில் அக்காள், தங்கை இருவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு மூவரும் காட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.</div><div><br />
</div><div> ÷அங்கு வந்ததும் தங்கை தன் பெண் குழந்தையை அக்காவிடம் கொடுத்து, "பார்த்துக் கொள். நான் காட்டுக்குள் சென்று நமது பசிக்கு காரக்காய், சூரக்காய், கள்ளுமடையான், பன்னைக்கீரையைத் தேடி பார்த்து பறித்து ஆய்ந்து எடுத்து வருகிறேன்' என்று கூறி சென்று விட்டார்.</div><div><br />
</div><div> ÷சற்று நேரம் ஆனதும் இவளின் அகோர பசிக்கு தங்கையின் பெண் குழந்தையை கால் பகுதியில் இருந்து தனது வாய் வழியாக விழுங்க ஆரம்பித்து விட்டாள்.</div><div><br />
</div><div> ÷அப்போது குழந்தை அழ ஆரம்பித்து தொடர்ந்து அழும் சப்தம் விட்டு விட்டு வந்து கொண்டு இருக்கவே சப்தம் கேட்டு கீரை பறிக்கப் போன குழந்தையின் தாய் ஓடிவந்துள்ளார்.</div><div><br />
</div><div> ÷தன் குழந்தை, அக்காளின் அகோர பசிக்கு, கால் பகுதியிலிருந்து உடல், வயிறு, மார்பகம் பகுதி வரை விழுங்கி இருப்பதைப் பார்த்ததும் அழுது கதறிக் கொண்டு "அக்கா மிஞ்சாதே' என்று குரல் கொடுத்தும் அவர் குழந்தையை விழுங்குவதை அப்படியே நிறுத்தியுள்ளார். அப்போது கழுத்துக்கு மேல் தலை பகுதி வெளியில் நின்று விட்டது.</div><div><br />
</div><div> ÷இந்த அகோர நிகழ்வை பார்த்த தங்கை, கோபத்தோடு அக்காவிடம், "நீ வெங்கோடு, எருக்கம்பட்டு, நடுப்பகுதி காட்டுக்குள் போய் இருந்துக் கொள். நான் பட்டுலேயே இருந்துக்கிறேன் உனக்கும், எனக்கும் ஒத்துவராது. உனக்கு மக்களை விழுங்கும் வேங்கை பசி இருக்கும்வரை நீ தனியாக இருக்க வேண்டும்.</div><div><br />
</div><div> ÷உனக்கு என்னிக்கு காய்கனி பசி எடுக்கிறதோ? அன்று நான் வசிக்கும் பட்டு மக்கள் யாரிடமாவது கனவில் வந்து என்னைப் பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறாயோ? அப்போது ஊர்கூடி ஒன்று திரண்டு அங்கு வந்து மலை நாட்டில் கிடக்கும் உணவு தானியங்களையும் காய்கனிகளையும், காட்டு பழவகைகளையும் எடுத்துக் கொண்டு வருவோம். அன்றுவரை யாரும் உன்னை வந்து தனியாக பார்க்க மாட்டோம்.</div><div><br />
</div><div> ÷"அங்கு வரும்போது பிறந்த மேனியாகவோ அல்லது வெள்ளை ஆடை உடுத்தி நீ இருக்கும் சம்பாவி அம்மை சோலைக்கு வருவோம். உன்னை பார்க்க பெண்கள் வரமாட்டோம். ஆண்கள் மட்டும் வருவார்கள்' என்றாள்.</div><div><br />
</div><div> ÷அந்த காலம் முதல் 2011-ம் ஆண்டுவரை அந்த சம்பாயி அம்மா யார் சொப்பணத்தில் எந்த ஆண்டு எப்போ வரசொல்லுகிறாளோ? அந்த ஆண்டு காட்டுசோலை கோயிலுக்கு என்று மலை நாட்டு கிராம நெம்பியான் பூசாரி என்று ஒருவரை நியமனம் செய்து பூஜை செய்து படையல் இட ஊர்மக்கள் நியமிப்பர்.</div><div><br />
</div><div> ÷நல்ல விசேஷமாக, சம்பாவி என்று இருந்து மருவி சம்பாயி அம்மா என்று விளங்கும் மலைகாட்டு காளிதேவிக்கு பொங்கல், பூஜை நடைபெறுமாம். இப்படி பூசாரியாக (நெம்பியான்) இருந்து நடத்தியவர் இறந்து விடுவது உண்டாம்.</div><div><br />
</div><div> ÷அதனால் இந்த சம்பாவி அம்மாளுக்கு சாமி கனவு சொப்பனம் கிடைக்க, பத்து, பதினைந்து ஆண்டு கூட ஆகுமாம் என்று கூறினர். இந்த செய்தியை விளக்கும் வகையில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.</div><div><br />
</div><div> ÷இந்த நடுகல் 4 அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டது. முழு பலகை கல்லான இந்நடுக்கல், புடைப்பு சிற்பங்களைக் கொண்டது. இந்த உறவு அமைப்பைக் கொண்டு பார்த்தால் மலைக்காளி அமைப்பைக் கொண்டு காணப்படுகிறது. ஆனால் மலை கிராம மக்கள் சம்பாயி அம்மா என்று அழைக்கின்றனர்.</div><div><br />
</div><div> ÷மலைக்காளி தலையில் கிரீடம் தரித்து விரிசையுடன் காணப்படுகிறாள். மூக்கில் புல்லாக்கு, காதணி, கழுத்து மாலைகள் ஆடை அணிகள் தரித்தும் காணப்படுகிறாள். இவள் எட்டு கைகளை கொண்டு விளங்குகிறாள்.</div><div><br />
</div><div> ÷கையில் சூலம், வாள் கேடயம், கபாலம், வில் அம்பு, கஜகஸ்தம் வைத்து இருக்கிறாள். மேலும் ஒரு குழந்தையின் உடலை தனது கையில் வைத்திருக்கின்றாள். இவள் இடது காலை ஊன்றி அதன் கீழ் வீரன் இறந்த நிலையில் இருப்பதும் அதன் மீது சூலம் பாய்ச்சுவது போலவும் காணப்படுகிறாள். வலதுகால் மடக்கிய நிலையில் அமர்ந்துள்ளாள்.</div><div><br />
</div><div> ÷மலைக்காளிக்கு நேர் எதிர்புறம் இரண்டு வீரர்கள் ஆடையின்றி காணப்படுகின்றனர். அதன் கீழ்புறம் இரண்டு பெண் உருவம் காணப்படுகிறது. அவர்கள் நடனம் ஆடி திருவிழா கோலம் கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.</div><div><br />
</div><div> ÷இதன் காலம் சரிவர உணரப்படவில்லை. நடுகல் அமைப்பை வைத்துப் பார்த்தால் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தெரிகிறது என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை கௌரவ விரிவுரையாளர் பி.சுதாகர்.</div><div><br />
</div><div> ÷சூரனை சூலாயுதத்தால் காலில் போட்டு மிதித்து குத்துவதுபோல் உள்ளது. தேவனூர் சோலையில் இராகுத்தன் நல்லூர் மலை ஐய்யனார் கோயில் அருகிலும் குதிரையில் சவாரி செய்வது போலவும் வனக்காளி சிற்பம் உள்ளது.</div><div><br />
</div><div><b>*முழுவதும் தமிழில் தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று மாணவர் சாதனை</b></div><div><br />
</div><div>சென்னை, மே 11: திருவாரூரைச் சேர்ந்த மாணவர், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை முழுவதும் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.</div><div><br />
</div><div> திருவாரூரைச் சேர்ந்த சீனிவாசன், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என் மூன்று நிலைகளையும் தமிழில் எழுதியுள்ளார்</div><div>.</div><div> தாய் மொழியில் தேர்வு எழுதிய இவர் முதல் முயற்சியிலேயே 134-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.</div><div> தமிழ் இலக்கியப் பட்டதாரியான இவர், மின் ஆளுமைத் துறையை மேம்படுத்தும் ஆவல் உள்ளது என்றார்.</div><div><br />
</div><div>* <b>தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இல்லை: ஜெயப்பிரகாஷ் காந்தி</b></div><div><br />
</div><div><br />
</div><div>சென்னை, மே 11: தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்காது. எனவே மாணவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கே முன்னுரிமை தரலாம் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.</div><div><br />
</div><div> பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.</div><div><br />
</div><div> இதில் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியது:</div><div><br />
</div><div> மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும், முதல் நிலை பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த முறை கட்-ஆஃப் மதிப்பெண் கடும் போட்டியாக இருக்கும்.</div><div><br />
</div><div> கட்-ஆஃப் 197.5 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., தியாகராஜா, சிஐடி உள்ளிட்ட முதல்நிலையில் உள்ள 6 கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.</div><div> இந்த கல்லூரிகளில் இசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என எந்தப் பிரிவை தேர்வு செய்தாலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.</div><div><br />
</div><div> கட்-ஆஃப் 185-லிருந்து 197-வரை உள்ளவர்களுக்கு சிறந்த சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி. தேர்வு செய்யலாம்.</div><div><br />
</div><div> தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்கின்றன. நடப்பு ஆண்டில் அவர்கள் 2.5 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.</div><div><br />
</div><div> கடந்த 2009-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பின்னடைவு ஏற்பட்டபோதும், இப்போது மீண்டும் அந்தத் துறை முன்னேறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தத் துறையின் வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன.</div><div><br />
</div><div> ஆனால், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேரை மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.</div><div> எனவே, மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்,</div><div><br />
</div><div> இதற்கு அடுத்ததாக, மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை இப்போது அபார வளர்ச்சி பெற்று வருவதால் இரண்டாவதாக மாணவர்கள் இஇஇ-க்கு முன்னுரிமை அளிக்கலாம்.</div><div><br />
</div><div> திட்டக் கமிஷனின் அறிவுரையின்படி மின் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. மத்திய அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் 14 சதவீத நிதியை மின்துறை வளர்ச்சிக்காக பயன்படுத்த உள்ளது. எனவே இத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.</div><div><br />
</div><div> இதுபோல் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் நாடுகள் ஈடுபட உள்ளன. அதாவது கடலில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு வசதிகள். உதாரணமாக விசாகப்பட்டினத்தில் கடலுக்கு அடியில் திரவ பெட்ரோலியம் வாயுவை (எல்.பி.ஜி.) சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.</div><div><br />
</div><div> கடலில் மிதக்கும் சர்வதேச விமான நிலையத்தை கட்ட துபை திட்டமிட்டு வருகிறது. இதுபோல் ஜப்பான் போன்ற நாடுகளில் பி.இ. சிவில் முடித்து பூகம்ப பொறியியல் முடித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே மூன்றாவதாக மாணவர்கள் சிவில் பிரிவை தேர்வு செய்யலாம்.</div><div> நான்காவது மெக்கானிக்கல், கடைசியாக இசிஇ-க்கும் முன்னுரிமை அளிக்கலாம்.</div><div><br />
</div><div> உயிரி தொழில்நுட்ப படிப்பு முழுவதும் ஆராய்ச்சி தொடர்புடையது. மேலும் வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. எனவே, பி.இ. பயோ-டெக்னாலஜி படிப்பை சிந்தித்து தேர்வு செய்யவேண்டும்.</div><div><br />
</div><div> இதுபோல் ஏரோநாட்டிகல் படிப்புக்கு வேலைவாய்ப்பு மிகமிகக் குறைவு என்றார்.</div><div><br />
</div><div><div><div><b><span style="color: #009900;">வர்த்தகச் செய்தி மலர் :</span></b></div><div><b><br />
</b></div><div><b>பங்குச் சந்தையில் உயர்வு </b></div><div><br />
</div><div>இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.</div><div><br />
</div><div>மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 19.76 புள்ளிகள் உயர்ந்து 18,532.53 புள்ளிகளாக காணப்படுகிறது.</div><div><br />
</div><div>இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 6.10 புள்ளிகள் அதிகரித்து 5,547.35 புள்ளிகளாக உள்ளது. </div><div><br />
</div><div>இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.</div><div><br />
</div><div>நேற்றிரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது.</div><div><br />
</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">விளையாட்டுச் செய்தி மலர் :</span></b></div><div><br />
</div><div>கிரிக்கெட்</div><div> </div><div><b>பெங்களூரு அணி தொடர்ந்து 6வது வெற்றி! * ராஜஸ்தான் மீண்டும் பரிதாபம்</b></div><div><br />
</div><div>ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 6வது வெற்றியை பெற்று சாதித்தது பெங்களூரு அணி.</div><div>இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 55வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. </div><div>இளம் கேப்டன்:</div><div>வெட்டோரிக்கு(முழங்கால் காயம்) பதிலாக பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி(22 வயது) ஏற்றார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மிக இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். "டாஸ்' வென்ற விராத் கோஹ்லி "பீல்டிங்' தேர்வு செய்தார்.</div><div>நல்ல துவக்கம்:</div><div>ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தனர். அரவிந்த் ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டிராவிட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து லாங்கிவெல்ட், அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் வாட்சன்.</div><div>அரவிந்த் அபாரம்:</div><div>இந்த நேரத்தில் போட்டியின் 10வது ஓவரை வீசிய அரவிந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். 3வது பந்தில் வாட்சனை(34) வெளியேற்றினார். 5வது பந்தில் டிராவிட்(37) விக்கெட்டை கைப்பற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். இதற்கு பின் விராத் கோஹ்லி துல்லியமாக பந்துவீச, ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. ரகானே(17) வீணாக ரன் அவுட்டானார். அரவிந்த் வேகத்தில் போத்தாவும்(19) வீழ்ந்தார். ராஸ் டெய்லர்(13) மீண்டும் சொதப்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது.</div><div>"சிக்சர்' கெய்ல்:</div><div>சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன்(38), வார்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி ஒத்துழைக்க, மீண்டும் ஒரு முறை வாணவேடிக்கை காட்டினார் கெய்ல். 13 ரன்கள் எடுத்த நிலையில் வார்ன் கைநழுவியதால் கண்டம் தப்பிய இவர், போத்தா, ராஸ் டெய்லர், மனேரிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பங்கஜ் சிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கோஹ்லி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. கெய்ல் 70(6 பவுண்டரி, 4 சிக்சர்), கோஹ்லி 39(3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே, பஞ்சாப், கொச்சி, ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பெங்களூரு அணி, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.</div><div>வார்ன் சோகம்:</div><div> இத்தொடருடன் ஓய்வு பெறும் ராஜஸ்தான் கேப்டன் வார்ன், தனது அணியின் சொந்த ஊரான ஜெய்ப்பூரில் பங்கேற்ற கடைசி ஐ.பி.எல்., போட்டியில் தோல்வியுடன் விடைபெற நேர்ந்தது. </div><div>ஆட்ட நாயகன் விருதை அரவிந்த் தட்டிச் சென்றார்.</div><div><br />
</div><div>ஸ்கோர் போர்டு</div><div>ராஜஸ்தான் ராயல்ஸ்</div><div>வாட்சன்(கே)டிவிலியர்ஸ்(ப)அரவி<wbr></wbr>ந்த் 34(29)</div><div>டிராவிட்(கே)+(ப)அரவிந்த் 37(31)</div><div>ரகானே-ரன் அவுட்-(டிவிலியர்ஸ்) 17(10)</div><div>போத்தா(கே)அருண்(ப)அரவிந்த் 19(20) </div><div>ராஸ் டெய்லர்(கே)கைப்(ப)லாங்கிவெல்ட் 13(13)</div><div>மனேரியா(கே)கைப்(ப)கெய்ல் 8(6)</div><div>ராத்-அவுட் இல்லை- 5(8)</div><div>யாக்னிக்-அவுட் இல்லை- 2(5)</div><div>உதிரிகள் 11</div><div>மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,) 146</div><div>விக்கெட் வீழ்ச்சி: 1-73(வாட்சன்), 2-73(டிராவிட்), 3-102(ரகானே), 4-122(போத்தா), 5-124(ராஸ் டெய்லர்), 6-133(மனேரியா). </div><div>பந்துவீச்சு: ஜாகிர் 4-0-23-0, அரவிந்த் 4-0-34-3, லாங்கிவெல்ட் 4-0-26-1, கெய்ல் 3-0-23-1, கோஹ்லி 3-0-17-0, அப்ரார் 2-0-21-0</div><div>பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்</div><div>கெய்ல்-அவுட் இல்லை- 70(44)</div><div>தில்ஷன்(கே)ராஸ் டெய்லர்(ப)வார்ன் 38(24)</div><div>கோஹ்லி-அவுட் இல்லை--- 39(34)</div><div>உதிரிகள் 4</div><div>மொத்தம்(17 ஓவரில் 1 விக்.,) 151</div><div>விக்கெட் வீழ்ச்சி: 1-68(தில்ஷன்). </div><div>பந்துவீச்சு: வாட்சன் 2-0-19-0, போத்தா 4-0-42-0, பங்கஜ் 2-0-23-0, திரிவேதி 2-0-12-0, வார்ன் 4-0-26-1, ராஸ் டெய்லர் 1-0-11-0, மனேரியா 2-0-16-0.</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">ஆன்மீகச் செய்தி மலர் :</span></b></div></div><div><br />
</div><div><br />
</div><div>*<b><span style="color: #009900;">அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்</span></b></div><div><br />
</div><div>மூலவர்<span style="white-space: pre-wrap;"> </span>:<span style="white-space: pre-wrap;"> </span>அகத்தீஸ்வரர்</div><div> <span style="white-space: pre-wrap;"> </span></div><div> <span style="white-space: pre-wrap;"> </span>அம்மன்/தாயார்<span style="white-space: pre-wrap;"> </span> ஆனந்தவல்லி<span style="white-space: pre-wrap;"> </span>-</div><div> <span style="white-space: pre-wrap;"> </span>பழமை<span style="white-space: pre-wrap;"> </span>:<span style="white-space: pre-wrap;"> </span>1000-2000 வருடங்களுக்கு முன்<span style="white-space: pre-wrap;"> </span>-</div><div> <span style="white-space: pre-wrap;"> </span>ஊர்<span style="white-space: pre-wrap;"> </span>:<span style="white-space: pre-wrap;"> </span>நெமிலிச்சேரி</div><div> <span style="white-space: pre-wrap;"> </span>மாவட்டம்<span style="white-space: pre-wrap;"> </span>:<span style="white-space: pre-wrap;"> </span>சென்னை</div><div> <span style="white-space: pre-wrap;"> </span>மாநிலம்<span style="white-space: pre-wrap;"> </span>:<span style="white-space: pre-wrap;"> </span> தமிழ்நாடு</div><div><br />
</div><div>தல சிறப்பு:<span style="white-space: pre-wrap;"> </span></div><div> <span style="white-space: pre-wrap;"> </span> <span style="white-space: pre-wrap;"> </span> </div><div> <span style="white-space: pre-wrap;"> </span>சூரியன், சந்திரனோடு பைரவரும் ஒரே சன்னதியில் இருப்பது கோயிலின் தனி சிறப்பு.</div><div><br />
</div><div>வியாதிகளை விரட்டும் விடைவாகனரது கருவறையை விட்டு வெளியே வந்தால், கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, மற்றும் விஷ்ணு துர்க்கையும்; கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் நால்வர் சன்னதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் மேற்குப் பார்த்த சூரியன், சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது வித்தியாசமான காட்சி. கோயிலுக்கு வெளியே இடதுபுறத்தில் அகத்திய புஷ்கரணி அமைந்துள்ளது. அதன்கரையில் மிகப்பெரிய அரசமரமும், அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன.<span style="white-space: pre-wrap;"> </span> </div><div>தலபெருமை:<span style="white-space: pre-wrap;"> </span></div><div> <span style="white-space: pre-wrap;"> </span> <span style="white-space: pre-wrap;"> </span> </div><div> <span style="white-space: pre-wrap;"> </span>நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.<span style="white-space: pre-wrap;"> </span> </div><div><br />
</div><div>தல வரலாறு:<span style="white-space: pre-wrap;"> </span></div><div> <span style="white-space: pre-wrap;"> </span> <span style="white-space: pre-wrap;"> </span> </div><div> <span style="white-space: pre-wrap;"> </span>சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் ஈஸ்வரனை லிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர். பின்னாளில் அந்த லிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி அகத்திய முனிவரால் லிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.</div><div><br />
</div><div>திருவிழா:<span style="white-space: pre-wrap;"> </span></div><div> <span style="white-space: pre-wrap;"> </span> <span style="white-space: pre-wrap;"> </span> </div><div> <span style="white-space: pre-wrap;"> </span> சிவராத்திரி, திருவாதிரை, ஆடிபூரம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், நவராத்திரி பிரதோஷம்.<span style="white-space: pre-wrap;"> </span> </div><div> <span style="white-space: pre-wrap;"> </span> </div><div>திறக்கும் நேரம்:<span style="white-space: pre-wrap;"> </span></div><div> <span style="white-space: pre-wrap;"> </span> <span style="white-space: pre-wrap;"> </span> </div><div> <span style="white-space: pre-wrap;"> </span>காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">ஆன்மீகச் சிந்தனை மலர் :</span></b></div><div><br />
</div><div><b><span style="color: #009900;">ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது? - ரமணர் </span></b></div><div><br />
</div><div>அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது. எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை. ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, 'ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. </div><div><br />
</div><div>கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால், ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில் உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும். 'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்.</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">வினாடி வினா :</span></b></div><div><br />
</div><div><b>வினா - சீனக்குடியரசின் முதல் ஜனாதிபதி யார் ?</b></div><div><br />
</div><div><b>விடை - டாக்டர் சன் யாட்சென்.</b></div><div><br />
</div><div><br />
</div><div><b><span style="color: #009900;">இதையும் படிங்க :</span></b></div><div><br />
</div><div><b>கர்நாடக இசைக் கச்சேரியில் கலக்கிய ஆட்டோ டிரைவர்</b></div><div><br />
</div><div>மானாமதுரை: மானாமதுரையில், "திருவையாறு தியாகராஜ ஆராதனை' போன்ற "சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை' விழா நடந்து வருகிறது.இதில், மதுரையைச் சேர்ந்த பாண்டி முருகன் என்ற இசைக்கலைஞர் கர்நாடக சங்கீதத்தில் பாடல்களை பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். சிறுவயது முதலே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் பாண்டி முருகன் மதுரை இசைக்கல்லூரியில் படித்துள்ளார். வறுமை சூழலில் இரவு முழுவதும் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து, படிப்புச்செலவுக்கு அதை பயன்படுத்தி கொண்டார். தற்போது மியூசிக் அகடமியில் பயிற்சி பெறும் இவர் நேற்று மானாமதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாடல்களை பாடி கர்நாடக சங்கீத பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.</div><div><br />
</div><div>பாண்டி முருகன் கூறுகையில், "சிறுவயது முதல் எனக்கு இசையில் ஆர்வம் அதிகம் . சென்னையில் நடக்கும் எல்லா நிகழ்ச்சியிலும் ஆர்வமுடன் பங்கேற்கிறேன். இசைக் கல்லூரியில் படிக்கும்போதும் இரவில் ஆட்டோ ஓட்டினாலும், பல்வேறு கச்சேரிகளில் பாடும் வாய்ப்பை தவற விடுவதில்லை . இங்கு வந்து பாடியது மன திருப்தியளிக்கிறது' என்றார்.</div><div><br />
</div><div><img alt="large_239334.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=2996d71d52&view=att&th=12fe1cbc3b0a3241&attid=0.2&disp=emb&realattid=ii_12fe1bc87458d26a&zw" title="large_239334.jpg" /></div><div><br />
</div><div>* "எப்போதும் "பிசி'யாக இருக்க வேண்டும்!'பல துறைகளிலும் சிறந்து விளங்கும் காவியா: என் அப்பாவும், அண்ணனும் பிசினஸ் மேன்கள்; அம்மா, குடும்பத் தலைவி. தமிழ் ஆர்வலரான என் அப்பாவிற்கு, நான் பல கலைகளைக் கற்று, அதில் சாதனைகளும் படைக்கணும்ங்கறது தான் ஆசை. எனக்கும் ஆர்வம் இருந்தது.நான்கு வயதில் கதக், பரதம் இரண்டையும் கற்று, 10 வயதில் அரங்கேற்றம் பண்ணினேன். பேச்சுப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம். குறும்படங்களும் எடுத்து, அதில் நடித்திருக்கிறேன். குதிரை சவாரி, நீச்சல் முழுமையா கற்றுக் கொண்டுள்ளேன்.நான் படிப்பிலும் எப்போதும் முதல் தான். கல்லூரியில் தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறேன். என் டைரி எழுதும் பழக்கம் தான், என் மொழியை வளப்படுத்தியது. அதைக் கொண்டு தான் இப்போது, தன்னம்பிக்கை, ஆளுமையை வளர்க்கும் புத்தகங்களை எழுதறேன்.ரத்தன் டாடா, முத்தையா முரளிதரன், பெண் தொழிலதிபர் கிரண் உட்பட, இதுவரை 40 சாதனையாளர்களைப் பேட்டி எடுத்திருக்கிறேன். அந்தத் தொகுப்பை புத்தகமாக வெளியிட, ஹார்வர்ட் சர்வதேச பிரஸ் முன்வந்துள்ளது.சமூக சேவையிலும் எனக்கு ஆர்வம் அதிகம் உண்டு. காது கேட்காத, வாய் பேச முடியாத, 250 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நடனம் ஆட வைத்து, அதை நிகழ்ச்சியாக நடத்தியுள்ளேன். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கிறேன். கல்வித் தகுதி மற்றும் கிரியேட்டிவ் அடையாளங்களுக்காக, பிராண்ட் மேனேஜராக பணியமர்த்தியுள்ளது, டி.சி.எஸ்., நிறுவனம்.இந்த வேலை, நான் கல்லூரியில் படிக்கும் போதே சேர்ந்த பகுதி நேர வேலை தான். காரணம் நான், எப்பவும் பம்பரமாக சுழல வேண்டும். கல்லூரி முடிந்ததும், இதுவே எனக்கு முழு நேர வேலையாகிவிட்டது.</div><div> </div><div><br />
</div><div><br />
</div></div><div><br />
</div><div><br />
</div><div> </div><div><br />
</div><div><br />
</div><div><br />
</div><div><br />
</div><div>நன்றி - தட்ஸ்தமிழ், சமாச்சார், தின மணி, தின மலர்.</div><div> </div><div> </div><div><br />
</div></div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5650362564989305208.post-60218015208870316972011-05-11T07:09:00.001+05:302011-05-11T07:09:29.909+05:30இன்றைய செய்திகள் மே, 11, 2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
முக்கியச் செய்தி :<br />
<br />
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு: விழிப்புடன் உள்ளோம்-இந்திய ராணுவ அதிகாரி<br />
<br />
புது தில்லி, மே 8: பாகிஸ்தானில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.<br />
பாகிஸ்தான் எக்காரணத்தைக் கொண்டும் தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது என இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறது.<br />
<br />
இந்நிலையில் கடந்தவாரம் பாகிஸ்தானில் அல்-காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் அங்கு அவர் பதுங்கி இருந்தது அம்பலமாகியுள்ளது.<br />
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி தெரிவிக்கையில், பின்லேடன் பிரச்னை மூலம் இந்தியா ஆதாயம் தேட முயல்கிறது. இதுபோன்ற செயல்களில் இந்தியா ஈடுபடும் பட்சத்தில் நாங்கள் கடும் எதிர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டன.<br />
<br />
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தங்களது படைகளை குவித்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.<br />
<br />
<br />
இதுபற்றி இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,தேவைப்படும் பட்சத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்கிறது என்றார்.<br />
<br />
இதனிடையே, பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாக எல்லைப் பகுதியில் அந்நாடு படைகளை குவித்து வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
உலகச் செய்தி மலர் :<br />
<br />
* இந்திய பத்திரிகையாளர் இருவருக்கு அமெரிக்காவில் பாராட்டு<br />
<br />
நியூஜெர்சி, மே 10: அமெரிக்காவில் 2 இந்தியப் பத்திரிகையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.<br />
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த இந்தியப் பத்திரிகையாளர்கள் சுமன் குஹா மஸþம்தார், பிரகாஷ் எம்.சுவாமி. இந்த இருவர் உள்பட 7 பத்திரிகையாளர்களை நியூஜெர்சி சட்டசபை பாராட்டி கௌரவித்தது.<br />
பத்திரிகைத்துறையில் இவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.<br />
இதற்கான தீர்மானத்தை சட்டசபை துணை சபாநாயகர் உபேந்திரசிவிகுலா கொண்டு வந்தார். சபாநாயகர் ஷீலா ஒய் ஆலிவர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டிப் பேசினார்கள். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
* ஜெர்மன் தூதரக அதிகாரி பாகிஸ்தானில் கைது<br />
<br />
இஸ்லாமாபாத், மே.10: பாகிஸ்தானில் அந்நாட்டு நாடாளுமன்றம் மற்றும் அதிபரின் மாளிகைக்கு மேலாக, ஜெர்மன் தூதரகப் பெண் அதிகாரி ஒருவர் பாராகிளைடிங் விமானத்தில் பறந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.<br />
பாகிஸ்தானின் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் உயர்நிலைப் பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட "சிவப்பு வளையத்துக்குள்' வருபவை. இப்பகுதியின் மீது விமானங்கள் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று இந்தப் பகுதியின் மீது பாகிஸ்தானுக்கான ஜெர்மன் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஷாஷா உல்ஃப் பாராகிளைடிங்கில் பறந்துள்ளார். அவருடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விமானப் பயிற்சியாளர்கள் ராவ் அக்தர் ஹுசைன் மற்றும் ஹசீப் ஹுசைன் ஆகியோர் பறந்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியின் மீது பறப்பதைக் கண்ட விமானப்படையினர், இவர்களைக் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்ற்கொண்டபின் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.<br />
அங்கு, தான் பறக்க முயற்சிக்கையில் தோல்வியடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் காலில் அடிபட்டுள்ளதாகவும் போலீஸôரிடம் உல்ஃப் தெரிவித்துள்ளார். மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸôர், தூதரக அந்தஸ்தில் உள்ளதால் உல்ஃபை விடுதலை செய்தனர். மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு இவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு அடியாலா சிறைக்கு அனுப்பப்பட்டனர்.<br />
இந்த விஷயம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் விமானத்தைக் கொண்டு இஸ்லாமாபாதின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு<br />
<br />
வாஷிங்டன்: "ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும். பாகிஸ்தானில் கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதிகள் மேலும் பலர் உள்ளனர்' என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.<br />
<br />
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் அபோதாபாத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தது பற்றி, அமெரிக்கா தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறது.<br />
<br />
இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அதிபர் ஒபாமா கூறியதாவது:ஒசாமா பாகிஸ்தானில் தங்கியிருக்க உதவியவர்கள், அந்நாட்டுக்குள் இருக்கின்றனரா அல்லது வெளியில் உள்ளனரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.ஆனால், இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் விசாரிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானில் ஒசாமாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர்.வர்கள் யார் என்று தெரியவில்லை.ஒசாமாவுக்கு உதவியது யார் என்பதை கண்டுபிடிப்பதிலும், விசாரிப்பதிலும் தாங்களும் ஆர்வமாக இருப்பதாக பாக்., அரசு கூறியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகலாம். நான்கைந்து நாட்களுக்குள் விடை கிடைத்து விடாது.இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து பாக்., செயல்பட்டு வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அவையனைத்தும் உண்மை; இன்றும் தொடர்கின்றன.அதே நேரம், பாகிஸ்தான் மண்ணில் உள்ள சில பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு பாக்., ஒத்துழைப்பும் வேண்டியுள்ளது.பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான ஆழமான மனநிலை இருக்கிறது. அதனால், அங்கு அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது சிறிது கடினம்தான். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
தேசியச் செய்தி மலர் :<br />
<br />
ஊட்டச் சத்து குறைபாட்டால் மரணம்: உச்ச நீதிமன்றம் வேதனை<br />
<br />
புது தில்லி, மே 10: ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வேதனை தெரிவித்தது.<br />
<br />
பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் தானியங்களில் பெருமளவு வீணாவதாக தகவல்கள் வந்தன.<br />
<br />
<br />
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவ்வாறு தானியங்கள் வீணாகாமல் அவற்றை ஏழைகளுக்கு விநியோகிக்குமாறு அறிவுறுத்தியது. அத்துடன் மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.<br />
<br />
இது தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் ஏற்கெனவே தாங்கள் கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்தினர்.<br />
<br />
அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. தானியங்களை விலை கொடுத்து கொள்முதல் செய்கிறீர்கள். ஆனால் அவற்றை சேமிக்க வழியின்றி வீணாக்குகிறீர்கள்.<br />
<br />
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை ஏன் விநியோகிக்கக் கூடாது? தயவு செய்து அவற்றை வீணாக்காமல் விநியோகியுங்கள். தானிய உற்பத்தி அதிகரிப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆனால் அது மக்களுக்கு பயன்படாமல் வீணாவதால் யாருக்கு என்ன பயன்?' என்றனர்.<br />
<br />
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன், "வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் 50 லட்சம் டன் உணவு தானியங்களை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.<br />
<br />
* என்.டி.திவாரிக்கு டி.என்.ஏ. சோதனை: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு<br />
<br />
புதுதில்லி,மே 10: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ரகான்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆளுனருமான என்.டி. திவாரியை தனது தந்தை என அறிவிக்கும்படி தில்லியைச் சேர்ந்த ரோகித் சேகர் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்.டி. திவாரிக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட்டது.<br />
<br />
தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து என்.டி. திவாரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் என்.டி. திவாரிக்கு ரூ. 25<br />
<br />
ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில் டி.என்.ஏ., சோதனை செய்வது தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் ஜூன் 1ம் தேதியன்று மருத்துவ பரிசோதனைக்காக ( டி.என்.ஏ., சோதனை) ரத்த மாதிரியை மருத்துவமனையில் அளிக்குமாறு என்.டி.திவாரிக்கு உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
* நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம்: அஜீத் சிங் கட்சியிடம் பிரதமர் உறுதி<br />
<br />
புது தில்லி, மே 10: விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் போது அதனால் விவசாயிகள் பாதிக்காத வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று ராஷ்ட்ரீய லோக் தள கட்சித் தலைவர் அஜீத் சிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.<br />
<br />
நாடு முழுவதும் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பேரில் விவசாய நிலங்களை அரசே கைப்பற்றி தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை பறிப்பதும், அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க மறுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.<br />
<br />
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நெடுஞ்சாலைக்காக அரசால் கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவில்லை. நியாயம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே மோதல் வெடித்தது. விவசாயிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.<br />
<br />
இந்நிலையில் அஜீத் சிங் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் தள கட்சியினர் பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசனை பெற வேண்டும் என்று பிரதமரிடம் தான் கேட்டுக்கொண்டதாக அஜீத் சிங் கூறினார்.<br />
<br />
தமது இந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டு, இதுகுறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சர் விலாஸ் ராவ் தேஸ்முக்கை கேட்டுக்கொள்வதாகவும் உறுதி அளித்தார் என்றார்.<br />
<br />
நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. விவசாய நிலத்தை பொது நலனுக்காக கையகப்படுத்துவதற்கான வரையறையில் தெளிவில்லை. இதனால் பொதுநலன் என்ற பேரில் முறைகேடாக நிலத்தை கையகப்படுத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை விரைந்து நிறைவேற்றுவதாக கடந்த அக்டோபர் மாதமே பிரதமர் எனக்கு உறுதி அளித்திருந்தார். இதையும் அவரிடம் ஞாபகப்படுத்தினேன்.<br />
<br />
நொய்டாவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறினேன். இதற்கு அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். நொய்டா சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமரை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விரைந்து திருத்தத்தை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துக்கூறியுள்ளார் என்றார் அவர்.<br />
<br />
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் மட்டும் விவசாயிகளை பாதுகாத்திட முடியாது. மாயாவதி போன்றவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை பிரச்னையும் நீடிக்கவே செய்யும் என்றார் அஜீத் சிங்.<br />
<br />
மாநிலச் செய்தி மலர் :<br />
<br />
*ஆபத்தின் விளிம்பில் ஏர்வாடி மனநோயாளிகள்<br />
<br />
ராமநாதபுரம்: அரசு காப்பகம் அமைப்பதில் தாமதம் ஆவதால், ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகள் மீண்டும் அடிமை நிலைக்கு ஆளாகியுள்ளனர்.<br />
<br />
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் நாட்டையே உலுக்கிய தீவிபத்து நடந்தது. 28 மனநோயாளிகள் தீயில் கருகினர். மனநோயாளிகளுக்கான காப்பகத்தை குடிசைத்தொழில் போல் பலரும் நடத்தியதே விபத்திற்கு காரணமானது. அங்கு மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டதால் தப்பிக்க வழியின்றி, அத்தனை உயிர்களும் அநியாயமாக பலியாயின. வழக்கம் போல அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகே அரசு தரப்பு விழித்துக் கொண்டது. அவசரமாக அனைத்து மனநல காப்பகங்களையும் ஒழுங்குபடுத்த முன்வந்தது. அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர். காப்பகங்களை அமைக்க எந்த துறையின் கீழ் இப்பணியை மேற்கொள்வது என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. இதுவே அரசு காப்பக பணிகள் முடங்க முதல் காரணமானது. இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனின்றி இன்றி உள்ளது.<br />
<br />
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.<br />
<br />
ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.<br />
<br />
விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்.<br />
<br />
*முதல் மூன்று இடங்களையும் பிடித்து தனியார் பள்ளிகள் சாதனை<br />
<br />
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான, முதல் மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன. அரசு பள்ளியோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பிடிக்கவில்லை. இதன்மூலம், "தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகளே என்ற வாதம்' எடுபட்டுள்ளது.<br />
<br />
தமிழகத்தில் உள்ள, 50 ஆயிரம் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஒரு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 75 லட்சம் பேர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். 25 லட்சம் பேர், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.பெரும்பான்மை மாணவர்கள், அரசு பாடத்திட்டத்தின் கீழ், கல்வி பயின்றாலும், கல்வித் தரத்தில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள், குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதனால், பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளிலும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகளவில் இடம் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்கி வருகின்றன என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டம் தான் தரமான பாடத்திட்டம் என்றும், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.<br />
<br />
இவர்களின் வாதத்திற்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும், தனியார் பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர். நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே தட்டிச் சென்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாநில அளவில் முதல் இடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மீதமுள்ள நான்கு இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளே பிடித்துள்ளன. பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவில் மதிப்பெண் பெறவில்லை.<br />
<br />
காரணம் என்ன?போதுமான உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் மற்றும் கண்டிப்பான நிர்வாகம் ஆகிய மூன்றும், தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை அளிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்றொரு காரணமும், முக்கியமானதாக இருக்கிறது.தனியார் பள்ளிகளில், அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்வதில்லை. பெற்றோரின் கல்வியைப் பார்த்தும், புத்திசாலித்தனமான குழந்தைகளாக இருக்கின்றனரா என்பதைப் பார்த்தும், தனியார் பள்ளிகள் சேர்க்கின்றன.படித்த பெற்றோர், வீட்டில் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். மேலும், படித்த குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள், பெரும்பாலும் நன்றாகவே படிப்பர். இப்படி, அடிப்படையிலேயே திறமையாக இருக்கும் மாணவர்களை மேலும் மெருகேற்றி, அதிக மதிப்பெண் வாங்கக் கூடிய வேலைகளை, தனியார் பள்ளிகள் செய்கின்றன.தனியார் பள்ளிகள் சாதிப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளால், இதுபோன்ற சாதனைகளை செய்ய முடியவில்லை.<br />
<br />
இது குறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எவ்வித அளவுகோலையும் பார்க்காமல், மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். 10ம் வகுப்பில் தோல்வியடைந்து, மூன்று, நான்கு முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் இடம் கிடையாது.முதல் வகுப்பில் சேர்க்கும் போதும், தனியார் பள்ளிகளைப் போல் தேர்வு வைத்து எடுப்பது கிடையாது. இப்படி, ஒவ்வொரு நிலையிலும், திறன் அடிப்படையில் மாணவர்கள் பிரிக்கப்படுவதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநில அளவில் பெரும்பாலும் சாதிக்க முடிவதில்லை.எனினும், முன்பை விட, தற்போது தேர்ச்சியிலும், அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளன.இவ்வாறு கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
*சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?<br />
<br />
பிளஸ் 2 தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 65 மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர். 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் தொடங்கி, ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றுள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25-க்குள் 822 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.<br />
<br />
விளைவு என்ன? இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க உள்ள பொதுப் பிரிவு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் 512. கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 371 மாணவர்களில், 61 பேருக்கு மட்டுமே முதல் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 310 மாணவர்களுக்கு, அவர்களது வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 வாங்கியுள்ளோருக்கு சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.<br />
<br />
சென்னை மருத்துவக் கல்லூரிகள் கிடைக்குமா? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 200-க்கு 200, 200-க்கு 199.75, 200-க்கு 199.50, 200-க்கு 199.25 என அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவருமே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேரவே விரும்புகின்றனர். இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 இருந்தாலும்கூட, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பல மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.<br />
<br />
<br />
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18,131 மாணவர்களில், 7,088 பேர் (39 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.50-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
<br />
* தாய்மொழியில் மட்டுமே கல்வி: சங்கரய்யா வலியுறுத்தல்<br />
<br />
சென்னை, மே 10: தாய்மொழியையே பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வலியுறுத்தினார்.<br />
<br />
பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை கோரும் மக்கள் இயக்கத்தை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:<br />
<br />
அவரவர் தாய்மொழியைப் பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். மருத்துவம் உள்பட அனைத்துப் படிப்புகளும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும்.<br />
<br />
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.<br />
<br />
சமச்சீர் கல்வி சரியில்லை என்று குறை சொல்லுகிறார்கள். அதை தவிர்த்து, அந்தக் கல்வி முறையை சீரமைக்க ஆலோசனைகளைத் தர வேண்டும். அதேபோல், அந்தக் கல்விமுறையை ஆண்டுக்கொரு முறை செழுமைப்படுத்த வேண்டும் என்றார் சங்கரய்யா.<br />
<br />
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஒரே இயக்ககத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
* வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு: டிஜிபி போலோநாத்<br />
<br />
சென்னை, மே 10: தமிழகத்தில் மே 13-ம் தேதி வாக்கு எண்ணும் பணியின்போது, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக டிஜிபி போலோநாத் தெரிவித்தார்.<br />
<br />
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:<br />
<br />
தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 91 இடங்களில் உள்ளன.<br />
<br />
மே 13-ல் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதை முன்னிட்டு போலீஸôர், துணை ராணுவப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோரின் 3 அடுக்கு தீவிர பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும்.<br />
<br />
<br />
மாநிலத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமன்றி முக்கிய இடங்களிலும் 75,000 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதுதவிர துணை ராணுவ படையின் 18 அணியினர் (கம்பெனி) தமிழகத்துக்கு புதன்கிழமை வரவுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு விமானம் மூலம் வரும் இவர்கள், இதர பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக பிரித்து அனுப்பப்பட உள்ளனர்.<br />
<br />
வில்லூரில் இதுவரை 90 பேர் கைது: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட ஒழுங்கு நிலை கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், போலீஸôர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் வகையில், இருதரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட சமரச நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றார் டிஜிபி போலாநாத். ஏடிஜிபி கே. ராதாகிருஷணன், தேர்தல் பிரிவு ஐ.ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.<br />
<br />
* பிச்சாவரத்துக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு<br />
<br />
சிதம்பரம், மே 8: சுரபுன்னை காடுகள் அடங்கிய சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.<br />
<br />
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு நாளுக்கு, நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.<br />
<br />
வெளிநாட்டினரும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கடலோரப் பகுதியில் உப்பனாற்றில் சுரபுன்னை (மாங்குரோவ்) செடிகள் அடங்கிய காடுகளை படகில் சென்று சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். படகு சவாரி செய்யும் பயணிகளுக்கு சுற்றுலாத் துறையினரால் சேப்டி ஜாக்கெட் வழங்கப்படுகின்றது.<br />
<br />
பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தங்கும் விடுதி, உணவகம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தங்கும் விடுதி, உணவகம் நடத்த பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் உணவகத்தை நடத்தி வருகிறது. விரைவில் அந்நிறுவனம் அங்கு பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறக்கவுள்ளது.<br />
<br />
மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை ஒன்றும் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கியும் சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார். பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.<br />
<br />
<br />
வர்த்தகச் செய்தி மலர் :<br />
<br />
பங்குச் சந்தை நிலவரம் 'சென்செக்ஸ்' 16 புள்ளிகள் சரிவு<br />
<br />
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும், மிகவும் மந்தமாகவே இருந்தது. பணவீக்கம் உயர்ந்து வருவது, பெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் என்ற அச்சப்பாடு மற்றும் வட்டி செலவினங்கள் அதிகரிப்பு போன்றவற்றால், பல முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், எண்ணெய், எரிவாயு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருள்கள், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மின்சாரம், உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 16.19 புள்ளிகள் சரிவடைந்து, 18,512 .77 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,689.37 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,429.06 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென் செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 9.85 புள்ளிகள் குறைந்து, 5,541.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,592.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,514.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.<br />
<br />
விளையாட்டுச் செய்தி மலர் :<br />
<br />
பஞ்சாப் அணியிடம் பணிந்தது மும்பை! * 87 ரன்களுக்கு சுருண்டது<br />
<br />
மொகாலி: ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. நேற்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய முனாப் படேலின் பந்துவீச்சு வீணானது.<br />
<br />
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த 54வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.<br />
<br />
பஞ்சாப் அணி துவக்கத்தில் திணறியது. ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த வல்தாட்டி அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 14 ரன்களுக்கு முனாப் வேகத்தில் வீழ்ந்தார். பின் கேப்டன் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் இணைந்து அசத்தினர். குல்கர்னி ஓவரில் மார்ஷ் 2 பவுண்டரி விளாசினார். ரோகித் சர்மா பந்தில் கில்கிறிஸ்ட் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் கில்கிறிஸ்ட்(28) அவுட்டானார். இதற்கு பின் முனாப் படேல் வேகத்தில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 39 ரன்களுக்கு இழந்தது. 16வது ஓவரை வீசிய முனாப் இரட்டை "அடி' கொடுத்தார். 2வது பந்தில் மார்ஷ்(43) அவுட்டானார். 6வது பந்தில் டேவிட் ஹசி(0) வெளியேறினார்.<br />
<br />
குல்கர்னி வீசிய போட்டியின் 17வது ஓவரில் மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் தலா ஒரு சிக்சர் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். மன்தீப் சிங்(8) ரன் அவுட்டானார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக்(31), ஹாரிசை(6) அவுட்டாக்கிய முனாப் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.<br />
<br />
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு பிலிசார்ட் அதிரடி துவக்கம் தந்தார். இவர், பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தனது அடுத்த ஓவரில் சச்சினை(6) வெளியேற்றிய பிரவீண் திருப்புமுனை ஏற்படுத்தினார். இதற்கு பின் வந்தவர்கள் ஏனோதானோ என ஆடினர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இம்முறை பஞ்சாப் பவுலர்கள் "செக்' வைத்தனர். பிலிசார்ட்(15), ரோகித்(5), சைமண்ட்ஸ்(8), ராயுடு(13), ஹர்பஜன்(12) ஏமாற்றினர். பார்கவ் பட் ஓவரில் போலார்டு(17), குல்கர்னி(2), முனாப்(0) வரிசையாக நடையை கட்டினர். மும்பை அணி 12.5 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.<br />
<br />
ஆட்ட நாயகன் விருதை பார்கவ் பட் வென்றார்.<br />
<br />
ஆன்மீக்ச் செய்தி மலர் :<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3tpoAmWUiHx9r2j_HxNOXWrfYpnAdBrPs73lir29SmPWQpye3OFSjg2ehyphenhyphenJ9VJr1J4tJkr6AlTdg8brZoWrMUChQ5MU_2IGaPgIP3l9AhDWGILBWgvB7G_-D9BI6vtdZhd-NAUG4ef7Hh/s1600/T_500_1475.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3tpoAmWUiHx9r2j_HxNOXWrfYpnAdBrPs73lir29SmPWQpye3OFSjg2ehyphenhyphenJ9VJr1J4tJkr6AlTdg8brZoWrMUChQ5MU_2IGaPgIP3l9AhDWGILBWgvB7G_-D9BI6vtdZhd-NAUG4ef7Hh/s320/T_500_1475.jpg" width="320" /></a></div><br />
* அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில்<br />
<br />
மூலவர் - பஞ்சமுக அனுமன்<br />
பழமை - 500 வருடங்களுக்கு முன்<br />
ஊர் - கவுரிவாக்கம்<br />
மாவட்டம் - சென்னை<br />
மாநிலம் - தமிழ்நாடு.<br />
<br />
தல சிறப்பு :<br />
<br />
இங்குள்ள மூலவர் அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பு. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
தல பெருமை :<br />
<br />
கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள். அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.<br />
<br />
பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.<br />
<br />
தல வரலாறு :<br />
<br />
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போன போது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது. இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பு. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.<br />
<br />
திருவிழா :<br />
<br />
வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
திறக்கும் நேரம் :<br />
<br />
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
<br />
ஆன்மீகச் சிந்தனை மலர் :<br />
<br />
<br />
* பாரதியார் -<br />
உன்னை முதலில் திருத்து!<br />
<br />
* தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு, நியாயத்தை எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.<br />
<br />
* ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன்மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.<br />
<br />
* அலையைக் கட்டலாம், காற்றை நிறுத்தலாம், மனவுறுதி கொண்ட வீரனுடைய குறிக்கோளை எவராலும் தடுக்க முடியாது.<br />
<br />
வினாடி வினா :<br />
<br />
வினா - ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர் யார் ?<br />
<br />
விடை - விஜயலஷ்மி பண்டிட் (1953)<br />
<br />
<br />
இதையும் படிங்க :<br />
<br />
"பொறுப்புகள் நிறைந்த வேலை!'<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBiH0fFaT55zpMxKGcFjALp1ATCgd8Zof2MCUj4VVoC3hJ9MIOWwr0r4cu2-tTQp39NbznF8vRu_w1iWOiz1Loi83I-JD9Gv83jhySaZUQ0-f_QmX72mGJcfv1iS7anHSTcoCP-G9jkNGC/s1600/large_238912.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBiH0fFaT55zpMxKGcFjALp1ATCgd8Zof2MCUj4VVoC3hJ9MIOWwr0r4cu2-tTQp39NbznF8vRu_w1iWOiz1Loi83I-JD9Gv83jhySaZUQ0-f_QmX72mGJcfv1iS7anHSTcoCP-G9jkNGC/s1600/large_238912.jpg" /></a></div><br />
மாநில இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ்: நான், கடந்த 2003ல் ஐ.ஏ.எஸ்., ஆனேன். சப்- கலெக்டராக சிவகாசியில், போஸ்டிங். படிப்படியாக முன்னேறி, 2009 தேர்தல் கமிஷனில் போஸ்டிங் கிடைத்தது. என் கணவர் கிர்லோஷ்குமாரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான். இந்த வேலையில் உள்ள பிரஷரும், பொறுப்பும் என்னை அதிக ஈடுபாடுடன் செயல்பட வைக்கிறது.தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 73 சதவீத மக்கள் ஓட்டளித்தனர். அதிகளவில், 78 சதவீதம் ஓட்டளித்தது இந்த சட்டசபை தேர்தலில் தான். தேர்தல் கமிஷனின் வேலை என்பது, தேர்தல் நேரத்து வேலை இல்லை. ஒரு வருட காலமாக அதை செய்து கொண்டு இருந்தோம். "லிஸ்ட்ல என் பெயர் இல்லை'ன்னு எந்த வாக்காளரும் புகார் செய்யக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினோம். 2010 மார்ச்சில் இருந்து, 2011 மார்ச் வரை, 80 லட்சம் வாக்காளர்களை புதிதாக சேர்த்திருக்கிறோம்.இந்த முறை, ஓட்டுப் போடுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நிறைய முயற்சிகளை எடுத்தோம். பதட்டமான ஊர்களில் முன்னேற்பாடா அங்குள்ள ஓட்டுச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா, இன்டர்நெட் வசதி ஏற்பாடுகள் செய்தோம். இப்படி, தமிழகம் முழுக்க, 15 ஆயிரம் லேப்-டாப் மூலம், தேர்தல் நாளன்று நிலவரத்தை நேரடியாக கவனித்தோம்.இதற்காக கம்ப்யூட்டர் இக்கத் தெரிந்த பத்தாயிரம் மாணவர்களைப் பயன்படுத்தினோம். மறு நாள் செய்தித்தாளில், "அமைதியா தேர்தல் நடந்தது' என்று மக்கள் பார்க்கும் வரை, டன் கணக்கில் டென்ஷன் எங்களுக்கு இருந்தது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>சங்கரியின் செய்திகள்..http://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com0